திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030802_Issue

அரசியலும் சமூகமும்

கேட்டுக்கிட்டே இருங்க!

பா.ராகவன் தமிழகத்தில் தனியார் தொலைக்காட்சிகளின் மேல் - குறிப்பாக, அந்த அழுவாச்சித் தொடர்களின் மேல் மக்களுக்கிருந்த மாளாக்காதல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியிருப்பது போல் தெரிகிறது. ஓரிரு தொடர்களைத் தவிர மற்ற பல நூற்றுக்கணக்கான…

கஷ்டமான பத்து கட்டளைகள்.

கோமதி நடராஜன் பெற்றோர்களின் நிழலில் இருக்கும் வரை,சகோதர சகோதரிகளுக்கிடையே நிலவி வந்த பாசம்,நேசம் எல்லாம்,அவரவர்கள் மனைவி குடும்பம் குழந்தைகள் என்று கிளை விட்டபின்,ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்ற வாக்கியத்தை உண்மையாக்குவது போல்,பாசத்தில் ஒரு கீறல்,பிணைப்பில்…

உணர்வும் உப்பும்

தொ பரமசிவம் 'உப்புப் பெறாத வேலை ' என்று ஒன்றுக்கும் பயனற்றதைக் குறிப்பிடு வார்கள். (உணர்ச்சியற்றவனை உப்புப் போட்டுத் தான் சாப்பிடு கிறாயா ? என்றும் கேட்பார்கள்.) ஆனால் மனிதகுல வரலாற்றில் உப்புக்குத் தனி…

குறிப்புகள் சில- 31 ஜூலை 2003- காட்கில்,வோல்வோ பரிசு-மறைமலையடிகள் நூலகம்-மேரி கல்டோர் -உலக சிவில் சமூகம்

K.ரவி ஸ்ரீநிவாஸ் பேராசிரியர் மாதவ் காட்கில் 2003ம் ஆண்டுக்கான வோல்வோ சுற்றுச்சூழல் பரிசிற்காக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்தியாவைச் சேர்ந்த அமுல்ய குமார் ரெட்டி, எம்.எஸ்.சுவாமிநாதன் இதற்கு முன் இப்பரிசைப் பெற்றுள்ளனர். காட்கில் ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம்…

கடிதங்கள்

ஆகஸ்ட் 1, 2003 ஆசிரியருக்கு, பி.கெ.சிவகுமாரின் கட்டுரை கண்டேன். அதில் அவர் என்னைப்பற்றி பூடகமாக எழுதியிருந்ததைப்பற்றி ஒரு சுய விளக்கம். சுந்தர ராமசாமி என்ற ஆளுமை மீது எனக்கு இக்கணமும் ஆழமான மதிப்பு உண்டு.…

புலிச்சவத்தில் கால்பதிக்கும் வேட்டைக்காரர்கள்

வெங்கட்ரமணன் ஈராக் கொடுங்கோலர் சதாம் உசேனின் வாரிசுகள் அமெரிக்க வீரர்களால் வீழ்த்தப்பட்டனர். வீழ்ச்சி சாதாரணமாக ஓடி ஒளிபவர்களுக்கு நேர்வதுபோலத்தான் நிகழ்ந்து முடிந்திருக்கிறது. பதுங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டு, பலத்த ஆயுதங்கள் கொண்டு அழித்தொழித்திருக்கிறார்கள். அழித்தொழித்த அடுத்த…

வாரபலன் – ஜூலை 26, 2003, (ஸ்ட்ரீக்கர், தமிழுருது, மகாத்மா விவரணப்படம்)

மத்தளராயன் வருடா வருடம் ஆயிரக் கணக்கான பிரிட்டாஷ் பிரஜைகளுக்கு மாட்சிமை தாங்கிய எலிசபெத் மகாராணி தேநீர் விருந்து தருவது வழக்கம். பக்கிங்ஹாம் அரண்மனை பிக்காடல்லி தெருவிலிருந்து அரை மீட்டர் உயரத்தில் மிதந்து கொண்டிருக்கவில்லை என்பதை…

வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள்

PS நரேந்திரன் சென்ற மாதம் இந்தியா போய் வந்தேன். இதோ, உங்களுடன் பகிர்ந்து கொள்ளச் சில நினைவுகள்... **** 911க்குப் பிறகு U.S ஏர் போர்ட் செக்யூரிட்டி மிக மிகக் கடுமையாக்கப் பட்டிருக்கிறது. ஷூ…

இறையியல் பன்மையும் உயிரிப்பன்மையும்-3

அரவிந்தன் நீலகண்டன் 'சமுத்ரோ அஸ்மி விதர்மண ' சத்தியத்தின் இயற்கை குறித்து ---------------------------------------- உண்மைக்கான ஏகபோக உரிமையை கோருபவர்கள் தம் அதிகார உணர்தலாலேயே குருடாகி தம் பார்வையை திணித்தலை நிறுத்துவர். ஏனெனில் பிரபஞ்சம் கண்டறியப்படுவது…

பிரம்மமாகும் ஏசு கிறிஸ்து – நூல் பகிர்தல்: ஆலன் வாட்ஸின் ‘ Beyond Theology – The Art of Godmanship ‘

அரவிந்தன் நீலகண்டன் ஆலன் வாட்ஸ் அடிப்படையில் ஒரு கிறிஸ்தவ இறையியலாளர். கிறிஸ்தவ இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆயின் அவர் பெற்றிருக்கும் பிரபலம் 'கிழக்கத்திய ' ஞான மரபுகளை (வேதாந்தம், ஸென் மற்றும் தாவோ)…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் மேதைகள் – சர் ஹம்ப்ரி டேவி (Sir Humphry Davy)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சுரங்ககங்களில் மீதேன் (methane) வாயு தீப்பிடித்து, அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் விபத்துக்குள்ளாவது என்பது, மிகச் சாதாரணமாக நடந்து வந்த…

அகில உலகில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னுரை: 1944 ஆம் ஆண்டு உலகத்தின் முதல் அணுவியல் கழிவுச் சேமிப்பகம், அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் உள்ள ஓக் ரிட்ஜ் நகரில் [Oak Ridge, Tennessee]…

இலக்கிய கட்டுரைகள்

தவிக்கிறாள் தமிழ் அன்னை !

ஜோதிர்லதா கிரிஜா அமரர் தமிழ்வாணன் ஒரு முறை சொன்னார்: ' பலரும் தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அது அப்பட்டமான பொய். தமிழை வைத்து இவர்கள்தான் வளர்ந்துகொண்டி ருக்கிறார்கள்! ' என்று. இது பேருண்மையாகும்.…

தமிழாக்கம் 1

மணி வேலுப்பிள்ளை 1 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை (12). மழை நாம் பருகும் நீராகவும், எமது உணவுப் பயிர்களுக்கு உணவாகவும் விளங்குகிறது. அதாவது மழை தானும் எமக்கு உணவாகி,…

தாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல் ‘

பாவண்ணன் நண்பரொருவர் வீடு வாங்க விரும்பினார். செய்தித்தாள்களில் இதற்காகவே வருகிற விளம்பரங்களைத் தொடர்ந்து பார்த்துவந்தார். அவரிடம் உள்ள தொகைக்குள் கிட்டுவதைப்போலத் தோன்றுகிற வீட்டை உடனே போய்ப் பார்ப்பார். அவருக்குப் பிடித்திருந்தால் மனைவி, குழந்தைகளையும் ஒருநாள்…

விமரிசன விபரீதங்கள்

K.ரவி ஸ்ரீநிவாஸ் தேர்வு எழுதும் சில மாணாக்கர்கள் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளிக்கொண்டிருப்பார்கள். 200 வார்த்தைகளில் விடை எழுது என்றால் 600 வார்த்தைகள் எழுதுவார்கள், பொருத்தமானதோ இல்லையோ பக்கங்களை நிரப்பிக்கொண்டிருப்பார்கள்.கேட்டால் மதிப்பெண் பெறுவது எத்தனைப்பக்கங்கள் எழுதுகிறோமோ…

கலையும் படைப்பு மனமும்

சுந்தர ராமசாமி நண்பர் கள்ளழகர் அவர்கள் ‘கலையும் படைப்பு மனமும்’ என்ற தலைப்பில் பேசும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். விரிந்த பரப்பைத் தலைப்பு கொண்டிருந்தால் பேச்சாளர் உல்லாசமாகத் துள்ளித் திரியலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். பலவற்றையும்…

கதைகள்

நேற்று இல்லாத மாற்றம்….

நம்பி. அழகப்பா எழில் விடுதியில் வெள்ளிக்கிழமை என்றாலே கொண்டாட்டம்தான். இரவு சாப்பாட்டுக்கு புரோட்டா, கோழி குருமா. முருகப்பா மண்டபத்தில் சினிமா. தொடர்ந்து இரண்டு நாள் விடுமுறை. அன்று இருக்கும் ஒரே சோகம் 'ஒலியும் ஒளி…

39.1டிகிரி செல்ஸியஸ்

நாகரத்தினம் கிருஷ்ணா வானிலை அறிக்கை: சென்னை வெப்பநிலை நுங்கம்பாக்கம் அதிக அளவு 39.1டிகிரி செல்ஸியஸ் -குறைந்த அளவு 28.2 டிகிரி செல்ஸியஸ் -தினகரன் 12-07-2002 கிருபாவிற்கு, தன் அன்றாட வாழ்க்கையைத் தொலைத்து 604800 விநாடிகள்…

அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினேழு

இரா முருகன் 17 உள்ளொடுங்கிய அறை. உயரம் குறைவான ஒரு மேசை. பக்கத்தில் கால் ஆடிக் கொண்டு ஒரு நாற்காலி. அதன் தோள் புறத்தில் சிங்கம் மாதிரி உருட்டி வைத்திருக்கிறான் தச்சன். வாயைப் பிளந்து…

விடியும்! நாவல் – (7)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் 7 டை கட்டியிருந்த செல்வத்திற்குப் பக்கத்தில் டை கட்டாத ஒரு வெளடிளைக்காரர். ஏணி கழற்ற சற்று முன்னர் ஏறி வந்தவர். சுவரொட்டி தேடி அலைந்த கட்டாக்காலி மாடு மாதிரி மனம்…

கோயில் விளையாட்டு

பி.கே. சிவகுமார் விழித்ததும் 'இன்னைக்கு கோயிலுக்குப் போகிற நாள் ' என்ற ஞாபகம் வந்தது சரணுக்கு. பக்கத்தில் கீதாவும், அவள் கழுத்தைக் கட்டியவாறு குழந்தை நிவேதாவும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். மைக்ரோ வேவில் காபி வைத்தபோது,…

கவிதைகள்

ஒரு தலைப்பு இரு கவிதை

ராமலக்ஷ்மி பார்வை கோளாறு-1 நோயின் உச்சத்தில் நொந்து போய் அவன்- இறுகிய முகமும் குறுகிய உடம்பும் குன்றிய உள்ளமுமாய்... நலம் விசாரிக்க வலம் வந்த மருத்துவர் இவன் இருக்கும் இடம் வந்து நின்றார்- வெளிர்…

உழவன்

பொன்னி வளவன் கரிய இருட்டின் கொடுங்கோலாட்சியை ஒழிக்க கதிரவன் புறப்படும் முன்பே கலப்பையை தோளில் சுமந்து சென்று..... கரிய இருளிடம் போராடி வெற்றி பெற்ற இருமாப்பால் கதிரவன் பவனி வரும் பகல் பொழுது முழுவதும்…

மொய்

ஆதர்ஷ் ராவ் எவ்வளவு கொடுக்க வேண்டும் சாதாரணமாக ஏதாவது வரைமுறை இருந்தால் என்ன ? எதிர்வீட்டு வயதானவரின் அறுபதாம் கல்யாணத்திற்கு ? பக்கத்துத்தெரு மாணிக்கம் பெண் காதுகுத்துக்கு ? சங்கடச் சிரிப்போடு பந்தியில் அமர்ந்து…

அந்த(காந்தி) -நாளும் வந்திடாதோ.. ?

கவியோகி வேதம் காந்திஜி!! சத்தியத்தின் கனலுருவாய்ப் பூமியிலே சாந்தமுடன் இறங்கிவந்த சன்மார்க்க தூதுவர்! .. போர்பந்தர் தந்தஅமுதம்!புண்ணியத்தின் மறுஉருவம்! கார்முகிலாய் 'அகிம்சையினை 'த் திரளச் செய்தே, .. பாரத நாட்டின் பலகோடி மக்களையும் சாரதிபோல்…

ஹைக்கூ

ஹைக்கூ கணேஷ் கொழுப்பேறிய உடல்கள் மூச்சிறைக்க நடக்கும்... எலும்பு துருத்திய உடல்கள் கை நீட்டி விளிக்கும்... சாயம் பூசிய உதடுகள் சபலங்களிடம் பேரம் பேசும்... முந்தா நாள் முளைத்த காதல் முகத்தோடு முகம் பதித்திருக்கும்...…

கம்பனும் கட்டுத்தறியும்

அனந்த் கம்பனைப் பற்றி எழுதுங்கள் கவிதை தானாய் வந்துவிடும் நம்புதற் கரிய கற்பனைகள் நடனம் செய்தே நாடிவரும் உம்பல மெல்லாம் ஓங்கிவரும் உவகை உள்ளே ஊறிவரும் கும்ப நிறைதேன் குடித்ததுபோல் குதித்துத் தலையும் கிறுகிறுக்கும்…

கூடு விட்டு கூடு…

ருத்ரா. 31.07.03 விக்கிரமாதித்யனிடமிருந்து வரம் வாங்கி வந்தேன் கூடு விட்டு கூடு பாய. அதை வைத்துக்கொண்டு இந்த ஜனங்களின் வாக்குச்சீட்டுகளில் புகுந்துகொண்டு இந்த கோட்டையைப்பிடிக்க ஆசையில்லை. தலையை தலையை ஆட்டும் இந்த கொம்புமுளைத்த ஜனநாயக…

ஊனம்

தி. கோபாலகிருஷ்ணன், திருச்சி செவியாலும் விரல்களாலும் பார்க்கிறான் அவன் குருடனாய் நான் விழிக்கிறேன் வழியறியாமல் கட்செவியாலும் விழியாலும் உணர்ந்து அவன் யாரோ என்னை அழைப்பதை உணர்த்துகிறான் செவிடனாய் நான் இன்னும் கேளாமல் விழிகளாலும் விரல்களாலும்…

வாழ்க்கை

பா.ஸ்ரீராம் மயிலாடுதுறை விரக்தி அடையும் மனதிற்கு.. ஒருத்தர் கூட ஆறுதல் இல்லை. அறிவுரைகள் ஆயிரம் எடுத்து கூற எத்தனையோ பேர். உதவி செய்ய யோசிப்பான் கதவினை சாத்திப்பான். முன் பிறவி தீவினைதான் முன்னேற தடையென்பான்.…

மனமா ? மத்தளமா ?

கரு.திருவரசு மனமென்பது மத்தளமாய் மாறிவிட்டது - அது வலம்இடமாய் அடிவாங்கித் தேறிவிட்டது! குணமென்பது ஊஞ்சல்போல ஆடுகின்றது - அதில் கொள்கைகளும் மேல்கீழாய் ஆடுகின்றது! அருளென்பது அகவாழ்வினை அழகுசெய்வது - அது அணியாய்வெறும் இலக்கியத்தில் அழகுசெய்யுது!…