அம்மா நீ குளிர் பருவமல்லவே

குர்திஸ் கவிஞன் : கமால் மிராவ்தலிதமிழில் : யமுனா ராஜேந்திரன் அம்மாபோன வருஷம் நான் உன்னைச் சந்தித்த போது நீ இவ்வளவு மோசமாக இருக்க வில்லைஉனது முடி நீண்டு நன்றாகக் கறுத்திருந்தது.என்றுமே உருகாத இந்த நிரந்தரப் பனிஎப்போது உன் தலை மேல் வீழ்ந்தது ?அணைக்கவே முடியாத இத் தீச்சுவாலைஎன்று உன் இதயத்தில் பற்றியது ?அம்மா பனியையும் தீச்சுவாலையையும் ஒருங்கே கொணர்தற்குநீ குளிர் பருவமல்லவேஎவ்வாறு நீ உன் கடைசித் துளியையும் உறிஞ்சி முடித்தாய் ?கறுப்பு மேகம் சூழ நரகத்திலிருந்து […]

விக்ரமாதித்யனின் குற்றாலக்கவிதை

போனவருஷம் சாரலுக்கு குற்றாலம் போய் கைப்பேனா மறந்து கால்செருப்பு தொலைந்து வரும் வழியில் கண்டெடுத்த கல்வெள்ளிக் கொலுசொன்று கற்பனையில் வரைந்த பொற்பாதச் சித்திரத்தை கலைக்க முடியவில்லையே இன்னும் ***