This entry is in the series 20040226_Issue

காளிதாஸ்


அழவேண்டும் அழவேண்டும்
அழுகைக்குள் இருக்கிறது
படுக்கை

அதில்
கிடந்தால்தான்
கிடைக்கிறது உறக்கம்

அழுகைக்குள் அழுகையாய்
அழுகைக்குள் அழுகையாய்
அடுக்கடுக்காய் நானின்று
அழவேண்டும்

மன
அமைதியும் அதில்தானே
வரவேண்டும்

தழுவவோர் கரமில்லை
கேட்கவோர் செவியில்லை
அணைக்கவோர் முள்கூட
இல்லை இல்லை

எனக்குத்
துணையாகத் தூணாக
அழுகையே அழுகையே
நீ எப்போதும் வரவேண்டுமே

அழுகைதான்
என் கைகளில்
குடை

அதன்
அடியில்தான்
இளைப்பாறும்
வாழ்க்கை நடை

கண்களில்
நீர் முட்டி நின்றால்
நிம்மதி
நெஞ்சத்தின்
கதவுகளைத் தட்டும்

கண்ணீர் ஒரு சொட்டு
உதிர்க்கின்ற போதும்
அமைதி உள்ளுக்குள்
விதை நட்டுப் போகும்

எடுக்கின்ற போது
சுகம் இல்லை

கண்ணீர்
கொடுக்கின்ற போதுதான்
சுகம் சுகம் சுகம்

kaalidas@hotmail.com

Series Navigation