திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050707_Issue

அரசியலும் சமூகமும்

வங்கதேசப் போரின்போது அமெரிக்கக் கப்பல் – அமெரிக்க தூதுவரகம் அமெரிக்க உள்துறைக்கு அனுப்பிய தந்தி

அமெரிக்க உளவுத் துறை (அமெரிக்காவின் ரகசியக்கோப்புகள் சில ஜூன் 9 2005-ல் பகிரங்கப்படுத்தப் பட்டன. வங்கதேசப் போரின் போது டிசம்பர் 71-ல் அமெரிக்கக் கப்பல் படைப் பிரிவு இந்து மகா சமுத்திரத்திற்கு வந்த்போது ,…

புட்டோவுடன் அமெரிக்க உள்துறை அமைச்சர் உரையாடல்

அமெரிக்க உளவுத் துறை (அமெரிக்காவின் ரகசியக்கோப்புகள் சில ஜூன் 9 2005-ல் பகிரங்கப்படுத்தப் பட்டன. டிசம்பர் 18 , 1971-ல் அமெரிக்க உள்துறை அமைச்சரும் புட்டோவும் மேற்கொண்ட உரையாடலின் பதிவு இது. ) 1.…

இந்தியா பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் தோல்வியின் பின்விளைவுகள்

அமெரிக்க உளவுத் துறை (அமெரிக்காவின் ரகசியக்கோப்புகள் சில ஜூன் 9 2005-ல் பகிரங்கப்படுத்தப் பட்டன. டிசம்பர் 9 , 1971-ல் அமெரிக்க உளவுத்துறை அனுப்பிய கடிதம் இது .) 1. டிசம்பர் 7, 1971…

இந்திய அமெரிக்க உறவு – இந்திரா காந்தியின் வார்த்தைகளில்

இந்திரா காந்தி (அமெரிக்காவின் ரகசியக்கோப்புகள் சில ஜூன் 9 2005-ல் பகிரங்கப்படுத்தப் பட்டன. பங்களா தேசம் விடுதலைக்குப் பின் பத்திரிகையாளர்களிடம் இந்திரா காந்தி பேசியது பற்றி அமெரிக்க அலுவலர்கள் அமெரிக்க உள்துறைக்கு அனுப்பிய தந்தி…

தீபம் இதழ் தொகுப்புகள் I & II – அறிமுகம்

தொகுப்பு:பி.கே.சிவக்குமார் தீபம் இதழ் 1965-ல் அமரர் திரு. நா. பார்த்தசாரதி அவர்களால் தொடங்கப்பட்டது. பின்னர் நா.பா.வின் பெயருக்கு முன்னர் ஒரு தகுதிவாய்ந்த பட்டம் போல 'தீபம் ' என்ற பெயரும் சேர்ந்து, அவர் தீபம்…

புலம் பெயர் வாழ்வில் வேலையும் பெண்களும்

சந்திரவதனா புலம்பெயர் வாழ்வில் வேலைக்குப் போகும் பெண்களையும், வேலைக்குப் போகாதிருக்கும் பெண்களையும் பார்ப்போமேயானால் இரு பகுதியினரது வாழ்வும் ஏதோ ஒரு வகையில் கடினமானதாகவே இருக்கிறது. எழுச்சிகளும், புரட்சிகளும் காலங்காலமாக இருந்து வந்தாலும், இன்றைய பெண்களுக்கு…

தலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 1

கே.ஜே.ரமேஷ் ஒரு சாதாரணத் தச்சுத் தொழிலாளியின் மகன் உலகத்திலுள்ள ஒட்டுமொத்தத் தொழிலாளர்களின் தலைவனாக, ஆதர்ஷ புருஷனாக ஏன் ஒரு கடவுளாகவே விஸ்வரூபமெடுத்த கதை தெரியுமா ? அவர் இல்லையேல் போலந்து நாட்டின் லெனின் கப்பல்…

அறிவிப்புகள்

நினைவுக் கூட்டம் மறைந்த யாழ் பரி.யோவான் கல்லூரி அதிபர் சி.ஈ.ஆனந்தராஜாவின் 20 வது நினைவுக் கூட்டம்;.

அறிவிப்பு இடம்: ஸ்காபரோ கிராம அரங்கு(Scarborough Village RC) 3600 கிங்ஸ்ரன் வீதி (மார்க்கம், கிங்ஸ்ரன் வீதிகளின் சந்திக்கு அருகாமையில்) காலம்: யூலை 10ம் நாள், மாலை 5.30 மணி அனைவைரையும் அன்புடன் அழைக்கின்றோம்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

விண்வெளியில் செல்லும் வால்மீனுக்குப் பேரடி கொடுத்த பூமியின் எறிகணை! (Earth ‘s Deep Impact Space Probe Hits the Comet)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா பரிதியின் கவர்ச்சி வலையில் சிக்கி திரிந்து வரும் வால்மீனை விரட்டி, காலவீதி கணிக்கிட்டு புவித்தள ஏவுகணை அவிழ்த்து விட்ட விண்ணுளவி, கவண் கல் வீசி வயிற்றிலே…

இலக்கிய கட்டுரைகள்

விடிகின்ற பொழுதாய் கவிதை

திலகபாமா வயல் எங்களுக்கானதாய் இருக்க பசியெடுக்கையில் ,, முதலில் இருந்ததை உண்டு பசியாறினோம். அது தீருகின்ற தருவாயில் மீண்டும் விதைக்கப் பழகினோம். அதிகம் தேவை உருவாகின்ற பட்சத்தில் ஏரோட்டினோம். மேல் மண் வளம் குன்றத்…

தீபம் இதழ் தொகுப்புகள் I & II – அறிமுகம்

தொகுப்பு:பி.கே.சிவக்குமார் தீபம் இதழ் 1965-ல் அமரர் திரு. நா. பார்த்தசாரதி அவர்களால் தொடங்கப்பட்டது. பின்னர் நா.பா.வின் பெயருக்கு முன்னர் ஒரு தகுதிவாய்ந்த பட்டம் போல 'தீபம் ' என்ற பெயரும் சேர்ந்து, அவர் தீபம்…

கதைகள்

உயிர்த்திருத்தல்

சாரங்கா தயாநந்தன் 'தடால் ' என்ற ஓசை கேட்டது. சமையலறையினுள்ளிருந்துதான். அவனுக்குத் தெளிவாகவே புரிந்து போயிற்று. அங்கே நின்று கொண்டிருப்பது யாரென்று. சடுதியான கோபம் கிளர்ந்து அவன் உடலெங்கும் பரவிற்று. ஒரு விதமான இயலாமை…

வளைந்து போன வீரவாள்

செழியன் மார்கழி மாத விடுமுறை விடவும் மாமா வந்து இறங்கவும் சரியாக இருந்தது. மார்கழி மாத விடுமுறையில் பெரிய பெரிய வசதிகள் எல்லாம் இருக்கின்றது. முப்பது நாட்களுக்கும் குறையாமல் வருகின்ற மிகப் பெரிய பள்ளிக்கூட…

தீவுகள்..

பத்ரிநாத் ' 'சுப்பு .. அப்பா என்ன பண்றா பாரு.. ' ', ' 'தூங்கிண்டு இருக்கறாப்பல தெரியறது.. வாயிலேர்ந்து என்னமோ வழியறதும்மா.. பக்கத்தில ஒக்கார முடியல.. சாப்டும் போது நினைச்சா கொமட்டிண்டு வர்றது..…

அதீதப் புள்ளி

நரேந்திரன் காரை விட்டிறங்கி ஆர்-2 காவல் நிலையத்தினுள் நுழையும் போது இருட்டத் துவங்கியிருந்தது. கட்டைத் துப்பாக்கியுடன் பாரா நின்ற போலிஸ்காரர் என் சூட்டையும், கோட்டையும் கண்டு ஒரு கணம் குழம்பி, எதற்கும் இருக்கட்டுமே என்று…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-2)

சி. ஜெயபாரதன், கனடா 'ஆங்கிலேயர்களே! எங்கள் பிரெஞ்ச் நாட்டை உங்கள் ஆதிக்க வர்க்கம் ஆள்வதற்கு எந்த உரிமையும் கிடையாது! கடவுள் என் மூலமாக அனுப்பிய அரச கட்டளை இது: உங்கள் கோட்டைகளை விட்டுவிட்டு, உங்கள்…

கவிதைகள்

பெரியபுராணம் – 47 சண்டேசுர நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 1237. அர்ச்சனை முன்பு அங்கு முன்நாளில் செய்த தொடர்ச்சியால் பொங்கும் அன்பால் மண்ணி ஆற்றின் மணல் திடலில் ஆத்தி மரத்தின் அடியில் சிவந்தகண் கொண்ட காளை வாகனம் உடைய திருமேனியாக லிங்கத்தை மணலால்…

பருவகாலம்

ரா.கிரிஷ் பருவக் காலத்தில் வந்து சொல்லும் பறவைகள் போல் என் பருவ வயதில் வந்து சென்ற காதல் அது! படிப்பதில் கவனம் செல்லவில்லை உறங்குவதில் கவனம் செல்லவில்லை பார்வைகள் எல்லாம் என்னில் பதிவதாய் ஒரு…

நீள்கிறது கவலை

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) மதமும் மதத்தால் வரும் மதமும் இல்லாத என் எதிர்காலத்தோழன் என்னபாடு படுவான்! ' எங்கும் இருக்கிறான் இறைவன் எல்லாமாகவும் இருக்கிறான் இறைவன் '-விடு என்னை என்பவனை என்னபாடு படுத்தும் இந்த…

பச்சை மிருகம்

கவிநயா கண்டதும் கொண்ட காதல் போல் சிலரைக் கண்டதும் விழித்துக் கொண்டு உறுமும் மிருகம் அதோ அவளைக் கண்டால் இந்தப் பச்சை மிருகம் இலேசாக அசைந்து கொடுக்கும் இதோ இவனைக் கண்டால் காலைத் தூக்கத்தை…

அவனது கவிதைகள்

பாலு மணிமாறன் நடுவிலிருந்து கடைசியிலிருந்து எப்படியிருந்தோ துவங்கிவிடுகின்றன அவனுக்கான அவனது கவிதைகள். அவனைக் கேட்காமலே தம்மைத் தாமே எழுதியும் கொள்கின்றன. அவன் உடுத்தி விடும் ஆடைகளையெல்லாம் கழற்றி எறிந்துவிட்டு ஒரு குழந்தை மாதிரி அவை…

பிரிவோம்…சந்திப்போம்!

பாலு மணிமாறன் நாம் ஒரு முறை சந்தித்தோம்... முற்றிலும் மீழ்கி விடுவோமோ... அஞ்சும் அளவு அன்பின் சக்தி ஆக்கிரமித்தது. உணர்வுகள் கொப்பளித்து, கொப்பளித்து குளிர்ந்தது. பெருத்த மேகங்களுக்கு பின்னிருந்து விரல் நீட்டின நம்பிக்கை ரேகைகள்.…

தாயின் உயிர்க்கொடிகள்

கண்ணப்பு நட்ராஜ் காற்றில் நீந்தும் கனத்த பூமி போர்த்த மேகசமுத்திரமே.. இந்த பூமி பூத்த பூவையர்கள், ஒளிமலர்கள் கொண்டு பிரபஞ்சப் பூசை நடத்தக் கண்மூடி , உம்மைத் தம் தாய்மைப் போர்வையால் இழுத்து மூடி,…

நான் மரணித்து விட்டேன்

ரா.கிரிஷ் போக்குவரத்து நெரிசலில் தினம் தினம் செத்து பிழைப்பதில் இருந்து நிரந்தர விடுதலை. நான் மரணித்து விட்டேன். . . இயந்திரதனமான வாழ்க்கை இயற்கை சீரழிவுகள் எல்லாம் என்னை இனி சீண்டபோவதில்லை நான் மரணித்து…

எது காதல் ?

ரா.கிரிஷ் கடற்கரை மணலில் காமம் மட்டுமே காதலாய்... கல்லூரிகளில் நேரம் போக்க மட்டும் காதல்... திரும்பிய பக்கமெல்லாம் வண்டிகளில் காதல்... மறைந்து கொள்ள இடம் கிடைக்கும் எல்லா இடங்களிலும் உடல் பசிக்காய் காதல்... காலை…

குடை வாசிக்கும் கவிதை

புதியமாதவி. சூடான வாடாபாவுக்காக ரோட்டோரத்தில் நனைந்து கொண்டிருக்கிறாய், அருகில் வந்து குடைப்பிடிக்கலாம்தான். ஆனால் குடை இருப்பதோ உன்னிடத்தில் சாலைவிதிகளை மறந்து ஓடிவந்து உன்னுடன் கலந்து ஒன்றாக நனையலாம்தான். ஆடைகள் நனைந்துவிடுமே.. அச்சத்திலேயே குளிர்காய்கிறது என்…