அருண்பிரசாத் இளமென்காற்றில் இருவேறு திசைகளில் நீந்துகின்றன அதீத நீலம் உட்கொண்ட இரு கண்ணீர் துளிகள். குவியக்கூர்மையுடன் ஒட்டியே உறைந்து நிற்கும் அவற்றின் அறியப்படா ஈரங்கள் ஒவ்வொரு பிரிவிலும், கூடலிலும் மென்மேலும் கூடும் நீலத்துடன். அருண்பிரசாத்…
மாலதி கனவில் ஒரு வீட்டை வாங்கியிருந்தேன். நிறைய புழக்கம் இருந்த தெருவின் இரண்டாவது வீடு கோலம் போட அழகான சதுரத்துடன். வீடு கொஞ்சம் பழசு சுவர்கள் உறுதி பரணில் ஏகப்பட்டவை இருந்தன எப்போதும் குறுகுறுக்க…
புஷ்பா கிறிஸ்ரி அம்மா தூங்க முயல்கிறார். கண்கள் தூங்க மறுக்கின்றன இன்னும் பொழுது விடியவில்லைத் தான் தூரத்துக் காரொன்று உறுமுகின்றது இரவு வேலை முடித்த அதிகாலை உழைப்பாளி போலும் அம்மா திரும்பிப் படுக்கிறார் பகல்…
அனந்த் *** ஏழாவது வார்டின் மூன்றாவது மாடி அறைகளைக் கெட்டியாகப் பூட்டிநிற்கும் இரும்புக் கம்பிக்கதவுகள் உள்ளிருக்கும் உன்மத்தங்களின் இரகசியங்களை மறைக்க இயலாமல் தவிக்க, கீழே, அடர்த்தியான மரக்கிளைகளை ஊடுருவும் அவல ஓலங்களும் கீச்சிட்டுத் தாவும்…
அனந்த் .... அந்திமாலைப் போதிலே .... அழகிஎன்றன் காதிலே வந்துசொன்னாள் வாலிபத்தின் சேதியை -அதில் மறந்துவிட்டேன் நான்பிறந்த தேதியை! ... ஆரவளோ வான்மகள் ... அறிந்திலேன்அப் பூநிகர் நாரிமணம் தொட்டதென்றன் நாசியை - உடன்…
மாலதி நேற்று தான் மரித்துப் போனேன் நான். இறப்பின் மிச்சங்களைத் தேடி நேற்றைய நாள் கழிந்து போயிற்று. அவை கொலையின் மிச்சங்களும் என்பதால். உயிர்த்திருக்க ஆசையில்லாமல் யாருமில்லை. மரித்த இரவின் நாழிகைகளில் உணர்வின் உடலுள்…
கவிமாமணி டாக்டர் சவகர்லால் கலத்திலே சோறு நெய்வழியப் பிசைந்தது; உளத்திலே பாசம் உயிர்வழியக் கலந்தது; .நடைவந்த குழந்தைக்கு நெய்யன்னம் ஊட்டத் . தடைப்படா வாஞ்சையொடு தாயின் முயற்சி! நடைபயிலும் சிறுகிளி தன்சிறு கால்களை இடைப்பட…
மீ.வசந்த்,டென்மார்க் ஓரு சில வரிகளோடு நிறைந்து கிடக்கின்றன முற்றுப்பெறாத கவிதைகள். சந்தோஷத்தில் தெறித்த சிரிப்புச் சிதறல்கள் துக்கத்தில் பதிந்த கண்ணீர் சுவடுகள், வெடிக்க காத்திருக்கும் உள்மனதின் அழுத்தங்கள், ஹார்மோன்கள் துரத்திய காதல் விசாரிப்புகள், உறங்காமல்…
பத்மநாதன் குறைந்தது அறுபது வருசம் சமைத்திருப்பாள்... இருபது வருசம் வெற்றிலை இடித்தும் மென்றிறுப்பாள்...இருந்தும் அவ்வப்போது அருகில் அமர்த்தி வெற்றிலை இடிச்சித்தா வெங்காயம் உறிச்சித்தாவென தொந்தரவு செய்வாள்.... என்னடா தொல்லையிது என்றெண்ணி உதவிடும் வேளையில் கண்களால்…
புகாரி தாகத்தைக் கொண்டுவிட்டுத் தண்ணீரைக் கண்டோமா தண்ணீரைக் கண்டுவிட்டுத் தாகத்தைக் கொண்டோமா கடலோடும் நதியோடும் மழையோடும் அருவியோடும் சலிப்பின்றி விழிபேச அலுப்பேனோ வருவதில்லையே சுற்றுகின்ற உலகமிதில் சூழ்ந்ததெலாம் தண்ணீரே சூரியனும் விழுங்கிடாமல் காப்பதுவும் தண்ணீரே…