திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040624_Issue

அரசியலும் சமூகமும்

தென்கிழக்கு ஆசியா: அச்சுறுத்தும் பெண்கள் குழந்தைகள் கடத்தல்

மைக்கேல் பிளம் (தமிழில் : அசுரன்) தென்கிழக்கு ஆசியாவில் ஆண்டுதோறும் வறுமையின் காரணமாக 2,25,000 பேர்- பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் வீட்டிலிருந்து ஆசைகாட்டி அழைத்து அல்லது கடத்திச் செல்லப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்படுகின்றனர். இதுபோல,…

வாரபலன் – ஏமாளித் தமிழ் எழுத்தாளா , கிளிண்டன் கொஞ்சிய கிளி , ரொபீந்திர சங்கீத் ஜார்கள், வாய்க்கால் கடக்காத ஜெயபாரதி

மத்தளராயன் முன்னைக்கிப்போது தமிழ்ப் பதிப்பாளர்கள் கொஞ்சம் பூசினது மாதிரிக் கூடுதல் செழுமையோடு இருப்பதாகக் கேள்வி. மத்தளராயனின் பதிப்பாளர், பதிப்பாசிரியர் ஆகியோர் ஏற்கனவே ரெட்டைநாடி சரீரம் கொண்டவர்கள் ஆனதால் இந்த வட்டத்துக்குள் வரமாட்டார்கள். தலையணை கனத்துக்கு…

நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா ?

அக்னிப்புத்திரன், சிங்கப்பூர் அண்மையில் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடந்து முடிந்து ஒருவழியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமர்ந்துள்ளது. நாடு பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளது. நாட்டில் பொருளாதார வளர்ச்சி எட்டு சதவீதத்தை எட்டுமா ? மக்களின்…

இரசியாவை மிரட்டும் கதிர்வீச்சு ஆபத்து-ஒரு இரசிய விஞ்ஞானியின் பேட்டி

அசுரன் இரசிய உளவுத்துறையானது அணுசக்தி மாசுபாடு குறித்து ஆராயும் இவரைப்போன்றவர்களை விரும்புவதில்லை. இதுவே செர்கி பசெங்கோ என்ற இந்த அணுக்கதிரியக்க ஆராய்ச்சியாளரும் பிரச்சாரகருமான இந்த விஞ்ஞானியின் பணியை மிக ஆபத்தானதாக்கியுள்ளது. இவரது கண்டுபிடிப்புகள், அரசு…

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 8)

ஆசாரகீனன் காலிஸ்தானிய இயக்கம் முழுவதும் வெளி நாட்டு சீக்கியரின் உந்துதலால் நடந்தது என்று நான் வாதிடவில்லை. ஆனால் அவர்களது பேரூக்கம் இன்றி அப்படி ஒரு பெரும் வன்முறை இயக்கமாக, இந்தியாவை உடைக்கும் பெரும் ஆபத்தாக…

தமிழ்நாட்டுக்குப் பொருத்தமான விகிதாச்சார தேர்தல் முறை – என் கருத்துக்கள்

சின்னக்கருப்பன் கடந்த இரண்டு வாரங்களாக விகிதாச்சார தேர்தல் முறை பற்றிய கட்டுரைகள் திண்ணையில் வெளியாகியிருக்கின்றன. அவற்றை படித்துவிட்டு இந்தக் கட்டுரையை படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். 'தோசையை திருப்பிப்போடு 'ம் தேர்தல் முடிவுகள் கடந்த பல…

அறிவிப்புகள்

கடிதம் ஜூன் 24, 2004

அசுரன் சென்ற இதழில் நான் எழுதிய மிராண்டா குளிர்பானம்-விவேக் தொடர்பான கட்டுரைக்கு வால்: வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கண்டனம்! மிராண்டாவில் கரப்பான்பூச்சி கிடந்தது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், 'இந்த வழக்கில் தன்னைச்…

கடிதம் -ஜூன் 24, 2004

பிரபு ராஜதுரை அன்பார்ந்த திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, சிவகுமார் அவர்களின் 'கறை படிந்தவர்கள் அமைச்சர்கள் ஆகலாமா ? ' என்ற கட்டுரையினை படித்தேன். அவரது ஆதங்கம் உண்மையானது என்றாலும் நடைமுறையில் சாத்தியமில்லை என்று உணர்கிறேன்.…

கடிதம் ஜூன் 24, 2004

கனகசபாபதி,மும்பை பிறைநதிப்புரத்தானும் இந்திய இசுலாமியரும் நான் முதலில் ஒரு விசயத்தை சொல்லி விடுகிறேன். நான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் நண்பர் பிறைநதிப்புரத்தானின் சில கருத்துகள் என்னை குழப்புகின்றன. நண்பர் பிறைநதிப்புரத்தான் தம்மீது குற்ற்ம்…

கலைஞன் நிரப்பும் வெளி : சுந்தர ராமசாமி புகைப்படக் கண்காட்சி :ஜூன் 25 முதல் 27 வரை

புகைப்படங்கள்: புதுவை இளவேனில் ஜூன் 25 முதல் 27 வரை - காலை 10 மணி முதல் 6 மணி வரை இடம்: அலையன்ஸ் ஃப்ரான்ஸேஸ் 40 புதிய எண் 24 கல்லூரிச் சாலை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஏ.சிி. யில் இருக்கும் கரையான்கள்

Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான் பாம்பு புற்று பார்த்திருக்கிறீர்களா ? உண்மையில் புற்றுக்கு சொந்தக்காரன் பாம்பா என்றால், அதுதான் இல்லை. உண்மையில் புற்றுக்கு சொந்தக்காரன் கரையான்கள். ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியது போல!! கரையான்கள்!!! கேட்ட…

செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்

முனைவர். கதிரவன் கிருஷ்ணமூர்த்தி 2. செல்பேசி: இருவழி ரேடியோ செல்பேசி ஒரு 'இருவழி (Duplex) ரேடியோ ' என்று இந்தத் தொடரின் முதல் பத்தியிலே சொன்னோம். வானொலி நிலையமும், ஏற்பியும் கொண்ட அமைப்பு ஒருவழி…

நல்லகாலம், ஒரே ஒரு சமாரியன்

அரவிந்தன் நீலகண்டன் ஆகஸ்ட் 2002 இல் மும்பை புகைவண்டி ஒன்றில் பட்டபகலில் அனைத்து பயணிகள் முன்பும் ஒரு மனவளர்ச்சி குன்றிய சிறுமி ஒரு வெறியனால் மானபங்கப்படுத்தப்பட்டாள். அங்கு பயணிகள் பலர் இருந்தும் அவர்களில் ஒருவர்…

திரைகடலில் மின்சக்தி திரட்டும் உலகின் பலவித மாதிரி நிலையங்கள் [Various Types of World ‘s Ocean Power Stations]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா எங்கெங்கு காணினும் சக்தியடா! ஏழுகடல் அவள் வண்ணமடா! பாரதிதாசன் [அழகின் சிரிப்பு] சக்திசெயும் தொழில்களை எண்ணு, நித்தம் சக்தியுள்ள தொழில்கள் பல பண்ணு. சக்திதனை யேயிழந்து…

இலக்கிய கட்டுரைகள்

நாகூர் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : வெளியீட்டு விழா

செய்தி நாகூர் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் என்ற நூலின் வெளியீட்டு விழா ஆம்பூர் மஹ்ஹருல் உலூம் கல்லூரி என்.என்.ஜக்கரியா அரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பேராசிரியர் டி. நிசார் அஹ்மது விழாவுக்கு…

மனத்துக்கண் மாசிலனாதல் – ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று ‘ நாஞ்சில் நாடன் கட்டுரை நூல் அறிமுகம்

பாவண்ணன் இக்கட்டுரைத் தொகுதியில் பதினெட்டு கட்டுரைகள் உள்ளன. கதையிலக்கியத்துக்கே உரிய புனைவுமொழியும் நடையும் சித்தரிப்புத்தன்மையும் கிட்டத்தட்ட ஒரு கதைத்தொகுதியைப் படிக்கிற உணர்வையே இக்கட்டுரைகள் தருகின்றன. படித்து முடித்தபிறகு பற்பல சின்னச்சின்ன சம்பவங்கள் மனத்தில் மிதந்தபடி…

புலம் பெயர் சூழலில் ஒரு புதிய வரவு ஊசிஇலை

யோகா யோகாம்பிகை அதன் பிறப்பிடத்தை அதன் பெயரிலேயே புலப்படுத்திவிடுகிறது. அட்டைப் படங்கள் முதல் உள்ளடக்கங்கள் பலவும் கண்களைப் பறிக்கும் வண்ணங்களில் மிளிர்கிறது. புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் பெரியவர், சிறியவர்கள், ஆசிரியர்கள், இளந் தலைமுறை…

மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 5

சோதிப் பிரகாசம் ஆசிரியரின் கேள்வி எட்டாம் வகுப்பில் ஜெய மோகன் படித்துக் கொண்டு இருந்த பொழுது அவரிடம் ஒரு கேள்வியை அவரது அறிவியல் ஆசிரியர் கேட்டாராம்; தமிழில் இப் பொழுது மிகவும் பரவலாக எழுப்பப்…

நெடுஞ்சாலை புத்தரின் நுாறு முகங்கள் – நூல் அறிமுகம்

பாவண்ணன் டி.கே.சி.யின் வட்டத்தொட்டிக் கூட்டங்களைப்போலவும் சுந்தர ராமசாமியின் காகங்கள் கூட்டங்களைப்போலவும் ஜெயமோகன் முன்னின்று நடத்திவரும் நித்யா கவிதை ஆய்வரங்கங்கள் தமிழ்ச்சூழலில் ஆரோக்கியமான விளைவுகளை உருவாக்கியிருக்கின்றன. முக்கியமாக, கவிதைகளை அணுகும் பார்வைகளை வளர்த்தெடுக்கிற முறையைச் சொல்லவேண்டும்.…

Terminal (2004)

மாது முதன் முறையாக அமெரிக்காவிற்கு வருகிறீர்கள். உங்கள் தாய்மொழியைத் தவிர வேறு மொழி ஏதும் உங்களுக்குத் தெரியாது. வழக்கமான விசாரனைகளுக்காக ( 'எதற்காக அமெரிக்கா வருகிறீர்கள் ? எவ்வளவு நாட்கள் இங்கிருப்பீர்கள் ? எங்கே…

கனடா திரைப்பட விழாவில் செவ்வாய் கிரகம்

அ.முத்துலிங்கம் செந்நிறமான செவ்வாய் கிரகம் செப்டெம்பர் மாதம் வானத்தில் தோன்றும். கனடாவில் இருந்து இது மிகவும் துல்லியமாகத் தெரியும் என்று ஒரு பத்திரிகை செய்தி சொன்னது. அதே பத்திரிகையில் கீழே இன்னொரு செய்தியும் பிரசுரமாகியிருந்தது.…

சேலை கட்டும் பெண்ணுக்கு…

சந்திரலேகா வாமதேவா ஒரு பெண்ணைக் கற்பனை செய்யும் கற்பனா சக்தியுள்ள ஒரு நெசவாளியின் தறியில் சேலை பிறக்கிறது. அவளது கண்ணீரின் மினு மினுப்பையும் விரிந்து பிரவாகிக்கும் கூந்தலின் அழகையும் மாறும் அவளது மனநிலையின் வண்ணங்களையும்…

கதைகள்

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-25

நாகரத்தினம் கிருஷ்ணா .... பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி முட்டை கொண்டு வற்புலம் சேரும் சிறுநுண் எறும்பின் சில் ஒழுக்(கு)ஏய்ப்பச் சோறுடைக் கையர் வீறுவீ(று) இயங்கும் இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும் மற்றும் மற்றும்…

பட்டமரம்

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர். ' ஏன் உமா ? ஒரே யோசனையா இருக்கே ? என்னாச்சு, இன்னிக்கும் ஒம்புள்ளயப்பார்க்கப் பள்ளிக்கூடத்துக்குப் போனியா ? ' அக்கறையுடன் கேட்டாள் தோழி வசந்தி. ' ஆமா, வசந்தி,…

மஸ்னவி கதை — 10.1 : அறிவான அரபியும் ஆசை மனைவியும்

தமிழில் : நாகூர் ரூமி ஜாடி நீருடன் கலீஃபாவின் சபைக்கு வந்தான் அரபி. தேவையுள்ளவர்களெல்லாம் தங்கள் வலைகளுடன் அங்கே காத்திருப்பதைக் கண்டான் அவன். கணத்திற்குக் கணம் யாராவதொருவர் தனது தேவைகள் நிறைவேற்றப் பட்டவராக கண்ணியப்…

பெண்கள்: நான் கணிக்கின்றேன்

சுமதி ரூபன் - கனடா பயணம் நிச்சயமாகி விட்டது. .எப்படியாவது யன்னலருகிலுள்ள சீட்டை புக் பண்ணுங்கள் என்ற போது “என்ன கடைசி நேரத்தில இப்பிடி கேக்கிறீங்கள்” என்று அவன் சினப்பது தெரிந்தது.. “வரேக்க ஒரு…

பொன்னாச்சிம்மா

அ முஹம்மது இஸ்மாயில் அல்லாஹ் அன்பானவன் என்பதை நாம் உணர்ந்துக் கொள்ளவே இந்த உலகில் மனிதர்களிடையே பாசத்தை அல்லாஹ் வைத்தான் என்று நான் நம்புவதுண்டு. பஞ்சமே இல்லாத பாசத்தை நான் என் பாட்டியா பொன்னாச்சிம்மாவிடம்…

கவிதைகள்

அன்புடன் இதயம் – 22 – தமிழை மறப்பதோ தமிழா

புகாரி தமிழை மறப்பதோ தமிழா - உன் தரமின்று தாழ்வதோ தமிழா O கற்கும் மொழிகள் கணக்கற்றவையாயினும் கைகூப்பித் தொழுவது தமிழன்றி வேறோ தமிழச்சியிடம் தாய்ப்பால் பருகிப் பருகி நிமிர்ந்த உன் முதுகெலும்பை தாய்மொழிக்கன்றி…

தமிழவன் கவிதைகள்-பதினொன்று

தமிழவன் எழுகிறது கவிதை நாட்டம் இன்றும். பின்பக்கம் கண்ணாடியில் ஏற முயலும் சிறுகுருவியின் கால்பிராண்டல் திரும்பிப் பார்க்காத என்மனதில். இப்போது தெரிகிறது காலம் மாறியது. பூக்கள் மலர்ந்திருப்பதும் இலைகளில் தளிர்வந்து போய்விட்டதும் வெயில் சுள்ளென்றெரிப்பதும்.…

கவிதை

ரவிகுமார் 1. ஏதோ இரசாயன பூச்சாம் முன்பு போல் அருகில் செல்ல முடியவில்லை.. எட்டாத உயரத்தில் நிலவு வெளிச்சம்.. நிற்காமல் நகர்ந்து செல்லும் வாகன வெளிச்சங்கள்.. ஒரிரவு வாழ்க்கைதனே வாழ்ந்துவிட்டு போகட்டும் என்று எண்ணாமல்…

இறைவனின் காதுகள்

நாகூர் ரூமி ==== வெகுகாலமாயிற்று விளங்கிக்கொள்ள நம்முடையது போலல்ல இறைவனின் காதுகள் என. கூட்டுப்பிரார்த்தனையில் ஒரு நாள் கதறிக்கதறிக் கையேந்தினார் ஒருவர் அழுதழுது கேட்டார் ஒருவர் கேட்டதா என்றேன் வந்து சேரவேயில்லை என்றான் சிரித்துக்கொண்டே.…

அப்பாவின் காத்திருப்பு…!!!

சாந்தி மனோகரன் அம்மா பால்...!!! பழக்கத்தை மாற்றிக்கொள்ளத் தெரியாத பால்க்காரன்... பெண்வாசனை இல்லாத வீட்டில் எந்த அம்மாவை அழைப்பானோ தெரியவில்லை...! சூரியனோ...சேவலோ அல்ல-இந்த பால்க்காரனும்...பேப்பர்-காரனும் தான் எங்களின் விடியற்காரர்கள்...!! பள்ளிக்கூடம் போகும் தம்பி பணியிலிருந்து…

இப்பொழுதெல்லாம் ….

வேதா மஹாலஷ்மி எழுதும் என்கவிதைகளை கிழித்தெறிகிறேன் உன்பிரியத்தை எனக்கல்ல, என்கவிதைக்கே கொடுத்தாயென்ற பொறாமையால்.... பொழியும் இசை அமுதை குரல்வளையோடு நெறிக்கிறேன் உன் ரசனையை உணர்வுக்கல்ல, வெறும் என் குரலுக்கே கொடுத்தாயென்ற அவநம்பிக்கையால்... திமிறும் என்…

கோபம்

நெப்போலியன் யாராகிலும் யார்மீதேனும் யாருடைய கோபத்தையோ கொட்டிக் கொண்டுதானிருக்கிறார்கள்.... இந்த மழையைப்போல! இதில் எனக்கான உன் கோபமும் உனக்கான என் கோபமும் யாருக்கான யாருடைய கோபம்.... உச்சி வெயிலைப்போல! யாரும் யாரிடத்திலேனும் யாருக்காகவோ யாராயிருந்தோ…

காலம் கடந்த காதல் கவிதைகள்

ஐீவன் 1. எப்போதாகிலும் உன் நினைவுகளில் வந்து போகலாம் நான் எப்பவுமே என்னோடு இருக்கிறாய் நேசத்துக்குரியவளாக நீ கிழித்து கூறுபோட்டு போனது நீ சொன்னதான வார்த்தை உன்னோடு தொலைந்து போயிற்று உனக்கும் எனக்குமெயான என்…

குழந்தை…

ந.வீ.விசயபாரதி(சிங்கப்பூர்) 0 பொம்மையைக் கண்டாலே பொக்கைவாய் பூப்பூக்கும் உயிர்ச்செடி. 0 இதழுடுக்கின் ஈறுகளால் மனம் மயக்கும் மானுட மலர். 0 மறக்கப்போகும் சிரிப்பையெல்லாம் அரக்கப் பறக்கச் சுரக்கும் அரும்பு. 0 தங்கக்கொலுசொலிக்கும் தகரக் கிலுகிலுப்பைக்கும்…

இல்லம்…

ந.வீ.சத்தியமூர்த்தி(சிங்கப்பூர்) சிமெண்டும் செங்கல்லும் மட்டுமே சேர்த்துக் கட்டியதெல்லம் கட்டடமாகுமே தவிர இல்லமாவது இல்லை... அது உறவுகளின் உணர்வும் அன்பின் அந்யோன்யமும் இதயங்களின் ஈடுபாடும் இணைந்து எழுப்பப்படுவது. கதவு திறக்கப்படும் போது ஓங்கி ஒலிக்கிறது மழலைகளின்…

நகைச்சுவை

இந்துத்துவம் ஏற்றம் பெற, அகண்டபாரதம் அரண்டு எழ சங்கியே சங்கூதிப் புறப்படு

சொதப்பப்பாசீ ** குறிப்பு சொதப்பப்பாஜி என்றுதான் நாம் எழுதுவது வழக்கம். தமிழ்நாட்டுக்கு ஏற்றாற்போல பாரதிய ஜனதா கட்சியினர் அரசியல் செய்யவேண்டுமாமே ? அதனால் ஜீ சீ ஆகிவிட்டது. ** சங்கியே, பாரதத்திருநாட்டின் அத்வானிசீ, வாசுப்பாய்சீச்சீ…

ஆட்டோகிராஃப் ‘காதல் சிறகை காற்றினில் விரித்து ‘

சித்ரா ரமேஷ்,சிங்கப்பூர் வானொலியைப் பற்றி எழுதுவதாக நான் சொன்னதும் உங்களில் முக்கால் வாசியினர் அது எந்த வானொலி என்று யூகித்திருப்பீர்கள். இலங்கை வானொலி தமிழ் சேவை இரண்டு! தமிழ் சேவை ஒன்று கண்டிப்பாக இருந்திருக்க…

உடன்பிறப்பே

ம.கா.(கு) உடன்பிறப்பே, நலம்தானே! நலமில்லாமல் எப்படி இருக்கும் ? வலிவுடைய நம் தோள்கள் நிலைநிறுத்திருக்கும் ஆட்சியல்லவா இது! மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பதை அறியாத மூடர்களா நாம் ? நாற்பதிலும் வென்று நான்கிரண்டு…