திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050206_Issue

அரசியலும் சமூகமும்

சிந்திக்க ஒரு நொடி -தமிழ் சாதி

வாஸந்தி மனக்கதவம் தாள் திறவாய்.... வானம் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல், தானமும் தவமும் தாழ்ந்திடல் பொறுத்து, ஞானமும் பொய்க்க நசிக்குமோர் சாதி--- 'தமிழ் சாதி '--பாரதி தமிழகத்திலிருந்து குடிபெயர்ந்து கர்நாடகத்துத் தலைநகரமான பெங்களூருக்கு வந்ததிலிருந்து…

அனைத்துலகத் தமிழிலக்கிய அடையாளமும் இப்போதைய விவாதங்களும்

தமிழவன் நான் சமீபத்திய இலங்கைத் தமிழ்க் கவிதைகளைக் கன்னட மொழியில் மொழிபெயர்ப்பதற்குச் சிலர் மூலம் ஒரு முயற்சியைச் சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்டிருந்தேன். பின்பு சுமார் முன்னூறு பக்கமுள்ள அத்தொகுப்பு வெளிவந்தபோது பலர் கவனத்தை…

ஹாங்காங்கில் தமிழ்க் கல்வி

மு இராமனாதன் கதிஜா ஹாங்காங்கின் ஆரம்பப் பள்ளியொன்றில் இரண்டாம் வகுப்புப் படிக்கிறாள். ஓராண்டுக்கு முன்பு வரை இவளது சனிக்கிழமைகள் வெகு சாவதானமாகவே விடியும். பகல் பொழுது, வீடியோ விளையாட்டும் தொலைக்காட்சிக் கார்ட்டூனுமாய் சோம்பல் முறித்தபடி…

கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா! ?

சந்திரவதனா தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு என்று பார்க்கும் போது எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. எப்போதும் கலாச்சாரம் பண்பாடு என்று வரும் போது நம் நாட்டுப் பெண்களும், அவர்களது பொட்டும் தாலியும் உடைகளும்தான் அலசப்படுகின்றன.…

இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்வரும் சட்டமன்றத்தேர்தலிலும் பிரதிபலிக்குமா ?

அக்னிப்புத்திரன் காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல் முடிவுகள் அரசியல் ஆர்வலர்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கிவிட்டும், திமுக தலைமையிலான வலுவான ஏழு கட்சி கூட்டணியை முறியடித்துவிட்டும்,…

பணம் தேடுவதில் உள்ள ஆர்வம் குடும்பப்பிணைப்பில் இல்லை!

அக்னிப்புத்திரன் உறவுகள் மனிதனுக்கு மிகவும் முக்கியமானவை. பந்த பாசமே மனிதனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அந்தப் பந்தம், அந்தப் பாசம் உருவாகி, மலர்ந்து, மணம் வீசும் அற்புத பூங்காதான் குடும்பம்! பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும்…

தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 1

கே.ஜே.ரமேஷ் எம்மெட் டில் (Emmet Till) ஒரு பதினான்கு வயது கருப்பினச் சிறுவன். வெறி பிடித்த வெள்ளையர் கும்பலொன்று அவனை துரத்தித் துரத்தி அடித்துக் கொன்றது. அவன் செய்த குற்றம் - ஒரு வெள்ளைப்…

இந்திய நிறுவனங்களை ஒதுக்கிவிட்டு மாண்சாண்ட்டோ பன்னாட்டு விதை நிறுவனத்துக்கு மத்திய அரசு ஆதரவு தருகிறது

சித்தார்த் மிஷ்ரா இந்திய சந்தையில் பன்னாட்டு நிறுவனங்களை தடங்கலின்றி அனுமதிக்கப்போவதில்லை என்று சொல்லிக்கொண்டே, இன்றைய மத்திய அரசு அமெரிக்க மாண்சோண்டோவுஇக்கும் அதன் இஇந்தியக் கிளை நிறுவனங்களுக்கும் வசதி செய்து தந்து இந்திய நிறுவனங்கள் பாதகமான…

கோபி கிருஷ்ணனின் ‘முடியாத சமன் ‘ சிறுகதையின் நாடகமாக்கம். சனிக்கிழமை, ஜூன் 04, 2005 தக்கர் பாபா வித்யாலயா

வெளி ரங்கராஜன் கோபி கிருஷ்ணன் நினைவாக கோபி கிருஷ்ணனின் 'முடியாத சமன் ' சிறுகதையின் நாடகமாக்கம். நாடகமாக்கம்: வெளி ரங்கராஜன் நடிப்பு, இயக்கம்: ஜெயராவ் (கூத்துப்பட்டறை) Social Work, a-social work, anti-social work…

அறிவிப்புகள்

வாழும் தமிழ் – புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் யூன் 4, சனிக்கிழமை ஸ்காபரோ சிவிக் சென்டர்(ரொறன்டோ-கனடா)

வெங்கட் யூன் 4, சனிக்கிழமை ஸ்காபரோ சிவிக் சென்டர்(ரொறன்டோ-கனடா) தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறன்டோ பல்கலைக்கழக தென்னாசிய மையமும் இணைந்து வழங்கும் இயல் விருது பெற பத்மநாப ஐயர் கனடா வருகின்ற சமயம் மொழி…

தமிழ் சினிமா எழுத்தாளர்களின் விபச்சாரச் சிந்தனை:

வினோத் சமீபத்தில் கனாக் கண்டேன் படம் பார்த்தேன். வழக்கம் போல் கமர்சியல் படங்களுக்கான குத்தாட்டமும், ஜட்டி - பிரா நடனங்களுமாக காட்சிகள் இருந்தன. இந்த இண்டெர்நெட் லோகத்தில் ஆபாசமாக காட்சிகள் வைத்தால் மக்கள் கூட்டம்…

ஒரு கடிதம்

ச.பெரியசாமி. நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருவனந்தபுரம் போயிருந்தேன்.பேருந்தில் ஏறியவுடன் வியப்பு ஏற்பட்டது.அங்கு இருந்த ஆண்கள் எல்லோரும் வேட்டியை இறக்கி விட்டிருந்தார்கள்.திருவனந்தபுரம் ஒன்றும் நூறு சத கேரளம் அல்ல.தமிழகத்திலோ அன்டர்வேருக்கு மேல் வேட்டியை தூக்கிக்கட்டுவது…

அறிவியலும் தொழில்நுட்பமும்

The Day After Tomorrow கடல் நீரோட்டம் மெதுவாவதால், பிரிட்டானியா கடும் குளிரை எதிர்நோக்குகிறது

ஜோனதன் லீக் கல்ஃப் ஸ்ட்ரீம் எனப்படும் அட்லாண்டிக் கடல் நீரோட்டம் தனது வேகத்தை இழப்பதை தட்பவெப்ப ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். இந்த நீரோட்டமே ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தை குளிரிலிருந்து காப்பாற்றி உறையாமல் வைத்திருக்கிறது. கிரீன்லாந்து கடலருகே…

ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) தொலைபேசி கண்டுபிடிப்பு -1

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 'இயற்கை அன்னை ஒரு பணியைப் புரிய வேண்டி இருந்தால், அதைச் செய்து முடிக்க ஓர் ஆக்க மேதையைப் படைக்கிறாள்! ' ரால்ஃப் வால்டோ எமர்ஸன் (1803-1882)…

இலக்கிய கட்டுரைகள்

கவிதைக் கோபுரத்தின் பொற்கலசங்கள்

புதியமாதவி 'எவரையும் நகலெடுக்காத தனிப்பார்வை, வாழ்வை அதன் இருளகற்றி விளக்கமுறக் காட்டும் அறிவுப்புலம், இனிமை நலம் காட்டும் புதுமொழி ' இவைதான் கவிஞர் தங்கம்மூர்த்தியின் கவிதைகள் என்று தன் அறிமுக உரையில் ஆணித்தரமாகச் சொல்கிறார்…

கதைகள்

இரயில் பயணங்களில்…

சந்திரவதனா அப்போது எனக்கு 22வயதுகள் நிரம்பியிருந்தன. நான் கர்ப்பமாயிருந்தேன். எனது கணவர் என்னை ரெயினில் ஏற்றி, பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவரிடம் எனக்கு ஏதாவது உதவிகள் தேவையாயின் செய்து கொடுக்கும் படி சொல்லி…

அவனும் அவளும்

நவஜோதி. ஜோகரட்னம் (லண்டன்) எனக்குப் பிடிக்கல்லை. உனக்கு கதை எழுத வரவில்லை. அப்படி எழுதிறதில்லை. அதெல்லாம் பழைய முறை. அதிக விளக்கம் தேவையில்லை. வர்ணிப்புகளும் வேண்டாம். பொறு ஒரு கதை எழுதி ‘ரைப்’ செய்து…

திருவண்டம் – 2

ஜாவா குமார் 'நிகர்வமா ? அப்படி ஒரு சொல்லை இதுவரை கேள்விப்பட்டதேயில்லை ஐயா! ' 'நும் காலச்சூழலில் மறைந்துள்ளன போலும். கோடிக்கு மேலும், பத்தின் பல மடங்குகளாய், அற்புதம், பதுமம், கர்வம், நிகர்வம், பிருந்தம்…

கூண்டுகள்

அம்ாிதா ஏயெம் கூண்டுக்குள் வாழ்க்கைக்கான போராட்டம் தொடங்கிவிட்டிருந்தது. வெள்ளை நிற முயல்குட்டியளவு பருமனுள்ள கினிப்பன்றி எலி, நீரைக் குடித்து திமிறி, புரண்டு உயிரை விட்டது. கறுப்போ கொஞ்சம் கூண்டுக்குள் ஒடித் திாிந்து, அங்கேயும் இங்கேயும்…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல் நான்காம் காட்சி பாகம்-1)

சி. ஜெயபாரதன், கனடா 'கிறித்துவப் பாதிரியாரே! நீங்கள் எனக்கு தீர்ப்பளிக்க வரும் நீதிபதி என்று கூறுகிறீர்! அதற்குத் தகுதி உங்களுக்கு உள்ளதா என்பது எனக்குத் தெரியாது! ஆனால் நீங்கள் என்மீது பொய்க் குற்றம் சாட்டித்…

கவிதைகள்

தோழமையுடன்….

அன்பாதவன். வயலின் ஸ்வரமோ குழலின் கீதமோ கருப்புத் தொலை பேசியும் வண்ணமானது குரல் கேட்டதில் சந்தோஷத் தசைகள் விரிய ஒரு பெரிய புன்னகையுடன் வரவேற்பு இனித்தது. எத்தனை ஆண்டுகள்.... எங்கே தொலைத்தோம் நினைத்திருப்போமா ....…

ராணி

பவளமணி பிரகாசம் இது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பல்ல- ஆணின் வெற்றிக்குப் பின் பெண்ணென்பது ஓரடிக்கு மேல் நகர ஏலாத அரசனுக்கு ஆனை சேனை குதிரை சிப்பாய் மந்திரியுண்டு அத்தனை பேர் தனி சக்தியும் தான்…

கீதாஞ்சலி (25) நெஞ்சில் மலரும் நறுமணம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா அல்லி மலர்கள் விரிந்து பொங்கிய அன்றைய நாளில், அந்தோ! எந்தன் மனம் ஏனோ அலைமோதிக் கொண்டி ருந்தது எனக்குப் புரியாத நிலையில்! முற்றிலும் காலியாய் இருந்தது எனது பூக்கூடை!…

வேட்கை வேண்டும்

குமரன் உள்ளத்தில் வேண்டும் வேட்கை உன்னை அறிந்திட! உரமாய் வேண்டும் வேட்கை ஊனம் அகற்றிட! அழியா வேட்கை வேண்டும் அறிவியல் அறிய! அளவிலா வேட்கை வேண்டும் அறிவு வளர்க்க! தழலாய் வேண்டும் வேட்கை தளர்வின்றி…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல் நான்காம் காட்சி பாகம்-1)

சி. ஜெயபாரதன், கனடா 'கிறித்துவப் பாதிரியாரே! நீங்கள் எனக்கு தீர்ப்பளிக்க வரும் நீதிபதி என்று கூறுகிறீர்! அதற்குத் தகுதி உங்களுக்கு உள்ளதா என்பது எனக்குத் தெரியாது! ஆனால் நீங்கள் என்மீது பொய்க் குற்றம் சாட்டித்…

காற்றுப் பிரிந்த போது. .

நவஜோதி ஜோகரட்னம். (லண்டன்.) அவள் மனதால் அழகானவள் மென்மையின் வதனத்தை அணைக்கின்றாள் வாழ்வின் தோழி என்பதால் வன்மையின் வேதனையை வெறுக்கிறாள் சாவின் சாவி என்பதால் அவளுள் மென்மை வன்மையை வெல்கிறது அவளுள் மணம் பரப்பும்…

நட்போடு வாழ்தல்

வ.ஐ.ச.ஜெயபாலன் இன்னும் தொடுவானில் கையசைக்கும் மணக்கோலச் சூரியன். கீழே படுக்கையில் பொறுமை இழந்த பூமிப் பெண் வெண்முல்லைப்பூ தூவிய நீல மெத்தைவிரிப்பை உதைக்கிறாள். எப்படியும் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம். என் இரு கண்களிவை என்ற…

முயல்தலில் ஒளிர்தலானது….

சாரங்கா தயாநந்தன் விறகின் மேல் மேனியில் நீறாய்க் கிடக்கிறது சாம்பல். நெஞ்சுறுத்தி. நிகழப் போகும் என் இறப்புணர்த்தி. நாளைய மயானத்தில் நான் தகனித்தலின் பின்னான என் உரு. வரண்ட இதயத்திலிருந்து வடிகிறது ஞானத்தின் முதல்துளி.…

அபகரிப்பு

இளைய அப்துல்லாஹ் தலை குனிந்தபடி நடக்கிறேன் என்னைச்சுற்றிலும் ஒலிகள் மனித அழுத்தங்களை இறுக மூடிய படிக்கு சுதந்திரமாக என்னை நடக்க விடுங்கள் என்னை கேள்வி கேட்க ஒருவர் வருகிறார் கண்ணை மூடிக்கொள்கிறேன் தொந்தரவு செய்வதற்கென்றே…

பெரியபுராணம்- 42 திருக்குறிப்புத்தொண்டர் நாயனார் புராணம்

பா. சத்தியமோகன் 25. திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் புராணம் 1078. பொருந்துமாறு பல உயிர்களுக்கும் எல்லையற்ற கருணைத்தாய் போற்ற உமையம்மையார் தனிப்பட்டுள்ள தம் தலைவரைத் தழுவ நான்கு வேதங்களும் போற்ற நின்று அருந்தவம்புரிய தூய…