- உலகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி (Supercontinent Splitting & Drift to Smaller Continents)
- கழிவு நீர் பாசனம் ! நல்லா சாப்பிடுங்க சார் !
- துணை – பகுதி 3
- விழிப்பு
- அறிவியல் கதை! – ‘ஆத்மாவின் புத்துயிர்ப்பு! ‘
- டச்சு கலை உலகை மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதம்
- பிப்ரவரி 3, 2005 – இந்த வாரம் (ஏசி , காண்டலீசா ரைஸ், ஆயில்)
- தமிழ்ச்சிறுமியும் நியூஸ்லாந்தும் , நாடுகடத்தலும் -பாலியல் வல்லுறவும் தமிழ்ச்சமுதாயமும். ‘நொந்துகொள்வதும்,புரிந்துகொள்வதும்.
- உலகப் பயங்கரவாதப் பூச்சாண்டியும் வர்க்கப்போரும்–மூன்றாவது உலகப்போராய் நடைபெறும் மூலதனக்காப்பு யுத்தம்.
- சென்ற வாரங்களில் (பெப்ரவரி 3, 2005) கோவா, பிகார், ஈராக், நேபாள், ஈரான், சீனா, தமிழ்நாடு
- தமிழா….தமிழா!
- கண்ணன் காலடியில்
- இந்தியாவில் இயற்கை அழிவா ? யாருக்கெல்லாம் அதில் மகிழ்ச்சி!
- வின்சன்ட் வான்கோவின் இரத்தம்
- எப்படிக் கொல்லுவது ( மூலம் – கெய்த் டக்ளஸ் )
- உறவு
- கவிக்கட்டு …. 47
- பேரழிவுச் சூலாயுதம்!
- பெரியபுராணம் – 29
- அற்றைப் பொழுதுக்கும் அப்பால்
- சுநாமி ஊழியம்
- மனைவியின் சிநேகிதர்
- குருவிகள்
- கணவனின் தோழியர்
- தொப்புள் கொடி!
- கவிதை
- உனது மொழியை பு ாியாத பாவி நான்
- சாலையோர நடைபாதை
- ஒவ்வாமை
- கசப்புகளைக் கரைக்கும் குழந்தைமை -கடற்கரய் கவிதைகள் அறிமுகம்
- ‘காதல் ‘ :::: யதார்த்தத்தை நோக்கிய தமிழ்சினிமா பயண மைல்கல்
- சித்திரங்களின் தளமும் கவிதைத்தளமும்(தமிழ்மணவாளன் கவிதைத்தொகுதி அறிமுகம்)
- எழுத்தின் மீது ஒடுக்குமுறை
- தமிள் வால்க
- கடிதம் பிப்ரவரி 3,2005
- கடிதம் பிப்ரவரி 3,2005
- கடிதம் பிப்ரவரி 3,2005
- கடிதம் – பிப்ரவரி 03, 2005 – திருமாவின் தனித் தன்மை
- கடிதம் பிப்ரவரி 3,2005
மண்ணாந்தை

என் சகோதரனே
என் சகோதரியே
இவர்கள் தாம் செய்வது என்னவென்று அறிவார்கள்
இவர்கள் அளிக்கும் அரிசிக்கு
நம் ஆத்மாவை அறுவடையாகக் கேட்பார்கள்
நம் முன்னோர்களை சபிக்கச் சொல்வார்கள்
நித்திய நரகத்தின் நெருப்பினைக் காட்டி
நம்மை நம் மேல் வெறுப்பு
கொள்ள செய்வார்கள்
இரத்தத்தின் ஜெயத்தின்
அன்பினைப் பகிர்கிறார்களாம்
நம்பிக்கையின் இருளதிகாரத்தால்
உலகப்பேரரசு கேட்கும் வானகத்தந்தையின் முன்
நாம் ஏற்றும் நாலணா சூடத்தையும்
நம் உள்ளன்பையும் தவிர
வேறேதும் கேட்காத
நம் கல் தெய்வங்கள்
வலிமையற்றவை என எக்காளம் கொட்டுவார்கள்
இது நாம் நோகும் தினம்
அவர்களின் அறுவடை நேரம்
நாம் இழந்த நம் குடும்பத்தினரின்
உடல்களை தேடி அழுகிறோம்
அவர்கள்
அறுவடை செய்யக் கிடைக்கும் ஆத்மாக்களின்
கணக்கால் தமக்கு கிடைக்கப்போகும்
எத்தனையோ கோடி முப்பது வெள்ளிகாசுகளில்
மனப் பேருவகை கொள்கிறார்கள்
என் சகோதரியே
என் சகோதரனே
அவர்கள் கூறுவதும் உண்மைதானே
அவர்கள் வானகத்தந்தை வலு உடையவர்தான்
அவர் நிலநடுக்கங்களின் கடவுள்
தலைப்பிள்ளைகளை கொன்று தம் வலிமையை காட்டும் கடவுள்
அவர் தண்டனைகளின் கடவுள்
பழிக்குப்பழி அவருடையதே (Revenge is mine)
ரத்தத்தால் உன் பாவம் போக்குவார்
அந்த ஒப்பந்தத்தை நீ ஏற்காவிட்டால்
நித்திய நரகத்தில் தள்ளுவார்
எத்தனை அன்பு அதுவே அவர்
நீ என்ன பாவம் செய்தாலும் செய்வதானாலும் அவரை ஏற்றால் போதும்
அவரை ஏற்றால்
அவரது பெயரால்
நாடு நாடாக நீ கொள்ளை அடிக்கலாம்
கண்டம் கண்டமாக நீ வேற்றின மக்களை கருவறுக்கலாம்
அடிமைகளாக சிறை பிடிக்கலாம்
வீடு வீடாக ஏறி குடும்பங்களைப் பிளக்கலாம்
பொய் இன வேறுபாடுகளால்
சமுதாயங்களைச் சிதைக்கலாம்.
சேனைகளின் கர்த்தரின்
சேனைகள் நடக்கும் பாதையெங்கும்
அகதிகள் முகாம்களை உருவாக்கலாம்
அழிவில் அழுவோரின் ஆத்மாக்களை அறுத்தெடுத்து
உன் பெயரில்
மறுமை சுவர்க்கத்தில்
இப்போதே அதி உல்லாச அறையை
முன்பதிவு செய்யலாம்.
நீ என்ன பாவம் செய்தாலும் செய்வதானாலும் அவரை ஏற்றால் போதும்
இதெல்லாம் அதோ அங்கே நிற்கும்
அந்த கல்லாலான
பெண் பிம்பத்திற்கு முடியாது
‘தாழக்கிடப்போரை தரிப்பதே தர்மமென ‘க்
கொண்ட தாய் அவளுக்கு
பூசாரியேயானாலும் தர்மம் பிறழ்ந்தால்
தண்டிக்கும் தாய் அவள்
தர்மத்தை தாண்டும் வலிமை அவளுக்கும் இல்லை.
செந்தமிழால் வைதாலும் வாழ வைப்பாள்
நல்லவரை.
நம்பிக்கை பார்க்க முடியாது அவளால்
நல்ல உள்ளத்தையே பார்க்க முடியும்
‘வெறும் தாய் தெய்வம் ‘
இவ்விதத்தில் வானகத் தந்தைக்கும்
ஏக இறைவனுக்குமான ஆற்றல்
அவளுக்கு இல்லைதான்.
ஆனால்
உன் அழுகைக்கு இரங்கி
இக்கல்லில் அவள் இறங்கி வருவாள்
ஏன் பிடித்து வைத்த மாட்டுச்சாணியில் கூட
பிரபஞ்சப் பரம்பொருள்
இந்த மண்ணில்
இறங்கி வர முடியும்
ஆனால் அது மட்டும் முடியாது
அப்படி ஓர் அருள் ஊனம்
வானக தந்தைக்கு.
எனவே
அவர்
நிலநடுக்கத்தையும் பேரலை அழிவுகளையும்
அனுப்பி
பின்னர்
கிடைக்கும் ஆத்மாக்களை பணத்தால் அறுவடை செய்ய
‘ஊழி ‘யர்களையும் அனுப்புவார்
அவர்களையும் அவர்கள்
வானகத்தந்தையையும்
மன்னித்துவிடு
என் சகோதரி
மன்னித்துவிடு
என் சகோதரா.
இந்த மண் மிதித்த புண்ணியம்
மறு பிறவியிலாவது அவர்கள்
மாரியம்மன் கோவிலில்
கூழ் ஊத்தும்
பாக்கியம் அடையட்டுமென
வேண்டுவோம் நம் கடல் அம்மனிடம்.
**
மண்ணாந்தை