திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040226_Issue

அரசியலும் சமூகமும்

பணம். பதவி. மற்றும் முதுகு சொறிதல்.

நரேந்திரன் 'The Buying of the President 2004 ' என்பது தற்போது அமெரிக்காவில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் ஒரு புத்தகம். ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று ஏறக்குறைய ஐம்பத்து மூன்று பேர்…

அன்பிற்குரிய வைகோ அவர்களுக்கு

நாக.இளங்கோவன் அன்பிற்குரிய வைகோ அவர்களுக்கு, உங்களின் பொதுக்குழுவில் நீங்கள் வரும் பாராளு மன்றத் தேர்தலில் நிற்கப் போவது இல்லை என்று முடிவெடுத்து திரு.இரவிச்சந்திரனை சிவகாசியில் நிற்க வைத்திருப்பதற்குப் பாராட்டுகள். இம்மாதிரியான தலைவர்களைத் தமிழர்கள் நேசிப்பது…

பயங்கரவாதியை உருவாக்குவது எது ? – பகுதி 2

ஜேம்ஸ் வில்ஸன் (தமிழில்: ஆசாரகீனன்) பயங்கரவாதச் செயல்களுக்கு ஆள் சேர்ப்பதில் மையமானது, எந்தக் குழு ஆள் சேர்ப்பு நடத்துகிறது என்பதே. அபு நிதால் அமைப்பைச் சேர்ந்த ஒமார் ரெஜாக் என்ற பயங்கரவாதி ஒரு விமானத்தைக்…

சில நேரங்களில் சில மனிதர்கள்

K.ரவி ஸ்ரீநிவாஸ் ஆரிப் முகமது கான் பாரதிய ஜனதாகக் கட்சியில் சேருகிறார், ரால்ப் நாடெர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.இம்முடிவுகள் சரியா, இல்லை, இவர்கள் எதிர்பாராத மோசமான விளைவுகளை ஏற்படுத்துமா ?…

அறம்: பொருள்: இன்பம்: வீடு

சோதிப் பிரகாசம் அறம், பொருள், இன்பம், வீடு, என்று வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்து இருந்தார்களாம் தமிழர்கள்---தமிழ்ப் புலவர்கள் கூறுகிறார்கள். இதைக் கேட்டவுடன் நாம் மகிழ்ந்து போகிறோம்; நமது பழம் பெருமைகளை எண்ணி வியந்தும்…

வாரபலன் – பிப் 26,2004-ஹரே ராமா ஹரே டெக்னாலஜி – சித்திர நாவல் – காய்ந்த நீர் காணாமல் போன மணல் – காலைக்கடன் கடவுள் கட்டளை

மத்தளராயன் வார இறுதியில் பெங்களூர் வந்த மனைவி என்னைப் பார்க்கத் தான் வந்திருக்கிறாள் என்று ஆவலோடு ஸ்டேஷனுக்குப் போய் வரவேற்று அழைத்து வந்தால், ஹரே கிருஷ்ணா கோவிலைப் பார்க்கவாக்கும் வந்தேன் என்றாள். இண்டர்நேஷனல் சொசைட்டி…

அறிவிப்புகள்

“பக்தர்களான மார்க்சிய பெரியாரிஸ்டுகள்!”(தினமலர் ) பற்றி

க. அரிஅரவேலன் அன்புடையீர்;! 2004 பிப்ரவரி 8ஆம் நாளிட்ட தினமலர் இதழின் இது உங்கள் இடம் பகுதியில் “பக்தர்களான மார்க்சிய பெரியாரிஸ்டுகள்!” என்னும் தலைப்பில் பரங்கிப்பேட்டை தமிழ்நாடு சமத்துவ சமுதாய இயக்க மாநிலப் பொருளாளர்…

நூல் வெளியீட்டு விழா

தமிழினி பதிப்பகம் 28.02.2004 சனிக்கிழமை மாலை 6.00 மணி தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு, அண்ணாசாலை, சென்னை. வரவேற்புரை கி. அ. சச்சிதானந்தம் நிகழ்ச்சி தொகுப்பு உரை ரவி சுப்ரமணியன் தலைமை முனைவர். இ.…

கடிதம் பிப் 26,2004 – மகுடேசுவரனின் மடலும், ஒரு சில கருத்துகளும்

இந்துமதி சுப்பிரமணியன் கவிஞர் மகுடேசுவரனை அவரது படைப்புகள் மூலமாக நன்றாக அறிவேன். ஆனால் அறிமுமில்லை. மத்தளராயன் என்ற புனைப்பெயரில் எழுதும் இரா. முருகன் அவர்களை திண்ணைக்கு வந்த பிறகுதான் தெரியும். வாரபலன் என்ற பெயரில்…

கடிதம் பிப்ரவரி 26,2004 – பெண் நபி, இஸ்லாம் – (என்)வாதத்தின் கடைசி பகுதி.

பித்தன் மெளலாசா அவர்களுக்கு வணக்கம். 'பித்தனின் பெண்களில் ஏன் நபி இல்லை என்ற வாதத்திற்கு ' என்று நீங்கள் தொடங்கும்போதே நீங்கள் இந்த வாதத்தை முழுமையாக படிக்கவில்லை (செலக்டிவ் அம்னீஷியா! ?) என்று தெளிவாகிறது.…

கடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக ?சுரேஷ் அவர்களின் நண்பருக்கு

ஜெயமோகன் திண்ணையில் திரு சுரேஷ் அவர்கள் எழுதிய குறிப்பை ஒரு வாசகர் எனக்கு அனுப்பி என் எதிர்வினையை கோரியிருந்தார் . அதே வினாவை அவரை நோக்கி பலர் எழுப்பியிருந்ததாகவும் சொல்லியிருந்தார் . உண்மையில் தமிழில்…

கடிதம் – பிப்ரவரி 26,2004

சூர்யா ஆசிரியருக்கு, மத்தளராயனுக்கு அவரதுகட்டுரைகளை யாருமே படிக்கவில்லை என்ற மனக்குறை இப்போது நீங்கியிருக்குமென எண்ணுகின்றேன். ஆகவே அரவிந்தனும் மகுடேஸ்வரனும் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் மகுடேஸ்வரன் எழுதிய அவரது கவிதைகளைவிட நீளமான விவரணை ஏன் எதற்கு எப்படி…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஹாலிஃபாக்ஸ் நகரைத் தாக்கிய ஹர்ரிகேன் சூறாவளி ஜுனா (செப்.2003)

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காற்றென வந்தது, கூற்று மிங்கே!....இந்தக் காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!.... காற்றடித் ததிலே, மரங்கள் கணக்கிடத் தகுமோ ? நாற்றினைப் போலே சிதறி, நாடெங்கும்…

இலக்கிய கட்டுரைகள்

கவிதைக் கோட்பாடு பற்றி…

தமிழவன் என் நண்பர் திரு.பிரம்மராஜன் உலகத் தமிழ் மின்இதழில் தமிழவனின் கவிதைக் கோட்பாட்டில் முன் தீர்மானம் இருக்கிறது என்று கூறியிருப்பது குறித்து என் சில சிந்தனைகளை முன் வைக்கலாம் என்று கருதுகிறேன். அவர் சமீபத்தில்…

சரித்திரத்தின் சிலுவைகள்: “சிலுவைராஜ் சரித்திரம்”

காஞ்சனா தாமோதரன் '...ஒனக்கும் எனக்கும் எப்பிடிடா ஆகாமப் போச்சு ?...இதுக்கு மின்னாடி ஒன்னிய நாம் பார்த்ததே இல்லியே. பெறகெதுக்குடா என்னிய சாதிப் பேர் கேட்டு இன்ஸல்ட் பண்ணனும் ? நீ வெறும் எஸ்.எஸ்.எல்.சி. இல்லாட்டி…

வீீடு

மாலதி ---- மர நிழல்,வேலியோரத்துப்பூ,ஆற்றங்கரை இப்படி எதுவுமே அறியாத 'நகர விளைச்சல் ' நான்.அதுவும் அழுக்கு நகரத்தின் ஆபாசப் புழுதி படிந்த பிரஜை. வீடு என்றால் விடுதலையாம். கை காலை நீட்டி ஆசுவாசம் பெறுவது…

உயிராசையும் தடுமாற்றமும்-ஐல்ஸ் ஐக்கிங்கரின் ‘ரகசியக் கடிதம் ‘

பாவண்ணன் முழுஆண்டுத் தேர்வுகள் முடிந்து விடுப்பில் காலைமுதல் மாலைவரை ஆட்டம் ஆட்டம் என்று பசியையும் தாகத்தையும் மறந்து ஆடிக்கொண்டிருந்த இளம்பருவத்தில் நடந்த நிகழ்ச்சியொன்று மனத்தில் பசுமையாகப் பதிந்திருக்கிறது. நானும் சில நண்பர்களும் ஏரிக்கரையில் விளையாடிக்கொண்டிருந்தோம்.…

தீராத வியப்பூட்டும் உலகம் – (எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் அறிமுகம்)

பாவண்ணன் ஒரு புத்தகத்துக்கும் ஒரு வாசகனுக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானது. வாக்கியங்களின் வழியாக ஒரு படைப்பு முதலில் ஏதோ ஒரு சித்திரத்தைத்தான் வாசகனுக்கு முன்னிலைப்படுத்துகிறது. அச்சித்திரத்தின் வசீகரம் முதலில் அவனை வியப்புக்குள் ஆழ்…

கதைகள்

விடியும்!- நாவல் – (37)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அதிகாலைச் சூரியனுக்குக் கண் கூசிய போதே அடுத்து வரப்போகிற காண்டாவனத்தின் காட்டம் தெரிந்தது. ஆறு மணிக்கே ஒரு அமுசடக்கமான புழுக்கம். தவணை முறையில் விட்டு விட்டு வந்தது காற்று. சூரியனுக்கும்…

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -13)

எஸ். ஷங்கரநாராயணன் /7/ உடல் அலுத்துத் துாங்கவும், காலை வெளிச்சம் கண்ணைக் குத்த எழுந்து கொள்வதும் வாடிக்கை என ஆகிவிட்டது. அம்பிகா இருந்த காலங்கள் விடியல்-சுகம் கண்ட காலங்கள். அதிகாலைப் பனிக்குளிர் அழகு. தனுஷ்கோடிக்கு…

நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் -8

நாகரத்தினம் கிருஷ்ணா மையடர்ந்த கண்ணினால் மயக்கிடும் மயக்கிலே மையிறந்து கொண்டு நீங்க ளல்லற் றிருப்பீர்காள் மெய்யடந்த சிந்தையால் விளங்கு ஞானமெய்தினால் உய்யடர்ந்து கொண்டுநீங்க ளூழிகாலம் வாழ்வீரே - சிவவாக்கியர் காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது. வழுதாவூர்ச்…

‘தொட்டு விடும் தூரம்… ‘

ஏலங்குழலி சந்தேகமேயில்லை. வாழ்க்கை மிக மிக சுவாரஸ்யமானது. 'எல்லோரும் அவ்வப்பொழுது சொல்வதுதானே ? ' என்கிறீர்களா ? அங்குதான் இருக்கிறது விஷயம். எல்லோரும் எப்போதாவது சொல்வார்கள்; நான் தினம் தினம் சொல்கிறேன். சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல்,…

மரம்

கவிநயா சுந்தர் வீட்டுக்கு இரண்டாவது வீட்டில் தான் அந்த மரம் இருந்தது. அந்த மரத்தை அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும். அமெரிக்காவில் உள்ள மரங்கள் எல்லாம் பொதுவாக நீண்டு, நெடிதுயர்ந்துதான் இருக்கும்; அகன்று, பரந்து, விரிந்து…

அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தேழு

இரா முருகன் ப்ிஷாரடி வைத்தியரும், சின்ன எம்ப்ராந்திரியும் சிநேகிதர்களும் அடைத்து வைத்த கதவுக்கு அப்புறம் வியர்த்து விறுவிறுத்து உட்கார்ந்திருக்க, தெருவில் சங்கரனின் ஜானுவாச ஊர்கோலம் கோலாகலமாக வந்து கொண்டிருக்கிறது. இது விரமிச்சாத்தான் நமக்குத் தொடங்கலாம்.…

கவிதைகள்

யாழன் ஆதி கவிதைகள்

யாழன் ஆதி ==== 0 பிரார்த்தனை நேரங்களில் தரிசிக்கிறேன் உன்னை. 0 உன் நினைவுகள் ஒவ்வொன்றும் பறவைகளாகி உயரப் பறக்கின்றன என்னிலிருந்து முற்றும் அற்றுப் போய்விடுமோ என் கூடென்று ஓடுடைத்து வெளி வருகின்றன இன்னும்…

இறைவன் எங்கே ?

அனந்த் 000 என்னை நானே தெரிந்துகொண்டு ... இறைவன் யாரென்(று) அறியு(ம்)முன்பே முன்னை நாள்நான் பிறந்ததுமே ... முதியோர் தாங்கள் படைத்தஒன்றைக் கன்னம் வைத்தென் உளம்புகுத்திக் ... 'கடவுள் இதுதான் ' என்றனரே; சின்னம்…

நாம் புதியவர்கள்

புதியமாதவி ==== நான் தென்றலாக வரவில்லை அதனாலெயே புயல் என்று யார்.. சொன்னது ? நான் கனவுகளாக வரவில்லை அதனாலேயே நிஜம் என்று யார்.. சொன்னது ? நான் காதலியாக வரவில்லை அதனாலேயே சகோதரி…

சுண்டெலி

கற்பகம் ---- வீடெங்கும் சுறுசுறுப்பாய் ஓடி விளையாடியது எலி. இந்த வீட்டில் இருப்பவர்கள்தான் தன் குடும்பத்தினர் என்றெண்ணியது எலி. தன் சுட்டித்தனங்கள் எல்லாம் ரசிக்கப்படுகின்றனவோ என சந்தோசப்பட்டது எலி. தனக்காக அங்கங்கே உணவு வைத்து…

ஒளவை பிறக்க வில்லையா ?

சி. ஜெயபாரதன், கனடா பாலின் நிறம் வெண்மை என்று சுண்ணாம்பின் சான்றிதழ் வேண்டுமா ? மீன் குஞ்சு நீந்து மென்று கொக்குவின் முத்திரை வேண்டுமா ? ரோகினி விண்மீன் என்றோர் எரி நட்சத்திரம் பறைசாற்ற…

பூரணம்

நட்சத்ரன் நாற்காலியில் எதிரெதிரே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம் உன் இதழ்வரிகளை நானும் என் இதழ்வரிகளை நீயுமாய்ப் படித்தபடி பின் உன் புருவ நேர்த்தியை நானும் என்னதை நீயுமாய் கண்களால் சிலாகித்திருக்கிறோம் எங்கெங்கோ போய்த்திரும்புகிறது நம் பேச்சு…

விந்தையென்ன கூறாயோ ?

சத்தி சக்திதாசன் புவியினிலோர் மானிடவாழ்வு அடைந்ததும் புரியாத மந்தையுள் கலந்ததும் - நானின்று தேவைகளைத் தேடி ஒடுவதும் ; நாளும் தாளாமல் வேதனையில் மூழ்குவதும் - என்னவொரு விந்தையென்று கூறாயோ ? கவியிலோர் காதல்…

என் கேள்வி..

கவியோகி வேதம் பார்க்கின்ற போதிலே தேனாகப் பேசியே, ....பணம்தன்னைக் கறக்கும் ஒருவன்; பாராத போதிலும் உள்நெஞ்சில் அன்பினைப் ....பாகெனச் சொரியும் ஒருவன்; நேரெதிர் துருவத்தில் நிற்கின்ற இவரைஎன் ....நெருக்கத்தில் கொணர்ந்த தென்னே ? ...நெடிதுயர்ந்த…

மாலைநேரத்தின் பிரவேசம்

சத்தி சத்திதாசன் மனதிலோர் மயக்கும் சங்கீதம் மிதக்கும் மெல்லிய உணர்வுகள் மணக்கும் மல்லிகை வாசம் - ஆம் மாலைநேரத்தின் பிரவேசம் அந்திவானத்திலே அழகுச் செந்நிறக்கீறல் அரவணைக்கும் அந்த அமைதியான தென்றல் - ஆம் மாலைநேரத்தின்…

நீயின்றி …

சேவியர் 0 ஒரு சுவாசத்துக்கும் மறு சுவாசத்துக்கும் இடைப்பட்ட பொழுதிலும் உனைச் சுவாசிக்க நினைக்கிறது மனசு. புதையல் தேடி அலைவோர் மத்தியில் புதையலோடு அலைவதாய்ப் படுகிறது நீ அருகில் இருக்கையில். உணர்வுகள் மெலியும் போது…

நகைச்சுவை

2004 ஆம் வருட ராசிபலன்

பண்டிட் திருவை சொதப்பப்பா சாஸ்திரிகள் மேஷம் வளம் தரும் ஆண்டு மற்றவர்களுக்காகவே வாழும் மேஷராசி அன்பர்களே, இவ்வாண்டில் எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் வருவதால், இதுவரை இந்திய அரசியல்வாதிகளின் ஊழலைக் கண்டு மனம் வெதும்பிக்கொண்டிருந்தது…

பட்டேல்கிரி

மாது நண்பர் (அதிகம் பழக்கம் இல்லாதவர்) அழைத்தனால் அவர் வீட்டிற்க்கு இரவு உணவு உண்ணச் செல்கிறீர்கள். வைன்/பீர்/மோர்/ஜூஸ் - குடிக்க ஏதாவது குடுத்து விட்டு கொறிக்க ஏதாவது தருகிறார். நீங்கள் ஒரு கனவான் போல்,…