திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030530_Issue

அரசியலும் சமூகமும்

வாரபலன் – 3 பழைய பத்திரிக்கை வாசிப்பு

மத்தளராயன் ஐம்பதுகளில் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கிய பெயர் இது. இந்தியாவின் முதல் கம்யூனிஸ்டுகளில் (காங்கிரஸ் சோஷலிஸ்டு) ஒருவரான வீராங்கனை கல்பனா தத் தமிழகப் பொதுவுடமைவாதிகளை வெகுவாகப் பாதித்தவர். எந்தத் தோழர்…

கைலாஷ்- மானசரோவர் யாத்திரை – சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் வழங்கும் ஒளி-ஒலிப் பேழை.

பாரதிராமன். கைலாஷ்- மானசரோவர் யாத்திரை - சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் வழங்கும் ஒளி-ஒலிப் பேழை. (பேனசானிக் ஆண்டி ஃபங்கஸ் டிரீட்மெண்ட் நாடாவில் பதிவு செய்தது.) விலை. ரூ. 300/= உடலையே தேவாலயமாகப்…

புன்னகை

பவளமணி பிரகாசம் மொட்டு விரிந்தால் பூவாகிறது. மனம் விரிந்தால் புன்னகையாகிறது. பூவிலே எத்தனை வண்ணங்கள் உண்டோ புன்னகையில் அத்தனை எண்ணங்கள் உண்டு. மாறுபட்ட வாசனைகள் போல மாறுபட்ட அர்த்தங்கள் உண்டு. அகத்தின் குறிப்பாய் முகத்தில்…

கடிதங்கள்

மே மாதம் 30ஆம் தேதி, 2003 **** ஆசிரியருக்கு, கோபிகிருஷ்ணனுக்காக நான் எழுதிய அஞ்சலியையும் விவாதமாக்கும் மனப்பான்மைக்கு வணக்கம். கோபிகிருஷ்ணனின் நோய் மற்றும் சிகிழ்ச்சை சம்பந்தமான விஷயங்கள் அனுபவம் சார்ந்தே சொல்லப்பட்டுள்ளன. மேற்கோள்களால் அல்ல.…

பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 5

K.ரவி ஸ்ரீநிவாஸ் 1970- களில்தான் சூழல்வரலாறு ஒரு தனித்துறையாக உருவானது.இயற்கைக்கும், மனிதசமூகதிற்கும் இடையே நிலவிய உறவை வரலாற்று ரீதியாக ஆயும் இத்துறையில் இந்திய சமூக அறிவியலாளர்கள் குறிப்பிட்த்தகுந்த பல ஆய்வுகளை செய்துள்ளனர். 1970 களில்…

தா கிருட்டிணன் கொலை :அரசியல் கொலையும் ஜனநாயகக் கொலையும்

சின்னக் கருப்பன் தனிமனிதர் ஆட்சி செய்யக்கூடாது சட்டம் ஆட்சி செய்யவேண்டும் என்பதுதான் அரசியலமைப்பு ரீதியான ஜனநாயக ஆட்சிமுறை. இன்று அரசியலமைப்புச் சட்டத்தில் செருகப்படும் இடைச்செருகல்கள் போடா ஆகவும், கஞ்சா கேஸ்களாகவும், சந்தேகக்கேஸ்களாகவும் சட்டத்தை மதிக்காமல்…

என்னுடைய சாராம்சவாதமும், ஸ்ரீநிவாஸ் அவர்களது மறுவாசிப்பும்

சின்னக்கருப்பன் என்னுடைய எழுத்து சாராம்சவாதம் (essentialism) என்று தலைப்பிட்டுவிட்டு, அது குப்பை என்று ஒதுக்கிவிட்டால் எனக்கொன்றும் நஷ்டமில்லை. உண்மையில் ரவி ஸ்ரீநிவாஸ் குறிப்பிடும் புத்தகங்களில் சிலவற்றைத்தவிர மற்றவற்றை நான் படிக்கவில்லை. படிக்காதது எனக்கு நஷ்டம்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட அறிவுகள்….! (Twenty Years after the Three Mile Island Nuclear

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னுரை: 1979 ஆண்டு அமெரிக்காவில் முதன் முதல் நிகழ்ந்த TMI-2 அணுமின் நிலைய விபத்து, உலகில் வாணிப அணுமின் சக்தியின் வரலாற்றையே முற்றிலும் மாற்றி விட்டது!…

அறிவியல் மேதைகள் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (Benjamin Franklin)

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி விண்ணுயர்ந்த கட்டடங்கள் இடி மின்னல் தாக்கி தரைமட்டமாவதென்பது அக்காலத்தில் மிகச் சாதாரண நிகழ்ச்சியாக இருந்து வந்தது. இத்தகைய சேதங்களிலிருந்து கட்டடங்களைக் காப்பாற்றுவதற்கான பாதுகாப்புக்…

இலக்கிய கட்டுரைகள்

கசப்பும் இனிப்பும் (நா.பார்த்தசாரதியின் ‘வேப்பம்பழம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 63)

பாவண்ணன் மழைபொழியத் தொடங்கிய ஒரு ஆகஸ்டு மாதத்தில்தான் நான் முதன்முதலில் கர்நாடகத்தின் குடியேறினேன். இலையுதிர்காலம் முடிந்து மீண்டும் வசந்தம் துளிர்க்கிற ஏப்ரல் மாதத்தில் யுகாதிப்பண்டிகை வந்தது. அன்று அலுவல் இல்லை. அந்த ஏழெட்டு மாதக்காலத்துக்குள்…

சிறுகதை – அதன் அகமும் புறமும்

சுந்தர ராமசாமி சிறுகதை என்பது ஒரு தனியான கலை உருவம். அதை எல்லோரும் எழுதிப் பார்க்கலாம். ஆனால் எல்லோரும் எழுத வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆர்வம் இருந்தால் எழுதலாம். எல்லோரும் அதைப் படித்துத்தான்…

வனத்தில் ஒரு வேனில் நாள் – இலக்கிய நிகழ்வு

சொர்ணபாரதி வைகறை இலக்கிய வாசல் என்னும் அமைப்பின் சார்பாக தமிழின் நவீன படைப்புச்சூழலும் புதிய பாதையும் என்னும் தலைப்பில் சென்னை அருகே உள்ள தனக்கில்லா முகாம் என்னும் குறுங்காட்டில் நடைபெற்றது. 18-5-03 அன்று காலை…

கதைகள்

அரசூர் வம்சம் – அத்தியாயம் எட்டு

இரா முருகன் பகல் நேரம் அரிவாள் மனையில் வெட்டுப்படும் காய்கறிகளும், குடத்திலிருந்து இருப்புச் சட்டியில் வார்த்துச் சுட வைக்கப்படும் தேங்காய் எண்ணெயும், பாகாய் உருகிக் கொண்டிருக்கும் வெல்ல உருண்டையும், வடைக்கு அரைபடும் உளுந்துமாக நகர்ந்து…

பறவைப்பாதம் 3

எஸ் ஷங்கரநாராயணன் உள்நாக்கை யாரோ பிடித்து உள்ளிழுத்தாற்போல விக்கித்துப் போனார் ராஜகோபால். 'ஆஸ்பத்திரிலயா ? ' என்றார் கலவரத்துடன். 'அவ வீட்டுக்காரருக்கு இரத்த அழுத்தம் அதிகமாயி சேர்த்துருக்கா போல... கூட இருக்கறதாச் சொன்னா... பயந்துக்காதேடா…

குதிரை

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் சுவாமிப் பலகைக்கு முழந்தாழிட்டு கடவுளை நினைத்து சுண்டியெறிந்து பொத்திய நாணயம் விரும்பியது போலவே தலையாக விழுந்ததும் ஆறுமுகம் புறப்படத் தயாரானார் குதிரையைப் பார்க்க. குதிரையை ஏற்றுக் கொள்வதா இல்லையா> இதுதான்…

நயாகரா + குற்றாலம் = வேண்டாத கனவு

நாகரத்தினம் கிருஷ்ணா 'எலே! வா.. உட்கார். என்னைத் தெரியுதா ? ' என்றவரைப் பார்க்கிறேன். என் நினைவுச் சுமைகளில் அவர் இருக்கிறார். சட்டென்று முடிச்சை அவிழ்த்து அவரை விடுவிக்க இயலவில்லை. எதிரே இருந்த இருக்கைகளில்…

50 ரூபாய்க்கு சாமி

கே ஆர் விஜய் டே! சிவா! 50 ரூபாய்க்கு சாமி கிடைக்குதாண்டா! பசங்க ரெண்டு பேரு வாங்கிட்டு வந்திருக்காங்க! நிஜமாவா ? ம்ம்.. சுந்தரும் ரவியும் ரெண்டு காப்பி வாங்கிட்டு வந்துருக்காங்க. நான் கூட…

கலைகள்

சத்துள்ள பச்சடி (ராய்த்தா)

பி.என். விசாலாட்சி (விசாலம்மாள்) I) தேவயான பொருள்கள் 1. முட்டைக்கோஸ்- (காபேஜ்); 1கப்-பொடியாக அரிந்தது 2. குடமிளகாய் (பெல் பெப்பர்)- 1 (சன்னமாக அரியவும்) 3.இiஞ்சித்துண்டு (ஜின்சர்- பொடிசாக அரியவும்-1/2 ' ' 4.…

கவிதைகள்

ஓ கடிகாரம்!

ராஜி வார்த்தை விழுந்தால் மனதில் காரம், மார்பில் படுவதே நெஞ்சில் பாரம்! எளியவரிடம் காட்டுவது வெகு அதிகாரம், சிறந்த மனிதற்க்கு சொல் உபசாரம்! பசி அடக்க பல ஆஹாரம்..... ஆசை நண்பருக்கு நல்ல ஆதாரம்!…

இலக்கணக்குழப்பம்

மீ.வசந்த்,சாத்தூர் எப்பவும் போல் வீரப்பன் தப்பித்து கொண்டேயிருப்பதும், முதல்வருக்கு முன் நம் காக்கிச் சட்டைகள் கரகாட்டம் ஆடுவதும், சேலை கட்டிய சின்னக் குழந்தைகள்!! ? தீப்பெட்டி செய்வதும், சட்டசபையில் சண்டைகள் நடப்பதும், தஞ்சாவூர் பொம்மைகள்…

வளர்ந்தேன்

ஆதர்ஷ் ராவ் அடித்தவனுடன் அடுத்த கணமே குலாவினேன் திட்டியவை மறந்து மழலையில் கொஞ்சினேன் கொஞ்சமே அடித்த அம்மாவிடம் சிணுங்கி நொடிநேரக் கொஞ்சலில் காலைக் கட்டினேன் கோலி திருடிய நண்பனை 'போறது போ ' வென…

இருக்குமிடத்தை விட்டு…

கோமதி நடராஜன் விட்டுச் சென்ற நாளிலிருந்து விடாமல் தேடுகின்றேன். தொட்டுச் சென்ற நாளிலிருந்து தொடர்ந்து தேடுகின்றேன். கிணற்றில்,முத்தைத் தேடிய, முட்டாள் போல், உன்னை- பார்த்தால் மட்டுமே, பார்க்கும் பாவிகளிடம் தேடினேன். சிரித்தால் மட்டுமே,சிரிக்கும் சிறியோரிடம்…

கணினித் தத்துவம்

வைஷாலி மிகப்பெரிய கோப்பா ? அது மிகவும் உபயோகமானதாக இருக்கலாம் ஆனால் இப்பொழுது போய்விட்டது. நீங்கள் தேடும் இணையத் தளம் காண முடியவில்லை ஆனால் எண்ணற்றவை இணையத்தில். குழப்பம், ஆளுமை இவற்றுள் எதிரொலி, மன்னிப்பு…

நான்

அனந்த் 'பஞ்சபூதங்களால் ஆன இவ்வுலகில் உன் உடல் அன்னமயம் ஆனது ' என்று அறைகூவும் உபநிஷத்துகள். ஆம், நான் உணவாகவே உள்ளவன் வானிலிருந்து வீழும் மழையால் விளைந்த பயிரால் விளைந்தவனே நான் என் எழிலும்…

சொறிதல்…

முத்துநிலவன் சொறிந்து விடு! சொறிந்து விடு! உன் நகங்களில் அழுக்குச்சேர அவன் முதுகு ரணமாக- சுகமாக சொறிந்து விடு! சொல்லித் தெரிவதில்லை சொறிதல்! மன்மதக் கலையைவிடவும் ரகசியமானது, மதுவைவிடவும் போதையானது! விரகதாபத்தை விடவும் இந்த-…

ஞாபகம்

தமிழ்மணவாளன் எல்லா சிறுவர்களும் கோவில் திருவிழாவுக்கு நாடகம் பார்க்கச் செல்லும் போது இரவு நேரம் செல்லக்கூடாதென்பாய். அழுது கொஞ்ச நேரத்தில் அப்படியே உறங்கிப் போவேன். அதிகாலை அனைவரும் நாடகம் பற்றிப்பேச 'நல்ல பையன் சொன்னதைக்…

வினையில்லா வீணை

ஆ. மணவழகன் அலாரம் வைத்தோ... அடுத்தவர் தட்டியோ.. ஐந்து மணிக்கே எழவேண்டும்! அழ்ந்த உறக்கமோ... அழகான கனவோ... தொலைபேசியைத் தொல்லை பேசியாக்கி சுகம் சுகமாய் வாழ்த்தவேண்டும்! மேகம் தூது என்றால் - அது மேலைக்காற்றின்…

ஆண்களைக் காணவில்லை

வேதா சின்ன உலகத்தில் சீராட்டிப் பாராட்டி சிவந்த கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்து பதுமையாய் கிடந்திருக்கும் நேரம்கூட, பாரடா....நாமெல்லாம் பத்தினிதான்!! பார்ப்பவர் கண்களிலே பத்துக்கு ஒன்று, நிச்சயம் பழுதானால் ? அழகிய குழந்தையாய் அழுது…

நகைச்சுவை

இந்தி சினிமாவின் பத்துவிதிகள்

1. இரண்டு சகோதரர்கள் பால்யகாலத்தில் பிரிந்தார்கள் என்றால், அவர்களில் ஒருவன் போலீஸால் துரத்தப்படுபவனாகவும், இன்னொருவன் போலீஸ்காரனாகவும் இருக்கவேண்டும். போலீஸால் துரத்தப்படுபவன் கடைசிக்காட்சியில் திடாரென்று திருந்தி உண்மையான வில்லனை அடித்து நொறுக்கவேண்டும். இந்த சகோதரனுக்கு ஹீரோயின்…