This entry is part [part not set] of 27 in the series 20091113_Issue
கி.சார்லஸ்
வணக்கம்.திண்ணை இதழ் வாசித்தேன்.புதிய கவிஞர்களின் வரவு மகிழ்வளிக்கிறது.அறிவியல் பகுதியில் வாரா வாரம் புதிதாக ஒன்றினை தெரிந்துகொள்ள முடிகிறது.சிறுகதைகள் அனைத்துமே நல்ல தேர்வு.கட்டுரையில் நேசமுடன் வெங்கடேஷ் அசத்துகிறார்.
நன்றி.
* கி.சார்லஸ் *
காரப்பிடாகை
நாகப்பட்டினம்(மாவட்டம்)
ckicharles@yahoo.com
This entry is part [part not set] of 27 in the series 20090604_Issue
சி.சேகர்
அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,
ஹெச்.ஜி.ரசூலின் சாதக் ஹசனின் கட்டுரை பல புதிய அனுபவங்களைக் கொண்டதாக இருந்தது. புதிய விவரங்களை வரலாற்று தகவலென்றாலும் மிகவும் அற்புதமான நடையில் இருந்தது.
சுவர்க்கம் வம்சி படித்து முடித்த பல மணிநேரத்திற்கு பின்னும் அகலவில்லை.
இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – மொழிபெயர்ப்புபோலவே இல்லை. ரா.கிரிதரன் நடையில் தமிழ் நாவலைப் படிப்பதுபோலவே இருந்தது. ஒவ்வொறு அத்தியாயமும் இன்னும் அதிக பக்கங்கள் இருக்கலாம்.
நகைச்சுவையும் வித்தியாசமும் – இன்னும் அதிகமான கட்டுரைகளை வெளியிடலாம்.
நாகூர் ருமிக்கு பதில்கள் கார்கில் மிகச் சூடாகவே எழுதியிருந்தார்.
This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue
தேவமைந்தன்
அன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம். வாழ்த்துகள்.
திண்ணை 24/07/2008 கண்டேன். மேன்மேலும் பொலிவு பெற்று வரும் திண்ணை.காம் வலையேட்டில் தொடர்ந்து எழுதுவதைக் காட்டிலும், ஒரு கிழமை விடாமல், எப்படியாவது இணையமலசும் நடுவங்களுக்குச் சென்று நம் ஏட்டை – அதன் படைப்புகளை வாசித்து விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அந்த வகையில் இந்தக் கிழமையும் வெளிவந்துள்ள ஆபிரகாம் கோவூர் தொடர்பான நண்பர் தமிழநம்பி அவர்களின் கட்டுரையையும் மதுமிதா அவர்களின் நேர்காணலையும் ‘கண்ணதாசன் இரசித்த கம்பன்’ என்னும் நண்பர் பெஞ்சமின் இலெபோ அவர்களின் கட்டுரையையும் “வெறுப்பும் வேதனையும் – மார்க்கெரித் துராஸின் ‘காதலன்” என்னும் நண்பர் பாவண்ணன் அவர்களின் ஆய்வுரையையும்(இது வாசிக்கப்பெற்ற நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்; ஆனால் இருந்து கேட்க வாய்ப்பில்லாமல் போனது) தொடர்ந்து வரும் நம் ஜெயபாரதன் ஐயா அவர்களின் நாடக மொழியாக்கத்தையும் அறிவியலாக்கத்தையும் மற்ற நம் திண்ணை நண்பர்களின் கருத்தாக்கங்களையும் வாசித்து இன்புற்றேன்.
அன்புடன்,
தேவமைந்தன்
This entry is part [part not set] of 29 in the series 20080619_Issue
ராம்கி
ஐயா,
அபூ முஹை உங்கள் நம்பிக்கை உங்களுக்கு மட்டுமே உண்மை. அதையே முடிந்த முடிவாக நிறுவ முயல்வது சிக்கலின் ஆரம்பம்; அந்த புள்ளியில் இருந்துதான் வன்முறை பிறக்கிறது. யூதர்களும், கிறிஸ்தவர்களும் அல்லது வேறு எவரும் சாபம் பெறுவது இஸ்லாமிற்கு பிரச்சினை இல்லை என்றே எண்ணுகிறேன். இதை யோசிக்காமல் “இவ்விடத்துக்கும் சொல்வதன்” தேவை என்ன?
நல்லவேளை இஸ்லாமிய உலகம் அபூ முஹையோடு நின்றுவிடவில்லை. சிலர் சிந்திக்க ஆரம்பித்துவிட்டதாகத் தோன்றுகிறது.
This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue
ராம்கி
அப்பட்டமான கன்னட மொழி வெறி அரசியலில் இறங்கிய எடியுரப்பா பொறுப்பான தலைவர் என்பதை ஜடாயு மட்டுமே ஏற்க வேண்டி இருக்கும். நீதி மன்ற தீர்ப்பிற்கு எதிராக பேசுபவரை பொறுப்பான தலைவராக ஏற்க வேண்டிய கட்டாயம் எனக்கில்லை. தீர்ப்பு வெளியாகியபின் முடிவு எடுப்பதிற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. தஞ்சை மாவட்டம் கடை ஐந்து மாவட்டங்களின் பட்டியலில் இடம் பெற்றது யாருடைய துரதிஷ்டம்? ஒகேனக்கல் பிரச்சினையை கைக்கொண்டதால் தான் இந்த வெற்றி பெற்றதா பா ஜ க? இனி அதை கைவிடவோ அல்லது பேச்சு வார்த்தைக்கு வரவோ பா ஜ க வால் முடியுமா?
This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue
ராம்கி
ஐயா,
சுஜாதாவிற்கு அஞ்சலி செலுத்தும் சாக்கில் தமது சொந்த கடையை விரித்திரிக்கிறார் தாஜ். இஸ்லாத்தை சுஜாதா ஏற்றார் என்பது இயல்பான செய்தி. தாஜ் பிற மதங்களை ஏற்கிறாரா என்பதே. கேள்வி மேலும் எல்லா மதங்களும், நாளை தோன்ற இருப்பவை உட்பட, இறைவனை ஒன்று போலவே விவரிக்கும். இதில் பெரிய வியப்பென்ன! அந்த நம்பிக்கையை இழப்போரை அல்லது இல்லாதோரை அந்த மதம் எவ்வாறு நடத்துகிறது என்பதே கேள்வி. விடை தேடி எங்கும் அலைய வேண்டாம். சென்ற வாரத் திண்ணையிலேயே பதில் கிடைக்கிறது.
”யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் இறைத்தூதர்களின் மண்ணறைகளை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர். இதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் ஏற்படும்” என்று தமது மரணப் படுக்கையில் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தனர். (நூல்: புகாரி) — அபூ முஹை
‘கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) ‘அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர்(ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன். (அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) – நூல்: புகாரி) — இப்னு பஷீர்
இதை சுஜாதா படித்திருப்பாரா தெரியவில்லை. பொதுவாக அவர் மதம் அரசியல் போன்ற சிக்கல்களை தவிர்த்தார் என்றே நம்புகிறேன்.. தாஜ் கூறும் கட்டுரையை நான் கருத்தில் கொண்டே சொல்கிறேன். கைரேகை, வாஸ்து போன்ற தொழில் செய்வோர் எம்ஜியார், கருணாநிதி, ரஜினி, கமல் போன்று எல்லோருடனும் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வது போல் இது நம்மூர் அரசியல் வியாதி.
இஸ்லாமியர்கள் சற்று வலைபரப்புகளை நிரப்புவதை விடுத்து, உள்முகமாக சிந்தித்து, உங்கள் மத இளைஞர்களுக்கு இணக்கமாக வாழப் பயிற்சியளியுங்கள். நாட்டிற்கும், நாநிலத்திற்கும் நலம் !
என்ன, துல் பிகர் நம்ம நாட்டாமை சரி தானே!
இவ்வளவிற்கும் இடமளிக்கும் திண்ணை ஆசிரியர் குழுவிற்குத் தலை வணங்குகிறேன்.
This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue
துல் பிகர்
பல மாதங்களாக திண்ணையில் தொடரும் இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் அதற்கு மறுத்துரைகளை படிக்காமல் நிறுத்தி இருந்தேன். (ஆனால் என்னோட போறாத காலம்), இந்த திங்களில் அண்ணன் மலர்மன்னன் �பெயரை..� பற்றி எழுதிய பெயர் போன கடிதத்தை படிக்கும் பாக்கியத்தை பெற்றேன்.
நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள், முஹம்மது நபி அவர்களை நாங்கள் வணங்க வேண்டும் என்றா? அப்படி நாங்கள் செய்யாததை செய்ததாக சொன்னால் உங்களுக்கு அதிலிருந்து கிடைக்கும் லாபம் ஜிஹாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் நாங்கள் சேரக் கூடாது என்பது தானா?
வேற வேலையே இல்லையா ஐயா, உங்களுக்கு என்று தான் கேட்க தோன்றுகிறது.
வன்முறை ஒழிவதற்கு யோசனை சொல்வார் என்று பார்த்தால் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட நிறுத்தத்தில் நின்ற வாகனங்களை எரித்ததை பற்றி எழுதுகிறார். எரியிற வாகனத்துல பெட்ரோலை அள்ளி ஊத்தறார். வன்முறையில் பேருந்தோடு உயிரையே கொளுத்தும் மடமையை கொளுத்த வழி சொல்ல முடியுமா, உங்களால்?. சின்னதா கடந்த சங்கை ஊதி பெருசாக்கி பொழுதோட்ட முயல வேண்டாம்.
கடவுள் என்றோ இறைவன் என்றோ அல்லது அல்லாஹ் என்றோ எவரும் இல்லை எவரையும் அல்லது எதையும் நாங்கள் வணங்க மாட்டோம், கடவுள் அல்லது இறைவன் அல்லது அல்லாஹ் ஒருவனை தவிர – இது தான் இஸ்லாத்தின் மூல மந்திரம்.
அரேபிய கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் இறைவனை �அல்லாஹ்� என்று தான் அவர்களது அரேபிய மொழியில் அழைப்பார்கள். உதாரணமாக, அவர்கள் ஒரு பிரச்சினையில் வன்முறையில் ஈடுபட்டு விட்டு �அல்லாஹ் அக்பர்� என்று சொன்னால் அது முஸ்லீம்களை தான் குறிக்குமா? வார்த்தைகளை பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள்.
மதம் எனும் குறுகிய போர்வைக்குள் இருந்து வெளியே வாருங்கள். தந்தை பெரியார் சொன்னார், �நான் மதங்களை வெறுக்கிறேன், ஏனென்றால் நான் மனிதர்களை நேசிக்கிறேன்� என்று. இந்த மதங்கள் மனிதர்களுக்கு இடையே வெறுப்பை வளர்த்ததை விட பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை என்றே தோன்றுகிறது.
This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue
அடியார்க்கன்பன் ..
அன்புடையீர்!
வணக்கம்.
முத்தமிழ்ச் சங்கம் 08 05 2008 அன்று பிரான்சில் நடத்திய தமிழ்த் தாத்தா விழா வருணனயைத் தங்கள்
இணைய தளத்தில் அழகாகப் படங்களுடன் வெளியிட்டமைக்காக எங்கள் உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
வாழ்க தங்கள் தமிழ்த் தொண்டு.
அன்புடன்
அடியார்க்கன்பன் கோவிந்தசாமி செயராமன்
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
This entry is part [part not set] of 30 in the series 20080214_Issue
செல்வி
அன்புடன் திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு
திண்ணைப்பேச்சில் திரு.கோபால் ராஜாராம் அவர்கள் எழுதியுள்ளது மிகவும் சரியான கருத்தாகும். இன்று நாம் நமது பக்கத்து நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது அது புரியும். ஒரே மதம் சிறிய மக்கள்தொகை என்று எத்தனை வாய்பிருந்தாலும் ஜனநாயகம் என்பது ஒரு கேள்விக்குறியான நிலை அங்கு.
ஆனால் மகாத்மா என்கிற மனிதரின் ஒரு ஆன்ம பலமே எவ்வளவு பெரிய சக்தியுள்ள மனிதராய் இருந்தாலும் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டிய ஒரு பண்பு இன்று உருவாகியுள்ளது.
மகாத்மாவை இவர்கள் விமர்சிப்பதைவிட அவரே தன்னை அதிகம் விமர்சித்துக்கொண்டவர் என்பதை இந்த மனிதர்கள் உணரவேண்டும். அப்படி ஒரு சுய விமர்சனத்தை செய்துகொள்ளும் போது மாகாத்மா என்பவரின் பிரம்மாண்டம் புரியும்.
காந்திய சிந்தனைகள் அதிகம் எழுதப்படவேண்டும், இன்று உலகம் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒருவித பாதுகாப்பற்ற வாழ்க்கைமுறைக்கு காந்தியமே சரியான தீர்வு என்பது என் எண்ணம்.
This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue
ஜெயமோகன்
அன்புள்ள கிரிதரன்
உங்கள் கடிதம். இயல் விருது பற்றி இனி பேச ஏதுமில்லை. வெறும் சொற்களாகவே மாறும். இரு தரப்பும் சொல்லவேண்டியவற்றை சொல்லிவிட்டோம்
ஆனால் உங்கள் கடிதத்தில் உள்ள இரு விஷயங்களைப்பற்றி சில சொற்கள்.
1. நான் இலக்கியத்தில் முக்கியமானவர்களாக எண்ணும் முன்னோடிகள், சமகாலபடைப்பாளிகள், இளம் படைப்பாளிகள் பற்றி தொடர்ச்சியாகவும் விரிவாகவும் எழுதிவருபவன் என என் வாசகர்கள் அறிவார்கள். என் எழுத்துக்களில் கணிசமான பகுதி அதுவே. அவற்றில் பெரும்பகுதி நூல்களாக்வும் கிடைக்கின்றன. வாசிக்கச்செய்ய என்னால் இயலாதல்லவா?
2 குழுக் குற்றச்சாட்டு எளிதானது. ஆனால் என் வாசகர்கள் முன் எடுபடாது. கடந்த இருபது வருடங்களில் நான் முன்வைத்து, முக்கியப்படுத்தி, கவனத்தை ஈர்த்து, விவாதித்த படைப்பாளிகளின் பெயர்களை முடியும்போது பட்டியலிட்டுப் பாருங்கள். குறைந்தபட்ச நுண்ணுணர்வுள்ள ஒரு வாசகன் ஒருபோதும் தவிர்த்துவிடமுடியாத எல்லா முக்கியப் படைப்பாளிகளும் அதில் அடங்குவார்கள்.
அவர்கள் மட்டும் அடங்கியதுதான் என் குழுவா? அப்படியென்றால் அது எனக்கு மகிழ்ச்சியே. அக்குழு சாதனைகள் செய்தது, புறகக்ணிக்கபப்டுவது. அதைச் சேர்ந்தவன் தான் நான். நீங்கள் வெளியெ எஉள்ள பெரும்பான்மையின் குரல் என்றால் உங்கள் தேர்வு உங்களுக்குச் சரிதான்
This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue
பரிமளம்
ஜெயமோகன் கட்டுரையிலிருந்து ஒரு வரி இது.
{ஒரு பல்கலைக் கழகக் குழு தங்கள் அந்தரங்க நோக்கங்களுக்காக பரிசைக் கொடுப்பதும் பெறுவதும் அவர்களின் விருப்பம்.}
லட்சுமி ஹாம்ஸ்டாமிடம் இருப்பது ஒருசரளமான பொது ஆங்கிலமா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் தங்கள் ரத்தம் மூலமும் கண்ணீர் மூலமும் இலக்கியத்தை உருவாக்குபவர்கள் இப்படிப்பட்ட வாக்கியத்தை எழுதமாட்டார்கள் என்பது உறுதி.
பரிமளம்
This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue
மு.இளங்கோவன்
அன்புள்ள ஐயா வணக்கம்.
திண்ணையில் என் கட்டுரை வெளியிட்டு உதவியமைக்கு நன்றி.
வாசந்தி அவர்களின் கட்டுரை சிறப்பு.
கடிதம்,நிகழ்ச்சிகளை அறிவிக்கும் பகுதியில்
வழக்கம்போல் பயனுடைய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
This entry is part [part not set] of 33 in the series 20071220_Issue
என்னார்
நன்றாக தெளிவாக விளக்கமாக மலர் மன்னன் எழுதியுள்ளார் இந்து என்றால் இம்சிப்பதைக் கண்டு துச்சிப்பது என வாரியார் சொல்லியுள்ளார்கள் இந்து என்றாலே பொறுமை என்பதால் தான் உலகத்திலுள்ள மதங்களுக்கெல்லாம் தாய் மதம் இந்து மதம் என்று விவேகானந்தர் சொல்லியுள்ளாரே.
—
என்னார்
This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue
எஸ். ஷங்கரநாராயணன்
நண்பர் திரு மகேஷ் லா.ச.ரா பற்றி – நான் மற்றும் மலர்மன்னன் எழுதிய கட்டுரைகளில் அதிர்ச்சி அடைந்தது முதிர்ச்சி இல்லாததால்தான். அவருக்கு பதில் சொல்ல எனக்கு ஆர்வமே எழவில்லை. காரணம் இந்த வரி –
I request thinnai to obtain good articles from really good tamil writers in memory of La.Sa.Ra and readers like me would be grateful
நிசமாவே நல்ல எழுத்தாளர்கள் அல்ல, நானும் மலர்மன்னனும், பாவ்லா எழுத்தாளர்கள், என்கிறார் இவர். என்னாத்த இவருக்கு பதில் எழுத, சொல்லுங்கள்?
சிலாட்களிடம் எதையோ சொல்ல வந்து ஏன்டா ஆரம்பிச்சம்னு ஆயிப்போகும். ஒரு நண்பரோடு ஸ்ரீ அரவிந்த அன்னை பற்றிப் பேசிட்டிருந்தேன். அன்னைன்னதும், தெரியும் மதர் தெரேசாதானே? அவர் எப்ப பாண்டிச்சேரி வந்தார்? – என்று கேட்டார். என் முகம் மாறியதைக் கண்டதும், சார், நீங்க அன்னிபெசன்ட் பத்திச் சொல்ல வந்தீங்க இல்லியா?… என சமாளிக்கிறதா அடுத்து ஆரம்பித்தார். அன்னை இந்திரா முதல், விஜயலெட்சுமி பண்டிட் வரை அவருக்கு பிரபலங்கள் மனசில் ஆடியிருக்கும். அவரது ஐ.க்யூ. தரத்தை அவரே மெச்சிக் கொண்டிருக்கலாம்.
இந்த ஆபத்து நம்ம ஞானக்கூத்தனுக்கு நடந்ததே. கேளுங்கள் அந்தக் கூத்தை! வணக்கம் தமிழகம், என சன் தொலைக்காட்சியில் ஞானக்கூத்தனோடு நேர்முகம். யார்? உமா வரதராஜன், என நினைக்கிறேன். ஞானக்கூத்தன் சொன்னார் – ”பிரசிடென்சி கல்லூரிக்கு மேல்படிப்புக்கு வந்த பிறகுதான் எனக்கு உலகக் கவிஞர்களின் கவிதைகளில் பரிச்சயம் ஏற்பட்டது.” உமா வரதராஜன் உடனே இடைமறித்தார். ”எப்பிடி? அந்தக் கவிஞர்கள்லாம் சென்னை வந்திருந்தாங்களா?”
கடிதம்தானே? இன்னும் கொஞ்சம் நகைச்சுவையை ரசிக்கலாம். நான் கேட்ட ஒரு அகில இந்திய வானொலி பேட்டி – வயலும் வாழ்வும், போல ஒரு நிகழ்ச்சி. ஒரு மாட்டுப்பண்ணைக்காரருடன் பேட்டி.
உங்க கிட்ட எத்தனை மாடுங்க இருக்கு?
நாற்பது.
என்ன ஜாதி?
கோனாருங்க.
நான் மாட்டோட ஜாதியைக் கேட்டேன்!
இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு தெரியும் அல்லவா? கொஞ்சம் திக்குவாய் அவருக்கு. அவர் ஒரு முக்கியமான அரசியல் பிரச்னையை விவாதித்துப் பேட்டி தந்துகொண்டிருந்தார். திடீரென்று எதிர் நிருபர் கேட்டார் –
அந்த சமயத்தில் மெளனம் காப்பதே நல்லது. நம்ம மக§ஷ், என்னையும் மலர்மன்னனையும் உப்புப் பேறாத கேஸ்னு சொன்னா, நாம கடல்வாழ் உயிரினம் அல்லன்னு நினைச்சிக்க வேண்டிதான்.
மகேஷ் சிறந்த வாசகர், நான் ஒத்துக்கறேன்யா! வேற வேலை இருக்கு எனக்கு.
விமரிசனம் வேறு, மரியாதை வேறு.
லா.ச.ரா. பற்றி ஒரு நூல் ‘சந்நிதிகள் பிராகாரங்கள் வீதிகள்’ நான் தொகுக்கிறேன். அதில் அசோகமித்திரன், மணா, அபி, மலர்மன்னன், டாக்டர் ருத்ரன், முருகு-சுரேஷ், எஸ். ஷங்கரநாராயணன், ஜெயமோகன் ஆகியோர் கட்டுரை வழங்கி யிருக்கிறார்கள்.
டிசம்பர் 23 ஞாயிறு காலை பத்து பத்தரை மணியளவில், சென்னை நான்கு மயிலாப்பூர் ஆர்.கே.ஸ்வாமி அரங்கத்தில் (லேடி சிவசாமி பள்ளி வளாகம், பழைய ஆர்.ஆர்.சபா எதிரில்) லா.ச.ரா. நினைவரங்கம் ஏற்பாடு செய்திருக்கிறேன்.
ஜெயகாந்தன், கே.எஸ். சுப்ரமணியம், திருப்பூர் கிருஷ்ணன், டாக்டர் ருத்ரன், திலகவதி, முதலானோர் உரைநிகழ்த்துவார்கள். பட்டியல் நீள வாய்ப்பு உள்ளது. மேலும் பலரிடம் தொடர்பு கொண்டு வருகிறேன்.
இந்த விழா ஏற்பாடும், நூல் வெளியீடும் – என் தனி மனித முயற்சி. பெருமைக்காக அல்ல, லா.ச.ரா.வுக்கு செய்தாக வேண்டும் என நான் நினைத்தேன் என்பதுதான் செய்தி. ஒரு எழுத்தாளர் மறையும்போது சமுதாயத்துக்கு அவரது கொடை என்ன, இலக்கியத்தில் அவர் ஸ்தானம் என்ன, என்றெல்லாம் வரையறுக்க ஆர்வப்படுவது தவறா என்ன? மற்றெப்போதையும் விட இப்போது நாம் அதை அலசினால் பரவலாக எல்லாரும் கவனிப்பார்கள் அல்லவா? அது அல்லவா லா.ச.ரா.வுக்கு, மறைந்த நல்லாத்மாவுக்கு முக்கியம்.
தவிரவும், விமரிசனம் இல்லாமல், இலக்கியம் எப்படி வளரும்?
மகேஷ், நீங்க தாராளமா (விமர்)சிக்கலாம்!
லா.ச.ரா. வரிகளில் – என் கட்டுரை, நம்ம மகேஷ¤க்கு, அல்வாத் துண்டில் மயிர்!
This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue
ச.சிவபாலமுருகன்
மதிப்பிற்குரிய திண்ணை
பதிப்பாளருக்கு,வணக்கம்…
நான் திருக்குவளை அருகில் உள்ள குண்டையூரை சேர்ந்தவன்..சேக்கிழாரின் பெரியபுராணத்தில்
வரும் சிவ பக்தர் குண்டையூர்க் கிழார் பரம்பரையை சேர்ந்தவன்..கிழார் பற்றிய வரலாற்றில் இன்னும் அவரின் பரம்பரையினர் (அமரர் மினக்ஷிசுந்தரம் குடும்பத்தினர்) குண்டையூர் தெற்கு வீதியில் சிவ பக்தர்களாக வாழ்ந்து வருவது சேர்க்கப்பட விரும்புகிறேன்..இன்னும் மகம் விழாவில் எங்கள் குடும்பம் சார்பாக நெல் கோட்டை இறைவன்பால் சேர்க்கப்படுகிறது..கால
மாற்றங்கள் காரணமாக வரலாறு மாறிவிடாமல் காத்து வரும் தங்களின் முயற்சி மேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்..
நன்றி…
அன்புடன்..
ச.சிவபாலமுருகன்
குண்டையூர்
This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue
ஜடாயு
அன்புள்ள முத்துலிங்கம் ஐயா,
49-வது அகலக் கோடு என்ற அந்தக் கதை அருமையாக இருந்தது.. உங்கள் ஒவ்வொரு கதையும், கடைசி வரியைப் படிக்கையில் ஒரு பெருமூச்சு, ஒரு குறுநகை அல்லது ஒரு விகசிப்பை வரவழைக்கும் – இதுவும் விதிவிலக்கல்ல..
சில வருடங்கள் முன் இந்தக் கோடு வழியே போயிருக்கிறேன்.. இந்தக் கதையில் வருவது போன்ற எந்த எண்ணங்களும், உணர்ச்சிகளும் இல்லாமல், ஒரு சராசரி டூரிஸ்டாக மாலை நேர நயாகராவை ரசித்தபடி.. ஆனால் ஒரு தேர்ந்த கதைசொல்லியான நீங்கள் அந்தக் கோட்டின் வழி ஒரு உலகத்தையே திறந்து காட்டுகிறீர்கள்… அற்புதம் சார்!
“அது அங்கே இருக்கிறது”” என்ற கட்டுரையும் அருமை.. அறிவுத்தேடல் என்பதும், இயற்கையின் ரகசியங்களை ஓயாமல் தேடுவதும் மானுடன் என்ற உயிரியின் இயல்பு என்று அழகாக சொல்லியிருக்கிறீர்கள். “ஞானத்தை விடவும் புனிதமான பொருள் ஒன்றை இங்கு நாம் அறியவில்லை” (ந ஹி ஞானேன ஸத்ருசம் பவித்ரம் இஹ வித்யதே) என்ற கீதை வரிகளை அந்தக் கட்டுரை நினைவூட்டியது.
This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue
மு.இளங்கோவன்
அன்பின் ஐயா வணக்கம்.
திண்ணை கண்டும் கற்றும் மகிழ்ந்தேன்.
என் கட்டுரையை வெளியிட்டமைக்கும் அறிஞர் கோவேந்தன் படத்தை முகப்பில் வெளியிட்டமைக்கும் மிகுந்த நன்றியுடையேன்.
அறிஞர் த.கோவேந்தன் பதிப்புத்துறையிலும் மொழிபெயர்ப்புத்துறையிலும் மிகச்சிறந்த பங்காற்றியவர்.
வறுமையில் வாழ்ந்துமறைந்த அறிஞரை முகப்பில் நிறுத்தி அழகுபார்த்தமைக்கு அறிஞர் உலகு சார்பில் மீண்டும் என் நன்றி.
படைப்புகள்,கடிதங்கள்,செய்திகள் சிறப்பு.
எம் புதுவை கல்வி அமைச்சரின் ரியாத் பயணம் பற்றி அறிந்து மகிழ்கிறேன்.
This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue
உஷாதீபன்
எங்கள் ஊரைப் பற்றி எழுதும்போது கண்டிப்பாக அவர்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும் என்கிற உறுதியில் ஜோதிர்லதாகிரிஜா அவர்களைப்பற்றி நான் தெரிவிக்கப்போக, தற்செயலாகக் குறிப்பிட்ட அந்த 1.11.07 திண்ணை இதழில் அவர்களும் எழுதியதுதான் எதிர்பாராத ஒன்று.
ஆனால் ஒரே ஒரு வருத்தம். அவர்கள் என் கட்டுரை ‘மாறிப்போன தடங்களைப்’ படித்திருப்பார்களா என்பதுதான் அது. உஷாதீபன்,மதுரை-625014.
This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue
மலர்மன்னன்
அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,
ஸ்ரீதேவி பற்றி வாஸந்தி எழுதிய கட்டுரையில் மும்பை அரசியல் குறித்தும் சிவ சேனை பற்றியும் இடையில் எழுதப் புகுந்தமையையொட்டி, சிவ சேனை குறித்த எனது சிந்தனைகளையும் ஒரு பத்திரிகைக்காரன் என்கிற அளவில் எனக்குக் கிட்டிய அனுபவத்தையும் நான் எழுதப் போக, அதனை மிகக் கடுமையாகக் கண்டித்து எனது அன்புக்கு மிகுதியும் பாத்திரரான ஸ்ரீ பி.கே. சிவக்குமார், எழுதியுள்ளமையை, ஒரு தகப்பனோ அல்லது பாட்டனோ தனது சிறு வயது மகன் அல்லது பேரன் ஏதேனும் ஒரு கோபம் அல்லது தாபம் காரணமாக மார்பில் குத்தியும் வேட்டியைப் பிடித்து இழுத்தும் துள்ளுவதை ஒரு விளையாட்டைப் பார்க்கிற ரசனையுடன் படித்தேன். நான் சின்ன ராஜு என்று அழைக்கிற அனுஷ் குமார் என்கிற என் பேரன் சமயங்களில் அப்படித்தான் என் மீது தனது வன்முறையைப் பிரயோகித்து மகிழ்விக்கிறான்!
சிவக்குமார் மிக மிகச் சரியாகவே கணித்திருப்பதைப் போல எந்தவொரு பிரபல வெகு ஜன இதழும், வழ வழ பத்திரிகையும் என்னை ஒரு தீண்டத்தகாதவனாக ஒதுக்கி வைத்திருப்பது நிஜந்தான். மேலும், அவ்வறான பத்திரிகைகள் ஞாபகம் வைத்துக்கொள்கிற அளவுக்கு நான் எவ்விதத்திலும் முக்கியமானவன் அல்ல என்பதைத் தெளிவாக அறிந்துள்ளேன். ஆனாலும் ஒரு காலத்தில் அத்தகைய பத்திரிகைகள் என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி, முக்கியமான சந்தர்ப்பங்களில் எழுதுமாறு கேட்டமைக்குச் சான்றாக அவற்றின் கடிதங்களை இன்னமும் வைத்துள்ளேன். மூதாட்டி, தான் மஞ்சள் தேய்த்துக் குளித்ததை நினைவு கூர்கிறாள் என்று சிவக்குமார் என்னைக் கிண்டல் செய்யாமல் இருந்தால், ஒருவேளை திண்ணை ஆசிரியர் குழு இடம் அளித்தால், அவற்றில் சிலவற்றையாவது ஸ்கேன் செய்து பிரசுரத்திற்கு அனுப்புவேன். ஆனால் திண்ணையை எனது தம்பட்டத்தை அடித்துக்கொள்ள உபயோகித்துக்கொள்கிறேன் என அதையும் எவரேனும் கண்டிக்கக் கூடும்.
இப்போதல்ல, முன்பு நான் பழக நேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் நான் உரையாடுவதையெல்லம் ஒரு புகைப்படக்காரர் என்ற முறையில் படம் எடுத்துவந்த சுபா சுந்தரம் அவராகவே எனக்கு அவற்றிலிருந்து ஒரு பிரதியை அனுப்பி வைப்பார். இவ்வாறு சேர்ந்த அண்ணா, காமராஜர், எம் ஜி ஆர், மதியழகன் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள், தூதுவர்கள் ஆகியோருடன் நான் உரையாடும் நிலையில் உள்ள புகைப் படங்களையெல்லாம் தொகுத்து முன்பு நாங்கள் வசித்த வீட்டின் முன் அறையில் என் மனைவி என் மீதுள்ள அன்பினால் ஒரே சட்டமிட்டுப் பிரதானமாக மாட்டி வைத்திருந்தாள். என்னைக் காண வருகிறவர்கள் அதைப் பார்த்துவிட்டு சிபாரிசுக்கு வர ஆரம்பிக்கவும், தொல்லை தாங்காமல் அதனை எப்போதோ தூக்கிப் போட்டுவிட்டேன். இன்றும் சில வாசகர்கள் திண்ணையில் நான் எழுதிவரும் கட்டுரைகளைப் படித்து விட்டு, அரசியல் தலைவர்களுடனான எனது பழக்கத்திற்கு என்ன ஆதாரம் என்று கேட்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்ய, அந்தப் புகைப்படங்களை எல்லாம் இன்று எங்கே தேடுவது?
அண்ணாவின் ஹோம் லேண்ட் ஆங்கில வார இதழுக்குச் சந்தா திரட்டி மணியார்டரில் பணம் அனுப்பி அது கிடைத்தமைக்கான சான்றில் அண்ணா தமது கைப்பட ஒப்பமிட்டு அனுப்பிய ரசீதையும், டியர் மலர் என்று அச்சமயம் பாராட்டுத் தெரிவித்து அவர் கைப்பட ஆங்கிலத்தில் எழுதிய அஞ்சலட்டையையும்கூடப் பிற்காலத்தில் அவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் ஏற்படும் என்பதை உணராமல் தொலைத்து விட்டேன். நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஆதாரம் கேட்பார்கள் என்று தெரியாமல் போனதே! நல்ல வேளையாக என் தந்தையாருக்கு ஸ்ரீ அரவிந்தர் கையொப்பமிட்டு அளித்த அவரது நூல் ஒன்றை பத்திரப்படுத்தியிருக்கிறேன், அதன் புனிதம் தெரிந்து!
நான் மிக மிக அற்பமானவன் என்பதை அவையடக்கத்திற்காகவோ சம்பிரதாயமாகவோ அல்ல, மெய்யாகவே உணர்ந்து ஒப்புக்கொள்கிறேன். நான் ஏதோ எழுதிவிட்டேன் என்பதற்காக, என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, பிரபல எழுத்தாளர்கள் எவரும் திண்ணையில் எழுதாமல் இருந்து விடுவார்களோ என்று சிவக்குமார் சம்சயிப்பது உண்மையில் என்னைக் காட்டிலும் எல்லா வகைகளிலும் சிறந்த அத்தகைய எழுத்தாளர்களை அவர் மரியாதை செய்வதாகாது. என்னை அடிப்பதற்காக ஓங்கிய அவரது கை , ஓங்கிய வேகத்தில் பின் சென்று, அவர் யாருக்காகப் பரிந்து கொண்டு வந்தாரோ அவர்களை அதிகம் காயப்படுத்திவிட்டதில் மிகவும் வருந்துகிறேன். மன்னியுங்கள், என்னைத் தாக்குவதுதான் உண்மையில் சிவக்குமாரின் நோக்கம், அந்த வேகத்தில் உங்கள் மீது அடி பட்டுவிட்டது என்று சிவக்குமார் சார்பில் சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். நல்லவேளையாகத் திண்ணை ஆசிரியர் குழுவும் எனது முக்கியத்துவம் இல்லாத தகுதியை நன்கு அறிந்திருப்பதால் நானோ வேறு எவருமோ விமர்சித்து விட்டதற்காக எந்த எழுத்தாளரும் திண்ணையில் எழுதாமல் இருந்துவிட மாட்டார்கள் என்கிற உண்மையைத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறது.
சிவக்குமார் சொல்வதைப்போல யார் எதை எழுத வேண்டும் என்று கட்டுப்பாடு செய்ய நான் யார்? உண்மையில் வேறு எவருமோகூட அவ்வாறு ஒருவருக்குத் தடை விதிக்கக்கூடுமா என்ன? ஆனால் எழுதுவதற்கு எடுத்துக் கொள்ளும் விஷயம் எதுவோ அதை உட்புகுந்து விரிவாக எழுத வேண்டும் என்பது எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளருக்குமான எழுதப்படாத விதி என்று எண்ணுகிறேன். எழுதுவதில் பயிற்சி பெற்றுள்ள சிவக்குமாருக்கு இதில் கருத்து வேறுபாடு இருக்காது என்றும் நம்புகிறேன்.
வாஸந்தி அவர்கள் ஒரு குறிப்பிட்ட விஷயம்பற்றித்தான் எழுத வேண்டும் என்று ஒரு சட்டாம் பிள்ளை மாதிரியோ நாட்டாமை மாதிரியோ நான் எப்படி அதிகப் பிரசங்கித்தனமாகச் சொல்லி விட முடியும்?
ஆனால் ஒரு விஷயம் பற்றி எழுதுகிற போது அதைக் காட்டிலும் வேறு ஒரு விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இருந்தால் அந்த விஷயம் பற்றியும் விரிவாக ஆராய்ந்து எழுதுவதே முறை என்றுதான் நான் அபிப்பிராயம் தெரிவித்திருந்தேன். ஸ்ரீதேவியுடனான சந்திப்பு பற்றி எழுத முற்பட்ட வாஸந்தி, மும்பை அரசியலையும் சிவசேனை பற்றியும் இடையில் எழுதுவதாக இருந்தால் அது பற்றியும் ஆராய்ந்து எழுதியிருக்க வேண்டும் என்றுதான் குறிப்பிட்டிருந்தேனேயன்றி அவர் அதுபற்றியெல்லாம் எழுதக் கூடாது என்று சொல்லவே இல்லையே! மேலும் எனக்குத் தெரிந்த கடந்த கால மும்பை அரசியல் பற்றியும் சிவசேனை குறித்தும் அதன் மூலம் எழுத எனக்கு வாய்ப்பளித்தமைக்காக வாஸந்திக்கு நன்றியும் அல்லவா தெரிவித்திருந்தேன்?
வழ வழ, பள பள பத்திரிகைகள் என்னிடம் கேட்டால் ஓடோடிச் சென்று எழுதாமல் இருந்துவிடுவேனா என்று கேட்டு, அவை என்னைச் சீந்தாமல் இருப்பதால்தான் திண்ணை, தமிழ் சிஃபி போன்ற இணைய இதழ்களில் நான் எழுதிவருவதாகக் குறிப்பிட்டிருப்பதன் மூலம் இணைய இதழ்களின் முக்கியத்துவத்தையும் சிவக்குமார் குறைத்து மதிப்பிட்டு விடலாமா? உண்மையில் இணைய இதழ் சிவக்குமாருக்குப் பிறந்த வீடேயல்லவா? அவர் எழுத அப்பியசித்ததும் அங்கேதான் அல்லவா? என்னைத் தாக்கும் உத்தேசத்திலும் உத்வேகத்திலும் தனது பிறந்தகத்தையும் பள்ளிகூடத்தையுமா அவர் குறைத்து மதிப்பிட்டு விடுவது?
மேலும் சிவக்குமார் சம்சயிப்பதுபோலத் திண்ணைக்கு நான் நாட்டாமை அல்ல. எனது கட்டுரை ஒன்றை அது வெளியிடாமல் புறக்கணித்ததும் உண்டு! சிவக்குமார் தனது திண்ணைப் பள்ளிக்கூடமேயான அதனை இவ்வாறு அவமதிக்க நான் காரணமாகி விட்டதில் மெத்தவும் விசனப்படுகிறேன்.
பத்திரிகைத் தொழில் இப்போது ஒரு பெரிய இன்டஸ்ட்ரி. பத்திரிகை என்பது இப்போது ஒரு நுகரும் வஸ்து (கன்ஸ்யூமர் ப்ராடக்ட்). உங்கள் கட்டுரைகளை எடிட் செய்ய நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள்; உங்கள் கட்டுரையை அப்படியே வெளியிடுவதாக இருந்தால் எங்கள் அலுவலகத்தின் மீது கல் விழும். பணியாளர்கள் அடிபடுவார்கள், அச்சடிப்பதற்காக வைத்திருக்கும் விலை உயர்ந்த காகிதச் சுருள்களுக்குத் தீ வைக்கப்படும். பல நாட்கள் தொழில் பாதிக்கப்படும் என்றெல்லாம் சொன்னதால்தான் சலிப்புற்று எதுபற்றியுமே அவற்றில் எழுதாமல் ஒதுங்கிக்கொண்டேன்.
நான் சிறுகதைகளும் நாவல்களும் எழுதுவதில் தீவிரமாக இயங்கி வந்த சமயத்தில் வைர மோதிரம் தருவதாகச் சொல்லி என்னிடம் சிறுகதை கேட்ட குமுதம் இதழிடம் எனது அபிப்ராயப்படித் தமிழ்நாட்டு வாசகனின் வாசிப்புப் பழக்கத்தைச் சீரழித்த பத்திரிகை எனக் குமுதத்தை கருதுவதால் அதில் எழுத மாட்டேன் என்று சொன்னேன். சாவியின் மீதும் தனிப்பட்ட முறையில் அல்லாது பொதுக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் எனக்கு மிகவும் கடுமையான விமர்சனம் இருந்த போதிலும், என்னிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் பாராட்டி வந்த சுப்ரமண்ய ராஜுவும் பாலகுமாரனும் எங்களுக்காக எழுதுங்கள் என்று மிகவும் வற்புறுத்தியதால் சாவி இதழின் முதல் இதழுக்கு சாவியே அதைப் படித்துப்பார்த்து மிகவும் சந்தோஷப்படும் விதமாக, அவர்களின் ரசனையை இளக்காரம் செய்வதுபோலவொரு சிறுகதையை எழுதிக்கொடுத்தேன். அதே அடிப்படையில்தான் பால குமாரன் தயாரித்த குங்குமம் வார சிறப்பிதழுக்கு சாவி அதன் ஆசிரியராக இருந்த போதிலும் சிறுகதை எழுதிக் கொடுத்தேன். பிறகு பால குமாரன் மிகவும் வற்புறுத்தியதால் சாவியின் மோனாவுக்கும் ஒரு குறு நாவலைக் கொடுத்தேன். ஆகவே பிரபல பத்திரிகைகள் கேட்பதால் ஓடோடிப் போய் எழுதுகிற சபலத்திற்கு இளம் பிராயத்திலேயே ஆட்பட்டதில்லை. இனிமேலா அது ஏற்படப் போகிறது? ஆனால் பொதுவாக ஹிந்துஸ்தானத்திற்கும் குறிப்பாக ஹிந்து சமூகத்திற்கும் இன்று ஏற்பட்டிருக்கிற சோதனைகளை வெளிப்படையாக எழுத எந்தப் பிரபல பத்திரிகை வாய்ப்பளித்தாலும் அதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவற மாட்டேன். பத்திரிகையில் பெயரைப் பார்த்து அகமகிழ்ந்துகொள்வதற்காக அல்ல, பிரச்னையை அதிகம் பேர் உணரவேண்டும் என்பதற்காக.
திண்ணையில் நான் எழுதும் கட்டுரைகளைப் படித்துவிட்டு, இந்த உண்மைகளையெல்லாம் பிரபல பத்திரிகைகளில் ஏன் எழுத மாட்டேன் என்கிறீர்கள் என்று அப்பாவித் தனமாகக் கேட்கிற வாசகர்களும் இருக்கிறார்கள்! அதிலும், குமுதத்தில் இதனை எழுதுங்கள் என்று ஒரு கட்டுரையைப் பற்றித் திண்ணை வாசகர் ஒருவர் எழுதியிருப்பது அதைவிடப் பெரிய வருந்தத் தக்க நகைச்சுவை!
This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue
முனைவர் மு.இளங்கோவன்
பேரன்புடையீர் ஐயா வணக்கம்.
திண்ணையில் தரமான படைப்புகளும்.பயனுடைய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
புலம்பெயர் சஞ்சிகைகள் குறித்த கட்டுரை சிறப்பு.கட்டுரையாளருக்கு என் பாராட்டுகள்.
This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue
உஷாதீபன்
குற்றாலம் பதிவுகள் பற்றி ஜெயமோகன் அவர்களின்; கருத்துரைகளைப் படிக்க நேர்ந்தது. பொதுவாக கவிதைக்கான அமர்வுகள் நிகழ்கையில் குடி அங்கே பிரதான இடம் வகித்து விடுகிறது என்பது குறைபாடாக இருந்தது. இது குறித்து சில கருத்துக்களை இங்கே சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது. முதலில் வேண்டாம் என்றுதான் மனதுக்குத் தோன்றியது. ஆனாலும் படைப்பாளிகளின் மீதான, அவர்களின் சில படைப்புக்களின் மீதான ஈர்ப்பின் காரணமாக இதைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
கவிதை அமர்வுகளுக்கு படைப்பாளிகள் மட்டும் வருவதில்லை. படிப்பவர்களும், படைக்க ஆர்வமுள்ளவர்களும், எப்போதேனும் ஒன்றிரண்டு என்று படைப்புக்களைத் தருபவர்களும், இலக்கிய ஆர்வலர்களும் என்று பல்வேறு தரப்பினரும் வருகை தருகிறார்கள். இவர்களின் வருகை அவசியமில்லை என்பதான கருத்து உண்டா? அப்படியானால் அதை வெளிப்படையாகச் சொல்லிவிடலாம். தொந்தரவில்லை.; புத்தகக் கடைகள், அங்கே, இங்கே என்று நோட்டீஸ் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது மட்டும் இதில் முக்கியம்.
இப்படி படைப்பாளிகள் மீது மதிப்பு கொண்டு வருபவர்கள் மீது தங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் படைப்பாளிகளுக்குக் கண்டிப்பாக வேண்டும். இம்மாதிரியான எண்ணம் வேண்டுமானால் படைப்பாளிகள் கண்ணியம் மிக்கவர்களாக, பண்பாளர்களாக, நல்ல ஒழுக்க சீலர்களாக இருத்தல் வேண்டும். இந்த குணநலன்களை அடையாளம் காட்டுவது எது? ஒரு படைப்பாளியை அடையாளம் காட்டுவது நிச்சயம் அவனது எழுத்துக்களாகத்தான் இருக்க முடியும.; அப்படித்தான் இருக்க வேண்டும். படைப்பு என்பதே அதற்குத்தானே? எதற்கு? இந்த சமுதாயத்திற்கு. அதன் மேன்மைக்கு. ஒரு நல்ல எழுத்தாளனால் அப்படித்தானே சிந்திக்க முடியும்? ஒரு நல்ல எழுத்தாளன் அப்படித்தானே சிந்திக்க வேண்டும்?
மேற்கண்டவையெல்லாம் இந்தக் கவிதைப்; படைப்பாளிகளுக்கு இல்லை என்று நான் சொல்லவரவில்லை. எல்லாமும் எல்லாரிடமும் இருக்கத்தான் செய்கிறது. அவைகளைக் காலமறிந்து, இடமறிந்து ;காப்பாற்றிக் கொள்வதுதான் இங்கே முக்கியமாகிறது.
இலக்கியம் இலக்கியத்திற்காகத்தான் என்றார் க.நா.சு. ;;;;;அதை முழுமையாக ஒதுக்கிவிடுவதற்கில்லைதான். அதுபோல்தான் மேற்கண்ட படைப்பாளிகளின் அற்புதமான பல கவிதைகளும். முற்போக்குச் சிந்தனையோடு படைப்புக்களைப் பிடிவாதமாக சமுதாயத்திற்கென்று முன்வைப்பது ஒரு வகை. இலக்கியம் இலக்கியத்திற்காகவே என்பது இன்னொரு வகை.
கவியரது கண்ணதாசன் ;அவர்களைப் பற்றி; நாம் அறியாததல்ல. ஆனால் அந்தக் குழந்தை மனசுக் கவிஞனை மனதை விட்டு ஒதுக்கி விடமுடியுமா? அது போல்தான் இன்றைய நவீனக் கவிதைக் கவிஞர்களும்.
ஆனாலும் ஒரு கவிதை அமர்வு என்று வருகையிலும், பொது நிகழ்வுகளிலும், அவர்கள் ;நாகரீகம் காப்பது மனது இதமாக இருக்கும். அவர்கள் படைப்பின் மீதான மதிப்பையும், அவர்கள் மீதான நெருக்கத்தையும் அதிகப்படுத்தும். ஒரு சில கவிதை அமர்வுகளில் கண்ட காட்சிகள் மனதை மிகவும் பாதித்தது. அங்கிருந்து விலகி ;ஓடச் செய்தது. வெறுமே புத்தகங்களைப் படிப்பதோடு நின்றுகொள்வோமே என்று ஒரு விலகலை ஏற்படுத்தியது. அதனால் எழுந்த எண்ணங்கள் இவை. இம்மாதிரியான எண்ணம் கொண்டவர்கள் எங்களுக்குத் தேவையில்லை என்று தோன்றினால் தாராளமாகத்; தொடரலாம். யாரும் தடுக்கப் போவதில்லை.
“யார் இவரு? பெரிசா நீட்டி முழக்கி எழுதிட்டிருக்காரு? அட, விடுங்கப்பா எவனோ கிறுக்கன் உளர்;றான்…”
-கடைசியாக இப்படித்தான் மனதில்தோன்றுகிறது….!!!
This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue
ஸ்ரீனி
அன்புடன் ஆசிரியருக்கு,
முதலில் திரு.தேவமைந்தனுக்கு என் நன்றி. அன்றைய சூழலில் ஊரோடு ஒத்து,சக மனித உணர்வுகளை மதித்து வாழும் மனநிலை இருந்தது.சாதி,மத சமாச்சாரங்கள் இன்று இருப்பது போல உறுத்தலாக இருந்தது இல்லை. நினைத்ததும் இல்லை.அந்த நாளும் வந்திடாதோ என்கிற ஏக்கம் எழுகிறது,அது வாராது என நன்றாக தெரிந்த போதிலும்.
இன்று சூழ்நிலைகள் மாறி விட்டன.விரிவடைந்து வரும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும்,அதனால் மாறி விட்ட மக்களின் அபிலாஷைகளும்,மனோபாவமும் சில காரணங்கள் என்றால், மக்கள் நலத்தை கிடப்பில் போட்டு தன் நலத்திற்காக தரம் தாழ்ந்து, வேண்டாத வெட்டி விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மக்களை உணர்வு பூர்வமாக தூண்டிவிடும் அரசியல் கட்சிகளும்
மெயின் காரண கர்த்தர்கள்.
திரு.மணியின் ஒன்பது கேள்விகளும் இந்த அரசியல் லாப சித்தர்களின் வெட்கக்கேடுகளை புட்டுப் புட்டு வைக்கின்றது.
அதுசரி, பச்சைக் கலரில் ஒரு வகைக்கு ராமர் பச்சை என்று துணிக்கடையில் கூறுவார்கள். அது இனி உபயோகத்தில் இருக்குமா (அ) வேறு பெயர் சூட்டப்படுமா?
அவனை நிறுத்தச் சொல்லு,நான் நிப்பாட்றேன் என்கிற வசனம் அல்டிமேட் கொள்கையாகி கொடி கட்டிப் பறக்கிற போது,உண்மை மையத்திலிருந்து சறுக்கி,ஓரப் புள்ளியாகி விடுகின்றது!
This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue
கே.பாலமுருகன்
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
திண்ணை.காம் மின்னியல் வாரப் பத்திரிக்கையில் என்னுடைய “இதற்கு முன்” என்ற கவிதையை வெளியிட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகம் நம் கையடக்கத்தில் தவழ்ந்து கொண்டிருப்பது போன்ற ஒரு பிரமை ஏற்படுகிறது. அதுவும் பலவகையான எழுத்தாளர்களுடன் இந்த உலகத்தை உள்ளங்கையில் ஏந்திப் பறப்பது போலவே உணர்கிறேன் ஒவ்வொருமுறையும் திண்ணை.காம் முன்பு அமர்ந்திருக்கும் பொழுதெல்லாம்.
இந்த வாரக் கவிதை வரிசையில் வெளியாகியுள்ள கார்த்திக் பிரபுவின் “கிணறு” ஒரு வரலாற்றுக் கிணறை வெளியே தோண்டி எடுப்பது போல இருக்கிறது. எத்தனை தலைமுறைகள் கண்ட அந்தக் கிணற்றின் பின்னனியிலும் பழம் பெரும் கதைகள். நிகழ்வை அருமையாக புனைவில் கொண்டு வந்திருக்கிறார். இந்தக் கிணறைப் படிக்கும் பொழுது எங்கள் ஊரிலுள்ள மேட்டுப் பாலத்தையொட்டி ஓடும் ஆறின் ஞாபகம் தானாக மனதில் எழுந்து கொள்கிறது. கார்த்திக் பிரபு அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
திண்ணை.காம் என்ற அகப்பக்கம், உண்மையிலேயே எழுத்தாளர்களின் அகங்களை மின்னியல் பிரதிகளாக உலகம் முழுவதும் நொடிப் பொழுதில் கொண்டு சேர்த்துவிடுவதுகிறது. இந்தத் திண்ணையில் ஓய்வெடுக்க வந்திருக்கும் மேலும் ஒரு பறவை. நன்றி.
கே.பாலமுருகன்
மலேசியா
This entry is part [part not set] of 33 in the series 20070913_Issue
தேவமைந்தன்
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
மறைக்கப்படும் கவிஞர்களுள் ஒருவரான சல்லா ராதாகிருஷ்ண சர்மா பற்றிய என் கட்டுரையை வெளியிட்டமைக்கு மிகவும் நன்றி.
‘இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியர் – பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார்’ (செப்டம்பர் 5, அவர் பிறந்த நாள்) குறித்தும்; ‘மக்கள் தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டுத் தொடக்கவிழா’ பற்றியும் தம்பி முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையையும் சித்திரத்தையும் வாசித்தேன். அவருக்கும், வெளியிட்ட திண்ணை ஆசிரியர் குழுவுக்கும், ஆசிரியர் கோபால் ராஜாராம் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
பிரான்ஸ் ஸ்திராஸ்பூரிலிருந்து புதுச்சேரிக்கு வந்துள்ள நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவுடன் வந்து உங்கள் எல்லாரையும் சந்திக்க மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். அவருக்கு எதிர்பாராமல் வேலைகள் பலவும் ஏற்படவே, இயலாமல் போயிற்று. அவரும் நாளை புறப்பட்டு விடுவார்.
திண்ணை.காம் குறித்த நீண்ட உரையாடல்கள் எங்களிடையே……. திண்ணையில் வெளியான “புதுச்சேரி வட்டார-வரலாற்று நாவல்கள்: ‘நீலக்கடல்’ குறிப்பாக..’ என்ற என் கட்டுரை – அரிய இளம் நண்பர்களை எனக்குத் தேடித் தந்திருக்கிறது. இதுதான் திண்ணை.காம் வலையேட்டின் சிறப்பு. உலகில் எங்கெங்கோ வாழ்பவர்களைத் தோழமையில் பிணைக்கும் ஆற்றலும், முரண்பட்ட கருத்தாடல்களை நிகழ்த்தும் அறிவாளிகளுக்கு ஒரே திண்ணையில் விருப்பு வெறுப்பில்லாமல் இடம் தரும் பெருந்தகைமையும் திண்ணை.காம் ஆசிரியர் அவர்களுக்கும் ஆசிரியர் குழுவில் பணிபுரியும் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. பாராட்டுகள்!
அன்புடன்
தேவமைந்தன்
This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue
R.பாலா
திண்ணை ஆசிரியருக்கு,
வணக்கம்.
இரண்டு வாரங்களுக்குமுன் திண்ணையில் தாஜ் அவர்கள், மலேஷியாவில் துன்புறும் ரேவதி என்ற பெண்ணுக்கு ஆதரவாய் திரு அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாற்றுமுகமாக எழுதிய கடிதம் கண்டேன். எந்தஒரு சாதாரண மனிதனுக்கும் ஏற்படுகின்ற மனிதாபிமானத்தின் வெளிப்பாடே திரு அ.நீ அவர்கள் எழுதிய கட்டுரையின் சாராம்சம். அதற்கு இவ்வளவு அராஜகமான எதிர்வினை எழுதிய தாஜ் அவர்களின் கடிதம் கண்டு மிக்க வருத்தம். திண்ணையில் அழகிய கவிதைகளும் கட்டுரைகளையும் எழுதிவரும் தாஜ் போக இன்னொரு தாஜ்-ம் இருக்கலாமோ என்றொரு சந்தேகம் வேறு வந்து தொலைத்தது.
எனக்கு தெரிந்தவரையில், திரு அ.நீ அவர்கள் மிகுந்த சமுதாய உணர்வுகளுடன் சிந்தனையை தூண்டும் கட்டுரைகள் பலவும் எழுதிவரும் பண்பட்ட மனிதர். வெகு அபூர்வமாக ஒருசில தடித்த வார்த்தைகளை பிரயோகம் செய்து கண்டிருக்கிறேன். அதுகூட அவரது இணைய நண்பர்களால் கடுமையாக சுட்டிக்காட்டப்பட்டதையும் கண்டிருக்கிறேன். அனைத்து மதத்தைச்சேர்ந்த மனிதர்களுடன் அவர் இணக்கமாக பழகிவருவதை அவர் எழுதிய கட்டுரைகளை படித்தவர்களுக்கு புரியும். எந்தவித ஆதாயங்களுக்காகவும் யரையும் கண்மூடித்தனமாக வெறுத்தும் ஆதரித்தும் எழுதியதாக எனக்கு நினைவில்லை. தாஜ் அவர்களின் தவரான புரிதல்கண்டு வருத்தம். திரு அ.நீ அவர்கள் இம்மாதிரியான எதிவினை குறித்து ஏதும் இதுவரை எழுதவில்லை. படித்து, ஒதுக்கிவிட்டு போயிருக்கலாம்.
ஆனாலும், கடந்த வார திண்ணயில் இதுகுறித்து பெரியவர்கள் திரு மலர்மன்னன் அவர்களும், திரு வெ.சாமிநாதன் அவர்களும் எழுதிய கடிதங்கள் கருத்தாழமிக்கதும் சிந்தனையைத்தூண்டுவதாகவும் இருந்தது. அவர்களின் சிரத்தையான கடிதங்களுக்கு நன்றிகள் பல. அவர்களின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்க வேண்டும். ஒருசில மனங்களாவது நல்வழி திரும்ப இணைய வாசகர்களும் நம்மாலான முயற்சிகளை செய்வதே அந்த பெரியவர்களின் உழப்புக்கு நாம் செய்யும் பிரதிபலன்.
*********************************
திரு சி.ஜெயபாரதன் அவர்களின், ஜப்பானில் எழுந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அணுமின்சார நிலையம் குறித்து கட்டுரை எழுதவிருப்பதான அறிவிப்பு கண்டேன். மிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் “திண்ணை” இணையபக்கத்தை ஆவலுடன் திறந்து பார்ப்பதற்கு திரு சி.ஜெயபாரதன் அவர்களின் கட்டுரைகள்/கதைகள்/கவிதைகள் ஆகியவையும் ஒரு முக்கிய காரணி. மிக்க நன்றி.
இரண்டு வாரங்களுக்குமுன் செல்வி அவர்கள் எழுதியதைப்போல, “மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு பெயர்போன ஜப்பானில் இப்படியென்றால்” என்றே நானும் பலகாலம் நினைத்துக்கொண்டிருந்தேன். சமீபகாலமாக இங்கு பத்திரிக்கைகள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வெளிவந்து உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளையும் உறுதிப்படுத்தபடாத ஊகங்களையும் பார்க்கும் போதும் படிக்கும்போதும், இது ஒரு பாதுகாப்பற்ற தொழில்நுட்பம் என்ற உணர்வே மேலோங்குகிறது.
அணுமின் தொழில்நுட்பம் குறித்து திரு சி.ஜெ அவர்கள் எழுதிய பல்வேறு கட்டுரைகளையும், அசுரன் போன்றோருக்கு பதிலிறுத்து எழுதிய கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். அணுஆற்றல் தொழில்நுட்பம் என்பது முதிர்ச்சியானதா என்ற கேள்வி ஒருபுறமிருக்கட்டும், அதனை நடைமுறைப்படுத்தும் நம்நாட்டின் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இன்னபிற சம்பந்தபட்டவர்களும் இந்த தருணத்தில் முதிர்ச்சியானவர்களா என்ற கோணத்தையும் கவனத்தில்கொண்டு கட்டுரை எழுத வேண்டுகிறேன்.
மாற்று எரிபொருளுக்கான முயற்சிகள் உடனடியாக தேவையென்று எல்லோரும் ஒப்புக்கொள்ளும் அதேவேளையில், கடினமான தொழில்நுட்ப விஷயங்களையும் புள்ளிவிபரங்களையும் கொண்டுமட்டுமல்லாது இன்றய இந்தியாவின் அரசியல் மற்றும் சமூகநிலைப்பாடுகளையும் கவனித்தில்கொண்டு எழுதிய உங்கள் கட்டுரையைக்காண ஆவலுடன்.
This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue
செல்வி
ஆசிரியர் அவர்களுக்கு.
திரு ஜெயபாரதன் அவர்கள் கட்டுரையில் ஒசோன் படலம் பாதுகாக்கப் படுவதற்காக கூறியுள்ள 10 புதிய வழிகள் படித்தபோது மிகவும் ஆச்சர்யமாகவும். நான் செய்கின்ற தவறுகளும் புரிந்தது.
நமது திண்ணையில் மட்டுமல்ல பொது நிகழ்ச்சிகளிலும் இந்த விழிப்புணர்வு கருத்துக்களை மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டும் என்பது மிக முக்கியமான கருத்தாகும், ஏனனில் ஒசோன் படலம் பாதுகாக்க சாதாரணமக்களால் செய்யக்கூடியது ஏதும் இல்லை என்று நினைத்திருந்தேன் ஆனால் சின்னச்சின்ன செயல்கள் மூலம் நாமும் நிறைய செய்ய முடியும் என்பது புரிந்தது.
மின்சார உபயோகக்கட்டுப்பாடு இவ்வளவு முக்கியமானது என்பதை அரசும் மக்களுக்கு கூறவேண்டும். பணமிச்சம் மட்டுமில்லாமல் சமுதாய அக்கரையுடன் கூடிய ஒசோன் பாதுக்காப்பும் உள்ள விஷயம் நிறையபேரைத்தூண்டும்.
திரு ஜெயபாரதன் அவர்களுக்கு நன்றி. நான் என்னால் முடிந்த முயற்சிகளைத் தொடர்வேன்.
This entry is part [part not set] of 33 in the series 20070802_Issue
மு.இளங்கோவன்
அன்பின் ஐயா வணக்கம்.
திண்ணை கண்டேன்.
பயனுடைய கட்டுரைகளும் அறிவார்ந்த தகவல்களும்
மகிழ்ச்சி தந்தன.தேவமைந்தனின் புலமைக்காய்ச்சல்
கட்டுரை எம் போன்ற தமிழ்ஆர்வலர்களுக்குப் பயனுடையது.
தொடர்க தங்கள் பணி.
திசைகள் வெற்றிவேலின் விளக்கம் சிறப்பு.
This entry is part [part not set] of 33 in the series 20070802_Issue
சி. ஜெயபாரதன்
கடந்த வாரத்தில் வந்த செல்வியின் கடிதம் (ஜூலை 26, 2007)
<< சமீபத்தில் ஜப்பானில் எற்பட்ட நிலநடுக்கம் அணுக்கழிவை கடல்நீரோடு கலக்க காரணமாகி விட்டது பற்றிய செய்தி மிகவும் அதிர்ச்சியை தந்தது. மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு பெயர்போன ஜப்பானில் இப்படியென்றால் நம்நாட்டின் கதை என்னாவது. திரு ஜெயபாரதன் அவர்கள் இதை பற்றியும் கழிவுகளின் கதிரியக்க பரவலின் பாதிப்பு பற்றியும் எழுதிட வேண்டும். >>
“ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு வெளியற்றமும்”, பற்றி ஒரு விஞ்ஞானக் கட்டுரை எழுதுகிறேன்.
This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue
திசைகள் அ.வெற்றிவேல்
அன்புள்ள நண்பர் திரு.குருராகவேந்திரன் அவர்களுக்கு நன்றியுடன் வணக்கம்.
எனது கட்டுரை குறித்து தங்களின் கடிதம் கண்டேன்.
கட்டுரையின் நோக்கம் “மக்கள் தொலைக்காட்சியின்” மக்கள் பணிகள் பற்றியே.அது ஒரு மொழி ஆராய்ச்சிக் கட்டுரை அன்று.அதற்கு நான் தகுதியானவனும் கிடையாது.
தினந்தோறும் 20 முறையாவது உச்சரிக்கும் ஒரு சொல்லுக்கு, என்ன அர்த்தம் என்று கூட தெரியாமல் பயன்படுத்துவதின் விபரீதத்தை உணர்த்தவே அவ்வாறு என் மனைவியிடம் சொன்னதை குறிப்பிட்டு இருந்தேனே தவிர,மற்ற மொழியினை தாழ்த்திப் பேச வேண்டும் என்பது எனது நோக்கமல்ல.மேலும் தாங்கள் எடுத்துக் காட்டிய ரமேஷ்,சுரேஷ்,தினேஷ் போன்ற பெயர்களின் அர்த்தம் எனக்குத் தெரியாததல்ல..உரையாடல் நடந்த அதே நாளில் அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் அந்தப் பெயர்களின் முழுமையான அர்த்தத்தை எனது மனைவிடம் சொல்லி மனைவி முகத்தில் மலர்ச்சியைப் பார்த்தவன்.கட்டுரைக்கு அது தேவையில்லை என்ற நோக்கில்தான் அதை தவிர்த்து இருந்தேனே தவிர அதன் அர்த்தம் தெரியாமலோ, அல்லது மற்ற மொழிகளை தாழ்த்த வேண்டும் என்பதோ எனது நோக்கம் அன்று.
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் திரு.ராசேந்திரப் பிரசாத் அவர்களை மக்கள் அன்புடன் “பாபு” என்று அழைத்ததும்,மறைந்த திரு.ஜெகஜீவன்ராம் அவர்களை”பாபுஜி” என்று அழைத்ததும் எனக்குத் தெரியாதது அல்ல. தெரிந்தே இருந்தும்,நாம் கூப்பிடும் பெயர்ச்சொல்லுக்கு,அதன் அர்த்தம் தெரியாமல் கையில் அகராதியுடன் திரியத் தேவையில்லை என்பதை உணர்த்தவே “பாபு” என்ற சொல்லுக்கு அவ்வாறு குறிப்பிட்டு இருந்தேன்.”பாபு” என்றால் நாற்றம் என்று நான் படித்த நூலையும் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன்..ஆனால் இந்திய மொழிகளில் எந்த மொழியில் என்பதைத்தான் மறந்துவிட்டேன் என்று குறிப்பிட்டு இருந்தேன்.நான் படித்த அந்த ஓஷோவின் நூல் இந்தியாவில் எனது வீட்டு நூலகத்தில் உள்ளது.அடுத்த விடுமுறைக்குச் செல்லும் பொழுது மறக்காமல் பக்க எண்ணுடன் விபரம் தருகிறேன்.
தமிழ் என்று நீட்டி முழக்கும் எங்களது இல்லங்களில் கூட, அழையா விருந்தாளிகளாக டி.வி,போன்,கார் என வேற்று மொழிகள் நுழைந்துவிட்டது என்பதைத் தான் மன வருத்தத்துடன் குறிப்பிட்டு,இந்தச் சூழலில்,இதனை மாற்றி அமைக்கும் வகையில் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் உள்ளன என்று எழுதி இருந்தேன்.
ஒவ்வொரு வருடமும் ஒரு மாதகாலம் இந்தியாவிற்கு விடுமுறைக்காக செல்லும் பொழுது,போன விடுமுறையில் பழக்கத்தில் இருந்த சொல்,இந்த விடுமுறையில் காணாமல் போவதையும்,அதன் இடத்தில் வேற்று மொழிச் சொற்கள் வந்து உட்கார்ந்து கொள்வதையும் நேரில் வருத்தத்துடன் உணர்ந்தவன் நான்.
இத்தகைய பின்புலத்தில்,மக்கள் தொலைக்காட்சியின் பாதையில் பெரும் சவால்கள் நிறைந்துள்ளது. அந்தச் சவாலை ,மக்கள் தொலைக்காட்சி நிறுவனத்தினர் நன்கு கையாள்கிறார்கள் என்ற பாராட்டினையும் இக்கடிதம் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.
This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue
செல்வி
அன்புடன் ஆசிரியர் அவர்களுக்கு.
1.மஞ்சுளா நவநீதன் அவர்கள் எழுதிய சிவாஜியை வரவேற்ப்போம் என்ற கட்டுரையில் 1500 ரூபாய் கொடுத்து இப்படத்தை பார்ப்பது சட்டத்தை மீறிய செயல் இல்லை என்கிறார். பின்னர் ஏன் பிளாக் டிக்கெட் விற்பவனை போலிஸ் கைதுசெய்கிறது?
படத்தில் கதையை எதிர்பார்ப்பது ஒரு நியாயமான எதிர்ப்பார்ப்புதானே. இத்தனை எதிர்பார்ப்பு இல்லாத பாட்ஷாவின் பக்கத்தில் கூட இந்தப்படம் போகவில்லையே என்கிற ஆதங்கம் இல்லாமல் இல்லை.
2. மலர்மன்னன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை மிகவும் சிந்திக்கதூண்டியது. இஸ்லாமிய சகோதரர்களும் தங்களிடையே உள்ள இதுபோன்ற மனிதர்களை அடையாளம் கண்டு பெரிய இழப்புகளுக்கு அவர்கள் காரணமாகக்கூடிய சூழலைத் தவிர்க்க வேண்டும். இது இந்தியாவின் அமைதியான எதிர்காலத்துக்கு உதவும்.
3. சமிபத்தில் ஜப்பானில் எற்பட்ட நிலநடுக்கம் அணுக்கழிவை கடல்நீரோடு கலக்க காரணமாகி விட்டது பற்றிய செய்தி மிகவும் அதிர்ச்சியை தந்தது. மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு பெயர்போன ஜப்பானில் இப்படியென்றால் நம்நாட்டின் கதை என்னாவது. திரு ஜெயபாரதன் அவர்கள் இதை பற்றியும் கழிவுகளின் கதிரியக்க பரவலின் பாதிப்பு பற்றியும் எழுதிட வேண்டும்.
This entry is part [part not set] of 27 in the series 20070712_Issue
செல்வி
அன்புடன் ஆசிரியர் அவர்களுக்கு
1.மக்கள் தொலைக்காட்சி பற்றிய கடிதங்களும், கட்டுரையும் மிகவும் சிந்திக்கவும் ஒப்புக்கொள்ளவும் வேண்டியவை. தமிழால் உயிர் வளர்க்கும் பெரியோர்கள் சிந்தித்து பார்க்கவேணும்.
அந்த தொலைக்காட்சியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டியது நமது கடமை. ஒரு நல்ல விமர்சகர்களாய் தொடர்ந்து நிகழ்ச்சிகளை பார்த்து அதன் தரத்தை கடிதங்கள் மூலம் பதிவு செய்வது அதன் தரப்பரிசோதனைக்கு உதவும்.
2. சிவாஜி பற்றிய விமர்சனம் சிறு பத்திரிக்கை பகுதிகளில் வலம் வரும் விஷயம் ரஜினி போன்றவைகளுக்கு புரியவேணும். இத்தனை பற்றுள்ள ரசிகர்களை ஏமாற்றுகிறோமே என்கிற குற்றவுணர்வு அவருக்கு இருக்குமா? தெரியவில்லை.
இதைப்பற்றி அறிவுஜீவிகள் தொலைக்காட்சிகளில் பெசத்தேவையில்லை.
மிகுந்த ஏமாற்றத்தோடு திரும்பவைத்த படம் இது என்று சொன்னால் அது மிகையில்லை.
This entry is part [part not set] of 34 in the series 20070621_Issue
J.P.Noble Chelladurai
Dear sir,
This has reference to Malarmannan�s article titled Thamilnattu Parppaner Pirachanaiyum atharku Theervum.
I am a Nadar Christian
The article on Thamilnattu parppaner pirachnaiyum atharku theervum has been written at the correct time.
When I was a high school student I witnessed Brahmin �baiting among students. I have seen Brahmin students being bullied and insulted. For instance, a bone of a donkey was placed in a Brahmin student�s bag; four or five students were insulting a Brahmin boy openly because his sister was a working woman; A Brahmin headmaster�s son had to listen to students scolding his father. These things went unnoticed and unpunished. These things made me angry at that time.
I remember once I talked to the bullies very mildly in support of a Brahmin student. A fascistic brainwashing that all Brahmins are venomous was systematically spread. I happened to hear the following remark,� When you come across a cobra and a Brahmin, beat the Brahmin first�.
Even though the allegation that Brahminism was the root cause of all caste atrocities is true, the atrocities against Brahmins is not justifiable. For the caste-created crimes and injustices, all castes/ people are equally responsible except those of lower most rung.
The Dravidian thesis that Brahmins are not Tamils is forced upon Tamil people. Many Tamils_ especially the Tamils whose mother tongue is Tamil believe this emotionally. If Kabilar,the Sangam poet, Uthamathanapuram Venkatasubramanian Swaminatha Iyer, Bharathyar, Sathyamoorthy, Rajaji, Kalki, Ulloor Parameshwara Iyer, Masti Venketesa Iyengar, M.D.Ramanathan, Sundraramasamy, T.Janakiraman, Cho, Delhi Ganesh, Kamalahasan, K.Balachandar, etc etc are not Tamils, who on earth are
Tamils really?
The gap between Tamil Brahmins and other Tamils has created more havoc on Tamil society than any thing else. The separation of Brahmins made Tamils lose the intellectual support. That is how Tamil society got ready for a suicidal plunge into the hallucination called third rate cinema. (Marudur Gopalamenon Ramachandran got the reins in his hands to decide Tamils� fate. Now it is Shivaji Rao Gaikwad). Hurt by the atrocities, Brahmins naturally took anti Tamil stand. Had Tamils earned the love of Tamil Brahmins. Tamils would have achieved Tamil Eelam or atleast supporting Tamil Eelam would not have appeared to be anti_Indian.
Are Tamil Brahmins any better in this conflict? On a TV programme, Balakumaran, the writer, talked about his Guru. Who do you think it was? Kanchi Chandrsekrandra Swamigal, Ramana Maharishi, Visiri Swamigal, Saibhaba? None of them. He said it was MGR! Balachandar directed a movie called Unnal Mudiyum Thambi which shows heroine tearing her certificates in protest when asked by the employment officer to specify her caste.
I hope Brahmins will forgive and forget the wrongs done to them and Tamils as well will forgive and forget the real and imaginary past. It is high time all Tamils joined together to forge a unity to work for the upliftment of the real downdrodden Tamils.
Dear sir, tell Brahmin brothren to come foreward to record the atrocities they underwent.
This entry is part [part not set] of 34 in the series 20070621_Issue
நரேந்திரன்.
Dear Sir,
One of the �Thinnai� reader (Mr. Prakash) was requesting me to write an article about the impacts on American economy due to the weak US Dollar. At present I�m not in a position to write the said article immediately because of various other assignments.
The following link got some interesting facts about the weak US Dollar and its pros and cons with regards to global economy.
This entry is part [part not set] of 29 in the series 20070614_Issue
ஸ்ரீனி
புலம் பெயர் தமிழர்களின் “தமிழ் வளர்ப்பு”&”இந்திய இளப்பம்”குறித்து திரு.ஜடாயு அவர்களின் கடிதம் கண்டேன்,ஒரு மாதத்திற்கு முன்பு.ஒரு விபத்தினால் கால் முறிவு; உடனடியாக எழுத முடியவில்லை.இது பற்றி சில கருத்துக்கள்:
புலம் பெயர்ந்தோர் கொடுக்கும் டாலர் வெள்ளிக்காக,நம்மூர் so called இலக்கிய கர்த்தர்கள் அங்கு மேடையில் வீசும் கொம்பு சீவல் டயலாக்குகளும் காரணிகளில் ஒன்று. இந்த கர்த்தர் சபையில் எல்லா பிரபல மணிகளும் உண்டு.”உங்க ஊரைப் போல மெட்ராஸில் ரசிகர்கள் கிடையாது சார்” என்று பிரபலங்கள் சொல்வதை கேட்கும் போது நொந்து விடும்.எது என் ஊர்?! “உங்கள மாதிரி ஆட்கள் இல்லயென்றால் எங்களுக்கு நம்ப ஊரில் என்ன சார் கிடைக்கும்;மறக்காம அடிக்கடி கூப்பிடுங்க சார்” போன்ற சல்லாப வார்த்தைகளில் நம்மை சடையப்ப வள்ளல் ரேஞ்சுக்கு தட்டேத்தி விடுவார்கள்!
இது போன்ற வசனங்களில் அக மகிழ்ந்து, பிரலபங்களுடன் மேடையில் பேச சான்ஸ் கிடைத்ததையே மிகப் பெரிய வாழ் நாள் சாதனையாக நினைத்து விடும் ஒரு சிலர்,பெரிய மனித தோரணையில் கூத்துக் கட்டுவார்கள்!உணர்வுகளின் வித்தியாசங்கள் எல்லா இடத்திலும் உண்டு.அந்நிய மண்ணும் விலக்கல்ல.திருப்பதியில் காக்கா ‘கோவிந்தா’ என்றா கரைகிறது!!
ஓ.சியில் வந்து தங்கி ஊர் சுற்றுவதற்கும்,மேடையில் வழிந்ததற்கு கிடைக்கும் பச்சையப்ப தட்சிணைக்கும் ஆலாய் பறக்கும் நம்மூர் இ.கர்த்தர் சபையும்,நிதி திரட்டல் என்ற பெயரில் கேனத்தனமாக பேச நடிகர்களும், குத்தாட்டம் போட நடிகைகளும், இவையெல்லாம் தமிழ் இலக்கியம் வளமாக வளர செய்யும் சேவை என்று கட்டியம் கூறுபவர்களும் இருக்கும் வரை இது போன்ற இளப்ப தோரண கூத்துக்களும் நடக்கத்தான் செய்யும்.
ஆனால் நாமும் லேசுப்பட்டவர்கள் இல்லை.சத்யராஜ் ஏதோ ஒரு படத்தில் கூறுவது போல, “வெள்ளைக்காரன் ஜென்டில் மேனுங்க,அவன் கட்டிய தண்டவாளம்,பாலம்,அணை,கட்டிடம் எல்லாத்தையும் போகும் போது விட்டுப்போட்டு போயிட்டான்,மேனர்ஸ் தெரிஞ்சவன்.நம்ம மந்திரிமாரும் அதிகாரிமாரும் போகும் போது அப்படி எதையாவது விட்டுப்போட்டு போவானுங்களா? ஸ்குரூ ஆணியாவது மிஞ்சுமா!”
உண்மைதானே! சர்ச்சில் அன்று கூறியதை மூதரிக்க அறுபது ஆண்டுகளாக நிரம்பவே பாடுபடுகிறோமே!!
நன்றி திரு.ஜடாயு.தங்கள் கடிதம் எனது சில ஆதங்கங்ளையும் பகிர உதவியது.
This entry is part [part not set] of 32 in the series 20070607_Issue
நாகூர் ரூமி
‘பிறைநதிபுரத்தானுக்கு பதில்’ என்ற கட்டுரையில் வெ.சா. “நாகூர் ரூமி satanic verses-க்கு ஆதரவாக எழுதப்போக இப்போது அவர் தன் இஸ்லாமிய புனிதத்துவத்தை நிரூபிக்க எப்படியெல்லாம் ஆவேச ஆட்டம் ஆட வேண்டியிருக்கிறது” என்று போகிற போக்கில் எழுதியிருந்ததை படிக்க நேர்ந்தது.
நான் சல்மான் ரஷ்டியின் தடை செய்யப்பட்ட நாவலான சடானிக் வெர்சஸுக்கு ஆதரவாக எதுவும் எழுதவில்லை. அந்த நாவல் தடை செய்யப்பட்ட விஷயம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் ஒரு கடிதம் எழுதினேன். அதில், சல்மான் ரஷ்டி அவருடைய Midnight’s Children என்ற நாவலில் தொழுகையை உயர்த்தும் விதத்தில் எழுதியிருக்கிறார் என்றும், பிரதமர் ராஜீவ் காந்திக்கு அவர் எழுதிய திறந்த கடிதத்தில் இஸ்லாத்துக்கு விரோதமாக தான் எதுவும் எழுதவில்லை என்றும் கூறியிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டி, இந்த காரணங்களினால் இஸ்லாத்துக்கு விரோதமாக எழுதும் ஒரு எழுத்தாளராக அவர் இருக்கமாட்டார் என்று நான் நினைக்கிறேன் என்றும், ஒரு புத்தகத்தைத் தடை செய்தால் அதைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம்தான் அதிகமாகும். எனவே இந்த நாவலைத் தடை செய்வது அதன் விற்பனையும் புகழும் அதிகமாகவதற்கு உதவி செய்யும் என்று எழுதினேன்.
அதைத் தவறாகப் புரிந்து கொண்ட சிலர் நான் இஸ்லாத்துக்கு விரோதமாக எழுதிவிட்டேன் என்றும், சல்மான் ருஷ்டியின் தடை செய்யப்பட்ட நாவலுக்கு ஆதரவாக எழுதிவிட்டேன் என்றும் சொன்னார்கள். (பல நாட்களுக்குப் பிறகு, அந்த நாவலின் பகுதிகள் பல படிக்கக் கிடைத்தது. அதிலிருந்து ரஷ்டி மிகவும் மோசமாகத்தான் எழுதியிருந்தார் என்று தெரிந்து கொண்டேன்).
நடந்தது இதுதான். அதற்குள் வெ.சா. என்னென்னவோ எழுதிவிட்டார். இஸ்லாத்தின் புனிதத்தை நான் நிரூபிக்க வேண்டியதில்லை. அதை இஸ்லாமே நிரூபித்து விட்டது. உண்மைகள் எல்லாமே புனிதமானவைதான்.
வெ.சா. பற்றிய என் கடந்த கால விமர்சனத்தை இன்னும் அவரால் மறக்க முடியவில்லை போலிருக்கிறது!
This entry is part [part not set] of 34 in the series 20070517_Issue
செல்வகுமார்
Dear sir,
I like to bring it to your notice that, apart from a flat translation of the SEITLHAMO MOTSAPI, the translator (whose name is not given) has translated “so the red wax of the stars would not drip onto him” as “அப்போதுதான் நட்சத்திரங்களிடமிருந்து சிவப்பு மெழுகு அவன் மீது வழியுமென்றான்”. The translator did not take the word NOT in the translation or he did not care abt that or he thought that it was not so important. An understanding and carefulness essential for translation.
thank you
This entry is part [part not set] of 32 in the series 20070426_Issue
ஜடாயு
அன்பின் சசிகுமார்,
// தொட்டதெற்கெல்லாம் இந்தியனைக் கேவலப்படுத்திப் பேசும் உரிமையை யாரையா உமக்குக் கொடுத்தது? //
சிங்கப்பூர் திருக்குறள் விழாவில் இந்தியாவைக் கேவலப்படுத்திப் பேசப்பட்ட பேச்சை எதிர்த்து எழுதியதற்கு உங்களைப் பாராட்டுகிறேன்.. சில இந்தியர்களே இப்படிப் பேசியிருப்பது மனவேதனை அளிக்கிறது..
மலேசிய, சிங்கப்பூர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழை வளர்க்கட்டும், தவறில்லை. அதற்காக இந்தியாவை ஏன் ஏசவேண்டும்? புலம் பெயர்ந்த தமிழர்கள் பலருக்கு இந்த இந்திய இகழ்ச்சி சரளமாக வருவதைப் பார்க்கிறேன். இது கண்டிக்கத் தக்கது.
இந்தியாவில் தமிழும், தமிழர்களும் மிக நல்ல, உயர்ந்த நிலையில் தான் உள்ளனர். இந்திய ஜனாதிபதியே ஒரு தமிழர் தான்! தமிழ் போன்றே இலக்கிய வளமும் கொண்டு பெருமளவு மக்களால் பேசப் படும் இந்திய மொழிகளும் பல உள்ளன – வங்காளி, மராட்டி, தெலுங்கு.. இந்த எல்லா மொழிகளுக்கும் இந்திய மைய அரசும், அந்த மாநில அரசுகளும் உரிய இடத்தை அளித்தே வந்துள்ளனர்… அதனால் சிங்கப்பூர் காசில் தமிழ் இருக்கிறது, இந்திய காசில் இல்லை என்றெல்லாம் பேசுவது அர்த்தமற்றது.. காசு சிறிய அளவில் உள்ளதால் இல்லை, இந்திய ரூபாய் நோட்டில் தமிழ் உட்பட எல்லா மொழிகளும் இருக்கின்றன அல்லவா?
This entry is part [part not set] of 34 in the series 20070419_Issue
சாய் (என்கிற) பேப்பர்பாய்
‘திண்ணை.காம்’ இணைய இதழில் ‘கடிதங்களும் அறிவிப்புகளும்” பகுதியில் பிரசுரிக்க
கடிதம்
By சாய் (என்கிற)பேப்பர்பாய்
அன்புள்ள திரு. மலர்மன்னன் அவர்களுக்கு,
வணக்கம். என்ன தான் அகழ்வாராய்ச்சி புத்தி ஒட்டிக் கொண்டிருந்தாலும், சில விஷயங்களை யோசித்துப் பார்க்க நமக்கு தோணுவதில்லை. இதற்கு காரணம்…நம்மை அறியாமலேயே அந்த விஷயங்கள் மீது நாம் கொண்டிருக்கும் அதீத நம்பிக்கையோ? (அல்லது ) அவை நம்முள் படர்ந்து பதித்திருக்கும் தாக்கத்தின் வீரியமா…?. தெரியவில்லை !
யாராவது தோளைத் தொட்டுத் தட்டிய பிறகே ‘அட.. ஆமா?’ என்று மனசுக்குச் முழிப்பு வருகிறது.
அந்த வகையில், தமிழால் ஜீவித்து தமிழையே சுவாசமாகக் கொண்டிருந்த /கொண்டிருக்கும் அறிஞர் பெருமக்கள் எல்லாருக்குமே தாய்மொழி தமிழாகத் தான் இருக்க வேண்டுமெனும் கட்டாயமில்லை என்கிற பரிச்சயமான யதார்த்தத்தை, எனக்கு நாசூக்காகத் தட்டி ஞாபகப்படுத்தியதாகவே தங்களின் கடிதத்தை எடுத்துக் கொள்கிறேன்.
நான் ‘திண்ணை’யில் எழுதி வரும் ‘பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ்’ என்ற தொடரின் 13வது அத்தியாயத்தைக் குறிப்பிட்டு தாங்கள் ‘திண்ணை’யில் (12-4-07 பதிப்பில்) எழுதியுள்ள அக்கடிதத்தில், ‘ மறைந்த முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பூர்வீகத் தாய்மொழி தமிழ் அல்ல. தெலுங்கு தான்’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
உண்மை அதுவேயாயின் அதனை ஏற்பதில் எனக்கு சங்கோஜமோ, சங்கடமோ இல்லை. அத்துடன், அந்த தகவல் பத்திரப்படுத்திக் கொள்ளத்தக்கது என்பதால் தங்களுக்கு, ஒரு எழுத்துக்காரனாக நன்றி தெரிவிப்பதிலும் சந்தோஷப்படுகிறேன்.
This entry is part [part not set] of 24 in the series 20070412_Issue
மலர்மன்னன்
அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,
திண்ணையின் ஏப்ரல் 05, 2007 இதழில் பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் என்ற தொடரின் 13 வது அத்தியாயத்தில் அண்ணா தமிழர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அண்ணாவும் அடிப்படையில் தமிழர் அல்லாத, தெலுங்கு பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். அவருடைய தாயாரின் பெயர் பங்காரம்மா என்பதுதான். அண்ணா தம் சித்தியைத் தொத்தா என்றுதான் அழைப்பார். அண்ணாவின் மனைவியார் ராணி அம்மாகூடத் தங்களுடைய பரம்பரை தெலுங்கு பேசும் குடும்பம் என்று கூறுவார். எனினும் அண்ணாவுக்குத் தெலுங்கில் எழுதவோ படிக்கவோ தெரியாது. மொழிப் பயிற்சி, பண்பாடு, பழக்க வழக்கம் சுற்றுச் சூழல் ஆகிய எல்லா அம்சங்களிலும் அவர் ஒரு தமிழனாகவே இருந்தார். இதையொட்டி அவரை ஒரு தமிழர் என்று கூறுவது பொருத்தம்தான் என்றாலும், அவரது பூர்வீகம் என்னவோ தெலுங்குதான். தமிழிலான அண்ணா என்ற சொல் தெலுங்கில் அன்னா என்றுதான் உச்சரிக்கப்படுகிறது. அதேபோல் துரை என்று தமிழில் வழங்கும் சொல் தெலுங்கில் தொர என்று வழங்கப்படும். எனவே அண்ணாதுரை என்கிற தமிழ்ப் பெயருங்கூடத் தெலுங்கிற்கும் ஏற்புடையதுதான்.
அண்ணா அவர்கள் சிறுவனாக இருக்கையில் அழகாகச் சீவிப் பின்னலிட்ட குடுமியுடன், நெற்றியில் நீளமாக ஸ்ரீசூரணம் இட்டுக்கொண்டு பள்ளிகூடம் போவாராம். மிகவும் அடக்கமான, அமைதியான பிள்ளை. அவருடைய முன்னோர்கள் விஷ்ணு காஞ்சி எனப்படும் சின்ன காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள வரதராஜப் பெருமாளுக்குச் சேவகம் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள். திருமால் மீது பக்தி தோய்ந்த பரம்பரை அண்ணாவின் பரம்பரை. இளம் பிராயத்தில் பக்தி சிரத்தையுடன் வரதராஜப் பெருமாளை சேவித்து வந்தவர்தான், அண்ணா.
காஞ்சி நகரைப் பொருத்தவரை இளம் பிராய முதலே அனைவரையும் நேசிப்பவராகவும் அனைவராலும் நேசிக்கப்படுபவராகவும்தான் அண்ணா இருந்து வந்திருக்கிறார். துவேஷப் பிரசாரத்தை முழு மூச்சாகக் கொண்டு இயங்கிய ஒரு கட்சியின் தளபதியாக அறியப்பட்ட காலத்தில்கூட காஞ்சியில் அவர் எவரையும் வெறுத்ததில்லை, வெறுக்கப்பட்டதுமில்லை!
1957ல் தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக அண்ணா அவர்கள் காஞ்சியில் போட்டியிட்ட போது, காமராஜர் டாக்டர் ஸ்ரீ னிவாசன் அவர்களைக் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தினார்.
டாக்டர் ஸ்ரீ னிவாசன் வைணவ பிராமணர். அரசியலில் தீவிரமாக இயங்கியவர் அல்ல. காஞ்சியில் மிகுதியாக உள்ள வைணவ பிராமணர்கள் கட்டுப்பாடாக அவருக்கு வாக்களித்துவிடுவார்கள் என்றும், வழக்கமான காங்கிரஸ் வாக்குகளுடன் அந்த வாக்குகளும் சேர்ந்து, காங்கிரஸ் வேட்பாளரான ஸ்ரீனிவாசன் எளிதாக ஜயித்துவிடுவார் என்று காமராஜர் கணக்குப் போட்டார். காஞ்சிபுரத்து பிராமணர்களுக்கு அண்ணா மீது வெறுப்பு இல்லை என்பதை அவர் அறிந்திருக்க வில்லை. மேலும், அண்ணாவைப் படு தோல்வியடையச் செய்யவேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொண்டு காஞ்சியில் முகாமிட்ட ஈ வே ரா, தெருத் தெருவாகச் சென்று மிகவும் இழிவான முறையில் அண்ணாவைப் பழித்துப் பேசத் தொடங்கியதும் அண்ணா மீது அனைவருக்கும் அனுதாபத்தைத் தோற்றுவித்து, குறிப்பாக பிராமணரிடையே அண்ணாவுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்கிற ஆவேசத்தைக் கிளப்பிவிட்டது!
அண்ணாதுரை என்னிடம் நாற்பது ஆண்டுகள் வேலை செய்தார். ஆதலால் அவரைப் பற்றி எனக்குத்தான் நன்றாகத் தெரியும்; அண்ணாதுரையின் எஜமானனாக இருந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன், அவர் நம்பிக்கைக்கு உகந்தவர் அல்ல என்றெல்லாம் அவருக்கே உரித்தான பாணியில் மிகவும் அனாகரிகமாகப் பிரசாரம் செய்தார், ஈ வே ரா. ஆனால் அதற்குப் பதில் சொல்லும் விதமாக ஒரு வார்த்தைகூட அண்ணா பேசவில்லை. ஈ வேரா வின் அபாண்டமான பழிச் சொற்கள் எல்லை மீறிப் போகவும், ஒரேயொருமுறை மட்டும் பொறுமையிழந்தவராய், இதுவரை நான் அவருக்குக் கடமைப் பட்டவனாயிருந்தேன். இனி அவர் எனக்குக் கடமைப்பட்டவராவார் என்று மனம் நொந்து சொன்னார்.
காஞ்சிபுரத்தில் அண்ணாவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய வந்த நகைச் சுவை நடிகர் என் எஸ் கிருஷ்ணன் அவருக்கே உரிய நகைச் சுவை உணர்வுடன், அண்ணா அவர்கள் திராவிடர் கழகத்தவராக இருந்தவராயிற்றே என்று எங்கே பிராமணர்கள் அவருக்கு வாக்களித்துவிடாமல் இருந்துவிடுவார்களோ என்றுதான் ஈவேரா இப்படியெல்லாம் பேசி அண்ணா மீது அனுதாபம் அதிகரிக்கச் செய்வதோடு, தம்மீது பிராமணர்களுக்கு உள்ள கோபம் அண்ணாவுக்குச் சாதகமாகத் திரும்பவும் வழி செய்கிறார்; என்ன இருந்தாலும் தந்தைப் பாசம் இல்லாமல் போகுமா என்றார்.
என் எஸ் கிருஷ்ணன் நகைச் சுவையுடன் இன்னொரு விஷயமும் சொன்னார்.
டாக்டர் ஸ்ரீனிவாசன் கைராசியான டாக்டர். மனிதாபிமானம் மிக்கவர். அதிகம் பீஸ் வாங்காமல் அருமையாகச் சிகிச்சை செய்பவர். இப்படிப்பட்ட டாக்டரின் சேவை காஞ்சிபுரத்து மக்களுக்கு எந்நேரமும் அவசியம். அவரை எம் எல் ஏ யாக்கிவிட்டால் அடிக்கடி சென்னைக்குப் போய் டேரா அடித்துவிடுவார். அவசரத்துக்குக் கிடைக்க மாட்டார். ஆகையால் அவரைக் காஞ்சிபுரத்து மக்கள் காஞ்சியிலேயே பிடித்துவைத்துக்கொள்ள வேண்டும். பேசுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாத அண்ணாவைப் பேசுவதற்கென்றே இருக்கிற சட்டசபைக்கு அனுப்பிவிட வேண்டும் என்றார், என் எஸ் கே.
இதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த டாக்டர் ஸ்ரீனிவாசன், என் எஸ் கிருஷ்ணன் சொல்வது சரிதானே, உண்மையில் என்னைவிட சி என் ஏ சட்டசபைக்குப் போவதுதான் பொருத்தம் என்றார்.
தேர்தலில் அண்ணா வெற்றி பெற்று, ஓராண்டு கழித்துத் தொகுதி நலத் திட்டங்களுக்காகத் தண்டலம் என்கிற இடத்தில் முதலமைச்சர் காமராஜரையும் பிறரையும் அழைத்து ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் பங்கேற்ற டாகடர் ஸ்ரீனிவாசன், காஞ்சிபுரம் தொகுதியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்ற முற்றிலும் தகுதி வாய்ந்தவர் அண்ணாதான் என்பது நிரூபணமாகிவிட்டது என்று மனமாரப் பாராட்டினார்.
தமிழ் நாட்டில் பரம்பரை பரம்பரையாகத் தெலுங்கு பேசும் பல்வேறு வகுப்பார் குடியேறித் தமிழகத்தைத் தமது தாயகமாகக் கொண்டுள்ளனர். இவர்களில் பலர் இன்றளவும் வீட்டில் தெலுங்கர்களாகவும் வெளியில் தமிழர்களாகவும் உள்ளனர். வீட்டில் இவர்கள் பேசும் தெலுங்கு தமிழ் மொழியின் தாக்கத்தால் ஆந்திர தேசத்தவரால் அடையாளங் காண வியலாத அளவுக்கு மிகவும் சிதைந்துவிட்டிருக்கிறது. இவர்களையும் தமிழர்களாகக் கருதுவதுதான் முறை என்றாலும், வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் பதிவு செய்ய
வேண்டிய வாழ்க்கைக் குறிப்புக்குரியவர்களைப் பற்றித் தகவல் தருகையில் இதுபோன்ற அடிப்படை உண்மைகளைத் தெரிவிப்பது அவசியமாகிறது. மற்றபடி, அண்ணாவைப் பற்றி இத்தகவலைத் தருவது அண்ணாவைத் தமிழர்களிடமிருந்து அந்நியப்படுத்துவதாகாது. பாரத தேசத்து மக்கள் யாவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளேயாவர் என்கிற உணர்வு இருக்கும்வரை, மொழியால் அவர்களிடையே பேதம் பார்க்கத் தோன்றாது.
தமிழ் நாட்டில் வீட்டிலே தெலுங்கு பேசுவோரைப் போலவே கன்னடம், மராட்டி, சௌராஷ்டிரம் குஜராத்தி, மார்வாரி எனப் பல்வேறு மொழியினர் பல நூற்றாண்டுகளாகத் தமிழ் கலாசாரத்துடன் ஒன்றி, எல்லா அம்சங்களிலும் தமிழர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் நாட்டின் நலன் கருதுபவர்களாகவும் தமிழ் மொழி வளம் பெறுவதில் நாட்டம் உள்ளவர்களாகவும் இவர்கள் உள்ளனர் என்பதிலும் ஐயமில்லை.
அண்ணா தி மு க தொடங்கப்பட்ட கால கட்டத்தில் புதுவை மாநிலத்தில் தேர்தல் வந்தபோது மலையாளப் பகுதியைச் சேர்ந்த, ஆனால் புதுவை மாநிலத்திற்குட்பட்ட மாஹேயில் தேர்தல் பிரசாரம் செய்வதற்குச் சென்ற எம் ஜி ஆர் மலையாளத்தில் சரியாகப் பேசமுடியாமல் தட்டுத் தடுமாறுகிற அளவுக்குத் தமிழராகவே மாறிப்போய்விட்டிருந்ததும் அவர் பேசிய மலையாளம் தமிழைப் போலத்தான் இருந்தது என்பதும் நினைவுக்கு வருகிறது.
This entry is part [part not set] of 33 in the series 20070405_Issue
ஸ்ரீனி
திரு.ஜடாயுவிற்கு நன்றி!!
தமிழ் வலைப் பூக்கள் பற்றிய என்னுடைய திண்ணைக் கட்டுரையை ஜடாயு அவர்கள் தன் வலைப்பூவில் போட்டாலும் போட்டார்,எனக்கு பல மின் மடல்கள்.ஒரு சில பாராட்டியும்,சில மிக நாகரீக(!?)மாகவும் வந்தன.கவனிக்கவும்,என்னுடைய இந்த ஒரு கட்டுரையோடு மட்டும்தான் ஜடாயு அவர்கள் தான் ஒத்துப் போவதாக கூறியுள்ளார்.
ஒரு பெண் பதிவர் கேட்கிறார்..ஏன் நாங்க எல்லாம் இப்பவும்தானே எழுதுகிறோம்!பல நன்றாக எழுதிய,எழுதக் கூடிய பெண் பதிவர்கள் இன்று பதிவதில்லை.இதுதான் நான் சொல்லியது.நான் எழுதுகிறேனே,பயப்படவில்லையே என்றால் என்ன சொல்வது!வாழ்த்துக்கள்!பலர் இன்று(இதில் ஆண் பதிவர்களும் உண்டு)எழுதாமல் இருப்பது பயத்தால் அல்ல.ஆபாசம் கண்ட அருவெறுப்பினால்!
ஒன்று புரிந்தது.ஜடாயு அவர்கள் என் கருத்துடன்(இதில் மட்டும்) ஒப்பியதால்,அவர் எழுத்திற்கு எதிர் வினையாடுபவர்கள் என்னையும் தங்கள் லிஸ்டில் போட்டு விட்டனர்.! என் கட்டுரை என் ஆதங்கத்தின் வெளிப்பாடு!
என்னையும் பிரபலமாக்கிய(!??) ஜடாயு அவர்களுக்கு
மறுபடியும் என் நன்றி!
This entry is part [part not set] of 28 in the series 20070315_Issue
மலர் மன்னன்
அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,
திண்ணையில் எனக்குக் கிடைத்துள்ள இடத்தை எவர் மீதும் அபாண்டமாகப் பழி சுமத்துவதற்கான வாய்ப்பாக ஒருபோதும் பயன் படுத்திக்கொள்ள மாட்டேன்.
மூப்பனார் பற்றிய எனது கட்டுரையில்,
எப்போதும் ராஜீவ் காந்தியை மொய்த்துக்கொண்டு தாங்கள்தாம் ராஜீவுக்கு மிகவும் நெருக்கம் என்று தமக்குள் போட்டி போடுபவர்கள் மே 21 ந்தேதி மட்டும் அவரை அம்போ என்று தனியாக விட்டு விட்டது ஏன் என்று யோசிக்கத் தெரியாதவரா மூப்பனார்?
என்றுதான் குறிப்பிட்டிருந்தேன். இது மூப்பனார் மீதே குற்றம் சாட்டுவதுபோன்ற எண்ணத்தைச் சிலருக்குத் தோற்றுவிக்கும் என்று நினைக்கவில்லை. மூப்பனார் என்றுமே தம்மை முன்னிலைப் படுத்திக்கொள்ளாமல் எப்போதும் பின்னணியிலேயே இருந்து, அமைப்பைக் கட்டமைக்கும் சாதனையாளர் என்பதை நன்கு அறிவேன். காமராஜர் மறைந்ததும் நன்கு கட்டமைக்கப் பட்டிரு ந்த ஸ்தாபன காங்கிரசை இந்திரா காங்கிரசுடன் அவர் உடனடியாக இணைத்து விட்டதால்தான் இன்று அது தனது பாரம்பரியப் பெருமையை இழந்து தமிழ் நாட்டில் ஒரு துணைக் கட்சியாக இயங்க வேண்டியதாயிற்று என்கிற வருத்தந்தான் எனக்கு உண்டே யன்றி அவர் மீது பழி சுமத்தும் எண்ணம் சிறிதும் இல்லை. சுய லாபத்திற்காக மூப்பனார் இணைப்பினைச் செய்தார் என்று எவராலும் கருதவும் இயலாது.
மேலும், ராஜீவ் படுகொலை தொடர்பாக உறுதிபடச் சில நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டிருக்க முடியும், ஆனால் அதற்கான துணிவு அவருக்கு இல்லாமல் போய்விட்டது என்பதைத்தான் சுட்டியிருந்தேன். அந்தப் பாராவில் தொடர்ந்து வரும் எனது வரிகள் இதைத்தான் குறிப்பால் உணர்த்துவதாக இப்போதும் நம்புகிறேன். இது பற்றி இதற்கு மேலும் விவாதித்தால் ரசாபாசமாகிவிடும். கட்டுரைக்கு எதிர்வினை செய்த அன்பர் கோவிந்த ராஜனே ஒரு நபரின் பெயரைக் குறிப்பிட்டு விட்டதே போதுமானதாக இருக்கும்.
முந்தைய ஸ்தாபன மற்றும் இந்திரா காங்கிரசில் இன்று பிரபலமாக விளங்கும் பலரை அவர்களின் தொடக்க காலத்திலிருந்தே நன்கு அறிவேன். அந்த வகையில்தான் குமரி அனந்தனை நினைவூட்டியமைக்காக மிகவும் மகிழ்ச்சியடைந்து சில வரிகள் எழுத நேர்ந்தது. சாதியடிப்படையில் அவர் காமராஜர் நிலைப்பாட்டை ஆதரித்தது போன்ற கருத்ததைத் தோற்றுவித்தமையால்தான் அதுபற்றியும் குறிப்பிட நேர்ந்தது. மற்றபடி தனிப்பட்ட நட்பையும் அரசியலையும் சேர்த்துக் குழப்பிக் கொள்வதில்லை.
இந்திரா காங்கிரஸ் மட்டுமின்றி, தி மு க, அண்ணா தி மு க கம்யூனிஸ்ட் எனப் பல கட்சிகளிலும் எனக்கு நன்கு அறிமுகமான முந்தைய தலைமுறையினர் பலர் இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர். எனது கோட்பாடுகளை அவர்கள் நன்கு அறிந்துள்ள போதிலும் அவர்களுடனான நட்புக்கு எவ்வித ஊறும் நேராமல் இருப்பது அரசியலைத் தனியாகப் பிரித்து வைக்கத் தெரிந்திருப்பதால்தான்.
கடந்த பிரவரி மாதம் 19 ந் தேதி உ. வே. சா. அவர்களின் பிறந்த நாளையொட்டி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அவர் நினைவைப் போற்றும் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது கூட, இன்று தமிழக நிதியமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் மரியாதைக்குரிய க. அன்பழகன் அவர்கள் மிகவும் அன்பு ததும்ப விசாரித்துத் தம் தந்தையார் மறைந்த கலியாண சுந்தரனாருக்கு என்மீது இருந்த அன்பை நினைவு கூரத் தவறவில்லை. அரசியலையும் நட்பையும் இருவேறு அம்சங்களாக அடையாளங் காண்பதால்தான் இவை போன்ற சம்பவங்கள் சாத்தியமாகின்றன.
கடைசியாக ஒன்று: கிட்டத்தட்ட சேரியைப் போன்ற பகுதியில்தான் தற்போது நான் இரண்டே அறையுள்ள சிறு குடித்தனப் பகுதியில் மிகுந்த மன நிறைவோடும் விருப்பத்தின் பேரிலும் வசித்து வருகிறேன். அடுக்கு மாடி உச்சி எதிலும் வாசம் செய்யவில்லை.
This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue
சுப்புராஜ்
திண்ணை ஆசிரியர் குழுவிற்கு,
வணக்கம். சுப்புராஜ் எழுதுகிறேன்.
நான் சமீப நாட்களாகத்தான் திண்ணை மின்னிதழை வாசித்து வருகிறேன். எல்லோரும் தங்களின் கருத்துக்களை சுதந்திரமாக விவாதிக்க திண்ணை களமமைத்துக் கொடுத்து வருவதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. ஆரோக்கியமான இலக்கியப் படைப்புகளும் அரங்கேறி வருகின்றன. தொடரட்டும் உங்களின் பணி. வாழ்த்துக்கள்! முடிந்த போது மீண்டும் எழுதுகிறேன். எல்லோருக்கும் என் அன்பும் விசாரிப்புகளும். மீண்டும் நன்றி சொல்லி முடிக்கிறேன்!
This entry is part [part not set] of 43 in the series 20070125_Issue
ஜெயமோகன்
ஆசிரியருக்கு
திரு நடராஜா எழுதிய கட்டுரை படித்தேன். நல்ல கட்டுரை. சொல் புதிது இதழில் ஹண்டிங்டனின் நாகரீகங்களின் மோதல் கருத்தை ஒட்டியும் வெட்டியும் ஒரு நீண்ட கட்டுரை முன்பு வெளியாகியிருந்தது. அக்கட்டுரையில் ‘மோதல் மூலமே முன்ன்கர்தல் சாத்தியம்’ என்ற மேலைநாட்டு முரணியக்கக் கோட்பாட்டு நம்பிக்கை காரணமாகவே எங்கும் எதிலும் முரண்பாட்டைக் காண்பதற்கு மேலைமனம் முயல்கிறது என்றும்ம் அது ஒரு நம்பிக்கை மட்டுமே என்றும் முன்னோக்கிய நகர்வுக்கு மோதலுக்கு பதிலாக ‘உரையாடல்’ காரணமாக அமைகிறது என்பதே பொருத்தம் என்றும் கட்டுரையாளார் வாதிட்டிருந்தார். மோதல் கண்டிப்பாக நிகழும் என்ற எண்ணமே மோதலை உருவாக்கும் என்று சொல்லியிருந்தார்
This entry is part [part not set] of 34 in the series 20061026_Issue
கவியோகி வேதம்
My dear Thinnai Editor ,
thanks for publishing my new poem on :”KOLU” in present Thinnai magazine.I am receiving comments from many as ‘beautiful’. Thank yu.
…Today i read also a wonderful short story written by Mathanghi.by name “BALI”.she is a famous writer and I had seen her stories in Manghai, manghaiyar malar, Vikatan , Kalki etc. She is in Singapore.
Her theme is entirely different,new,strange!. very much wonderfully woven about kaikeyi, and Mantharai,as new “good Women’characterised by writer Mathanghi, as done before by Nataka vel Manohar in his Dramas like RavaNan My best wishes for her,
Yurs,
Kaviyogiyaar Vedham
This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue
வஜ்ரா ஷங்கர்
திண்ணையில் திரு. சி. ஜெயபாரதன் எழுதும் உலகக் கண்டங்களுக்குப் புது மார்க்கம் தேடிய திட வைராக்கியத் தீரர்கள்-2 மகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323) என்ற தொடர் கட்டுரை கண்டேன். அதில் அலெக்ஸாண்டர் புருஷோத்தமனை வென்றதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அலெக்ஸாண்டர், பொரஸ் (புருஷோத்தமன்) யிடம் தோற்றதாகவே சில சரித்திர ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்கள் அலெக்ஸாண்டர் தோற்றார் என்றால் அவரை மாவீரன் என்று சொல்ல முடியாது என்பதால் அவர் தோற்றதை மறைத்து வெற்றி பெற்றார் என்று கூறுகின்றனர். ஆனால் சரித்திரம் மாறிவிடாது. அலெக்ஸாண்டர் புருஷோத்தமனுடன் சமரசம் செய்துகொண்டதற்கான சரித்திர சான்றுகள் உள்ளன, வென்ற அலெக்ஸாண்டர் ஏன் புருஷோத்தமனுடன் சமரசம் செய்து கொள்ளவேண்டும்..?
அலெக்ஸாண்டர் சட்லஜ் (hyphsis) நதிக்கரையின் வழியாக தன் படைகளைத் திரட்டிக்கொண்டு கடலை அடைந்து பாபிலோனியா திரும்பியது தெரிந்ததே. அப்போது எதிர்கொண்ட “மல்லிஸ்” படைகளுடன் புருவின் படைகள் அலெக்ஸாண்டருடன் சேர்ந்து போரிட்டதாக சரித்திரம் கூறவில்லை. புரு தோற்றிருந்தால் அவன் படைகள் அலெக்ஸாண்டரை ஆதரித்து “மல்லிஸ்” படைகளுக்கு எதிராக போரிட்டிருக்கும்!
ப்ளூடார்க் (plutarch) அலெக்ஸாண்டர் புருவுக்கு தங்கங்கள் பல கொடுத்ததாகவும் சொல்கிறார். வென்ற அரசன் தோற்ற அரசனுக்கு தங்கம், வெள்ளி கொடுக்கும் முறை எந்த காலத்தில் இருந்தது?
சில ஆண்டுகளுக்கு முன் வந்த அலெக்ஸாண்டர் திரைப்படத்தை திரு ஜெயபாரதன் பார்த்தாரா என்று தெரியவில்லை. ஆலிவர் ஸ்டோன் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்து பின் தன் படத்தை இயக்கியிருக்கிறார். அதில் தெளிவாக அலெக்ஸாண்டர் புருவிடம் தோற்றது காட்டப் படுகின்றது.
இந்த “ராஜாவை நடத்தும் முறையில் நடத்து” என்று தோற்ற புரு டயலாக் அடிப்பதாக படிக்கும் நான்சென்ஸையெல்லாம் எவ்வளவு நாள் தான் நாம் படித்துக் கொண்டிருப்பது?
புருஷோத்தமன், இந்திய மண்ணின் மைந்தன், அலெக்ஸாண்டரை தோற்கடித்தான். இந்தியரான நாம் அதை நினைத்து பெருமை கொள்ளவேண்டும்.
வாலிஸ் பேட்ஜ் தனது புத்தகத்தில் குறிப்பிடுவது,
In the battle of Jhelum a large majority of Alexander’s cavalry was killed. Alexander realized that if he were to continue fighting he would be completely ruined. He requested Porus to stop fighting. Porus was true to Indian traditions and did not kill the surrendered enemy.
Reference:
E. A. Wallis Badge, ”Life and Exploits of Alexander the Great”, Publisher: Kessinger Publishing Company ISBN 1417947837
கொஞ்ச காலமாகவே திண்னையில் இஸ்லாத்தைப் பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சிலர் இஸ்லாத்தின் மீதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், என்னைப் போன்ற தனிப்பட்டவர்கள் மீதும் வெறுப்பையும் அவதூறையும் சொல்வதற்கு வாய்ப்பாக திண்ணையைப் பயன்படுத்தி வருகின்றனர். நான் ஒரு அடிப்படைவாதி, பத்ரி ஒரு இரட்டை வேடதாரி இப்படி.
புனை பெயர்களில் எழுதுவது தவறல்ல. நானும் புனைபெயரில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் எங்கே இருக்கிறேன் என்பதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. ஏனெனில் நான் இறைவனுக்கு மட்டுமே அஞ்சுகிறேன்.
ஆனால் நேசகுமார் போன்றவர்கள் ஒளிந்து கொண்டு தாக்குகிறார்கள். நேசகுமார் என்பது அவருடைய உண்மையான பெயரல்ல என்பது தெரிந்ததே. ஆனால் சென்னையில் உள்ள என் நண்பர் ஒருவரிடம் அவர் தனது சென்னை முகவரியை என்னிடம் தெரிவித்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அவர் தெரிவித்தாலும் தெரிவிக்காவிட்டாலும் ஒன்றுதான். என்னால் யாருக்கும் எந்த ஆபத்தும் வரப்போவதில்லை. மற்றவர்களால் எனக்கு வரலாம். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.
ஆனால் அடிப்படைவாதி, அருகதையற்றவன் என்றெல்லாம் சொல்வதை நினைத்தால் எனக்கு சிரிப்பாக வருகிற்து. தாக்குவதற்கென்றே ஒரு குழுவாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இணையத்தில் இப்படி எழுதுவதென்பது ஒரு நிழல் யுத்தம் மாதிரிதான்.
எனக்கு சரி என்று பட்ட கருத்துக்களை யாரும் காயப்படாத வகையில் எடுத்துச் சொல்கிறேன். இதுவரை நான் ஹிந்து, கிறிஸ்தவ மதம் சம்பந்தப்பட்ட கடவுளையோ, தீர்க்க தரிசியையோ பற்றி தரக்குறைவாக ஒரு வார்த்தைகூட சொன்னது கிடையாது. சொல்லவும் மாட்டேன். நான் பகவத் கீதை பற்றியும், தீபாவளி பற்றியும், ஓஷோ, ரமணர்,ஜே கிருஷ்ணமூர்த்தி பற்றியெல்லாம் எழுதியதைப் படித்திருந்தால் நான் சொல்வது உண்மை என்று புரியும். ஆனால் படித்தாலும் அதிலும் குற்றம் கண்டு பிடிப்பவர்களைப் பற்றி ஒன்றும் சொல்ல முடியாது.
The fault-finder wil find fault even in Paradise என்று ஹென்ரி டேவிட் தோரோ அழகாகச் சொன்னார். அதுதான் என் விஷயத்தில் நடந்து கொண்டுள்ளது.
சமீபத்தில் விஸ்வாமித்திரா என்பவர் வெ.சா.வுக்கு ஆதரவாக எழுதுகின்ற தோரணையில் என்னைப் பற்றிய அவருடைய ‘கருத்துக்களை’யெல்லாம் திண்ணையில் கொட்டியிருக்கிறார்.
திரும்பத் திரும்ப நான் ரஷ்டி பற்றி எழுதியதையே, எந்தக் காரணமுமில்லாமல் இஸ்லாமிய எதிர்ப்பும் வெறுப்பும் கொண்ட பல மனங்கள் துருப்புச் சீட்டு போல பயன்படுத்தி வருகின்றன. அந்த குழுவில் இப்போது விஸ்வாமித்திராவும் உண்டு என்று தெரிந்து கொள்கிறேன்.
ஒரு மதத்தை விமர்சன ரீதியில் அணுகுவதில் தவறில்லை. உதாரணமாக அஸ்கர் அலி எஞ்சினியர் இந்த காரியத்தை அழகாகச் செய்து கொண்டுள்ளார். ஆனால் ஒரு மதம் சம்பந்தப்பட்ட தனி மனிதர்களைக் குறிவைத்துத் தரக்குறைவாகப் பேசுவதும் எழுதுவதும் தவறு. அதுவும் முஸ்லிம்களால் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கப்படும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி அநாகரீகமாகப் பேசுவதையோ எழுதுவதையோ எந்த சரியான முஸ்லிமும் பொறுத்துக் கொள்ள மாட்டார்.
ரஷ்டி விஷயத்தில் நடந்தது அதுதான். சர்வதேசப் புகழ் பெற்ற அந்த எழுத்தாளர், இஸ்லாத்தின் மீதான ஆக்கப்பூர்வமான விமர்சனமாக ‘சாத்தானின் கவிதைகள்’ என்ற நாவலை எழுதவில்லை. தனிப்பட்ட முறையில் முஹம்மது நபியையும் அவர்களது மனைவிமார்களையும் பற்றி அசிங்கமாக எழுதினார். இலக்கியம் என்ற போர்வையில்.
அதைத்தான் நான் கண்டித்து எழுதினேன். உங்கள் தாயைப் பற்றித் தரக்குறைவாகப் பேசுகிற ஒருவனை நீங்கள் கண்டித்தால், திட்டினால் அதை வன்முறை என்று சொல்வீர்களா? ஆனால் அந்த வார்த்தைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது எவ்வளவு காலத்துக்குத் தாக்குப் பிடிக்கும்?
இஸ்லாம் அமைதியான மார்க்கம்தான். ஆனால் நீங்கள் அடித்தால் நாங்கள் வாங்கிக் கொண்டே இருப்போம் என்று அதற்குப் பொருளல்ல. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்று சொன்ன இயேசுகூட ஒரு கட்டத்தில் கோயிலின் புனிதத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தவர்களை சாட்டையால் அடித்து விரட்டியதாக புனித பைபிள் கூறுகிறது.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொன்றால் சாதாரணமாக அது கொலை என்று சொல்லப்படுகிறது. அதையே போர்க்களத்தில் ஒரு ராணுவ வீரன் செய்தால் அது நாட்டுப் பற்று என்றும் தியாகம் என்றும் பாராட்டப்படுகிறது. போலீஸ் ‘என்கௌண்ட’ரில் ஒரு தாதா சுட்டுக் கொல்லப்பட்டால் அதையும் சட்டம் கொலை என்று சொல்வதில்லை. தூக்கு தண்டனை கொடுப்பதை கொலை என்று சட்டம் சொல்வதில்லை. ஆனால் இந்த எல்லா உதாரணங்களிலுமே போவது மனித உயிர்கள்தான்.
செயல் நடக்கும் இடத்தைப் (context)பொறுத்து வரையறைகள்,இலக்கணங்கள்,அளவுகோல்கள் மாறும். மாற வேண்டும். அதுதான் அறிவுடைமை. நீதிமன்றங்களும், தண்டனைகளும், காவல் நிலையங்களும், சட்டங்களும் இருப்பது இதற்காகத்தான்.
நீங்கள் என்னை என் வீட்டில் வந்து அடிக்க வந்தீர்களென்றால் உங்களைத் திருப்பி அடிக்கும் உரிமையோ அல்லது குறைந்த பட்சமாக என்னை உங்கள் வன்முறையிலிருந்து தற்காத்துக் கொள்ளும் உரிமையோ எனக்கு இருக்கிறது. அமைதி மார்க்கம் என்று சொல்லி கோழையாக இருந்து உயிரை விட அங்கே அனுமதி இல்லை.
இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போர்கள் அனைத்துமே இப்படிப்பட்ட தற்காப்புப் போர்கள்தான். அடித்தவனை, அடிக்க வந்தவனை திருப்பி அடித்ததுதான். இது எல்லா சமுதாயங்களிலும், எல்லா மதங்களிலும் இருந்த, இருக்க வேண்டிய குணம்தான்.
வன்முறையும் போரும் எல்லாக் காலத்திலும் எல்லாச் சமுதாயத்தாராலும் நடத்தப்பட்டே வந்திருக்கின்றன. உலக வரலாறு தெரிந்தவர்களுக்கு இந்த உண்மை தெரியும்.
ஆனால் வெ.சா. ஒரு கற்பனையான குற்றச்சாட்டை அந்தக் கட்டுரையில் தேவையே இல்லாமல் வைத்திருந்தார். யாரோ கலிமா சொல்லு என்று அவரை வற்புறுத்துகிறார்களாம். உன் பெயரை முஸ்லிம் பெயராக மாற்றிக்கொள் என்று சொல்கிறார்களாம்.
இதெல்லாம் என்ன?
எந்த மதத்தின் பெயரால் வன்முறை நடந்தாலும் அது குற்றம்தான். பாபர் மசூதியை மதவெறியர்கள் இடித்ததும் குற்றம்தான். பள்ளி வாசலுக்குள் மத வெறியர்கள் குண்டு வைத்ததும் குற்றம்தான். இஸ்லாத்தின் பெயரால் அல்லாஹு அக்பர் என்று சொல்லி அப்பாவிகளில் கழுத்தை அறுப்பது, மண்ணில் புதைத்து கல்லால் அடிப்பது போன்ற கொடுமைகள் எல்லாம் குற்றம்தான்.
ஆனால் இதையெல்லாம் குற்றம் என்று ஒத்துக் கொள்ளாத பல முஸ்லிம்கள் இருக்கலாம். ஆனால் என்னுடைய பார்வையில் இவை யாவும் குற்றம்தான். (இதையெல்லாம் பற்றி நான் ஏற்கனவே என் தளத்தில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனெனில் அது என்னைத் திட்டுபவர்களது உள்நோக்கத்துக்கு ஊறு விளைவிப்பதாக அமைந்துவிடும். தெரியும்).
குஜராத்தில் அப்பாவி ஏழைக் கன்னிப் பெண்களைக் கதறக் கதறக் கற்பழித்துவிட்டு வீட்டு மொட்டை மாடியில் அவர்களைக் கட்டி வைத்துத் தீ வைத்துக் கொளுத்திவிட்ட ஹிந்து வெறியர்களைப் பற்றி நீங்கள் எப்போதாவது கண்டித்து எழுதியுள்ளீர்களா? கர்ப்பிணிப் பெண்ணொருத்தியின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியில் எடுத்து தீயில் வீசிய வெறிச்செயலை என்றைக்காவது கண்டித்துள்ளீர்களா? வேனில் தூங்கிக் கொண்டிருந்த அப்பாவிக் குழந்தைகளை அவர்களின் தந்தையான பாதிரியுடன் சேர்த்துக் கொளுத்திவிட்டார்களே அதைக் கண்டித்துள்ளீர்களா? கோயம்புத்தூரும் குஜராத்தும் சொல்வது என்ன என்று என்றைக்காவது கேட்டிருக்கிறீர்களா?
கடந்தகால வரலாறு என்பது நாம் கண்ணால் காண்பது அல்ல. எழுதப்பட்டதிலிருந்து யூகிப்பதாகவே அது உள்ளது. வரலாற்றாசிரியர்கள் அனைவருமே தங்களுடைய பார்வையின் வெளிப்பாடாகத்தான் வரலாற்றை வடிக்கிறார்கள். எனவே ஒருவிதமான நம்பிக்கை சார்ந்ததாகவே, ஒரு சார்பான பார்வை கொண்டாதாகவே எல்லா வரலாறும் நமக்கு கிடைக்கிறது என்று சொல்லலாம்.
இந்திய வரலாற்றில் சோமநாதபுரக் கோயிலுக்குள் நடந்த சண்டையை ஒரு ஹிந்து படித்தால் அது அவருக்கு கஜினி முஹம்மதுமீது வெறுப்பேற்றுவதாக இருக்கலாம். ஒரு முஸ்லிம் படித்தால் அவருக்கு அது நியாயமாகப் படலாம். சிலுவைப் போர்களைப் பற்றி ஒரு கிறிஸ்தவர் படித்தால் அது அவருக்கு சரியாகப் படலாம். லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்த ஹிட்லருக்கு அப்படுகொலைகள் சரியானதாகத்தான் பட்டிருக்கிறது. ஒரு நாட்டையே ஆக்கிரமித்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு சொல்லவொண்ணாத துயரங்களை வழங்கிக் கொண்டிருக்கும் யூதர்களுக்கு பாலஸ்தீனில் நடத்திக் கொண்டிருப்பது சரியென்று தோன்றலாம். அமெரிக்க மனப்பான்மை கொண்ட ஏரியல் ஷரோன்களுக்கும் அது சரிதான் என்று படலாம்.
வெள்ளைக்காரர்களிடம் கேட்டால் வாஞ்சிநாதன் செய்தது கொலை என்பான். ஆனால் இந்திய மனம் அதை அப்படிப் பார்ப்பதில்லை. ஜாலியன் வாலாபாக்கில் நடந்தது நமக்குப் படுகொலை. ஆனால் ஜெனரல் டயருக்கு அது கிறிஸ்தவத் தொண்டாகப் பட்டிருக்கலாம். எது சரி, எது உண்மை என்பது இரண்டுக்கும் நடுவில் எங்கோ இருக்கிறது.
கடந்த காலத்தைச் சுட்டிக் காட்டி நிகழ் காலத்தில் வெறுப்பை விதைப்பது சரியல்ல. ஒரு சில தனி மனிதர்கள், அல்லது இயக்கங்கள் செய்யும் தவறுகளை அல்லது குற்றங்களையெல்லாம் ஒரு மதத்தின் மீது ஏற்றி பொதுமைப்படுத்துவதுதான் இஸ்லாத்தைக் குறை சொல்பவர்கள் செய்யும் தவறு..
இந்த பொதுமைப் படுத்தும் காரியத்தை எப்போதும் எந்த மதத்தின் மீதும் யாரும் செய்யலாம்.
இது ஒரு வீண் வேலை. கால விரயம். உதாரணமாக, முஹம்மது நபி இறுதித் தூதர் அல்ல என்று நேசகுமார் கட்டுரை கட்டுரையாக எழுதினார். இன்னும்கூட எழுதிக் கொண்டிருக்கலாம்.
எதற்காக என்று கேட்கிறேன்.
முஹம்மது நபி இறுதித் தூதராக இருப்பதில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு என்ன பிரச்சனை? மற்றவர்கள் அதை ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லையே!
வந்தே மாதரம் என்ற பாடலை ஒரு முஸ்லிம் விரும்பினால் பாடிக்கொள்ளட்டும். அதனால் இஸ்லாத்துக்கு நஷ்டம் ஒன்றும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து அந்தப் பாடலைப் பாடிய பிறகுதான் அதற்கு இதுவரை இல்லாத புகழ் வந்தது என்றே சொல்லலாம். மனம் சரியாக இருக்கும்போது வாயால் எழுப்பப்படும் சப்தங்களை வைத்து விவாதம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
ஆனால் அதைப் பாடித்தான் ஆக வேண்டும். கட்டாயமாக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வதில் எந்த நியாயமுமில்லை என்றுதான் சொல்கிறேன். அப்படிச் சொல்வது கலாச்சார வன்முறையல்லவா?
வந்தே மாதரம் பாடலைத் தேசிய கீதமாக ஆக்குவது சரியல்ல என்று மிகத்தெளிவாக நமது தேசிய கீதத்தின் தந்தையான தாகூரே கூறியுள்ளார். வந்தே மாதரம் பாடலுக்கு பல முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? அது பங்கிம் சந்திரர் எழுதிய ஆனந்த மடம் என்ற் நாவலில் வரும் பாடல். (ஆனால் அந்த நாவலில் சேர்க்கப்படுவதற்கு முன்பே அது எழுதப்பட்டது). ப்ரிட்டிஷாருக்கும் வங்காள முஸ்லிம்களுக்கும் எதிராக நடந்த போராட்டத்தைப் பற்றிய ஒரு நாவல் அது.
அதோடு அதில் சில வரிகளின் மூலம் அது இந்திய நாட்டை துர்கா தேவியாக உருவகப்படுத்துகிற்து என்றும் தெரிகிறது. உருவ வழிபாட்டை ஒழித்துவிட்ட ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களை துர்கா தேவியின் வடிவாக இருக்கும் நாட்டை வணங்கு என்று வற்புறுத்து என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்?
இங்கே பிரச்சனை வந்தே மாதரம் பாடலை ஒரு முஸ்லிம் பாடுவதல்ல. அதைப்பாடித்தான் ஆகவேண்டும் என்று க்ட்டாயப்படுத்துவது.
கொல்கத்தாவில் ஒரு முறை வந்தே மாதரம் பாடலைப் பாடிய் கவி தாகூரே இந்தப் பாடலை தேசிய கீதமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுபாஸ் சந்திர போஸுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில்:
“வந்தே மாதரம் பாடலின் மையப்பகுதி அது தேவி துர்கையைத் துதிக்கும் பாடலாக இருப்பதுதான். இது மிகவும் தெளிவாக உள்ளது. இதில் வேறு கருத்துக்கே இடமில்லை. துர்காவும் வங்காளமும் ஒன்றுதான் என்பதாகத்தான் பங்கிம் சந்திரர் கடையில் காட்டுகிறார். ஆனால் தேசப்பற்று என்ற ரீதியில் பத்து தலை கொண்ட துர்கையை ‘ஸ்வதேஷ்’ (தேசம்) என்பதாக எந்த முசல்மானும் ஒத்துக்கொள்ள மாட்டார் என்பது தெளிவு. இந்த ஆண்டு, துர்கா பூஜைகளையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர்களிலெல்லாம் வந்தே மாதரம் பாடலில் இருந்து மேற்கோள்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அந்தப் பாடல் துர்கையைக் குறிப்பதுதான் என்பதாக பத்திரிக்கையாசிரியர்களும் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் இது. ‘ஆனந்தமடம்’ என்பது ஒரு இலக்கியப் படைப்பு. அதில் அப்பாடல் இடம் பெறுவது பொருத்தமானதே. ஆனால் பாராளுமன்றம் என்பது எல்லா மதக்குழுக்களும் இணைந்து செயல்படும் ஒரு இடமாகும். எனவே அங்கே அந்தப்பாடல் பொருத்தமானதாக இருக்க முடியாது. வங்காள முஸ்லிம்கள் தங்களது அடிப்படைவாதத்தில் பிடிவாதமாக இருக்கும்போது, அது நமக்கு பொறுத்துக்கொள்ள முடியாததாக இருக்கிறது. ஆனால் அவர்களையே பிரதியெடுத்த மாதிரி, நாமும் அவர்களைப் போலவே பிடிவாதமாக பாடித்தான் ஆகவேண்டும் என்று சொல்வோமேயானால், அது நம்மை நாமே தோற்கடிப்பதாக இருக்கும்”
என்று எழுதிய அவர் அக்கடிதத்தின் பின்குறிப்பில்
“வங்காள ஹிந்துக்கள் இந்த விஷயத்தில் கோபமாக இருக்கிறார்கள். ஆனால் இது ஹிந்துக்களை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய விஷயமல்ல. இரண்டு பக்கமும் வலுவான உணர்வுகள் இருப்பதால், நடுநிலையான தீர்ப்பு அவசியமாகிறது. அமைதி, ஒற்றுமை, நல்லெண்ணம் இவைகளை நோக்கித்தான் நமது அரசியல் நகர்வு இருக்கிறது. ஒரு குழுவின் கோஷங்களை மட்டும் கவனிப்பதால் முடிவற்ற போராட்டம்தான் தொடரும். இது நமக்கு வேண்டாம்.”
என்று முடிக்கிறார். (கடித எண் 314, Selected Letters of Rabindranath Tagore, edited by K. Datta and A.Robibson, CUP).
வந்தே மாதரம் பாடலைப் பாடக்கூடாதென்று சீக்கியர்களும் முடிவெடுத்தார்கள். சீக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜதேதார் அவ்தார் மக்கார் சீக்கியர்களால் நடத்தப்படும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இப்பாடலைப் பாடவேண்டாமென்றும் அதற்கு பதிலாக குரு கோபிந்த் சிங்கின் பாடலைப் பாடும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அப்பாடல் பயன்படுத்தப்பட்டுள்ள ஆனந்த மடம் என்ற நாவல்கூட முஸ்லிம்களுக்கு, குறிப்பாக வங்காள முஸ்லிம்களுக்கு, எதிரானதென்ற ஒரு கருத்தும் உள்ளது.
இவ்வளவும் வெ.சா.வுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இருந்தும் அவர் வந்தே மாதரம் பாடலைப் பாடமாட்டார்களாம் என்று போகிற போக்கில் எழுதினார் என்றால், அவரைப் பற்றி என்ன நினைப்பது? அவருக்கு விஸ்வாமித்திர தொண்டரடிப் பொடிகள் வேறு!
‘அட்லாண்டிக்குக்கு அப்பால்’ நூலின் பல கட்டுரைகளை சிலாகிக்கும் விஸ்வாமித்திரா நேசகுமாரைப் பற்றி சிவகுமார் சொல்வது மட்டும் தவறு என்று வாதிடுவதில் உள்ள உள்நோக்கம் என்ன?
எனவே மறுபடியும் சொல்கிறேன். இஸ்லாத்தை விமர்சிப்பது வேறு. தனி மனிதர்களை இழிவு படுத்துவது வேறு. சல்மான் ரஷ்டிக்கு தண்டனை தரவேண்டும் என்று சொன்னது அவர் இஸ்லாத்தை விமர்சித்தார் என்பதற்காக அல்ல. அவர் விமர்சிக்கவும் இல்லை. முஹம்மது நபியையும் அவர்களது மனைவிமார்களையும் பற்றி தரக்குறைவாக எழுதினார். அவ்வளவுதான்.
“இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்றால் ஏனய்யா ருஷ்டிக்கும் சல்மாவுக்கு ஃபத்வா தெரிவிக்கிறீர்கள்?” என்று விஸ்வாமித்திரா கேட்கிறார்.
சல்மான் ரஷ்டியும் சல்மாவும் முஸ்லிமாக இருக்கும்போது, அவர்களை தண்டிப்பதானது எப்படி இஸ்லாத்தை வாளால் பரப்பும் காரியமாகும்? அது முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் குறைக்கவல்லவா செய்யும்? ஒரு மதத்தை அந்த மதத்துக்குள் இருப்பவர்களிடமே பரப்புவார்களா?! இஸ்லாத்தைப் பரப்புவது என்ற அடிப்படைக்கே அது எதிரானதல்லவா? என்ன சொல்ல வருகிறார் விஸ்வாமித்திரர்?
விஸ்வாமித்திராவின் கேள்வியிலிருந்தே அவர் இஸ்லாத்தை எவ்வளவு தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார் அல்லது எவ்வளவு அறியாமையில் இருக்கிறார் என்று தெரிகிறது.
இங்கேயும் அங்கேயும் இருந்த கோடிக்கணக்கான மாற்று மதத்தினர் எங்கே போனார்கள் என்று கேட்கிறார். யாருக்குத் தெரியும்? வன்முறையால் அவர்கள் மதம் மாற்றப் பட்டிருந்தால், இஸ்லாமிய ஆட்சி போனபிறகு மறுபடியும் தங்கள் தாய் மதத்துக்கே திரும்பிச் சென்றிருக்கலாமல்லவா? ஏன் செல்லவில்லை? இதிலிருந்தே அந்த கோடிக்கணக்கான மக்களும் வாளாலோ வன்முறையாலோ இஸ்லாத்துகு வரவில்லை, மாறாக மனமாற்றத்தால் வந்தவர்கள் என்பது புரியவில்லையா? ஏன் இப்படி சிந்திக்கக் கூடாது?
பல நூறு ஆண்டுகள் முகலாயர்கள் இந்தியாவை ஆண்டும் இந்தியாவில் இன்னும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருப்பதே இஸ்லாம் வன்முறையால் பரப்பப்படவில்லை என்பதற்கு சான்றாக உள்ளது என்ற கருத்தைத்தான் சொன்னேன்.முகலாயர்கள் ஆட்சியில் ம்தம் மாறியவர்கள் எல்லாம் இஸ்லாத்தின் மேன்மைகளை அறிந்து மதம் மாறியவர்கள்தான் என்று நான் எங்குமே சொல்லவில்லை. நான் சொன்னதைத் திரித்து விஸ்வாமித்திரா சொல்கிறார்.
கமலாதாஸ் மதம் மடுத்து என்று சொன்னார் என்று நேசகுமார் முதலில் ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டார். அது அப்படியில்லை என்று நிரூபணமானதும், வேறு வழியில்லாமல் ‘வயதான பெண்மணியின் தற்காப்பு முயற்சிகள்’ என்று சொல்லி இப்போது விஸ்வாமித்திரா ‘ஜகா’ வாங்குகிறார்.
“இன்று மக்கள் தாங்கள் செல்லும் பஸ்ஸீல் ஒரு சக இஸ்லாமியப் பயணியைக் கண்டு விட்டால் அடுத்த பஸ்ஸில் போகலாம் என்று தயங்க வைக்கும் காரணம் என்ன ?” — என்று கேட்கிறார் விஸ்வாமித்திரா.
விஸ்வாமித்திரா போன்றவர்கள் செய்யும் காரியம் இதுதான். மேலே எழுப்பியிருக்கும் கேள்வி உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, கற்பனையான ஒரு சூழ்நிலை பரவலாக இருப்பதாக பொதுமைப்படுத்த முயல்வது.
இஸ்லாத்தைப் பற்றியும் முஹம்மது நபியைப் பற்றியும் மாற்று மதத்தினர், அதுவும் உலகப் புகழ் பெற்ற, அதிகாரத்திலும் அந்தஸ்திலும் இருந்தவர்கள், தலைவர்கள், என்ன சொன்னார்கள் என்று கீழே சில உதாரணங்கள் கொடுத்திருக்கிறேன். உண்மை அப்படி இருக்கும்போது இஸ்லாத்தை அசைத்துப் பார்த்துவிட முயலும் முயலும் முயற்சிகள் எங்கேபோய் முடியும் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்:.
அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம்
— நியூயார்க் டைம்ஸ், பிப்ரவரி 21, 1989, பக்கம் 01.
அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம். வழிகாட்டியாகவும் நிலையான தூணாகவும் பலருக்கு அது இருக்கிறது.
— ஹிலரி ரோட்மேன் க்ளிண்டன், லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ், மே 31, 1996, பக்கம் 3.
இஸ்லாம் அமெரிக்காவில் தொடந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. யாரும் அதை சந்தேகிக்க முடியாது.
— சிஎன்என், டிசம்பர் 15, 1995.
அமெரிக்காவில் முஸ்லிம்கள் இப்போது ஐம்பதிலிருந்து அறுபது லட்சம் பேர் இருக்கிறார்கள். ப்ரெஸ்பிட்டீரியன்கள், எபிஸ்கோபேலியன்கள், மோரோமோன்கள், க்வேக்கர்கள், யூனிட்டேரியன்கள், செவந்த்டே அட்வெண்டிஸ்டுகள், மென்னொனைட்டுகள், ஜெஹோவாவின் சாட்சிகள், கிறிஸ்தவ விஞ்ஞானிகள் இவர்கள் எல்லாரையும் விட முஸ்லிம்கள் அதிகமாக இருக்கிறார்கள். அமெரிக்காவில் இரண்டாவது பெரிய மதமாக யூதமதம் இருந்தது.ஆனால் அந்த இடத்தை இப்போது இஸ்லாம் பிடித்து விட்டதாக பல மக்கள்தொகைக் கணக்கெடுப்பாளர்கள் கருதுகிறார்கள்.
— ஜான் ப்ளாங்க், யூஎஸ்நியூஸ், 07/20/1998.
இஸ்லாத்தில் உள்ள அருமையான கருத்தாக்கங்களில் ஒன்றுதான் அதன் நீதியுணர்வு. அன்றாட வாழ்க்கைக்குரிய, அகில உலகமும் பயன்படுத்தக்கூடிய வாழ்க்கை பற்றிய நடைமுறைக் கோட்பாடுகளை நான் குரானில் படித்தேன். — Ideals of Islam என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட விரிவுரைகள்.
— சரோஜினி நாயுடுவின் பேச்சும் எழுத்தும், (The Speeches and Writings of Sarojini Naidu), சென்னை, 1918, பக்கம் 167.
அடிப்படைவாத முஸ்லிம்கள் வாளில் முனையில் வற்புறுத்தி இந்த உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள் என்ற கதையானது, வரலாற்றாசிரியர்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட அபத்தமான கற்பனையாகும் என்பதை வரலாறே தெளிவுபடுத்துகிறது.
— டெ லேஸி ஓ லியரி, Islam at the Croosroads,லண்டன், 1923, பக்கம் 08.
மனிதர்களுக்கு இடயே உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற பிரக்ஞையின் அழிவை ஏற்படுத்தியது இஸ்லாத்தின் தலைசிறந்த சாதனைகளில் ஒன்றாகும். இந்த இஸ்லாமிய உணர்வை தற்கால உலகத்தில் ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
— ஏ.ஜே.டாய்ன்பீ (உலகப்புகழ் பெற்ற வராலாற்றாசிரியர்), Civilization On Trial, நியூயார்க், 1948, பக்கம் 205.
வழக்கமான அர்த்தப்படி பார்த்தால் நான் ஒரு முஸ்லிமல்ல. ஆனால் இறைவனிடம் சரணாகதி அடைந்தவனே முஸ்லிம் என்ற கருத்துப்படி பார்த்தால் நான் ஒரு முஸ்லிம்தான். குர்ஆனில் பல தெய்வீக உண்மைகள் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை நான் நம்புகிறேன். எங்களைப் போன்ற மேற்கத்தியர்கள் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
— W.மாண்ட்கோமரி, இஸ்லாமும் கிறிஸ்தவமும் இன்று (Islam and Christianity Today), லண்டன், 1983, பக்கம் ix.
இஸ்லாம் வழங்கும் சகோதரத்துவம் உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்குமானதாக இருக்கிறது. அவர் என்ன நிறத்தில், என்ன கொள்கையில், என்ன கோட்பாட்டில், என்ன இனத்தில் இருந்தாலும். இந்த சகோதரத்துவத்தை நடைமுறைப்படுத்திய ஒரே மதம் இஸ்லாம்தான். முஸ்லிம்கள் இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது, தாங்கள் சகோதரர்கள் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள்.
இறைத்தூதர்களிலேயே அதிகமாக வெற்றியடைந்தவர் முஹம்மதுதான்.
— என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிகா.
இந்த உலகம் சார்ந்த இருபது சாம்ராஜ்ஜியங்களையும் மறுமை சார்ந்த ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தையும் நிறுவியவ ஒருவர் முஹம்மது.மனிதனுடைய பெருமையையும் புகழையும் அளக்கக்கூடிய எந்த அளவுகோலை வைத்துப் பார்த்தாலும், முஹம்மதைவிட சிறந்த ஒருவரை நாம் காட்ட முடியாது.
— லா மார்ட்டின், ஹிஸ்டரி துலா துர்கி (ஃப்ரெஞ்ச்), பாரிஸ்,1854, பாகம் 11, பக்கங்கள் 276-277.
அருமையான உயிர்த்தன்மை காரணமாக, முஹம்மதின் மார்க்கத்தை நான் எப்போதுமே ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன். மாறிக்கொண்டே இருக்கின்ற இந்த உலகில், எல்லாவற்றையும் இணைக்கும் தகுதி படைத்த ஒரே மதமாக இஸ்லாம்தான் உள்ளது. எல்லாக் காலங்களிலும் கவரக்கூடியதாக அது இருக்கும். முஹம்மதை நான் அலசி ஆராய்ந்து பார்த்துவிட்டேன். அவர் மனிதகுலத்தைக் காக்க வந்தவர் (Saviour of Humanity). இந்த நவீன உலகின் சர்வாதிகாரியாக அவரைப் போன்ற ஒருவர் வருவாரேயானால், இன்றைக்கு மிகவும் அவசியமான தேவைகளாக இருக்கின்ற அமைதியையும் சந்தோஷத்தையும் கொண்டுவந்தௌ பிரச்சனைகளைத் தீர்க்க அவரால் மட்டுமே முடியும். இன்று இருப்பதுபோல, வருங்காலத்திலும் முஹம்மதின் மார்க்கம் ஐரோப்பாவால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மார்க்கமாகவே இருக்கும் என்று நான் தீர்க்கதரிசனம் சொல்வேன்.
அடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை, ஏன் இங்கிலாந்தை, ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்க முடியும்.
— ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, த ஜெனியுன் இஸ்லாம்.The Genuine Islam, Singapore, Vol. 1, No. 8.1936).
சமய ரீதியாகவும், சமயம் சாராத லௌகீகம் சார்ந்த வகையிலும் வெற்றியடைந்த ஒரு மனிதரைக் காட்ட முடியுமென்றால் அது முஹம்மதுதான். அதனால்தான் இந்த உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 100 மாமனிதர்களில் முதலாமவராக நான் முஹம்மதைத் தேர்ந்தெடுத்தேன்.
— மைக்கேல் ஹார்ட், த ஹண்ட்ரட், நியூயார்க், ஹார்ட் பப்ளிஷிங் கம்பனி, 1978, பக்கம் 33.
அன்பின் ஆன்மாவாக முஹம்மது இருந்தார். அவருடைய தாக்கம் உடன் இருந்தவர்களால் மறக்கமுடியாததாக இருந்தது.
— திவான் சந்த் ஷர்மா, The Prophets of the East, கொல்கத்தா, 1935, பக்கம் 122.
போப்புக்கான பாசாங்குகளும், சீசருக்கான படையணியினரும், பாதுகாவலர்களும், அரண்மனையும், நிரந்தர வருமானவும் இல்லாமல், ஒரே சமயத்தில் சீசராகவும் போப்பாகவும் இருந்தவர் முஹம்மது. தெய்விக கட்டளை கொண்டு ஆண்ட ஒரு மனிதன் உண்டென்றால் அது முஹம்மதுதான்.
— பாஸ்வொர்த் ஸ்மித், Mohammad and Mohammadanism, லண்டன்,1874, பக்கம் 92.
அரேபியாவின் மாபெரும் தீர்க்கதரிசியான முஹம்மதுவின் வாழ்க்கையையும்,அவர் எப்படி வாழ்ந்தார், எப்படி வாழக் கற்றுக் கொடுத்தார் என்று படிக்கும் யாருக்கும் அவர்மீது மரியாதை தவிர வேறு எதுவும் ஏற்படாது.
— அன்னிபெசண்ட், The Life and Teachings of Muhammad, சென்னை,1932, பக்கம். 4.
கோடிக்கணக்கானவர்களின் இதயத்தில் விவாதத்துக்கு இடமில்லாத வகையில் இடம் பிடித்த ஒருவரின் வாழ்க்கையை அறிந்து கொள்ள விரும்பினேன்…இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்ற உண்மை எனக்கு தெள்ளத் தெளிவாக விளங்கியது. இஸ்லாத்தின் பிடிவாதமான எளிமை, இறைத்தூதர் முஹம்மதுவின் பரிபூரணமான சுயநலமற்ற தன்மை, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் அவர் வைத்திருந்த மரியாதை,தன் தோழர்கள் மீதும் தன்னைப் பின்பற்றியவர்கள் மீதும் அவர் கொண்டிருந்த அளவற்ற பிரியம், தீவிரமான அர்ப்பணம், அவரது வீரம், எதற்கும் அஞ்சாத தன்மை, கடவுள்மீது அவர் வைத்திருந்த பரிபூரண நம்பிக்கை, அவருக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பணி மீது இருந்த கடமையுணர்வு இவைதான் இஸ்லாம் பரவுவதற்குக் காரணம். ஒவ்வொரு தடையையும் மீறி இஸ்லாம் வந்தது இவைகளால்தான். வாளால் அல்ல. நபிகள் நாயகம் பற்றிய இரண்டாம் பாகத்தை நான் படித்து முடித்து மூடியபோது, அந்த ம்காவாழ்க்கை பற்றிப் படிக்க மேலும் இல்லையே என்று எனக்கு வருத்தமாக இருந்தது.
— மகாத்மா காந்தி, ‘யங் இந்தியா’ பத்திரிக்கையில் 1924ல் எழுதியது.
ராணுவ வெற்றிகளின்போது, மற்றவர்களிடம் ஏற்படுவதைப்போல, பெருமையோ வீண் பேச்சோ முஹம்மதுவிடம் ஏற்படவில்லை. துன்பத்திலும் துயரத்திலும் உழன்று கொண்டிருந்தபோது எப்படி எளிமையாகத் தோன்றினாரோ, நடந்து கொண்டாரோ, அப்படியே வெற்றியின் உச்சியில் இருந்த போதும் இருந்தார்.அநாவசியமாக தனக்கு மரியாதை தரப்படுவதை அவர் வெறுத்தார்.
— வாஷிங்டன் இர்விங், Life of Muhammad, நியூயார்க், 1920.
This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue
G நரேந்திரன்
Dear Editor,
After some time I was checking ‘thinnai’ but am seeing the same debates on Islam with arguments/counter-arguments and many letter writers contributing
to it.. I was just wondering what is the percentage of Muslims in Tamil politics/society to demand so much attention.. I can understand the general
curiosity of the people in trying to find out more about Islam due to multiple terror attacks. But my personal view is that we are spending too
much bandwidth on such issues.. A few articles are difficult to understand with arabic terms thrown in tamil etc.. Ofcourse it is your discretion to
post articles/letters that you consider relevant..
Thanks,
Naren
Narendran G [gnarendran@hotmail.com]
This entry is part [part not set] of 31 in the series 20060908_Issue
சையது
சின்னக்கருப்பன் அவர்களுக்கு
நபிகள் தாயின் காலடியில் சுவர்ககம் இருக்கிறது என குறிப்பிட்டது வணங்க அல்ல.ஏனெனில் இறைவனுக்கு மாறுச்செய்யும் விஷயத்தில் பெற்றோருக்கு கட்டுப்படவேண்டியது இல்லை என்பதே இஸ்லாத்தின் நிலைபாடு.
This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue
பாபுஜி
நேசகுமார் என்பவர் எண்ணச்சிதறலாக பலப்பல அபாண்டங்களை 25 08 2006 திண்ணையில் எழுதியிருக்கிறார். அவற்றுள் இரண்டனுக்கு மட்டும் எனக்கு கருத்துச் சொல்லத் தோன்றுகிறது:
1) கமலா சுரையா பற்றிய அவருடைய எண்ணச் சிதறல் அடிப்படையற்றது. ‘தேஜஸ்’ என்கிற மலையாள இதழில் (15 11 2005) கமலா சுரையா தனது நிலையை தெளிவாக உரைத்திருக்கிறார். எனவே நேச குமாரின் அடிப்படையற்ற கருத்து, அவர் மீதான பரிதாபத்துக்கே வழி கோலுகிறது.
2). டெஹல்காவும் காலச்சுவடும் இஸ்லாமியர்களின் பயங்கரவாதத்தின் வேர் பற்றி எழுதியிருக்கலாம். ஆனால் நேச குமார் தனது பிடிவாதமான புரிதலில் அதை இஸ்லாமிய மூலத்துடன் சம்பந்தப்படுத்தி சுய திருப்தி கொள்கிறார். இயல்பான பார்வையுடைய எவருக்கும், எந்த ஒரு சமூகமும் அடக்கி ஒடுக்கப்படுவதே அதில் ஆராயாது உணர்ச்சி வயப்படுகிற ஒரு சிலர் எதிர்வினையாற்ற வழிவகுத்துவிடுகிறது என்று ‘வேர்’ பற்றி எளிதாக விளங்கமுடியும் போது இவர் ‘வேறு’விதமாக எழுதி இருப்பைத் தக்க வைக்க வேண்டியதும் நமக்குப் புலனாகிறது. முன்னெல்லாம் இல்லாத அளவு, பயங்கரவாதம் பெருகுவதன் ‘வேராக’ இந்துத்துவ ஆதிக்கச் சக்திகளின் ஆட்டமே காரணம் என்று எவரும் புரிந்துக்கொள்வர். (இரண்டு வகை பயங்கரவாதங்களுமே கடுமையாக கண்டிக்கவும் தண்டிக்கவும் பட வேண்டுமென்பதில் எதிர் கருத்தில்லை).
இந்தியாவில் இஸ்லாமியரின் தீவிரவாதத்தை விடவும் அதிகமாக சுமார் 150 மாவட்டங்களில் கோலோச்சுகிற நக்ஸல் தீவிரவாதம் குறித்து இவர் என்ன சொல்வார்?: அவர்களும் குரானிலிருந்து நகலெடுத்து ‘வேர்’ நட்டுக்கொண்டார்கள் என்றா?
இந்த இலட்சணத்தில் //இஸ்லாம் பற்றி எழுதாமல் இருக்கவேண்டும் என்று நினைத்தாலும், எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை இன்னமும் நான் பெறவில்லை// என்று காமெடியும் செய்கிறார்.
————————————————————————–
babuto@gmail.com
This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue
பாபுஜி
இப்னு பஷீர் எழுதிய ‘ஜிஹாத் எனும் இஸ்லாமிய கடமை!’ மிகச்சிறப்பான கட்டுரை.
முயற்சித்தல் எனும் பொருளுடைய -ஜிஹாத்- என்கிற சொல்லின் மீது பயங்கரவாத வர்ணம் பூசுகிற முஸ்லிம் பெயருடைய மூடர்களையும், அவ்வாறு பூச வைத்தும்,மேலும் பற்பல பூசி மெழுகியும் தங்கள் அரசியல் பிழைப்பை இஸ்லாமை எதிர்ப்பதால் மட்டுமே நடத்த முடிகிறவர்களையும் இனங்காட்டி – ஒரு சராசரி முஸ்லிமுடைய மனக்குமுறலாக-மார்க்க ஆதாரங்களுடன் தந்த இப்னு பஷீர் பாராட்டிற்குரியவர்.
This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue
Mani Manik
Selective elimination and survival of the fittest
————————————————-
There are many responses all over the media in the issue of Israel vs Lebanon. In thinnai also, some peoples are advocating to Israel and praised its crude activity. These peoples are either “innocent” who don’t know the American support behind this matter,who justify the matter on the basis of their own favors (hindutwa!). Let us imagine a situation, if India drop the bombs throughout the Kashmir as a part of eliminating the terrorist, can the world keep mum!
This type of brutality (Israel vs Lebanon, US vs Iraq, US vs Afghan, US vs Iran) will continue, until the last drop of petrol is sucked up from the Middle East by the Americans. Afterwards the world would have lot of laborers (yawana slaves as in the case of historic past) from the Middle East to explore the Africa. That time, our Indian engineers (MAN POWER) will work together with Arabian slaves for American company to loot the whole Africa.
The problem of India vs Pakistan is created by British, so we are supposed to have the moral anger towards British. Unfortunately, both hindutwa activitist and Islamic terrorist fighting with each other. While the terrorism of Islam is eliminated from the world, it may be just a matter of years to eliminate activities of Hinduism. Our inborn cowardice will surrender ourselves to the Americans.
If we don’t have the guts to oppose American atrocity at least we can keep it silent about the matter. So don?t be happy with Israel’s immoral activity against Lebanon and US brutality against Iraq. Please be mindful that both took place without the UN support and rise the big question mark about the presence of UN.
This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue
வஜ்ரா ஷங்கர்
திண்ணையில் வெளிவந்த எச். பீர்முகம்மது அவர்களின் “புறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை” என்ற கட்டுரை படித்தேன்.
லெபனான் ஹெஸ்பல்லா, இஸ்ரேல் பிரச்சனையத் தொடாமல், இஸ்ரேல் உருவான சரித்திரத்தைப் பற்றி மட்டுமே நான் இங்கே விளக்க முற்படுகின்றேன்.
Diaspora பற்றி:
பீர்முகம்மது அவர்கள் சரித்திர காலத்தில் ஏதோ இஸ்ரேலியர்கள் தாங்கள் விருப்பப்பட்டுத் தான் தற்பொழுதய இஸ்ரேல் பகுதியிலிருந்து பல்வேறு பகுதிக்குச் சென்றதாக ஒரு எண்ணத்தை ஏற்படுத்துகிறார். அது தவறு. யூதர்கள் தோற்றுப் போய் விரட்டப் பட்டனர், துரத்தப் பட்டனர் என்பது தான் உண்மை. இதன் விளைவாகவே Diaspora உருவாகியது. க்ரேக்க, ரோமானியர், சிலுவைப் போராளிகள், மற்றும் இஸ்லாமியர்களால் அழிக்கப்பட்ட அவர்தம் கலாச்சாரச் சின்னங்கள் இன்னும் காணும் இடத்தில் எல்லாம் கிடைக்கும் இஸ்ரேலில்.
சியோனிசம் பற்றி:
சியோனிசத் தலைவர்கள் புத்தகங்கள் படித்துத் தான் அவர்கள் எண்ணத்தை அறிந்து எழுதினாரா அல்லது லிவியா ரோகெக் எழுதிய Sacred terrorism புத்தகத்திலிருந்து மொழிபெயர்த்து எழுதுனாரா என்று தெரியவில்லை..லிவியா எழுதிய புத்தகத்தை நானும் படிதத்துண்டு. அவர் பென் குரியோன் போன்ற தலைவரின் டைரிக் குறிப்பை எப்படியெல்லாம் திரித்துக் கட்டுக் கதை அடிக்க
முடியுமோ அப்படியெல்லாம் திரித்து ஒரு புதிய “வரலாற்றை” எழுதியுள்ளார். பீர்முகம்மது அவர்கள் Zionism த்தின் முக்கிய கொள்கைகளாகச் சித்தரிக்க விரும்புவது Propaganda literature ல் தான் வரவேண்டும் அல்லது Half truths என்று தான் சொல்ல வேண்டும். Zionism என்பது ஒரு political ideology. அதன் முக்கிய புள்ளி, யூத மக்களை ஒன்று திரட்டி அவர்கள் பழய
நாடான இஸ்ரேலை அது தோன்றிய இடத்தில் உருவாக்குவதே. இதன் முக்கியத்துவம் அதிகரித்தது ஐரோப்பாவில் பெரிதும் உலவிய Anti – semitism த்தினால் தான்.
மேலும் இஸ்ரேலின் தோற்றத்தால் பாலஸ்தீனர்களை விரட்ட எண்ணியது யூத-Zionist கள் அல்ல. அதையும் அவர் லாவகமாக மறைத்துவிட்டார். பாலஸ்தீனர் அகதிகள் பிரச்சனை உருவாக முக்கிய காரணம் அரபு தேசத்தின் படைகளே…அவர்கள் இஸ்ரேல்
உருவான உடன் தொடுத்த போரின் போது அரபுகள்இஸ்ரேலை அழித்துவிடுவோம் என்று ஆசை காட்டி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பாலஸ்தீனர்கள் தங்கள் வீட்டை விட்டுச் சென்றனர். துரதிர்ஷ்டவசமாக போரில் இஸ்ரேல் வெற்றி
பெற்றுவிட்டது, இன்று பாலஸ்தீனர்கள் அகதிகளாக வாழ்கின்றனர்.
பாலஸ்தீனர்களை யூதர்கள் விரட்டிவிட்டனர் என்பது பற்றி:(ஏற்கனவே இதை ஒரு பதிவாகப் போட்டிருந்தேன் என் வலைப்பதிவில்).
ஐரோப்பிய யூதர்கள் வந்து குடியேரிய பாலஸ்தீன நிலப்பகுதி, மக்கள் தொகை அதிகம் இல்லாத பாலைவன நிலமாகவே இருந்தது. அவர்கள் நிலத்தை வெளிநாடுகளில் வசிக்கும் நிலச்சுவாந்தார்களிடமிருந்து விலை கொடுத்து வாங்கிக் குடியேறியுள்ளனர். இத்தகய நிலச்சுவாந்தாரர்கள், சிரியா, எகிப்து, துருக்கி போன்ற நாடுகளில் கோடீஸ்வரர்களாக இருந்து real estate வியாபாரம்
செய்ய பல இடங்களில் நில புலன்கள் வாங்கி விற்றனர்.
மேலும், யூதர்களின் நம்பிக்கையான Zion க்கு திரும்புதல் (returning to Zion) என்ற மத நம்பிக்கை காரணமாக வந்து குடியேரியவர்கள் ஐரோப்பிய யூதர்கள்.
Mark Twain, 1867ல் பாலஸ்தீனதிற்கு சுற்றுப்பயணமாக மேற்கொண்டிருந்த வேளையில் அவர் கூறியது,
“Stirring scenes … occur in the valley (Jizreel) no more. There is not solitary village throughout its whole extent-not for thirty miles in either direction. There are two or three small clusters of Bedouin tents, but not a single permanent habitation. One may ride ten miles hereabouts and not see ten human beings….come to the Galilee for that…these unpeopled desert, these rusty mounts of barrenness, that never, never, never do shake the glare from their harsh outlines, and fade and faint into vague perspective; that melancholy ruin of Capernaum: this stupid village of Tiberias, slumbering its six funeral palms…We reached Tabor safely…We never saw a human being on the
whole route.
Nazareth is forelorn…Jericho that accursed lies in the moldering ruin today, even as Joshua’s miracle left it more than three thousand years ago; Bethlehem and bethany, in their poverty and their humiliation, have nothing about them now to remind one that they once knew that high honor of Savior’s presence, that hollow spot where the
shepherds watch their flocks by night and where the angels sang, ‘Peace on earth, good will to men’, is untenanted by any living creature…..Bethsida and Chorzin have vanished from the earth, and the “desert places” round them, where thousand men once listened to the Savior’s voice and ate the miraculous bread, sleep in the hush of solitude that is inhabited by birds of prey and skulking foxes”
” A land without people for the people with out land” என்கிற வாதத்தை நான் இங்கு வைக்கவில்லை என்பதை தெளிவுபடக்கூறிக் கொள்கிறேன். பிரச்சனை என்னவென்றால், 1880 க்கு முன்னால், அங்கு அவ்வளவு மக்கள் தொகை இல்லை, இது விவாதத்திர்குறியது என்றாலும், அந்த காலகட்டத்தில் நிலவிய சூளலில், வேலை இன்மை, வரட்சி போன்ற காரணங்களால், பல அரபு கிராமத்துமக்கள், வெளியேறிக் கொண்டிருந்தனர்.
1911 ஆம் ஆண்டு வெளியான பிரிட்டானிகா கலைக்கழஞ்சியத்தில் பாலஸ்தீன் பற்றி, “Population of palestine comprises ‘widely different ethnological groups’, speaking ‘no less than fifty languages”
என்று கூறுகிறது.
1880 முதல் 1948 வரையிலான கால கட்டத்தில் நில விற்பனையினை ஆராய்கயில் யூதர்களால் (அல்லது நம் வலைப்பதிவாளர்கள் கூறுவது போல் Zionist களால்) வாங்கப்பட்ட னிலத்தில் 3/4 பங்கு பெரிய நிலச்சுவாந்தாரர்களிடமிருந்தும்,
பாலஸ்தீனத்தில் நிலம் வாங்கி அதிக விலையில் விற்க நினைக்கும் ப்ரோகர்களிடமிருந்தும் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. அத்தகய நிலச்சுவாந்தாரர்கள், டமாஸ்கஸ், பெய்ரூத், போன்ற பெரு நகரங்களில் வாழ்ந்த பெரிய ஜமீந்தார்கள்.
Prof. Rached Khalidi, பாலஸ்தீன ஆதரவாளரான இவர், “There were considerable land sale by absentee landlords both
palestinian and non-palestinian” என்று ஒப்புக் கொள்கிறார்.
David Ben-Gurion (இஸ்ரேலின் முதல் பிரதமர்) யூதர்களிடம், அரபு கிராமத்தாரிடமிர்ந்து நிலத்தை வாங்கவேண்டாம் என்றும் கெட்டுக் கொண்டுள்ளார். யூதர்கள், அரபு மக்களை விரட்டிஅடித்துவிட்டுத்தான் இஸ்ரேலை உருவாக்கினர் என்பது, ஒரு பிரச்சாரம் தான். அதில் உண்மை கிஞ்சித்தும் இல்லை.
1880 க்குப்பிறகு வர ஆரம்பித்த யூதர்களால், வியாபாரம் பெருகியது, விவசாயம் பெருகியது, பணம் வர ஆரம்பித்தது, இதனால் யூதர்கள் மட்டும் பயனடயாமல், பாலஸ்தீனர்களும் பயன் அடைந்தனர். Rishon L’Tzion என்ற முதல்
யூதக்குடியிருப்பில் நடந்த ஆய்வு ஒன்றில், ஒன்றுமில்லாத இடமாக இருந்த மண்ணில், சுமார் 400 பாலஸ்தீனக் குடும்பங்கள் விவசாயம் செய்து வாழ வழி செய்தது 40 யூதக் குடும்பங்கள் என்று காட்டுகிறது. இதே சங்கதி தான் மர்ற
யூதக் குடியிருப்புகளிலும்.
1937ல் ஆங்கில அரசு ஆவனம் சொல்லும் கதை இது,
“The growth (of arabs) had been largely due to the health services combating malaria, reducing infant death rates, improving water supply and sanitation.”
இதெல்லாம் ஐரோப்பாவிலிருந்து வந்த யூதர்கள் செய்த நல்ல காரியம்.
மூசா அலமி என்கிற பாலஸ்தீன தலைவர், இந்த ஐரோப்பிய யூதர்கள் பூர்வீக பாலஸ்தீனர்களை விரட்டிவிட்டனர் என்பது பற்றி,
“The people are in great need of a ‘myth’ to fill their consciousness and imagination”
ஜோர்டன் மன்னர் King Abdullah,
” The arabs are as prodigal in selling their lands as they are in… weeping [about it]”
சற்றே சரித்திரத்தையும் புரட்டிவிட்டு எழுதியிருந்தால் பரவா இல்லை. இஸ்ரேலின் மேல் சேற்றை வாரி இரைக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் தான் அவர் எழுதுகின்றார் போல் தெரிகின்றது.
மூலம்:
1. The case for Israel, Allan Dershowitz.
2. Wikepedia Online encyclopedia.
This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue
வஜ்ரா ஷங்கர்
திண்ணையில் திரு. சின்னக்கருப்பன் அவர்கள் எழுதிய ஜூலை 27 அன்று வெளியான மத்தியகிழகுப் போரும் இந்தியாவும் என்ற கட்டுரை கண்டேன்…
அவர் மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் பற்றி முழுவிபரங்கள் அறியாமல் அல்லது தெரியாமல் எழுதுகின்றார் என்பதே என் கருத்து.
இஸ்ரேல் ஆட்சியாளர்களிடம் நேரில் பேட்டி கண்டு அவர்தம் எண்ணங்களை அறிந்தவர் போல், “இஸ்ரேலுக்குத் தேவை இடம்” ஒரு மாபெறும் “உண்மையை” “கண்டுபிடித்துள்ளார்”.
தற்பொழுது நிகழ்ந்துவரும் இஸ்ரேல்-ஹெஸ்பல்லா-லெபனான் போரில் இஸ்ரேலுக்கு லெபனான் நிலப்பரப்பின் மீது எந்த அக்கரையும் இல்லை என்று இஸ்ரேல் பிரதமர் எஹுத் ஓல்மர்ட், ராணுவ மந்திரி அமீர் பெரட்ஸ் பலமுறை பல பத்திரிக்கைகளில்
பேட்டி அளித்துள்ளனர். மேலும் ஹெஸ்பல்லா தீவிரவாத அமைப்பை நிர்மூலம் ஆக்கவேண்டும் என்று ஐ. நா பாதுகப்பு கவுன்சில் சபையில் நிரைவேற்றப்பட்ட தீர்மானம் உள்ளது (UN Security council resolution no 1559).
அந்த தீர்மானத்தின் படி ஹெஸ்பல்லாக்களை ஒடுக்கியிருக்க வேண்டிய கட்டாயம் லெபனான் அரசின் முக்கிய கடமை. தன் கடமையைச் சரியாகச் செய்யாமல் இஸ்ரேல் மீது பழி போடுவது தவறு. ஹெஸ்பல்லாக்கள் லெபனான் மந்திரி சபையில் அங்கம்
வகிக்கும் அளவிற்கு செல்வாக்கு படைத்த தீவிரவாத அமைபினர். ஒரு நாட்டிற்குள் தனி ராஜ்ஜியம் நடத்தும் நசரல்லா ஈரான், சிரியா போன்ற நாடுகளிடமிருந்து வரும் கட்டளைகளை நிரைவேற்றும் உண்மையான ஊழியர். இஸ்ரேலின் எண்ணம், ஹெஸ்பல்லாக்களை ஒடுக்குவதே.
ஹெஸ்பல்லா தீவிரவாதிகளுக்குத் தான் தேவை இஸ்ரேல் பக்கத்தில் இடம். இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு!! இஸ்ரேலுக்குத் தேவை அந்த தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாப்பு.
உங்கள் பக்கத்து வீட்டிலிருந்து கொண்டு ஒருவர் உங்களை சதா சர்வகாலமும் தொந்தரவு செய்தால், அந்த பக்கத்துவீட்டின் உரிமையாளரோ எந்தப் பேச்சும் பேசாமல் அதற்கு ஒத்துழைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். அந்த வீட்டிற்குள் நுழைந்து அந்த ஆசாமியை உண்டு இல்லை என்று செய்வீர்களா இல்லையா? அதன் அர்த்தம் நீங்கள் உங்கள் பக்கத்துவீட்டை ஆக்கிரமிப்பதா?
திரு சின்னக்கருப்பன், இந்தியா பற்றி சொல்லும் பல கருத்துக்களுடன் ஒத்துப் போகின்றேன் என்றாலும். அவர் தனது போலி செக்குலர் வாதமான ஒன்றுபட்ட இந்தியாவில் “முஸ்லீம் பிரதமர்”, இந்தியாவில் நடக்கும் அனைத்து மதக் கலவரங்களுக்கும் பாகிஸ்தான் தான் காரணம் போன்ற வாதத்தைத் தவிர்த்திருந்தால் நல்லது. பாகிஸ்தான் இல்லாமல் இருந்தாலும் தீவிரவாதம்
செய்யக் காரணம் தேடி அலையும் இந்தியாவில் பிறந்த இஸ்லாமியர்கள் உள்ளனர் என்பதை மும்பை குண்டுவெடிப்புகள், இந்திய அறிவியல் கழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், கோவை குண்டுவெடிப்புகள் காட்டின. இந்தியத் தீவிரவாத முஸ்லீம்கள் நல்லவர்கள் என்று வெள்ளையடிப்பது போன்ற முயற்சியாகவே அவர் கட்டுரை உள்ளது. மேலும், தில்லியில் ஜாமா மசூதியில் வெள்ளிக்கிழமை நடந்த நமாஸ் பிறகு இஸ்ரேல் கொடியை மிதித்துப் போராட்டம் நடத்தியது, அமேரிக்க அதிபர் புஷ் இந்தியா வந்த சமயத்தில் உத்திரப் பிரதேசத்தில் ஹிந்துப் பையன் ஒருவனை வெள்ளிக்கிழமை ஜுமா முடித்து வந்த இஸ்லாமியர் கூட்டம்
கொன்றது எல்லாம் பாகிஸ்தான் தூண்டுதலா? உள்ளிருக்கும் தீவிரவாதிகளை பாதுகாக்க வெளியாட்கள் மீது பழி போடுவது எதனாலோ? Political correctness?
உங்கள் செகுலர் Sermon ஐ தீவிரவாதத்தில் ஈடுபடும் இஸ்லாமியருக்காகப் பாதுகாத்துவையுங்கள் என்று திரு. சின்னக்கருப்பனை
தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue
நாகூர் ரூமி
அன்புள்ள சின்னக் கருப்பன்,
திரு நேசகுமாரின் இஸ்ரேல் ஆதரவு கருத்துக்களுக்கு நீங்கள் சொல்லும் பதில்களோடு நான் உடன்படுகிறேன். இந்த உலகில் மதத்தைவிட மனித நேயம்தான் முக்கியமானது. முதலில் நாமெல்லோரும் மனிதர்கள். பின்புதான் மதம் சார்ந்தவர்கள். ஆனால் இஸ்ரேலிய மனப்பான்மை கொண்டவர்களிடமிருந்து நாம் வேறு மாதிரி எதிர்பார்க்க முடியாதுதானே?!
This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue
பரி
தமிழ் இசை , தமிழர் இசை, தமிழ் மொழி , தமிழர் மொழி> என்ற தலைப்பில் திண்ணையில் ஒரு கட்டுரை படிக்க நேரிட்டது. “தமிழிசை என்ற பெயரில் அரசியல்வாதிகள் நடத்தும் கூத்துகள் வெறும் போலி” என்பதுதான் கட்டுரையின் அடிநாதம். அதற்கு அதன் ஆசிரியர் வைக்கும் வாதங்கள், தமிழர்களின் இசையறிவு பற்றிய அவரின் கண்டுபிடிப்பு கொஞ்சம் நெளிய வைக்கிறது.
இந்தப் பத்தியைப் படிக்கும் எவருக்குமே முதல் வாக்கியத்துக்கும் அடுத்த வாக்கியத்துக்கும் இருக்கும் முரணை எளிதில் கண்டுகொள்ளலாம்.
மேற்கோள்:
“முதலில் தமிழ் இசை என்பதே ஒரு தவறான வார்த்தைப் பிரயோகம். தமிழ் இசை என்று எதுவுமே இல்லை. ஆமாம், தமிழ்ப் பாடல்கள் இருக்கின்றன. தமிழர்கள் பாவிக்கும் இசை இருக்கிறது. தமிழர்கள் தோற்றுவித்த, பேணி வளர்த்த இசை
மரபு இருக்கிறது.”
தமிழர்கள் தோற்றுவித்த, பேணி வளர்த்த இசை மரபு இருக்கிறது, ஆனால் தமிழிசை என்று ஒன்று தனியாக இல்லை. “மரபு” என்ற ஒரு வார்த்தையை வைத்து அடுத்த வாக்கியம். நான் ஒரு இசை ஞானசூனியம். எனவே இந்த வார்த்தை விளையாட்டு
புரியவில்லை.
மேற்கத்திய இசை நாடகங்கள்(Opera), பாகிஸ்தான் இந்துஸ்தானி என்று ஒரு சுற்று போய்விட்டு மீண்டும் தமிழ்நாட்டுக்குள் நுழைகிறார். பிரச்சினை என்னவென்றால், அவர் கிளம்பியது டிசம்பர் மாத கச்சேரி மேடையிலிருந்து. திரும்ப நுழைவது கோடம்பாக்கத்தில்.
என்னையும் சேர்த்து பெரும்பாலான தமிழர்களுக்கு இசை என்றால் அது திரை இசைதான். திரை இசைய ரசிக்க அறிவுக்கூர்மையும் நுண்ணுணர்வும் அவசியம் இல்லை.
“தமிழ்ப் பாடலைப் பாடாதே என்று யார் கையைப் பிடித்துத் தடுத்தார்கள்?” என்று கேட்கிறார். “தமிழர்கள்” பேணி வளர்த்த டிசம்பர் மாத “மரபு”க் கச்சேரிகளில் எத்தனை சதவீதம் தமிழ் இடம்பெறுகிறது என்று அவருக்கே தெரியும்.
பிரபல இசை(pop)க்கும் மரபிசைக்கும் தனித்தனி இரசிகர்கள் உண்டு. இது உலகம் முழுவதும் பொதுதான். மரபிசையை இரசிக்க அதுபற்றிய அறிவு கொஞ்சமாவது வேண்டும். அது கர்நாடக இசையாக இருந்தாலும் சரி, சிம்ஃபொனி இசையாக இருந்தாலும் சரி. பெரும்பாலான தமிழர்கள் இரசிப்பது பிரபல இசையைத்தான். இதைக் கண்டுபிடிக்க ஆசிரியர் உலகம் சுற்றியிருக்கத் தேவையில்லை.
கொசுறு: Nothing but wind-க்கு “காற்றைத் தவிர வேறில்லை” என்பது நல்ல தமிழாக்கம்.
This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue
ஜெயமோகன்
ஆசிரியருக்கு,
சென்ற இதழில் தாஜ் என்பவர் எழுதிய கடிதம் கண்டேன். இவர் என்னை தனிப்பட்ட முறையில் அறிந்தவர் போல் எழுதியிருந்ததை ஒட்டி இக்கடிதம். இவர் எனக்கு பத்து வருடங்கள் முன் சில வாசகர் கடிதங்கள் அனுப்பியுள்ளார். நல்ல வாசகர் என்ற எண்ணம் எனக்கு ஏற்படாவிட்டாலும் என் வழக்கப்படி நான் பதில்களும் அனுப்பியுள்ளேன். ஒரே ஒருமுறை ஒரு கூட்டத்தில் கண்டு ஒருநிமிடம் கைகுலுக்கிக் கொண்டோம். அதன் பின் திடீரென்று வசைக்கடிதங்கள் அனுப்பத் தொடங்கினார்.விஷ்ணுபுரம் வந்த பின். அவற்றில் இருந்த மதக்காழ்ப்பை கண்டபின் அவருக்கு நான் எதிர்வினயாற்றுவதில்லை. மற்றபடி அவர் என்னை தெரிந்தவர் போல் எழுதுவது பிழை.
This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue
சதுரகிரி வேள்
Dear Editor,
Thanks for publishing my previous letter. Though i had to use your prestigious magazine for these kind of
‘arguments’, i am taking this liberty of doing this again one last time.
This is the last mail i am going to write with reference to what was written by Mr.Nedumaran; First
of all, he assumes that my mails are either knee jerk reactions to suppress some unpalatable information
about origin of velalars or a tactic to silence opposing view points. Nothing can be farther from
truth; In this age of internet, any one can write whatever they want and reach millions in a minute.
There are other websites and forums where people write worse things. As it is not my job to defend Velalars
everywhere, i do not bother much. Since i have been a reader of Thinnai for a while and i like the
seriousness with which people contribute here unlike the frivolousness you see everywhere, i have written
letters on this subject a few times to Thinnai, only to present the other view point. If he thinks he has
the right to portray ?incorrect assumptions? as history, Why can not we put across our arguments? When
he can point out that someone else is presenting ?half-truths? as history, why can?t I say the same
thing about him? He should address the points that I have raised one by one; instead of trying to call mine
as ?dominant caste attitude?.
The height of his argument is when he surmises that Kalappirar were Velalars because they expanded
Agriculture in Tamil country and they reduced taxes; Does he not want to take into account that Tamils had
built irrigation systems like Kallanai before the arrival of Kalappirars and Karikalan married Nangkur
Vel’s daughter? If that was the case, who lived in ‘Marutham’ or was Ainthinai an invention of
kalappirars? It has been scientifically agreed that “settled agriculture” indicates beginning of
establishment of societies and nationhood; mankind has evolved from hunter-gatherer to shifting cultivation
to settled cultivation. It would be a laughing matter if Nedumaran tries inventing a different process of
evolution for Tamils alone, just because Velalar are related to Agriculture.
He refers to a mention of a group of Velalar claiming that they had won over all the three Moovendar. How
does it prove that they were kalapirars because of this? They were other smaller kings who had made
similar claims. What about Mutharayar? Is he not aware about a much smaller tamil group called “Vanar” or
“Banar” who were called “Vanathirayar” who claimed to have won over all the three Moovendar and who briefly
also ruled Madurai after chasing away “Pandyans”? He might know that they are of recent vintage and merged
into maravars, as far as my memory is correct.
Even now, one can see that he has double standards when it comes to Velalars; He is quite happy to relate
“Velam” to Velalar but does not want to relate Velalar to “Velir” or “Vel”. How selective more one can be? Is
it anywhere mentioned that “Velalar” are children of “women kept in Velam”. He might now say that Velalar
were children of Kalapirar women captured by the victorious Pallavas and Pandyas. Frankly, it does not
matter to us today as recorded history points to otherwise.
This is becasue , Kalapirar were accepted as Jains as most of the Tamil literature written during their
period was around Jain principles. And, the revival of Hinduism or Vedic religion started with
Thirunavuakkarasar, the oldest popular figure clearly known as belonging to Velalar clan, converting
Mahendra Varma Pallavan into Saivam. He and Thirugnana Sambandar caused thousands of jains to be decimated.
If we accept Mr.Nedumaran’s theory, why would Appar cause the demise of his own clan?
Also, not only me, a large number of living and dead tamils, had not accepted that Varnasrama existed in
Tamil country. Nedumaran and his ilk can shout from rooftops, but tamil society knows that it did not have
Varnasrama and particularly, every one took up arms and went to battle when it was required. Even
Kalappirar won Tamil country by war. If velalars were descendants of kalapirar, did they give up arms as
soon as they won Tamil country? Initially he said Velalars were descendants of kalappirar; In the next
response, he is saying that some Velir merged into Moovendar and rest into Velalars through Kalappirar.
Now that he might have realized that even Kalappirar were warriors, he might next say that Velalars were
slaves of Kalapirar and they have been claiming the legacy of their original masters. The other
contradiction is that he says that Tolkappiam came in4-5 century AD after Sangam literature. That means it
was written during Kalappirar times. If that was the case, would Tolkappiam not have assigned “External”
category to Velalars? Now that i have pointed out this, he might say Tolkappiam was written earlier
during Pandya times.
He thinks that only Sanror had martial past in tamil history and they are the missing Kshatriyas in Tamil
country, he would be surprised with the number of references i can throw where every other tamil group,
be it Brahmins, Velalars, Maravars, Kaikolar, Agamudaiyar, Mutharaiyar, Kallar, Vanniar, Pallars or
even Kuravars are mentioned in popular tamil literature (not in caste hagiographies) as having
participated in major battles/wars, won titles, and even some had their had their own armies and small
kingdoms.
The bottomline is, Velalar had an illustrious history and has thousands of famous names in tamil history
before the arrival of Vijayanagar armies, where as Nedumaran’s group has no mention. He might want to
claim Chera, Chozha and Pandya lineage; But he can not discount the fact that these three dynasties, had
close relations with Velalars and other tamil castes. They married into them, gave them higher positions in
Government. This has continued and till date velalars are generally accepted by every other tamil caste in
equal or higher terms.
Though i hate to conclude like this, it can be fairly assumed that Nedumaran wants to invent a tamil royal
history for a group that did not exist in popular tamil culture before Britishers established themselves
here; instead he finds mention of Velalars and others like maravars, nattars, agamudaiyar, kallar and
udaiyar everywhere. I also understand that he has figured out that there are not too many references
even for Sanror (meaning his caste group) having been kings and feudals, compared to others. I can only
assume that he has come to a conclusion that the only way to establish ‘higher’ status for his group is to
put down velalars and appropriate everything, from Velanmai to Velir to Nammalvar, for his group. What I
do not understand is, in what way a higher status of Velalars was responsible for the lowering of status of
Sanrors (sanars)?
Sincere apologies to Thinnai Team and other readers of Thinnai.
Hoping to contribute something constructive next time,
Thanks and regards,
This entry is part [part not set] of 20 in the series 20060721_Issue
மலர்மன்னன்
அன்புள்ள ஆசிரியருக்கு,
மறுபடியும் என்ன பிரச்சினை, ஏன் எழுதுவதை நிறுத்திவிட்டாய் என்று கேட்டு திண்ணை வாசகர்களிடமிருந்து மின்னஞ்சல்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. தனிப்பட பதில் எழுதியபின்னரும் மேலும் மேலும் அதே தொனியில் வேறு பலரிடமிருந்து அஞஞ்சல்கள் வருவது நிற்காததால் அனைவருக்குமான பதிலாக இங்கு குறிப்பிடுவதை வெளியிட்டு உதவ வேண்டுகிறேன்.
நான் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் போதுமான அவகாசம் இல்லாமையால் பல பொறுப்புகளைத் திருப்திகரமாக நிறைவேற்றுவதில் சுணக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. எழுதுவது இரண்டாம் பட்சங்கூட அல்ல, கடைசிப் பட்சமாகத்தான் ஆகிவிட்டது. ஆகையால் வாரந்தோறும் தின்ணைக்கு எழுதும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள இயலாதவனாயிருக்கிறேன். திண்ணையில் பயன் மிக்க விஷயங்களைத் திறன் மிக்க பலரும் எழுதித் தீவிர சிந்தனைப் போக்குகள் கிளைத்தெழ வழி செய்துவருகின்றனர். எனவே எனது எழுத்து இடம்பெறாமல் போவது கவனத்திற்கு வரவேண்டிய அவசியமே இல்லை.
இன்னொரு விஷயம்: சாரமில்லாத, முதிர்ச்சி இல்லாத, துவேஷம் ஊன்றுதல் தவிர வேறு நோக்கம் ஏதுமில்லாத எதிர்வினைகளுக்கெல்லாம் நான் பதில் கட்டுரைகள் எழுதவேண்டும் என்று தயவு செய்து எதிர்பார்க்க வேண்டாம். காந்திஜி, அம்பேத்கர், பாரதியார், ஈவேரா இப்படிப் பலரும் எழுதியும் பேசியும் சென்றுள்ளவை வால்யூம், வால்யூமாக உள்ளன. அவற்றையெல்லாம் முழுமையாகப் படித்தறியாமல் அவர் எப்போது இப்படிச் சொன்னார், இவர் எங்கே அப்படி எழுதியிருக்கிறார் என்றெல்லாம் எதிர்வாதம் செய்பவர்களுக்குப் பாடம் நடத்துகிற வேலையை ஏற்றுக் கொள்வதற்கு என்னிடம் நேரமில்லை.
இது இவ்வாறாயிருக்க, மாப்பிள்ளைமார் கலகம் பற்றி இன்னும் விவரமாக எழுதக் கேட்டு வரும் மின்னஞ்சல்களுக்கு என்ன சொல்ல? தேவையெனில் மேலும் எழுதுவதாக நீதானே வாக்களித்தாய் என்று மடக்குகிறபோது வாயடைத்துப் போகிறேன். மாப்பிள்ளைமாரின் விஷமங்களுக்கு முத்தாய்ப்பாகிப்போன கிலாபத் இயக்கத்தை முன்னின்று நடத்தியவர்கள் முகமதிய மத குருமார்கள்தான் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்ட பிறகு, அது வர்க்கப் போராட்டமில்லை, வகுப்புவாதக் கலவரந்தான் என்பது உறுதியாகிவிடவில்லையா, மேலும் அதனை விவரித்து இன்றைய இளந்தலைமுறையினரிடையே கோப தாபங்கள் உருவாக வாய்ப்பளிப்பது அவசியந்தானா? மேலும், மாப்பிள்ளைமார் கலகம் பற்றி உண்மையைச் சொல்லிவிட்டார் என்பதாலேயே அன்னிபெசன்ட் மீது அவதூறு கற்பிக்கும் அளவிற்கு துவேஷம் ஊறிக்கிடக்கையில், மாப்பிள்ளைமார் கலகம் முகமதியரின் மதக் கலவரமே என்பதற்கு எத்தனை ஆதாரங்களைத் தந்தாலும், அவையெல்லாம் ஹிந்துத்துவக் கற்பிதங்களாகப் புறக்கணிக்கப்பட்டுவிடும்தானே?
தவிரவும், பாரதியார் தொடர்பான விஷயத்தில் ஒரு வறியவனின் வறுமை காரணமான இயலாமையைப் பயன்படுத்திக்கொண்டு அவனுடைய மனைவியைத் தனது இச்சைகளுக்கு வடிகாலாலாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரு துஷ்டனுக்கு வக்காலத்து வாங்கும் எதிர்வினைகளுக்கெல்லாம் நான் பதில் சொல்லவேண்டுமென்றா எதிர்பார்ப்பது?
பாரதியார் தாம் கேட்டுப் பெறாத ஒரு சாதியில் பிறந்துவிட்டதால் அந்தச் சாதியின் வளர்ப்புச் சூழலுக்கு ஏற்பச் சில வரம்புகளுக்கு உட்பட்டுப் போகிறார்; அதன் விளைவாகத் தமக்குள்ள இயலாமையை அவர் தெரிவித்தாலோ, அதே அடிப்படையில் தம் தந்தையின் இயலாமையைச் சொல்லி அவர் வருந்தினாலோ அதனைச் சாதியபிமானம் என்று தூற்றுமளவிற்குக் கக்குகின்ற துவேஷத்திற்குப் பதில் சொல்வதால் விளையும் பயன்தான் என்ன? வெறும் சொல்லாடல்களில் நானும் பொழுதை விரையம் செய்யவேண்டும் என்று தயவுசெய்து வற்புறுத்தவேண்டாம். சாதியபிமானம் பாராட்டிய பார்ப்பனரைக் கடிந்துகொள்வதில் மற்ற சித்தர்களுக்குச் சிறிதும் சளைத்தவரல்ல பாரதியார் என்பதும் அவர் விடுதலை, விடுதலை என்று பாடியது முக்கியமாகப் பறையர், பள்ளர், தீயர், புலையர் முதலானோருக்குத்தான் என்பதும் ஆவணங்களாகப் பதிவாகிவிட்டிருக்கையில், அவரைப் பற்றிய உள்நோக்கத்துடனான துவேஷ எதிர்வினைகளுக்கெல்லாம் பதில் விளக்கம் தரவேண்டிய அவசியம் இல்லையல்லவா?
ஆகையால் அவகாசம் கிடைக்கிறபோதெல்லாம் பகிர்ந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து அவசியம் எழுதுவேன்; அதிலும் முக்கியமாக இனிவரும் தருணங்களில் ஒரு பத்திரிகையாளனாகவும், விளம்பரத் துறையில் படைப்பாளனாகவும் இருந்த அனுபவங்களைத் திண்ணை வாசகர்களுடன் அதிக அளவில் பகிர்ந்துகொள்ள முற்படுவேன் என உறுதியளிக்கிறேன்.
This entry is part [part not set] of 20 in the series 20060721_Issue
சதுரகிரி வேள்
Dear Sir,
This is in response to the recent article in Thinnai
by Mr.Nellai Nedumaran and Mr.Ganesan. As usual, he
has again tried projecting that Nadars are the
desendants of Moovendar; i have no problems with that.
It pains to see that he puts down other communities,
especially Velalar, wherever he gets a chance. Hence
my mail is to put few of my observations in Thinnai so
alternate view points are also not available for
others. (As I do not have much idea about the reasons
behind Sivakasi riots, i would not like to comment on
what Mr.Karpaga Vinagayam wrote.) :
1. Most of the references quoted by them belong to
research by Nadars or literature sung on Nadars. Hence
these are obviously be biased and to be taken with a
pinch of salt.
2. He wrongly claims that Velalar themselves are
quoting that they are descendants of Kalapirar.
Nothing can be farther from truth. Velalar caste is
such a huge conglomerate that it includes people of
various origins and could have assimilated Kalappirar
too later on, latest example being Tuluva Velala
Mudaliars. Kalapirar came to Tamilnadu after 2 century
A.D whereas Velalar gets mentioned in literature
before that in Tolkappiam and Sangam poetry. Like he
says that VElir has no link to Velalar, he might say
even “VEl” has no relation to Velalar.
3. The earliest reference to Nadars as a caste group
is in Periya puranam, 12 Century A.D and there also
only Ezhava gets mentioned. He might say the word
Nadar is mentioned earlier too, but that is more a
title like Devar, Udayar, Maran, etc., rather than
being a caste name. It would be equivalent to Velalar
appropriating “Pillai” as exclusive to them whereve
mentioned. Maravars also get mentioned in Sangam
poetry itself and has hundreds of references in tamil
history since then.
4. There are humpteen number of references, stating
relationships between Velalar to Chozhas,Pandyas and
Cheras. Same is the case with Maravars, Nattars, even
Muslims. (one Mulim ruler of Kayal pattinam was
mentioned as having married into the Pandyan family)
All this hisotry can not be wished away unless
Mr.Nedumaran proves that they also came into Tamil
country along with Vijayanagar Army.
5. While on oneside he wants everyone to talk
favourably of Nadars right on Moovendar, he refuses
the same right to others. He is trying to create a
history where Velalars and Maravars gained in strength
only after the spread of Vijayanagar empire in
Tamilnadu while nothing can be farther from truth.
They were there before also and they allied with
Vijayagar Empire also. I am sure most of us know that
the Vijayanagar Army came to Tamilnadu, not to fight
with Pandyas, but to help Pandyas. Hence there was not
much animosity between Vijayanagar empire (Telegu
Nayaks) and Maravars or Velalars. In fact there are
number of records stating the trouble caused by
Kallars to Telugu Nayaks and Madurai where as
Nadars/Sanars do not get mentioned any where in the
interactions of madurai Nayakkars with tamil castes.
I can go on and on. But i am also afraid that this
might hurt other Nadar friends, which is not the
intention. While i sincerely believe that the tamil
society caste structure has never been very rigid and
everyone has had a fair chance to participate
including Nadars, except dalits perhaps. No one
community can appropriate tamil history and its
moovenders. Mr.Nedumaran and his friends would only
end up provoking more and more people by belittling
other castes.
This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue
அருணகிரி
இந்தி, இந்தியா, இந்தியன் என்ற கட்டுரையில் பலரது கருத்துக்களும் ஒரே கட்டுரையில் இடம் பெற்றிருப்பதால் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்கள் ஒரே கட்டுரையில் இருப்பது படிப்பவருக்குக் குழப்பம் விளைவிக்கலாம். இதனைத் தவிர்க்க ஒவ்வொருவர் பெயரையும் சேர்த்து இன்னார் இவ்வாறு சொன்னார் என்று எழுதி விடுவது கட்டுரையின் தெளிவிற்கும், கட்டுரைக்கு எதிர்வினை எழுதுபவருக்கும் உதவும். தனியாக வலைப்பதிவுகள் இடாமல் இருக்கும் என்போன்றோரின் கருத்துகளுக்கான எதிர்வினைகள் என் வலைப்பதிவில் இடம் பெற வழியில்லை ஆதலால், இக்கட்டுரையில் நான் எழுதியவை எவை என்று சொல்லி விடுகிறேன். “ஒரு மாநிலம் பிற்படுவது…” என்பதில் தொடங்கி “மறுப்பதிலும் உடைப்பதிலும் அல்ல ஏற்பதிலும் உருவாக்குவதிலுமே இந்தியத்தனம் இருக்கிறது” என்ற வரை என் கருத்து.
This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue
தங்கமணி
திண்ணை ஆசிரியருக்கு:
ஜடாயு எழுதிய’ “ஞான. ராஜசேகரனின் பாரதி – சில திரைப்படத் திரிபுகள்” கட்டுரையில் குறிப்பிட்ட ஒரு மேற்கோள் தொடர்பாக இதை எழுதுகிறேன்.
“என் பொண்ணு ஒரு ஆதி-திராவிட பையனையோ வேற சாதிப்பையனையோ இழுத்துட்டு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கொண்டு , அப்பா நான் சௌக்கியமாக இருக்கிறேன் என்று கடிதாசி போட்டால் நான் சந்தோஷப் படுவேன்..” என்று வருகிற வசனத்திற்கு எங்கும் ஆதாரமில்லை என்பதாக திரு. ஜடாயு குறிப்பிடுகிறார். இந்தக் கருத்தை, மிகச்சரியாக இதே வாக்கியத்தை நான் டாக்டர் ச. சு. இளங்கோவன் எழுதிய “பாரதிதாசன் பார்வையில் பாரதியார்” என்ற புத்தகத்தில் படித்ததாக நினைவு. அந்த நூல் அன்னம் வெளியீடு என்று நினைக்கிறேன். சரியாக நினைவில் இல்லை; ஆனால் இந்த வரிகள் நினைவில் உள்ளன.
திரு. ஹரி கிருஷ்ணன் வேறொரு தகவலுக்காக இந்நூலை தனது பாரதி கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார் (http://www.tamiloviam.com/unicode/07010403.asp). இதை திரு ஜடாயு கையை வெட்டிக்கொள்வதற்காகச் சொல்லவில்லை. பாரதியின் இந்த வரிகள் பற்றிய மேற்கோளாக நான் அறிந்ததைக் குறிப்பிடவும், பாரதி இதையெல்லாம் பேசியிருக்கமுடியாது என்ற நமது விருப்பங்கள் உறுதிப்படுவதைத் தவிர்க்கவும் இதை எழுதுகிறேன். இங்கு என்னிடம் அந்த நூல் இல்லையாதலால், பக்கங்களையோ, அந்தக் கருத்துக்கான மூல நூலையோ இங்கு தரமுடியவில்லை.
This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue
ஜோதிர்லதா கிரிஜா
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு.
வணக்கம்.
சகோதரர் பத்ரிநாத் அவர்களின் கடிதம் கண்டேன். தாம் வைத்ததை ஒருவர் அப்புறப்படுத்த, அவர் அப்புறப்படுத்தியதை முன்னவர் மறுபடியும் வைப்பதில் கவுரவப் பிரச்சினையே இல்லையா?
இந்த விசயத்தில் “ஜெ” க்கும் கலைஞருக்கும் கோபம் என்பதை ஒன்றாய்ப் பார்க்க வேண்டும் என்று நான் எங்கே சொன்னேன்? சகோதரர் அவ்வாறு புரிந்து கொள்ள என் கட்டுரையில் என்ன இருந்தது?
ஜெ-க்கு ஒரு விசயத்தில் இருக்கும் விருப்பு வெறுப்பு கலைஞர் அவர்களுக்கும் அதே கோணத்தில்தான் இருக்கும் என்றெல்லாம் நான் எங்கே சொன்னேன்?
பிறப்பால் உயர்வு-தாழ்வு கற்பிக்கும் மூடருக்குச் சிலை வைக்கலாம் என்றும் நான் எங்கே சொன்னேன்? எப்போது சொன்னேன்? (அப்படி ஒரு மூடனுக்கு நானே சிலை வைத்துவிட்டு, ஆனால் கண்ணகிக்கு மட்டும் யாரும் சிலை வைக்கக் கூடாது என்று நான் தடுப்பது போலல்லவா இருக்கிறது இவரது கூற்று!)
மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம் ஆகியவை ஒன்றே என்றோ , இன அடிப்படையில் வேறுபாடு அற்றவை என்றோ நான் எங்கே சொன்னேன்? என் கட்டுரைக்கும் இனம், மதம் பற்றிய அலசலுக்கும் என்ன தொடர்பு? இனமும் மதமும் இங்கே எங்கே வந்தன? இவை மூன்றும் மக்களிடையே பிரபலம் என்று மட்டுமே சொன்னதற்கு இவ்வளவு குதர்க்கமா !
This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue
ரெ.கா.
இரா.மு.வின் எடின்பரோ குறிப்புகளில் கவிஞர் சந்திப்பு அங்கமும் அதை அவர் சொல்லியிருந்த விதமும் மிக அழகு. ப்ரையன் ஜோன்ஸ்டனின் அவரின் அப்பா பற்றிய கவிதையும் மிக அருமையாக இருந்தது. பார்க்கும்போது தமிழில் வரும் நவீன கவிதைகள் இந்தக் கவிதைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய சிறப்புள்ளவை என்றும் தோன்றுகிறது. தமிழ் நவீன கவிதைகளை நாம் உலக மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டால் ஏதாகிலும் அங்கீகாரம் வருமா? வைரமுத்துவின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் என்ன எதிர்வினை பெற்றன என்பது பற்றி ஒரு தகவலும் தெரியவில்லையே!
மனுஷ்யபுத்திரன் அண்மையில் மலேசியா வந்திருந்தார். அவருக்கு இது முதல் வெளிநாட்டுப் பயணமாம். ஒரு கலந்துரையாடலில் ஏன் தமிழ் நவீன கவிதையில் இவ்வளவு இருணமை படிந்து கிடக்கிறது என்று கேட்டேன். தமிழ் நவீன கவிதை உருவான ந.பிச்சமூர்த்தி காலத்தில் இந்திய அரசியலில் படிந்திருந்த இருள்தான் அது; இன்னும் அகலவில்லை என்றார்.
சரிதான். “இருளில் வாங்கினோம்; இன்னும் விடியவே இல்லை” என்ற கதைதானோ?
“இங்கேயும் கவிஞர் சந்திப்பு உண்டு. நம்ம பக்கம் போல் போஸ்ட் கார்டில் ‘வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டாங்கிப்பட்டியில் கவிஞர் கூடல் நடக்கிறது. தவறாமல் வந்து சேரவும்’ என்று அழைப்பு அனுப்பி, கிடைத்த பெண் கவிஞர்களை அரண்டு மிரண்டு அந்தாண்டை ஓடிப்போக வைக்கிற சமாச்சாரம் இல்லை இது.
மூன்று மாதம் முன்னால் முறையாக அறிவிக்கப்பட்டு, ராயல் ஸ்காட்டிஷ் அகாதமியில் கவிஞர் சந்திப்பு. கவிதை வாசிப்பு.
எங்கேயும் இந்த மாதிரி விஷயங்களுக்கு ஆஜராகிற முப்பது சில்லரை பேர்தான் இங்கேயும். அடுத்த தடவை சப்ஜாடாக முப்பது ஜோல்னாப்பை சென்னை காதி கிராமயோக் பவனில் வாங்கி வந்து இவர்கள் எல்லோருக்கும் அன்பளித்து ஒரு high-brow இலக்கிய ரசனை அட்மாஸ்பியரை உருவாக்க மனதில் முடிச்சு போட்டுக் கொண்டானது.
ஸ்காட்லாந்துக்காரரும், சமகால பிரிட்டீஷ் கவிஞர் – நாவலாசிரியர்களில் முக்கியமானவரானருமான John Burnside கலந்து கொண்டு கவிதை வாசித்தார். அண்மையில் வெளியாகிப் பரவலாகப் பேசப்படும் அவருடைய சுயசரிதப் படைப்பான ‘Lying about my father’ பற்றிப் பேசுவார் என்று எதிர்பார்த்தது நடக்கவில்லை. ஸ்காட்லாந்தின் தனி மனித – சமூக வாழ்க்கையில் ஊடும் பாவுமாகப் பின்னிப் பிணைந்த குடிப்பழக்கத்தைப் பற்றி, அதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுக் குடும்ப உறவுகளைப் புறக்கணித்த தன் அப்பா பற்றி, அவரைத் தீர்த்துக்கட்டத் தெருமுனையில் கத்தியோடு ஒளிந்திருந்த தன் பனிரெண்டு வயதுக் கொலைவெறி பற்றி எல்லாம் சிறப்பாக ஜான் பர்ன்சைட் எழுதியிருப்பதாக விமர்சகர்கள் ஒருமுகமாகப் பாராட்டுகிற புத்தகம் இது.
ஜான் கவிதை வாசிப்புக்கு முன்னுரையாக தாட்டியான ஒரு அம்மையார் மெய்சிலிர்த்த நிலையில் பேசினார் – ‘இந்த நாள் நமக்கெல்லாம் மறக்க முடியாத தினம்; இன்றைக்கு உலகில் சுவாசித்துக் கொண்டிருக்கும் கவிஞர்களிலேயே தலைசிறந்த ஜான் இங்கே நம்மோடு இருக்கிறார். அவருடைய புகழ் பெற்ற கவிதைகளை அவருடைய சொந்தக் குரலில் வாசிக்கிறார். கனவா நினைவா இது?’ என்று plattitude-களைத் தொடர்ந்து தட்டி விட்டபடி இருக்க, ஜான் கொஞ்சம் கூச்சத்தோடு கவிதை வாசித்தார். அவர் முடித்த பின்னும் இந்தக் காக்கைத் தம்புராட்டி அவருக்கு ஆயிரத்தெட்டுப் போற்றி சொல்லி அர்ச்சனை செய்யத் தவறவில்லை. எல்லா ஊரிலும் கவிஞர்களுக்குச் சாபம் காக்கைகள் தான்.
ஜான் பர்ன்சைடைத் தொடர்ந்து ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இன்னொரு ஆங்கிலக் கவிஞர் Brian Johnstone கவிதை வாசிக்க எழுந்தபோது முப்பது பேரில் பத்து பேர் பிரின்சஸ் தெருப்பக்கம் நடையைக் கட்டினார்கள்.
பர்ன்சைடை விடக் கம்பீரமான குரல் ப்ரையனுக்கு. வயதும் அதிகம். கோட்டும் சூட்டும் ஆறடி உயரமுமாக ஒரு கனவான் தோரணை. அவர் வாசித்த கவிதையில் அந்தத் தோரணை ஏதும் இல்லாமல் சட்டென்று மனதில் பதிந்தது.
இது போன்ற சமயங்களில்
கண்ணாடிக்குள் இருந்து
என் அப்பா உற்றுப் பார்க்கிறார்.
இறந்துபோய் இருபது வருடம் ஆனாலும்,
கண்ணாடிக்குள் தட்டுப்படும்
என் இன்னொரு முகமாக வளர்ந்தபடி.
என் முகத்தில் வளர்ந்த
அவர் தாடி ரோமத்தை மழிக்கிறேன்.
அவர் நடையை நடக்கிறேன்.
அவருடைய வேகத்தில் ஓடுகிறேன்.
அவருடைய நிர்வாணம்
பருத்துக்கொண்டிருக்கும் என் உடம்பை உலுக்குகிறது.
மற்றவர்களும்கூட அவரை என்னில் பார்க்கிறார்கள்
புகைப்படங்களில், தெறித்து நகரும் பார்வையில்,
உள்கண் மெல்லத் திரும்பும்போது
என் கூடவரும் பயணியாக.
அவருடைய எதிரொலிகள்
உண்மையானவை என்ற மரியாதையோடு
அந்தக் கையைப் பற்றுகிறேன்.
நான் புரிந்துகொள்ளாமல்
சண்டை போட்ட அவருடைய ஆவியை
என்னுள் வாங்கிக்கொள்கிறேன்.
ப்ரையன் ஜான்ஸ்டோனிடம் பேசிக்கொண்டிருக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. தென்னிந்திய எழுத்தாளன் என்றதும் தமிழ் தானே, கிரேக்க மொழியை விடப் பழையது இல்லையா, அதில் எழுத நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர் என்றார். எழுத்து, தொழில் பற்றி ஆர்வமாக விசாரித்தார். மறு விசாரிப்பில் அவர் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் என்று தெரிந்தது.
The Lizard Silence என்ற தன் கவிதைத் தொகுதியைக் கையெழுத்துப்போட்டு …”
This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue
ரத்தினவேலு
சேதுபதிகளின் தானங்கள்- சில வரலாற்றுக்குறிப்புகள்
கற்பக விநாயகம்
//முருகாயி எனும் பெண் கொடை கொடுத்து சிறையெடுக்கப்பட்ட சேதி துவாக்குடி செப்பேட்டிலும் பதிவாகியுள்ளன. இதே சேதுபதி மன்னர் ஆலங்குளத்தில் மொக்குபுலித்தேவன் மகள் அழகிய நல்லாளை 20 கல விரையடி நிலம் கொடுத்து சிறையெடுத்தார்.//
இதில் வரும் துவாக்குடி என்ற கிராமம் எது ?அந்த செப்பேட்டில் உள்ள முழு விபரம் என்ன தெரிந்து கொள்ள முடியமா?
ஏனென்றால் நான் துவாக்குடி காரன் அதன் விபரம் தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன்.
This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue
நேச குமார்
திண்ணை ஆசிரியருக்கு,
கடந்த இருவாரங்களில் சிலர் திண்ணையில் அதிகமாக மதம்/இஸ்லாம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வருவது குறித்து குறைபட்டுக் கொண்டுள்ளார்கள். இவற்றில் குறிப்பாக ஜடாயுவின் கடிதத்துக்கு பதிலாக சில விஷயங்களை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
மதம் பற்றிய விவாதங்களுக்கு இடமளிப்பதன் அவசியம்:
இந்தியா போன்ற வளரும் நாடுகளின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் தீர்மாணிப்பது(தடுப்பது) மதப்பிரச்சினைகளே ஆகும். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் இன்றைய ஏழ்மைக்கு ஒரு குறிப்பிட்ட மதம் தொடர்ந்து ஆயிரம் ஆண்டுகளாக தொடுத்துவரும் ‘புனிதப் போரே’ காரணம் என்பது எனது எண்ணம். அந்தக்காலத்தில் நிகழ்ந்த கொள்ளைகளையும், கொலைகளையும் விட்டுத்தள்ளுங்கள். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மதத்தின் பெயரால் நாடு கூறு போடப்பட்டது. அதன் விளைவாக இன்று நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக செலவிடவேண்டிய பெரும் தொகை இராணுவத்திற்காகவும், ஏற்கெனவே நடந்த மூன்று போர்கள், இன்றும் தொடர்ந்து நாடெங்கும் நடந்துகொண்டிருக்கும் மென்மையான போர்கள் ஆகியவற்றிற்காக செலவிடப்பட்டு வருகின்றது. எனவே, இந்த நிதர்சனத்தை மூடி மறைப்பதால் எவ்விதப் பயனுமில்லை. விவாதங்களே இல்லாத நிலைதான் மிகப் பயங்கரமானது. யார் மனதில் என்ன ஒளிந்திருக்கிறது என்று தெரியாது. திடீரென்று பூதமாய் கிளம்பும்போது எதிர்கொள்ளக்கூடத் திராணியில்லாமல் வீழ்ந்துவிடுவோம்.
இஸ்லாம் பற்றிய விவாதங்களுக்கு இடமளிப்பதன் அவசியம்:
மற்ற மதங்கள் விஷயத்தில் பொது ஊடகங்களில் அவர்களுக்குள் இருக்கும் வித்தியாசங்கள், பிரச்சினைகள் அலசப்படும் நிலையில், இஸ்லாத்தில் இது சாத்தியமல்ல. அவர்களுக்கென இருக்கும் ஊடகங்களில் கூட இத்தகைய விவாதங்களுக்கு இடம் கிடையாது. சமரசமோ, ஏகத்துவமோ அவர்களின் நிலைப்பாட்டுக்கு ஒத்து வரும் படைப்புகளுக்கு மட்டுமே இடமளிக்கின்றார்கள். திண்ணையில் எழுதும் ஹெச்.ஜி.ரசூலோ, சூஃபி முகமதோ இதே விஷயங்களை எந்த இஸ்லாமிய ஊடகங்களிலும் எழுத முடியாது. அவை அவதூறாகக் கருதப்படும். மற்ற வெகு ஜன ஊடகங்களிலும் இது சாத்தியமல்ல – அவர்களுக்கு வெகுஜனங்களைக் கவரும் செய்திகளுக்கு இடம் ஒதுக்கவே இடம் போதுமானாதாக இல்லை.
இலக்கிய இதழ்கள் என்ற பெயரில் செயல்படும் சிற்றிதழ்கள் வீராப்பாக பேசுபவையே தவிர, வெகுஜன ஊடகங்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச தைரியம் கூட அவற்றுக்குக் கிடையாது – இஸ்லாமிஸ்டுகளின் சிறிய முகச்சுளிப்புக்குக் கூட அஞ்சுபவையாகவே அவை உள்ளன. அவற்றிற்குப் பின்னால் பொருளாதாரக் காரணங்களும், அச்சிற்றிதழ்கள் எல்லாம் ஒரு தனிமனிதரின் முயற்சியிலேயே நடத்தப்படுபவை – அம்மனிதருக்கு எவ்வித சங்கடங்களும் நேர்ந்துவிடக்கூடாது என்பது போன்ற காரணங்களும் அடங்கும். மேலும் இவையாவும் ‘செக்யூலர் மற்றும் முற்போக்கு’ முத்திரகளை தம்முடைய ‘உயிரினும் மேலாக’ மதிப்பவை. இஸ்லாம் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள், விமர்சனங்களுக்கு இடமளித்தால் இந்த முத்திரை நமது ‘முற்போக்குவாதிகளின்’ பார்வையில் நீர்த்துப் போகும் என்பதாலும் இவை இத்தகைய விவாதங்களை அனுமதிப்பதை விரும்புவதில்லை.
வன்முறை, மூர்க்கமான நம்பிக்கை உலகெங்கும் பரவிவரும் , இன்று நமது நாடெங்கும் பெரும் வன்முறை, தமிழகத்தில் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள், வெட்டு குத்துகள் . ஒரு சமூகம் என்ன நினைக்கிறது என்று அறிந்துகொள்ளவும், அதனுள்ளே இருக்கும் பலவித அணுகுமுறைகள்,மாறுபட்ட கருத்துக்கள், கருத்தாக்க இயங்கு காரணிகள்(dynamics), மத அரசியல்(polemics) போன்றவற்றை மற்றவர்கள் கவனிக்கவும், பொது சமூகம் அச்சமூகத்தின் மனோபாவத்தை அறிந்து கொள்ளவும் இத்தகைய இஸ்லாம் பற்றிய விவாதங்களை அனுமதிப்பது மிகவும் அவசியமானதொன்று.
தொடர்ந்து திண்ணையை படித்து வருபவர்களுக்கும், ஏன் திண்ணை ஆசிரியர் குழுவுக்கும் கூட இந்த விவாதங்கள் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தலாம் – ஆனால், மேற்கூறிய காரணங்களால் திண்ணை இவ்விவாதங்களை தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் , அவற்றுக்கு இடமளிக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.
This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue
தங்கவேல்
நக்கீரனனின் கட்டுரை ஒரு தற்காப்புக்கான வழியே தவிர வேறொன்றும் இல்லை. ஆம். தாய் மொழி தமிழாக உள்ள ஒருவனே தமிழன். மற்றவர் தமிழர் அல்ல என்பது எனது வாதம் இல்லை. உண்மை. இது நாள் வரை தமிழன் மத்தவருக்காக அனைத்தையும் இழந்தான். இப்போது ஒரு உணர்ச்சி அலை கிளம்பி இருக்கிரது. அதனை உடனே தடுக்கா விடில் நக்கீரன் போன்றவருக்கு தூக்கம் வராது. தமிழ் நாட்டுக்கு தலைவன் தமிழனாக வேண்டும். அந்த புரட்சி விரைவில் வரும் என்று நம்புகிறேன்.
This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue
K.ரவி ஸ்ரீநிவாஸ்
திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு,
மறையும் மறையவர்கள்: கோயிலைச் சூழும் அரசியல் என்ற தலைப்பில் எஸ். இராமச்சந்திரன் எழுதியுள்ள கட்டுரை சில கேள்விகளை எழுப்புகிறது. கடந்த காலச் சான்றுகள் சிலவற்றைப் புரிந்து கொள்ள உதவும். இன்றைய சூழலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது குறித்து விவாதிக்க நாம் அரசியல் சட்டம் கூறும் வழிபாட்டு உரிமையையும், பிறப்பின் அடிப்படையிலான பாரபட்சங்களை நீக்குவது ஆகியவை எப்படி விளக்கப்பட்டுள்ளன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். நாத்திகத்தில் நம்பிக்கை உள்ள கட்சி ஆளும் போது அது கோயில்கள் குறித்து எதுவும் செய்யக் கூடாது என்றெல்லாம் வாதிட முடியாது, அதற்கு அரசியல் சட்டத்தில் இடமில்லை.அதே சமயம் அரசு எந்த அளவு கோயில் வழிபாட்டு முறைகளில் தலையிடலாம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. அந்த வழக்கு ஒரு குறிப்பிட்ட கேள்வியைப் பற்றியது, அர்ச்சகராக பிராமணர்கள் மட்டும்தான் இருக்கலாமா, முறையான பயிற்சியும், தகுதியும் உடைய இன்னொருவர், பிரமாணரல்லாதவர், அர்ச்சகராக பணி புரிய முடியாதா ?. உச்ச நீதிமன்றம் நடைமுறையில் பிரமாணர்தான் அர்ச்சகராக இருந்தாலும், பிராமணர் அல்லாதோர் அர்ச்சகராக இருக்க தடையில்லை, அவர்(கள்) முறையான பயிற்சியும், தகுதியும் பெற்றிருந்தால் என்று தீர்ப்பளித்தது.இது கோயில் நடைமுறைகளில், வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் கொண்டுவர அனுமதிக்கும் தீர்ப்பல்ல. தமிழ் நாட்டுக் கோயில்களைப் பொருத்த வரை இத்தீர்ப்பினை முன் வைத்து கோயில் நடைமுறைகளில்,பழக்க வழக்கங்களில்,வழிபாட்டு முறையில் மாற்றம் செய்ய முடியாது. வேறு வார்த்தைகளில் சொன்னால் அர்ச்சகர் எந்த ஜாதியாக இருந்தாலும் ஆகம முறையைப் பின்பற்றும் கோயில்களில் ஆகம விதிகள், தொன்று தொட்டு பின்பற்றப் படும் நடைமுறைகளைத் தான் பின்பற்ற வேண்டும். இத்தீர்ப்பினை காரணம் காட்டி தமிழ் வழிபாட்டினை திணிக்க முடியாது, ஆகம விதிகளை நாங்கள் மாற்றுவோம் என்று அரசு கூற முடியாது.ஆன்மிக விஷயங்களில் அரசுக்கு கட்டற்ற சுதந்திரம் இல்லை. இருக்கிற அர்ச்சகர்களின் உரிமைகளைப் பறிக்க முடியாது. சில பகுத்தறிவாளர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் இத்தீர்ப்பினை வேறு விதமாகப் புரிந்து கொண்டால் அது அவர்களின் பிழை மற்றும் அறியாமை.
இந்த ஆணை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளினை எடுத்துவிட்டது என்று நாடகீயமாக அறிக்கை விடலாம், கலைஞர் போற்றி, வீரமணி போற்றி என்று எழுதலாம். ஆனால் உண்மை மிகவும் வித்தியாசமானது. அது பத்திரிகைகளும், இதை வாழ்த்துவோரும் முன் வைக்கும் எளிமைப்படுத்தப்பட்ட புரிதல்களுக்கு அப்பாற்பட்டது.அது சிக்கலானது,பல பரிமாணங்கள் கொண்டது. இதைப் பற்றி விரிவாக எழுதக்கூடும்.
கடந்த இதழில் இட ஒதுக்கீடு குறித்து எழுதியிருந்தேன். தலித்கள்,பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டினை நான் அங்கு கேள்விக்குட்படுத்தவில்லை, அது தேவை, தொடர வேண்டும் என்று கருதுகிறேன். பிற்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்தே அக்கட்டுரையில் எழுதியிருக்கிறேன். ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீடு என்ற கருத்தாக்கமே கட்டுடைக்கப்பட வேண்டும் என்பதே என் கருத்து. என் வலைப்பதிவிலும் இட ஒதுக்கீடு குறித்து பதிவுகள் இருக்கின்றன. வாசகர்கள் அதையும் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கற்பக விநாயகம் கோயில்கள், சிறுபான்மை, குறித்து எழுதியிருக்கிறார். அவர் கட்டுரை ஒரு தலைப்பட்சமாக உள்ளது. வழக்கமான தி.க கண்ணோட்டத்தினைத் தாண்டி இதை அவர் புரிந்து கொள்ள முயல வேண்டும். வழிபாட்டு உரிமை அனைவருக்கும் பொதுவானது. நாளைக்கே பெரியாருக்கு ‘கோயில்’ எழுப்பி பெரியார் பக்தர்களாகிய நாங்கள் ஒரு பிரிவினர், பெரியாரிய நாத்திகம் எங்கள் மதம் என்று உரிமைகள் கோர முடியும். கோயில்களுக்கு சொத்துத் தேவையில்லை என்றால் பிற வழிபாட்டுத்தலங்கள், தூதர்கள், இறைப் பிரதிநிதிகள் பெயரில் உள்ள வழிப்பாட்டுத் தலங்களுக்கும் அவை தேவையில்லை என்பது மதச்சார்பற்ற நிலைப்பாடாக இருக்க முடியும். இந்து மதக்கோயில்களுக்கு சொத்துக்கள் வேண்டாம், பிற மதங்கள் குறித்துப் பேச மாட்டோம் என்பது போலி மதச்சார்பின்மை. ஒரு புறம் இந்து மதத்திற்கு எதிரான நிலைப்பாடுகளை எடுக்கும் ‘பகுத்தறிவு/முற்போக்கு,மதசார்பற்ற வாதிகள்’, இன்னொரு புறம் இந்து மதக் கோயில்களிலிருந்து அரசுத் தலையீட்டினை நீக்குவது என்ற பெயரில் இந்த்துவ நிலைப்பாடு எடுப்பவர்கள். நான் இந்த இரண்டு நேரெதிர் நிலைப்பாடுகளையும் ஏற்க மாட்டேன். அரசியல் சட்டம் தரும் உரிமைகள், மனித உரிமைகள், வழிபாடு குறித்த சமூகங்களின் உரிமைகள் இவற்றின் அடிப்படையிலேயே இதை அணுக வேண்டும் என்று கருதுகிறேன். இதில் தனிப்பட்ட நம்பிக்கைகளையும், நிலைப்பாடுகளையும் போட்டு குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. தீவிர நாத்திகர் கூட வழிப்பாட்டு உரிமையினை, மத நம்பிக்கை குறித்த உரிமைகளை மனித உரிமைகளின் அடிப்படையில் ஆதரிக்க முடியும். அப்போது வழிபாட்டுத் தலங்களை ஏற்படுத்த, நிர்வகிக்க உரிமை ஒரு மதத்தினை சார்ந்தவர்களுக்கு அல்லது ஒரு பிரிவினருக்கு உண்டு என்பதை ஏற்க முடியும்.மேலும் அரசு இதில் தேவையில்லாத போது தலையிடக் கூடாது என்றும் வாதிட முடியும்.
This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue
அசுரன்
அன்புடன் திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு,
வணக்கம். நலம். கடந்த 6 மாதகாலமாக இணையத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
5 மாதகாலமாக குமரி மாவட்டத்தில் தக்கலையிலுள்ள ஒரு சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த ஒரு மாதகாலமாக ஓய்வில் இருக்கிறேன். அப்போது நான் எழுதிய ஒரு நேர்காணலையும் மற்றொரு மருத்துவரின் கட்டுரையையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
பெரிய சிக்கலில் இருந்து (சிறுநீரக செயலிழப்பு) ஓரளவு விடுபட்டுவிட்டேன். தற்போது இரத்தத்தில் கிரியாட்டினின் அளவு 2.4 ஆகவும் யூரியாவின் அளவு 56 ஆகவும் உள்ளது. இப்போதைக்கு சிறுநீரகத்தை மாற்றவேண்டிய தேவை இல்லை என்று கருதுகிறேன்.
குறுகிய செய்திகள் ஏதேனும் அனுப்புவதாக இருந்தால் எனது செல்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பவும்.
அன்புடன்,
அசுரன்
செல்பேசி: 9245142757
(சிலகால முன்பு நண்பர் அசுரன் தன் உடல்நலக் குறைவு பற்றி திண்ணை வாசகர்களிடம் தெரிவித்திருந்தார். இப்போது பாரம்பரிய மருத்துவத்தின் உதவியுடன் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதாய்த் தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் முழுமையாய் நலம்பெற வாழ்த்துகள். அசுரனையோ அல்லது அசுரன் தகவல் தந்திருக்கும் மருத்துவர்களையோ தொடர்பு கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நேரிடையாக அசுரனையே தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)
This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue
இப்னு பஷீர்
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
ஹெச்.ஜி. ரசூலின் ‘அல்லாவும் வகாபும்’ என்ற கட்டுரையை படித்தபோது வியப்பு மேலிட்டது. அதைப் படிக்க நேர்ந்த எனது நண்பர் ஒருவர் சொன்னார், “ஒரு முஸ்லிமின் எழுத்து நடைபோலவே தெரியவில்லையே!”
ஹெச்.ஜி. ரசூல் இவ்வாறு குறிப்பிடுகிறார், ‘அல்லாவும், வகாபும் எவ்வாறு வேறுபடுகின்றனர் என்பதை இனி கவனிப்போம். அல்லாவிற்கு பிறப்பு கிடையாது. வாப்பா, உம்மா கிடையாது. வகாபி கி.பி.1703-ல் மத்திய அரேபியாவின் நஜ்து பகுதியில் பனுதமீம் குலத்தில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் முகம்மது இப்ன் அப்துல் வகாப். இவரது வாப்பாவின் பெயர் ஷெய்க் இப்ன் அப்துல் வகாப்.’
இதை ஹெச்.ஜி.ரசூல் பொருள் உணர்ந்துதான் சொன்னாரா? அல்லது இந்த அடிப்படைகூட தெரியாத ஒரு ‘முகமதிய’ பெயர் தாங்கியாக மட்டுமே அவர் இருக்கிறாரா என்பது அவருக்கும் அவரது ‘ரஸூலுக்கும்’ மட்டுமே தெரிந்த விஷயம்!
வஹ்ஹாப் என்பது இறைவனின் பெயர்களுள் ஒன்று.
அப்துல் வஹ்ஹாப் என்பதற்கு ‘வஹ்ஹாபின் அடிமை’ என்பது பொருள்.
இறைவனின் பெயர்களோடு ‘அப்துல்’ என சேர்த்து ‘இறைவனின் அடிமை’ என பொருள் வரும்படியாக பெயர் வைத்துக்கொள்வது நடைமுறையில் உள்ள பழக்கமே. இது எப்படி ‘ஷிர்க்’ இணைவைத்தலாகும் என்பதை ஹெச்.ஜி.ரசூல்தான் விளக்க வேண்டும்.
இவர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை பக்கம் தப்பித்தவறிகூட போகாமல் இருப்பது நல்லது. அங்கு ‘Chief Minister’ என்றும் ‘PA to Chief Minister’ என்றும் இரு பெயர்ப்பலகைகளை பார்த்தார் என்றால், ‘முதலமைச்சருக்கு கீழே பணிபுரியும் நீ எப்படி Chief Minister என்று பெயர் வைத்துக் கொள்ளலாம்?’ என்று அந்த PA மீது பாய்ந்தாலும் பாய்ந்து விடுவார்!
This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue
ச. பெரியசாமி.
சில தமிழ்ப் பண்பாடுகள்.
ஒரு பக்கம் ஊருக்கு நாலு வைப்பாட்டிகள் வைத்துக்கொள்வது.
இன்னொரு பக்கம் கண்ணகிக்கு சிலையும் வைப்பது.
நடக்க, இருசக்கர, முச்சக்கர மற்றும் நாற்சக்கர வண்டிகள் செல்லப் பயன்படும் சாலையின் இரு மருங்கிலும் குந்தவைத்து உட்கார்ந்து
கக்கூசு போவது.
(கழிவறையில் போனால் அது ஆங்கிலப்பண்பாடு)
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப்போல் இனிதாவதெங்கும் காணோமே என இந்த இணையக் காலத்தில் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டு இறுமாந்து மப்பில் இருப்பது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போல் யாதும் என் கேளிர் யாவையும் என் சொத்து என இருப்பது.
ஊரார் பிள்ளைகளைத் தமிழ் மட்டும் படிக்கச்சொல்லி மடிப்பிச்சை எடுக்க வைப்பது. இந்தியைப் பழிப்பது. ஆங்கிலப் பெயர்ப் பலகைகளை உடைப்பது. ஆனால் தன் பிள்ளைகளை உயர் தர ஆங்கிலப் பள்ளியில் தமிழ் தவிர எல்லாம் படிக்க வைப்பது.
எங்கும் கத்திப் பேசிக் கூப்பாடு போடுவது.
கும்பல் சேர்க்கத் தெரிந்தவன் மட்டுமே அறிவாளி. அந்த குணம் இல்லை என்றால் எந்த அறிவாளியும் கோமாளி.
காய்கறிக்கடை முதல் சட்டமன்றம் வரை அடாவடித்தனம் பேசுவது/ செய்வது.
This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue
பி.ஆர். திரிபுரசுந்தரி
சாயல் படிவது காப்பியடித்தல் ஆகுமா? – என்ற தேவமைந்தனின் இலக்கியக் கட்டுரையைத் தங்களின் புதிய வடிவமைப்பிலான திண்ணை மின்னிதழில் வாசித்தேன்.
ஆய்வு மாணவியாகவும் அதே சமயம், பேச்சாங்கிலமொழிஆசிரியராகவும் இருக்கும் எனக்கு இதுபோன்ற கட்டுரைகள் மிகவும் பயன் தருகின்றன.
பாராட்டுகள்!
அன்புடன்.
பி.ஆர். திரிபுரசுந்தரி
kodaikanaldogyellow@yahoo.co.in
This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue
தே. பிரகாஷ்
சமீப காலமாக மதவாதக் கருத்துக்கள் திண்ணையில் ஓங்குவதாகத் தோன்றுகிறது. ஜாதி, மதம் போன்றவை மனித சமூகத்தினை சுமூகமாக இயக்கிச்செல்ல ஏற்படுத்தப்பட்ட/ஏற்பட்ட வரையறைகளாயினும், சமுதாய வரையறையே விரிவடையும் இக்காலத்தில் சமூகத்தை கட்டிக்காக்க வேண்டிய வரையறைகளும் மாறியாக வேண்டியதனை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். நமது நாடு பல்வேறு ஜாதி, மதங்களைக் கொண்டுள்ள காரணத்தால், மாற்றமென்பது நம்மை பொருத்தவரை மகாமாற்றமாகவே இருக்க வேண்டும். இன்னும் மதத்துக்கள் மனிதரைப் பூட்ட நினைக்கும் பிற்போக்குச்சிந்தனைகளை வளரவிட்டோமேயானால் நமது முன்னேற்றம்தான் பாதிக்கப்படும். எனவே, நான்தான் உயர்ந்தவன், நான் தாழ்ந்தவன் என்று நீ ஒதுக்குகிறாய் என்றெல்லாம் பேசுவதை விட்டுவிட்டு, பல்வேறு வரலாற்று காரணங்களால் நாம் அனைவரும் ஒன்றாக வாழ்கின்றோமென்பதை உணர்ந்து ஒருங்கினைந்து செயல்ப வேண்டும். மனிதர் அனைவரும் மனித மதம் என்னும் ஒரே மதத்தை ஏன் பின்பற்றக் கூடாது? அடுத்த மனிதனை வீனே துன்புறுத்தும் எவரும் மதவாதி என்று, ஏன் மனிதன் என்று கூட சொல்லிக்கொள்ளக்கூடாது. வாழ்க பாரதம்! வாழ்க மானுடம்!
This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue
அரவிந்தன் நீலகண்டன்
திரு.ரவி ஸ்ரீனிவாஸின் இட ஒதுக்கீடு குறித்த கட்டுரை மிகவும் தெளிவாகவும் நடுநிலையுடனும் ஒரு
உணர்ச்சிப் பூர்வமான பிரச்சனையை அணுகியிருந்தது. குறிப்பாக இப்பிரச்சனை குறித்த சட்ட
நிலைபாடுகளை அறிந்து கொள்ள மிகவும் உதவியாக இருந்தது. கட்டுரையாளருக்கும் திண்ணைக்கும்
நன்றி.
அரவிந்தன் நீலகண்டன்
This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue
ஜடாயு
அன்புள்ள ஆசிரியருக்கு,
சமீப காலமாக ‘திண்ணை’யில் முஸ்லீம்கள் மற்றும் இஸ்லாம் பற்றிய பகுதிகள் தேவைக்கு அதிகமான அளவு வந்து கொண்டிருக்கின்றன. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மற்றும் திண்ணை வாசகர்கள் இவர்களில் எத்தனை பேர் முஸ்லிம்கள்? எத்தனை பேர் இந்த விஷயங்களோடு தொடர்புடையவர்கள் அல்லது இவற்றை அறிந்து கொள்ள விரும்புபவர்கள்?? திண்ணை ஆசிரியர் குழு இதை எண்ணிப் பார்க்க வேண்டும். உலகளாவிய இஸ்லாமிய தீவிரவாதம் பாரதம் உட்பட பல நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில் தான் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் இஸ்லாம் முற்றும் அதைப் பின்பற்றுபவர்களது வழிமுறைகள் பற்றி மண்டையை உடைத்துக் கொண்டு ஆராய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதே அன்றி, அறிவு அல்லது ஆன்மீகத் தேடலுக்காகவோ அல்லது இலக்கிய, சமூக, சமய நோக்கிலோ இஸ்லாம் பற்றிய விவாதங்களும் விமரிசனங்களும் நடைபெறுவதும் இல்லை, அதற்கான சாத்தியங்களை சிறிதும் சகிப்புத்தன்மையற்ற இஸ்லாமியக் குழுக்கள் (‘அறிவு ஜீவிகள்’ உட்பட) உருவாக்கவும் இல்லை. கார்டூன் வரைந்தவன் கழுத்துக்கே கத்தி வரும் கதியில் தான் இஸ்லாம் பற்றிய கருத்துக்கள் வெளியிடப் படுகின்றன.
இந்நிலையில், திண்ணையில் வெளியாகும் இஸ்லாம் பற்றிய எல்லா சமாசாரங்களும், பிரசார நோக்கிலேயே எழுதப்படுகின்றன. தீவிரவாத்தை நியாயப் படுத்துதல், எல்லா விமரிசனங்களுக்கும் ஏகப்பட்ட அரபு மொழி மற்றும் இஸ்லாமிய சமய வழக்கிலுள்ள சொற்களைப் போட்டு விளக்கங்கள், அல்லது இஸ்லாமிய உட்பிரிவுகள் பற்றிய சண்டைகள் – ஒரு தமிழ் வாசகனுக்கு இதனால் என்ன பயன்?? ஒவ்வொரு திண்ணை இதழிலும் இந்த இஸ்லாமியக் கருத்துத் தீவிரவாதத்திற்கு ஏன் இடமளிக்க வேண்டும்? சில மதவெறிக் குழுக்கள் தங்களது கருத்துக்களைப் பரப்பிட திண்ணையைப் பயன்படுத்துகின்றனவோ என்ற சந்தேகம் தான் ஏற்படுகிறது. திண்ணை ஆசிரியர் குழு இதனைப் பரிசீலித்து , பெரும்பாலான தமிழ் அன்பர்களுக்கும் தேவையான, பயனுள்ள, சுவை கூட்டுகின்ற விஷயங்களையே வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue
விஸ்வாமித்ரா
ம வெங்கடேசன் அவர்கள் எழுதிய ஈ வெ ரா ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்ற புத்தகம் குறித்து இங்கு பல கட்டுரைகள் எழுதியிருந்தேன். அதைப் படித்து விட்டுச் சென்று அந்த நூலினைப் பற்றிய தனது எண்ணங்களை எழுதியுள்ளார் கற்பகவிநாயகம். திண்ணையில் விளம்பரம் வந்திருந்தது என்று ஏதோ திண்ணையே விளம்பரப் படுத்தியது போல அரைகுறையாய் புரிந்து கொண்டு எழுதியுள்ளார். திண்ணைக்கு நான் அனுப்பிய புத்தக அறிமுகத்தை திண்ணை வெளியிட்டிருந்தது. மற்றபடி திண்ணை அந்த புத்தகத்திற்கு எவ்வித விளம்பரமும் செய்யவில்லை .
முதலில், திண்ணையில் வந்த அறிமுகத்தைப் படித்து விட்டு புத்தகத்தினை வாங்கிப் படித்தமைக்கு நன்றி, புத்தகத்தைப் பற்றி ஒரு எதிர்மறையான விமர்சனத்தினை எழுதியமைக்கு அதை விட நன்றி. கற்பகவிநாயம் போன்ற நபர்கள் ஒரு புத்தகத்தை வெறுக்கிறார் என்றால், இழிவாக எழுதுகிறார் என்றால் அப்படிப்பட்டப் புத்தகத்தின் தரம் குறித்தும், அது சொல்லும் உண்மைகள் குறித்தும், மேன்மை குறித்தும் சிந்திக்கும் திறன் உள்ள அனைவரும் இந்நேரம் புரிந்து கொண்டிருப்பார்கள், கற்பகவிநாயகம் என்பவரின் தாரதரம் என்ன? யோக்கியதாம்சம் என்ன? ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதும், அபாண்டமாக பழிகளை அள்ளி வீசுவதும், மாட்டிக் கொண்டால் மன்னிப்பு நாடகம் ஆடுவதும்தானே? அப்படிப் பட்டவர் ஈ வெ ரா சம்பந்தப் பட்ட ஒரு நேர்மையான விமர்சினத்தினை அணுகியிருக்கும் லட்சணம்தான் அந்த விமர்சனம். இந்துக்கள் மீதும், தேசீயவாதிகள் மீதும், இவர் கக்கும் விஷம் எப்படிப்பட்டது என்பதையெல்லாம் அறிந்தவர்கள் இவர் எழுதும் விமர்சனம் என்ன நோக்கில் இருக்கும் என்பதை தாரளாமாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். மா வெ அவர்களின் புத்தகத்திற்கு இதை விட ஒரு விளம்பரம் யாராலும் அளிக்க இயலாது. மலர் மன்னனை முதலில் புளுகர் என்று ஏசி விட்டு தக்க ஆதரம் அளித்தவுடன் மன்னிப்புக் கேட்டவர் இந்த கற்பக விநாயகம். பாரதிக்கு மட்டும் அல்ல ஆயிரக்கணக்கான பிராமணக் குடும்பங்களுக்கு சுடலை மாடனும், சாஸ்தாவும் குலதெய்வங்களாக இருக்கிறார்கள் என்று ஒருவர் ஊர் பெயர், குலம் கோத்திரம் எல்லாம் எடுத்து ஆதாரபூர்வமாகக் கூறிய பின்னரும் இவரது அபாண்டங்களும், புளுகு மூட்டைகளும் இன்னும் திண்ணையில் தீர்ந்த பாடில்லை. அமெரிக்காவில் சென்ஸஸ் போர்டில் போய் ஜாதி வாரியாகக் கணக்கெடுத்தவர் போல பிராமணர்கள் மட்டுமே குடியுரிமை வாங்குகிறார்கள் என்று கூசாமல் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுபவர் சொல்லுகிறார் ம வெ யின் நூல் நகைப்புக்கிடமாக இருக்கிறதாம். இவரின் எழுத்துக்களைப் பற்றியும் அதிகமாகச் சொல்லுவதற்கு ஏதும் இல்லை. நான் இதற்கு முன் இங்கு உள்ளிட்டக் கட்டுரைகளைப் படித்தாலே ஈ வெ ரா பற்றி ஒரு தெளீவான அறிமுகம் கிட்டும். க வி எடுத்து விட்ட ஒரு சில வரிகளாக இல்லாமல் முழு பக்கங்களையே நான் இங்கு தட்டச்சி உள்ளிட்டிருக்கிறேன், புத்தகத்தைப் படிக்க இயலாத வாசகர்கள், புத்தகத்தின் பல பக்கங்கள் முழுமையாக திண்ணையில் வந்துள்ளதை இவருக்குப் பதிலாக எடுத்துக் கொண்டு படிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
நான் ஏற்கனவே அந்தப் புத்தகம் பற்றிக் கூற வந்ததையெல்லாம் திண்ணையில் பல கட்டுரைகளில் கூறி விட்டேன். ம வெ மட்டும் அல்ல இன்னும் ம பொ சியும், ஜீவாவும், ஈ வெ ராவின் இன வெறி அரசியலை தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்கள் என்பதையும், ஈ வெ ராவின் முரண்பாடுகள் பலவற்றையும், பித்தலாட்டங்கள் பலவற்றையும் புத்தகத்தின் பல பக்கங்களில் இருந்து நான் இங்கு ஏற்கனவே எடுத்து இட்டுள்ளேன். ஈ வெ ரா ஒரு முரண்பாட்டாளாரா, முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் ஒரு சந்தர்ப்பவாதியா இல்லையா, தமிழ் மொழிக்கு விரோதியா இல்லையா, எதையுமே ஆழ்ந்து படித்தறியாத ஒரு போலி அறிவுஜீவியா இல்லையா என்பதையெல்லாம் நான் இங்கு ஏற்கனவே இட்டுள்ள பகுதிகளைப் படித்தாலே சுய அறிவுள்ள எவருக்கும் விளங்கும். தலித் பெண்கள் ஜாக்கெட் அணிவதால்தான் துணி விலை ஏறி விட்டதாகக் இழிவாக பேசிய ஈ வெ ராவின் அடிவருடிகளிடமிருந்து வெறுப்பையும், குரோதத்தையும், விஷத்தையும், வெறியையும் தவிர வேறு என்னவிதமான எதிர்வினையை எதிர் பார்க்க இயலும் ? க வி போன்றோரின் சாணி அடித்தல் அந்தப் புத்தகத்திற்கு மற்றுமொரு அருமையான மதிப்புரையாக அமைந்து விட்டது. ஆம், பிதற்றல்களையும் , பித்தலாட்டங்களையும், அபத்தங்களையும் சீர்த்திருத்தம் என்று எண்ணிக் கொண்டு திரிபவர்களுக்கு மா வெங்கடேசன் எழுதிய புத்தகத்தினைப் படித்தால் அட இப்படி ஒரு மனிதரையா பெரியார் என்று அழைக்கிறார்கள்,
சீர்திருத்தவாதி என்று அழைக்கிறார்கள் என்று ஈ வெ ராத் தொண்டர்களின் அறியாமையை, பேதலித்த நிலையைக் கண்டு யாருக்குமே சிரிக்கத்தான் தோன்றும். கற்பக விநாயகம் தானாக சிரித்துக் கொண்டதில் ஏதும் வியப்பில்லைதான்.
****
அடுத்து பரிமளம் என்பவர் எனக்கு அன்பாக ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். திண்ணையின் கடுமையான வசவுகள் என்று நான் எழுதியதற்காக ஆதாரம் கேட்டு. ஐயா பரிமளம் அவர்களே, உங்கள் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு படியுங்கள். நான் என்னை எதிர்த்து ஆபாச வசவுகள் திண்ணையில் வந்தது என்று எங்கு கூறியுள்ளேன் என்று தயவு செய்து கூற முடியுமா? “கடுமையான வசவுகளுடன் எதிர்கொண்ட நண்பர்களுக்கும்” எழுதியுள்ளேன், திண்ணையில் என்று குறிப்பாக எங்கேனும் சொல்லியுள்ளேனா என்ன? எனக்கு வந்தது, நான் எதிர்கொண்டேன் என்றால் என் தனி மடலுக்கு வந்தது என்று அர்த்தம். திண்ணைக்கும் வந்திருக்கலாம் அவர்கள் அவற்றை வெளியிடாமல் தவிர்த்திருக்கலாம். அது பற்றி எனக்குத் தெரியாது. எனக்கு மிரட்டல்கள் வந்தன என்றேன். எனக்கு ஆபாசமான, படிக்கக் கூசும், கடுமையான வசவுகள் வந்தன என்றேன். உடனே துள்ளிக் குதித்து “ஆதாரம் எங்கே” என்று கேட்கிறீர்கள்? நான் நீங்கள் எழுதிய வசவுகள் என்று உங்களைக் குறிப்பிட்டுக் கூறினேனா? உங்களுக்கு ஏன் உறுத்துகிறது? ஏன் என் அப்பன் குதிருக்குள் இல்லை என்று முந்திரிக் கொட்டையாக வந்து கேள்வி எழுப்புகிறீர்கள்? கொஞ்சம் சாதாரணத் தமிழில் எழுதுவதைப் புரிந்து கொள்ளவும் முயலுங்கள் ஐயா. உங்களுக்கு அடிப்படைத் தமிழைப் புரிந்து கொள்வதில் கூடப் பிரச்சினை இருக்கிறது என்பதை நான் ஏற்கனவே அறிவேன், திண்ணை வாசகர்களுக்கும் உங்களுக்குள்ள பிரச்சினைகளைப் பற்றி விலாவாரியாக ஏற்கனவே விளக்கியுள்ளேன். தயவு செய்து தமிழ் எழுதப் படிக்க ஒழுங்காகக் கற்றுக் கொண்ட பின் திண்ணையில் எழுத வாருங்கள். அவசரம் ஒன்றும் இல்லை.
ஐயா, ஈ வெ ரா குறித்து நான் எழுதியதால் எனக்கு தனி அஞ்சலில் படிக்கக் கூசும், மிரட்டல் கடிதங்கள் வந்தது என்றுதான் நான் குறிப்பிட்டேன் என்பதை அன்பாகவே தெரிவித்துக் கொள்கிறேன். அப்படி என் பெட்டியில் இடப்பட்ட மலக்குப்பைகளை, கழிவுகளை, வீட்டு வாசலில் இழி பிறப்புக்கள் வந்து கழிந்து விட்டுச் செல்லும் மலத்தினை என்ன செய்வோமோ அதைச் செய்தேன் என்பதை உங்களுக்கு நான் கூறத் தேவையில்லை என்று நினைக்கிறேன். விளக்கம் போதுமா? இன்னும் ஏதேனும் ஆதாரம் வேண்டுமா? ஒரு வேளை அதற்கும் ஆதாரம் கேட்பீர்களோ? திண்ணைக்கு நான் வசவுகள் எழுதினேன் என்றும் அதைத்தான் அழித்தார்கள் என்று நீங்களாக அனுமானித்துக் கொண்டால், காமாலைக் கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் இருக்கும் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. திண்ணை ஒரு வாக்கியத்தை நீக்க பல காரணங்கள் இருக்கக் கூடும் என்பதை அவர்களே உங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். புரிந்ததோ என்னவோ? அடுத்த முறை “அன்பான வேண்டுகோள்” விடு முன் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை ஒரு முறைக்குப் பத்து முறை படித்து விட்டு, அர்த்தம் புரியவில்லையென்றால் யாரிடமாவது கேட்டுத் தெளிவு பெற்று விட்டு என்னிடம் வரவும் என்பதை மட்டும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
This entry is part [part not set] of 34 in the series 20060428_Issue
புதியமாதவி
திண்ணை ஆசிரியருக்கு,
வணக்கம்.
பெரியவர் மலர்மன்னன் கட்டுரை “ஆத்மா, பரமாத்மா, மகாத்மா..2′ இன்று வாசித்தேன்
மீண்டும். பல்வேறு புத்தகங்களில் நாம் வாசித்த செய்திகளை ஒருசேர கோர்வையாக
தந்திருக்கிறார். மிகச் சிறந்தப் பதிவு.
This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue
சுகுமாரன்
எடின்பரோ குறிப்புகளில் சின்னதாக ஒட்டுவேலை செய்ய உத்தேசம்.
தேவராஜன் மாஸ்டரும் ஓ.என்.வியும் இணைந்து நாடக கானங்களை சராசரி
மலையாளியின் தேசிய கீதங்களாக மாற்றியது ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும்.
எழுபதுகளில் இரண்டு மாஸ்டர்களும் சினிமாவில் சூப்பர் தாரகைகளாகி விட்டனர்.அப்புறம்
இரண்டு நட்சத்திரங்களும் டூ விட்டுக்கொண்டு விட வயலார்-தேவராஜன் என்றும்
ஓ.என்.வி.-சலீல் சௌத்ரி என்றும் இரண்டு மெல்லிசைப் பத்ததிகள் உருவாயின.
இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் தேவராஜன் மாஸ்டர் எழுதப்பட்ட கவிதைகளுக்குத்
தான் இசையமைத்தார் என்பதும் சலீல்தாவின் மெட்டுகளுக்குப் பாந்தமான வரிகளை
ஓ.என்.வி உருவாக்கினார் என்பதும்.
தேவராஜன் மாஸ்டரின் இசையில் மிகக் குறைவாகப் பாடியவர் எஸ்.ஜானகி.
ஜானகியின் குரல் கள்ளக்குரல் என்பது மாஸ்டரின் அபிப்பிராயம்.அவருடைய
ஆஸ்தான காயிக தமிழ்ப் பெண்ணான பி.மாதுரி.அடுத்து அவருடைய ·பேவரிட்
பி.சுசீலா.
கமல்ஹாசனை முதலில் பின்னணி பாடவைத்தவரும் தேவராஜன் மாஸ்டர்தான்.
‘அந்தரங்கம்’ படத்தில் இடம்பெறும் ‘ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்கவந்தாள்’
என்ற பாடல்தான் கமல்ஹாசனைப் பாடகராக்கியது.
கம்யூனிஸ்ட் சக யாத்திரிகரும் நாத்திகருமான தேவராஜனின் இசைதான் சபரிமலை
ஐயப்பனை தினம்தோறும் தாலாட்டுகிறது. சம்பிரதாயமான முறையில் பாடப்பட்டு
வந்த ஹரிவராசனம் கீர்த்தனம் இப்போது பாடப்படுவது தேவராஜன் மாஸ்டர்
சிட்டைப்படுத்திய மத்யமாவதி ராகத்தில் யேசுதாஸின் குரலில்.
எம்.எஸ்.திருப்பூணித்துறை பற்றிய குறிப்பில் ‘பெருந்தச்சன்’படத்தின் இயக்குநர்
ஹரிஹரன் என்று குறிப்பிடப்பட்டிருப்பது சரியல்ல.அது அஜயன் இயக்கிய படம்.
அஜயனின் அப்பாவும் கேரளத்தின் கலாச்சார அரங்கில் பெரும் நட்சத்திரமாக
ஜொலித்தவர்.நாடகம் போட்டு ‘நிங்ஙள் என்னெ கம்யூனிஸ்டாக்கி’ என்று
பலரையும் சிவக்கச் செய்தவர். பெயர்- தோப்பில் பாசி.
This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue
மு. சுந்தரமூர்த்தி
1. நினைவிலிருந்ததை வைத்து நான் எழுதியதை சரிபார்த்துக் கொள்ள மீண்டும் மலர் மன்னனின் கடிதங்களைப் படித்தேன்.
“திண்ணை’யில் வெளிவந்த என் எழுத்துகளைப் படித்துவிட்டு நான் தொடர்ந்து எழுத வேண்டும் எனக் கேட்டு தினமும் மெயில்கள் வந்துகொண்டிருப்பதாலும், கோ. ராஜாராம் கூட அவ்வாறே விரும்புவதாகத் தெரிவித்திருப்பதாலும் தொடர்ந்து எழுதும் சபலந்தட்டியுள்ளது என ஒப்புக் கொள்கிறேன்.”
— “நமது பத்திரிகை உலகமும் அதில் எனது சொற்ப ஆயுளும்”, மலர் மன்னன், திண்ணை, Dec 15 Thursday 2005
“அதே போலத் திண்ணையின் கோ. ராஜாராம், வெங்கட் சாமினாதன் மற்றும் பலர் மூலமாக இப்போது வரும் வற்புறுத்தல்கள் இன்னும் சில நாட்கள் இவ்வுடலைச் சுமந்திருக்க வைப்பதற்கான சமிக்ஞையா?”
“சுயசரிதை மாதிரி எழுதவேண்டும் என்பது ராஜாராம் விருப்பம்.”
— “சிதறும் நினைவுகள்”, மலர் மன்னன், திண்ணை, Dec 22 Thursday 2005
இவற்றை வைத்து “மலர் மன்னனை திண்ணையில் எழுதவேண்டும் என்று அழைத்து வந்தவர் திண்ணையின் முதன்மை ஆசிரியர் கோ. ராஜாராம்” என்று நான் குறிப்பிட்டதில் “அழைத்து வந்தவர்” என்பது சற்று மிகைப்படுத்தப்பட்ட கூற்று. அதை திருத்திக்கொள்கிறேன்.
மற்றபடி “ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தைப் பற்றி மலர் மன்னன் எழுதியதற்கு எழுதப்பட்ட ஓர் எதிர்வினையைத் தவிர, அவரை எழுதப் பணித்த ராஜாராமோ..” என்று எழுதியதிலோ, “… தொடர்ந்து எழுதினால் திண்ணை ஆசிரியர் கோ. ராஜாராமும், ….. மகிழ்ச்சியடைவார்கள்” என்று எழுதியதிலோ மிகைப்படுத்தல் எதுவுமில்லை என்பது இப்போதும் என் புரிதல். இருப்பினும், இவையாவும் நான் “வாரி வழங்கிய குத்துக்களாக” ராஜாராமுக்கும் தோன்றினால் என்னுடைய உளப்பூர்வமான வருத்தங்கள்.
2. “திண்ணை ஆசிரியர் குழு என்ன செய்யும் என்று சுந்தரமூர்த்தியிடம் தேடிச் சென்று எதுவும் நாங்கள் சொல்லியதில்லை” என்று தெளிவுபடுத்தியதற்கு நன்றி (http://www.thinnai.com/?module=displaystory&story_id=806031714&format=html). இல்லையெனில் வாசகர்கள் திண்ணை ஆசிரியர் குழுவிடம் எனக்குள்ள செல்வாக்கை மிகையாக மதிப்பிடும் விபரீதம் நேரலாம். கூடவே “ஆதலால் இது நகைச்சுவையாய்த் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்” என்று சரியாக புரிந்துகொண்டு பதிலுக்கு நகைச்சுவையுடன் விளக்கம் கொடுத்திருப்பதற்கும் நன்றி.
3. திண்ணை ஆசிரியர் குழு “சில சமயம் அப்படி எழுதுபவர்கள் தமிழ் விவாதத்தளத்தில் பொதுவாய் உள்ள ஒரு நசிவுப் போக்கைப் பிரதிபலிக்கும்போது அந்தப் போக்குகளும் விவாதிக்கப்படவேண்டும் என்பதால் அந்தப் பகுதிகளை நீக்காமலும் இருப்பதுண்டு” என்று எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள பி.கே. சிவகுமார் “எவருடைய நசிவுப் போக்கையோ திண்ணை விவாதிக்க வேண்டும் என்பதற்காக சம்பந்தம் இல்லாத இன்னொருவர் ஏன் பாதிக்கப்பட வேண்டும்” என்று கேட்டும், “சுந்தரமூர்த்தி அல்லது மற்றவர்களின் நசிவுப் போக்கை திண்ணை ஆசிரியர்கள் விவாதிக்க விரும்பினால், ஒன்று திண்ணை ஆசிரியர்கள் அதைப் பற்றி வெளிப்படையாக எழுதலாம்” ஒரு நசிவுப்போக்கை அடையாளம் காட்டியும் இருக்கிறார்.
“தமிழ் விவாதத்தளத்தில் உள்ள அந்தப்(நசிவுப்) போக்குகளும் விவாதிக்கப்படவேண்டும்” என்ற உங்கள் அக்கறை ஒரு பக்கம், அதற்காக “இன்னொருவர் ஏன் பாதிக்கப்படவேண்டும்” என்று உங்கள் நண்பரின் கோபத்திற்குள்ளாகியிருப்பது இன்னொரு பக்கம் என்ற தர்மசங்கடமான நிலை. இனி இதுபோன்ற தர்மசங்கடம் என்னால் ஏற்படாது. ஆனால் இதற்குமுன் பிரசுரிக்கப்பட்டவற்றை என்னால் ஒன்றும் செய்ய இயலாது. அவற்றை எந்த காரணத்திற்காக வெளியிட்டிருந்தாலும் அவற்றை நீக்கி ஆக்க சக்திகளின் கோபத்திலிருந்து மீள்வதும், அப்படியே இருக்கவிடுவதும் (அல்லது “நசிவுப் போக்குகள்” என்று தனிப்பகுதி ஆரம்பித்து அங்காவது போட்டுவைக்கலாம்) உங்கள் விருப்பம். உங்கள் வசதிக்காக சுட்டிகளை தொகுத்தளித்திருக்கிறேன்.
அரசியலும், சமூகமும் பகுதி
http://www.thinnai.com/?module=displaystory&story_id=203091810&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=203122515&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20404153&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20408272&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20509094&format=html
அறிவியலும், தொழில்நுட்பமும் பகுதி
http://www.thinnai.com/?module=displaystory&story_id=40310162&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=40402191&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=40408271&format=html
இலக்கியம், திரைப்படம்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60602104&format=html
—————————————————
msundaramoorthy@bellsouth.net
(நசிவுப்போக்குகள் என்ற குறிப்பு சுந்தரமூர்த்தியின் எல்லாப் படைப்புகள் பற்றியது அல்ல. அப்படிப் பொருள் தந்த வாசகங்கள் ஏதும் எங்கும் இல்லை. அப்படி ஏதும் குறிப்பு இருந்தால் வருந்துகிறோம். போக்குகள் என்று குறிப்பிட்டதே, இது தனிநபர் சார்ந்தது அல்ல என்பதனால் தான். திண்ணை தொடர்ந்து மாறுபட்ட கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் தளமாகவே இயங்கும். இதில் தர்மசங்கடம் கொள்ளும் எந்த நிலையும் திண்ணை குழுவினருக்கு ஏற்படுவதில்லை. தொடர்ந்து மலர் மன்னன், மு சுந்தரமூர்த்தி, கற்பக விநாயகம், பி கே சிவகுமார் மற்றும் பலரும் திண்ணைக்குப் பங்களிக்கும் வகையில் திண்ணை இயங்கவேண்டும் என்பதே திண்ணையின் விருப்பம். மாறுபட்ட கருத்துகளின் வெளிப்பாடும், விவாதமும் தான் தமிழில் சர்ச்சைகளின் தரத்தை உயர்த்தி, ஜனநாயகப் பண்புகளை வளர்க்கும் என்பது திண்ணையின் நம்பிக்கை.
திண்ணையில் வெளியான பழைய இணைப்புகளை நீக்குவது சாத்தியமில்லை.- திண்ணை குழு)
This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue
அரவிந்தன் நீலகண்டன்
அவுரங்கசீப்பின் ஆட்சிக்கும், ஹிட்லரின் யூத வெறுப்புக்கும் வக்காலத்து வாங்கியுள்ள ஹமீது ஜா·பர் எனக்கும் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். நன்றி ஜா·பர். சகோதரர் ஜா·பர் நிச்சயமாக எனது அவுரங்கசீப் குறித்த கட்டுரையை மீண்டும் ஒருமுறை வாசிக்கட்டும். அதில் எந்த இடத்தில் நான் எலியட் & டவ்ஸனை பயன்படுத்தியுள்ளேன் என மீண்டும் ஒருமுறை சரி பார்க்கட்டும். ஜா·பர் போன்றவர்கள் எலியட் & டவ்ஸனை பயன்படுத்தினால் ‘ஆங்கிலேய பிரித்தாளும் சூழ்ச்சி’ எனக் கூறுவார்கள் என்பதற்காகவே சிறிதே கஷ்டப்பட்டு இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் கூறியவற்றினை இஸ்லாமிய வரலாற்றறிஞர்கள் (ஆம் ஜாப்பர், வரலாற்றறிஞர்கள்) மொழிபெயர்த்தவற்றைத் தேடிக்கண்டுபிடித்து அளித்திருந்தேன். உதாரணமாக, நான் பயன்படுத்திய ·பதுகத்-இ-அலம்கிரி தன்ஸீம் அகமதுவால் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த நூலின் 82 ஆவது பக்கத்தில் உள்ள விசயத்தை மீண்டும் ஜா·பருக்கு நினைவூட்டலாமா? “பேரரசர் அப்துல் நபி கானுக்கு மதுராவில் உள்ள ஒவ்வொரு கோவிலையும் உடைத்து அங்கே பெரிய மசூதிகளை எழுப்ப உத்தரவிட்டார்.” அல்லது ஜிஸியா விவகாரத்தையும் சத்நாமிகள் புரட்சி மற்றும் அவர்களது படுகொலை விவகாரத்தையும் எடுத்துக்கொள்ளலாம்.
1.ஜிஸியா அதீதமான அளவில் கொடுமையாக வசூலிக்கப்பட்டது.
2.இது இராணுவ அதிகாரிகளால் வசூலிக்கப்பட்டது.
3.இதற்கு எதிர்ப்பு காட்டிய ஹிந்துக்கள் அவுரங்கசீப்பின் நேரடி ஆணையின் பெயரில் ஆனைகளால் மிதிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
இதற்கான ஆதாரமாக நான் காட்டுவது வெள்ளைக்காரன் எழுதிய வரலாற்றினை இல்லை. வரலாற்றாசிரியரான கவாஜா மிரின் மகனும் வரலாற்றாசிரியருமான காபி கான் எனப்படும் முகமது காசிம் எனும் காசில் அலி கான் எழுதிய முந்தகாபு-இல்-லுபப் முகமது ஷாஹி (எனும்) தாரிக்-இ-காபி கான் எனும் நூலை. இந்நூலின் மொழிபெயர்ப்பு எலியட் & டவ்ஸனால் செய்யப்பட்டது உள்ளது. ஆனால் நான் பயன்படுத்திய மொழிபெயர்ப்பு எஸ்.மொய்னுல் ஹக் எனும் இஸ்லாமியரால் செய்யப்பட்டது. அதனை வெளியிட்டவர்கள் கராச்சியின் Pakistan Historical Society அமைப்பினர். வருடம் 1975. ஹிந்துக்கள் சாத்தியப்படும் போதெல்லாம் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு நான் காட்டியுள்ள ஆதாரம் முகமது யாசின் எழுதிய A Social History of Islamic India எனும் நூல். ஆக, முகமது யாசினும், தன்ஸீம் அகமதுவும், மொய்னூல் ஹக்கும் எழுதிய மற்றும் மொழிபெயர்த்த நூல்களை முன்வைக்கிறேன். ஆனால் ஜா·பருக்கோ எலியட் & டவ்ஸனாக தெரிகிறது. இது மட்டுமல்ல சீக்கிய ஆவணங்கள் கூறும் அவுரங்கசீப்பின் கொடுமைகளை நான் இன்னமும் பட்டியலிடவில்லை. குரு தேஜ்பகதூரின் சீடர்களுக்கு செய்யப்பட்ட சித்திரவதைகள், குரு தேஜ்பகதூரினை கொன்றது மற்றும், குருகோவிந்த சிங்கின் இரு பாலகர்களை மதம் மாற நிர்ப்பந்தப்படுத்தி அவர்களை உயிருடன் சமாதி வைத்த காட்டுமிராண்டித்தனம் – இவை அனைத்தையும் செய்த கொடுங்கோலன்தான் அவுரங்கசீப். இத்தகைய ஒருவன் சீக்கிய குருத்வாராக்களுக்கு மானியம் வழங்கினான் என்பது எத்தகைய கொடூரமான நகைசுவை. ஹிட்லர் யூத வழிபாட்டுத்தலங்களுக்கு மானியம் வழங்கினான் என்பது போல.
மேலும் ஜா·பரினால் கூறப்படும் பர்மான்கள் அவுரங்கசீப்பின் நேரடி உத்தரவின் கீழ் வழங்கப்பட்டவை அல்ல. தப்பிப்பிழைத்தவை என்பது நான் கூறும் வாதம். மாசிர்-இ-லம்கிரி, அக்பரத், ·பாத்தியா-இ-இப்ரியா, கலிமத்-இ-அவுரங்கசீப், மரகத்-இ-அபுல் ஹ¤சைன், ·பதுகத்-இ-அலம்கிரி, கன்ஸ¤ல் மக்பஸ், முந்திகபு லபப் கிய அனைத்துமே அவுரங்கசீப் குறித்த மொகலாய வரலாற்று ஆவணங்கள். இவை ஒவ்வொன்றிலும் அவுரங்கசீப் கோவில்களை இடிக்க அளித்த உத்தரவுகள் மலிந்து கிடக்கின்றன. ஆனால் இவை எதிலுமே அவுரங்கசீப்பால் கோவில்களுக்கு மானியம் அளிக்கப்பட்டதாக இல்லை. மாறாக பாண்டே தாம் கண்டதாக கூறிய செய்தி மட்டுமே உள்ளது. ஏன் அத்தகைய மானியங்கள் அளிக்க பிறப்பித்த அரசாணை தொகுப்பு கூட வெளியிடப்படவில்லை. மாறாக, இவர் பார்த்தார், அவர் கேட்டார் என்கிற ரீதியிலான செய்திகள் மாத்திரமே உள்ளன. சரி நான் மடையன், அறிவில்லாதவன், வரலாற்றாசிரியர்கள் கூறியதை அப்படியே ஒப்புவிப்பவன் என்றே வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஜா·பர் அவ்வாறல்ல. அவர் வரலாற்றாசிரியர்களை கடந்து வரலாற்றிஞர்களை எல்லாம் கரைத்து குடித்து, மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்கிற நிலையில் உள்ளவர். ஹிட்லர் யூதர்களை வெறுத்ததற்கு காரணம் யூதர்கள் ஜெர்மானிய பொருளாதாரத்தை நாசமாக்கியது என்கிற அளவில் ஆழமான வரலாற்றறிவு உள்ளவர். நிச்சயமாக தலிபான்கள் ஹிந்துக்களை அடையாளம் தெரியும் படியான உடையணிய சொன்னதற்கு பின்னணியில் உள்ள நியாயமான காரணத்தைக் கூட அவர் நமக்கு சொல்லுவார். எனவே அவுரங்கசீப் கோவிலுக்கு அளித்த பர்மானை தேதி சகிதம், வாக்கியசுத்தமாக முன்வைத்தால் அது கிடைக்கப்பட்ட ஆவண ஆதாரத்தையும் முன்வைத்தால் சிறிதே என்னைப் போன்றவர்கள் பயனடைவார்கள். உதாரணமாக, சாஹி முஸ்தாத் கான் எழுதிய “மா ஸிர்-இ-ஆலம்கிரி” கூறுவது போல: “இசுலாமிய ஆண்டு 1080 இன் இந்த ரம்ஸான் அற்புதங்களின் காலமாக இருந்தது. நீதியை நிலைநாட்டுபவரும், அநீதியை அழிப்பவருமான பேரரசர் மதுராவில் இருந்த புகழ்பெற்ற கேசவநாதர் கோவிலை உடைத்தழிக்க உத்தரவிட்டார். விரைவில் அந்த பொய்மைதலம் அழித்தொழிக்கப்பட்டது. அந்த இடத்தில் ஒரு உன்னதமான மசூதியை பெரும் பொருட்செலவில் எழுப்பினார்… .அக்கோவிலில் இருந்த விக்கிரகங்கள் ஆக்ராவுக்கு கொண்டு வரப்பட்டு பேகம் சாகிப் மசூதியின் படிகளில், இஸ்லாமியர்களின் கால்களால் தினந்தோறும் மிதிபடும் படி போடப்பட்டன.” இதே மாதிரியான தெளிவுடன் “பேரரசர் அவுரங்கசீப் இன்ன ஹிந்து கோவிலுக்கு இத்தனை ரூபாய் அல்லது இவ்வளவு நிலம் மானியம் வழங்க உத்தரவிட்டார்” என்கிற மாதிரியாக ஒரு கட்டளையை மேல் கூறிய நூல்களிலிருந்து காட்டட்டும். அதன் பின்னர் ஜிஸியாவின் உண்மைத்தன்மை மற்றும் ஸக்கத் குறித்து விரைவில் விரிவாக கூறுகிறேன்.
————————————————-
aravindan.neelakandan@gmail.com
This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue
இஸ்ஸத்
அன்புள்ள ஆசிரியருக்கு,
உங்கள் வலை பத்திரிகையை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். படைப்புகள் மிகவும் சிறப்பாகவுள்ளன.
குறிப்பாக இஸ்லாமிய படைப்பாளிகளின் அறிவுபூர்வமான கட்டுரைகள் நம்பிக்கை கொடுப்பதாக இருக்கிறது. இருப்பினும் இஸ்லாமிய படைப்பாளிகள் இன்றைய இந்திய முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் தலையாய பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை விட்டு விட்டு மதத்துக்குள் உள்ள சிறிய நம்பிக்கை சம்பந்தமான பிரச்சினைகள் பற்றியே விவாதம் புரிகின்றனர்.
இந்திய முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் தலையாய பிரச்னைகள் என நான் கருதுபவைகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்:
1.மதக்கலவரங்களில் முஸ்லீம்கள் கொல்லப்படுவது சொத்துக்கள் அழிக்கப்படுவது
2.மதவெறி இயக்கங்களின் சிறுபான்மை துவேசம்.
3.வறுமை
4.வேலைஇல்லாமை
5.சரியான அரசியல் தலைமை, வழிகாட்டுதல் இல்லாமை
6.ஊடகங்களில் எல்லாமுஸ்லீம்களும் தீவிரவாதிகள் போல் சித்தரிக்கப்படுவது
7.அரசு மற்றும் காவல்து¨ற் அடக்குமுறைகள்
8.கல்வியில் பின்தங்கியிருப்பது
9. அரசு பணிகளில் போதிய ஒதுக்கீடு இல்லாமை.
10.ஓட்டு அரசியல் கட்சிகளை நம்பி ஏமாறுவது.(குறிப்பாக தமிழகத்தில் தி மு க – அதி மு க )
11. முஸ்லீம்களுக்கென்று சரியான வெகுஜன ஊடகங்கள் இல்லாதிருப்பது.
12.கலாச்சார சீரழிவுகள்
13. மதக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு இஸ்லாமிய இளைய சமுதாயம் தீவிரவாதத்தில் தள்ளப்படுவது.
ஆக இத்தனை வாழ்வாதாரமான பிரச்சினைகள் இந்திய முஸ்லீம்களுக்கு இருக்கும்போது இஸ்லாமிய படைப்பாளிகள் வஹாபி சஹாபி பிரச்சினைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். ஏற்கனவே இந்தப்பிரச்னை காரணமாக குடும்பங்களில் ஆரம்பித்து சமுதாயம் வரை முஸ்லீம்கள் பிளவு பட்டு இருக்கின்றார்கள்.
மதவெறி இயக்கங்கள் வலுப்பெற்று வரும் இன்றய சூழலில் மதசார்பற்ற ஜன நாயக சக்திகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய அடித்தட்டு மக்களை
ஒன்று திரட்டுவதும் பரவும் பாசிச அபாயங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இஸ்லாமிய படைப்பாளிகளின் தலையாய கடமையாக உள்ளது.
This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue
மு.சுந்தரமூர்த்தி
மார்ச் 12 ஆம் தேதி வெளியான திண்ணை இதழில் “சுந்தரமூர்த்திகளுக்கு” பி.கே. சிவகுமார் எழுதியுள்ள கடிதத்தை புரிந்துகொள்ள உதவியாக நான் இதுவரை அவருடன் விவாதித்த-/உரையாடிய-, அவருடைய பெயரைக் குறிப்பிட்டு எழுதிய-, அவருடைய வணிக நிறுவனத்தைக் குறிப்பிட்டு எழுதியவற்றுக்கான சுட்டிகளை காலவரிசைப்படி தொகுத்துள்ளேன்.
Oct 30 Thursday 2003
அண்ணாதுரை குறித்த ஜெயகாந்தனின் பேச்சை சிவகுமார் திண்ணையில் இட்டதையொட்டி நான் எழுதிய முதல் கடிதம்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20310301&format=html
Nov 06 Thursday 2003
என்னுடைய கடிதத்திற்கு சிவகுமார் எழுதிய பதில் கடிதம்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20311061&format=html
Nov 13 Thursday 2003
அவ்விவாதத்தில் என்னுடைய இரண்டாவது/கடைசி கடிதம்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20311131&format=html
May 24 Thursday 2004
கடந்த பாராளுமன்றத் தேர்தல் குறித்த கடிதத்தில் சிவகுமாரின் பெயரை குறிப்பிட்டது
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80405271&format=html
Tuesday, March 15, 2005
என்னுடைய ‘பிரமிள் கவிதைகள்’ பதிவில் சிவகுமார் எழுதிய கருத்தும், என் பதிலும்
http://kumizh.blogspot.com/2005/03/1.html
Monday April 11, 2005
மாலனின் பதிவில் சிவகுமாரைப் பற்றி நான் சொன்ன கருத்து
http://maalans.blogspot.com/2005/04/blog-post_11.html#comments
Sunday, May 22, 2005
தங்கமணி என்பவர் எழுதிய பதிவில் சிவகுமார் பங்கு வகிக்கும் வணிக நிறுவனத்தை புறக்கணிக்கச் சொல்லி நான் எழுதியது
http://ntmani.blogspot.com/2005/05/blog-post_22.html
Thursday, June 02, 2005
சிவகுமாரின் கோ. ராஜாராம் பற்றிய பதிவில் நான் எழுதியது
http://pksivakumar.blogspot.com/2005/06/blog-post.html
Thursday, June 02, 2005
சிவகுமார்-ரவி ஸ்ரீநிவாஸ் இருவரும் விவாதித்த எஸ்.வி.ராஜதுரையின் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய கருத்து தொடர்பான எஸ்.வி.ஆரின் விளக்கத்துடன் நான் எழுதிய பதிவு
http://kumizh.blogspot.com/2005/06/blog-post.html
Monday, June 06, 2005
சிவகுமார்-சங்கரபாண்டி இருவரின் விவாதத்தில் சங்கரபாண்டி சிவகுமாரிடம் மன்னிப்பு கேட்கவைக்கப்பட்டதை-கேட்டதையொட்டி நான் எழுதிய பதிவு
http://kumizh.blogspot.com/2005/06/blog-post_06.html
October 6 Thursday 2005
சின்னக்கருப்பன் எழுதியிருந்த பரிணாமவியல் கட்டுரையையொட்டி நான் எழுதிய கடிதத்தில் சிவகுமார் எழுதியிருந்த P.A. கிருஷ்ணனின் நேர்காணலிருந்து மேற்கோள் காட்டி எழுதியது.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80510061&format=html
October 13 Thursday 2005
மேற்கண்ட கடிதத்திற்கு சின்னக்கருப்பனின் பதில் (சிவகுமாரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது)
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80510142&format=html
October 20 Thursday 2005
சின்னக்கருப்பனின் பதிலுக்கு மறுப்பு/விளக்கம் (சிவகுமாரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது)
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80510214&format=html
Tuesday, January 17, 2006-03-27
குட்டி ரேவதி – எஸ்ரா சர்ச்சையைக் குறித்து தெருத்தொண்டன் என்பவர் எழுதிய பதிவில் நான் தெரிவித்த கருத்தில் சிவகுமாரின் பெயரைக் குறிப்பிட்டது
http://theruththondan.blogspot.com/2006/01/blog-post_17.html
Thursday, January 19, 2006
குட்டி ரேவதி – எஸ்ரா சர்ச்சையைக் குறித்து ரோசாவசந்த் எழுதிய பதிவில் சிவகுமார் பெயரை நான் குறிப்பிட்டதும், அதைத் தொடர்ந்த சிறு உரையாடலும்
http://rozavasanth.blogspot.com/2006_01_15_rozavasanth_archive.html
Tuesday, January 24, 2006
சிவகுமாரின் இலக்கணப்பதிவு ஒன்றில் நான் அளித்த தகவல்
http://pksivakumar.blogspot.com/2006/01/blog-post_24.html
Friday, February 3, 2006
முகமூடி என்பவர் எழுதிய தர்மபுரி மாணவிகள் பேருந்து எரிப்பு பற்றிய பதிவில் சிவகுமாரின் கருத்துக்கு நான் தெரிவித்த மறுகருத்து
http://mugamoodi.blogspot.com/2006/02/blog-post_03.html
Wednesday, February 22, 2006
குட்டி ரேவதி – எஸ்ரா சர்ச்சை தொடர்பாக உயிர்மையின் தலையங்கத்தைக் குறித்த ரோசா வசந்தின் பதிவில் உயிர்மையில் சிவகுமாரின் கருத்து வெளிவந்ததாக நான் அளித்த தகவல்
http://rozavasanth.blogspot.com/2006_02_19_rozavasanth_archive.html
Thursday, February 28 2006
மலர் மன்னனின் காந்தி-கோட்சே கட்டுரைத் தொடர்பாக சிவகுமாரின் கருத்தைக் கேட்டு நான் எழுதிய திண்ணை கடிதம்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80603035&format=html
Saturday March 4, 2006
முகமூடியின் பதிவில் சிவகுமார் என் பெயரைக் குறிப்பிட்டு எழுதியதைத் தொடர்ந்து இருவரும் விவாதித்தது
http://www.blogger.com/comment.g?blogID=12213354&postID=114149627893637132
Thursday, March 16, 2007
சிவகுமார் ‘சுந்தரமூர்த்திகளுக்கு’ திண்ணையில் எழுதியுள்ள கடிதம்
http://www.thinnai.com/le0317063.html
இப்போதைக்கு இவை போதுமென்று நினைக்கிறேன்.
—————————————————–
msundaramoorthy@bellsouth.net
This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue
நக்கீரன்
மரியாதைக்குரிய திரு.அக்னிபுத்திரனின் ‘ஸ்டாலின் முதலமைசரானால் என்ன தப்பு ‘ படித்தேன்.
வைகோ வின் அரசியல் நேர்மை பற்றி மிக கோபப்பட்டிருந்தார். இதுவரை அரசியலில் யாரும் செய்யாததை செய்தது போல் சொல்லியிருக்கிறார்.
ஏதோ கருணாநிதி மிக கொள்கை பற்று உள்ளவர் போலவும், இவர்கள் எப்போதும் கொள்கையை மனதில் கொண்டே கூட்டணி அமைப்பது போலவும் எழுிதியுள்ளார்.
எமெர்ஜென்ஸிக்கு பிறகு இந்திரா காந்தியுடன் கூட்டு அமைத்தது எந்த கொள்கையின் அடிப்படையில். பண்டாரக் கட்சி என முதலில் திட்டி தீர்த்து பின் பி.ஜே.பி. உடன் கூட்டு அமைத்தது எந்த கொள்கையின் அடிப்படையில். முதன் முதலாக கூட்டணி மாறாமல் இரண்டாவது முறையும் ஒரே கூட்டணியில் இருந்து போட்டியிடுவதால் ராமதாஸ் மிகுந்த கொள்கை பற்று உள்ளவரா ? கருணாநிதி செய்தால் அரசியல் சாணக்கியதனம், அதையே வைகோ செய்தால் அரசியல் வேஷம்.
இங்குள்ள அரசியல் தலைவர்கள் எல்லோரையும் விட வைகோ நாணயமானவர் தான். கொள்கை பற்று அதிகம் உள்ளவர் தான்.
மனதை தொட்டு சொல்லுஙகள். ஸ்டாலினும், தயாநிதி மாறனும் கருணாநிதியின் மகன் மற்றும் பேரனாக இல்லாமல் இருந்திருந்தால் தி.மு.க வில் இந்த உயரத்திற்கு வந்திருக்க முடியுமா ?. இல்லை இவர்கள் இருவரை தவிர கட்சியில் மூத்தவர்களோ, அனுபவஸ்தர்களோ, அறிவாளிகளோ இல்லை என்று சொல்ல போகிறீர்களா ?
ஸ்டாலின் சுயமாக முன்னுக்கு வந்தால் இங்கு யாரும் குறை சொல்ல போவதில்லை. யாரெல்லாம் ஸ்டாலினுக்கு போட்டியாக கூடுமோ அவர்களை எல்லாம் கட்டம் கட்டி விட்டு, ஸ்டாலின் தலைமையை எற்பவரை மட்டுமே ஆதரிக்கும் கட்சியாகத்தான் இன்று தி.மு.க விளங்குகிறது.
ஒரு தமிழனுக்கு(மூப்பனார்) பிரதமராகும் வாய்ப்பு இருந்த போது, அப்பதவி மூப்பனாருக்கு கிடைக்க சிறிதும் ஆர்வம் காட்டாதவர் இந்த தமிழினக்காவலர் கருணாநிதி.
தமிழ் நாட்டில் கருணாநிதியும் மற்றும் அவர் குடும்பம் மட்டுமே தமிழோ, தமிழர்களோ அல்ல.
This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue
அருளடியான்
தி.மு.க, தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், டிவி இல்லாத வீடுகளுக்கு இலவச கலர் டிவி தருவோம் என அறிவித்துள்ளனர். இது மிகவும் தவறான முடிவு. ஏற்கனவே, கலைஞர் குடும்பம் ஊடகத் துறையில் ஏகாதிபத்தியம் செலுத்துவதை வைகோ போன்ற பல அரசியல்வாதிகளும், எழுத்தாளர் ஞாநி போன்ற அறிவுஜீவிகளும் கடுமையாக விமர்சித்து வரும் வேளையில், அரசுப் பணத்தில் டிவிப் பெட்டி வழங்கி, மக்களை தனக்கு அடிமையாக்கும் கலைஞரின் தந்திரம் நரித்தனமானது. ‘இலாபம் வரும் வழிகள் எல்லாம் தனக்கும் தன் குடும்பத்துக்கும். நட்டம் வரும் வழிகள் எல்லாம் தன் கட்சிக்கும் அரசுக்கும் ‘ என்பது தானே கலைஞரின் கொள்கை. யார் அப்பன் வீட்டுப் பணத்தில் இவர் டிவி கொடுக்கிறார். மக்களின் வரிப்பணத்தில் இலவச டிவிப்பெட்டி கொடுப்பதால் நாட்டுக்கு என்ன நன்மை ? நாட்டு மக்களுக்கு என்ன நன்மை ? இதனால் நாட்டின் பொருளாதாரம் உயருமா ? உற்பத்தி உயருமா ? சன் டிவிக்கு இணைப்பு கொடுப்பதால், வருமானம் உயரும். யார் குடும்பத்தின் வருமானம் உயரும் ?
This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue
வஹ்ஹாபி
திண்ணையின் முஸ்லிம் வாசகர்களுக்குச் சென்ற வாரம் அடித்தது யோகம்!
பல இஸ்லாம்கள் அறிமுகப் படுத்தப் படுவது முஸ்லிம்களுக்கு யோகமில்லாமல் வேறென்ன ?
வெகுஜன இஸ்லாம் (Popular Islam) என்ற தலைப்பில் http://www.thinnai.com/le0324061.html ஸூபி முகமது என்பார் சில புதிய இஸ்லாம்களை அறிமுகப் படுத்தியுள்ளார். அவற்றுள்:
நிறுவன இஸ்லாம் (Institutional Islam)
வெகுஜன இஸ்லாம் (Popular Islam)
நாட்டார் இஸ்லாம் (Folk Islam)
முக்கியமானவை.
அடுத்து, எச்.முஜீப் ரஹ்மான் என்பார், பின் நவீன இஸ்லாம் (POST MODERN ISLAM) என்ற தலைப்பில் http://www.thinnai.com/pl0324064.html தம் பங்குக்கு:
மாற்று இஸ்லாம் (Alternetive Islam)
தாராளவாத இஸ்லாம் (Liberal Islam)
மதநீக்க இஸ்லாம் (Seculer Islam)
போன்ற இஸ்லாம்களை அறிமுகப் படுத்தி, இருவரும் ஒரே தொழில் செய்பவர்கள்தாம் என்பதை ‘இஸ்லாம்கள் வாங்கலியோ இஸ்லாம்கள் ‘ என்று ஒரே குரலில் கூவி மெய்ப்படுத்தி இருக்கின்றனர்.
ஒன்று மட்டும் தெளுவு. இரு கட்டுரைகளும் பொன்னீல எழுத்துகளால் பொறிக்கப் பட்டவைதாம் என்பதே அது.
‘ஒரு கருப்பொருளைப் பற்றிய சொல்லாடலுக்குள் புகுமுன் அதைப் பற்றிய முழு அறிவு இல்லாவிடினும் அது குறித்த அடிப்படை அறிவாவது கட்டாயம் இருக்க வேண்டும் ‘ என்று வேறொருவருக்கு நான் எழுதியது ஸூபிக்கும் பொருந்தும். அல்குர்ஆன் என்ற இறைவேதம், அரபியருக்கோ ஏனைய முஸ்லிம்களுக்கோ மட்டுமான தனிச் சொத்தன்று (081:027) என்பதைக்கூட அறியாமல், ‘முஸ்லிம்களின் அல்குர்ஆன் அரபுமொழி சார்ந்தது ‘ என்று எழுதித் தம் அறியாமையை வெளுச்சம் போட்டுக் காட்டுதல் ஸூபிக்குத் தேவைதானா ?
வரலாற்றிலும் புகுந்து விளையாடுகிறார் ஸூபி. ஹஜ்ஜின்போது நிறைவேற்றப் படும் கடமைச் செயற்பாடுகள் அனைத்தும் அண்ணல் இபுறாஹீம் மற்றும் அவர்தம் குடும்பத்தவரின் தியாகங்களை அடியொற்றி வந்தவை என்பது பிறமத நண்பர்களும் அறிந்து வைத்திருக்கும் அடிப்படை வரலாறாகும்.
அண்ணல் இபுறாஹீமும் அவர்தம் குடும்பத்தினரும் அரபியரா ? ‘சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றால் ‘ உண்மை இப்படித்தான் சுடும்.
சரி, உண்டியலுக்கு வருவோம்.
இஸ்லாமிய ஆட்சி என்பது ‘கிலாஃபத் ‘ – பின்தோன்றல் முறைதான். பின்தோன்றுபவன் தமையானாகவோ தம்பியாகவோ மகனாகவோ பொதுமக்களுள் ஒருவனாகவோ இருக்கலாம். யாருக்குப் பிறந்தான் ? என்று வஹ்ஹாபின் சித்தாந்தம் கேள்வி எழுப்பாது; மாறாக, வஹ்ஹாபின் அறிவுரையின்படி ஆட்சி நடக்கிறதா ? என்றுதான் பார்க்கும். முஸ்லிம்கள் ஆள்வதால் அது இஸ்லாமிய ஆட்சி என்ற மூடநம்பிக்கைக்கு ஸூபி பலியாக வேண்டாம்.
ஹாஜிகளிடமிருந்து பெறப்படும் அன்னியச் செலவாணி, அவர்களுக்கு வசதிகளை அதிகப் படுத்திக் கொடுப்பதற்காகச் செலவு செய்யப் படுவதாக சவூதி அரசின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன; ஹஜ்ஜுக்குச் சென்று வருபவர்களும் கூறுகின்றனர். ஹஜ்ஜுக்கு அனுப்பும் நிறுவனங்கள், விமானப் போக்குவரத்து, தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவம் ஆகிய அனைத்திற்கும் பொறுப்பேற்கின்றனர். இவ்வாறுதான் தர்ஹா உண்டியலில் கொழுத்த சாபுகள், அவர்களின் பகற்கொள்ளையில் கிடைத்ததை ‘பக்தர் ‘களுக்குச் செலவு செய்கிறார்களாக்கும் ? மொட்டைத் தலைக்கும் முழங்கலுக்கும் முடிச்சுப் போட்டு ஸூபி அடித்த அடி, நாலு பக்கமும் தெறிக்க வில்லையே ? ‘நனைத்து அடித்தல் ‘ இதுவல்ல என்று நாமும் நம்புவோம்.
***
இது நிற்க,
சந்தடி சாக்கில், ‘முகமதியரின் மறைப் புத்தகத்தில் உள்ள வன்முறை உணர்வை விதைக்கக் கூடிய வாசகங்களை அவை எந்தக் காரணத்திற்காக இடம்பெற்றிருந்தாலும் அவற்றின் அவசியத்தைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாத இளஞ் சிறுவர்கள் பயிலும் மதரஸாக்களில் கற்பிக்கலாகாது என முடிவெடுக்க முகமதிய மார்க்க அறிஞர்கள் முன்வர வேண்டும் ‘ என்று ‘முகமதி ‘யர்களுக்கும்
‘தமக்குக் கிட்டியுள்ள இசை ஞானத்தை ‘சரஸ்வதி மா கீ தயா ‘ (சரஸ்வதி அன்னையின் அருள்) என்று சொல்லும் திரை இசை இயக்குநர் நவ்ஷத், வாணியை மனதால் வணங்கிய பின்னரே பாடத் தொடங்குவதாகப் பல ஆண்டுகளுக்குமுன் பாபுராவ் பட்டேலின் மதர் இந்தியா பத்திரிகைக்குப் பகிரங்கமாகப் பேட்டி அளித்த ஹிந்தி பின்னணிப் பாடகர் தலத் மஹமத், காளிதேவியின் பூமிக்கு வந்து இசை நிகழ்ச்சியளிக்கும் அருள் கிடைத்ததால் தமது நிகழ்ச்சியினைக் காளிமாதாவின் பாத கமலங்களில் அர்ப்பணிப்பதாகக் கூறி மெய் சிலிர்க்க வைத்த சாஸ்த்ரிய சங்கீதப் பாடகர்களான அலி சகோதரர்கள், கங்கையைத் தம் மாதா எனக் கூறும் ஷெனாய் விற்பன்னர் பிஸ்மில்லாகான், இசையின் மூலம் இறைவனை வழிபடுவதாகக் கூறிய நூர்ஜஹான் போன்றோரின் எண்ணிக்கை பெருகுவதற்கான வழிமுறைகளில் ஹிந்துக்களின் கவனம் செல்லவேண்டும் ‘ என்று இந்துக்களுக்கும் பழம் பெறும் எழுத்தாளர் மலர் மன்னன் திண்ணையில் http://www.thinnai.com/pl0324061.html அறிவுரை கூறியிருந்தார்.
மட்டுமின்றி, மேற்காணும் முகமதியருக்கு இடுகாட்டில் இடம் கிடைக்காது என்றும் முகமதியர் பகிரங்கமாக அவ்வாறு அறிவித்துவிட்டு வெளுயே நடமாட முடியுமா என்பதே சந்தேகம் என்றும் ‘நடமாடிக் கொண்டிருப்பவர்களை ‘க் குறித்து ம.ம. கவலை தெரிவித்திருந்தார்.
ஒருவருடைய ஒரே கட்டுரைக்குள் ஒரே கருத்துக்குள் அவரே முரண்படுவதை விளக்கிக் கொண்டிருப்பது எனது நோக்கமில்லை. அதை, க.வி. பார்த்துக் கொள்ளட்டும்.
பின் நான் ஏன் அதை எடுத்தாள வேண்டும் ? மேற்காணும் ‘பெருங்கதையாடலில் ‘ ஸூபிக்குச் சரக்கிருக்கிறது. சங்கீத முகமதியரை ஒன்று திரட்டி, ‘சங்கீத இஸ்லாம் ‘ என்றும் பிரபல முகமதிய நடிகைகளான ‘கற்பு புகழ் ‘ குஷ்பு, நக்மா, மும்தாஜ் மற்றும் முகமதிய நடிகர்களான சல்மான்கான், ஷாருக்கான், ஆமிர்கான், அம்ஜத்கான் போன்றோரை வைத்து ‘நட்சத்திர இஸ்லாம் ‘ ஆகிய இஸ்லாம்களை அறிமுகப் படுத்தலாம்.
யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கடை விரிக்கலாம். கொள்வார்…. ?
நல்லவேளை, ஸூபிக்கான என்னுடைய முதல் கடிதம் இன்றுவரை திண்ணையில் படிக்கக் கிடைக்கிறது http://www.thinnai.com/le0224069.html இல்லையெனில் மிரண்டுபோய் பதட்டத்துடன் ஆத்திரத்தில் புலம்புவது யாரென்று வாசகர்களுக்கு அடையாளம் தெரியாமல் போய்விடும்.
This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue
மலர் மன்னன்
Dear editor:
I need some space in your esteemed periodical to clarify certain facts:
I saw in the latest Thinnai my article on my return to Thinnai as a contributor that contained my Bangalore expeditions.
The title I gave to Bhasin ‘s website was Karnataka Kalling only. I gave that title to draw the attention of browsers. S M Krishna noticed it and appreciated, I found ‘Kalling ‘ corected as ‘Calling ‘ thinking it was a spelling mistake. No, it was NOT. KK was the correct title and we made a logo also for KK.
Likewise, the title I had given to the Almatti row was ‘CM Krishna ‘s Tryst with River Krishna. ‘ CM indicates Chief Minkster. I saw that was also missing. S M (his initials) Krishna liked the title most because of the adjectives given for both Krishnas. NOT only him, who ever read it. With out that CM adjective for Krishna, the title has lost its charm!
Some reader has again raised the issue of authenticity for my documentation. In that case, I may NOT be able to write the past because it is NOT possible to record anything that relates to people who are no more. However, proofs prop up even without my asking in some cases – that is ‘Irai Arul! ‘
For instance, as for Hey Ram issue, it was authenticated by Kalyanam himself revealing it again and it has appeared in TOI and Asian Age recently. I forwarded the news item to Go. Rajaram. kalyanam revealed to me the Hey Ram falsehood about thirty years ago in a very casual chat, wihtout any intention or motive.
Prof.A. K Perumal has recorded in Feb Kalachuvadu my stay at Su.Ra. ‘s and I did NOT even know that though I have been receiving KC . My copy of Kalchuvadu was taken away by Ila. Ganesan (All India Vice President, BJP) in one of his visits to my residence and that I had no occasion to read the Feb. issue completely except for one or two.
There was no intention on my side to record my past and therefore I am NOT NOT obliged to prove my encounters in the past. If anyone has any doubt, it is for her/him to go in search of it. They can cross check with people living in case of people who are no more. As for me, I cannot run around to get proofs! It is for the readers either to take my accounts or throw them BUT, without calling me names as bluffer, liar, etc.!
As for my interaction with Anna and many other DMK leaders, K A krishnasamy, brother of K A Mathialagan who was with MGR and a former minister might be willing to tell many facts about me, as
he has high regards for me. He might give many new info that I don ‘t record because it would amount ot self promotion or beating my drum.
Chinna kuttoosi may also oblige.
As for my nearness to Sri kamaraj, there are people like Kumari Anadnan, Pa. chidamparam, Sudarsanam (WHIP of the Congress in the outgoing Tamil Nadu Assembly), K V Thanga Balu, MP and many more second rung Congressmen. I hope my interaction with Hindutva leaders right from Vajpayeeji to front runners in RSS, VHP and Hindu Munnani would NOT be doubted! All of them will also tell that I had never asked any favour for my personal gains exept for some genuine transfers for some deserving cases despite many industrialists and businessmen approached me for some kind of recommendations indicating that I would get hefty percentage as a tribute to my liaison! I thank God for giving me a strong will that could prevent me from yielding to such temptations. YES, I had used my access to people in high offices for a genuine common cause many a time! I had also used my influence to get finacial assistance, admissions in educatonal institutions for many deserving fisherfolks and Dalits but unfortunately not even for a single Brahmin boy or girl!
There was also a mentioning that one of my friends had reproduced my article on Goidse in his blog. Execpt for one or two like Ve. saa. and S Vaidheeswaran, almost all readers were totally strangers to me initially, who had even started addressing me later as uncle, dad and god father as well as Guru and I thank Thinnai for enabling me to gain hundreds of children in a very short span of time especially at my ripe age and now I have many shelters to pass my old age comfortably as I become totally immobile! At this rate, there will be a big fight among my children as to who would take care of me when I become a burden! There are already many Dalit girls fighting with each other, telling ‘appaa enkoodattaan irukkanum(daddy should be with me only)! ‘
This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue
ரமேஷ்கிருஷ்ணன்
அன்புடையீர்
வணக்கம். ஒரு மூத்த எழுத்தாளர் என்கிற வகையில் தம் எழுத்துலக அனுபவங்களையும் பத்திரிகையாளர் என்கிற வகையில் சமூக அனுபவங்களையும் இக்காலத் தலைமுறையினருக்குப் பயன்படும் வகையில் கொடுக்கக்கூடும் என்கிற எண்ணத்தில் அல்லது நம்பிக்கையில் திண்ணை கொடுத்த இடத்தில் மலர்மன்னன் தன் கட்டுரைகளிலும் கடிதங்களிலும் இதுவரை தொடர்ந்து முன்வைக்க முயற்சிசெய்தபடி இருப்பது ஆர்.எஸ்.எஸ்.இன் நிலைபாடுகளைமட்டுமே. துரதிருஷ்டவசமாக, தேன் தடவிய நஞ்சு வார்த்தைகள் நிரம்பியவையாகவே அவரது எழுத்துகள் இதுவரை வெளிப்பட்டுள்ளன. வம்புகளையும் மோதல்களையும் ஞாபகப்படுத்திச் சொல்வதையே ஆதார குணமாகக் கொண்டுள்ளன. பாடங்கள் சொல்லத்தர மறந்த செய்திகளையெல்லாம் சொல்லித்தருவதாக இவற்றைப்பற்றி பல இளைஞர்கள் தகவலனுப்புவதாகக் குறிப்பிடுகிறார். பழிவாங்கும் உணர்ச்சியை எந்தப் பாடமும் சொல்லித் தருவதில்லை. பல சமயங்களில் குடும்பங்களில்கூட சொல்லித்தருவதில்லை. பழிவாங்குதலை ஒரு வழிமுறையாகத் தொடங்கிவிட்டால் ஆயிரம் காரணங்களைச் சொல்லி ஒவ்வொரு தரப்பும் தொடைதட்டிக் குதிக்கத் தொடங்கலாம். மகாபாரதக் கதையின் ஒரு துளி சாரத்தைக்கூட நம் இதயம் உள்வாங்கிக்கொள்ளவில்லை என்றால் அந்தக் கதையையெல்லாம் தலைமுறைதலைமுறையாக எதற்காகப் படித்துக்கொண்டிருக்கிறோம் ? வெறுமனே பொழுதைப் போக்கவா ?
முதலில் நேருவை எவ்விதமான காரியங்களுக்கும் பயனில்லாதவர் என்கிற குற்றச்சாட்டை வைத்து தர்க்கத்தைத் தொடங்கினார். அடுத்து பட்டேல் போன்றவர்கள் நெஞ்சில் உரம் மிக்கவர்கள் என்று முழங்கினார். அதற்கடுத்து காந்தியடிகள் கொல்லப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் சொன்னார். பிறகு கோட்ஸேக்கு தியாகிப்பட்டமும் கொடுத்தாயிற்று. இப்படி வளர்ந்து வளர்ந்து இப்போது காந்தியடிகளை மகாத்மா என்றெல்லாம் சொல்வது மிகப்பெரிய வார்த்தையாகிவிடும், அவர் சாதாரணமான மனிதர் தான் என்று சொல்கிறார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் வார்த்தை ஜாலங்கள் அவருக்கு அழகாக உதவி செய்கின்றன. நாட்டுமக்களின் நெஞ்சில் அன்பை விதைத்தவர்களையெல்லாம் கையாலாகாதவர்களாகவும் ஒற்றுமையை உணர்த்தியவர்களையெல்லாம் துணிச்சல் அற்றவர்களாகவும் மிகவும் தந்திரமாகத் திரித்துக்காட்டுகிறார்.
சரித்திரத்தை தன் சொந்த அறிவை மூலதனமாகக்கொண்டு அறிய முற்பட விரும்பாதவர்களுக்கும் சாதியைவிட மதத்தைவிட வாழ்வுநெறிகளின்மீதும் மனத்துாய்மையின்மீதும் நம்பிக்கைகொள்ள விரும்பாதவர்களுக்கும் இவர் வார்த்தைகள் வழிகாட்டும் விளக்கங்களாகப் படலாம். அப்படித்தான் படுகிறதுபோலும். அதனால்தான் அவருடைய அஞ்சல்பெட்டி நிரம்பி வழிகிறது போலும். கற்பகவிநாயகமும் சுந்தரமூர்த்தியும் வீணாக மாரடித்துக்கொள்கிறார்கள்.
நான் ஒரே ஒரு கேள்வியைத்தான் இந்த இடத்தில் கேட்க விரும்புகிறேன். மலர்மன்னனை அல்ல. எனக்கு அவரோடு விவாதிக்க விருப்பமும் இல்லை. போதிய அவகாசமும் இல்லை. பத்து ஊரைச் சுற்றி பத்துப்பேரைப் பார்த்தால்தான் மாதச் சாப்பாட்டுக்குச் சம்பாதிக்கமுடிகிற நிலை. எனக்குக் கிடைக்கும் கொஞ்ச நேரத்தைக் கழிக்கப் பயனுள்ள வழிகள் பல உள்ளன. நான் கேட்க விரும்புவது பெரியவர் வெங்கட்.சாமிநாதனிடமும் எழுத்தாளர் கோபால் ராஜாராமனிடமும். ஆச்சரியப்படவேண்டாம். மலர்மன்னன் பல இடங்களில் இந்த இரண்டு முக்கியஸ்தர்களின் பேர்களையும் திரும்பத்திரும்பச் சொல்கிறார். அதனால்தான் இவர்களைக் கேட்கத் தோன்றுகிறது. ஒவ்வொரு எழுத்திலும் வெறுப்பையும் நஞ்சையும் பகைமையுணர்ச்சியையும் கலந்துகலந்து வடிக்கும் இத்தகு படைப்புகள் எழுதப்படவேண்டும் என்பதும் அது இந்தத் தலைமுறையினரால் படிக்கப்படவேண்டும் என்பதுதான் அவரை எழுதத்தூண்டுவதற்கு முன்பு உங்கள் விருப்பமாக இருந்ததா ? நீங்கள் காலமெல்லாம் மேலான ரசனை மேலான ரசனை என்று வலியுறுத்திச் சொன்ன ரசனையின் தடத்தை இப்படைப்பில் காண்கிறீர்களா ? இவையே என் கேள்விகள். விருப்பமிருந்தால் பதில் சொல்லுங்கள்.
இப்படிக்கு
ரமேஷ்கிருஷ்ணன்
15.03.06
rameshkrishnan1970@yahoo.co.in
( மலர் மன்னனை மட்டுமல்ல, மலர் மன்னனுக்கு நேர் எதிரான கருத்துகள் கொண்டவர்களையும் எழுதுமாறு திண்ணை கேட்டுக் கொண்டுள்ளது என்பதை திண்ணை பக்கங்களைக் கொண்டே அறியலாம். – திண்ணை குழு )
This entry is part [part not set] of 29 in the series 20060303_Issue
குண்டலகேசி
திண்ணையின் கருத்துரிமை விளக்கம் ?
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
கருத்து – opinion
fact – நிகழ்வு
கருத்துகளை எழுதுவதற்கும், நிகழ்வுகளை எழுதுவதற்கும் ஏகப்பட்ட
வித்தியாசம் உள்ளது.
ஒருவருக்கு தன் கருத்துகளை எழுதுவதற்கு வானளாவிய உரிமை உள்ளது.
என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.
ஆனால் நிகழ்வு, வரலாறு என்று எழுதும்போது ஆதாரத்துடந்தான் எழுத வேண்டும்.
மலர் மன்னர் சிவாஜியையோ, சுந்தர ராமசாமியையோ சந்தித்திருந்தால், அதற்கு அவர்தானே ஆதாரம் வைக்க வேண்டும்! அவர் எழுதியவைக்கு அவரால் ஆதாரம் வைக்க முடியவில்லையென்றால் படிப்பவர்கள் இது பொய்யுரை என்று எண்ணுவதில் என்ன தவறு இருக்க முடியும். ஆதாரம் இருந்தால் வைக்கட்டுமே!
இவர் பெரியாரை சந்தித்ததற்கும் இவர் சாதியை விசாரித்ததற்கும் சாட்சி
உண்டா. ? இல்லை. இவர் எழுதியது அனைத்துமே பெரியார், அண்ணா, சிவாஜி என்று இறந்து போனவர்களை பற்றிதான் இருக்கிறது. இவர் வைக்கும் குற்றச்சாட்டிற்கு பதில் கூறுவதற்கு இறந்து போனவர்களுக்கு பதில் கூறும் வாய்ப்பாவது உள்ளதா ? அதுவும் இல்லை. அவர்கள் இருந்த காலத்தில் அல்லவா இந்த வரலாற்றை( ?) எழுதியிருக்க வேண்டும் ?
ஒருவர் எழுதுவதெல்லாம் உண்மை என்று அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ள நாம் என்ன 13 ஆம் நூற்றாண்டிலா இருக்கிறோம் ? புஷ்ஷுக்கு நேஷனல் கார்டில் சலுகை அளிக்கப்பட்டதாக ஒரு கதை விட்டார்கள். சும்மா இல்லை. ஒரு லெட்டர் ஆதாரத்தோடு. இந்த லெட்டர் பொய்யென்று மூன்று மணி நேரத்தில் நிரூபித்தார்கள். இந்த காலகட்டத்தில் அவரவருக்கு தோன்றியதை எல்லாம் வரலாறு என்று எழுத முடியுமா ?
மலர்மன்னன் நிகழ்ந்ததாகச் சொல்லும் விஷயங்களுக்கு அவர்தான் நம்பத்தகுந்த ஆதாரம் வைக்க வேண்டும்.
இந்த கடிதத்தை திண்ணை வெளியிடாவிட்டாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
This entry is part [part not set] of 29 in the series 20060303_Issue
மு சுந்தரமூர்த்தி
இன்னொரு காசி யாத்திரை
நிஜமாகவே காசி யாத்திரை சென்று வந்துள்ள மலர் மன்னன் இப்போது காசி யாத்திரை போகும் மாப்பிள்ளைப் போல முறுக்கிக்கொண்டு போய்விட்டார். பெண்வீட்டார் கணக்காக திண்ணை ஆசிரியர் குழு முதற்கொண்டு ‘உண்மைகளை மட்டும் அறிய விரும்பும் ‘ ஆவல் கொண்ட வாசகர்கள் வரை அவரை தடுத்தாட்கொள்ள முனைவது திருமணச் சடங்கு போலவே நல்ல நகைச்சுவையாக இருக்கி றது.
மலர் மன்னனை திண்ணையில் எழுதவேண்டும் என்று அழைத்து வந்தவர் திண்ணையின் முதன்மை ஆசிரியர் கோ. ராஜாராம். வாழ்த்தி வரவேற்றவர் திண்ணையில் தொடர்ந்து பங்களிக்கும் பி.கே. சிவகுமார். ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தைப் பற்றி மலர் மன்னன் எழுதியதற்கு எழுதப்பட்ட ஓர் எதிர்வினையைத் தவிர, அவரை எழுதப் பணித்த ராஜாராமோ, குதூகலத்துடன் வரவேற்ற பி.கே. சிவகுமாரோ இதுவரை வேறெதுவும் சொன்னதில்லை. நாதுராம் கோட்சே மஹாத்மா காந்தியைக் கொலை செய்ததை நியாயப்படுத்தி எழுதப்பட்ட கட்டுரைக்காவது காங்கிரஸ் இயக்கத் தின் மீதும், காந்தியின் மீதும் பற்று வைத்த தேசியவாதியான பி.கே.சிவகுமாரிடம் இருந்து கடுமையான எதிர்வினை வரும் என்று நினைத்திருந்தேன். ஒரு சிறு முணுமுணுப்பைக்கூட வெளியிடவில்லை என்பது ஏமாற்றமாகத் தான் இருந்தது. மலர் மன்னனின் குறிப்பிட்ட கட்டுரையை அவருடைய நண்பர் ஒருவர் வலைப்பதிவிலும் வெளியிட்டிருந்தார். வலைப்பதிவுகளிலும் தேசியவாதம் பேசும் எவரிடமிருந்தும் எதிர்வினை வரவில்லை. குறிப்பிடும்படியான எதிர்வினைகள் வந்தது பெரியார் ஆதரவாளர்கள் சிலரிடமிருந்தும், இஸ்லாமியர்களிடமிருந்து மட்டும் தான். இப்போது காந்தியின் தேவையும், அக்கறையும் இஸ்லாமியர்களுக்கும், பெரியார் ஆதரவாளர்களுக்கு இருக்கும் அளவுக்கு கூட சிவகுமார் உள்ளிட்ட தேசியவாதிகளுக்கு இல்லை என்பது ஆச்சரியம் தான். சிவகுமாரைக் குறிப்பிட்டு எழுதக் காரணம், பெரியார் பற்றி எழுதச்சொல்லி பெரியார் ஆதரவாளர்கள் கேட்கவேண்டியதை தான் கேட்கவேண்டியிருப்பதாக மலர் மன்னன் எழுத வந்தபோது எழுதியவர். பெரியாருக்காக பரிந்து பேசும் அவருடைய ஆதரவாளரல்லாத தேசியவாதியான ஒருவர், காந்திக்காக பரிந்து வாய்திறக்காதது ஏன் என்பது புரியவில்லை. பெரியார் பற்றிக்கேட்டு மலர் மன்னனின் வாயைக் கிளறினால் வெளியே வந்து விழுவது என்னவாக இருக்கும் என்பதை உணர்ந்து பெரியார் ஆதரவாளர்கள் கேட்காமலிருந்திருக்கலாம். ஆனால் சிவகுமார் ரொம்ப அக்கறையோடு கேட்டார். மலர் மன்னனும் நன்றாகவே அர்ச்சனையை செய்தார்.
எது எப்படியோ, மலர் மன்னன் கோபம் தணிந்து மீண்டும் தனக்குத் தெரிந்த எல்லா ‘உண்மை ‘களையும், ‘வரலாற்றை ‘யும் தொடர்ந்து எழுதினால் திண்ணை ஆசிரியர் கோ. ராஜாராமும், கடந்த இதழில் நொந்துபோய் கடிதம் எழுதியுள்ள தேசபக்தியின் குத்தகைக்காரர்களும், சிவகுமார் போன்ற காங்கிரஸ் தேசியவாதிகளும் அனைவருமே மகிழ்ச்சியடைவார்கள். கற்பகவிநாயகத்தையும், இன்னபிற ஈவேரா ஆதரவு தேசவிரோதிகளையும் விட்டுத்தள்ளுங்கள். அவர்களுக்கு தர்ம அடி போட திண்ணை ஆசிரியர் குழுவிலிருந்து இன்னும் கடிதம் எழுதாத திண்ணை வாசகர் வரை ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் பாட்டுக்கு உங்கள் திருப்பணியைத் தொடருங்கள். இப்போதைக்கு உங்களை விட்டால் இப்பணியைச் செய்ய வேறு யாருமில்லை. இனிமேல் உங்கள் மேல் அடி விழாதவாறு திண்ணை ஆசிரியர் குழுவினர் பார்த்துக்கொள்வார்கள்.
This entry is part [part not set] of 29 in the series 20060303_Issue
புதியமாதவி
திண்ணை ஆசிரியருக்கு,
வணக்கம்.
புகைப்படங்களுடன் அருணாவின் கதையை வெளியிட்டமைக்கு நன்றி.
விவாதங்களை முறைப்படுத்துதல் குறித்து நீங்கள் வெளியிட்டிருக்கும் கருத்துஎன் போன்ற பல வாசகர்களின் கருத்து. மலர்மன்னன் போன்ற மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் அறிந்ததைப் பதிவு செய்வதும் அதற்கு திண்ணை இடமளித்ததும் மகிழ்ச்சியைத் தந்தது. கருத்து தளத்தில் மாறுபட்ட கருத்துகள் கொண்ட என் போன்றவர்களும் மலர்மன்னன் சொல்ல வரும் கருத்துகளைஅறியவே ஆவலாக இருக்கின்றோம்.
எது உண்மை, எது உண்மை திரித்து சொல்லப்படும் செய்தி, எந்த தளத்தில் நின்று செய்தி வாசிக்கப்படுகிறது இதை எல்லாம் மிகவும் சரியாகவே புரிந்து கொள்பவர்கள் தான் திண்ணை வாசகர்கள் என்பது என் எண்ணம்.
மலர்மன்னன் அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும். கற்பகவிநாயகம் அவர்கள் தன் கருத்துகளையும் முன்வைக்கட்டும்.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இன்றி என் போன்றவர்கள் நம் சரித்திரத்தை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue
இந்திரா பார்த்தசாரதி
‘சரித்திரம் ஒரு குப்பைத் தொட்டி ‘ என்றார் ஹென்றிி ஃபோர்ட். அது உண்மயாகிக் கொண்டு வருகிறது போல் தோன்றுகிறது. இந்தக் குப்பைத் தொட்டியில் சத்தியத்தைத்
தேடுவது, வைக்கோல் போரில் குண்டூசியைத் தேடுவது போல்தான்.
டேவிட் இர்விங் என்பவர் பிரிட்டிஷ் சரித்திரப் பேராசிரியர். அவர் கருத்தின்படி, இரண்டாம் உலகப் போரின்போது, ஆறு மிலியன் யூதர்கள், ஜெர்மானிய நாஸிகளால்
கொல்லப்பட்டார்கள் என்ற சம்பவம் (Hollocaust) ஒரு கற்பனை, அது நடக்கவே இல்லை என்பதுதான். அவருடைய இந்தக் கூற்று மற்றைய வரலாற்றாசிரியர்களைத்
திடுக்கிட வைத்தது. அவர் யூதர்களின் எதிரி என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு,
அவர்மீது வழக்குத் தொடரப்பட்டது. பல் நாடுகளில், Holocaustயை மறுப்பதே சட்டப்படிக் குற்றம். இர்விங் தொடர்ந்து தான் சொல்வதுதான் சரியென்று தமக்குத்
தோன்றிய சரித்திர ஆதாரங்களை அள்ளி வீசிக்கொண்டிருந்தார்.
அவருக்கு ஆதரவாகச் சமீபத்தில் ஈரானிலிருந்து ஒரு குரல் ஒலித்தது. ஈரானிய அதிபர், Holocaust உலக யூத லாபியின் சரடு என்றார். இதுதான் திவீர வலது சாரியினரின் மதம் தாண்டிய ஒற்றுமைக்குச் சான்று.
ஆஸ்திரியாவுக்கு விஜயம் செய்த டேவிட் இர்விங்கை ஆஸ்திரியப் போலிஸ் போனவாரம் கைது செய்துவிட்டது. ஏனென்றால் அந்நாட்டின் சட்டப்படி Holocaustயை
மறுப்பது சட்ட விரோதம். ஹிட்லர் ஓர் ஆஸ்திரியன். வரலாற்றூ முரண் நகைக்கு
(historical irony) இதைவிட வேறு எது சிறந்த உதாரணமாக இருக்க முடியும் ?
இப்பொழுது டேவிட் இர்விங் தாம் முன்னர்க் கூறியவை யாவும் தாம் சரித்திரத்தைத் தப்பாகப் புரிந்து கொண்டதுதான் காரணம், Holocaust மறுக்கவியலாத வரலாற்றுச்
சத்தியம் என்கிறார்!
சரித்திரம் என்ன பாடு படுகின்றது பாருங்கள்!
இந்திரா காந்தி பாரதப் பிரதமாரக இருந்தபோது, இருபதாம் நூற்றாண்டு பாரத ‘வரலாற்று உண்மைகளை ‘ ( அவர் மனத்துக்குப் பட்ட ‘உண்மைகளை ‘- இதன்படி பாரத சுதந்திரத்துக்கு நேரு குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் முயன்றதாகத் தெரிய வில்லை) குப்பிகளில் மைக்ரோஃபிலிம்களாக அடைத்து பூமியில் ஆழப் புதைத்தார். பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு இவற்றைத் தோண்டியெடுக்கும் இந்திய வரலாற்று அறிஞர்கள் இருபதாம் நூற்றாண்டு இந்திய வரலாற்றூச் செய்திகளை இவற்றின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பதுதான் இதன் அடிப்படை நோக்கம்.
இவற்றை எழுதிய வரலாற்று அறிவு ஜீவிகள் இந்திரா காந்தியினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கல்தாம்!
1977ல் இந்திரா காந்தி தேர்தலில் தோற்றார். பதவிக்கு வந்த ஜனதா கட்சியினர் அந்த வரலாற்றுக் குப்பிகளைத் தோண்டி எடுத்து அவற்றைக் குப்பையில் எறிந்தனர்! ஹென்றி ஃபோர்ட் சொன்னது நிரூபணமாகிவிட்டது! அவை அவ்வாறு தோண்டப்படாமல், அகழ்வாரைத் தாங்கும் பூமியில் தொடர்ந்து இருந்திருந்தால்,
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு படிக்கப்படப் போகும் இந்திய வரலாறு இந்திரா காந்தி சொன்ன வரலாறாகத்தான் இருந்திருக்க முடியும்!
சரித்திரம் என்ற களிமண்ணை வைத்துக் கொண்டு, நம் விருப்பத்துக்கேற்ற உருவத்தை நம்மால் படைத்துக் கொள்ளமுடியும். ‘என்னுடையதுதான் உண்மை, உன்னுடையது பொய் ‘ என்று சண்டை போட்டுக்கொாள்ளவும் முடியும்.
மகாத்மா காந்தி சுடப்பட்டபோது, ‘ஹே ராம் ‘ என்று சொன்னாரா, சொல்லவில்லையா
என்பது இப்பொழுது இரு திவீர சரித்திர விவாதம்! அவர் சொன்னால் என்பதாலோ அல்லது சொல்லவில்லை என்பதாலோ அவருக்கோ அல்லது இராமனுக்கோ என்ன பெருமை கூடிவிடப் போகிறது என்பதுதான் தெரியவில்லை!
சரித்திரப் பதிவுகள் செய்வதாகக் கூறிக் கொள்கிறவர்கள் அனைவருமே அவர் ‘உண்மைகளாகப் ‘ பதிவு செய்ய ‘விரும்புவனவற்றை ‘ மட்டுமே கூறுவார்கள். ‘ Truth is something lying dormant between two opposing statements ‘ என்று ஜி.கே.செஸ்டர்டன் கூறியிருப்பதை நினைவு கொள்ளவேண்டும்.
This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue
விஸ்வாமித்ரா
மதிப்பிற்குரிய திரு.மலர் மன்னன் அவர்களுக்கு
திண்ணையில் உங்களது அனுபவங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். வெகு ஜன ஊடகங்களில் பகிர்ந்து கொள்ள முடியாத பல தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். அதற்கான என்னைப் போன்ற வாசகர்களின் சார்பாக நன்றிகள். திராவிட இயக்கத்தாராலும், இந்திய விரோத சக்திகளாலும், மத வெறியர்களாலும், இந்து எதிர்ப்புச் சக்திகளாலும், மூளைச் சலவை செய்யப் பட்டுள்ள ஒரு சமுதாயத்திடம் உங்களைப் போன்ற நேர்மையாளர்கள் உண்மைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டியது இந்தக் காலத்தின் அவசியமாகும். இணையத்தில் உங்களைப் போன்ற அனுபவம் மிக்கவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது மிக அரிது. உங்கள் மூலம் பல்வேறு பொய் முகங்கள் கிழியப் படுவது பொறுக்காமல், உங்கள் மீது அவநம்பிக்கை என்னும் சகதியை ஒரு சில தீய சக்திகள் பரப்பி வருகின்றன. அவர்கள் நோக்கம் புரளிகளையும் வதந்திகளையும் பரப்பி, உங்களைப் போன்றவர்களின் மனம் நோகச் செய்து இளைய சமுதாயத்தினர் உண்மைகளை அறியாமல் தடுப்பதேயாகும். இதுவே அவர்களது முழு நேர வேலை. தயவு செய்து அது போன்ற எதிர்மறை சக்திகளைப் பொருட்படுத்தாமல், உங்கள் மனதுக்கு உண்மையென்று படுபவதை, உங்கள் மனசாட்சிக்கு நேர்மையென்று தோன்றுவதை, உங்களது அனுபவங்களைத் தொடர்ந்து பதிவு செய்து வாருங்கள். உங்கள் கட்டுரைகளில் காணப்படும் உண்மைகளை மறைத்து பொய்யான திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் அவர்களது அரைவேகாட்டுத் தகவல்களாலும், காழ்ப்புணர்வு மிக்க கட்டுரைகளாலும், தாங்களாகவே நீர்த்துப் போய் விடுவார்கள். தயவு செய்து அது போன்ற எதிர்மறை இயக்கங்களின், தேச விரோத சக்திகளின் சதி வலைக்குப் பலியாகி விட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் கட்டுரைகளில் காணப்படும் தகவல்களை நாங்கள் மனப்பூர்வமாக நம்பி ஏற்றுக் கொள்கிறோம். அதில் எவ்வித சந்தேகமோ ஐயப்பாடுகளோ, எங்களுக்கு கிஞ்சித்தும் கிடையாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue
பெருந்தேவி
கோ. ராஜாராம் அவர்களின் சண்டைக்கோழி படவிவகாரம் பற்றிய ‘பிறவழிப்பாதைகள் ‘ குறிப்புகளின் கடிதம் வாசித்தேன். எஸ். ராமகிருஷ்ணனின் ‘நோக்கம் ‘ வலைப்பக்கங்களிலும், தனிப்பட்ட நண்பர் குழாங்களிலும் தொடர்ந்து பேச்சுப்பொருளாகியிருக்கிறது.
ஆனால், இந்த நோக்கம் எனப்படுவதை எப்படி நான் பார்க்கிறேன் என்பதைப் பகிர்ந்துகொள்ள சைப்படுகிறேன், ஒரு சின்ன காட்சியை விரித்து. யாரோ ஒருவர் தெருவில் நடக்கும் போது, ஏதோ நினைப்பில் தன் கையை வேகமாக வீசிவிடுகிறார். உடனே இன்னொருத்தர் சண்டைக்கு வருகிறார்; கை அவர் மேல் பட்டிருக்கலாம்; படாமலேயே பட்டதாக அவர் நம்பியிருக்கலாம்; உண்மையிலேயே படாமல் கூட, பட்டதாக அவர் வீண் குற்றம் சாற்றலாம்; அல்லது அவ்வாறு குற்றஞ்சாட்டச் சொல்லி இன்னொரு வழிப்போக்கர் தூண்டியும் விடலாம்; கை வீசியவர் கூட வேண்டுமென்று செய்யாமல் இருந்திருக்கலாம்; அல்லது அவ்வாறு அதைச் செய்துவிட்டு இல்லை என்று சொல்லிவிடலாம்; அல்லது வேண்டுமென்றே செய்யவில்லை என்று தனக்குத் தெரிந்தும், ‘ஆமாம், அப்படித்தான் ‘ என்று ஒரு கர்வமுற்ற மனோநிலையில் தன்மேல் விழும் குற்றச்சாட்டிலிருந்து சரியாகத் தற்காத்துக் கொள்ளக்கூட யத்தனிக்காமலிருக்கலாம். நோக்கம் இருபக்கத்திலும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அதை எப்படியும் நம்மால் நம்பும் வகையில் நிரூபிக்க முடியாது.
ஆனால், ‘உன் கை பட்டதால், எனக்கு வலிக்கிறது ‘ என்று ஒருவர் சொல்லும்போது, கைவீசியவரின் மன்னிப்பு கோருகிற சொல் வலிக்கு மருந்தாக இருக்கும் என அவர் நம்புகிறபோது, அதைச் சொன்னால்தானென்ன ? நிறைய சமயங்களில், நாம் நடக்கும்போது, அடுத்தவர் மீது நம் கை/கால் பட்டிருக்கும் என்ற எண்ணம் முளைவிடும்போதே மன்னிப்பு கேட்டு விடுவதில்லையா என்ன ? உண்மை/பொய் என்பதை விட ஒருவகை நாகரீகம் சார்ந்த விஷயமாகத்தான் இதை நான் பார்க்க நினைக்கிறேன்.
நாகரீகம் ஒருவருக்குத் தெரியாமல் இருக்கிறதாகத் தோன்றும்போது, நாகரீகத்தைக் கற்றுக்கொடுத்தே தீர்வோம் என்கிற உறுதி கூட அநாகரீகமாகவே இருக்கிறது.
This entry is part [part not set] of 35 in the series 20060127_Issue
K.ரவி ஸ்ரீநிவாஸ்
திண்ணை ஆசிரியருக்கு
திண்ணையில் வெளியான, கொற்றவை நூல் விமர்சனத்தில் குமரிக் கண்டம் இருந்தது என்று பொருள் தரும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது.(1) குமரிக் கண்டம், லெமுரியா போன்றவை புனைவுகள், கற்பனைகள். விக்டோரியா காலத்து அறிவியலாளர்கள் சிலர் முன் வைத்த கருது கோள்கள், அனுமானங்களின் அடிப்படையில் அவை எழுதப்பட்டன. பண்டைய இலக்கியங்களிலிருந்து சான்றுகள் தரப்பட்டன, வரைபடங்கள் கூட உருவாக்கப்பட்டன. ஆனால் அந்த கருது கோள்கள், அனுமானங்கள் அறிவியலால் நிராகரிக்கப்பட்டு விட்டன. புனைவுகள்,கற்பனைகள் இன்றும் உண்மை என்று சிலரால் கூறப்படுகின்றன. எக்காலத்திலும் இருந்திராத குமரிக்கண்டத்தினை அடிப்படையாகக் கொண்டு ஒரு புனைவியலக்கியத்தினை உருவாக்கலாம். ஆனால், குமரிக்கண்டம் இருந்ததாக நம்பப்படுகிறது, அதற்கு அறிவியல் ரீதியாக சான்றுகள் இல்லை என்பதையாவது விமர்சகர் அறிவாரா. மேலும் விமர்சகர் தமிழ்ப் பேராசிரியர் என்று தினமணியில் வெளியான நூல் விமர்சனத்தில் குறிப்பிடப்படுகிறது. தமிழ்ப் பேராசிரியர்கள் இன்னுமா குமரிக்கண்ட கற்பனைகளை உண்மை என்று நம்பி மாணவர்களுக்கு கற்பிக்கிறார்கள் ?.
விமர்சகர் இந்த நூல் விமர்சனத்தில் சிலவற்றை குறிப்பிட்டிருக்கிறார். நூலினை வாசிக்காத நான் அவை இவர் வாசிப்பில் முன் வைக்கும் கருத்துக்களா அல்லது நூலாசிரியரின் கருத்துக்களா என்பதையறியேன். எனினும் அவை சர்ச்சைக்குரியவை என்றே கருத வேண்டியுள்ளது. உதாரணமாக, அன்னை,தாய்மை குறித்த சொல்லாடல்களை பெண்ணியவாதிகளும், பிறரும் விவாதித்துள்ளனர். Biology is not destiny என்பது பெண்ணியவாதிகள் வலியுறுத்தும் ஒரு வி ?யம். இனப்பெருக்கம், தாய்மை இவற்றில் தொழில்நுட்பங்கள் கொண்டுவந்துள்ள சாத்தியப்பாடுகள், தெரிவுகள், மாற்றங்கள் ஆகியவையும் விவாதிக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளன, ஆராயப்படுகின்றன. அடையாளம், பாலினம், பால் நிலை குறித்த விவாதங்கள், கருத்துக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அன்னையர் என்ற சொல்லே கருத்தியல் சார்ந்த ஒன்று. பெண் தாயாவதன் மூலம்தான் முழுமை பெறுகிறாள் போன்ற கருத்துக்களை பெண்ணியவாதிகள் விமர்சித்துள்ளனர். தாய்மை என்பதை தெரிவு செய்ய மறுக்கும் பெண்களும் இருக்கிறார்கள், உடல் ரீதியாக கருத்தரிக்க இயலாத பெண்களும் இருக்கிறார்கள். வேறு பல காரணங்களுக்காக குடும்ப வாழ்க்கை, கருத்தரித்தல், பிள்ளை(கள்) பெறுதல் ஆகியவற்றை நிராகரிக்கும் பெண்களும் இருக்கிறார்கள். எனவே விமர்சகர் கூறும் ‘தாய்மையினால் வென்று மேற்செல்கிற தெய்வநிலை ‘, ‘அன்னையர் பிறக்க, அன்னையர் மறைய தாய்மை மட்டும் அழியாமல் வாழ்கிறது ‘ சர்சிக்க்ப்பட வேண்டியவையாகும். விமர்சகர் ‘தெய்வக் குழப்பம் கொண்ட மாற்று மரபுகளுக்கு ‘ என்று குறிப்பிடுகிறார். அவை எவை, எதற்கு அல்லது எவற்றிற்க்கு அவை மாற்று மரபுகள் என்பதை அவர் விளக்கியிருக்கலாம். முன்னோர் வழிபாடு, மூதாதையர் வழிபாடு போன்றவை உலகின் பல பகுதிகளில் நடைமுறையில் பல்வேறு விதங்களில் உள்ளன. தெய்வ வழிபாட்டிலும் சிறு தெய்வங்கள், பெருந் தெய்வங்கள் என்ற வேறுபாடு உள்ளது. பொதுவாக பகுத்தறிவாளர்கள் கேள்விக்குட்படுத்துவது கடவுள், உலகை படைத்தது கடவுள், கடவுள் மனித உருவில் தோன்றி அழியா உண்மைகளை வெளிப்படுத்தினார், இறை தூதர்(கள்) மூலம் உண்மைகளை வெளிப்படுத்தினார், புனித நூற்களை அளித்தார் போன்றவற்றை. விமர்சகர் மூதாதையர் வழிப்பாட்டினையும் இதையும் குழப்புவதாக கருதும் வகையில் நூல் விமர்சனம் அமைந்துள்ளது. குழப்பம் யாருக்கு என்றும் கேட்கத் தோன்றுகிறது.
சமூக அறிவியல் நிராகரித்த ஏங்கெல் ?ின் ஆதி தாய் வழிச் சமூகம் குறித்த கருத்து இங்கு பெற்றுள்ள செல்வாக்கு, குமரிக் கண்டம் உண்மை என்று இன்னும் நம்பிக்கொண்டிருப்பது – இவற்றை வைத்துப் பார்த்தால் அறிவியலும், சமூக அறிவியலும் புறந் தள்ளி, குப்பைத் தொட்டியில் போட்ட கோட்பாடுகள் இறுதியாக புகலிடம் பெறும் இடம் தமிழ் நாடு, தமிழ் அறிவுச்சூழல் தானா என்றுக் கேட்கத் தோன்றுகிறது.
This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue
K.ரவி ஸ்ரீநிவாஸ்
திண்ணை ஆசிரியருக்கு
கடந்த இதழில் மலர்மன்னன் எழுதிய கட்டுரை சிலருக்கு அதிர்ச்சி தந்திருக்கலாம்.ஹிந்த்துவ பிரச்சாரத்தினை தொடர்ந்து கவனித்து வரும் எனக்கு அது வியப்பை அளிக்கவில்லை. ஹிந்த்துவவாதிகள் பலர் இதே
கருத்தினை கொண்டிருந்தாலும் அதை வெளிப்படையாக சொல்லமாட்டார்கள் அல்லது பூசி மெழுகுவார்கள். மலர்மன்னன் சற்று வெளிப்படையாக எழுதியிருக்கிறார். தலைப்பே (மோகன் தாஹ கொலையும், அதற்கு நாதுராம் நிறுவிய நியாயங்களும்) அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை எடுத்துரைக்கிறது. ஒரு கொலையை நியாயப்படுத்த எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்திருக்கும் அவர் மிக வெளிப்படையாக ஆம், கொலை செய்தது சரிதான், அதற்காக அவரும் வருந்தவில்லை, அதை நியாயப்படுத்தும் நானும் வருந்தவில்லை, ஹிந்து சமூகத்தின் நலனுக்காக கொலைகள் உட்பட எதை செய்தாலும் சரிதான் என்றே எழுதியிருக்கலாம்.
பல ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியரிடம் காந்தி கொலை செய்யப்பட்டதை விரிவாக விவாதித்த பின் ஒரு கேள்வி கேட்டேன், ஆர்.எஸ்.எஸ்காரர்களில் எத்தனை சதவீதம் பேர் இந்த கொலை நியாயமானது என்று நினைக்கிறார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள். 75% பேர் என்பது அவர் பதில். ஆனால் காந்தியை மிகவும் வெளிப்படையாக ஹிந்து விரோதி என்று சித்தரிப்பது தங்களுக்கு எதிராகப் போய்விடுமோ என்பதால்தான் ஆர்.எஸ்.எஸ் மிகவும் வெளிப்படையாக காந்தியை அவ்வாறு சித்தரிப்பதையும், கொலையை நியாயப்படுத்துவதையும் தவிர்க்கிறதா என்று கேட்ட போது அவரிடமிருந்து ஒரு புன்னகைதான் பதில். நான் சொன்னேன், உங்களால் பெரியாரை இந்து விரோதி, நாத்திகர் என்று பிரச்சாரம் செய்வது எளிது ஆனால் காந்தியை விமர்சிப்பவர்கள் கூட அவரை வெறுப்பதில்லை, கொலையை நியாயப்படுத்தமாட்டார்கள். மேலும் காந்தியை மகான், உதாரண புருஹர், ராம பக்தர் என்று இந்துக்கள் கருதுவதும் உங்களுக்கு இடையூறாக இருக்கிறது. இது உண்மைதானே என்று கேட்டேன். ஆம் என்று ஒத்துக்கொண்டார்.
ஹிந்துத்வவாதிகளுக்கு 1948ல் கொலை செய்யப்பட்டபின்னும் காந்தி தலைவலியாக, தொந்தரவாக இருக்கிறார் என்பதற்கு ஒரு உதாரணம்தான் மலர்மன்னன் கட்டுரை. காந்தியை மிக கடுமையாக விமர்சித்த அம்பேத்காரும், பெரியாரும் அவரை ஒழித்துக்கட்டப்பட வேண்டிய விரோதி என்று ஒரு போதும் கருதியதில்லை. ஆனால் இன்றும் கூட காந்தியை பற்றிய ஹிந்த்துவவாதிகளின் சித்தரிப்பும்,கண்ணோட்டமும் எப்படி இருக்கிறது என்பதற்கு மலர்மன்னன் கட்டுரை உட்பட பல உதாரணங்கள் தரமுடியும். மலர்மன்னன் திண்ணையில் எழுதத்துவங்கிய போது அதை வரவேற்றவர்கள் இக்கட்டுரை
குறித்து என்ன கருதுகிறார்கள் என்பதை எழுத வேண்டும். திண்ணையில் கிட்டதட்ட தனி ஆவர்த்தனமாக ஹிந்த்துவ கச்சேரி செய்து கொண்டிருந்தார் ஒருவர், இப்போது மலர்மன்னன் வேறு. கச்சேரி நன்றாக களை கட்டியிருக்கிறது. அடுத்து 2002ல் குஹராத்தில் நடந்த படுகொலைகளை நியாயப்படுத்தியும், நரேந்திரா ஒரு அவதார புருஹர், கர்ம் யோகி, கீதையின் படி நடந்தார் என்று மலர்மன்னன் கட்டுரைஎழுதினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
மலர்மன்னன் உட்பட பல ஹிந்த்துவவாதிகளின் சொல்லாடல்களில் பரிச்சயம் உடையவர்களுக்கு ஹிந்த்துவவாதிகள் உண்மைக்கு கொடுக்கும் மதிப்பு என்ன என்பது நன்றாகவே தெரியும். இதில் சுப்பிரமண்யன் சுவாமிக்கும், சந்தியா ஹெயினுக்கும், மலர் மன்னனுக்கு பெரிய வேறுபாடு இல்லை.நடையில்தான் மாற்றம் இருக்கும். அதிலும் சந்தியா ஜெயினின் (கு)தர்க்கத்தினை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.இவர்களுடைய எழுத்திற்கும் ஹிட்லரின் இனவெறிக்கு ஆதரவளித்து எழுதிய
Julius Streicherன் எழுத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.
நியுரெம்பெர்க் விசாரணையின் போது ஒரு நாசி கூறியது
‘I think you can score many more successes when you want to lead someone if you dont tell them the truth than if you tell them the truth ‘. மலர்மன்னனின் கட்டுரைகளை படிக்கும் போது இது என் நினைவிற்கு வருகிறது. மலர்மன்னனின் கட்டுரையை படிக்கும் வாசகர்கள் ஆர்கனைசரின் தலையங்கங்களையும் படிக்க வேண்டும், குறிப்பாக கீழ்கண்ட தலையங்கத்தினை
அதில் The poor MPs, mostly back benchers did not get even the usual chance that our democracy generously grants to even the most despicable criminals like Abu Salem or Shahabuddin.
என்று குறிப்பிப்படுகிறது.இது எந்த அளவு உண்மை என்பதை வாசகர்களே தீர்மானித்துக்கொள்ளட்டும்.
அயோத்திதாசரை இப்போது சிலர் புகழ ஆரம்பித்திருக்கிறார்கள், பெரியாரை திட்டிக்கொண்டே. இவர்கள் அயோத்திதாசர் குறித்து அலேஷியஸ் வைத்துள்ள விமர்சனங்களையும்,அயோத்திதாசர் குறித்து எழுந்துள்ள விமர்சனங்கை,விவாதங்களை பிறர் படிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்வது நல்லது. போகிற போக்கில் அவர்களுடைய இந்த பட்டியலில் அயோத்திதாசருக்கு அடுத்து ரவிக்குமார் இடம் பெற்றால் வியப்பில்லை.
This entry is part [part not set] of 34 in the series 20060113_Issue
டோண்டு ராகவன்
மலர் மன்னன் அவர்கள் ராஜாஜி அறிமுகப்படுத்திய கல்வி முறையைப் பற்றி எழுதிய கட்டுரையை படித்தேன். ராஜாஜி அவர்களை பற்றி நான் என் வலைப்பூவில் ஐந்து பதிவுகள் போட்டுள்ளேன். அவற்றின் சுட்டிகள் பின்வருமாறு:
ராஜாஜி என்னும் மாமனிதர் – 1 பார்க்க:
ராஜாஜி என்னும் மாமனிதர் – 2 பார்க்க:
ராஜாஜி என்னும் மாமனிதர் – 3 பார்க்க:
ராஜாஜி என்னும் மாமனிதர் – 4 பார்க்க:
ராஜாஜி என்னும் மாமனிதர் – 5 பார்க்க:
அவற்றில் நான் இங்கு இரண்டாம் பதிவில் எழுதியதை இங்கு தருவேன். எல்லா பதிவுகளையும், அவர்றின் பின்னூட்டங்களையும் படித்து பாருங்கள். பலர் இங்கு உண்மை நிலை புரியாமல் பேசுகிறார்கள் என்பதை உணர முடியும்.
‘இப்போது மிகத் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட ராஜாஜி அவர்களின் கல்வித் திட்டத்தைப் பற்றிப் பேசுவேன். 1953 ஆம் வருடம் சென்னை மாகாணத்தின் நிலையைப் பார்ப்போம்:
குழந்தைகள் இரண்டு வேளையும் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த முறை அமுலில் இருந்தது. பல ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கே வர இயலாத நிலை. நிதி நிலைமை ரொம்ப மோசமாக இருந்தது. 40 லட்சம் குழந்தைகள் பள்ளி செல்லும் வயதில் இருந்தனர். பல பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் இல்லை, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை.
அப்போது ராஜாஜி அவர்கள் முன்னிறுத்திய ஆரம்பக் கல்வி வெறும் ஏட்டளளவில் நிற்காமல் தொழில் சார்ந்ததாயிற்று. இரண்டு வேளைகளும் பள்ளி இருந்ததால், பல ஏழைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதையே தவிர்த்தனர். ஏனெனில் தங்கள் தொழில்களில் அவர்கள் தங்கள் பிள்ளைகள் உதவி செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்த்தனர். மேலும் இரு வேளையும் வகுப்புக்கு வர வேண்டிய நிலையில் ஒரு குறிப்பிட்ட அளவு மாணவர்களுக்கு மட்டும் கல்வி தர முடிந்தது.
ராஜாஜி அவர்களின் திட்டம் இந்த எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே வீச்சில் தீர்வு கண்டது. அதாவது, மாணவர்கள் தினம் மூன்று மணி நேரம் மட்டுமே வகுப்புக்கு வர வேண்டியது. அந்த தினசரி அவகாசத்தில் பெறும் கல்வி அவர்களுக்கு முழுப்பரீட்சை எழுதும் அளவுக்கு பாடம் கற்பிக்கப் போதுமானதாக இருந்தது. காலையில் ஒரு பேட்ச் வகுப்புக்கு வர வேண்டியது, மாலையில் இன்னொரு பேட்ச். இதனால் 100 பேருக்கு பதில் 200 பேருக்கு ஒரு பள்ளியில் கல்வி அளிக்க முடிந்தது. அதே கட்டிடம், அதே மற்ற வசதிகள். ஆனால் பலன் இரு மடங்குப் பேருக்கு. பிள்ளைகள் வகுப்புக்குச் செல்லாத நேரத்தில் ஏதாவது தொழில் கற்றுக் கொள்ளலாம் என்றுக் திட்டமிடப்பட்டது. பள்ளிகளுக்கு அனுப்பாமல் தங்களிடமே தொழில் கற்றுக் கொள்வதற்காக வைத்திருக்கும் பெற்றோரிடம் தினசரி 3 மணி நேரத்துக்காவது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பலாம் என்பது வலியுறுத்தப் பட்டது. முதலில் ஆரம்ப வகுப்புகளுக்கு மட்டும் இத்திட்டம் அமல் செய்வது என்றும், பிறகு படிபடியாக நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு இதை விரிவுபடுத்தலாம் என்றும் திட்டமிடப்பட்டது. கிராமங்களில் கல்வி நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஆகவே இத்திட்டம் சோதனை முறையில் அங்கு மட்டுமே நடத்த முடிவு செய்யப் பட்டது.
என்னத் தொழில் கற்பது ? இதில் மாணவர்களது பெற்றோர்களுக்கு பூரண சுதந்திரம் கொடுக்கப் பட்டது. அதற்கு முக்கியக் காரணம் அப்போதிருந்த ஆசிரியர்கள் எல்லோரும் மக்காலே முறையில் கல்வி கற்று பேனா பிடிக்கும் வேலைகளுக்கே லாயக்காய் இருந்தனர். ஆதாரக் கல்வி அளிக்கவே பணம் இன்றிக் கஷ்டப்பட்ட அரசு கண்டிப்பாகத் தொழில் கல்வியைப் பள்ளிகளில் அளிக்கும் நிலையில் இல்லை. அதற்கான கட்டிட அல்லது வேறு வசதிகள் இல்லவே இல்லை. ராஜாஜியின் எதிர்ப்பார்ப்பு என்னவென்றால், தன் சுயநலத்துக்காகவாவது ஒரு தகப்பன் தன் மகனுக்க்குத் தான் செய்யும் தொழிலில் சிறந்தப் பயிற்சியே அளிப்பான் என்பதே.
உண்மையை கூறப்போனால் இக்கல்வி முறை இருக்கும் வசதிகளை முடிந்த அளவுக்கு எவ்வளவு பேருக்கு அளிக்க முடியுமோ அத்தனைப் பேருக்கு அளிப்பது என்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது. ஏற்கனவே கூறியது போல எந்தத் தொழிலைக் கற்பதென்பது பெற்றோர்கள் விருப்பத்துக்கே விடப்பட்டது. தச்சன் மகன் வேறு தொழில் கற்கலாம் அல்லது ஒன்றுமே கற்றுக் கொள்ளாமலும் இருக்கலாம். ஒன்றுமே கற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக யாரும் சம்பந்தப்பட்டக் குழந்தைகளை தண்டிக்கப்போவதில்லை. அத்தொழில்களில் தேர்வும் கிடையாது. அந்தத் தரத்தில் ஒரு பள்ளியால் நிச்சயம் பயிற்சி தந்திருக்க முடியாது.
ஒரு தொழில் கற்றுக் கொண்டால் கைகளுக்கு ஒருங்கிணைந்து வேலை செய்யும் திறன் வரும். மூன்று மணி நேரக் கல்வியே பரீட்சைகளில் தேர்வு பெறப் போதுமானது. ஆகவே மாணவர்கள் பள்ளியிறுதித் தேர்வு எழுதவோ மேற்படிப்பு படிக்கவோ எந்த விதத் தடையும் இல்லை.
நிறையப் பேருக்குத் தெரியாத இன்னொரு விஷ்யம். 1953 – 54 கல்வியாண்டில் இம்முறை நிஜமாக அமலுக்கு வந்தது. பல ஆசிரியர்கள் பள்ளிகளில் மாணவர் வருகையில் முன்னேற்றத்தைப் பார்த்தனர். கூடிய சீக்கிரம் நகரங்களுக்கும் இம்முறையை விஸ்தரிக்க வேண்டும் என்றக் கோரிக்கையும் எழுந்தது.
21 ஜூன் 1953 கல்கி இதழில் கிண்டி பொறியியல் கல்லூரியின் அப்போதைய முதல்வர் கர்னல் எஸ். பால் கூறியதன் சாரம். இக்கல்விமுறை அவர் மாணவராக இருந்தப்போது யாழ்ப்பாணத்தில் காரை நகரில் செயல்பட்டது. கல்வியின் தரம் அருமை. பால் அவர்கள் சக்கிலிய மற்றும் தச்சுத் தொழிலில்களில் தேர்ச்சி பெற்றார். அது அவர் மேல் படிப்புக்குச் செல்லத் தடையாக இல்லை. சொல்லப் போனால் அவர் தன்னம்பிக்கை அதிகமானது. இவ்வாறு கூறியது பொறியியல் கல்லூரி முதல்வர்.
சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம். 1953-ல் பள்ளி செல்லும் வயதில் 80 லட்சம் குழந்தைகள் இருந்தனர். அவர்களில் 70 லட்சம் பேர் கிராமத்தில். கிராமத்துக் குழந்தைகளில் 38.5 லட்சம் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படுவதில்லை.மீதி 32.5 லட்சம் குழந்தைகளில் 10 லட்சம் பேர் மட்டும் கல்வியைத் தொடர்கின்றனர். மற்றவர்கள் படிப்பைப் பாதியில் விடுபவர்கள். ஆக 60 லட்சம் குழந்தைகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும். அவர்களுக்கு எப்படியாவது பகுதி நேர படிப்பையாவதுக் கொடுப்பதே ராஜாஜி அவர்களின் புதுக் கல்வித் திட்டத்தின் நோக்கம்.
எப்படியும் தங்கள் தொழிலில் தங்களுக்கு உதவியாக இருப்பதற்காகக் குழந்தைகளின் படிப்பை நிறுத்தும் பெற்றோர்கள், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் சாதகமான மனநிலைக்கு வருவதற்காகவே எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டன. இம்முறையை ராஜாஜி அவர்கள் எங்கிருந்தோ திடாரென்று கொண்டு வந்துவிடவில்லை. அச்சமயம் பத்தாண்டுகளுக்கும் மேலாக பரிசீலனையில் இருந்ததுதான் அத்திட்டம். பல கல்வி வல்லுனர்களிடம் ஆலோசனைக் கேட்டுத்தான் இம்முறை பரீட்சார்த்த முறையில் அமலுக்கு வந்தது.
கையில் ஒரு தொழில் இருப்பது எவ்வளவு சுயநம்பிக்கைத் தரும் என்பதை உணர நிஜமாகவே ஒரு தொழிலைத் தெரிந்து வைத்துக் கொண்டால் புரிந்து கொள்ளலாம். ராஜாஜி அவர்கள் கூறிய கல்விமுறை சரியானபடி நிறைவேற்றப் பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதைப் பார்ப்போம். மக்காலே கல்வி முறையால் நடந்த விபரீதங்கள் இல்லாமல் போயிருக்கும்.
அவை என்ன ? தகப்பன் நெற்றி வேர்வை நிலத்தில் விழப்பாடுபடுவான். பிள்ளை ஏட்டுக் கல்வி படிப்பான். டிகிரியும் வாங்கி விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம் ? அத்தனைப் பேருக்கும் வெள்ளைக் காலர் வேலைக்கு எங்குப் போவது ? படித்த மாணவர்களும் கையில் அழுக்கு ஏறும் தந்தையின் தொழிலைச் செய்யும் மனநிலையில் இல்லை. மகன் பந்தாவாக ஊரைச் சுற்றி வர, தகப்பன் உடல்நிலை பாதிக்கப்படுவதுதான் மிச்சம். ராஜாஜி கூறிய முறையில் தொழிலுக்கு மரியாதை வந்திருக்கும். ஏட்டுப் படிப்பும் படித்ததால் அவர்களை யாரும் சுலபத்தில் ஏமாற்றியிருக்க முடியாது. வேலை கிடைக்கிறதோ இல்லையோ கைவசம் தொழில் இருக்கவே இருக்கிறது. இந்த அருமையானக் கல்வி முறைக்குத்தான் குலக்கல்வி என்றுப் பெயரிட்டு கூக்குரலிட்டனர். பின்னால் வந்த தலைவர்கள் அதை அவசரம் அவசரமாகக் கைவிட்டதுதான் பெரிய சோகம். ‘
This entry is part [part not set] of 28 in the series 20060106_Issue
ஜெயக்குமார்
அன்புள்ள நேயர்களுக்கு,
சென்ற வாரம் திரு கோவிந்தராஜன் அவர்களின் ‘தவமாய் தவமிருந்து ‘ திரைப்படம் பற்றிய விமர்சனம்
பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன்.
தமிழ் திரையுலகிள் அத்தி பூத்தாற் போல ஒரு சில படங்களே வருகின்றன, அவற்றை ஊக்கபடுத்தாவிட்டாலும்
பரவாயில்லை,ஊனப்படுதாமல் (கேளியாக விமர்சனம் செய்யாமல்) இருந்தால் அதுவே தமிழ் மக்களுக்கு திரு கோவிந்தராஜன்
போன்றவர்கள் செய்யும் நல்ல காரியம் ஆகும்.
நல்ல இயக்குனர்களில் இரு வகை உண்டு, நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதன் இயல்பு மாறாமல் நல்ல தொழில்
நுட்பத்தின் உதவியுடன் கொடுப்பது( திரு கோவிந்தராஜன் அவர்கள் ரசிக்கும் ‘காதல் ‘ படங்கள் போல). மற்றொரு வகை நல்ல சமூக
கருத்துக்கள் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து ஓரளவுக்கு இயல்புடனும் நல்ல தொழில் நுட்பத்துடனும் கலந்து கொடுப்பது (நாங்கள் ரசிக்கும் ‘தவமாய் தவமிருந்து ‘ படம் போல).
‘காதல் ‘ நன்றாக ஓடினாலும் அது நம் சமூகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. அப்படியே இருக்குமானல், நாலு மெக்கானிக் பசங்கள் பள்ளி மாணவியின் பின்னால் சுற்றியிருபார்கள் அல்லது நாலு பள்ளி மாணவிிகள் சில மெக்கானிக் பசங்கள் பின்னால் சுற்றியிருபார்கள். ஆனால் நான் லண்டனில் என்னுடன் தங்கி இருக்கும் நன்பர்களுடன் ‘தவமாய் தவமிருந்து ‘ பார்த்தபோது அது எங்கள் அனைவரையும் பாதித்தது. பக்குவபட்ட எங்கள் கண்களிலேயே கண்ணீரை வரவழைத்த படம் அது. படம் பார்ததபிறகு ஊரில் உள்ள தாய், தந்தையரிடம் தொலைபேசி மூலம் மணிக்கில் பேசி கொண்டிருந்தார்கள்.
இந்த திரைபடத்தில் திரு கோவிந்தராஜன் அவர்கள் இயல்பு இல்லை என்று விமர்சித்த ஒவ்வொரு காட்சியையும் என்னால் நியாயப்படுத்த முடியும்.ஏனென்றால் அக்காட்சிகளில் சில நான் நேரில் பார்த்தவை, சில நானே அணுபவித்தவை. கதை நிகழ்கின்ற
அதே கல்லூரியில் அதே விடுதியில் 3 வருடங்கள் தங்கியிருத்தவன் நான். கதை நிகழ்கின்ற பகுதியில் இருந்து வந்தவர்களுக்கும், அதே மாதிரியான பொருளாதார நிலையில் இருந்து வந்தவர்களுக்கும் இது எளிதில் புரியும். உதாரனமாக வேலை வாய்ப்பு பற்றிய அவரின் கருத்துக்கு திரு பெரியசாமி அவர்களின் பதிலே சரியானதாகும். ஒரு குடும்பத்தில் கணவனும், மனைவியும் வேலைக்கு போகும் போது அவர்கள் கார், நல்ல வீடு(வங்கி கடனில்)என்று இருப்பது இயல்பானது தான். இதை அடைய அவர்களின் கால அவகாசத்தையும்(சேரனின் குழந்தைகளின் வளர்ச்சியை வைத்தே) எளிதில் யாரும் புரிந்து கொள்ளலாம். படித்து முடித்தவுடன் வேலை என்பது அவர்கள் படிக்கும் கல்லூரி,தேர்ந்தெடுக்கும் துறை மற்றும் மதிப்பெண்களை பொருத்தே அமைகிறது.அடுத்த வேலை
சாப்பாட்டிற்கே வழியில்லை மேலும் அவனை நம்பி வந்த பெண்ணையும்(மனைவியையும்) காப்பாற்றவேண்டும் என்ற சூழலில், நல்ல மனதுள்ள எவரும் வண்டி இழுக்கவும் தயங்கமாட்டார்கள். படிப்புக்கு ஏற்ற வேலை மற்றும் கெளரவம் எல்லாம் உள்ளூரில் தான், இது வெளியூர் மற்றும் வெளிநாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
இந்த திரைப்படத்தில் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாத காட்சி என்னவென்றால் இது போன்ற பின்தங்கிய பொருளாதார பின்புலத்தில் இருந்து வந்த ஒருவன் தனியாக ஒரு பெண்ணுடன் இருக்கும் போது உடலுறவு செய்யும் காட்சிதான். சேரன் தன் கதாபாத்திரத்தை சிறுமை படுத்திக்காட்ட வேறு ஏதாவது யோசித்திருக்கலாம்.
நல்ல ரசனையை மக்களிடையே வளர்க்கவேண்டியது உங்களை போன்ற விமர்சகர்களுக்கும் உண்டு. ஒரு ஊரில்
சாரயம் அதிகம் விரும்புகிறார்கள் என்பதற்காக தெருவுக்கு தெரு சாரயக்கடைகளை திறப்பவர்களை ஊக்கபடுத்தக்கூடாது. வெறும் 2 குத்துப்பாட்டு, 4 பங்ஜ் டயலக், 5 சண்டை மற்றும் லாஜிக் இல்லாத காட்சிகள் தான் திரைப்படங்கள் என்று படம் எடுத்து நம் தமிழ் மக்களின் ரசனையை அதள பாதளதில் தள்ளிக்கொண்டிருக்கும் விஜய், அஜித், சிம்பு மற்றும் சூர்யா(இயக்குனர்) போன்றவர்களின் திரைப்படங்களை இது போன்று விமர்சியுங்கள். இது போன்ற படங்களை பணம் செலவழித்து தியேட்டர்களுக்கு போய் பார்க்காமல், வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சி சீரியல்கள் பார்ககலாம் என்று சொல்லும் தைரியம் உங்களுக்கு உண்டா ? தயவு செய்து நீங்களும்
சன் தொலைக்காட்சியை போல தமிழ் மக்களின் ரசனையை மட்டமாக்கும் படங்களுக்கு முதலிடம் தராதீர்கள்.
உதாரனமாக அந்நியன் படத்தில் லாஜிக் இல்லாத காட்சிகள் மிக அதிகம். ஓருவர் அந்நியனாக மாறி ஊரெல்லாம் சுற்றுவாரம். ஆனால் வீட்டில் யாருக்கும் தெரியாதாம்,ஏன் அவருக்கே அவர் எப்போது அந்நியனாக மாறுவார் என்று தெரியாதாம். ஆனால் அந்நியனாக இருக்கும் போது போஸ்டர் அடித்து அனைவரையும் ஒரு நாள் ஒரு இடத்துக்கு வரச்சொல்வாரம் மீண்டும் அதே நாள் நிணைவு வைத்து அந்நியனாக மாறி அனைவருக்கும் காட்சி தருவாராம். இது போன்ற நிறைய லாஜிக் இல்லாத காட்சிகள் இப்படத்தில் இருந்தது. சீன படங்களின் சண்டை காட்சிகள் போன்ற பல காட்சிகள் இப்படத்தை நம் மண்ணை விட்டு அந்நியப்படுத்தி இருந்தது. ஒரு வேலை அதனால் தான் இப்படத்திற்கு அந்நியன் என்று பெயர் வைத்தார்கள் போலிருக்கிறது. ஆனாலும் ஒரு சமூக கருத்து இதில்
சொல்லப்பட்டதால் மேற்கூறிய விக்ஷயங்கள் இதில் பெரிதுபடுத்தப்படவில்லை. இது போன்ற வன்முறையை தூண்டும் படங்களை நீங்கள் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி இருந்தால் நீங்கள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர் ஆவீர்கள்.
This entry is part [part not set] of 28 in the series 20051230_Issue
எஸ் அரவிந்தன் நீலகண்டன்
சென்ற வார திண்ணையில் ஒரு அம்மையார் எனது கட்டுரை ஒன்றினை விமர்சித்து எழுதியிருந்தார். இஸ்லாம் மீது சேற்றினை வாரி எறிவதற்கு முன்னர் அதனை முழுமையாக அறிந்திருக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அவரது கருத்துக்களுக்கு நன்றி. அது ஒரு தனி நபரின் புரிதலால் எழுந்த கருத்தாக மட்டுமே முன்வைக்கப்பட்டிருக்குமெனில் இக்கடிதமே தேவை பட்டிருக்காது என்றுதான் சொல்ல வேணும். ஆனால் அம்மையார் தாம் ஒரு அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சமூகவியல் ஆசிரியை என்கிற முறையில் பிழையான கருத்தினைக்கண்டிப்பதாக கூறியிருப்பதால் அந்த எதிர்வினையில் என் கட்டுரை மீது அம்மையாருக்கு நேர்ந்த தவறான புரிதல்களை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அம்மையார் நான் ஏதோ ஒட்டுமொத்த இஸ்லாமே யூதர்களுக்கு எதிரான வெறுப்பியலைக் கொண்டதாக அக்கட்டுரையில் கூறியிருப்பதாக கருதுகிறார். ஆனால் என் கட்டுரை அவ்வாறு கூறவில்லை. நான் அவ்வாறு கருதுகிறேனா இல்லையா என்பது வேறு விசயம். அது குறித்து பின்னால் வருகிறேன். ஆனால் அந்த குறிப்பிட்டக் கட்டுரையில் நான் அவ்வாறு கூறவில்லை. இஸ்லாமிய இறையியலைத் தொடுவது அக்கட்டுரையில் இறுதி பாராதான். அது கூறுவது: ‘ஆழமாக அறியப்படாத விசயம் ‘பாலஸ்தீனிய ‘ பிரச்சனை இஸ்ரேலிய அராபிகளின் வாழ்வியல் உரிமை குறித்ததல்ல, பான்-இஸ்லாமிய இறையியலின் யூதர்கள் மீதான அதீத-காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடுதான். ‘O ye who believe! Take not the Jews and Christians for friends…. ‘ – [குரான் 5:51] ‘
ஒட்டுமொத்தமாக இஸ்லாமை இங்கு குறிப்பிடவில்லை. மாத்திரமல்ல அக்கட்டுரை எவ்வாறு சாதாரண முஸ்லீம்கள் யூதர்களை விரும்புகின்றனர் என்பதனைக் காட்டுகிறது. இதில் இஸ்லாம் மீது சேற்றினை வாரி இறைப்பது எங்கே வருகிறது ? இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கம் அது கூறுவதெல்லாம் அல்லாவின் மீது அன்பு மாத்திரம் தான். பிரச்சனை விளக்கம் (interpretation) தான் என்றெல்லாம் அம்மையார் அறிவுரை கூறுகிறார். பின்னர் யூத இறைவாக்கினரை இஸ்லாம் ஏற்றுக்கொண்டமையையும் கூறுகிறார். அதனைக் காட்டும் ஒரு குரான் வசனத்தையும் அளிக்கிறார். நன்றி. தன்யனானேன். ஆனால் பிரச்சனை யூத இறைவாக்கினரை இஸ்லாம் ஏற்றுக்கொண்டதா இல்லையா என்பதல்லவே மாறாக யூதர்கள் எனும் மக்கள் அவர்கள் தனி மதமாக இயங்கும் பட்சத்தில் எவ்வாறு காண்கிறது என்பதுதானே.
ஹமாஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளாகட்டும், பாலஸ்தீனிய அதாரிட்டி போன்ற அமைப்புகளாகட்டும் அவை தமது யூதவெறுப்பியல் பிரச்சாரத்தினை இஸ்லாமிய இறையியல் மூலமாகவே நடத்துகின்றன. அவ்வளவு ஏன் இன்றைக்கும் கூட யூதப்பிரச்சினையை அவர்களது இறைவாக்கினரை ஏற்றுக்கொள்ளும் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவம் யூதர்கள் கிறிஸ்துவை ஏற்கமறுத்ததால் ஏற்பட்டதாக -அதாவது இறையியல் வெறுப்பியல் மூலமாகவே -காண்கிறது. [பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள 2005 இல் வெளியிடப்பட்ட எவாஞ்சலிக்கல் இலக்கியம்] எனவே யூத இறைவாக்கினரை ஏற்பதென்பது யூத வெறுப்பியல் சார்ந்த இறையியலின்மைக்கு சான்றாகிவிட முடியாது.
உலக மதங்கள் குறித்து அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக இருக்கும் ஒரு நபர் இந்த எளிய உண்மையை புரியாதது போல பாவனை செய்வது அதிசயமாகத்தான் இருக்கிறது. இன்னமும் சொன்னால் எந்த அளவுக்கு யூத இறைவாக்கினரை ஒரு பின்னாளைய ஆபிரகாமிய சமயம் தனதாக்குகிறது அதற்கு நேர்விகிதமாக யூத வெறுப்பியல் அதிகரிக்கிறது எனலாம். உதாரணமாக அம்மையார் முன்வைத்த குரானின் மேற்கோளுடன் பின்வரும் குரான் வசனத்தையும் சேர்த்து படிக்க அது விளங்கும். ‘(நபியே) யூதர்களும், இணைவைத்து வணங்குவோரும், விசுவாசிகளுக்கு மனிதர்கள் யாவரிலும் கொடிய விரோதிகளாக இருப்பதை நிச்சயமாக நீர் காண்பீர்! ‘ (அல் மாயிதா-82) [தமிழ் மொழிபெயர்ப்பு: அல்லாமா அப்துல் ஹமீது பாகவி] அல்லாவை ஏற்றுக்கொண்ட யூதர்கள் நற்கதி அடைவார்கள் என்று கூட குரான் சொல்லத்தான் செய்கிறது. அல்லாவை ஏற்றுக்கொள்கிற யூதன் யூதனல்ல முஸ்லீம் என்பதுதான் இதில் பிரச்சனையே. அம்மையார் ஒற்றைப்பார்வை தவறு என போதிக்கிறார். பிரச்சனைகளுக்கு பலமுகங்கள் உண்டு என்கிறார். உண்மைதான். தமிழ் கூறும் நல்லுலகில் அ.மார்க்ஸ் காஸா குறித்து எழுதிய ஜூ.வி அபத்தக் கட்டுரை முதல் பா.இராகவனின் அராபியம் சார்ந்த இஸ்ரேல் குறித்த தொடர்கட்டுரை வரை இப்பிரச்சனைகளில் இஸ்ரேலின் பக்கம் எந்த அளவு கூறப்பட்டுள்ளது ? கிறிஸ்தவ காலனியவாதிகள் பூர்விகக்குடிகளுடனும், பங்களாதேஷ் இஸ்லாமிய வெறியர்கள் அங்குவாழ்ந்த ஹிந்துக்கள் மற்றும் பெளத்தர்களுடையவும், சீன கம்யூனிச வெறியர்கள் திபெத்தியர்களுடையவும் நிலங்களைப் பறித்தது போலலல்லாமல் நிலத்திற்கு அதிக விலை கொடுத்து பாலஸ்தீனியர்களிடமிருந்து ‘ யூதர்கள் வாங்கிய தகவல்கள் கூறப்பட்ட தமிழ் கட்டுரைகள் எத்தனை ? அல்லது யாசர் அராபத்தின் தாத்தாக்களும் மாமன்களும் கொழுத்த அமெரிக்க பணத்திற்கு யூதர்களிடம் தங்கள் நிலங்களை விற்றுவிட்டு பின்னர் அகதி அரிதாரம் பூசி போடும் மாய்மாலம் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகள் எத்தனை ? எனவே எனது கட்டுரை சமன் செய்யும் கட்டுரையே அன்றி ஒற்றைப்பார்வை கட்டுரை அல்ல. அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியையாக விளங்கும் இந்த அம்மையாருடன் விவாதிக்க, சேவாபாரதியின் துப்புரவுத்தொழிலாளர் குழந்தைகளுக்கான மாலைநேர கல்விமையங்களில் பணி புரியும் எனக்கும் நேரமும் சுவாரசியமும் இல்லைதான். இப்பதில் என் போன்ற எளிய இதர திண்ணை வாசகர்களுக்கு மட்டுமே. இறுதியாக ஒரு விசயம். அம்மையார் மேற்கோள் காட்டிய மேரி பிஷரின் நூல் அருமையான நூல்தான். ஆனால் அந்நூலில் இருக்கும் பெண்ணியத் தொடர்பான விசயங்களில் கிறிஸ்தவ-இஸ்லாமிய சார்பும் அதே சார்பு நிலை விளக்கங்கள் ஹிந்து மதத்துக்கும் சமுதாயத்துக்கும் அந்நூலில் மறுக்கப்பட்டிருப்பதையும் அமெரிக்காவைச் சார்ந்த மேல்நிலைப்பள்ளி ஆசிரியரும் இறையியல் பட்டதாரியுமான ஒருவர் எழுதியிருப்பதையும் இங்கே விரும்புகிற வாசகர்கள் பாருங்கள்:
This entry is part [part not set] of 34 in the series 20051223_Issue
அலர்மேல் மங்கை
சென்ற வாரம் அரவிந்த் நீலகண்டனின் ‘யூதர்களுக்காக ஏங்கும் இஸ்லாமியர் ‘ என்ற கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. பொதுவாக இது போன்ற மதங்களைப் பற்றிய, பத்திரிகைகளில் வெளியாகும் அபிப்பிராயங்களுக்குப் பதில் அளிப்பதையே விரும்புவதில்லை. ஒரு அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில், சமூகவியல் கற்றுத் தரும் ஆசிரியையாக இருப்பதில், ‘உலக மதங்கள் ‘ என்ற பாடத்தைக் கற்றுத் தரும் ஆசிரியையாக இன்று என்னால் மெளனம் சாதிக்க முடியவில்லை. மெளனம் சாதிக்கவே விருப்பம். காரணம், உடனே, இஸ்லாமிய அபிமானி, அடிவருடி என்பது போன்ற காரணப் பெயர்களை வீணாகச் சுமப்பதில் விருப்பமில்லை. ஒரு பல்கலைக் கழக, உலக மதங்களைக் கற்றுத் தரும் ஆசிரியையாக எனக்குத் தெரிந்ததைக் கூற வேண்டும் என்று தோன்றுகிறது.
‘O ye who believe! Take not the Jews and Christians for friends…. ‘ – என்று கூறிய குரான் கீழ் கண்டதையும் கூறியிருக்கிறது:
Say ye: We believe
In God, and the revelation
Given to us, and to Abraham,
Ismai ‘il, Isaac, Jacob,
And the Tribes, and that given
To Moses and Jesus, and that given
To (all) Prophets from their Lord:
We make no difference
Between one and another of them:
And we bow to God in surrender.
Aaron Klein ஒரு யூதர். அவர் எழுத்தில், யூதர்களுக்கான அபிமானமும், அதனால், நேரும் ஒற்றைக் கண்ணோட்டப் பார்வையும் இருப்பது புரிந்து கொள்ளத் தக்கதே. ஒரு பிரச்சினை என்று எடுத்துக் கொண்டால், அதற்குப் பல கோணங்கள் இருக்கும். ஒரு கோணத்தை மட்டுமே வாசகர்கள் அறிவது, நியாயமில்லை. எல்லா மதங்களிலும் நல்ல விஷயங்களும் உள்ளன. மத நூல்களில் கூறியுள்ளவைகள் எவ்வாறாக புரிந்து கொள்ளப் படுகின்றன (How they are interpreted) என்பதுதான் பிரச்சினை. இஸ்லாம் அல்லா மீதான அன்பையும், மிகவும் எளிமையான வாழ்க்கை முறைகளையும் போதிக்கும் மதம். எந்த மதத்தையும் முழுமையாகப் படித்த பின்பும், புரிந்த பின்பும் அதன் மீது சேற்றை வாரித் தெளிக்கலாமா என்று யோசிப்போம். இது ஒரு வாதத்திற்கான அழைப்போ, அறைகூவலோ அல்ல. எனக்குத் தெரிந்ததையும் கூறும் எண்ணம் மட்டுமே. Please understand that I do not have time or intention to jump into any kind of arguments. I know they can go back and forth, achieving nothing.
Source: Living Religions, Sixth Edition, by Mary Pat Fischer. Published by Prentice-Hall
This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue
ஜோசப்
மலர்மன்னனின் ‘ஈ வே ரா – ஒரு முழுமையான பார்வை முயற்சியில் ‘ குறித்த என் எதிர்வினை.
கட்டுரையாளர் நகைச்சுவையாய்ப் பேசுவதாய் நினைத்துக்கொண்டு பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் உணர்வைக் கேவலப்படுத்துகிறார். பெரியார் என்னமோ டைலர் கடையில் சட்டை தைத்துக் கொடுத்தார் மாதிரி என்று. அவர் சட்டை தைத்துக்கொடுக்க வரவில்லைதான். எங்கள் தந்தை சட்டை போட்டுப் பள்ளிக்குள் நுழையும் காலத்தில் குலக்கல்வித்திட்டம் கொண்டு வந்து எங்கள் குலங்களையே ே வரறுக்க நினைத்த சூதறிஞர் (மூதறிஞர்!!) ராஜாஜியின் திட்டத்தை முறியடிக்க பெரியாரும் காமராஜரும் போராடினர். அதேமாதிரி கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என வாதாட அல்லாடி கிருஷ்ணசாமி இருந்தார். சுப்ரீம் கோர்ட்டும் பிற்படுத்தப்பட்டோர்
இட ஒதுக்கீடு செல்லாது எனத்தீர்ப்பினைத் தந்து எங்கள் தந்தையர் தலைமுறையினை ஒழித்திட முனைந்தது.
பெரியார்தான் மக்களைத்திரட்டிப் போராடியதுதான் எங்களுக்கு முந்தைய தலைமுறையினைக் காக்க இட ஒதுக்கீட்டு சட்ட திருத்தத்தை
பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது. இதன் பின்னர்தான் சட்டை போட்டுப் பள்ளிக்குப் போய் வேலைக்கும் போனார்கள்.
மலர் மன்னன் மாதிரியான கருவிலே திருவுடையாளர்களுக்கு இவையெல்லாம் எரிச்சலைத்தருகின்றன.
This entry is part [part not set] of 33 in the series 20051125_Issue
பி கே சிவகுமார்
மலர் மன்னன் திண்ணையில் எழுதிவருவதைப் படித்து வருகிறேன். சில இதழ்களே வந்த 1/4 (கால்) என்ற பத்திரிகையின் ஆசிரியராக அவர் இருந்தார் என்பதையும் அவர் எழுத்துகள் மூலமே அறிந்தேன். ‘தமிழில் வந்த சிறுபத்திரிகைகளிலேயே சிறந்த பத்திரிகை என்று அதைச் சொல்லலாம் ‘ என்று அந்தப் பத்திரிகையைப் பற்றி திண்ணை ஆசிரியர் கோபால் ராஜாராம் தனிப்பேச்சில் குறிப்பிட்டார். மலர் மன்னன் கணையாழியையும் சிலகாலம் பார்த்துக் கொண்டார் என்று இந்திரா பார்த்தசாரதி தனிப்பேச்சில் சொன்னார். சு.ரா.வுடனான தன் நட்பைப் பற்றித் திண்ணையிலேயே மலர் மன்னன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் அரசியலில் இந்துத்துவ ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பதை அவர் எழுத்துகளிலிருந்தும் நண்பர்கள் சொல்வதிலிருந்தும் அறிய முடிகிறது. ‘அயோத்திதாசர் என்ற பெயருக்காகவே என்னைப் போன்றவர்கள் அவரைக் கொண்டாடக் கடமைப்பட்டிருக்கிறோம் ‘ என்று அவர் எழுதிய பொருள் பதிந்த வரிகளிலிருந்தும் இந்த அனுமானத்துக்கு வருகிறேன். எனக்கு பா.ஜ.க. மற்றும் சங் பரிவார் அரசியல் மற்றும் கொள்கைகளுடன் உடன்பாடு இல்லை என்றாலும், அவர் எதனுடைய ஆதரவாளராக இருப்பதும் எனக்குப் பிரச்னையில்லை. அவர் எழுத்துகள் ஆர்வத்துடன் படிக்கக் கூடியதாகவும் தொடர்ந்து சிந்திக்க வைப்பதாகவும் இருக்கின்றன. அதற்காக அவருக்கு நன்றிகள்!
திண்ணையில் http://www.thinnai.com/le1118051.html என்ற முகவரியில் மலர் மன்னன் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிடுகிறார் – ‘தலித்துகளுக்கு மேல் சாதியினரின் அடக்குமுறை ஆதிக்கத்திலிருந்து விடுதலை அளிப்பது பற்றிய பிரக்ஞை காங்கிரசுக்கு தாசரின் காலத்திலுங்கூட இருக்கவில்லை என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். அயோத்திதாசர் பிரிட்டிஷ் ஆட்சிக்குத் தீவிர ஆதரவாளராக இருந்ததும் தலித்துகள் நலனில் பிரிட்டிஷ்காரனுக்கு இருக்கிற அக்கரைகூடக் காங்கிரசுக்கு இல்லை என்பதால் தானாயிருக்கும். ‘
இந்த வரிகள் என்னை யோசிக்க வைத்தன. பெரியாரும் காங்கிரஸை எதிர்த்தவர்தான். பிரிட்டிஷ்காரர்களுடன் நட்புடன் இருந்தவர்தான். சுதந்திரம் வேண்டாம், கொடுத்தால் திராவிட நாடாகக் கொடுங்கள் என்றவர்தான். சுதந்திரத்தைவிடவும் சமூக வேற்றுமைகள் களையப்படுவது முதன்மையான விஷயம் என்றவர்தான். அயோத்திதாசர் பிரிட்டிஷ் அரசை ஆதரித்ததற்குக் காங்கிரஸைக் குறை சொல்வது சரியாக இருக்குமென்றால், பெரியாருக்கும் அதே நியாயத்தை வழங்கிப் பெரியாரையும் புகழ்வதுதான் சரியாக இருக்கும். பெரியாரைப் பற்றிய மலர்மன்னனின் பார்வை என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், பெரியாரைப் பற்றிய இந்துத்துவவாதிகளின் பார்வை பெரியாரைச் சிலாகிப்பதாக இல்லை என்று அறிவேன். (பெரியாரைப் பற்றிய என்னுடைய பார்வை, ஜீவா, ஜெயகாந்தன் வழி வந்த இடதுசாரிகளின் பார்வை வழியாக உருப்பெற்றது என்பதையும் இங்கே சொல்லி வைக்கிறேன்.)
எனவே, என்னுடைய கேள்வி – அயோத்திதாசருக்குத் தருகிற இந்தச் சலுகையைப் பெரியாருக்கும் மலர் மன்னன் தருவாரா ? அப்படித் தருவதுதானே மலர்மன்னன் பார்வையின்படி சரியாக இருக்கும். இல்லை, பெரியாரின் பிரிட்டிஷ் விசுவாச நிலைப்பாட்டைப் பாராட்ட இயலாது என்று மலர் மன்னன் சொல்வாரேயென்றால், அதற்கானக் காரணங்கள் என்று மலர் மன்னன் எவற்றை முன்வைப்பார் ? அறிய ஆவலாக இருக்கிறேன்.
பி.கு.: பெரியார் மீது பல விமர்சனங்கள் உள்ள என்னைவிடப் கண்மூடித்தனமாகப் பெரியாரை வழிபடும் பெரியாரியவாதிகள்தான் இத்தகைய ஓர் கடிதத்தை எழுதியிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பெரியார் பெயரைச் சொல்லிப் பிழைப்பவர்கள் குஷ்புவுக்கும் சுஹாசினிக்கும் செருப்பையும் துடைப்பத்தையும் காட்டிப் பெரியார் பெயரைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதால், நான் எழுதுகிற நிலையாயிற்று.
This entry is part [part not set] of 31 in the series 20051118_Issue
மலர் மன்னன்
அன்புள்ள ‘திண்ணை ‘ ஆசிரியருக்கு,
‘திண்ணை ‘யின் சமீப இதழில் ‘அயோத்தி தாசர் ஆய்வுகள் ‘ என்ற ராஜ் கவுதமனின் நூலை பாவண்ணன் ஆழமாகவும் விரிவாகவும் நுட்பமாகவும் மிகுந்த சிரமம் எடுத்துக்கொண்டு அறிமுகம் செய்து எழுதியிருப்பது, எடுத்துக்கொள்ளும் வேலையை முழுமையாகச் செய்து முடிப்பதில் அவருக்குள்ள பொறுப்புணர்ச்சியைப் புலப்படுத்துகிறது.
‘அயோத்திதாசர் மறைந்த பிறகான இந் த எண்பது ஆண்டு காலத்தில் தலித்துகளின் சக்திகள் இந்திய தேசிய காங்கிரஸ், பிராமணர் அல்லாத திராவிட இயக்கம், வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்திய பொதுவுடைமை இயக்கங்கள் போன்ற அயலார்களின் இயக்கங்களுக்காகத் தொடர்ந்து எரிக்கப்பட்டன ‘ என்றுதான் ராஜ் கவுதமன் எழுதுகிறார். எனவே,
‘பார்ப்பனர் அல்லாத கட்சியாலும் திராவிடர் இயக்கத்தாலும் தாசர் காலத்து தலித்துகள் ஆதாயத்தை அடை ந்திருக்க வாய்ப்பில்லை என்றேதோன்றுவதாக ‘ பாவண்ணன் சமாதானப்பட்டுக் கொள்வது பொருத்தமாக இல்லை.
மேலும், அந்த நாட்களில் ஆண்டு தோறும் விடாமல் கூடிக்கலைந்து கொண்டிருந்த காங்கிரஸ் மகாசபை பல்வேறு பிரச்சினைகளுக்காகவுந்தான் தீர்மானங்களை நிறைவேற்றிக்கொண்டிருந்தது. எனவே அது விடுதலைப் போராட்டதிற்கு அழைப்பு மட்டுமே விடுத்துக் கொண்டிருந்ததாகப் பாவண்ணன் சமாதானம் சொல்வதும் சரியில்லைதான். தலித்துகளுக்கு மேல் சாதியினரின் அடக்குமுறை ஆதிக்கத்திலிருந்து விடுதலை அளிப்பது பற்றிய பிரக்ஞை காங்கிரசுக்கு தாசரின் காலத்திலுங்கூட இருக்கவில்லை என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.
அயோத்திதாசர் பிரிட்டிஷ் ஆட்சிக்குத் தீவிர ஆதரவாளராக இருந்ததும் தலித்துகள் நலனில் பிரிட்டிஷ்காரனுக்கு இருக்கிற அக்கரைகூடக் காங்கிரசுக்கு இல்லை என்பதால்
This entry is part [part not set] of 31 in the series 20051118_Issue
மலர் மன்னன்
‘அவுரங்கசீப்பின் உயில், ‘ கூண்டில் ஏற்றப்பட்ட குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் போல் மிகத் துல்லியமாய் வெளிப்பட்டிருக்கிறது. பெற்ற தகப்பனுக்குத் தான் இழைத்த கொடுமைகளும், நியாயப்படி ஆட்சிக்கு வரவேண்டிய தன் மூத்த சகோதரன் தாரா ஷன்க்கோவைச் சித்ரவதை செய்துகொன்றதும், உடனிருந்த சகோதரனையே கவிழ்த்துவிட்டதும் அந்திமக் காலத்தில் அவுரங்கசீப்பை வெகுவாகவே பாதித்திருக்கவேண்டும். சாத்வீகமான முறையில் வீதியில்படுத்து மறியல்செய்த ஆயிரக்கணக்கான நிராயுதபாணி மக்கள் மீது சிறிதும் ஈவிரக்கமின்றி யானை மீது சவாரிசெய்துகொண்டுபோய் மண்ணை ரத்தச் சேறாக்கியதும், சிவாஜி மகராஜைப் பேச்சு வார்த்தைக்கென அழைத்துவிட்டுச் சிறைப்படுத்தியதுமான முறைகேடுகளுங்கூட நினைவுக்கு வந்து துன்புறுத்தியிருக்கலாம். எனவேதான் தன்னைப் பாவியென்று உணர்ந்து வருந்த முடிந்திருக்கிறது.
ஹிந்துஸ்தானம் முழுமைக்கும் சக்ரவர்த்தியென்று தன்னைப் பிரகடனம் செய்து கொண்ட போதிலும், தன் சொந்தப் பணத்தில் செய்யும் இனிப்புச் சோற்றை முகமதிய ஏழைகளுக்கு மாத்திரமே வழங்கவேண்டுமென விதித்த நிபந்தனை அவுரங் கசீப்பின் தீவிர மதப்பற்றை வெளிப்படுத்தி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
இத்தகைய தீவிர மதாபிமானம் ஹிந்து மன்னர்களுக்கும் இருந்திருக்குமானால் பாரதத்தின் சரித்திரமே வேறாக இருந்திருக்குமே!
அவுரங்கசீப்பின் பிறந்த நாளோ, இறந்த நாளோ வரப்போகிறதா என்பதை யாராவது தெரிவித்தால் நலம். ஏனென்றால் அம்மாதிரியான தருணங்களில் மட்டுமே சம்பத்தப் பட்டவர்களை நினைவுகூர்வது நம்மவர் சம்பிரதாயம்.
This entry is part [part not set] of 31 in the series 20051021_Issue
மு சுந்தரமூர்த்தி
ஆசிரியருக்கு,
சின்னக்கருப்பனின் கட்டுரை குறித்த என் கடிதத்திற்கு அவருடைய பதிலைக் கண்டேன். அவருடைய கற்பனைக் குதிரை அசாத்தியமானது. எந்த நேரத்தில் எந்தப் பக்கம் தாவும் என்பது கணிப்பது கடினம். இந்த ஒரு சுவாரசியத்திற்காகவே அவருடைய எழுத்துக்களை எப்போதும் தவறவிடுவதில்லை. அவருடைய கடிதத்தில் வெளிப்பட்ட சில சுவாரசியங்கள்:
1. சின்னக்கருப்பன் சொல்வது: ‘ஜீன், பரிணாமம், இந்துத்துவ கருத்தியல்கள் ஆகியவை திராவிட ‘விளிம்பு நிலை ‘ அரசியலைப் பொறுத்தமட்டில் சாணி உருண்டைகள் என்று சொல்கிறார். அது எனக்கு ஆச்சரியமாக இல்லை ‘.
நான் எழுதியிருந்தது ‘இந்துத்துவ கருத்தியலோடு ஜீன், பரிணாமம் போன்ற அறிவியல் வார்த்தைகளை கலந்து பிசைந்து உருட்டிய சாணி உருண்டைகளை ‘. சின்னக்கருப்பனுக்காக ஒரு விளக்கம்: இந்துத்துவ கருத்தியல் — சாணி; ஜீன், பரிணாமம் — அறிவியல் வார்த்தைகள். சின்னக்கருப்பனுக்கு ஆச்சரியமாக இல்லாதது எனக்கும் ஆச்சரியமாக இல்லை. பிறர் சொல்வதைத் தன் வசதிக்கேற்ப திரித்துக்கொண்ட பிப 8கு ஆச்சரியப்பட என்ன இருக்கிறது ?
2. சின்னக்கருப்பன் சொல்கிறார்: ‘… அதனை விளிம்பு நிலை கருத்தியல் என்று சொன்னால்தான் தொடர்ந்து தன்னை underdog ஆகவும், தன்னை பாஜக போன்ற பெரும்பான்மை (தமிழ்நாட்டில்!) இந்துத்வ கருத்தியல்வாதிகளால் பலிவாங்கப்படும் பலிகடாக்களாகவும் காட்டிக்கொள்ள முடியும், அதன் மூலம் இடதுசாரி இன்னபிற (ரவி ஸ்ரீநிவாஸ்!) அறிவுஜீவிகள் மத்தியில் தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியும் ‘.
என்னைப் பற்றி எனக்கே தெரியாத பேருண்மைகளை சின்னக்கருப்பன் கண்டுபிடித்து வைத்திருக்கிறார். ‘Underdog ‘ ஆக ஒலிக்கும் போலியான புனைபெயரைத் தனக்குச் சூட்டிக்கொண்டுள்ளவர் நான் என்னை underdog ஆக, பலிகடாவாக எங்கு, எப்போது காட்டிக்கொண்டேன் என்று விளக்கினால் அவருக்கு நன்றி சொல்வேன். அப்படியே ரவி ஸ்ரீநிவாஸ் தவிர வேறெந்த இடதுசாரி, இன்னபிற அறிவுஜீவிகளிடம் எனக்கு பாதுகாப்
‘d2 கிடைக்கும் என்று சொன்னால் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.
3. சின்னக்கருப்பன் சொல்வது: ‘… திரு சிவக்குமார் அவர்கள், திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் ஆகியோரையும் குறிப்பிட்டு குழு ஒன்றை உருவாக்க முனைகிறார். கட்சி சார்பு நிலைப்பாடு இல்லாமல் சிந்திக்கத் தெரியாதவர்கள், எல்லோரையும் கட்சி சார்பாகத் தான் எழுதுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு, தன் கட்சி நிலைப்பாட்டுக்கு எது எதிராக இருந்தாலும், கேலி கிண்டல்களையும் திட்டல்க 8ளயும் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் ‘
என்னுடைய கடிதத்தில் நான்கு பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஒரு பெயரை ஏன் விட்டுவிட்டாரென்று தெரியவில்லை. நான் சிவகுமார் எழுதிய கட்டுரையிலிருந்து அறிவியல் எழுத்துக்களைப் பற்றிய பி.ஏ.கிருஷ்ணனின் கருத்தை மட்டும் மேற்கோள் காட்டியிருந்தேன். சிவகுமாரின் கலந்துரையாடல்-கட்டுரைக்காக அவருக்கு நன்றியும் சொல்லியிருந்தேன். சிவகுமார் எழுதியிருந்த பிஏகேவின் கருத்தி ல் உள்ள ஆபத்தை (அறிவியல் கட்டுரைகளில் உண்மை அரைகுறையாக இருந்தாலும் பரவாயில்லை. அவற்றை ஊக்கப்படுத்தவேண்டும்) சுட்டிக்காட்ட சின்னக்கருப்பனின் கட்டுரை ஒரு நல்ல உதாரணமாக இருந்ததால் இரண்டையும் ஒரே கடிதத்தில் குறிப்பிடும்படி ஆயிற்று. பெயரைக் குறிப்பிட்டதாலேயே சிவகுமாரை சின்னக்கருப்பனோடு சேர்த்து குழு ஒன்றை உருவாக்க முனைகிறேன் என்பது சுவையான கற்பனை (அரவிந்தன் நீலகண்டனின் பெயரும் பி.ஏ.கே.வின் மேற்கோளுக்குள் வருவது. சின்னக்கருப்பனின் கட்டுரையை ‘அருமையான கட்டுரை ‘ என்ற சான்றிதழோடு அ.நீ. அவரது வலைப்பதிவில் மறுபதிப்பு செய்திருந்தபோதிலும் இருவரும் ஒரே குழு என்றும் நான் குறிப்பிடவில்லை என்பதை அறிக). அவருக்கே அப்படி ஒரு குழுக் கட்டும் ஆசை இருந்தால் அதை என் பெயரைச் சொல்லி செயல்படுத்தத் தேவையில்லை. சின்னக்கருப்பன் தனிய 1க இயங்கினாலும் எனக்குக் கவலையில்லை. இன்னும் இரண்டு பேரோடோ இருபது பேரோடோ சேர்ந்து குழுவாக இயங்கினாலும் எனக்குக் கவலையில்லை.
‘தன் கட்சி ‘ என்று என்னை ஏதோவொரு கட்சிக்குள் சேர்க்க சின்னக்கருப்பன் விரும்புவதாகத் தெரிகிறது. அது எதுவாக இருந்தாலும் எனக்காக உறுப்பினர் தொகையை அவரே கட்டி உறுப்பினர் அட்டையை அனுப்பி வைத்தால் எனக்கும் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். ‘கேலி கிண்டல்களையும், திட்டல்களையும் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் ‘ என்று சின்னக்கருப்பன் மற்றவர்களை குறிப்பிடுவது தான் நகைச்ப dவையின் உச்சகட்டம்.
‘அதாவது ‘ போட்டு புலிக்கும், மனிதருக்குமான மரபியல்-பரிணாமத் தொடர்பை ‘என்னிஷ்டம் ‘ போல் விளக்குகிறேன் என்றால் அந்த வார்த்தையை நீக்கிவிட்டும் வாசிக்கலாம். கூடவே நான் மேற்கோள் காட்டியுள்ள அவரது ‘புலிகள் ‘ ‘மனிதர்கள் ‘ பத்திகளை இணைக்கும் ‘இது நம்மிடம் இன்னும் இல்லை ? ‘ என்ற கேள்வியையும் தொடர்ந்து ‘நம்மிடம் உள்ள ஜீன்கள் காலம் காலமாக இவ்வாறு தேர்வு செய்யப்பட்டு நம்மிட ம் வந்திருக்கின்றன ‘, ‘ஜீன் நம்மிடம் வருவது விலங்குகள் காலத்திலிருந்து ‘ என்ற வரிகளையும் சற்று உரத்தும் வாசித்தால் புலிக்கும், மனிதருக்கும் பரிணாம முடிச்சு போடுவது யாரென்று தெரியும்.
சின்னக்கருப்பனுக்கு என்னைவிட அதிகமாகவே பரிணாம அறிவு இருக்கக்கூடும். ஆனால் அதை அவருடைய கட்டுரையில் வெளிப்படுத்தவில்லை. மாறாக தன்னுடைய அரசியல் சாய்வை நியாயப்படுத்த, தான் எதிர்க்கும் அரசியலை அடிக்க பரிணாமம், ஜீன் என்ற வார்த்தைகளைக் கலந்து பாவ்லா மட்டுமே காட்டியிருக்கிறார். அதற்காக அபத்தமான உதாரணங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதை நான் மட் டும் சொல்லவில்லை. வலைப்பதிவுகளில் கருத்து தெரிவித்த பிறரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லாவற்றையும் ‘கடவுள் செயல் ‘ என்று எளிதாக விளக்கிவிடுவார்கள். ‘உயிரியல் கற்றுத் தெளிந்தவர்கள் ‘ ‘ஜீன் மைய ‘க் கோட்பாட்டை வைத்து உயிரினங்களின் பொருண்மை, உளவியல் பண்புகள் எல்லாவற்றையுமே ஜீன்களை வைத்து நியாயப்படுத்திவிடுவார்கள். ஆனால் சில அபூர்வமான சிந்தனையாளர்கள் இரண்டையும் சேர்த்து உருட்டி விளையாடும்போது அதிகப்படியான எச்ஊ aரிக்கையாகவே இருக்கவேண்டியிருக்கிறது.
இந்த விவாதத்தில் இதுவே என்னுடைய கடைசி கடிதம் (என்னுடைய கூற்று எதையும் மேற்கோள் காட்டாமல் போகிற போக்கில் திரிக்காமலிருக்கும் வரை).
ஒரு உபரித்தகவல்: மூன்று வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் டென்னிசி மாநில உச்ச நீதிமன்றம் landmark judgement என்று விவரிக்கப்பட்ட, பிற்காலத்தில் கருத்தரிப்பு தொழில்நுட்பம் தொடர்பான வழக்குகளில் முன்மாதிரியாகக் காட்டக்கூடிய தீர்ப்பொன்றை வழங்கியது. ஒரு பெண்ணும், ஓர் ஆணும் சேர்ந்து வாழ்ந்தபோது (ஒரே பிரசவத்தில் மூன்று) குழந்தைகள் பெற்றுக்கொண்டார்கள். தன் ஆண் துணையின் மரபணுபை 5யும், வேறொரு பெயர் தெரியாத பெண்ணின் தானம் செய்யப்பட்ட சினைமுட்டையையும் இணைத்து உருவாக்கிய கருவை வைத்து இப்பெண் கருத்தரித்தார். இப்போது இருவரின் உறவு மோசமடைந்து பிரிந்த பிறகு குழந்தைகளின் பாதுகாப்புரிமையை இருவருமே கோர பெண்ணுக்கே முதன்மை பாதுகாப்புரிமை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கும், இப்பெண்ணுக்கும் மரபணுத் தொடர்பில்லை. ஆணுக்கு மரபணு த் தொடர்புள்ளது. இருந்தாலும் தன்னுடைய ஜீன்கள் இல்லாத, ஆனால் தான் இப்போது விரும்பாதவரின் ஜீன்களைக் கொண்டுள்ள குழந்தைகளை பாதுகாக்கும் உரிமையை இந்த பெண் கோரிப் பெற்றுள்ளார்.
This entry is part [part not set] of 22 in the series 20051014_Issue
சின்னக்கருப்பன்
எனது சிறிய கட்டுரைக்கு எதிர்வினையாக திரு ரவி ஸ்ரீநிவாஸ் அவர்களும், திரு சுந்தரமூர்த்தி அவர்களும் எழுதிய கடிதங்களுக்கு சிறிய பதில்.
திரு ரவி ஸ்ரீநிவாஸ் அவர்கள் என் மீது எனக்கே இல்லாத அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறார். அதற்கு நன்றி. மற்றபடி அவர் காட்டிய சுட்டிகளை நான் ஏற்கெனவே படித்துவிட்டேன். அதில் எங்கே நான் எழுத முயன்றதற்கு மாறுபட்ட கருத்து இருக்கிறது என்பதையும் அவர் சற்றே எழுதியிருக்கலாம். இது ஒரு நல்ல கடித முறை. முதலில் கிண்டல், அப்புறம் நான் மகா பெரிய புத்திசாலி, அறிவாளி என்பதற்கு நான் காட்டும் உரல்கள் என்று இரண்டு உரல்களை (படித்தோ படிக்காமலோ) போட்டு விடலாம். எதிர்த்து எழுதியதாகவும் ஆயிற்று, ரொம்பவும் தெரிந்திருக்கவும் வேண்டாம், அதே நேரத்தில் தன்னை அறிவாளி என்றும் காண்பித்தாய்விட்டது.
இதனைக்காட்டிலும் திரு சுந்தர மூர்த்தி அவர்களது கடிதம் குறிப்பாக சில விஷயங்களைச் சொல்கிறது.
ஜீன், பரிணாமம், இந்துத்துவ கருத்தியல்கள் ஆகியவை திராவிட ‘விளிம்பு நிலை ‘ அரசியலைப் பொறுத்தமட்டில் சாணி உருண்டைகள் என்று சொல்கிறார். அது எனக்கு ஆச்சரியமாக இல்லை. ஆனால் திராவிட அரசியலை விளிம்பு நிலை அரசியல் என்று சொல்வதுதான் ஆச்சரியமாகவும் சிந்திக்கத்தக்கதாகவும் இருக்கிறது. பெரியார் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்த காலத்திலிருந்து மெல்ல மெல்ல இந்து கருத்தியல்களை பிற்போக்காக முத்திரை குத்தி விளிம்பு நிலைக்கு தள்ளியபின்னால், கட்சி அரசியல் ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும், பொது நபர் வழிபாடு ரீதியாகவும், மைய இடத்தில் உட்கார்ந்திருப்பது திராவிட கருத்தியலாக இன்று இருக்கிறது. ஆனால், அதனை விளிம்பு நிலை கருத்தியல் என்று சொன்னால்தான் தொடர்ந்து தன்னை underdog ஆகவும், தன்னை பாஜக போன்ற பெரும்பான்மை (தமிழ்நாட்டில்!) இந்துத்வ கருத்தியல்வாதிகளால் பலிவாங்கப்படும் பலிகடாக்களாகவும் காட்டிக்கொள்ள முடியும், அதன் மூலம் இடதுசாரி இன்னபிற (ரவி ஸ்ரீநிவாஸ்!) அறிவுஜீவிகள் மத்தியில் தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
எனக்கு பரிணாம அறிவு இல்லை என்பதற்கு அவர் காட்டியுள்ள உதாரணம், எந்த அளவுக்கு அவர் பரிணாம அறிவியலை அறிந்து வைத்திருக்கிறார் என்று காட்டுகிறது. (உனக்கு அம்மாவின் கண் என்று ஒரு பையனை காட்டி சொன்னால், அது எக்ஸ் குரோமசோமில் இருக்கிறதா ஒய் குரோமசோமில் இருக்கிறதா என்று திரு. சுந்தரமூர்த்தி அவர்கள் எகிறி குதிப்பார் என்று நினைக்கிறேன்). கொச்சையான உதாரணம்தான் நான் கொடுப்பது. ஜார்கன்களை உபயோகப்படுத்தி படிப்பவரை பயமுறுத்தும் வேலையை நான் செய்வதில்லை.(தமிழில்) ஏனெனில் அதன் மூலம் நான் சொல்லவிரும்புவது படிப்பவரிடம் போவதில்லை. நான் என்னை பெரிய படிப்பாளியாக காட்ட வேண்டுமானால் அது பயன்படலாம். மற்றபடி அதனால் பயனென்ன ? ஆகவே அதனைப் பற்றி நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. மேலும் நான் புலிகளிடமிருந்து மனிதர்கள் வந்தார்கள் என்று எங்கே எழுதியிருக்கிறேன் ? இவர் ஒரு ‘அதாவது ‘ போட்டு தன்னிஷ்டம் போல நான் எழுதியதை விளக்கி அதில் தப்பு கண்டுபிடித்து எழுதுகிறார். இதில் திரு சிவக்குமார் அவர்கள், திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் ஆகியோரையும் குறிப்பிட்டு குழு ஒன்றை உருவாக்க முனைகிறார். கட்சி சார்பு நிலைப்பாடு இல்லாமல் சிந்திக்கத் தெரியாதவர்கள், எல்லோரையும் கட்சி சார்பாகத்தான் எழுதுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு, தன் கட்சி நிலைப்பாடுக்கு எது எதிராக இருந்தாலும், கேலி கிண்டல்களையும் திட்டல்களையும் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். முன்பே ஒருமுறை எழுதியதுபோல, நான் எழுதுவதுதான் சரியானது என்று கருத்து ஏதும் என்னிடம் இல்லை. விவாதங்களின் மூலம் நான் நிச்சயம் பயன்பெறுகிறேன் என்பதை நான் அறிந்திருக்கிறேன்.
எல்லோரும் இணைப்புகள், புத்தகங்கள் என்று பரிந்துரைக்கிறார்கள்.
நானும் பரிந்துரைக்கிறேன்.
1) Selfish Gene, Richard Dawkins
2) Cultural Materialism: The Struggle for a Science of Culture, Marvin Harris
3) Guns, Germs, and Steel: The Fates of Human Societies, Zared Diamond
This entry is part [part not set] of 22 in the series 20051006_Issue
மு. சுந்தரமூர்த்தி
ஆசிரியருக்கு,
‘திண்ணை’ எழுத்தாளர் சின்னக்கருப்பன் ஒரு அபூர்வமான சிந்தனையாளர். நகைச்சுவை மதிப்பு கருதி இவருடைய எழுத்துக்களை படிக்கத் தவறுவதில்லை. சென்றவாரம் எழுதியிருந்த கட்டுரையில் (“கலாச்சார புரட்சியாளர்களும் கலாச்சார காவலர்களும்”) அரசியல், சமூகவியல், பரிணாமவியல், மரபணுவியல் என்று எல்லாவற்றையும் கலந்து அசத்திவிட்டார். இவருடைய கட்டுரைகளை ஏன் “நகைச்சுவையும் வித்தியாசமானவையும்” பகுதியில் போடாமல் “அரசியலும் சமூகமும்” பகுதியில் போடுகிறீர்கள் என்ற சந்தேகம் அடிக்கடி எழுந்தாலும், பரிணாமம், ஜீன் போன்ற முக்கிய சொற்களைப் பார்த்து “அறிவியலும் தொழில்நுட்பமும்” பகுதியில் போடாமல் விட்டார்களே அதுவரை அறிவியல் தப்பித்தது என்று ஆறுதலடையலாம்.
சின்னக்கருப்பன் நகைச்சுவையோடு எழுதுபவர் மட்டுமல்ல, சுவாரசியமான இந்து கலாச்சார சனாதானியும் கூட. இந்துத்துவ கருத்தியலோடு ஜீன், பரிணாமம் போன்ற அறிவியல் வார்த்தைகளை கலந்து பிசைந்து உருட்டிய சாணி உருண்டைகளை திராவிட/விளிம்பு நிலை அரசியல் மீது எறிவதே இக்கட்டுரையின் நோக்கம். இந்த விவகாரத்தில் அடித்துக்கொண்ட இரு சாராரையும் ஒரே சாணியுருண்டையில் அடித்து வீழ்த்தும் சாகசமும் கவனிக்கத்தக்கது. இந்த அபூர்வமான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் அவசரத்தில் இதே விவகாரத்தில் கலாச்சார முத்துக்களை உதிர்த்த பாஜகவினரை மறந்துவிட்டதும் தற்செயலானதல்ல.
சின்னக்கருப்பனின் மரபணுவியல், பரிணாமவியல் அறிவும், புரிதலும் எவ்வளவு ஆழமானது என்பதை அறிவியல் பயிற்சியுடையவர்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடும். ஆனால் இதில் சராசரி வாசகன் மிரண்டுபோய் ‘இதுல ஏதோ விஷயம் இருக்கும்போல ‘ என்று வாய்பிளக்கக்கூடும். இதுவும் தமிழ் அறிவுச் சூழலின் இன்னொரு அவலம்.
ஒரு உதாரணம், புலிக்கும்-மனிதனுக்கும் உள்ள மரபணு/பரிணாமத் தொடர்பு குறித்தது:
‘மற்றொரு ஆண் புலியோடு செல்லும் ஒரு பெண்புலியை விரும்பும் மற்றொரு ஆண்புலி அந்த ஆண்புலியோடு மோதுகிறது. அந்த மோதலின் விளைவில் அந்த ஆண்புலி இறந்து விட்டால், அந்த பெண்புலியின் முந்தைய குட்டிகளை வெற்றி பெற்ற ஆண்புலி கொன்றுவிடுகிறது.
“இது நம்மிடம் இன்னும் இல்லை ? மாற்றாந்தாய்கள் ஏன் முந்தைய மனைவியரின் குழந்தைகளை கொடுமை செய்து விரட்டுகிறார்கள் ? நம்மிடம் உள்ள ஜீன்கள் காலம் காலமாக இவ்வாறு தேர்வு செய்யப்பட்டு நம்மிடம் வந்திருக்கின்றன. ஆனால், இன்று சமூகம் அவ்வாறு மாற்றாந்தாய்கள் குழந்தைகளை கொடுமைப்படுத்துவதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் ஜீன்கள் செய் என்று சொல்கின்றன ‘.
சண்டை போட்டுக்கொள்ளும் இரண்டு புலிகளுமே “மற்றொரு ஆண் புலி” ஆக இருப்பதைப் படித்தபோது கவுண்டமணி-செந்தில் இரட்டையரின் “இன்னொரு வாழப்பழம்” ஜோக் நினைவுக்கு வந்ததைத் தவிர்த்துவிட்டு யோசித்துப் பார்த்தாலும் இதில் உள்ள மரபணுவியல்/பரிணாமவியல் உண்மைகள் பிடிபடவில்லை. அதாவது புலிகளில் இந்த ஜீன் ஆணிடம் உள்ளது, மனிதரில் பெண்ணிடம் உள்ளது என்கிறார். ‘ஜீன் நம்மிடம் வருவது விலங்குகள் காலத்திலிருந்து ‘ என்று தொடர்ந்து அழுத்தம்திருத்தமாக சொல்கிறார். இந்த கொடுமைக்கார ஜீன் புலிகளிடமிருந்து மனிதனுக்கு வந்ததா அல்லது புலிகளும், மனிதர்களும் வேறொரு பொது மூதாதை உயிரினத்திடமிருந்து பெற்றுக்கொண்டார்களா ? ஏன் இந்த ஜீன் புலிகளில் ஆணுக்கும், மனிதரில் பெண்ணுக்கும் போகவேண்டும் ? சில நாயினங்களில் தாய் நாய் தன் குட்டிகளையே சாப்பிட்டுவிடும். நல்ல வேளையாக இதைச் செய்யச் சொல்லும் ஜீன் நாயிலிருந்து மனிதனுக்குப் போகும் பரிணாமப் பாதையில் எங்கோ தொலைந்துவிட்டிருக்கிறது.
சின்னக்கருப்பனின் கட்டுரையைப் படித்துவிட்டு பி.கே. சிவகுமார் எழுதியிருந்த பி. ஏ. கிருஷ்ணனுடனான கலந்துரையாடலைப் படித்தபோது கொஞ்சம் அச்சம் கூடியது (பிகேஎஸ், இதை எழுதியமைக்கு நன்றி). புதிதாக எழுத வருபவர்கள் 20-30% சரியாக எழுதினால் போதும் என்ற அளித்த சலுகையைத் தொடர்ந்து,
“இளைஞரான அரவிந்தன் நீலகண்டன் ஆர்.எஸ்.எஸ். சார்ந்தவராக இருந்தாலும், நிறைய படிக்கிறார். அறிவியல் பற்றி எழுதுகிற சிலரில் ஒருவராக இருக்கிறார். ஒரு மார்க்ஸியவாதியாக அவரிடம் குற்றம் குறை கண்டுபிடிப்பதைவிட, அவரைப் போன்றவர்கள் என்ன எழுதினாலும் இப்போதைக்கு அவர்களை கோட்பாடுகளின் அடிப்படையில் ஒதுக்கி விடாமல், அவர்கள் எழுத்தின் மூலம் வளர்வதற்கும், சரியான கொள்கைகளை அடைவதற்கும் வழி செய்கிற மாதிரி நடந்து கொள்ள வேண்டும்”
என்று சொல்வதைப் பார்த்தால் அறிவியல் பற்றி எழுதுபவர்களுக்கும் இந்த சலுகையை அளிக்கலாம் என்பதாகத் தெரிகிறது. இந்த 20-30% சரியாக எழுதியது போக மீதி 70-80% எதைப் போட்டு நிரப்புகிறார்கள் என்பது தான் பிரச்சினையே. ஒரு மார்க்சியவாதியாக மதவாதி எழுதும் அறிவியலில் குறை கண்டுபிடிப்பதோ, மதவாதியாக மார்க்சியர் எழுதும் அறிவியலில் ஓட்டையைக் கண்டுபிடிப்பதோ இரண்டுமே ஒன்றுதான். ஏனென்றால் கறாரான அறிவியலில் மதத்துக்கும், மார்க்சியத்திற்கும் வேலையில்லை. உண்மையான அறிவியலில் அறிவியல் மட்டுமே இருக்கமுடியும். இருக்கவேண்டும். அதற்காக மார்க்சியவாதிகளோ, மதவாதிகளோ அறிவியல் பற்றி எழுதக்கூடாது என்று சொல்லவில்லை. அப்படி எழுதும்போது மார்க்சியத்தையும், மதத்தையும் மூட்டைகட்டி ஓரமாக வைத்துவிட்டு அறிவியலை மட்டுமே எழுதவேண்டும்.
சின்னக்கருப்பனின் இந்த கட்டுரையில் 0% மட்டுமே அறிவியலைப் இருப்பதை பற்றி பி. ஏ.கே. என்ன சொல்வார் என்று கற்பனை செய்யமுயன்றேன். முடியவில்லை.
சின்னக்கருப்பனின் கட்டுரை வலைப்பதிவுகளில் சுவாரசியமான விவாதங்களை கிளப்பியிருக்கிறது. நான் பார்த்தவை/பங்கு பெற்றவை இங்கே:
This entry is part [part not set] of 22 in the series 20051006_Issue
K. ரவி ஸ்ரீநிவாஸ்
திண்ணை ஆசிரியர் குழுவிற்கு,
சின்னக் கருப்பனின் கட்டுரை மிகப் பிரமாதம்.இத்தகைய கற்பனை வளத்தினை குஷ்பு சொன்ன சில வாக்கியங்களுக்காக அவர் ஏன் வீணாக்க வேண்டும். 600 பக்க அளவில் ஒரு புதினம் எழுதலாமே.
தமிழில் இது போன்ற நாவல் வந்ததில்லை என்று நிச்சயம் பாராட்டு கிடைக்கும். இதை அறிவியல் புதினம் என்றும் சொல்லிக் கொள்ளலாம் அதாவது அப்படியும் விற்கலாம். இப்போது அறிவியல் என்ற முத்திரையுடன் எதையும் விற்பது எளிது. புதினத்தில் அறிவியல் இருக்கிறதோ இல்லையோ அறிவியல் என்ற பெயரை குறிப்பிட்டதற்கே நூலாசிரியரைப் பாராட்ட வேண்டும் என்று மதிப்புரைகளில் எழுதப்படுவது உறுதி. டார்வினுக்கு அடுத்தபடி பரிணாம வாதத்தினை வளர்த்தெடுக்கும் அறிஞர் பெருமான், நம்முன் நடமாடும் 21ம் நூற்றாண்டின் டார்வின் அணிந்துரை தரக்கூடும். சம்ஸ்கிருதம் உட்பட பல மொழிகளில் அதை மொழிபெயர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். அன்று இந்திய மெய்ஞானிகள் உருவகமாக கூறியதை, தங்கள் ஞான திருஷ்டி கொண்டு கணித்து அறிவித்ததை, இன்று இவர் அறிவியல் பூர்வமாக எழுதியிருக்கிறார், நிரூபித்துக் காட்டியுள்ளார் என்ற பாராட்டும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
இப்படி பொன்னான வாய்ப்புகள் பெற்றுத்தரக்கூடிய அரிய கருத்துக்களை வைத்துக் கொண்டு வெறும் கட்டுரை எழுதியிருக்கிறார் என்பதை நினைக்கும் போது வருத்தமாயிருக்கிறது. ஆகவே இப்படிப்பட்ட ஒரு புதினத்தினை எழுதி தமிழையும், உலக சிந்தனையையும், மானுடத்தையும் வளப்படுத்துங்கள் என்று அவரைக் கேட்டுகொள்கிறேன்.
சாமன்யர்களன நமக்கு ஒரு சுட்டியை பரிந்துரைக்கிறேன். http://www.nybooks.com/articles/18363
ஒரு மாதிரிக்காக கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறேன்
The ghosts in the meme machine-GUSTAV JAHODA-HISTORY OF THE HUMAN SCIENCES Vol. 15 No. 2-pp. 55 ?68- 2002
A response to Gustav Jahoda -SUSAN BLACKMORE-pp. 69 ?71
A reply to Susan Blackmore-GUSTAV JAHODA-pp. 73 ?74
Genetic Fundamentalism or the Cult of the Gene-DAVID LE BRETON Body & Society Vol. 10(4): 1 ?20 (2004)
தமிழ் வலைப்பதிவுகளில் சின்னக் கருப்பனின் கட்டுரை குறித்த விவாதங்களை கீழ்க்கண்ட இணைய முகவரிகளில்
This entry is part [part not set] of 26 in the series 20050923_Issue
K.ரவி ஸ்ரீநிவாஸ்
திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு
1, அண்மையில் SheWrite என்கிற விபரணப்படத்தினைப் பற்றிய ஒரு குறிப்பினை ஒரு இணையதளத்தில் படித்தேன். http://www.infochangeindia.org/documentary44.jsp
தமிழில் எழுதும் நான்கு பெண் கவிஞர்களின் எழுத்தும்,கருத்துக்களும் இதில் முன்னிறுத்தப்படுகின்றன. இக்குறிப்பில் Vagina Monologues பற்றிக்குறிப்பிடப்படுகிறது. இது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு கருத்து என்றே தோன்றுகிறது.
Vaginal politics: Tensions and possibilities in The Vagina Monologues-Susan E. Bell , Susan M. Reverby- Women ‘s Studies International Forum 28 (2005) 430- 444-Women ‘s Studies International Forum 28 (2005) 430- 444
என்ற கட்டுரையில் Vagina Monologues பற்றி குறிப்பிடும் போது ஒரிடத்தில் ‘Its ability to shock its audience into recognition can become merely the ability to shock. ‘ என்று எழுதுகிறார்கள். தமிழ்ச் சூழலில் இதை நினைவு கூர்வது தேவை என்று கருதுகிறேன்.
இக்கட்டுரை அப்படைப்பு, நிகழ்வுகள் குறித்து முக்கியமான கருத்துக்களை முன் வைக்கிறது. உதாரணமாக
But is V-Day simply a one-day, feel good event ? We worry whether the empowerment that comes from a contemporary speak-out using Ensler ‘s interpretation of other women ‘s experiences translates into a larger political assault on the structures of oppression
throughout the world. We do not wish to underestimate the power of words, especially since the play has been censored for what it says (Kahn, 2004) and shows (Bollag, 2004). But even so, is saying what is still transgressive out loud or showing it in public with
hundreds of others also a political act ? Does it in the end make the personal political ? And whose personal life does it make political ?
A recent critique of the 2004 V-Day march in Juarez, Mexico also points to the problems we seen inherent in the play. According to performance artist and Columbia University professor, Coco Fusco, an organization of mothers of the murdered women in Juarez, Mexico does not see their daughters ‘ serial killer or killers and rapists as the perpetrators of domestic violence. Rather, they have argued this is about the protection of powerful men by the authorities.They were angered by V-Day and Amnesty International ‘s linking of the play to their own brituals of public mourningQ and what Fusco writes was the failure of the march organizers to incorporate these mothers in the planning of the demonstration. While it is beyond the scope of this paper to address in detail the politics of the V-Day movement itself, this critique from Juarez suggests the difficulties we have been raising about violence, power, and representation in TVM.
(ஆனால் தமிழ்ச்சூழலில் Vagina Monologues நான் படித்தவரையில் ஒரு கலகப்பிரதியாகவே முன்னிறுத்தப்படுகிறது. அதற்கு அப்பால் அதைக் குறித்த ஒரு கண்ணோட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. )
தமிழ்ச்சூழலில் நான் புரிந்து கொண்ட,அறிந்து கொண்ட வரையில் இரண்டு கட்சிகளாக விவாதம் இருக்கிறது : ஒன்று சல்மா, மாலதி மைத்ரி போன்றோர் கவிதைகளை பல்வேறு பெயர்களில் நிராகரிப்பது, எதிர்ப்பது, இன்னொன்று இவற்றை ஒரு விமர்சனபூர்வமான கண்ணோட்டமின்றி கொண்டாடுவது, தூக்கிப்பிடிப்பது. என் கருத்து தவறாகவும் இருக்கலாம். இலக்கியத்தில் பெண்ணிய அழகியல், பெண்-உடல்- மொழி தொடர்பு குறித்த கோட்பாடு ரீதியான விவாதங்கள், உடல் குறித்த கோட்பாடு ரீதியான புரிதல்கள், ஆய்வுகள், பெண்ணியவாதிகள் உடல்,அனுபவம், உடல் நலம் குறித்து எழுப்பிய விவாதங்கள், கேள்விக்குட்படுத்திய அறிதல்கள்,அறிதல் முறைகள் என்று பலவற்றை உள்ளடக்கியதாக இங்கு விவாதம் நடைபெறுகிறதா என்ற கேள்வியை நான் முன் வைக்கிறேன். இந்நிலையில் தமிழ்ச் சூழல் குறித்து அறியாத ஒருவர் மேற்கூறிய விபரணப்படம் மூலம் பொருத்தமற்ற புரிதல்களைப் பெறும் சாத்தியக்கூறும் இருக்கிறது. அப்துல் ரகுமான், பழனி பாரதி கூறியதை நிராகரிக்கும்ஒருவர் அழகியல் ரீதியாக, விமர்சன பூர்வமாக இக்கவிதைகளை அணுகி வேறு விதமான முடிபுகளுக்குவரக்கூடும். அது இரு தரப்பாருக்கும் உவப்பாக இல்லாமல்க் கூடப் போகலாம்.
2, உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் என்ற கட்டுரையில் கனம் கோர்ட்டர் அவர்களே என்ற கட்டுரையின் சுட்டி
விடுபட்டிருந்தது. அது இங்கே http://www.keetru.com/literature/essays/aadhavan.html
இக்கட்டுரை குறித்து எனக்கு விமர்சனங்கள் இருக்கின்றன. ஆதவன் தீட்சண்யா தேவையில்லாமல
இக்கட்டுரையில் விஷயங்களை குழப்புகிறார். சில இடங்களில் அவரது வாக்கியங்கள் மிகவும்
தவறான புரிதலையே தருகின்றன. உதாரணமாக
‘ நாற்பதாயிரம் ரூபாய் லஞ்சத்திற்கு நாட்டின் ஜனாதிபதிக்கே பிடிவாரண்டு பிறப்பிக்கும் நீதிபதி இருக்கும் மாநிலத்தில், மதக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் அங்கு தங்களுக்கு நீதிகிடைக்காது என்று அஞ்சுவதில் தவறென்ன ? ‘
இன்னும் சில இடங்களில் அடிப்படைகளைக் கூடப் புரிந்து கொள்ளாமல் எழுதுகிறார். உ-ம்
‘தீர்ப்பை கண்டிக்கவோ விமர்சிக்கவோ முடியாது. மேல்முறையீடு தான் செய்யமுடியும். ‘
விரிவஞ்சி ஒரு நீண்ட விமர்சனத்தினை இங்கு தவிர்க்கிறேன். மேலும் தமிழில் இப்படி எழுதப்படும் அல்லது இது போன்ற கட்டுரைகளுக்கு விமர்சனம் எழுதுவதென்று ஆரம்பித்தால் அது தவிர வேறு எதையும் செய்ய முடியாது.
அண்மையில் பல மணி நேரங்கள் தமிழில் வெளியாகும் சிறு பத்திரிகைகள் உட்பட பலவற்றை படித்த பின் எனக்குத் தோன்றிய கருத்து இது.
This entry is part [part not set] of 30 in the series 20050909_Issue
பாலாமணி
இந்த வார திண்ணயில் நாகூர் ரூமியின் புத்தக விமர்சன கட்டுரையைக் கண்டேன். நாகரீகமில்லாத தெருச்சண்டைக்கும் கீழான முறையில் விமர்சித்து எழுதப்பட்ட கட்டுரை ‘இலக்கிய கட்டுரை ‘யின்கீழ் பிரசுரமாகியது வருத்தமான விஷயம். குறிப்பிட்ட அந்த நாவல் குறித்து வாசகர்களுக்கு தனிப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், தனிப்பட்ட கருத்துக்களை மற்ற வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள உரிமை இருந்தாலும், இடம் பொருள் அறிந்து எழுதுவதுதான் நாகரீகம்.
This entry is part [part not set] of 30 in the series 20050909_Issue
K.ரவி ஸ்ரீநிவாஸ்
திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு
கடந்த வார இதழில் ஒரு கடித மொழிபெயர்ப்பினை வெளியிட்டிருக்கிறீர்கள். அதில் ஒரு தெலுங்கு மசாலா படத்தின் பல கூறுகள் உள்ளன. வில்லனாக ராஜசேகர் ரெட்டியைப் போல் தோற்றமுடைய ஒருவரை போடலாம், அவரை எதிர்க்கும் இந்து வீராங்கனையாக விஜயசாந்தியைப் போடலாம், ஆனால் அவர்
இப்போது தெலுங்கானாவிற்கான களத்தில் குதித்துவிட்டதால் அவர் இந்த வாய்ப்பினை நிராகரிக்ககூடும்.
ரோஜாவும் அரசியலில் இருக்கிறார். சந்திரபாபு நாயுடுவின் மனைவி பற்றியும் அதில் உள்ளதால் அவர் இந்து வீராங்கனை வேடம் ஏற்று கதைப்படி நடிக்கத் தயங்கக் கூடும். த்ரிஷா ஒப்புக்கொண்டால் அவரை இந்து வீராங்கனையாகப் போடலாம். அவருக்காக படத்தினைப் பார்க்க ஜனங்கள் வரக்கூடும், ஒரு
வேளை அவரும் மறுத்து விட்டால் சுவர்ணமால்யா ஒப்புக்கொள்ளக் கூடும்
இப்போது இது போன்ற விஷயங்களில் மிகவும் அக்கறை காட்டுபவர் திருவாளர் சுப்பிரமண்யன் சுவாமிதான்.
சு.சுவாமி தான் ஹீரோவாக நடிப்பேன் என்று அடம் பிடிக்கக்கூடும்.அதனால் என்ன பரவாயில்லை, டப்பிங் பேச ஒருவரை ஏற்பாடு செய்தால் போதும். எனவே அவர் உதவியுடன் சோனியா காந்தியை இதில் ஒரு வில்லியாகக்
காண்பித்து ஜெயலலிதா எதிர்ப்பு, போப் எதிர்ப்பு என்று கதையை கொஞ்சம் மாற்றி எடுத்தால் காஞ்சி மடத்து ஆதரவுடன் உலகெங்கும் வெளியிடலாம்.
மொழிபெயர்ப்பு கடிதங்களை நகைச்சுவையாகவும், வித்தியாசமாகவும் பகுதியில் வெளியிடக் கூடாது என்று ஆசிரியர் முடிவு செய்துள்ளதா என்ன. இது போன்ற கடிதங்களுக்கும், கற்பனைகளுக்கும் இப்போது பஞ்சமேயில்லை. யாருக்கேனும் இதில் சந்தேகமிருந்தால் http://www.kanchiforum.org/
அல்லது http://www.janataparty.org/ இணைய தளங்களைப் பார்க்கவும். ஆனால் இவற்றையெல்லாம் வெளியிடுவது என்று முடிவெடுத்தால் திண்ணை ஆசிரியர் குழு இவற்றை வெளியிடுவதற்கென்று ஒரு
This entry is part [part not set] of 30 in the series 20050909_Issue
கூத்தாடி
ரூமி
உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை . உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் எனக்கு இந்த பதிவு உங்கள் மேல் இருந்த சில மதிப்பீடுகளை மறுபரீசீலனை செய்ய சொல்லுகிறது.
உங்களின் ‘திரெளபதியும் சாரங்க பறவையும் ‘ படித்து விட்டு சிலாகித்த எனக்கு ,உங்களின் நோக்கங்களினூடான சந்தேகம் வலுவடைகிறது. இஸ்லாம் மீதான எந்த விமர்சங்களும் நீங்கள் எடுத்து வைத்த சல்மாவின் பதிவுகளில்
இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
உங்களின் பிரதான குற்றச்சாட்டான கொச்சை மொழி நமது நாட்டு பெரும்பாலான கிராமத்து மக்களாலும் மற்ற விளிம்பு நிலை மக்களாலும் பயன் படுத்தப் படுகிற வார்த்தைகள் தான். சாருவையும் & சல்மாவையும் porno எழுத்தாளர்களாக சித்தரிக்க முற்படுவது உங்களின் இலக்கிய அரசியலைத்தான் காட்டுகிறது.
உங்களின் நம்பிக்கைகளை விமர்சிக்கும் எதுவுமே இலக்கியம் இல்லை என்பது சொத்தை வாதம்.
உண்மை என்பது உங்களின் நம்பிக்கையும் அனுபவங்களும் மட்டும் அல்ல ..அவரவர் அனுபவங்களிலும் நம்பிக்கைகளிலும் தான் எழுதுகிறார்கள் ,அதை கொச்சைப் படுத்துவது கண்டிப்பாக நாகரிகம் அல்ல.
This entry is part [part not set] of 28 in the series 20050826_Issue
கனகசபாபதி
கடந்த இரு வாரங்களாக கடவுள் பற்றி இரு நண்பர்கள் எழுதிய கட்டுரையை படித்தேன். ஏனக்கு தோன்றிய சில விசயங்கள்.
முதலில் நண்பர் ஜாபாின் கருத்துக்களை பார்ப்போம். எனக்கு நினைவு தொிந்த காலம் முதல் கடவுள் விசயத்தில் இந்த வாதத்தை கேட்டு வருகிறேன். முதலில் பிள்ளையார் பால் குடிக்கிறார் என்பார்கள். புிறகு மெல்ல மெல்ல நமக்கு மேல் ஒரு சக்தி உண்டு என்பார்கள். இங்குதான் உள்ளது விசயம். அந்த சக்தி என்ன ? அதன் பண்புகள் என்ன ? தெளிவான விளக்கம் கிடைக்காது. இயற்கை என்ற விசயத்திற்கும கடவுள் என்ற விசயத்திற்கும வித்தியாசம் உண்டு. இயற்கைக்கு இவர்கள் தரும் விளக்கம் என்ன ? கடவுளுக்கு இவர்கள் தரும் விளக்கம் என்ன ? இரண்டும் எப்படி ஒன்றாக முடியும் ? இரண்டின் பண்புகளும் ஒன்று என்கிறாரா நண்பர் ?
மேலும் இயற்கையின் படைப்பில் மனிதனுக்கு புாியாமல் இருக்கும் சில விசயங்களைப் பற்றி கூறினார். என் கேள்வி என்னவென்றால் இயற்கையின் படைப்பில் நூறு வருடங்களுக்கு முன்பு மனிதனுக்கு தொியாத விசயம் என்ன ? இப்போது தொியாத விசயம் என்ன ? சிந்திக்க வேண்டும். வுித்தியாசம் உண்டா இல்லையா ?
தோழி கிாிஜாவின் கடிதத்தை பொருத்தவரை ஒன்றுதான் நாம் கூறமுடியும். திரு. சுப்ரமணியத்தின் அனுபவத்தை நம்பும் மக்களுக்கு உங்கள் அனுபவத்தை நம்புவதில் ஒன்றும் பிரச்சினை இருக்காது. உங்கள் அனுபவத்தையும் நீங்கள் கூற வேண்டும். நாங்கள் படிக்க வேண்டும். பிள்ளையாரும் பால் குடித்து ரொம்ப நாள் ஆகிறது.
திரு. சுப்ரமணியத்தின் மேல் அக்கறை உள்ள எல்லாம் வல்ல கடவுளுக்கு கும்பகோணம் குழந்தைகள் மேல் ஏன் அக்கறை இல்லை என்று கேட்பது வறட்டு வாதம் என்றால் அந்த வறட்டு வாதத்தை சிந்திக்க தொிந்த மனிதன் செய்துக்கொண்டே இருப்பான்.
This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue
மு. சுந்தரமூர்த்தி
குஞ்ஞாலிக்குட்டி விவகாரத்தை சளைக்காமல் அவதானித்து மிகவும் ஆர்வத்தோடு தொடர்கதையாக எழுதிவரும் மத்தளராயன் (எ) இரா.மு. ஜெயேந்திர சரஸ்வதி விவகாரத்தில் தமிழ்நாட்டு மீடியாவின் செயல்பாடுகளைப் பார்த்து சலித்துக்கொள்கிறார். எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் பரபரப்பூட்டுவதில்லை. கேரளத் தொலைக்காட்சிப் பார்வையளர்களுக்கும் குஞ்ஞாலிக்குட்டி. தமிழ்நாடுத் தொலைக்காட்சிப் பார்வையாளர்களுக்கு ஜெ. சரஸ்வதி. அவரவருக்கு அருகில் நடக்கும் நாடகங்களைத் தானே ரசிக்க முடியும் ? ‘குஞ்ஞாலிக்குட்டியின் வேதனை ‘ யை ரசிக்கும் மத்தளராயன் ‘ஜெயேந்திரர் சோதனை ‘யைக் கண்டு மனம் வெதும்புவதைப் புரிந்துகொள்ள சிரமப்படவேண்டியதில்லை. நம் சமூகத்தில் இரட்டை நியாயம் பேசுவது சர்வசாதாரணமாக நிகழக்கூடியதுதான். இதற்கு எழுத்தாளர்களும் விதிவிலக்கல்ல.
This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue
K.ரவி ஸ்ரீநிவாஸ்
திண்ணை ஆசிரியர்குழுவினருக்கு,
டாரிசெல்லி வெற்றிடம் என்று ஒருவரைப் பற்றி எழுதும் போது அரவிந்தன் நீலகண்டன் குறிப்பிட்டுள்ளார். அறிவியல் தமிழில் இப்படி எழுதினால் அறிவியலை வளர்க்கிறார், தமிழையும் வளர்க்கிறார் என்று பொருள் கொண்டு இதை அனுமதித்தீர்களா இல்லை அதன் பொருள் தெரியாமல் விட்டுவிட்டார்களா என்று எனக்குப் புரியவில்லை.இல்லை இதுவும் அங்கீகரிக்கப்பட்ட வசைச்சொற்கள் பட்டியலில் சேரும் என்று கொள்ளலாமா. எது எப்படியாயினும் திருமாளவன் குறித்த பதிலில் தன் உண்மையான கருத்தை முன்வைத்துவிட்டார்.அவருக்குத் தெரியாமலே முகமூடி கழன்று விட்டதா இல்லை ஆழ் மனச்சிந்தனை அப்படி வெளியாகிவிட்டதா . பதிலின் பல பகுதிகள் சிரிப்பினை வரவழைத்தன. நல்ல வேளை நான் தான் கிறிஸ்துவம்,இஸ்லாம் குறித்து உண்மையாகவே அறிந்த ஒரே மானுடன் என்று கூறாமல் விட்டுவிட்டார்.
This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue
பித்தன்
திரு ‘மாண்புமிகு ‘ அரவிந்தன் நீலகண்டனின் கடிதம் கண்டோம். கோபத்தில் என்ன சொல்கிறோம் என்பதே தெரியாமல் ‘உட்காருமிடத்தில் கொப்பளம் வந்தவன் போல ‘ குதி குதியென்று குதித்திருக்கிறார். நாம் கேட்டிருந்த நியாயமான கேள்விகளுக்கு பதிலோ, விளக்கங்களுக்கு விளக்கங்களோ இவர் கடிதத்தில் எதிர்பார்த்திருந்தால் அது நம் முட்டாள்தனம்தான். பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் ‘மாண்புமிகு ‘-வின் கடிதத்தில் விஷத்தையும், வெறுப்பையும் தவிர வேறெதுவுமில்லை.ஆர்.எஸ்.எஸ் என்பது தடைசெய்யப் படவேண்டிய முதல் இயக்கமென்றும், தீவிரவாத, பிரிவினைவாத இயக்கமென்றும் தோலுரித்துக் காட்டியதற்காகவும், அப்படிப்பட்ட இயக்கத்திற்கு அடிக்கல் நாட்டிய சாவர்க்கரைக் கொலைகாரன் என்று சுட்டிக் காட்டியதற்காகவும் காதிலிருந்து புகை வரும் அளவுக்கு அவர் கொண்டிருக்கும் கோபத்தை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. ‘சாவர்க்கரை பிடித்து வந்தது எதற்காக என்பது உலகத்திற்கே தெரியும் அதனால் சொல்லவில்லை ‘ என்று கூறும் அவர் ‘நேர்மை ‘யையும், தன் வாயால் ‘கொலைகாரன் ‘ என்று சொல்லமுடியாத அளவிற்கு அவர் கொண்டிருக்கும் பக்தியையும் அதனால் சொல்லாமல் விட்டுவிட்டதையும் கூட நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. அப்படியானால் அவனை கொலைக் குற்றத்திற்காகத்தான் கொண்டுவந்தார்கள் என்பதை ‘மாண்புமிகு ‘ ஒத்துக்கொள்கிறார். பின், கொலைகாரனை கொலைகாரன் என்று சொல்லாமல் தியாகி என்றா சொல்லமுடியும் ? தியாகி என்று சொல்ல வேண்டுமென்று ‘மாண்புமிகு ‘ அரவிந்தன் எதிர்பார்ப்பது ஏனோ நமக்கு வியப்பளிக்கவில்லை. இப்படி யாருமறிந்த – அவரே ஒப்புக்கொண்ட – உண்மையை, கொலைகாரனை கொலைகாரன் என்று நாம் சுட்டிக்காட்டினால் அது ‘கோயபல்ஸ்தனமாக செயல்படும் குள்ளநரித்தனமாக ‘ இந்த மாண்புமிகு-க்கு தெரிவதும் கூட ஏனோ நமக்கு வியப்பளிக்கவில்லை! சாதி, மத வெறிபிடித்த சங்பரிவாரங்களிலோ, பிரிவினைவாத-தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ஸிலோ பயிற்சி எடுத்திருந்தால் ஒருவேளை நமக்கும் கூட கொலைகாரன், நாட்டுப்பற்று மிக்க தியாகியாகத் தெரிந்திருக்கக்கூடும். அப்படி ஒரு பயிற்சியும் எடுக்காதது நம் முட்டாள்தனமென்று ‘Mr.மாண்புமிகு ‘ அரவிந்தன் சொன்னால் அதையும் நாம் கேட்டுகொள்ளவேண்டியவர்களாகிறோம்.
காசு கொடுத்தால் ஜனாதிபதிக்கே பிடிவாரண்ட் கொடுக்கக்கூடிய நிலையில்தான் நீதிமன்றங்கள் உள்ளன. விசாரணைக் கமிஷன்களையோ கேட்கவே வேண்டாம். எந்த விசாரணைக் கமிஷனும் குற்றவாளிகளை முழுமையாகக் கண்டுபிடித்ததாக சரித்திரமேயில்லை. இந்த நிலையில் கபூர் கமிஷன்களும், தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்-ஸை தடைசெய்யாமல் விட்ட நீதிமன்றங்களும் சொல்லிவிட்டதாக ‘மாண்புமிகு ‘ சொல்லிவிட்டதால், அதைப் பற்றி நாம் எதுவும் பேசகூடாதவர்களாகிறோம். ‘எந்த தனிமனிதனுக்கும் மகாத்மாவைக் கொல்ல எந்த நியாயமான காரணமும் இருக்கப் போவதில்லை. எனின் ஒரு இயக்கமோ, தீவிரவாதக் கூட்டமோதான் சதி செய்து அவரைக் கொன்றிருக்கவேண்டும். முஸ்லீம் லீக் போன்ற இயக்கங்களையோ காந்தி அரவணைத்து சென்றார். அவர்களுக்கு ஒரு காரணமும் இருக்க முடியாது. காங்கிரஸ்காரர்களே காந்தியின் கொள்கைகள் பிடிக்காமல் அவரைக் கொன்றுவிட்டார்கள் என்பதை புத்தி பேதலித்தவன்கூட – சில மாண்புமிகு தீவிரவாதிகளைத்தவிர – நம்பமாட்டான். பிரிவினைவாத, தீவிரவாத இயக்கமாக அப்போது இருந்தது -இப்போதும் இருப்பது- ஆர்.எஸ்.எஸ் தான். காந்திஜியின், அனைத்து மத மக்களையும் அரவணைத்து செல்லும் கொள்கைகள், குறிப்பாக முஸ்லீம்களை அரவணைத்து செல்லும் கொள்கைகளோ ஆர்.எஸ்.எஸ்-ன் அடிப்படை பிரிவினைவாதக் கொள்கைகளுக்கே எதிரானது. காந்திஜியின் தீண்டாமைக் கொள்கைகளும், ஹிந்து வெறிபிடித்து மனுவின் கொள்கைகளை நிலை நாட்டத்துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரக் கும்பல்களின் கருத்துக்கு நேரெதிர். காரணங்கள் பலமாக இருக்கின்றன. கொலைகாரனோ ஆர்.எஸ்.எஸ் காரன். ‘அவன் ஆர்.எஸ்.எஸ்-லிருந்து விலகிவிட்டான் என்று சொல்வது கோழைத் தனமானது. அவன் கடைசிவரை பரிவாரத்தின் ஆதரவில்தான் இருந்தான் ‘ என்று கூடவே இருந்த அண்ணன் பகிரங்கமாக சொல்லியிருப்பதும் கூட ஆவணப்படுத்தப் பட்ட உண்மைகள்தான். ( செலக்டிவ் அம்னீஷியா கொண்ட ‘மாண்புமிகு ‘ தீவிரவாதிகளுக்கு இந்த ஆவணங்கள் ஏனோ கண்ணுக்குத் தெரிவதில்லை!) ‘. இத்தனை நியாயமானக் காரணங்களையும் கூறி, கொலைகாரன் ஆர்.எஸ்.எஸ்-லிருந்தவன் என்று அவன் அண்ணன் சொன்ன ஆவணப்படுத்தப்பட்ட உண்மையையும் நாம் விளக்கிக் கூறினால் நம் பண்பையும் நடுநிலையையும் கேள்விக்குறியாக்கி, தர்க்கவாதி என்று எளிதாக நம்மை முத்திரைக் குத்திவிடும் தந்திரம் ‘மாண்புமிகு ‘ அரவிந்தனுக்கு கைவந்தக்கலையாக இருக்கிறது. நாம் அப்படியே மலைத்து போய் நிற்பதைத் தவிர வேறெதுவும் செய்யமுடியாதவர்களாகிறோம்..
‘மேல்மாடி காலியாக இருக்கிறது ‘ என்று நம்மைப் புகழ்ந்ததற்காக ‘மாண்புமிகு ‘ அரவிந்தனுக்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஜென் துறவிகள் பற்றிய ஒரு கதை உண்டு. ஒரு இளம் ஜென் துறவி ஞானம் தேடி, குருவைத்தேடி பல வருடங்கள் அலைந்து கடைசியில் ஒரு குருவை அடைகிறார். குரு அவரை சோதிப்பதற்காக ‘ஏனப்பா நீ ஊரிலிருந்து கிளம்பும் போது அரிசி என்ன விலை விற்றது ? ‘ என்று கேட்கிறார். ‘அந்தக் குப்பைகளெல்லாம் வேண்டாமென்றுதானே ஒதுக்கிவிட்டு வந்திருக்கிறேன். அவற்றையெல்லாம் சுமந்து வரவேண்டுமென்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம் ? ‘ என்று இளந்துறவி கோபமாகக் கேட்க குருவோ புன்னகைத்தபடி ‘நீ தான் உண்மையாக ஜென்னை அறிந்திருக்கிறாய் ‘ என்று கூறி வாழ்த்தினாராம். எண்ணங்களற்ற மனம் தான் தெய்வீகத் தன்மையடைந்த ஞானிகளின் மனம். கற்றறிந்த ஏட்டுச் சுரக்காய்களை மட்டுமல்ல, கடந்தகாலக் குப்பைகளையும், நிகழ்கால நிகழ்வுகளையும், எதிர்கால ஆசைகளையும் துறந்து மனதை வெற்றிடமாகக்கினால்தான் ஞானத் தன்மையடையமுடியும். அத்தகைய எண்ணங்களற்ற மனதை அடையவே துறவிகள் யாகங்களையும் யோகங்களையும் தவங்களையும் செய்கிறார்கள். உண்மையான ஆன்மிகவாதிகளுக்கு இது தெரிந்திருக்கும். ஆன்மீகவாதிகள் என்ற போர்வையில் மதவெறி பிடித்து, மதக்கலவரங்களை உண்டாக்கும் தீவிரவாத கும்பல்களில் ஒருவரான ‘மாண்புமிகு ‘ அரவிந்தனுக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லையாதலால், நம்மை மட்டம் தட்டுவதாக நினைத்துக்கொண்டு புகழ்ந்திருக்கிறார். அவர் அறியாமையை நாம் மன்னிப்பதோடு, நம்மை ‘தெய்வீக தன்மை கொண்ட ஞானி ‘ என்று புகழ்திருப்பதால் அவருக்கு நன்றி சொல்லவும் நாம் கடமைபட்டவர்களாகிறோம்! இந்த உண்மையான ஆன்மீகக் கருத்துக்களை ஒதுக்கிவிட்டால் கூட ‘மாண்புமிகு ‘ அரவிந்தன் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘மதக்கலவரங்களை உண்டாக்கவும், மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கவும், சகமனிதனை சாதிப் பெயர் சொல்லி ஒதுக்கவும் உபயோகிக்க, மேல்மாடி, கீழ்மாடி என்று அடிக்கல்லிலிருந்து மொட்டை மாடி வரை ஒரு இடம் விடாமல் விஷத்தை-உங்களைப்போல்- நிரப்பி வைத்திருப்பதைவிட மேல் மாடி காலியாக இருப்பது எத்தனையோ மேல் ‘ என்பதுதான் அது.
சங்கப்பாடலை அப்போது ஆர்.எஸ்.எஸ்-ன் நாட்டுப்பற்றைக் காட்டுவதற்காக அவர் சொன்னதாக நமக்கு ஞாபகம்.
இப்போது அது ‘ஹிந்து தர்ம ‘ பார்வை என்கிறார். அதாவது கிறிஸ்தவமும், இஸ்லாமும் வேறு நாட்டில் தோன்றிய மதங்கள் என்பதால் அவற்றை மண்சார்ந்தவைகளாக கருதமாட்டார்களாம். என்ன ஒரு உளறல் பாருங்கள். இவர்கள் கூற்றுப்படி இங்கிலாந்திலோ, பிரான்சிலோ, அமெரிக்காவிலோ கிறிஸ்தவத்தை மண்சார்ந்த மதமாகக் கருத முடியாது! இன்னும் சொல்லப்போனால் ஜெருசலத்தைத் தவிர வேறு எங்கும் கிறிஸ்தவம் மண்சார்ந்த மதமாக கருதப்படமுடியாது! ஒரே இந்து நாடு என்று நேபாளாத்தை அழைப்பதும் தவறாகிவிடும். மதம் என்பது எங்கு தோன்றியிருந்தாலும் அதை பின்பற்றுபவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அந்த மதம் இருப்பதாகத்தானே அர்த்தம். இந்த அடிப்படைக் கூட புரியாமல், கிறுக்குத்தனமாக மதம் பற்றி புரிந்துவைத்திருப்பவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய என்று நமக்கு ஒரு சம்சயம். சரி கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் விட்டுவிடுவோம். புத்தமதமும் சமண மதமும் இந்தியாவிலேயே தோன்றிய மண்சார்ந்த மதங்கள் தானே அவற்றைப் பற்றியாவது ஆர்.எஸ்.எஸ் சங்கத்தில் புகழ்ந்து பாடுவார்களா என்று நம் மரமண்டைக்குள் ஒரு கேள்வி எழுவதை நம்மால் தடுக்க முடியவில்லை. சரி அதையாவது கேட்கலமா என்றால், ‘இப்போது இந்தியாவில் புத்தமதமும் சமண மதமும் எங்கே பெரும்பான்மையாக இருக்கிறது ? தேவையில்லாமல் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பார்கள் அதற்கு நான் பதில் சொல்லவேண்டுமா ? ‘ என்று கற்பூர வாசனையும் அறிந்த நவீன ‘மாண்புமிகு ‘ நம்மை திருப்பிக்கேட்டு புலம்புவாரே என்றுவேறு நாம் யோசிக்கவேண்டியுள்ளது. சரி மதங்கள் தோன்றியதை விட்டு விட்டாலும், அம்மதங்களை பின்பற்றும் 20 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இந்தியாவிலேயே பிறந்த மண்ணின் மைந்தர்கள் தானே அவர்களை ஒதுக்கிவிட்டு, அவர்களின் மத நம்பிக்கைகளை விலக்கிவிட்டு என்னவிதமான தேசப்பற்றை சங்கம் கொண்டிருக்கிறது ? என்ற நம் அடிப்படைக் கேள்வி இன்னும் அப்படியே அந்தரங்கத்தில் தொங்கிகொண்டிருக்கிறது. இதற்கு பதில் சொல்லாமல் எதையாவது திரித்து எழுதுவார்கள் என்று நாம் எதிர்பார்த்த படியே தான் நடந்திருக்கிறது. நமக்கு வியப்பாயில்லை!
மற்றபடி இந்த ஆழ்வார்கள், பாரதியார், நக்கீரனார் பாடல்கள் எல்லாம் சம்ஸ்கிருதம் தமிழருடையதா மற்றும் இப்போது தேவையா என்ற வாதத்தின் போது சொல்லப்பட்டதாக நமக்கு ஞாபகம். நம் விளக்கங்கள் எதையும் அவர் ஏற்கவில்லை என்பதும் புரிந்துகொள்ளக் கூடியதே. பழையப் பாடல்களை திரித்து திரித்து விளக்கம் சொல்லிக்கொண்டிருக்காமல்,
‘இப்போது சம்ஸ்கிருதம் தேவை என்பதற்கான நியாயமான ஒரு காரணத்தையாவது சொல்லுங்கள் ‘ என்று ஒரு முறைக்குப் பலமுறை கேட்டிருந்ததாக நமக்கு ஞாபகம். ஒரு நியாயமான காரணத்தையும் கூறமுடியாமல் அவர் அடைந்துவிட்ட மெளனத்தையும் நாம் புரிந்துகொண்டு வாதத்தை நிறுத்திக்கொள்கிறோம். இப்போது, முடிந்து போன அந்த வாதத்தைக் கிளறி எடுத்து எதற்காகப் புலம்புகிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.
சிறுபான்மையினரின் கல்வி நிலையங்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றனவாம். சொத்துமேல் சொத்துவைத்திருக்கும் மடாதிபதிகளின் பள்ளிகளுக்கு சலுகைகள் இல்லையாம். இந்த ஒரே காரணத்தினால் மட்டும்தான் மடாதிபதிகளின் பள்ளிகளில் கல்விக் கட்டணம் அதிகமாம். இல்லையென்றால் எந்த சாதியினரும், எந்த ஏழைகளும் படிக்கும் பள்ளிகளாக அவைகள் இருக்குமாம். ‘மாண்புமிகு ‘ சொன்னால் நாம் ஒத்துக்கொள்ளவேண்டியதுதான். சரி. மடாதிபதிகளின் பள்ளி கட்டணங்கள் அதிகமாக இருப்பதற்கான காரணங்களை சப்பை கட்டுகளாக சொல்லிக்கொண்டிருக்கிறார். அது தான் எல்லோருக்கும் தெரிகிறதே. ‘அந்தக் காரணங்களை களைய பாடுபடாமல் அடுத்தவர்களைப் பார்த்து ஏன் பொருமிக் கொண்டிருக்கிறீர்கள் ? ‘ என்பதுதானே நம் கேள்வியே. இவருக்கும் இன்னொருவருக்கும் பிரச்சனை என்று வைத்துக்கொள்வோம். அரசு அந்த இன்னொருவருக்கு சலுகை செய்கிறது. இவர் என்ன செய்யவேண்டு. எனக்கும் சலுகை கொடு என்று கேட்கவேண்டும், கிடைக்காத பட்சத்தில் அதற்கு போராடவேண்டும். அது நியாயமாக இருக்கும். ஆனால் இந்த அறிவுஜீவிகள் என்ன செய்கிறார்கள், தங்களுக்கு கேட்பதைவிட முதலில், அவனுக்கு ஏன் கொடுக்கிறீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். அதோடு விட்டாலும் பரவாயில்லை, சலுகை பெறும் காரணத்தால் அவனை அழிக்கவும் புறப்பட்டுவிடுகிறார்கள். ‘இவர்கள் கை காட்டும் அரசாங்கம் தானே 5 வருடங்கள் ஆட்சி செய்தது. இதைக் களைய என்ன செய்தார்கள் ? இலட்சக்கணக்கான ‘மண்டூகங்கள் ‘ கடப்பாரையையும் சூலத்தையும் எடுத்துக்கொண்டு தீவிரவாதிகள்போல பிற மத சின்னங்களை அழிக்க ஓடினார்களே. நமக்கும் சலுகைகள் வேண்டுமென்று கேட்டு எத்தனை சங்பரிவாரிகள் வெளியே வந்தார்கள் ? தேவையே இல்லாத அந்த தீவிரவாத செயலை நாடு தழுவிய போராட்டம் போல செய்தார்களே. மிகவும் முக்கியமான, தேவையுள்ள இந்த பிரச்சனையை ஏன் நாடு தழுவிய அளவில் எடுத்து செல்லவில்லை ? (ஏனென்றால் இதில் ஓட்டுகள் இல்லை!). கோடிக்கணாக்கில் கோவில்களில் குவியும் பணத்தை நம் குழந்தைகளின் படிப்புக்காகத் தரசொல்லி எத்தனை சங்பரிவாரிகள் கேட்டிருக்கிறார்கள் ? மதம் மாற்றுகிறார்களே என்று புலம்பாமல், ஏன் மக்கள் மாறுகிறார்கள் என்று பார்த்து இந்து மதத்திலுள்ள ஏற்ற தாழ்வுகளை போக்க ஏன் போராட மறுக்கிறீர்கள் ? இப்படி தேவையுள்ள எதையும் செய்யாமல் மற்ற மதத்தினரைப் பார்த்து பொருமிக்கொண்டு ஏன் கலவரங்களுக்கு காரணமாகிறீர்கள் ? ‘ என்பது போன்ற நியாயமான கேள்விகளைக் கேட்டால் அது ஊளையிடுவதாக ‘மாண்புமிகு ‘ சங்பரிவார அரவிந்தனுக்குத் தெரிகிறதாம்! நமக்கு வியப்பாயில்லை!
அன்னை தெரசா மாதிரி சோனியா என்றோ அல்லது அவர்களை ஒப்பிட்டோகூட பேசியதாக நமக்கு ஞாபகமில்லை. மாண்புமிகு அரசியல்வாதிகளே பிச்சை கேட்கும் அளவிற்கு திரித்து எழுதுவதில் அரவிந்தனுக்கு நிகர் அவரேதான் (அந்த காரணத்தாலேயே அவரை ‘மாண்புமிகு ‘ என்று அழைக்கிறோம் என்பதையும் இங்கே உண்மையின் பொருட்டு சொல்லிக்கொள்கிறோம்!) என்பதை அறிந்திருந்தும் நாம் சற்று குழம்பிப்போகிறோம். ஒரு வேளை நமக்கே தெரியாமல் அப்படி ஏதும் ஒப்பீடு செய்துவிட்டோமோ என்று ஒரு தயக்கம். எத்தனை முறை படித்துப் பார்த்தாலும் அப்படி ஏதுமில்லை. இந்தியாவில் பிறந்ததால் மட்டும் ஒருவர் இந்தியராகிவிடுவதில்லை என்பதையும், இந்தியர்களுக்காக பாடுபடுபவர்கள் எல்லாம் இந்தியர்கள் என்பதும்தான் நாம் சுட்டிக்காட்டியது. இந்தியாவிலேயே பிறந்திருந்தாலும் இந்தியாவுக்கு துரோகம் செய்பவர்கள் இருக்கிறார்கள் என்றும் அதற்கு உதாரணமாக எட்டப்பனையும், ரவீந்தர் சிங்கையும் குறிப்பிட்டிருந்தோம். அதுபோல வேறு நாட்டில் பிறந்திருந்தாலும் இந்தியர்களுக்காக பாடுபடுபவர்களும் இருக்கிறார்கள், அவர்களை இந்தியர்களாக கருதுவதே சரி என்றும் அதற்கு உதாரணமாக தெரசா அவர்களையும் சுட்டிக்காட்டியிருந்தோம். நம் கட்டுரையைப் படிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்குக் கூட இது எளிதாக புரிந்துவிடும்! மாண்புமிகுகளுக்குப் புரிவதில்லை. வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் எல்லாம் அன்னை தெரசா போல இருப்பார்கள் என்றும் நாம் சொல்லவில்லை. பிரச்சனை சோனியாவையோ தெரசாவையோ பற்றியதேயில்லை. (சோனியாவை வைத்து எழுப்பபடுவதால் இங்கு குறிப்பிடுகிறோம்). பிரச்சனை பொதுவாழ்வில் ஈடுபடுவர்களுக்குள்ள உரிமை பற்றியது. நாளை நம் மகனோ மகளோ வேறு நாட்டில் திருமணம் செய்துகொண்டு வந்து அவர்களும் இந்திய குடியுரிமை வாங்கிய பின்பும் பொது வாழ்வில் ஈடுபட தடை யாரும் சொல்லக்கூடாது என்பதுதான் நாம் சொல்வது. பொது வாழ்வையும், குடும்ப வாழ்வையும் ஏன் கலக்கவேண்டும் ? திருமணத்திற்கு மனம் பொருந்தியவர்களாகவும், மனதிற்கு பிடித்தவர்களாகவும் இருக்கவேண்டும். மற்ற எதுவும் தேவையில்லை. கலப்புத் திருமணங்களே சமதர்ம சமுதாயம் ஏற்பட வழி என்று அறிஞர்கள் சொல்லிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில், பிற்காலத்தில் பிரதமராகக் கூடும் என்பதால் ராகுல் தனக்குப் பிடித்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்பதோ அல்லது அப்படி செய்துகொண்டால் அவர் பதவியில் அமரக்கூடாதென்றோ சொல்வது மடத்தனமானது. சோனியா உலகின் சிறந்த பெண்மணி என்றோ, ஊழலே செய்யமாட்டாரென்றோ நாம் சொல்லவில்லை. அறக்கட்டளையில் தவறு செய்திருந்தால் அது இந்தியாவில் இருக்கும் மற்ற ஊழல்வாத அரசியல்வாதிகளைப் போலவே அவரும் ஒரு ஊழல்வாத அரசியல் வாதி என்றுதான் காட்டும். என்றாலும் மற்ற ஊழல்வாதிகளுக்கு அதிகாரங்களையும் பதவிகளையும் பிடிக்க இருக்கும் அதே உரிமை இவருக்கும் உண்டு என்பதே நம் வாதம். மற்றபடி ஊழல்வாதிகளை ஆட்சியில் அமரவைக்கலாமா கூடாதா என்பது மக்கள் பதில் சொல்லவேண்டிய கேள்வி.
ஆட்சி அதிகாரங்களைப் பிடிக்க மட்டும்தான் இந்தியர்கள் வேண்டுமென்று கேட்கிறீர்கள். மற்ற பொது நலத் தொண்டுகளுக்கு அப்படிக் கேட்பதில்லை. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவ பில் கேட்ஸ் ஒரு 100 கோடி கொடுத்தால் பல்லிளித்துக்கொண்டு வாங்கிக்கொள்வார்கள். அப்போது அவர் வெளிநாட்டவர் என்று தெரியாது. சங்கர மடங்களும், சங் பரிவாரங்களும் ஏன் சில கோடிகளையோ, சில இலட்சங்களையாவது இது போன்ற பொதுநலக் காரியங்களுக்குக் கொடுக்கவில்லை ? என்று நாம் கேட்கக் கூடாது. தெரசா ஒரு விதிவிலக்கு அவர் ஒருவரை மட்டும் பார்த்துவிட்டு சொல்லக்கூடாது என்று குறுக்குக் கேள்விகள் கேட்பார்கள் என்று தெரிந்திருந்ததாலேயே இப்படி குறிப்பிட்டிருந்தோம். அதாவது ‘மனதாலும், உணர்ச்சியாலும், மனிதாபிமானத்தாலும் இந்தியர்களாய், இந்தியர்களுக்குத் தொண்டு புரியும், சகோதர சகோதரிகளும், அன்னைகளும், நண்பர்களும் எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் இந்தியர்கள் தான். அப்படி சொல்வது நமக்குப் பெருமையே. ‘ என்று. ஆட்சி அதிகாரங்களுக்கு மட்டும் தாங்கள்தான் என்று கூறிக்கொள்ளும் அத்வானிகளும், ஜோஷிகளும், உமா பாரதிகளும், சுஸ்மாக்களும், சங்கரர்களும் ஏன் இந்த தொண்டுகளை செய்யமாட்டேன் என்கிறார்கள் ? என்பது போன்ற நியாயமான கேள்விகளைக் கேட்டிருந்தோம். அரவிந்தன் வழக்கமான தந்திரத்தைக் கையாள்கிறார், அதாவது கேள்விக்கு எதிர் கேள்வி. வெளிநாட்டிலிருந்து வந்த தெரசா போன்றோர் நோயாளிகளைத் தொட்டு தூக்கி துண்டு செய்கிறார்கள் என்று நாம் குறிப்பிட்டிருந்ததை அவர் வசதிக்காக தந்திரமாகத் திரித்து ‘சோனியா எத்தனை நோயாளிகளை தூக்கினார் ? என்று. பதில் சொல்வதை தந்திரமாக தவித்து விடுவதோடு, நம்மை வேறு பதில் சொல்லும் நிலமையில் வைத்துவிடுகிறார். தந்திரமய்யா தந்திரம், சங் பரிவார தந்திரம்! சரி சோனியா எந்த நோயாளியையும் தொட்டு தூக்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம். அந்தக் காரணத்தினால் அவர் பிரதமர் பதவியில் அமரக்கூடாதென்றால், அதே காரணத்துக்காக வாஜ்பாயிகளும், அத்வானிகளும், மோடிகளும், சங்பரிவாரத்தை சேர்ந்த யாரும் இது போன்ற பதவிகளில் அமரக் கூடாதே. இதையெல்லாம் நாம் கேட்டால் நாம் உளறுகிறோமாம்!
ஒரு பெரியவர் சோனியாவின் காலில் செருப்பும் மாட்டிவிடும் புகைப்படத்தை நாம் பார்க்கவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறோம். அதுபோன்ற ஒரு புகைப்படம் அரவிந்தன் நீலகண்டனைப் போன்ற ஒருவருக்குள் ஏற்படுத்தும் அதிர்ச்சியையும் நாம் புரிந்துகொள்ளலாம். ‘அம்மா ‘க்களின் கால்களில் முதுகெலும்பில்லாத அமைச்சர்கள்களும், எம்.எல்.ஏ-க்களும் விழுந்து கிடக்கும் காட்சியையும், அத்வானிகளும் வெங்கட் ராமன்களும் சங்கராச்சாரிகளின் கால்களில் கிடக்க, உலகத்தையே வெற்றி கொண்டுவிட்டவர் போல மமதையில் பல்லிளித்துக்கொண்டு ஆசீர்வதிக்கும் சங்கராச்சாரிகளையும் பத்திரிக்கைகளின் முகப்புப் பக்கங்களில் பார்த்து புல்லரித்துப் புளங்காகிதம் அடைந்துகொண்டிருப்பவர்களுக்கு, அப்படி ஒரு புகைப்படம் ஏற்படுத்தும் அதிர்ச்சியை நம்மால் எளிதாக புரிந்துகொள்ள முடியும். ‘வர்ணாசிரம மனு பொறுக்கி ‘, யார் காலில் யார் விழவேண்டும் என்றெல்லாம் சொல்லிவைத்திருக்க, அதையே தலைமேல் வைத்துக்கொண்டு உயிராகக் காப்பாற்றி வருபவர்களுக்கு, அந்தக் கொள்கைகளுக்கு சம்பந்தமில்லாமல் ஒருவர் இன்னொருவர் காலில் – எதேச்சையாகக் கூட இருக்கலாம் – விழுந்தால் ஏற்படும் அதிர்ச்சி சாதாரணமானதாகவா இருக்கும் ? சோனியா அந்த பெரியவரை வேண்டுமென்றே செருப்பை எடுக்க சொல்லியிருக்க மாட்டார் என்று ‘மாண்புமிகு ‘வையும் சேர்த்து யாருக்கும் தெரியும். எதேச்சையாக கீழே விழுந்துவிட்ட செருப்பை, தலைவர்களைக் கண்டால் தலை கால் புரியாமல் செயல்படும் நம் மக்கள் கூட்டத்தில் ஒருவர் எடுத்துக் கொடுத்திருக்கிறார். (அவரே காலில் மாட்டிவிட முனைந்திருக்கிறார்). இப்படி எதேச்சையாக நடந்துவிட்ட ஒரு செயலையும் அரசியலாக்கி, சோனியா எதோ கொலை குற்றம் செய்துவிட்டதுபோல (இந்தியாவில் அரசியல்வாதிகளின் கால்களில் அதற்குமுன் யாருமே விழுந்ததில்லை என்பது போலவும்) காட்டும் தந்திரம் நமக்கில்லை. சோனியா செய்தது தவறான செய்கை என்பதிலோ, அவரே சென்று செருப்பை எடுத்திருக்கவேண்டுமென்பதிலோ, குறைந்த பட்சம் கையிலாவது அதை அந்த பெரியவரிடமிருந்து வாங்கியிருக்கவேண்டுமென்பதிலோ ஒரு சந்தேகமுமில்லை. பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒரு தலைவருக்கு, அந்த செயல் ஒரு தவறான முன்னுதாரணம் என்பதால் நாம் அதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அடுத்ததாக திருமாவளவன். ‘ஹிந்து இல்லை ‘ என்று அவர் சொல்வது நீங்கள் ‘ஹிந்து ‘ என்பதற்கு வரையறுத்து வைத்திருக்கும் சட்டங்களுக்குட்பட்ட ‘ஹிந்து ‘ இல்லை என்று. சங்கராச்சாரிகளின் கால்களில் விழுந்து அவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்பவன் தான் ‘ஹிந்து ‘ என்று நீங்கள் கூறும் ‘ஹிந்து ‘ இல்லை என்று. வருணாசிரம மனுக் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, சாதி பெயர்களை சொல்லி இந்திய சகோதரனை தள்ளி வைப்பவன் தான் ‘ஹிந்து ‘ என்று சொல்கிறீர்களே அந்த ‘ஹிந்து ‘ இல்லை என்று. இந்துத்வா என்று இந்து மதத்திற்கு சம்பந்தமில்லாத கோஷம் எழுப்பிக்கொண்டு
சூலங்களையும் கடப்பாரைகளையும் எடுத்துக்கொண்டு தீவிரவாதிகள் போல மாற்று மதத்தினரின் கோவில்களை நோக்கி செல்லும் சிறுமதி படைத்தவன் தான் ‘ஹிந்து ‘ என்று நீங்கள் சொல்லும் ‘ஹிந்து ‘ இல்லை என்று. ‘ஹிந்து ‘ என்று வெளியில் வந்து முதலில் சொல்லட்டுமே என்று நீங்கள் கேட்கும் ‘ஹிந்து ‘ இல்லை அவர். ஒரு உண்மையான இந்து. ஒரு உண்மையான இந்துவைப் போல, ஒரு தமிழனைப் போல தன் குல தெய்வக் கோவிலில் சென்று வணங்கி வந்ததை இந்த வார ஆனந்த விகடன் படத்துடன் வெளியிட்டிருக்கிறது. அவர் இந்து என்பதற்கு வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை. வெளியில் வந்து சொல்ல வேண்டிய அவசியமோ, உங்களிடமோ அல்லது ஆர்.எஸ்.எஸ்-டமோ இந்து சான்றிதழ் வாங்கவேண்டிய அவசியமோ எந்த இந்துவுக்கும் இல்லை. தேரிழுப்பதற்கு ஆசையோ, வேண்டுதலோ கூட வேண்டும் என்பதில்லை. சாதி பெயரை சொல்லி ஒரு பிரிவினரை தேரிழுக்கவிடாமல் தடுக்கிறார்கள் என்று தெரிந்தால் அதை தடுப்பதற்காக மட்டுமே அவர் தேரிழுக்க சென்றிருந்தாலும் அது வரவேற்கப்படவேண்டியதே. விட்டால் அடுத்ததாக சங் பரிவாரங்கள் சொல்பவர்கள் தான் தேரிழுக்கவேண்டும் என்று இந்த ‘மாண்புமிகு ‘ சொன்னாலும் சொல்லுவார்! அதையும் நாம் சத்தம் போடாமல் கேட்டுகொள்ளவேண்டுமாம்.
பண்டிகைகளும் திருவிழாக்களும் ஏற்பட்டிருப்பதே ஒரு சமுதாயத்திலுள்ள எல்லாவிதமான மக்களையும் ஒன்றிணைத்து ஒரு சுமுகமான சூழலை உருவாக்கவே. சாதி, மத, மாற்சாரியங்களை மறந்து எல்லோரும் இணைந்து ஊருக்காக ஒரு விழா நடத்தும்போது, அவர்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் மறைந்து ஒரு அன்பான சூழல் உருவாகும் என்பதற்கே திருவிழாக்கள் ஏற்பட்டிருக்கின்றன. பக்கம் பக்கமாக ஏட்டுச் சுரைக்காய்களை எழுதிக் குவிக்கும் ‘மாண்புமிகு ‘ அறிவுஜீவிக்கு இந்த சிறு அடிப்படை உண்மைகூட புரிந்திருக்கவில்லையே என்று நாம் மலைக்கிறோம். ஊர் கூடி தேர் இழுக்கவேண்டும் என்று அதானால் தான் சொல்லப்பட்டிருக்கிறது.(ஊரிலுள்ள ஒரு மதத்தினர் கூடி என்றோ அல்லது ஒரு சாதியினர் என்றோ சொல்லப்படவில்லை.) ஒரு இஸ்லாமியரோ கிறிஸ்தவரோ தேரிழுக்க வந்தால் மகிழ்ச்சியோடும் பெருந்தன்மையோடும் சேர்த்துக்கொள்ளவேண்டும். இன்னும் சொல்லப்போனால் அவர்களை அதற்கு நாம் அழைக்கவேண்டும், அப்போதுதான் நாம் ஒரு அன்பும் பண்பும் நிறைந்த சமூகமாக இருக்கமுடியும். மற்றபடி தனக்கு தேரிழுக்கவேண்டுமென்றோ அதுவும் ஒரு சமூகத்தினர்தான் இழுக்கவேண்டுமென்று எந்த சாமியும் கேட்டதாக நாம் எந்த இந்துமத புத்தகங்களிலும் படித்ததில்லை. தம்மை ஊர்வலமாக அழைத்துசெல்ல வேண்டுமென்றோ அதுவும் குறிப்பிட்ட சாலை வழியாகத்தான் அழைத்து செல்லவேண்டுமென்று பிள்ளையார் கேட்டதாகவும் நாம் கேள்விபட்டதில்லை. சாதி மத வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் பண்டிகைகளுக்கு அழைப்பதும், மற்ற பண்டிகைகளில் கலந்துகொள்வதும் தான் ஒரு சமூகத்தின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டாகும். வாஜ்பாயிகளும், கருணாநிதிகளும் ஜெயாக்களும் ஓட்டுக்காக கலந்துகொள்ளும் அரசியல் விருந்தைப் பற்றி நாம் சொல்லவில்லை. உண்மையாக நாம் பள்ளியில் படித்த காலத்தைய நிகழ்வுகளையே சொல்கிறோம். அப்போதெல்லாம், எம் தந்தையாருடன் வேலை பார்த்த கிறிஸ்தவ நண்பர்களுக்கும் சேர்த்தே ஒவ்வொரு தீபாவளிக்கும் பொங்கலுக்கும் பலகாரம் செய்வார்கள். ஆடிப் பெருக்கிற்கு பொன்னி நதியை வணங்கிவிட்டுக் கையில் மஞ்சள் நூல் கட்டிவிடும்போது தமையனாரின் இஸ்லாமிய நண்பர்களுக்கும் கட்டிவிடுவார்கள். யாரும் மறுப்பேதும் சொல்லமாட்டார்கள். படையலிட்ட பழங்களையும் இனிப்பு மாவு வகைகளையும் சாதி மதம் பார்க்காமல் யாவரும் மாறி மாறி பரிமாறிகொள்வதெல்லாம் வெகு சாதரணமான காட்சிகளாகும். கிறிஸ்துமஸ்-கு கேக் வழங்குவதும், ரம்ஜானுக்கு அழைத்து பிரியாணி போடுவதும் கூட சர்வ சாதாரணமாக நடந்துகொண்டிருக்கும். ஆர்.எஸ்.எஸ்-ம், பிஜேபி, சங்பரிவாரங்களும், ராமகோபாலன்களும், ராஜாக்களும், இல.கணேசன்களும் தமிழகத்திற்குள் வந்துவிட்ட பின் ‘ஆமை புகுந்த வீடு போல ‘ என்று சொல்வார்களே அதுபோல ஆகிவிட்டது தமிழகம். பண்டிகைக் காலங்களில் ஊருக்கு சென்று பல வருடங்களாகிவிட்டது. இப்போது பண்டிகைகள் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. ஹும்ம்…
நாம் முன்பே ஒருமுறை ‘மாண்புமிகு ‘ அரவிந்தனைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டிருந்தோம். [ ‘2 அல்லது 3 வாரங்களுக்கு ஒரு முறை வந்து பெரியார் இனவாதப் பிரசாரம் செய்தார் என்றும் இன்னும் என்னவெல்லாம் அவரை திட்டமுடியுமோ அவ்வளவையும் திட்டாவிட்டால் அவருக்கு தூக்கம் வராது போலிருக்கிறது. (பாவம் அப்படி ஒரு நிலை!). ‘] இப்போது மீண்டும் அதை நிரூபித்திருக்கிறார். சம்பந்தமேயில்லாமல் போகிறபோக்கில் ‘ஈவேரா பகுத்தறிவுக் கும்பல் ‘ பற்றி ஒரு திட்டு திட்டிவிட்டுத்தான் செல்கிறார். பகுத்தறிவுக் கும்பல் மீது அவருக்கு இருக்கும் துவேஷ பக்தியையும் நாம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். முதலில் இருக்கவேண்டும் அப்புறம்தானே பகுப்பதைப் பற்றி யோசிக்கமுடியும். தன்னிடமில்லாததை வைத்துக்கொண்டு அவர்கள் உண்மைகளை சொல்லி நம் (கும்பல்களின்) முகமூடியைக் கிழிக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் அவர் புலம்புவதும் நம்மால் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதுதான். தி.க.காரர்கள் கூட இந்த அளவு பெரியாரைப் பற்றி நினைப்பார்களா என்பது சந்தேகமே. ‘மாண்புமிகு ‘ அரவிந்தன் ‘ஈவேரா ஈவேரா ‘ என்று ஒரு ஜபம் போலவே சொல்வார் போலிருக்கிறது. (அப்படியும் மதவெறி குறைந்ததாகத் தெரியவில்லை என்பது வேறு விஷயம்!) நிலமை நாம் நினைத்திருந்ததைவிட மோசமாக உள்ளது. பாவம். அவர் நலன் கருதி சீக்கிரமே ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுகுமாறு நாம் அவரைக் கேட்டுக்கொள்ளவேண்டியவர்களாகிறோம். மீண்டும் அவர் திண்ணைக்கு ஒதுங்கும் வரை அவர் ஜபம் செய்யும் ஈவேரா அவருக்கு ஜாதி-மத வெறியில்லாத நல்ல புத்தியைக் கொடுக்கட்டுமாக!