திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070802_Issue

அறிவிப்புகள்

எண் கோணத்தின் நான்கு கோணக் கேள்விகளுக்கு எனது பதில்

மலர் மன்னன் திண்ணையில் நான் எழுதி வந்துள்ள கட்டுரைகளைப் படித்துவிட்டு, எண்கோணம் என்பவர் என்னிடம் கேட்டுள்ள நான்கு கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்தவரை பதில்களைத் தந்திருக்கிறேன். 1. ஹிந்து அல்லாதவர் ஹிந்துக்களுக்குத் தலைவராக வருவதை எதிர்க்கிறீர்களா?…

தேவமைந்தனின் ”புலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்’ கட்டுரை அருமை!

பெஞ்சமின் லெபோஅன்புடையீர்! வணக்கம். நண்பர் தேவமைந்தனின் ''புலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்' கட்டுரை படித்தேன், படி தேன் குடித்தது போல் சுவைத்தேன். உதிரிப்பூக்களை எடுத்து அழகிய மாலையாய்த் தொடுத்திருக்கிறார். நெஞ்சார்ந்த பாராட்டுகள்! புலமைக் காய்சலையும்…

” பாபு என்றால் நாற்றமுடையவன் என்று அர்த்தம்”

திசைகள் அ.வெற்றிவேல்சென்ற வாரக் கடிதத்தின் தொடர்ச்சியாக... இக்கடிதம். ஜுலை 19 திண்ணை இதழில் திரு.குருராகவேந்திரன் என்ற நண்பர்,"பாபு என்றால் நாற்றம் என்று எங்கு படித்தார் என்று தெரியவில்லை"...என்று எழுதி இருந்தார். 1995-ல் கவிதா வெளியீடாக…

மலேசிய அரசுக்குப் பரிந்து வரவேண்டிய கட்டாயம் என்ன?

மலர் மன்னன் மலேசியாவில் ரேவதி என்கிற ஒரு ஹிந்து இளம் தாய், என் பெற்றோர்தான் தான் முகமதியராக இடைக்காலத்தில் மாறியிருக்கிறார்களேயன்றி தான் மதம் மாறவில்லை என்றும் ஹிந்துவாகவே தொடர்ந்து இருந்து வரும் தன்னை ஒரு…

அராஜக சட்டமும், தனி மனித உரிமையும்

வெங்கட் சாமிநாதன் ஹிந்து வாகப் பிறந்த ஒருவருக்கு ஹிந்துவாக வாழும் உரிமையை ஒரு அரசு சட்டம் இயற்றி மறுக்குமாயின், அது ஒரு அராஜக சட்டமே. அரசு சட்டமாக இருந்த போதிலும். இந்தியாவிலோ, அல்லது வேறு…

கூர் கலை, இலக்கியத் தொகுப்பு

அறிவிப்புகூர் கனடா நவீன தமிழ் கலை, இலக்கியத் தொகுப்பு 2008 பனி கால ஆரம்பத்தில் வெளிவரவிருக்கும் இத் தொகுப்பிற்கான சிறுகதை, கவிதை, விமர்சனக் கட்டுரை, நூல் மதிப்புரை, மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. படைப்புகள் அனுப்ப…

கடிதம்

மு.இளங்கோவன்அன்பின் ஐயா வணக்கம். திண்ணை கண்டேன். பயனுடைய கட்டுரைகளும் அறிவார்ந்த தகவல்களும் மகிழ்ச்சி தந்தன.தேவமைந்தனின் புலமைக்காய்ச்சல் கட்டுரை எம் போன்ற தமிழ்ஆர்வலர்களுக்குப் பயனுடையது. தொடர்க தங்கள் பணி. திசைகள் வெற்றிவேலின் விளக்கம் சிறப்பு. மு.இளங்கோவன்,புதுச்சேரி,இந்தியா…

கடிதம்

சி. ஜெயபாரதன் கடந்த வாரத்தில் வந்த செல்வியின் கடிதம் (ஜூலை 26, 2007) > "ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு வெளியற்றமும்", பற்றி ஒரு விஞ்ஞானக் கட்டுரை எழுதுகிறேன். சி. ஜெயபாரதன் jayabarat@tnt21.com

அறிவியலும் தொழில்நுட்பமும்

சூட்டு யுகப் பிரளயம் ! ஓஸோன் வாயுவால் விளையும் தீங்குகள் -7

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாமனிதர் படைக்கும் நச்சு வாயுக்கள் சேர்ந்து ஓஸோன் துளைகள் உண்டாகும் ! மென்மையில் திண்மை யாகும் வாயுக் கோளத்தின் உள்ளே மிதக்குது வண்ண நீர்க்கோளம் ! தூயச்…

இலக்கிய கட்டுரைகள்

வாசிப்பின் நீரோட்டம்

சுகுமாரன்இளம் பருவத்தில் வாசிப்பின் ஆரம்ப நாட்களில் கிடைத்த புத்தகங்களை பிடித்தவை,பாதித்தவை,தூண்டியவை என மூன்று வகையாகப் பிரிக்க இன்று முடிகிறது. பெற்றோரை விட்டுப் பிரிந்து மாமா,அத்தையால் பராமரிக்கப்பட்ட எனக்கு தனிமைதான் முழுநேர உணர்வாக இருந்தது.எப்போதும் மூட்டமான…

யாமறிந்த உவமையிலே

அணைக்கட்டு பாலாபெண்ணைச் சிறு வெண் பல்லிக்கு... நிறுத்தும். பல்லியே அருவருப்பானது. அதிலும் பெண்கள் பல்லியைப் பார்த்தாலே அலறுவார்கள். இதற்கு பாரதியிடம் கடன் வாங்கித் தலைப்பு. மன்னிக்கவும். உவமை என்றாலே உவமையும் உவமிக்கப்படும் பொருளும் அனைத்துவகையிலும்…

பிரமிளின் ‘காலவெளி’: ‘கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு’!

வ.ந.கிரிதரன்பிரமிளின் 'காலவெளி': 'கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'! - வ.ந.கிரிதரன் - அண்மையில் பிரமிளின் 'வானமற்ற வெளி' (கவிதை பற்றிய கட்டுரைகள்) என்னும் தொகுதியினைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. தமிழில் புதுக்கவிதையென்றால் படிமங்களுக்குப் பெயர்…

திரைவெளி – சுப்ரபாரதிமணியனின் திரைப்படக் கட்டுரைகள்

சத்தியானந்தன் திரைப்படம் பார்த்து விட்டு அந்தக் கதையை ஒருவர் சொல்ல மற்றொருவர் கேட்டு வியப்பது வகுப்பு வித்தியாசமற்று எல்லா இடங்களிலும் காணப்படுவது. அதை ஒரு வரிக் கதையாகச் சொல்லாமல் எந்த இடத்தில் பாட்டு வந்தது,…

திண்ணை. காம்

மதியழகன் சுப்பையா இலக்கிய உலகம் ஒரு மாறு பட்ட உலகம். இங்கு பதிவுகள் என்பது அத்துனை அவசியமான ஒன்று. கலை இலக்கியங்கள் அனைத்துக்கும் மேடையும் அங்கிகாரமும் அவசியமாகிறது. இதில் சுதந்திரம் பறிக்கப் படாமல் இருக்கும்…

கோவை ஞானி தந்த அங்கீகாரம்!

தாஜ் வலைத் தளங்களின் வழியே, தமிழின் நவ இலக்கியத்தை தரிசனம் கொள்ள ஆர்வம் காட்டும் என் நட்புக்குறிய இளைஞர்களிடம் 'உங்கள் எத்தனைபேர்களுக்கு கோவை ஞானியைப்பற்றி தெரியும்?' என்று நான் கேட்க கூடுமென்றால், தொன்னூறு சதவிகிதம்…

சில வரலாற்று நூல்கள் – 3 -மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)

ஜெயமோகன் மதுரை நாயக்கர் வரலாறு அ.கி.பரந்தாமனார் எம்.ஏ பாரிநிலையம். 90 பிரகாசம் சாலை சென்னை 600018 மதுரை நாயக்கர்களைப்பற்றிய வரலாற்றுக்கு ஜெ.எச்.நெல்சனின் மதுரை ஆவணப்பதிவே முக்கியமான முதல் நூலாகும். அதன்பின்னர் பேராசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர்…

கதைகள்

தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபத்தொன்று: கார்லோவின் புண்ணியத்தில்…

வ.ந.கிரிதரன் "என்ன பையா! வியாபாரமெல்லாம் எப்படி? இன்று எனக்கு உதவியதற்கு நன்றி. நீ இல்லாவிட்டால் உண்மையில் நான் பெரிதும் சிரமப்பட்டிருப்பேன்" என்று வந்ததும் வராததுமாக இளங்கோவைப் பார்த்துக் கூறிய நடுத்தெருநாராயணன் மனைவியின் பக்கம் திரும்பி…

கால நதிக்கரையில்…… – அத்தியாயம் – 17

வே.சபாநாயகம் சாப்பாடானதும் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் வெளியே கிளம்பினார் சிதம்பரம். கிழக்கே நடந்து அவர் சிறு வயதில் விளையாடிய கீழ மந்தைக்கு வந்தார். முப்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அந்த இடத்தில் எந்த…

(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -2 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)

சி. ஜெயபாரதன், கனடாசிறையில் கிடப்பேன் என்று எண்ணாதீர் ! மதுவருந்த மாட்டேன் அங்கு ! புலால் உண்ண மாட்டேன் அங்கு ! வைக்கோல் மெத்தையில் நான் துயிலேன் ! ரோமானிய மன்றக் கூண்டில் என்னை…

அலுமினியப்பறவைகள்

எம்.கே.குமார் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம். விதவிதமான மனிதர்களும் விமானங்களும் பரபரப்பாய் இயங்கும் இடம். சிங்கப்பூரிலிருந்து சென்னை செல்லும் விமானத்தின் இடதுபக்க இறக்கையைப் பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தர். இறக்கையின் மேல்பாகம் மேலும் கீழும் லேசாக அசைந்தது.…

கை நழுவிய உலகம்

தாஜ் 'பைத்தியக்காரர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் அதிகத்திற்கு அதிகமாக சிரிப்பார்கள், கத்துவார்கள், புலம்பு வார்கள், தனக்குத்தானே பேசுவார்கள், அடிக்கவரும் பாவனை செய்வார்கள், சில நேரம் கையில் கிடைப்பதைக் கொண்டு அடிக் கவும் செய்வார்கள்.…

மாத்தா-ஹரி – அத்தியாயம் 21

நாகரத்தினம் கிருஷ்ணா -தேவா உங்களை முத்தமிடலாமா? கடல் அலைகளில் கால் நனைத்து மகிழ்ச்சியில் துள்ளும் சிறுவர்களிடம் கவனம் வைத்திருந்த தேவா, தனது சிறிய கண்களை முடிந்த மட்டும் அகல விரித்து, திகைத்தபடி சில நொடிகள்…

கௌசல்யா

மட்டுவில் ஞானக்குமாரன்அவள் ...! இவளைப் போல பெண் மணிகளை ஊர் உலகிலே கண்டிருப்பீர்களா ? இவளைப் பற்றி பேசும் போதெல்லாம் இப்படியே எனக்கு எண்ணத் தோன்றும். எனது முதல்ப் பார்வையிலே எந்த விதமான அலைகளையும்…

கைக்குமேல் புள்ளடி

அ.முத்துலிங்கம் அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு முதல் தடவை போய்வந்த ஒரு பெண்ணிடம் நீங்கள் அங்கே பார்த்த ஆச்சரியம் என்னவென்று கேட்டேன். அவர் pulled tea என்றார். எனக்குப் புரியவில்லை. தேநீரை இழுத்துக்கொடுப்பது என்று சொல்லி…

மன அதிர்வுகள்

கஜன் இறந்துவிட வேண்டும். நித்திரை செய்யும்போதும் நிழலாகத் தொடரும் நெருடலின் விளைவா இது? கனவிலும் கவலைதான் வாழ்வா? பல சூழ்நிலைகள் தற்கொலை முயற்சிக்கு இட்டுச் செல்வது வெளிப்படை உண்மை. உலகத்தில் இளவயது ஆண்களுக்கும் இவ்வாறு…

கவிதைகள்

திரு முருகு

வ.ஐ.ச.ஜெயபாலன்தினைப் புனத்தின் மத்தியிலே வேங்கை மர நிழலில் தேன் தினைமா துடைத்து வெண்தாடி பிய்த்தபடி நிற்கின்றேன். தேவதைபாதி சூனியக் காரிபாதியாக காவல் பரணில் சிரிக்கின்றாள் வள்ளி வயல் நிறைய பூனையாக்கப் பட்ட யானைகள் அலைகிறது.…

புதியதோர் உலகம்

வைகைச் செல்வி இதோ - கூப்பிடு தொலைவில் புதியதோர் உலகம். அந்தரத்தில் தொங்குகின்ற பூமி. மேலே- பொங்கி வரும் நீரலையில் மிதந்து வரும் அடர்காடு. கிளையெல்லாம் மீன்கள். கீழே- மேகக் கூடுகளில் பூச்சிகளும் பறவைகளும்.…

காதல் நாற்பது – 32 நேசிப்பதாய் உறுதி அளித்தாய் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநேசிப்பதாய் நீ எனக்கு உறுதி சொல்லிய பிறகு முதல் நாள் சூரிய உதய மான போது நிலவின் வருகைக்கு நான் காத்திருந்தேன் ! சீக்கிரம் உறுவு பூண்டு நிரந்தரம்…

வாவிகள் தற்கொலை செய்தன

தீபச்செல்வன்சூரியனோடு கிழக்கை சிங்கம் விழுங்கிவிட்டது. முட்கம்பிகளாலும் எச்சரிக்கை அறிவிப்புகளாலும் இராணுவ நடமாட்டங்களாலும் மீன்கள் இடம்பெயர்ந்தன வாவிகள் தற்கொலை செயதுகொண்டன. கிழக்கில்தான் சூரியன் உதிக்கும் கிழக்கு சூரியனை பிரிந்து இருட்டாகிவிட்டது மலைகளுக்கு இடையில் அழிவுகள் கும்பியாயிருக்கின்றன.…

“அவர்கள் காதில் விழவில்லை!”

கவியோகி வேதம்கவிஞர்கள் தம் பல கவிதைகளில் ஒரு படப்பிடிப்புபோல் கவிசொல்லக் கற்றுக்கொள்ளவேண்டும்.. இக்கருத்தை பேராசிரியர் அ.ச.£.ரா.போன்றவர்கள் வலியுறுத்தி யிருக்கிறார்கள்.அதை ஒட்டி யானும் சில கவிதைகள் முயன்றிருக்கிறேன்..அதில் ஒன்று.. .சென்னை(.R.B.I) வேலையில் சேர்ந்தபின்,, ஒரு 15…

கவிதை

மட்டுவில் ஞானக்குமாரன் ஒரு அமெரிக்க வீரனுக்கு ....! ஓ வீரனே தபாலிலே வந்திருக்கிறதா உனது குழந்தையின் முத்தங்கள். மெத்தச் சந்தோசத்தோடு வாங்கிக் கொள் … ஆனால் உன் தூப்பாக்கி எத்தனை குழந்தைகளின் மழலைச் சத்தங்களை…

புறாவின் அரசியல்

டீன்கபூர் குடிபோதையில் ஒரு வேம்பு காற்றைப் பருகி. நடுத்தெருவில் விழுந்துவிட யாரேனும் நடைபாதையாளி அள்ளி ஒதுக்க அசைந்து நிற்கிறது. தேர்தல் காலம். இது தொழில் ஆடுவதும் விழுவதும். அடியோடு எடுத்து அதன் தொண்டையில் கயிற்றைவிட…

நகைச்சுவை

பிலாக்கோபோபியா

ராமசந்திரன் உஷா இடம் - மனநல மருத்துவமனை நேரம் - மாலை நேரம் பாத்திரங்கள் மனநல மருத்துவர் மற்றும் எழுத்தாளினி ஏகாம்பரி (அருமையான அறை. இதமான குளிர். கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல், பாசத்துடனும்,…