புகாரி நீ வைகறைப் பனிவிழும் புல்மடியோ - மலை வாழையில் வெடித்தபொற் கனிநிலவோ - அந்தி வானத்துச் சந்தன ஒவியமோ - நதி கடலுக்குச் சூட்டிடும் நுரைச்சரமோ - முழு நிலவு உன் கூந்தலில்…
ஸ்ரீமங்கை ஓவியங்களை நான் ரசிப்பதில்லை, தனது ஓவியங்களை அழித்து, ஓவியத்திரையினைக் கிழித்துக்கொண்டிருந்த அந்த முதியவனைச் சந்தித்ததிலிருந்து. 'குருர ஓவியனே! நீ வரைந்த ஓவியங்கள் ரசிகர்களைப் பார்க்குமுன்னே, ஏன் இப்படி அழிக்கிறாய் ?. ' 'அனைத்த்தையும்…
தமிழவன் ஒரு ரோஜாத்தோட்டம். விழுகிறது, மஞ்சளளவு இளம்வெயில். பறக்கும் வண்ணத்துப் பூச்சியின் மெலிதான நிழல் பட்டு ஆடுகிறது புல்லின் பச்சைநிறம். ஆழத்திலிருந்து பீறிடுகிறது அழைப்பு. மெதுவாய் நடைபயில்கிறது அழுக்காடையுடன் நேற்று அமர்ந்து அழுத தீண்டத்தகாதவனின்…
வை.ஈ. மணி பழியொரு பக்கம் பாவமொரு பக்கமென பழமொழி கூறும் பொருளது பொய்யன்று தந்தைதாய் செய்தபழி சேய்தனைச் சாருமென்று சிந்தனையில் வேரூன்ற சான்றொன்று காண்போம் செல்வம் படைத்த செருக்கில் நாரணனும் கல்விக் கரசியின் கணவனும்…
பவளமணி பிரகாசம் விட்டேன் பற்றை என்று ஏமாறாமல் கெட்டேன் இதனால் என்று குமுறாமல் கேட்டேன் முன்பே என்று ஒதுக்காமல் தட்டேன் இந்தக் கணத்து ஆர்வத்தை. ---- pavalamani_pragasam@yahoo.com
சாந்தி மனோகரன் வெட்டி வீழ்த்தப்பட்டு-மரங்கள் தரைமட்டம் ஆக்கப்படும்போது நீர்மட்டம் குறையத்தான் செய்கிறது-ஆம் வேர்க்காதலன் இல்லாத இடத்தில் நீர்க்காதலி வசிப்பதில்லை வேரிடம் வெற்றிடமாகையில் வேறிடம் பெயர்கிறாள்..காதலி காடு மரங்கள் தொலைத்திடும் நிலம் சுடுகாட்டில் கணவனை தொலைத்திடல்…
மாலதி ---- கோயில் விட்டுத் தள்ளிப் போகும் சாமிக்குக் கத்துங்கடல் ரொம்பத்தூரம். கூப்பிட்டுத் தாள் பணியும் ஆணவமறுத்த கடல் கூவியழும் கண்ணீர்க்கடல் முத்துமணி பவளம் போல் மூத்திரமும் பொங்கவிடும் மறைவிடமில்லாத கடல் சப்பரத்தில் அடங்கிய…
பனசை. நடராஜன் தேர் நேராய் செல்லாமல் திசை கொஞ்சம் மாறினால் தடைப் போட்டுத் திருப்பாமல் தடம் புரளச் செய்யவோ! நீர்மூடிய சேற்றினில் - நீ நீராட இறங்கையில் 'நில் ' என்று சொல்லாமல் நீந்தென்று…
சாந்தி மனோகரன் நடப்பதை நிறுத்திவிட்டு நின்று பார்த்தபோது பாதையின் முடிவில் நானிருந்தேன்.... நடந்து வந்த பாதையை திரும்பிபார்த்தால்..அதுவும் நான் கடந்து வந்த பின்னே உடைந்தோ இல்லை கரைந்தோ தொலைந்து போயிருந்தது... விளிம்பினிற்கு வந்துவிட்டோமோ எனவெண்ணி…
நாவாந்துறை டானியல்ஜீவா- தனித்து விடப்பட்ட தீவில் நான் ஒரு வசந்தத்தின் தேடலுக்காக.... உண்மையான உலகத்தைத்தேடி பொய்யான முகங்களிற்குள் புதைந்து போனேன். சொல்லிதயங்களெல்லாம் நல்லிதயங்களில்லாதல் நளிந்தும்.... மெலிந்தும் போனேன். விரக்தி என்னிடம் விடாப்பிடியாய்; என் கூடவா…