திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20061026_Issue

அரசியலும் சமூகமும்

இட ஒதுக்கீடு, அரசியல் சட்டம், நீதி மன்றங்கள்: ஒரு கேள்வி பதில்

K.ரவி ஸ்ரீநிவாஸ்1, கேள்வி: இட ஒதுக்கீடு குறித்த சட்டங்களை ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்ற யோசனை சரியா ? பதில் : சரியல்ல. இப்படி சேர்த்த சட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள்…

பண்டைத் தமிழர்களின் அணு அறிவு – கணிதம் என்பது அறிவியல் மொழி- தூரம்

புதுவை ஞானம் நாம் வெளி -கனபரிமானம் பற்றியும் காலம் பற்றியுமான பண்டைத் தமிழர்களின் புரிதல் பற்றி கடந்த கட்டுரைகளில் பேசினோம் அல்லவா? இனி அவர்தம் 'தூரம்' அல்லது 'நீட்டல் அளவை' பற்றி கிடைத்திருக்கும் சில…

நாலந்தாவின் மரணம் : வரலாற்றின் கண்ணீர்த்துளிகளிலிருந்து..

ஜடாயு “அல்லாஹோ அக்பர்” என்று கத்திக் கொண்டே வந்த சம்சுத்தீன் என்ற அந்தப் படைவீரனின் கூரிய வாள் பிரதம ஆச்சாரியர் சீலபத்திரரின் நெஞ்சில் இறங்கியது. தன்னைச் சுற்றியிருந்த ஸ்தூபங்களின் உச்சிகள் எல்லாம் ஒளிமழுங்கிப் பேரிருள்…

பேசும் செய்தி – 5 :: பாஸ்டன் பாலாஜி

பாஸ்டன் பாலாஜி 1. இட ஒதுக்கீட்டுக் கொள்கை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 31-ல் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்: 'ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் பெறுவோருக்கு இட ஒதுக்கீட்டுப் பயன் கிடைக்கக் கூடாது.’…

அறிவிப்புகள்

துண்டு துண்டாக்கப்பட்ட நான்கு பட்சிகளின் உடல்கள்

ஹெச்.ஜி.ரசூல் 1. தனது உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டத் தயங்கும் ஹாபி என்ற நபரே ஒரு புனைவு. ஹதீஸ் நெறிப்படிதான் சிறுநீர் கூட கழிக்கவேண்டும் என்று பேசும் இவர் மாறுவேடம் பூண்டு எழுதுவதற்கு…

பெண்கள் சந்திப்பு 2006

அறிவிப்புபெண்கள் சந்திப்பு 2006 புகலிடப் பெண்களின் சுதந்திரக் கருத்துப் பரிமாறலின் தளமாக விளங்கும் பெண்கள் சந்திப்பின் 25வது தொடர் நவம்பர் 4ம் திகதி ஸ்ருட்காட் ஜேர்மனியில் நடைபெறவுள்ளது. இச் சந்திப்பில் கலந்துகொள்ளும்படி உங்கள் அனைவரையும்…

இஸ்லாம் ஏற்றுக் கொள்ளும் புதுமைகள்!

இப்னு பஷீர் அக்டோபர் 19 தேதியிட்ட திண்ணையில் சூபிமுகமது என்பவர் 'வகாபிய பார்ப்பனீயத்தின் மூடநம்பிக்கை' என்ற தலைப்பில் 'பித்அத்' எனப்படும் இஸ்லாத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட செயல்பாடுகளைப் பற்றி சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். 'நபிகள் நாயகம்…

அலெக்ஸாண்டர் பாரத மண்ணில் தோல்வியை சந்தித்தான்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்திரு.ஜெயபாரதன் அவர்கள் என் மீது கொண்டிருக்கும் அன்பிற்கு நன்றி. வீர சாவர்க்கரின் பார்வையில் நான் உலக வரலாற்றினை காண்பதாக அவர் கூறியுள்ளமைக்கு நன்றி. 'பாரத விடுதலைப் போரில் பங்கெடுத்து மிக்க முரண்பாடும், பிரச்சனைக்குரிய'…

கருமையம் நிகழ்ச்சி – தொடரும் முஸ்லிம்களின் அவலங்கள்

அறிவிப்புகருமையம் நிகழ்ச்சி - தொடரும் முஸ்லிம்களின் அவலங்கள் பழிகொண்ட தாயகமே நவம்பர் 4 சனிக்கிழமை மாலை ஆறு மணி SCARBOROUGH CIVIC CENTER 150 BOROUGH DR SCARBOROUGH ON McCowanellesmere karumaiyam@gmail.com

இலக்கிய கட்டுரைகள்

மௌனத்தின் அலறல்

கே ஆர் மணிசொந்தங்களின் அழுக்கும், அழகும், முடிச்சும் - அவிழும், கரையுமிடங்களில் ஒன்று - பிரசவம். பிரசவம் பெரும்பாலும் மனைவியின் மறுபிறப்பாய் போய்விடுவதால் பிரசவத்தை சுற்றி நடக்கிற நிகழ்வுகள் அதிகம் பதியப்படாமலே போவதுண்டு. குழந்தை…

கணக்கதிகாரம் பேசும் சதுரங்க செய்திகள்

புதுவை ஞானம் எட்டெட் டரையினெல் லிரட்டித்த லக்கமதை இட்டமுள மானே இயம்பிடிற் - திட்டமுடன் இரண்டை அறுகால் பெருக்கும் இலக்கம் திரண்ட கலப்படுத்திச் செப்பு . 2*2=4 4*4=16 16*16=256 256*256=65536 65536*65536=429கோடியும்49 லட்சத்து67296(429,49,67296…

உயிர்ப்புள்ள மனமும் மறதிப் பெருவெளியும்

தேவமைந்தன் உயிர்ப்புள்ள மனம் என்பது விழிப்புற்ற மனம். இந்த விழிப்புற்ற மனத்தை ஆங்கிலத்தில் ‘the awakened mind’ என்கிறார்கள். அப்படியானால் மற்ற மனங்களெல்லாம் உறங்கிக் கொண்டிருக்கின்ற மனங்களா என்ன? அதனால்தான் ‘உயிர்ப்புள்ள மனம்’ என்பது…

தந்தைமை என்னும் உணர்வு – “அப்பா”- ஈரானியத் திரைப்பட அனுபவம்

பாவண்ணன் படம் முடிந்து அரங்கைவிட்டு வெளியேறும்போது தந்தைமை என்பதை எப்படி வரையறுப்பது என்கிற கேள்விதான் மனத்தில் முதலில் எழுந்தது. "சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே" என்பதும் "தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல்" என்பதும்…

கடித இலக்கியம் – 28

வே.சபாநாயகம்கடிதம் - 28 நாகராஜம்பட்டி 31-7-81 அன்புமிக்க சபா அவர்களுக்கு, இன்று என் பிறந்த நாள். இரவு தூக்கம் வரும் முன், எவ்வளவு நேரம் எழுத முடியுமோ அவ்வளவு நேரம் தங்களுக்கு ஒதுக்கியிருக்கிறேன். தங்கள்…

உலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம்?

எஸ் அரவிந்தன் நீலகண்டன் கடவுள் ஏன் மனிதனை படைத்தார் என்றால் அவருக்கு கதை கேட்க ரொம்பவும் ஆசை அதனால்தான் என்று ஒரு யூத வழக்கு உண்டு. மனித இனம் பரிணமித்தது முதல் அதன் ஒரு…

வைதீஸ்வரனின் கவிதைகள்

வெங்கட் சாமிநாதன் யார் என்னதான் சொல்லிக்கொண்டாலும், கூட்டம் கூட்டிப் பேசினாலும், பாராட்டுரைகளைச் சேகரித்துக்கொண்டாலும், தருமு சிவராமூ ஒரு முறை சொன்னது போல, "அவர்கள் சொல்வதெல்லாம் அபிப்ராயங்களே, நான் சொல்வது judgement" என்று தனக்குத் தானே…

வாணர்களும் விந்தியமலையும்

கோ. தில்லை கோவிந்தராஜன் தென்னிந்திய வரலாற்றில் பல்லவர், சோழர், சேர, பாண்டியர் இவர்களுக்கு அடுத்த நிலையில் போர்க்குடியாகவும், குறுநில மன்னர்களாகவும் ஆட்சி செய்த குடிகளில் மிகவும் முக்கியமான குடிகள் வாணர் எனவும் பாணர் எனவும்…

வெங்கலராசன் வரலாற்றை முன்னிறுத்தி ஓர் ஆய்வு

எஸ். இராமச்சந்திரன்ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் மட்டும் - சுருங்கிய அளவில் - நாட்டார் இலக்கியங்கள் என்று சொல்லத்தக்க வகையில் நிலவி வருபவை வட்டாரத் தரவுகள் எனப்படுகின்றன. வில்லுப்பாட்டு போன்ற நிகழ்த்து கலைப்பாடலில் இடம் பெறுகின்ற…

கதைகள்

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5, காட்சி:1) ரோமாபுரிக்கு கிளியோபாத்ரா விஜயம்

சி. ஜெயபாரதன், கனடாகிரேக்க வனிதை தெஸ்ஸா லியனை மிஞ்சிடும், கிளியோ பாத்ராவின் உடற் கவர்ச்சி! வானத்து நிலவையும் கவ்வி ஈர்த்திடும்! தேன்குரல் எவரையும் திகைக்க வைத்திடும்! பேசத் தொடங்கின் இரவு பகலைக் கைக்கொள்ளும்! வயது…

மடியில் நெருப்பு – 9

ஜோதிர்லதா கிரிஜா தான் அலுவலகத்தை விட்டு முன்னதாய்க் கிளம்பிச் சென்றுவிட்ட உண்மை அம்மாவுக்கு எப்படியோ தெதிந்துபோவிட்டது என்பது அவளது கறாரான கேள்வியிலிருந்து புரிய, சூர்யாவின் இதயம் அதன் விளைவான படபடப்புக்கு ஆளான அந்தச் சில…

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 8

நாகரத்தினம் கிருஷ்ணா இரண்டு நாட்கள் கடந்திருந்தன: வழக்கத்தைப்போல அறைக்குள்ளேயே சுற்றி சுற்றிவந்து களைந்திருந்தேன். 'எங்கள் வாழ்க்கை ஆன் தலையீட்டினால் குட்டிச்சுவராகபோகவிருக்கிறதென்கிற' நினைப்பிலிருந்து மீளமுடியாமல் தவித்தேன். சிரிலை(Cyril) மறுபடியும் பார்க்கவேண்டுமென்கிற எண்ணமில்லை, இருந்த சூழ்நிலையில் அவனைப்…

இரவில் கனவில் வானவில் – 8

எஸ். ஷங்கரநாராயணன் அண்ணாவின் காரிய நியமங்கள் நடந்தேறின ஒருபக்கம். ஜானகிதான் வரவேயில்லை. கனவுக் கொப்பளிப்பும் தாபமும் கண்ததும்பும் காதலுமான அந்த முகம் அவளால் மறக்க வொண்ணாதிருந்தது. முதல் காதல்தான் எத்தனை பவித்ரமானது. கனவில் கூட…

கலைகள்

இலை போட்டாச்சு !

ஜோதிர்லதா கிரிஜா இது ஒரு சமையல் புத்தகம் என்பதை " இலை போட்டாச்சு " என்னும் தலைப்பைப் பார்த்ததுமே புரிந்துகொண்டிருப்பீர்கள். இந்நாளில் யார் இலை போட்டுச்சாப்பிடுகிறார்கள் என்று உங்களுக்குத் தோன்றக்கூடும். ஆனால், வாழை இலையில்…

கவிதைகள்

தாஜ் கவிதைகள்

தாஜ் பிழை மோசமான கவிதையிது பிரசுரத்திற்கு உதவாது. அடித்தல் திருத்தலாய் கறுப்பு மை மொழுகலாய் எழுதும்போதே தெரிகிறது எல்லாம் காலத்தின் விரயம். கற்றுத் தந்த காலமே காற்றின் சுழிப்பில் அபகரித்து விடலாம். நானேகூட செய்யலாம்தான்…

பெரியபுராணம் — 109 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 3106. திருவடி மலர்கள் மீது பூத்த செவ்விய விளக்கின் சோதி போன்று பொருந்திய முத்துக்கோவைகளை உடைய மணிவளையைப் பொருத்தமாய்ச் சாத்தினர் விரிசுடர் ஒளியுடைய பரடுகளின் மீது விளங்கிய பொன்சரட்டில் கோத்த பெருகும் ஒளியுடைய…

சிந்தனையில் சிலநேரம்

சக்தி சக்திதாசன் சிந்தனையில் சிலநேரம் சிக்கி நானும் சிறைகொண்ட நினைவுகளை ..... வியாபாரம் வாழ்க்கையெனும் விசித்திர வர்க்கமொன்றில் விழுந்திட்ட வேளையிது வினாக்களுக்கு ...... விடை உண்டா ? எத்தனை பொழுதுகள் என்னென்ன கொள்கைகள் அத்தனையும்…

கீதாஞ்சலி (96) – எனது பிரிவுரை!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா இவ்வுலகை விட்டு நீங்கும் போது, நான் கூறப் போகும், பிரிவுரை இதுவாக இருக்கும்: பூமியில் நான் கண்டது உன்னத மானது! தாமரைப் பூவில் மறைந்துள்ள தேமதுவைச் சுவைத்தேன்! விரிந்து…

அவலம்

குரும்பையூர் பொன் சிவராசா சாராயம் குடித்து சத்தியெடுத்து தலை குப்பிற விழுந்த தம்பண்ணை தட்டுத் தடுமாறி எழும்ப முடியாமல் தவழ்ந்து போகையிலே கண்டார் குண்டடிபட்டு காலைத் தொலைத்துவிட்ட கண்ணன் பொய்க்கால் போடக் காசில்லாமல் கைகளினால்…

பதஞ்சலியின் சூத்திரங்கள் – 1

ருத்ரா (1) சமாதி பாதம் ----------------------- 1. அத: யோகாநு சாஸனம் ஒருமை அல்லது யோகம் என்றால் ஒருப்படுதல் எனும் உருப்படுதல் தான். 2. யோக: சித்த விருத்தி நிரோத: எண்ணங்கள் கிளை பெருக்குவது…

நேற்று ! இன்று ! நாளை !

சி. ஜெயபாரதன், கனடா சமாதிக்குள் புதைபட்ட சடலமாய், கரையானுக்கு இரையாய், மூச்சு நின்று போனது நேற்று ! சரித்திரம் மீண்டாலும், திரும்பி வராது நேற்று ! நம்மிடம் பிரியா விடை பெற்று நழுவிப் போனது…

நகைச்சுவை

காசும் கரியும் !

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா கரி என்று நான் சொல்வது நிலக்கரியாகும். நாம் போனால் ஒரு பிடி மண் என்பதைப் போன்று பட்டாசுக்களை வெடித்து முடித்தால், குப்பையும் ஒரு பிடிக் கரியும் மிச்சமாகும். தீபாவளி வந்து முடிந்தாலும்…