திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20031120_Issue

அரசியலும் சமூகமும்

ஜாதீயம் என்கிற ஒற்றைப் பரிமாணப் பார்வை

பி.கே. சிவகுமார் 1.) 'அவர் தன்னுடைய வேளாளச்சாதிய அடையாளத்தை வாஷிங்டன் வந்த பொழுது வெளிப்படையாக பிரகடணப் படுத்தியிருக்கிறார். ' என்று ஜெயகாந்தனைப் பற்றிய பொய்யான தகவலை எழுதிவிட்டு, பின்னர் ஜெயகாந்தன் அப்படியெல்லாம் பேசவில்லை என்று…

குறிப்புகள் சில- நவம்பர் 20,2003

K.ரவி ஸ்ரீநிவாஸ் மார்த்தா நுஸ்பாம்-அரசு ஊழியர்-உரிமங்கள், எய்ட்ஸ்,ஏகபோகம்,தென்னாப்பிரிக்கவில் ஒரு தீர்ப்பும், வழக்கும் சமீபத்தில் மார்த்தா நுஸ்பாம்(Martha Nussbaum)ஆற்றிய உரை ஒன்றைக் கேட்டேன்.சிகாகோ பல்கலைகழத்தில் ஆராய்ச்சி செய்து வரும் இவர் அங்கு மூன்று துறைகளில் ஆராய்சி…

தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 4

K.ரவி ஸ்ரீநிவாஸ் ஆங்கிலத்தில் ஆராய்ச்சிக் கட்டுரைகள், அறிக்கைகளை இணையத்தில் பெறுவது எளிதாக உள்ளது.பல இணையதளங்களில் குறிப்பிட்ட துறைகளில் வெளியாகும் கட்டுரைகள் கிடைக்கின்றன.உதாரணமாக சமூக அறிவியல் துறைகளில் வெளியாகும் கட்டுரைகளை Social Science Research Network…

மூளைச் சலவையின் ஆற்றல்: 900 சாவுகள் கற்றுத் தரும் ஒரு கொடிய பாடம்

டாம் கிஸ்கென் வெண்சுரா கவுண்டி ஸ்டார் பத்திரிக்கையில் நவம்பர் 18, 1998இல் எழுதியது. ஊதிய இறந்த சடலங்கள் எங்கும் சிதறிக்கிடக்கின்றன. 300 அடி உயரத்தில், ஒரு விமானத்திலிருந்து கயானா ஜோன்ஸ்டவுணைப் பார்க்கும்போது, சிபிஎஸ் நிருபரான…

கடிதங்கள் – நவம்பர்-20, 2003

நாடோடி-அப்துல் ரஹ்மான்-மாலன்-சி ஜெயபாரதன் - அரவிந்தன் -கலைமணி -தமிழ் மணவாளன்-அருண் பிரசாத் நண்பர் நாகூர் ரூமிக்கு வணக்கம். என் கட்டுரையைப் படித்துவிட்டு சாரு நிவேதிதா திருந்திவிடுவாரென்றோ, திடாரென மனிதத்தன்மை பெற்றுவிடுவாரென்று எண்ணி நான் எழுதவில்லை.…

இந்த வாரம் இப்படி (xenophobic நான், பாபி ஜிண்டால், ஈராக்கில் இத்தாலி வீரர்கள், அறம்)

சின்னக்கருப்பன் xenophobic ஆக இல்லாமல் இருப்பது என்னை பலர் பரந்த மனம் கொண்டவன் என்று சொல்ல உதவக் கூடும். என்னை மற்றவர் பாராட்ட வேண்டும் என்பதற்காக நான் மனதில் தோன்றியதை எழுதாமல் விட்டேன் என்றால்,…

உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 2

பரிமளம் முன்பே குறிப்பிட்டதுபோல் அறிவியல் கறாரான கடுமையான விதிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுவது. முழு உண்மையைக் கண்டுபிடித்துவிட்டதாக அறிவியல் தம்பட்டம் அடித்துக்கொள்வதில்லை. தன் எல்லைகளை அது உணர்ந்தே இருக்கிறது. இந்த அறிவியலின் அருகே தரக் கட்டுப்பாடுகளுக்கு…

காசி யாத்திரை

நாக.இளங்கோவன்,சென்னை. அண்மையிலே 'தி இந்து ' மற்றும் 'முரசொலி ' நாளிதழ் ஆசிரியர்கள், நிர்வாகிகள் பலருக்கும் (6 பேர்) தமிழக சபாநாயகர் காளிமுத்து 15 நாள் சிறைத்தண்டனை விதித்தார். பரிதி இளம்வழுதி என்ற தி.மு.க…

அறிவியலும் தொழில்நுட்பமும்

க்வாண்டம் இயற்பியலின் பரிணாமம்-2: ஸ்க்ராட்டிஞ்சரின் பூனையும், பெரிலியம் ஐயனியும்

அரவிந்தன் நீலகண்டன் பகடையாடும் சடையோனெங்கே என்றே தேடித் திரிவான் சிறுவன் அவன் கையில் இருக்குது இருப்பில்லா பூனை. 'க்வாண்டம் இயற்பியலினால் அதிர்ச்சி அடையாதவர்கள் அதனை சரியானபடி அறிந்து கொள்ளவில்லை. ' என்றார் நெய்ல்ஸ் போர்.…

ஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள்(1954-2004)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 'சுருங்கித் தேயும் நிலக்கரிச் சுரங்கங்கள், குன்றிடும் ஹைடிரோ-கார்பன் எரிசக்தி சேமிப்புகளைக் கொண்டு, விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவளத்தை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப்…

இலக்கிய கட்டுரைகள்

நாச்சியார் திருமொழி

மாலதி ஆண்டாள் ஒரு பெரிய தவற்றை நிறையவே செய்து விட்டாள். அதனால் தான் 'ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே! ' என்று எல்லோரும் வாழ்த்தியிருந்தும் அவளுடைய நாச்சியார் திருமொழி பரவலாகக் கொண்டு செல்லப்படவில்லை.நாச்சியார்…

எனக்குப் பிடித்த கதைகள் – 86-புன்னகை என்னும் தற்காப்பு ஆயுதம்: திலீப்குமாரின் ‘மூங்கில் குருத்து ‘

பாவண்ணன் கேபிள் இணைப்பு வேலையில் எங்களுக்குத் துணையாக இருக்கும் இளைஞன் ராஜீவ். சுறுசுறுப்புக்குப் பேர்போனவன். வேலைக்குப் புறப்படும் முன்னர் ஒவ்வொரு நாளும் என்னென்ன எடுத்துச் செல்லவேண்டும் என்று சரிபார்த்துக்கொள்ள ஒரு பட்டியலை நான் அவனிடம்…

வீணாகப் போகாத மாலை

அ.முத்துலிங்கம் வார இறுதி வரும்போது எனக்கு மெல்லிய நடுக்கம் பிடிக்கத் தொடங்கிவிடும். ஏனெனில் சனி, ஞாயிறு மாலைகளில்தான் நடன அரங்கேற்றம், பாடல் கச்சேரி, இலக்கிய விழா, நாடகம், புத்தக வெளியீடு என்று வழக்கமாக நடைபெறும்.…

பிரமைகளும், பிரகடனங்களும்-2

K.ரவி ஸ்ரீநிவாஸ் ஜெயமோகன் தன் நூற்கள் வெளியீட்டு விழாவில் பேசிய உரையை முன்வைத்து எழுந்த சர்ச்சை குறித்த என் கருத்துக்களை இணையத்தில் (திண்ணை,பதிவுகள் விவாதக்களம்) பதிவு செய்திருந்தேன். வேதசாகய குமார் எழுதிய பத்துகேள்விகளும் சில…

பொறியில் சிக்காத பிதாமகன்.

அம்மாளு மாமி. மிகவும் திகிலோடு பார்த்து இனிமையாக 'ஏமாந்த படம் ' என்றுதான் கூறுவேன். கலாரீதியாக தமிழ் சினிமா முன்னேற வேண்டிய தூரம் ஏராளம் என்றாலும் பிதாமகன் இன்றைய தமிழ் திரையுலகில் ஓரளவு முக்கியமான…

தொடரும் உல்டா.. தமிழ் சினிமாவில்…

ராஜ்உ பிதாமகன் - நந்தவனத்தில் ஒரு ஆண்டி தொடர்பான கட்டுரைக்கு வந்த வாசகர் ஒருவரின் கட்டுரைக்கு சிறு பதிலுடன் இந்த வார இந்தக் கடிதம். நன்றி அவருக்கு. நிச்சயமாக இந்த தமிழ் சினிமாவின் உல்டா…

கதைகள்

நூருன்னிசா

கு.ப.ராஜகோபாலன் நான் வேலூர்ச் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்து ஒருவாரம் இருக்கும். ஒருநாள் காலையில் நாற்காலியில் சாய்ந்து கொண்டு என் உயிர் வெள்ளம் இனிமேல் எந்த நிலத்தில் பாயப்போகிறதோ என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன். நான் கைகொண்டு…

அந்த நாலுமணிநேரம்

ராமசந்திரன் உஷா அக்டோபர் மாத துபாய் வெய்யில் சுகமாய் இருந்தது. அவள் நடக்கத் தொடங்கினாள். ரம்ஜான் மாதம் நோம்பு ஆரம்பித்தால் அவள் வேலை செய்யும் அரபி வீட்டில் வேலை பெண்டு கழட்டி விடும். அவள்…

நந்தகுமாரா நந்தகுமாரா

நாகரத்தினம் கிருஷ்ணா ' போங்கடி... நீஙகளும் உங்க................................... ' நீண்டு உடைந்தது அவன் குரல். துக்கத்தின் முழு பரிமாணத்தையும் தாங்கிய குரல். அந்தப் பெரிய வரவேற்பறையில் ஏக முழக்கமாய் மேடையேறி நின்று ஒலிக்கும் குரல்.…

காத்திருந்து… காத்திருந்து….

நம்பி ----------------------------------------- ஊனமாக ஈன்ற குழந்தையின் தாயைப் போலிருந்தது நகுலனுக்கு. அன்று அவனது கதை பிரசுரமாகியிருந்தது. ஒரு சிற்பியின் நேர்த்தியுடன் செதுக்கியிருந்த கதையில் பத்திரிகை ஆசிரியர் தணிக்கை என்ற பெயரில் கொத்து பரோட்டா போட்டிருந்தார்.…

கனவின் கால்கள்

கோச்சா ---------------------- ரங்கநாதன் தெரு அருகே உள்ள ராமனாதன் தெரு.மாம்பலம் ஸ்டேஷனில் இருந்து வந்தால் முதலில் இருக்கும் மேன்ஷன். அதானால் இந்த மேன்ஷன் எங்கும் சென்று வர வசதியானது. பேச்சிலர்களின் பேரடைஸ் எனச் சொல்லலாம்.…

அலுவலகம் போகும் கடவுள்

இரா.முருகன் --------------------------- தத்தாத்ரேயன். அப்படி ஒரு பெயரை வைத்திருக்க வேண்டியதில்லை. வைத்துத் தொலைத்து விட்டார்கள். சாதாரணமாகச் சொல்வதற்கே கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். சொல்ல ஆரம்பித்த உடனேயே கேட்பவர் அலுப்படைந்து விட்டதாகத் தோன்றும். கல்யாணப் பத்திரிகையில்…

விடியும்!- (23)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் 'உதவி ஒத்தாசை ' செய்வது என்பதற்கு பரிமாணங்கள் நிறைய. கேளாமலே செய்வது. கேட்டுச் செய்வது. கேட்டும் செய்யாமலிருப்பது. பேருக்காகச் செய்வது. பின்னுக்கு உதவும் என்று காரியத்தோடு செய்வது. விட்டாக் கானும்…

நலங்கெடப் புழுதியில்…

இளந்திரையன் கோடையின் கடும் வெய்யில் காந்தலாக இறங்கிக் கொண்டிருந்தது. உச்சியில் இருந்து சரிந்து கொண்டிருந்த சூரியனின் ஆக்ரோஷம் மண்ணைப் பொசுக்கிக் கொண்டிருந்தது. காற்றின் சலனமே இல்லாது இறுகிப் போயிருந்த நிசப்தம் வெப்பத்தின் வீச்சை இன்னும்…

அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்து மூன்று

இரா முருகன் சங்கரன் தெருவில் இறங்கி நடக்கும்போது மத்தியானமாகி விட்டிருந்தது. சமுத்திரக் காற்று தயங்கித் தயங்கி அடிக்க ஆரம்பித்து வெய்யில் தணிந்திருந்தது. இந்தக் காற்றுக்கும், கழித்த போஜனத்துக்கும், இப்பவே இங்கேயே ஏதாவது ஒரு திண்ணையில்…

கவிதைகள்

புரியாமல் கொஞ்சம்…

வேதா மஹாலக்ஷ்மி சில விஷயங்கள் மட்டும் புரிவதேயில்லை.... நிலவின் களங்கம் போல் என் நினைவில் தப்பிய நிம்மதி போல் உனக்குள் காயம் பட்ட என் அடிவேரைப் போல் நீ விலகி விலக்கிப் போனாலும் உன்…

ஒன்று நமது சிந்தனை

-- பா.சத்தியமோகன் இறைவனின் வீட்டுக்குப் போயிருந்தேன் நவம்பர் மாதம் கனத்த மழை நல்ல ஈரம் நனை கூரை, கனைக்கும் பல்லி, மெலிய காற்று தீபப் பிரகாசம் சிறிது கூட சிறிது உயர தன்னந்தனியே இறைவன்…

தமிழ்

சித்தாந்தன் அதிகாலை விடியலையும் பரிதி மறந்தாலும் ஆண்டும் தான் தொடங்கியே முடிய மறந்தாலும் இசை பாடும் கருங் குயிலும் பாட மறந்தாலும் ஈக்களுமே பூக்களயே மொய்க்க மறந்தாலும் உலகம் தனை எழுப்பிடவே சேவல் மறந்தாலும்…

காதல் லட்சம்

சத்தி சக்திதாசன் விழியா அது ? கண்மணியே என்னைக் கட்டி இழுக்கும் காந்தமல்லவோ அது அது என்ன உன் வதனமா ? நிலவுகள் இரண்டு ஒரே இரவினில் எப்படி என்று புத்தகங்களைப் புரட்டியபடி நான்…

மெளனம்…

மோகன லட்சுமி வார்த்தைகள் வாய்கால்கள் மீறி வலம் வரத் துடிக்கும் போதிலும், புறம் சொல்லவே பிறந்தவர்களிடமும்.. தற்பெருமை தொட்டிலில் தானே ஆடியவர்களுக்கும்.. முத்துக்கள் உதிர்ந்து விடுமோ ? வாய் திறந்தால்.. ஆராய்ச்சி கேள்விகளுக்கும். மெளனமே…

குழந்தைகள் தினம் ( 14 நவம்பர் 2003 )

கஜன் ---------------------------------------- மலர்கள் தோற்கும் அழகினிலே . . . மனிதம் மயங்கும் சிரிப்பினிலே புலன்கள் பொய்த்துப் போகுதிங்கே . . . புரியும் உன்றன் செய்கையிலே விலங்கு மனதில் மாட்டுகிறாய் . .…

கலக்கம்

இளந்திரையன் காலத்தின் கணிப்பு இரண்டு உயிர்கள் காளையுடன் இயம தூதன் புழுதிக் காற்றில் அலைந்த தெருவில் கால் புதைய நடந்தது எருமை உற்றுப் பார்க்கிறான் கண்களுக்குள் இன்றைய கணக்கு சரி செய்யப்பட பஞ்சடைந்த கண்கள்…

எது மரபு

அவதானி கஜன் ============ புத்தாடை பூண்டாள் புகுந்தவீட்டில் பெண்னொருத்தி புலம்பினாள் மாமியார் இது மரபு அல்ல தொலைக்காட்சி வானொலியைத் தொலைதூரம் தள்ளிவிட மருமகள் மாமியாராக புதிய வடிவில் புது மருமகள் உடை உடுக்க பதறினாள்…

வைரமுத்துக்களின் வானம் -9

ருத்ரா வாளால் வெட்டிவீழ்த்தப்படுமுன் விக்கிரமாதித்தனிடம் வேதாளம் கேட்கும் கேள்வியைப்போல் ரத்தம் சொட்ட சொட்ட கேட்டிருக்கிறாய்.... 'தொடரும் சிறுகதை ' என்ற தலைப்பில். தர்க்கம் எனும் வீச்சரிவாளில் மானிடத்தை இரண்டு துண்டு ஆக்கியிருக்கிறாய். காதல் ஒரு…

கலியுகம்

பவளமணி பிரகாசம் ஞானமோ மோனமோ ஈர்க்கவில்லை மெய்யெது பொய்யெது தெரியவில்லை தாயோ தந்தையோ தேவையில்லை பொருளும் போகமும் திகட்டவில்லை நாளும் கிழமையும் நினைப்பிலில்லை நியாயமும் நேர்மையும் எண்ணவில்லை கோலமும் கொள்கையும் திண்ணமில்லை பாதையும் பயணமும்…