ஆதி காக்கா முதற்றே உலகு

This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

கே. ஆர். மணி


போனமாதம் செத்துப்போன
என் பெரியப்பாவை கிளறவும்
அந்த காக்கைதான் முதலில்
வந்ததாய் ஞாபகம்.

இன்றும் அதுதான்
வந்திருக்கிறது முதலில்.

நீண்ட குடலை தள்ளி
லாவகமாய் எதனை நோக்கி
போகிறது அதன் கருப்பு மூக்கு
ஈரலை நோக்கியா ?

வேறெதை தேடப்போகிறது
இதயத்தையா என்ன?
அதன் அழகு இந்த கருப்புக்கு
எங்கே தெரியப்போகிறது ?

ஈரல்,இதயம், மெல்லிய தோல்
குடல், கொஞ்சம் இரத்தம்
டயர்கள் தேய்ந்ததால் நசுங்கின முகம்
அழுக்கான தோலைத்தவிர
நான் அழகாய்த்தானிருக்கிறேன்.

அழகு.
நடந்துகொண்டுருந்தபோது நான்
பார்க்கமுடியாத
அழகு
தார்ச்சாலையில் பரப்பபட்டு.


mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி