திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050203_Issue

அரசியலும் சமூகமும்

டச்சு கலை உலகை மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதம்

ஆசாரகீனன் முஸ்லிம் பெண்களின் மீதான மத ரீதியான வன்முறைக்கு எதிராக எடுக்கப்பட்ட சப்மிஷன் குறும்படம் பற்றியும், பின்னர் அதன் இயக்குனர் தியோ வான் கோ இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டது பற்றியும் திண்ணையில் எழுதியிருந்தேன்.…

பிப்ரவரி 3, 2005 – இந்த வாரம் (ஏசி , காண்டலீசா ரைஸ், ஆயில்)

குண்டலகேசி சூர்யா அவர்கள் தன் அடுத்த படத்திற்கு ஏசி என்று இரண்டு தமிழ் எழுத்துகளை தலைப்பாக வைத்திருக்கிறார் என்று குமுதம் சொல்லுகிறது. அவருக்கு நம் வாழ்த்துக்கள். கமலஹாசனுக்கு இந்த தைரியம் வராது என்றே நினைக்கிறேன்.…

தமிழ்ச்சிறுமியும் நியூஸ்லாந்தும் , நாடுகடத்தலும் -பாலியல் வல்லுறவும் தமிழ்ச்சமுதாயமும். ‘நொந்துகொள்வதும்,புரிந்துகொள்வதும்.

ப.வி.ஸ்ரீரங்கன் Hier fremd geblieben dort fremd geworden Vielleicht sollten wir ein land suchen einen Staat gruenden fuer alle die irgenwo irgenwie Fremde sind. -Hans-Herbert Dreiske,…

உலகப் பயங்கரவாதப் பூச்சாண்டியும் வர்க்கப்போரும்–மூன்றாவது உலகப்போராய் நடைபெறும் மூலதனக்காப்பு யுத்தம்.

ப.வி.ஸ்ரீரங்கன் 'Ein Tropfen ist uns einen Tropfen Blut wert ' : எமக்கு ஒரு துளி எண்ணையோ ஒரு துளி குருதிக்குச் சமனமாகும் Clemenceau அமெரிக்காவில் இருந்து ,1918 இல்பிரஞ்சுப் பிரதமர்…

சென்ற வாரங்களில் (பெப்ரவரி 3, 2005) கோவா, பிகார், ஈராக், நேபாள், ஈரான், சீனா, தமிழ்நாடு

சின்னக்கருப்பன் ** கடந்த 50 வருடங்களில் மிக அதிகமான கட்சித்தாவல்களையும் எதிர்கட்சி ஆட்சிகளை சட்டப்பூர்வமின்றி கவர்னர் மூலம் கலைப்பதையும் ஒரு கலையாக பயின்று வந்த காங்கிரஸ், இன்று கோவா அரசை கவிழ்த்து பிரதாப் சிங்…

தமிழா….தமிழா!

கண்ணன் பழனிச்சாமி தமிழைக் காப்பாற்றவும், வளர்க்கவும் 'தமிழ்க்குடி தாங்கிகள் ' ராமதாசும், திருமாவளவனும் அறிவிக்கின்ற யோசனைகளும், மிரட்டலுடன் கூறும் ஆலோசனைகளும் நமக்கெல்லாம் சில சமயங்களில் நகைச்சுவையாகவும், சில சமயங்களில் வேதனையாகவும் இருக்கிறது. திரைப் படங்களுக்கு…

கண்ணன் காலடியில்

சின்னக்கருப்பன் சென்னையிலிருந்து திருச்சி போகும் ரயிலில் என் நண்பருடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். நீண்ட பிரயாணம் நீண்ட பேச்சு. வழக்கம்போல, திராவிட இயக்கம், தமிழ்நாடு, தமிழ், காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி இன்ன பிற…

இந்தியாவில் இயற்கை அழிவா ? யாருக்கெல்லாம் அதில் மகிழ்ச்சி!

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் சுநாமியில் ஜாதி-மத-கட்சி வேறுபாடுகளை மறந்து மனிதத்துவ உணர்வொன்றே மேலோங்க பாடுபட்ட பாடுபடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் தலை தாழ்ந்த வணக்கங்களை கூறித் தொடங்குகிறேன். இக்கட்டுரையில் நான் பகிரவிருக்கும் தகவல்கள் கசப்பானவை. ஆனால்…

வின்சன்ட் வான்கோவின் இரத்தம்

யமுனா ராஜேந்திரன் 1. வர்ணங்கள் கரைந்து மயங்கும், ஒட்டிய கன்னத்துடனான ஓவியன் வின்சன்ட் வான்கோவின் சுயசித்திரத்தை நமக்குள் ஞுாபகமூட்டிக் கொள்ள பொறுத்தமான முகம், கிர்க் டக்ளசின் கன்னம் ஒட்டிய ஒடுங்கிய முகம். புகழ் வாய்ந்த…

அறிவிப்புகள்

தமிள் வால்க

வரதன் தமிழால் ஒன்றுபடுவதாகச் சாகசகம் காட்டும் ராமதாஸ் தமிழகத்தில் ஜாதிய உணர்வால் அரசியல் பண்ணும் முதன்மையானவர். அடுத்தவரோ, இன்னொரு ஜாதிய உணர்வை தூபம் போட்டு வளர்ப்பவர். நேற்றுவரை பாண்டிச்சேரியில் முதலில் வன்னிய ஆட்சி பின்…

கடிதம் பிப்ரவரி 3,2005

ஜெயமோகன் அன்புள்ள ஆசிரியருக்கு ரெ.கார்த்திகேசு அவர்களின் கடிதத்துக்கு நன்றி. மகிழ்ச்சி. ஏதோ ஒரு காலத்தில் இலக்கியத்தில் இன்று முக்கிய பங்காற்றிவரும் தகவல் தொடர்பு, சமூக நோக்கம் இரண்டும் இல்லாமலாகிவிடுமா என்ற வினாவே அக்கதையின் அடிப்படை.…

கடிதம் பிப்ரவரி 3,2005

ஜோதிர்லதா கிரிஜா அன்புமிக்க ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். என் கடிதங்களையும் கட்டுரைகளையும் கவனத்துடன் படிப்பவர்கள் ‘பிராமண ஜாதியினருக்கு மட்டுமான ஒரு மடமாகத்தான் சங்கர மடம் நீடிக்க வேண்டும் என்று ஜோதிர்லதா கிரிஜா விரும்புகிறாரா ?’…

கடிதம் பிப்ரவரி 3,2005

அருளடியான் அன்புள்ள ஆசிரியருக்கு, தமிழ் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் நிறுவிய 'பசுமைத் தாயகம் ' அமைப்பின் இணையத் தளம் ஆங்கிலத்தில் இருக்கிறது. அதற்கு தமிழ் பதிப்பு இல்லை. அதன் செய்தித்…

கடிதம் – பிப்ரவரி 03, 2005 – திருமாவின் தனித் தன்மை

மயிலாடுதுறை சிவா சென்ற வாரம் திண்ணை இதழில் திரு வரதன் அவர்கள் திருமாவை தாக்கி எழதி இருந்தார்கள். அதனை மறுத்து எழுதுவதும், திருமா தரப்பு நியாயத்தை எனக்கு தெரிந்தவரை எழதுவது 'தமிழ் பாதுகாப்பு இயக்கத்திற்கு…

கடிதம் பிப்ரவரி 3,2005

ராதா திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, கடந்த வாரத்திண்ணையில் ரெ.கார்த்திகேசுவின் கடிதம் வெளியாகி இருக்கிறது. http://www.thinnai.com/le0127051.html அவர், திண்ணை வாசகர்கள் கவனத்திற்கு வலைப்பதிவொன்றில் http://dystocia.blogspot.com/2005/01/blog-post_17.html முன் வைக்கப்பட்டுள்ள கருத்துக்களை கொண்டுவர விரும்புகிறேன்.அறிவியல் புனைகதை என்ற தலைப்பில்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

உலகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி (Supercontinent Splitting & Drift to Smaller Continents)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா நாமிருக்கும் கண்டங்கள், பூமி என்னும் நர்த்தகத் தடாகத்தில் ஆமைபோல் நகர்ந்து செல்லும், தாமரை இலைகள்! சுளைகள் அடுக்காய்ச் சுற்றிய எலுமிச்சங் கனி! துகிலுரிக்க முடியா தோலுடுத்திய…

கழிவு நீர் பாசனம் ! நல்லா சாப்பிடுங்க சார் !

கிருஷ்ணகுமார் கழிவு நீர் உலகின் பத்தில் ஒரு பங்கு பயிர்களின் பாசனமாகிறது. தக்காளி, முட்டைகோஸ், மாங்கனிகள், தேங்காய் முதலிய பல்வேறு வேளாண்மைப் பொருட்களுக்குப் பயன்படுத்தும் பாசன நீர் எதுவென்று தெரியுமா ? கழிவு நீர்.…

இலக்கிய கட்டுரைகள்

கசப்புகளைக் கரைக்கும் குழந்தைமை -கடற்கரய் கவிதைகள் அறிமுகம்

பாவண்ணன் அன்றாடச் சுமைகளின் அலுப்புகளையும் கசப்புகளையும் முன்வைக்கும் கவிதைகள் தமிழில் ஏராளமாக உள்ளன. அவற்றை ஒதுக்கி சுமையற்றும் கற்பனையும் களிப்பும் மிகுந்ததாகவும் மனத்தை வசப்படுத்திக்கொள்ளும் வழியொன்றைக் கண்டடைகிற கவிதைகளை இத்தொகுதியில் பகிர்ந்துகொள்கிறார் கடற்கரய். அதனாலேயே…

‘காதல் ‘ :::: யதார்த்தத்தை நோக்கிய தமிழ்சினிமா பயண மைல்கல்

கோவிந்த் சில படங்கள் ஒரு குறிப்பிட்ட தள பரிமாணத்தில் தமிழ்சினிமாவை யதார்த்த சினிமா இலக்கணம் கொண்டு ஒரளவிற்குப் படைக்கப்படுகிறது. சமீபகாலத்தில் வந்த 'அழகி ' அதற்கு ஒரு சான்று. அதே சமயம் அழகியின் பாதிப்பில்…

சித்திரங்களின் தளமும் கவிதைத்தளமும்(தமிழ்மணவாளன் கவிதைத்தொகுதி அறிமுகம்)

பாவண்ணன் அன்றாட வாழ்வில் பார்க்கவும் கேட்கவும் வாய்ப்புள்ள பல சம்பவங்களையும் அவற்றை உள்வாங்கி மாற்றிமாற்றிக் கலைத்து அடுக்கும் சூழலில் தற்செயலாக மனம் கண்டடைகிற அபூர்வமான எழுச்சியையும் பிரதானமான வகையில் எழுதிப் பார்த்தவையாக உள்ளன தமிழ்மணவாளினின்…

எழுத்தின் மீது ஒடுக்குமுறை

மாலதி தமிழ் நுகர் சூழலின் மறைமுகத் தணிக்கையில் மிகப் பெரியதொரு அரசியலும் வணிக நோக்கமும் நிலவுகின்றன.ஒரே சமயத்தில் இரட்டைநிலை முன்னெடுக்கப் படுகிறது.பெரும் பிரம்மாண்ட ஊடகங்களில் மலினமும் சமிக்ஞைகளும் விரவிய பாலியமும் நுண்பதிவுகளில் அதிகாரம் இழையோடும்…

கதைகள்

துணை – பகுதி 3

ம.ந.ராமசாமி ---- மறுநாள் பிற்பகல் மூன்றுமணி அளவில் பஸ்ஸர் ஒலித்தது. மதிய உணவுக்குப் பிறகு சிறிது லேசாகக் கண்களை மூடி இமைகளின் தழுவலின் சுகத்தை அனுபவித்துக் கொண்டு பகல் கனவுகளுடன் உறக்கத்தில் மிதப்பது என்…

விழிப்பு

மாதங்கி சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் வந்திறங்கும் தளத்தில் உள்ள வெயிட்டிங் லவுஞ்சில் அமர்ந்திருந்தவாறே மேலே இருந்த தட்டைத் திரை தொலைகாட்சிப்பெட்டியில் சென்னையிலிருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம் காலை ஏழரைக்கு குறித்த…

அறிவியல் கதை! – ‘ஆத்மாவின் புத்துயிர்ப்பு! ‘

வ.ந.கிரிதரன் - கி.பி.3025இல் ஒருநாள். - பொழுது மெல்லப் புலர்ந்தது சேவல்களினது பறவைகளினதோ ஒலிகளேதுமில்லாமலே. - கி.பி. 2800 அளவிலேயே இந்த நீலவண்ணக் கோளிலிருந்து உயிரினங்கள் அனைத்தும் ,ஆறறிவு போட்ட குதியாட்டத்தில், மனிதனைத் தவிர…

கவிதைகள்

எப்படிக் கொல்லுவது ( மூலம் – கெய்த் டக்ளஸ் )

தமிழாக்கம் : நாகூர் ரூமி எறியப்பட்ட பந்தின் நீள்வட்டத்தின் கீழே பெரியவனாகிக் கொண்டிருக்கிறது ஒரு குழந்தை. வெகு நேரம் வானம் பார்த்துக்கொண்டிருந்தேன் நான். பந்து விழுந்தது என் கையில், அது பாடியது மூடிய என்…

உறவு

பவளமணி பிரகாசம் காமமில்லா காதலுண்டோ உப்பில்லா உணவுண்டோ தாம்பத்தியத்தில் பத்தியமா பகை அங்கே சாத்தியமா கைக்குழந்தை கணவனே என்றுமே முந்தானை பிடித்த முதல் குழந்தை மனைவியின் செல்லக் குழந்தை தன் முதல் குழந்தைக்குப் பின்…

கவிக்கட்டு …. 47

சத்தி சக்திதாசன் உருவம் உண்மை சொல்லுமா ? உள்ளதைச் சொல்லிவிடு உருவம் உண்மை சொல்லுமா ? இதயத்தின் நிறத்தை இயம்பிடுமா உந்தன் வதனம் இல்லாத இரக்கத்தை இருக்கு என்றே காட்டிடுமோ ? இயல்பான தோற்றமே…

பேரழிவுச் சூலாயுதம்!

சி. ஜெயபாரதன் யாமறிந்த பேரழிவுப் பூத ஆயுதங்களில் பூமிதனில் சுனாமிபோல் காணவில்லை! பனிரெண்டு நாடுகளில் மாந்தரை குத்தூசி போல் ஊடுறுவி இழுத்து வந்ததை இன்றுவரைப் பார்த்ததில்லை! நாமெல்லாம் பாமரராய், அறியாத பாலர்களாய் அப்பாவிகளாய் பாதுகாப்பின்றி…

பெரியபுராணம் – 29

கண்ணப்ப நாயனார் புராணம் தொடர்ச்சி -- பா. சத்தியமோகன் 761. போவார்! மீண்டும் வருவார்! இறைவரைத் தழுவுவார் ! மீண்டும் போவார்! காதலுடன் நோக்கி நிற்பார்! கன்றை விட்டுப் பிரிகின்ற தனிமையுடைய பசுவைப் போல…

அற்றைப் பொழுதுக்கும் அப்பால்

இரா. றஜீன்குமார் நித்திலம் கொழித்த கடல்தானிது! நித்திலம் கொழித்த கடல்தானிது ஊழியாடி.... கடல் கரைமேவாதென்ற மனிதச் செருக்கின் கழுத்தறுத்துப் போனது. புனல் கொண்ட மனிதரும் தரைதட்டிய மீன்களுமாய் ஒழுங்கமைவைப் புரட்டிப்போட்டது. உலகம் முழுவதும் மனித…

சுநாமி ஊழியம்

மண்ணாந்தை என் சகோதரனே என் சகோதரியே இவர்கள் தாம் செய்வது என்னவென்று அறிவார்கள் இவர்கள் அளிக்கும் அரிசிக்கு நம் ஆத்மாவை அறுவடையாகக் கேட்பார்கள் நம் முன்னோர்களை சபிக்கச் சொல்வார்கள் நித்திய நரகத்தின் நெருப்பினைக் காட்டி…

மனைவியின் சிநேகிதர்

அன்பாதவன் இளமை ததும்ப செந்நிறமாய் சிரித்தபடி உரையாடும் இவரே என் மனைவியின் சிநேகிதர். அறுபட்ட பால்யத்தின் தீடார் ஒட்டலாய் புதிய வரவு. யாருமில்லாத போது வருபவர் போவதெப்பதோதென எவருக்கும் தெரியாது. குழந்தைகளுக்கென வாங்கிவரும் திண்பண்டங்கள்…

குருவிகள்

செல்வநாயகி. **** தென்னைமட்டைப் பந்தலின் சின்ன ஓட்டைகள் வழியே வெளிச்ச வடாம் பிழிந்துகொண்டிருக்கும் வாசலில் முன்மதியவெயில் தூக்கம் கெடுக்கின்றன இரைச்சல்போட்டு என்று ஊன்றும் கைத்தடியை தூணில் அடிக்கும் பெரியபாட்டியை சொட்டும் மதிக்காது கசமுசவெனப் பேசிக்கொண்டிருக்கும்…

கணவனின் தோழியர்

புதியமாதவி (1) கதம்ப மாலையாய் உன் தோள்களில் உன் தோழியரின் புன்னகை. கதம்ப மாலைகள் கசங்காமலேயே அணைக்க நினைக்கிறது என் தோள்கள். கதம்பங்களுடன் கலந்துவிட்ட காற்றடித்து உதிர்ந்துபோகிறது என் இரவுகள். (2) பெண்ணுரிமைப் பேசும்…