திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070104_Issue

அரசியலும் சமூகமும்

சதாம்

நரேந்திரன் "I could not become anything: Neither bad nor good, neither a scoundral nor an honest man, neither a hero nor an insect. And now…

ஆண்பால் பெண்பாலுக்கு அப்பால்…

அருணகிரிதினத்தந்தியிலிருந்து டில்பர்ட் வலைப்பதிவு வரை அனைத்து மீடியாக்களிலும் வந்த செய்திதான். என்றாலும் இக்கட்டுரையின் நோக்கம் செய்தி விளக்கம் மட்டுமே அல்ல. அதையும் தாண்டி இயற்கையின் பாலியல் பிரிவின் அறிவியல் சிக்கல்களையும் அவற்றின் சமுதாயத் தாக்கங்களையும்…

படுகொலை செய்யப்பட்ட சதாம் உசைன் அவர்கள்…

ப.வி.ஸ்ரீரங்கன்கொலையாகிய சதாமின் அரசியல் வாழ்வு கூறுவது என்ன? 1:அரபு மொழி பேசுபவர்கள் எல்லோரும் ஒரு தேசிய இனமல்ல. 2:இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் ஒரு தேசிய இனமல்ல. 3:அரபு தேசத்தில் வாழும் முஸ்லீம்,அரபு மொழி…

சதாமின் மரணம் ஒரு பழிவாங்கல் மட்டுமா?

கூத்தாடிசதாமின் மரணம் ஒரு பழிவாங்கல் மட்டுமா? சதாம் தூக்கிலபட்டது பற்றி அறிவிக்கப் பட்டவுடன் அவரைப் பற்றிய தொலைக்காட்சியில் தொடர்ந்து வரும் விவாதங்களையும் தொடர்ந்து பார்த்த போது தோன்றியவைப் பற்றிய ஒரு அவசரப் பதிவு .…

அறிவிப்புகள்

திண்ணை ஏழு ஆண்டுகள்

திண்ணை குழுதிண்ணையில் ஏழு ஆண்டுகளாக பங்களிப்புச் செய்துவரும் எழுத்தாளர்களுக்கு எங்கள் நன்றி. நிறுவனம் சாராத சுதந்திர வலைஏடுகளில் தமிழில் முதன்மையானதொரு இடம் திண்ணைக்கு வழங்கியுள்ள வாசகர்களுக்கு எங்கள் நன்றி. திண்ணை குழு

ஜெயந்தி சங்கர் நூல் வெளியீடு – அழைப்பிதழ்

அழைப்பிதழ்நூல் வெளியீடு - அழைப்பிதழ் ---------------------------------------------------------------------------- பிரபல முன்னணி எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் நான்கு நூல்கள் ஒரே மேடையில் வெளியீடு காண்கின்றன ! ------------------------------------------------------------------------------- பின் சீட் - சிறுகதைத் தொகுப்பு வாழ்ந்து…

விடாது துரத்தும் ஜின்

சூபி முகமது 1)கபாவில் எண்ணற்ற காஜிகள் முத்தமிடுவதான ஹஸ்ருல் அஸ்வத் பதிக்கப்பட்ட புனித வடிவம் பெண்குறி வடிவமைப்புத்தான் என்பதை உலக வாசகர்களுக்கு படம் போட்டு அம்பலப்படுத்திய வகாபியின் தொண்டுள்ளத்திற்கு நன்றி. அல்லாவின் பெயரைச் சொல்லி…

சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்

பி.கே. சிவகுமார்சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன் 30-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 10, 2007 முதல் ஜனவரி 21, 2007 வரை செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.…

திண்ணை வாசகருக்கு ஓர் அறிவிப்பு

சி. ஜெயபாரதன், கனடா திண்ணை நண்பர்களே, புத்தாண்டு 2007 பிறந்து விட்டது. புத்தாண்டுடன் எனது புதிய அகிலவலைப் பூங்கா, நெஞ்சின் அலைகள் என்னும் எனது ஆக்கவலை உதயமாகிறது. ஏணியின் முதற்படியில் கால்வைக்கும் எனது படைப்புவலை…

இலக்கிய கட்டுரைகள்

நிஜ உலகிலிருந்து சுதந்திரத்துக்கு…

சுகுமாரன் நான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன் -ஹருகி முரகாமி ஹருகி முரகாமியை ஓர் இலக்கிய வாசகன் என்ற நிலையில் மொழிபெயர்ப்புகள் வழியாகக் கண்டடைந்தது எதேச்சையாகத்தான். ஆனால் முதல் வாசிப்பில் அவர்…

பொய் – திரைப்பட விமர்சனம்

நெப்போலியன்இளமைக்கு கே.பி அழகு... என்பதை மீண்டும் தன் "பொய்" யால் நிரூபித்துள்ளார் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் ! தமிழில் முதல் சர்ரியலிச சினிமா முயற்சியை பொய் திரைப்படம் வரலாற்றில் பதியவைத்துக்கொள்ளும். காதலுக்காய் காதலை…

திருவருட்பயன் – பெண்ணிய வாசிப்பு

முனைவர். மு. பழனியப்பன் தமிழரின் தத்துவக்கொடைகளுள் முதன்மை வாய்ந்தது சைவசித்தாந்தம் ஆகும். இலக்கியம் தோன்றியபின் இலக்கணம் வகுத்த மரபைப்போல தோத்திர நூல்களான திருமுறைகளுக்குப்பின், சாத்திர நூல்களான சித்தாந்த நூல்கள் தோற்றம் பெற்றன. திருமுறைகளில் முதன்மை…

கடித இலக்கியம் – 39

வே.சபாநாயகம் ('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) கடிதம் - 39 திருப்பத்தூர்.வ.ஆ. 30-7-89 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். தாங்கள் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி குழந்தைகளுக்கு எழுதும் புத்தகத்திற்காக - அதற்கான குறிப்புகளைத் தரும்…

உராய்வு கவிதைத்தொகுப்பு – ஒரு பார்வை

சந்திரவதனா முந்தைய நாயன்மார்களின் தேவாரங்களையும், புறநானூற்றுக் காவியங்களையுமே பாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்த எம்மை வியக்க வைக்கும் படியாக இன்று எம்மிடையே புதிய புதிய கவிஞர்களும், கதாசிரியர்களும் உருவாகிச் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.…

ஒரு செம்பு சுடு தண்ணீர்.

ப.வி.ஸ்ரீரங்கன் மார்கழி மாதம் எனக்கு மனதுக்கேற்ற மாதமாகவே என்றும் இருந்து வருகிறது.ஊரிலிருந்துபோதும்சரி,இந்த அகதிய வாழ்வுக்காக ஜேர்மனிக்கு போடர்தாண்டி வந்தபின்புஞ்சரி எனக்கெப்பவும் மார்கழிமீதான விருப்பு பன்மடங்காகிச் சென்றுகொண்யிருக்கு.சின்ன வயது, அம்மாவின் சேலைத் தலைப்போடு ஒன்றித் திரிந்தபோதெல்லாம்…

இன்னும் சில ஆளுமைகள் – புத்தக அறிமுகம்

பி.கே. சிவகுமார் வெங்கட் சாமிநாதனின் புதிய கட்டுரைத் தொகுதி இது. எனிஇந்தியன் வெளியீடாக வரவிருக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் நூல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிதாசன், பாரதியார், திலீப் குமார், வ.ரா, லா.ச.ரா, அம்பை,…

நாவலர், பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய “கள்ளர் சரித்திரம்”

பி கே சிவகுமார் நாவலர், பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய "கள்ளர் சரித்திரம்" எனிஇந்தியன் வெளியீடாக வரவிருக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கள்ளர் சரித்திரம் இதுவரை வெளிவராத பல…

ஞானரதத்தில் ஜெயகாந்தன் – புத்தக அறிமுகம்

பி கே சிவகுமார் ஞானரதம் 1970 ஜனவரியில் துவக்கப்பட்டது. ஜனவரியிலிருந்து முதல் மூன்று இதழ்கள் ஆசிரியர் குழுவின் பெயர்கள் இல்லாமலேயே வெளிவந்தன. நான்காம் இதழிலிருந்து நிர்வாக ஆசிரியராக தேவ சித்ரபாரதி (அப்பாஸ் இப்ராஹிம்) பணியாற்றினார்.,…

பிரதாபசந்திர விலாசம் – புத்தக அறிமுகம்

பி.கே சிவகுமார் 1877-ஆம் ஆண்டு பிரதாப சந்திர விலாசம் "ஜனசமூக நாடகமாக" (social drama) ப.வ. இராமசாமி ராஜூ அவர்களால் எழுதப்பட்டது. திண்ணை.காமில் இந்த நாடகத்தை அறிமுகப்படுத்தி இந்திரா பார்த்தசாரதி எழுதினார். இந்த நாடகம்…

கதைகள்

நீர்வலை (5)

எஸ். ஷங்கரநாராயணன் ஏலாம்பாக்கத்தில் லோடு இறக்கி விட்டு அவர்கள் நடந்தார்கள். புதிய ஊரின் வனப்புகள். அருகில் அண்ணன். என்னவோ தோணியது. அண்ணன் கையைப் பற்றிக் கொண்டே சின்னக் குழந்தையாட்டம் நடந்தான். அதைப் பார்க்க கிருட்டினமணிக்குச்…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:11)

சி. ஜெயபாரதன், கனடாபன்னாடு வென்று பொற்காசு திரட்டி அடிமைகள் பிடித்துப் பெரும்பணம் புரட்டி ரோமின் பொக்கிசம் நிரப்பிய சீஸரா பேராசை மனிதர்? ....... அன்று நான் மும்முறை அவர்க்கு பொன் மகுடம் சூடப் புகுந்திடும்…

மடியில் நெருப்பு – 19

ஜோதிர்லதா கிரிஜா தண்டபாணி உற்சாகமாக இருந்தான். மும்பைக்குப் புறப்பட்டுப் போய்க் கிட்டத்தட்ட பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள போதை மருந்துகளை எடுத்துவர அவனால் ஒரு நம்பகமான ஆள் அனுப்பப்பட்டிருந்தான். சென்னை சென்டிரலிலிருந்து சற்று முன்னர்தான்…

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 18

நாகரத்தினம் கிருஷ்ணா பிரான்சுவாஸ் சகன் அத்தியாயம் - 18 சவ அடக்கம் பாரீஸில் நடைபெற்ற அன்று நல்ல வெயில், கருப்புடை அணிந்து கலந்துகொண்டவர்களில் முகங்களில் ஒருவித ஆர்வம். அப்பாவும் நானும், துக்க சம்பவத்திற்கு வந்திருந்த…

மீசை

மீரான் மைதீன் மீசை கொஞ்சம் பெரியதாகத் தான் இருக்கிறது மீசை பெரிதாக இருப்பதால் அது அழகாக இருப்பதாக நான் அடிக்கடி நினைத்து கொள்வதுமுண்டு. என்னிடமுள்ள சிறப்புகளில் முக்கியமானதாக நான் மீசையைத்தான் கருதுகிறேன். இந்த மீசையைத்…

கலைகள்

இலை போட்டாச்சு 9 – இனிப்புப் பச்சடி வகைகள்

பாரதி மகேந்திரன் (அ) பீட்ரூட் பச்சடி பீட்ரூட் - 200 கிராம் வெல்லம் - 200 கிராம் ஏலக்காய்ப் பொடி - அரைத் தேக்கரண்டி அரிசிமாவு - 1 தேக்கரண்டி முதலில் பீட்ரூட்டின் தோலைச்…

கவிதைகள்

யாரிந்த நீதிபதிகள் ?

சி. ஜெயபாரதன், கனடாஉங்களில் தூயவன், உத்தமசீலன் எவனோ அவன் மட்டும் முன்வந்து இந்தக் கல்லை எடுத்து அந்த வேசியின் மீது வீசட்டும் என்று ஏசு பெருமான் வேண்டிக் கொண்டார்! வெள்ளை மாளிகை பேரழிவுப் போராயுதம்…

காதல் நாற்பது (3) – சொர்க்கத்தை நோக்கி !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாதேவன் படைத்த இந்த பிரபஞ்சத்தில் மூவர் மட்டுமே கேட்டனர், நீவீர் சொல்லிய இந்த வாய்மொழியை, எல்லோரும் இருந்தாலும் ! இறைவன் அருகில் உரைத்தது நீ ! கேட்டது நான்…

தாயகமே உன்னை நேசிக்கிறேன்

சி. ஜெயபாரதன், கனடாபுத்தாண்டு ஜனவரி 27 ஆம் நாள் பாரதக் குடியரசு தினவிழாக் கொண்டாட்டத்தின் போது, அண்டை நாடான பங்களா தேச மக்கள் தம் தேசிய கீதமாகப் பாடிவரும் ஓர் உயர்ந்த பண்பாடு இந்தியராகிய…

உடைந்து போன புல்லாங்குழல்களை ஒன்று திரட்டிய நிஷாப் பெண்

ஹெச்.ஜி.ரசூல் நேற்று இரவில் வெளிப்பட்ட பல நூறு கொம்பு முளைத்த மனிதன் பச்சைப் புறாக்களின் மாமிசத்தை குருரத்தோடு தின்று கொண்டிருந்தான். விழிப்பும் சூட்சமமும் கொண்டதொரு கணத்தில் வழிநெடுக அலைந்து திரிந்து தின்று தீர்க்க கிடைத்த…

பெரியபுராணம்–119 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் 3416. தாம் ஆட்கொண்ட வன்தொண்டரின் திருமணச்செயல் முடிப்பதற்கு ஆதிபுரியான திருவொற்றியூரை உடைய இறைவர் அன்று இரவே திருவொற்றியூரில் வாழும் அடியார்களுக்கு அந்தத் திருமணத்தை செய்வதற்கு மனதில் தோன்றுமாறு உணர்த்தினார் 3417. “நம்பி ஆரூரனுக்கு…

விறைத்துப்போன மௌனங்கள்

சாமிசுரேஸ் சுவிஸ் விழுமியச் சின்னங்களின் மூடிய சுகங்கள் மொழிப்பிறழ்வின் அசைவினு}டே மிதமாய்ச் சிதையும் உடைந்த காலத்தின் கீறியெறியப்பட்ட சுவடுகளை முதுகுவரிகளின் பள்ளத்தாக்குகளில் செருகியபடி இடுக்கண் நகரும் நடைமுறைகளின்போது சில நம்பிக்கைகள் சாத்தியத்திற்காக துடித்துக்கொண்டிருக்கும் இக்கணங்களில்…

* ஒற்றை சிறகு *

ப்ரியன். கூண்டில் உதிர்ந்திட்ட ஒற்றை சிறகு; அடிகாற்றின் விசையில் கனமாய் படபடத்தபடி அரற்றிக் கொண்டிருக்கிறது பறவையின் விடுதலை தாபத்தை! - ப்ரியன். mailtoviki@gmail.com

புத்தக அலமாரி

புதியமாதவி, மும்பை கழிவறைச் சுவர்களைத் தவிர மற்ற எல்லா சுவர்களிலும் கண்ணாடிக் கதவுகளுடன் தொங்கிக்கொண்டிருக்கிறது புத்தக அலமாரிகள். ஒவ்வொரு பொங்கலுக்கும் வெவ்வேறு தளங்களில் மாறி மாறி அடுக்கப்படுகிறது புத்தகங்கள். அலமாரிக்கு கண்களாய் இருக்கும் புத்தகங்கள்…

பேய்மழை

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) ஒழுகாத கூரை மிதக்காத வீடு சூடான உணவு சுகமான படுக்கை ஈரமில்லா ஆடை கையில் குடை பெய்மழையே பெய் நாளும்பெய்தாலும் நீ பேய்மழை இல்லை pichinikkaduelango@yahoo.com

நகைச்சுவை

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 3 – இரட்டைக்குழல் துப்பாக்கி

சாய் (என்கிற) பேப்பர்பாய் - டேக் 3 - இரட்டைக்குழல் துப்பாக்கி ஈ.வெ.ரா. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்த போது காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரைக்கு முறுக்கான வாலிபப் பருவம். பெரியாரின் கடவுள்…

புதிய காற்று

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா 2006 ந்தேதி டிசம்பர் 31ந்தேதி கொண்டாட்டங்களின் போதைகள் முடிந்து, நண்பர்களுடன் சிரிப்பும் கேலியும் கூத்துமாய் நேரம் நள்ளிரவு தாண்டியும் 2007 1ந்தேதியன்று ஆனந்தக் கொண்டாட்டங்கள் போய்க் கொண்டிருந்தன. குளிர் காற்று வேறு…