திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040513_Issue

அரசியலும் சமூகமும்

உலக வங்கி அறிக்கை : ஆப்பிரிக்க ஏழ்மை 82 சதவீதம் அதிகரிக்கும்

ராம்போலோ மோல்ஃப்ஹே சஹாராவைச் சார்ந்த ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் தீவிர ஏழ்மை இன்னும் 82 மில்லியன் அதிகரிக்கும் என்று இந்த வருடத்தின் உலக வங்கி அறிக்கை கூறுகிறது ஆப்பிரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதம்…

கூட்டணிகளா, இன்றேல் வேட்டணிகளா ?

ஜோதிர்லதா கிரிஜா ஒவ்வொரு முறை இந்கியாவில் பொதுத்தேர்தல் வரும்போதும் பல்வேறு கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணிகளை அமைத்துக் கொள்ளுகின்றன. இந்தியாவில் ஏராளமான கட்சிகள் உள்ளதாலும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் போல் இரண்டே கட்சிகள்தான்…

சன்மார்க்கம் – துன்மார்க்கம்

தந்தை பெரியார் அன்பர்களே! இந்தச் சமயத்தில் சமரச சன்மார்க்க சங்கம் என்பதைப்பற்றிச் சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். அது ஒரு சமயம் உங்கள் மனதிற்கு கசப்பாயிருந்தாலும் இருக்கலாம். அன்றியும், 'என்னடா இவன் நம்மிடத்தில் உபச்சாரப்…

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 5

பி.கே. சிவகுமார் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் - 2004: பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி இப்பாராளுமன்றத் தேர்தலில் சரிவைக் கண்டிருக்கிறது. பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கெதிரான கொள்கைகள் உடைய காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, திமுக,…

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 2)

ஆசாரகீனன் மேலோட்டமான அறிமுகம் என்று முன்பே சொல்லியாயிற்று. இருபத்து ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பிரசுரித்த ஃபூகோவின் கருத்துப் பயணம் ஒரு சிறு கட்டுரையில் அகப்படாது என்பதால்தான் இந்த மேலோட்டம். குறிப்பிட்ட தலைப்புகளில் இவரது கருத்துகளைத்…

இந்தியத் தேர்தல் 2004 – ஒரு பார்வை

நாக இளங்கோவன் ==== ஒளிரிக் கொண்டிருந்த இந்தியர்கள் ஏனோ தற்போது வெளிரிப் போயிருக்கிறார்கள். பலருக்கு உணவு கூட செல்ல மறுக்கும். முன்னாள் துணைப்பிரதமர் அத்வானி 'எங்களுக்கு சாதகமாக ஏதாவது நடக்கும் ' என்று சொன்னதை…

ஈரோட்டுப் பாதை சரியா ? – 1

ப. ஜீவானந்தம் 'கண் முன்னால் கிழக்கு வெளுத்துவிட்டது! கதிரவன் எழுந்துவிட்டான்! புதிய ஒளி எங்கும் பரவிவிட்டது! சுயமாரியாதைக் கோட்டத்தில் மட்டும்தானா, இல்லை தமிழகம் முழுவதுமே புரட்சி மனப்பான்மை பொங்கித் ததும்புகிறது. நாடெங்கும் புதுநாதம் ஒலிக்கிறது.…

வாரபலன் – மே 13, 2004 – ஈராக் இந்தியசோகம் ,எமெர்ஜென்சி முன்னோட்டு, இந்திய வரைபடம் சீனாவின் கபடம்

மத்தளராயன் புஷ்ஷும் பிளேயரும் கடந்து ஆக்கிரமித்த ஈராக்கில் சிறைப்பிடிக்கப்பட்ட ஈராக்கியர்களை அமெரிக்க, பிரிட்டாஷ் ராணுவத்தினர் நடத்தும் விதம் பற்றிக் கடந்த வாரங்களில் அறிந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் உலகம் மீளவில்லை. போன ஆண்டு அந்நாட்டைக் கீழடக்க…

அடுத்த பிரதமராக கலைஞர் கருணாநிதி வரவேண்டும்

மஞ்சுளா நவநீதன் கடந்த தேர்தலில் வெற்றிபெற்றது என்னைப் பொறுத்த மட்டில் திரு கருணாநிதிதான். சாணக்கிய தேர்தல் கூட்டு தாண்டி, ஒவ்வொரு தொகுதியிலும் 2 லட்சம் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக அணி வெற்றி…

அறிவிப்புகள்

கடிதங்கள் – மே 13, 2004

பி கே சிவகுமார் - திண்ணை ஆசிரியருக்கு, 1. சிவவாக்கியர் திருவாக்கியங்கள் கட்டுரையில் ஜெயமோகன் புத்தகத்தை மேற்கோள் காட்டியிருந்தது ஏன் என்று திரு.தேவேந்திர பூபதி கேட்டிருந்தார். கீதை மற்றும் கபிலரைப் பற்றிய மேற்கோள்கள் இந்து…

கடிதம் மே 13,2004 – ரஜினி, டி ஆர் பாலு

கோச்சா (எ) கோவிந்த் தன்னம்பிக்கையா.. ? தான்-நம்பிக்கையா... ? ஜெயலலிதாவிற்கு இருப்பது தன்னம்பிக்கையா.. ? தான்-நம்பிக்கையா... ? என்று தெரிந்து விட்டது அவருக்கு தற்போது. எது எப்படியோ- நான் காத்திருந்தது தென்சென்னைக்கு மட்டும் தான்.…

கடிதம் மே 13,2004 – ஜோதிர்லதா கிரிஜாவுக்கு: வருத்தமும் விளக்கமும்

பிறைநதிபுரத்தான் அன்பிற்குரிய ஜோதிர்லதா கிரிஜாவுக்கு, கோடிக்கணக்கான இந்திய இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் RSS/சங்பரிவார் கும்பலின் கருத்தை எதிரொலிக்கும் விதமாக நீங்கள் எழுதியவைகளுக்குத்தான் என்னுடைய பதிலே தவிர ஜோதிர்லதா கிரிஜா என்ற தனிப்பட்ட மனிதருக்கோ அல்லது…

அறிவியலும் தொழில்நுட்பமும்

மனித உடலில் அதிகரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள்

டெரன்ஸ் சியா ஐக்கிய அமெரிக்க நாடுகள் என்றழைக்கப்படும் யு எஸ் நாட்டில் வாழும் மக்களிடம் மிக அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் உடலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் பெண்கள் மெக்ஸிகோ வம்சாவளியினர் ஆகியோரிடம்…

தேனீ – சாதீய கட்டமைப்பு

Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான் தேனீக்கள்! கேட்ட உடனே சிலருக்கு 'இனிப்பது ' போல் இருக்கும். வெகு பலருக்கோ எங்கோ 'கொட்டுவது ' போல் இருக்கும். ஆம்! நம்மில் நிறைய பேர் தேனீயிடம் கொட்டு வாங்கி இருப்போம்.…

மலைகளைக் குடைந்து தோண்டிய ஜப்பானின் நீண்ட செய்கன் கடலடிக் குகை [Japan ‘s Seikan Subsea Mountain Tunnel (1988)]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா முன்னுரை: இரண்டாம் உலகப் போரில் தோற்றுச் சரணடைந்த ஜப்பான், அதி விரைவில் எழுந்து ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைப் போல் தொழில் வளத்தில் முன்னேறி, ஆசியாவின் பொறித்துறைப்…

இலக்கிய கட்டுரைகள்

சில குறிப்புகள்

சூரியா வாசக சுவாரஸியங்களை கெளரவப்படுத்தும் முகமாக சில பொதுக் குறிப்புகள். அல்லது எதிர்வினைகள். அனுராதா ரமணனின் ஆராய்ச்சிகள் பா ராகவன் எனக்கு பிடித்தமான எழுத்தாளார்தான். முக்கியமாக போரடிக்க மாட்டார். சுஜாதாவின் நேரடிப்பாதிப்புடன் எழுதிக் கொண்டிருந்தார்.…

சமீபத்தில் படித்தவை 2- இளங்கோவன், அசதா, எம் வேதசகாயகுமார், இடாலோ கால்வினோ(தமிழாக்கம் பிரம்மராஜன்), சந்திரன், மணா, உமா மகேஸ்வரி,

ஜெயமோகன் ஊடாடி [நாடகம்] இளங்கோவன் த்வனி வெளியீடு . திலீப்குமர் , 216/ 10 ராமகிருஷ்ண மடம் சாலை மயிலாப்பூர் சென்னை 4 சிங்கப்பூர் நாடக ஆசிரியரான இளங்கோவன் எழுதிய இந்நாடகம் தார்மீகமான ஓர்…

கந்தர்வனும் கடைசிக் கவிதையும்

எஸ். பாபு ---- கவிஞர் மீரா, சு. சமுத்திரம், கோபிகிருஷ்ணன், கந்தர்வன் என மின்னிக்கொண்டிருந்த தமிழ் எழுத்தாளர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்துவிட, இருண்டு கொண்டு வருகிறது தமிழ் இலக்கிய வானம். கடந்த 22.4.2004…

புதிய வடிவத்தை¢ தேடி (தழும்பு – கன்னடச் சிறுகதைத் தொகுதியின் அறிமுகம்)

பாவண்ணன் மொகள்ளி கணேஷின் சிறுகதைகளைப்பற்றிய வாசக அனுபவத்தை முன்வைப்பதற்கு முன்னர் கன்னட தலித் சிறுகதைகளின் பொதுவடிவத்தைப்பற்றிச் சில விஷயங்களை முன்வைக்க வேண்டியிருக்கிறது. சம்பிரதாயமான எதார்த்தச் சிறுகதை முன்னோடிகளின் வடிவத்தையே தம் வடிவமாக வரித்துக்கொள்வதும் அதன்…

சொல்லவா கதை சொல்லவா…

சந்திரலேகா வாமதேவா- கதை கேட்க விரும்பாதவர் இந்த உலகத்தில் யாராவது இருக்கிறார்களா ? சிறுவர் முதல் பெரியோர் வரை கதையானால் நின்று கேட்டு விட்டே செல்வார்கள். சிறுவர்களுக்குக் கதை கேட்பது என்பது மிகவும் விருப்பமான…

கதைகள்

காதல் தீவு

என் எஸ். நடேசன் சிவலை ஓடத்தை பாறை மறைவில் மறைத்துவிட்டு பக்கத்தில் குந்தி இருந்தான். கவலை கரையானைப் போல் அரித்தது, பசிவயிற்றை குடைந்தது. சிவலை சேமிப்பில் இருந்த தங்கக் காசுகளை எல்லாம் கொடுத்து ஓடத்தை…

ஆக்கலும் அழித்தலும்

ரெ.கார்த்திகேசு “இது என்ன ? இது என்ன ? ஏன் இப்படி பண்ண ?” பொத்து பொத்தென்று கையால் அடிக்கிற சத்தம் கேட்டது. தொடர்ந்து மல்லி சினுங்கி முனகி “வே” என்று அழும் சத்தம்…

பிறந்த மண்ணுக்கு – 2

அ முகம்மது இஸ்மாயில் நாட்டுத் தொடக்கப்பள்ளி என்ற அந்த பழைய பலகை சொல்லா விட்டால் யாருக்கும் அது பள்ளிக்கூடம் என்றே தெரியாது. எல்லா வகுப்புகளும் கீற்று கொட்டகைகளில் தான் நடக்கும். தரையில் வரிசையாக பலகை…

‘சுடச்சுட ஆட்டுக்கறியுடன் சாப்பிட்டு விட்டு சின்னதாய் ஒரு நித்திரை கொள்ள வேணும்… ‘

சுமதி ரூபன், கனடா லீலாவின் கணவன் திருந்தி விட்டான்.. மதிக்கு நிம்மதியாக இருந்தது.. திருந்தி விட்டேன், திருந்தி விட்டேன் என்று சாக்குப் போக்குக் காட்டிக்கொண்டிருந்தவன் இப்போது உண்மையிலேயே திருந்தி வி;ட்டான்.. லீலா கூட இப்போது…

கட்டுகள்

டானியல் அன்ரனி வானொலியில் ஏதோ சினிமாப்பாடல் இரைந்து கொண்டிருந்தது. அந்தப்பாட்டோடுகூட தானும் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள் தங்கச்சி பத்மா. “ஏ.... பத்மா.... கொஞ்சம் குறைச்சுவை ரேடியோவை. அது குளறுகிறது பத்தாம இவ வேற பாடுறா.” சாப்பிட்டுவிட்டு…

உள் முகம்

நாவாந்துறைடானியல்ஜீவா வள்ளத்திலிருந்து வானத்தைப் பார்த்தேன்.. ஆனால் வானவில்லின் அழகில் நான் தொலைந்து போகவில்லை. வாழ்க்கை அழகாய் இருந்து. நிலாக்காயும் நேரம் கடலேரியில் நீந்தி விளையாடினேன். ஏனோ இங்கு வந்ததிலிருந்து இந்த வாழ்நிலை எனக்கு ஒட்டாமல்…

கவிதைகள்

இந்தியா ஒளிரக்கூடும்…

சாந்தி மனோகரன் இலவச சேலையும் இல்லாது போய்விடுமோ என்றெண்ணி மிருகமாய் மாறிய என்மக்கள் கவனக்குறைவால் தடுமாறிய உன்னை முகம் முதுகு மார்பு வயிற்றில் மிதித்து உயிர் உடைத்தனர்... சேலை வாங்க போன ஆத்தா செத்துப்போனாள்…

கவிக்கட்டு 6 – நதியின் ஓரங்களில்

சத்தி சக்திதாசன் நதியின் ஓரங்களில் நடந்து கொண்டே நான் நினைந்த எண்ணங்கள் நிறைந்தே நின்றன நெஞ்சத்தில் கரையோரங்களில் பதிந்த காலடிகளை கரைக்கவென கரைபுரண்டோடும் நதியின் வெள்ளம் காலத்தின் கோலம் காகிதக் கப்பல். துள்ளிப் பாடுமந்த…

அன்புடன் இதயம் – 17. கல்யாணமாம் கல்யாணம்

புகாரி ஊரலசி உறவலசி உண்மையான நட்பலசி பாரலசிப் பார்த்துவொரு பசுங்கிளியக் கண்டெடுத்து வேரலசி விழுதலசி வெளியெங்கும் கேட்டலசி ஆறேழு உறவோடு அணிவகுப்பார் பெண்பார்க்க மூடிவச்ச முக்காடு முழுநிலவோ தெரியாது தேடிவந்த ஆண்விழிக்கு தரிசனமும் கிடையாது…

சொல்லின் செல்வன்

பசுபதி அன்றொருநாள் ராமபிரான் அனுமனிடம் கேட்டார்; 'என்னைப் பற்றியென்ன எண்ணுகிறாய் எப்போதும் ? ' தாழ்மையுடன் மாருதியும் தயங்கிப்பின் பதிலிறுத்தான்: 'ஆழ்ஞானம் தேடுமுன் அரசன்நீ; அடிமைநான். ' ஞானம் மலர்நிலையில் ஞாலம்நீ ; துகள்நான்;…

கடவுளின் மூச்சு எப்படிப்பட்டது

பா. சத்தியமோகன் யூகித்தேன் கடவுளின் மூச்சு பச்சைப் பசும்புல்வெளியின் தோகை அசைவு போல அத்தனை இதமாக இருக்குமென. மயிலிறகின் மேல் நழுவும் பனிக்கட்டியின் நகர்வோ எனவும் இருக்கலாம் விடாமல் பொழியும் மழைத்தாரைகளின் குள்ளக் குளிர்…

தமிழவன் கவிதைகள்-ஐந்து

தமிழவன் பூ விற்பவன் சிரித்தபடி விற்கிறான் சட்டையின்றி தோல்சுருங்கிய வெயில் உடம்புடன். மங்கிய நினைவில் கலவரம். வயல்வரப்பில் இருவரை வெட்டினர். செந்நீரில் ஓடும் கால்வாய் நீர். ஒருவேளை மூவரோ அது. கிணற்றோரம் இளைஞன் கிடந்தான்…

உள்ளும் புறமும் எழிற் கொள்ளை

அனந்த் அண்டப் ப்ரபஞ்சங்கள் அண்டிப் பெருத்தகனம் .... உற்றுக் கரும்புள்ளியாய் (1) மண்டிக் கிடந்தபினர் மாயம் இதுவெனவே ... மீண்டும் பலப்பட்டவாய் விண்டுப் பிறக்குமொரு விந்தை நடக்குமுறை ... விஞ்ஞான வேதாந்திகள் கண்டிங் குரைத்ததைநம்…

அரவணைப்பு

அருண்பிரசாத் உடைந்த முட்டை ஓடு வழியே மலங்க மலங்க விழித்தபடி தாயைத் தேடும் ஒரு குஞ்சைப் போல உன்னைத் தேடுகிறேன். இன்னும் சிறிதாக ஒரு விரிசல் தேவைப்படுகிறது முழுவதுமாய் வெளியேறி ஈரத்துடன் கூடிய கதகதப்பான…

வெள்ளத்தில்…

பாரிஸ் அகிலன். நீயும் நானும் இல்லாதிருந்தபோது, பல மில்லியன் வருடங்களாக, எண்ணிலடங்காப் பிரக்ஞைகள் தோன்றி மறைந்தன. நீயும் நானும் இல்லாமற் போகும்போது, இன்னமும் நீண்ட காலத்திற்கு இன்னமும் எண்ணிக்கையற்ற பிரக்ஞைகள் தோன்றி மறையும். நீயும்…

விபத்து

மாலதி ---- இயலாதபோது நேசமும் இயலாததை நேசிப்பதும் என் இயலாமையோ ? எப்படி என் அமைதிப் பெரு வெளியிடையே ஆசை விண்மீன் விதைத்தாய் ? ஏன் என் மெளன நெடுமதில் எங்கும் நேசவெடி வேர்…