அண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறைகள் கடல் மட்டத்தை உயர்த்துகின்றன என நிபுணர்கள் கூறுகிறார்கள்

அண்டார்டிகா உருகிறது. இது மெல்ல மெல்ல கடலின் மட்டத்தை உயர்த்திக்கொண்டு வருகிறது. ஐரோப்பிய தொலை உணர்வு துணைக்கோள் (European Remote Sensing Satellite) மூலம் கிடைத்த செய்திகளைக் கொண்டு அறிவியலாளர்கள் அறிந்த செய்திகள் அதிர்ச்சி தருபவை. சுமார் 36 கன மைல் பனிப்பாறைகள் மேற்கு அண்டார்டிகாவிலிருந்து சென்ற பத்தாண்டுகளில் உருகி இருக்கின்றன என கண்டறிந்திருக்கிறார்கள். இது உலகெங்கும் சுமார் ஒரு செ.மீட்டரில் மூன்றில் ஒரு பாகம் அளவுக்கு கடல் மட்டத்தை உயர்த்த வல்லது. ‘இந்தப் பனிப்பாறைகள் வெகுவேகமாக […]