திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20061123_Issue

அரசியலும் சமூகமும்

பொன்னாடையும் பெண்களும்

புதியமாதவிஅண்மையில் எங்கள் மும்பையில் கொஞ்சம் ஓவர் டோசாகவே நிறைய விழாக்கள், மேடைகள், பேச்சுகள், கூட்டங்கள். சந்தோசமாகத்தானிருக்கிறது மக்களின் ஆர்வக்கோளாறுகளைப் பார்க்கும்போதெல்லாம். அவர்களுடன் சேர்ந்து நிற்கும்போது நமக்கும் அந்த ஆர்வக்கோளாறு பிடித்துக்கொள்ளத்தான் செய்கிறது. பல ஆயிரங்கள்…

எனது பார்வையில் அண்ணா

மலர் மன்னன்(நவம்பர் 14, 2006 அன்று தஞ்சாவூரில் அண்ணா மன்றத்தினரின் சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாக் கூட்டத்தில் சிறப்புரையாக நிகழ்த்தப்பட்ட பேச்சின் சுருக்கம்) (தஞ்சை வழக்கறிஞர் வி எஸ் ராமலிங்கம் ,…

ஒரு ஆண்டி கம்யூனிஸ்டும் இது வேறு செப்டெம்பர் பதினொன்றும்

அகப்பை சித்தர் (முதலில் ஒரு அறிமுகம் - தன்னிலை விளக்கம் தேவைப் படுகிறது. இது வேறு செப்டம்பர் _ 11 என்பது குறிஞ்சி பதிப்பகம் வெளியிட்டுள்ள பாப்லோ நெரூதா நூற்றாண்டு நினைவு கூரல் நூலாகும்…

எல்லாத் திட்டங்களும் என் கல்லாவை நோக்கி!

நரேந்திரன் அமெரிக்காவின் Forbes Magazine (www.forbes.com) பற்றி நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அறியாதவர்களுக்கான அறிமுகம் யாதெனில், அப்பத்திரிகை மிகப் பெரும் அமெரிக்கச் செல்வந்தர்களில் ஒருவரான ஸ்டீவ் •போர்ப்ஸ் (Steve Forbes) என்பவரால் நடத்தப்பட்டு வருகிற, உலகெங்கிலும்…

அறிவிப்புகள்

இனவாதப் பேயை மிதிக்கும் இந்துமதம், இந்திய தேசியம்; துதிக்கும் துரோகக் கும்பல்கள்

ஜடாயு ருவாண்டாவின் ரத்த அழிவின் பின்புலத்தில் "ஆரிய" வாதம் என்ற அருமையான, கருத்தாழம் மிக்க கட்டுரையை திரு. அருணகிரி திண்ணை (நவ .17) இதழில் எழுதியிருக்கிறார். இந்தியச் சூழலில் இனவாதம் பற்றிய சில எண்ணங்களை…

திருக்குரானில் மனுதர்மமா…

சூபிமுகமது வகாபியின் மதிப்புக்குரிய பன்றியார் புகழ்வார்த்தை, திருக்குரான் பன்றியை அவமதிப்பதற்கு ஈடுசெய்வதாக குறிப்பிடுகிறார். மனுதர்மம் பிராமண ,சத்திரிய,வைசிய,சூத்திர பஞ்சம பிரிவினயையும் கொடுந்தீண்டாமையையும் பிறப்பின் அடிப்படையில் நிறுவுகிறது.திருக்குரான் இந்த மனுதர்ம கொடுஞ்கோன்மையை வணங்கும் தெய்வத்தின் அடிப்படையில்…

இலக்கிய கட்டுரைகள்

கடித இலக்கியம் – 33

வே.சபாநாயகம் திருப்பத்துர்.வ.ஆ. 26 - 7 - 85 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். எனது நேற்றைய கடிதத்துக்குத் தாங்கள் பதில் எழுது முன்பாகவே அடுத்த கடிதத்தை எழுதுகிறேன். இந்திய முற்போக்கு எழுத்தாளர் தேசீயச்…

இரு வழிப் பாதை: முத்துலிங்கத்தின் வெளி

மு இராமனாதன் அ.முத்துலிங்கம் 'உயிர்மை' அக்டோபர் இதழில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். பொதுவாகவே முத்துலிங்கம் எழுதும் சிறுகதைகள் குறைவு. அதிலும் சமீப காலமாக சில சுவாரஸ்யமான பத்திகள் எழுதுகிறார். இதனால் கதைகள் இன்னும் குறைந்திருக்கலாம்.…

வல்லிக்கண்ணன் நினைவாக

வெங்கட் சாமிநாதன் வல்லிக்கண்ணன் மறைந்து விட்டார். எந்த இழப்பும் மன வேதனை தருவது தான். நம்மைச் சோகத்தில் ஆழ்த்துவது தான். எந்த இழப்புக்கும் நாம் தயாரில்லை. மனித மனத்தின் இயல்பு அது. 85-86 வருடங்கள்…

அன்பைத் தேடி

தேவமைந்தன் திருமணத்துக்கு உடைகளெடுக்கக் கிளம்பியவர்களுடன் நானும் புறப்பட்டேன். ஊரிலேயே பழமை வாய்ந்த பட்டுத் துணிக்கடையில் துணிவாங்கிவிட்டு அதன் எதிரில் உள்ள இந்தியன் உணவகத்தில் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு அவரவர் வீடு திரும்புவது எங்கள் ஊர்ப் பழக்கம்.…

புதிய மாதவியின் “நிழல்களைத் தேடி!!!”

றஞ்சி (சுவிஸ்) பெண்விடுதலை பற்றிய விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் இன்று மேலோங்கியுள்ளது. இது பெண்களின் வரலாற்று மூலங்களை நோக்கிய ஒரு தேடல், துக்கம், சந்தோசம்; கோபம், காதல் என உணர்வுகள் கவிதையின் மூலம் மொழியியல்…

இடிபாடுகளுக்குள்ளே தொலைந்த இந்திய ஞானம்

எஸ். காமராஜ் பதின்னான்கு ஹெக்டேர் நிலப்பரப்பில் புல்வெளிகள், மலர்ச்செடிகள் வளர்க்ககப்பட்ட நடைபாதையோரங்கள், ஆங்காங்கே ஒன்றிரண்டு சுற்றுலாப்பயணிகள் பேருந்துப்பயணத்தில் கண்ணில்படுகிற பழங்காலகட்டிடங்கள் எல்லாம் மொத்தமாக ஒரே இடத்தில் குவித்து வைத்தது போலக் கேட்பாரற்றுக்கிடக்கிறது நாலந்தா. கருப்பும்…

கவிதை அணியில் ஒரு புதிய ‘அணி’

வே.சபாநாயகம் மும்பையிலிருந்து புதியமாதவிதான் இதுவரை தமிழரின் படைப்புத் திறனை வெளிப்படுத்திக்கொண்டிருநார். இப்போது அன்பாதவனும் அவரது நண்பர் மதியழகன் சுப்பையாவும் அணி சேர்ந்து 'அணி' என்றொரு இரு மாத கவிதை இதழைத் தொடங்கி மே '06…

கதைகள்

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 12

நாகரத்தினம் கிருஷ்ணாமறுநாள்காலை பொடிநடையாக சிறிதுதூரம் நடந்துவிட்டு வரலாமென அப்பாவை அழைத்துக்கொண்டு புறப்பட்டேன், வழியில் ஒன்றுக்கும் உதவாத விஷயங்களை சந்தோஷத்துடன் பகிர்ந்துகொண்டோம். எங்கள் ஜாகைக்குத் திரும்புகையில், ஊசியிலைத் தோப்புவழியாகப் போகலாமே என்றேன், அவரும் சம்மதித்தார். அப்போது…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:5) – சீஸர் பட்டாபிசேக தினத்தின் காலை

சி. ஜெயபாரதன், கனடாமகத்தானது, மர்ம மானது மரணம்! புகட்டலாம் அதனை இரண்டு விதத்தினில்! என்றோ ஒருநாள் சாவது உறுதி! எப்படிச் சாவு வரும் நமக்கு? எப்போது சாவு வரும் நமக்கு? என்பதி லில்லை உறுதி!…

மடியில் நெருப்பு – 13

ஜோதிர்லதா கிரிஜா 13. அப்பா முதலில் பேசட்டும் என்பது போல் ராஜாதிராஜன் ஒரு புன்னகை மட்டும் காட்டிவிட்டு ஒன்றும் பேசாமலே இருந்தான். மறுமுனையில், தண்டபாணி, "அது உன்னோட சொந்தக் கவலை. அதுக்கும் எனக்கும் என்னப்பா…

திசை அணங்கு

திலகபாமா,சிவகாசி இதோ புதை மணலுக்குள்ளிருந்து எடுக்கப் பட்ட அந்த சிலை நாயக்கர் மகாலின் நடுக் கூடத்திற்கு அலங்காரமாய் இன்றி வீற்றிருக்கிறது. .கண்டெடுக்கப் பட்ட சிலை கனவுகள் எல்லாம் தொலைத்து வெற்று சிற்பமாய் இன்று சிரிப்பை…

வட்டங்கள் சதுரங்கள்

எஸ். ஷங்கரநாராயணன் வீட்டைக் கானல் சதுரம் என்கிறாள் கிருஷாங்கினி. சதுரங்களின் உள்ளிறுக்கம் அவளைத் திகைப்படைய வைத்திருக்க வேண்டும். கனவுகளை ஆர்வத்தோடு, சதுரங்களுக்கு வெளியே தாயக்கட்டைகளைப் போல வீசி உருட்டி விளையாடும் மனிதன் அதற்கேற்ற பலன்களை…

கலைகள்

கவிதைகள்

கலைஞன் ! காதலன் ! கணவன் !

சி. ஜெயபாரதன், கனடா.உடலை மெழுகாக்கி உன்னை ஓவியமாய் உருவாக்கிச் சிற்பமாய்ச் செதுக்கி, ஒப்பனை செய்து உலகுக்குக் காட்டுபவன், கற்பனைக் கலைஞன் ! உள்ளத்தின் மேல் படையெடுத்து, வெள்ளைப் புறாவைத் தூதுவிட்டு, இதயக் கோட்டையை ஈசலாய்ச்…

நடைபாதை செருப்பு

புதியமாதவி------------------ ஜனக்கடலில் எவரும் கண்டு கொள்ளவில்லை அந்த ஒற்றைச் செருப்பை. வாலறுந்து பின் பக்கம் தேய்ந்து நடைபாதையில் அனாதையாக. கடந்து செல்லும் ஒவ்வொரு கால்களையும் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு காத்திருக்கிறது நம்பிக்கையுடன். கால்களை இழந்தவன் எப்படியும்…

கீதாஞ்சலி (100) – காற்றில் அணையும் விளக்கு!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா துடுப்பைக் கைவிட்ட பின் நீ எடுத்தோட்டும் தருணம் தொடங்கி யதாய்த் தோன்றும் எனக்கு! முடிய வேண்டிய பணிகள் யாவும் உடனே நிறைவேறும்! எதிர்த்துப் போராடுவது வீணே! தோல்வியை மௌனமாய்…

எங்கும் அழகே!

கரு. திருவரசு எடுப்பு விரிந்தே நெடும்வானம் வாவென்குதே விரைந்தோடி ஒன்றாக நான் கூடுவேன் கண்ணிகள் மண்ணிலே போகாதே என்றாடும் பூக்கள் விண்ணிலே கண்காட்டி வாவென்னும் மீன்கள் இங்குமழகே - அங்குமழகே எங்குநான் சென்வேனடா வெண்ணிலா…

இப்படியுமா

சாமிசுரேஸ் முள்ளந்தண்டினைக் கீறி நரம்பைக் கவ்விக்கொண்டு முன்னேறுகிறது குளிர்த்திரவம் காற்றை எனக்குப்பிடிக்கும் அது பிரசவிக்கும் சுக நெடி பிடிக்கும் ஏனோ அன்றது அழுது சிவந்தது தலைச்சன் குருவியின் வெறிப்பிதற்றலில் வெளிறிப்போனது கூடு மேகவரிகளுக்குள் களங்கம்…

தெய்வம்

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) ஆதியில் தெய்வம் மரங்களாயிருந்தது உயிர் இருந்தது பாதியில் தெய்வம் கற்களாய் மாறியது உயிர் இழந்தது pichinikkaduelango@yahoo.com

பெரியபுராணம் – 113 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் 3224. “திருமழபாடி வருவதற்கு நினைக்க மறந்தாயோ !” என இறைவர் தமது அழகிய கோலம் காட்டி அருளினார் இது குறித்து உணர்ந்ததும் துயில் கலைந்து எழுந்தார் சோலை நிழல் சூழ்ந்த கரையை உடைய…

“தமிழுக்கும் தமிழென்று பேர்.”

ருத்ரா (இ.பரமசிவன்) (1) இது என்ன வேடிக்கையான தலைப்பு! வேடிக்கையான தலைப்பு மட்டும் அல்ல வேதனையான தலைப்பும் கூட. நம் தமிழே நமக்கு அந்நியமாகிப்போன அவலங்களை அந்த கவியரசன் பாரதிதாசன் இன்று இருந்தால் மனம்…

நகைச்சுவை

கொக்கரக்கோ கொக்கரக்கோ

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா சேவல் கொக்கரக்கோ என்று கூவ, விஜய் "கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ" என்று பாடி நடனமாட காலைப் பொழுது இனிதே விடிந்தது. காலை என்பது சிலருக்கு பகல் 11 மணியாக இருக்கலாம். அல்லது…