திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030329_Issue

அரசியலும் சமூகமும்

தமிழ்நாட்டுப்பாடநூல் கழகம் 1996 இல் வெளியிட்ட சமூக அறிவியல் (ஒன்பதாம் வகுப்பு) பாடநூல்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் சிறுவர்களுக்கான பாடநூல்கள் அவர்களது உள்ளங்களில் அறிதலுக்கான தாகத்தை ஏற்படுத்த வேண்டும். வெறும் தகவல்கள் அளிப்பது மட்டுமல்ல, என்றும் தணியாத அறிவுத்தாகத்தையும் ஏற்படுத்த வேண்டும். ஒரு பத்து வயது சிறுமி அல்லது பதினான்கு…

அணு உலைகளுடன் பல் குத்தும் துரும்பையும் குறித்து: 4 – சாண எரி வாயு கலனும் கிராம பொருளாதார மேம்பாடும்

எஸ். அரவிந்தன் நீலகண்டன் சாண எரி வாயு கலன் வெறும் எரிபொருள் அளிக்கும் தொழில்நுட்பமாக மட்டும் செயல்படவில்லை. காந்திய பொருளாதார சிந்தனையாளரான குமரப்பா 'சாண எரிவாயுகலன் என்பதனை விட கொல்லைப்புற உர உற்பத்தி மையம்…

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 17 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான

மஞ்சுளா நவநீதன் அடுத்து கேள்விகள் புறக்கணிக்கப் படும் இஸ்லாமியர்கள் பற்றியது. இந்தியாவில் புறக்கணிக்கப் படுபவர்கள் என்று பார்த்தால் எல்லாக் குழுவினரும் அடங்குவார்கள். இருப்பினும் மார்க்ஸின் கேள்வி பதில்களைப் பார்க்கலாம். கேள்வி 27 : இசுலாமியரது…

பரதநாட்டியம் – சில குறிப்புகள் – 3

வைஷாலி அபிநயம்:- கதாபாத்திரத்திற்கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கலை தான் அபிநயம் ஆகும். அதாவது ஒரு கதையிலோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த்தையினது கருத்தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து…

இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ?

ஒரு விவாத கருத்தரங்கு இக்கருத்தரங்கு அமெரிக்காவின் புகழ்பெற்ற 'பிரண்ட்பேஜ் ' பத்திரிகையால் நடத்தப்பட்டது. இன்று மேற்கினை அச்சுறுத்தும் பயங்கரவாதம் சில இஸ்லாமியர்களால் நடத்தப்படுவதால் அது இஸ்லாமிய பயங்கரவாதமா ? அல்லது 'பண்பாடுகளின் மோதலை '…

வளைகுடா போரும் கம்யூனிஸ்டுகளும்

நாகரத்தினம் கிருஷ்ணா அமெரிக்காவை அதிகமாக விமர்சனம் செய்பவர்கள் அன்றைய இன்றைய கம்யூனிஸ்டுகள்தான். அமைதி விரும்பிகள் என்ற போர்வையில் அமெரிக்காவை விமர்சனம் செய்ய வளைகுடா போர் மீண்டும் அவர்களுக்கோர் வாய்ப்பினைக் கொடுத்திருக்கிறது. 'கம்யூனிஸ சுரைக்காய் கறிக்கு…

ரம்ஸ்ஃபீல்ட் உருவாக்கிய போர்முறைக்கு ஒரு பரிசோதனை.

ஜெஃப்ரி டோனோவன் ஈராக் போரை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு புதுமாதிரி போர் என்று அமெரிக்காவின் போர் அதிகாரிகள் அழைக்கிறார்கள். போர் ஆரம்பித்த முதல் சில தினங்களில், அமெரிக்க ராணுவம் முக்கியமான ஈராக்கிய தலைமையை…

ஹாங்காங்கில் நடந்த ஈடிபஸ் நாடகம்

மு இராமனாதன் கரங்களை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி, மாட்சிமை பொருந்திய கிரேக்க மன்னன் ஈடிபஸ் சொல்கிறான்: 'பெருங்குடி மக்களே! உலகம் புகழும் வேந்தனாகிய நானே நேரே வந்திருக்கிறேன் '. நாடகம் துவங்குகிறது. ஒரு ஆமையைப்…

ஜார்ஜ் டபிள்யூ புஷ் : தீவிரவாத கிரிஸ்தவ மத அடிப்படைவாதி

காரி ஸ்லோன் ராணுவ சக்தியை பயன்படுத்தும்போதெல்லாம் அமெரிக்கா கடவுளை தன் துணைக்கு அழைத்துக்கொள்ளும் பழக்கத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. நியூ இங்கிலாந்து புயூரிட்டான்-கள் என்றழைக்கப்படும் கிரிஸ்தவ மத அடிப்படைவாதிகள், பைபிளின் இஸ்ரவேல் யூதர்களின் வழித்தோன்றல்களாக,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் துளிகள்-20

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி 77.மின்னணு வளிமத் தீப்பொறிக் கருவியை (Electronic gas lighter) இயக்கும் போது, கருவியின் நுனிப்பகுதியில் கை வைத்தால் மின் அதிர்ச்சி (shock) ஏற்படுவது…

பாரதம் தயாரித்து நிறுவும் முதல் 500 MWe பேராற்றல் அணுமின் நிலையங்கள்

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா கனடாவின் முதல் முன்னோடி அழுத்தக் கனநீர் அணு உலை 1960-1965 ஆண்டுகளில் உருவாகி வரும் போதே, தீர்க்க தரிசி டாக்டர் ஹோமி பாபா அதன்…

அணு உலைகளுடன் பல் குத்தும் துரும்பையும் குறித்து: 4 – சாண எரி வாயு கலனும் கிராம பொருளாதார மேம்பாடும்

எஸ். அரவிந்தன் நீலகண்டன் சாண எரி வாயு கலன் வெறும் எரிபொருள் அளிக்கும் தொழில்நுட்பமாக மட்டும் செயல்படவில்லை. காந்திய பொருளாதார சிந்தனையாளரான குமரப்பா 'சாண எரிவாயுகலன் என்பதனை விட கொல்லைப்புற உர உற்பத்தி மையம்…

இலக்கிய கட்டுரைகள்

சமீபத்திய சிறந்த நூல்கள் ஒரு பட்டியல்

ஜெயமோகன் என் கவனத்துக்கு வந்த நல்ல நூல்களை பற்றி எழுதி அனுப்பும்படி சில நண்பர்கள் கோரியிருந்தனர். அவர்களுக்காக இப்பட்டியல். இவற்றில் தமிழினி , காலச்சுவடு நூல்கள் அதிகம். காரணம் இன்று இலக்கிய கவனத்தை அடைந்துள்ள…

இயல்பும் இன்பமும் (மா. அரங்கநாதனின் ‘சித்தி ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 54)

பாவண்ணன் கல்லுாரிக் காலத்தில் எங்களுக்குத் தமிழாசிரியராக இருந்தவர் ம.இலெனின்.தங்கப்பா. இவரைச் சந்தித்த பிறகே வாழ்க்கை பற்றிய என் பார்வைகள் உறுதியடைந்தன. கல்லுாரியில் நான் கணக்கியல் படிக்கும் மாணவனாக இருந்தபோதும் விரிவான அளவில் உரையாடியது தமிழ்த்துறையில்…

கதைகள்

சகுனம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் பயணம் புறப்படும் போது மொட்டைத்தலை எதிரே வரக் கூடாது. கறுத்தப்பூனை குறுக்கே போகக் கூடாது.. .. ..சகுனத்தடைகளாம். மொட்டைத்தலையும் கறுத்தப்பூனையும் என்ன பாவம் செய்தன ? ஊன்றி யோசித்தும் பிடிபடவில்லை.…

ஆத்மசாந்தி

ராமசந்திரன் உஷா ஒரு சகாப்தம் முடிந்தது. ஒவ்வொன்றாக எல்லாரும் கிளம்பிக்கொண்டு இருந்தனர்.அம்மா எப்போதும் உட்காரும் மூலை ஈசிசேர் காலியாய் இருந்தது. சாப்பிட்ட களைப்பு கண்ணை சுற்றியது.கிருஷ்ண,கிருஷ்ணா என்று சொல்லிக்கொண்டு பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் என்…

பாசுவின் தவம்

புதியமாதவி இருட்டை வெளிச்சமாக்கி விடியலை நோக்கி மும்பை வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. பெட் ரோல் பம்ப் வைத்திருக்கும் சர்தார்ஜி சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு கையை கழுவுவதற்கு நல்லியை திிறந்தான். நல்லியில் தண்ணீர் வரலை மனைவி குர்மீட்திடம்…

கவிதைகள்

அறிவியலுக்கு வெளியே மனது.

சேவியர் 0 ஆண்டவன் இருக்கிறார் என நான் நடும் நம்பிக்கையின் கடுகு விதைகளை என் ஆறறிவு தயவு தாட்சண்யமின்றி நறுக்கிப் போடும். இருக்கின்றார் என்று நான் ஒரு காய் நகர்த்தும் போது, எப்படி ?…

உடம்பை வெட்டி எறி – உரைவெண்பா

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன் எது எதுக்குத்தான் டிக்கட் வசூலித்து தினசரி மூணு காட்சி நடத்துவது என்று விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. ஜெர்மனியிலிருந்து ஒரு மருத்துவ நிபுணர் சமீபத்தில் லண்டன் வந்திருந்தார். வைத்தியம் பார்க்க இல்லை.…

பெண்ணே!

பவளமணி பிரகாசம் சூட்டி மகிழ்ந்திடு பெண்ணே மணம் நிறைந்த மல்லிகையை, காட்டி சிரித்திடு கண்ணே கையில் மருதாணி சிகப்பழகை, போட்டி ஏதடி அன்னமே புடவையின் பேரெழிலுக்கு, எட்டி செல்லடி செல்லமே கயவர் கூடும் இடமிருந்து,…

பேட்ரியாட்டும் பேரீச்சம் பழமும்.

மா. சிவஞானம். இல்லாதவங்க அல்லாருக்கும் ஆட்டு லோனுங்கோ பொல்லாதவங்க இல்லீங்கோ ஜென்டில்மேனுங்கோ - பாண்டு பண்ணை அல்லாரும் சொன்னாங்க ஒழுக்கத்துல இலக்கணச் சுத்தமுங்கோ அல்லாருக்கும் தருவிச்சாரு ஆட்டு லோனுங்கோ அல்லாருக்கும் வந்ததுங்கோ ஆளுக்கொரு ஆட்டுக்குட்டி…

வானத்தின் மழை

புஷ்பா கிறிஸ்ரி துளித் துளியாய் வானத்து மழை. நிலத்தில், ஓடையில் அருவியில், கடலில் முற்றத்தில்.. வீட்டின் மேல்.. பாதையில்... எங்கெல்லாமோ விழுகின்றன.. மனித ஜென்மங்களும்.. மண்மேல் பிறக்கின்றன எங்கெல்லாம் பிறக்கின்றன ஒவ்வொரு வீட்டில் ஏழையாய்,…

விளிம்புகளில் நிற்பவர்கள்

எஸ். வைதேஹி. நகர்ந்து கொண்டிருக்கிறது காலங்களும், பொழுதுகளும் சுருங்கிக் போகிறது இந்த வெளி. உதட்டுச் சிரிப்பின் முழுமை மறையுமுன் சிதறி விழுகிறது அவ்வப்போது அணியும் முகமூடி. எச்சில் தடவிய தரையெங்கும் வார்த்தைகள் அள்ளப்படுகிறது இருள்…

…வும், முடிவும், விடிவும், முடி…

அனந்த் முதுமை... காலதேவன் என் உடல்முழுவதையும் தன் கணக்கையெழுதும் கரும்பலகையாகக் காணும் காலம்.. வலி என்ற சொல்லின் வாலிபப் பொருள் மாய்ந்து வருத்தும் துன்பத்தை வலியுறுத்தும் நேரம்.. என் மறைவில் இல்லத்தாரின் வருத்ததைவிட எதிர்பார்ப்பு…

அதற்காக….

ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அழகாய் இருக்கும் மயில்கள் ஆடும் ஆட்டம் மட்டும் பார்க்கலாம் - அது பழகியதென்று பாடச் சொன்னால் பாட்டை எப்படி ஏற்கலாம் ? பாட்டுக் குயிலைப் பார்த்தால் பிடித்துப் பாடச் சொல்லிக்…

உயிரைத் தேடாதே !

புகாரி, கனடா யாரங்கே... குட்டிச் சுவரோரம் நின்று திருட்டுத் 'தம் ' அடிப்பது உன் நுரையீரல் மாளிகையில் ஒட்டிக் கொள்ளப் போகும் பிசாசுகளை விரட்ட மந்திரக்கோல் வைத்திருக்கிறாயா ? O வளையம் வளையமாய்த் துப்புகிறாயே…

வீசிவிடு தென்றலே…

ஆ. மணவழகன் எத்தனை நாளைக்கடி ... உள்ளத்து நினைவுகளை உள்ளேயே புதைத்துவிட்டு ஒரு நிமிடம் தனிமை என்றால் உன்னை நினைத்து புலம்புவது...! 'கர்ப்பம் ' போல உன் நினைவு - அதை, கலைத்துவிட மனமில்லை...…