திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20031002_Issue

அரசியலும் சமூகமும்

குமரிஉலா 5

ஜெயமோகன் டிலனாய் [De Lennoy ] கட்டிய கோட்டைகளிலேயே குறிப்பிடத்தக்கது உதயகிரிக்கோட்டை. தன் வாழ்நாளில்பெரும்பகுதியை அவர் அங்கேதான் செலவிட்டிருக்கிறார். ஆகவே அவரது சமாதி அங்கே இருப்பது அனைத்துவகையிலும் சிறப்பானதே. நாங்கள் போகும் வழியில் வசந்தகுமாரின்…

நூல் வெளியீட்டுவிழா

தமிழினி பதிப்பகம் வெளியீடாக ஜெயமோகனின் எட்டு நூல்கள் ஒரேசமயம் வெளியிடப்படுகின்றன நூல் வெளியீட்டுவிழா தமிழினி பதிப்பகம் வெளியீடாக ஜெயமோகனின் எட்டு நூல்கள் ஒரேசமயம் வெளியிடப்படுகின்றன நாள் 6-- 10-- 03 இடம் ஃபிலிம் சேம்பர்ஸ்…

வாரபலன் – இந்த வாரம் (பி.ஏ) கிருஷ்ண ஜெயந்தி

மத்தளராயன் 'வணக்கம் சார் ' 'சொல்லுங்க. ' 'இலக்கியக் கூட்டம் வச்சிருக்கோம். ' 'யார் ' சொன்னேன். யார் பேசப் போகிறார்கள். என்றைக்கு. எந்த இடத்தில். எத்தனை மணிக்கு. தொடர்ந்து எல்லாம் சொல்லியானது. 'நீங்களும்…

கருத்தும். சுதந்திரமும்.

PS நரேந்திரன் NewYork Times-ஐ படிப்பவர்களூக்கு, Tom Friedman பற்றித் தெரியாமல் இருக்க முடியாது. Friedman-இன் அரசியல் கட்டுரைகள் உலகப் புகழ் வாய்ந்தவை. Foreign Affairs Columnist-ஆக அவர் எழுதும் அரசியல் கட்டுரைகள், குறிப்பாக…

குறிப்புகள் சில அக்டோபர் 2, 2003 ( கனாடா, மருந்துகள்,அறிவுசார் சொத்துரிமை-அமெரிக்க அரசும் ஒபன் சோர்ஸ் குறித்த சர்ச்சையும்- சமூக

K.ரவி ஸ்ரீநிவாஸ் கனாடாவில் உள்ள ஜெனரிக் மருந்து தயாரிப்பாளர்கள் ஆகஸ்டில் உலக வர்த்தக அமைப்பில் எற்பட்ட முடிவினை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உரிமங்கள் குறித்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு முடிவெடுத்துள்ளது.இந்த முடிவு…

முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]

விவேகன் 1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ] யோகத்தின் வரலாற்றுப் பின்னணி --------------------------------------------- யோகத்தின் வரலாற்றுப்பின்னணி என்ன என்று புரிந்துகொள்வது யோகத்தை புரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல யோகத்தை புரிவதற்கும் அவசியமானது . தற்காலத்தில் யோக…

கடிதங்கள்

அக்டோபர் 3, 2003 திண்ணைக்குழு குறிப்பு: இந்த வாரத் திண்ணை தாமதமாக வெளிவருகிறது. தவிர்க்கமுடியாத தொழில்நுட்பப்பிரச்னைகள் காரணமாக தாமதம் ஏற்பட்டதனை தெரிவித்துக்கொள்கிறோம். அக்டோபர் 3 வரை திண்ணைகுழு பெற்ற படைப்புக்களே இங்கு வெளியாகின்றன. வரும்…

கல்யாண வினாயகர் (கல்லூரிக் காலம்-2)

நம்பி. 'லூப் ' நாகரஜுடன் வெளியில் செல்வது ஓணானை எடுத்து காதுக்குள் விட்டுக்கொள்வது போலத்தான். பயல் எந்த நேரத்தில் என்ன செய்வான் என்பது அவனுக்கே தெரியாது. கொஞ்சம் இதயம் பலவீனமாக இருந்தால் ஆளைக் கூட…

தமிழ்ச் சினிமா – இன்னும் சில குறிப்புகள்

பரிமளம் (அதாவது, ‘தமிழ்ச்சினிமாவில் காரண காரியங்களைப் பார்க்கக் கூடாது என்று நினைப்பவர்கள் இந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டாம்’ என்னும் பழைய வேண்டுகோளை மீண்டும் நினைவூட்டுகிறேன்.) எம்.ஜி.ஆர் தோன்றி வெளிவந்துள்ள படங்கள் ஒரு ஐந்தாறு இருக்கும்.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சூரியனைச் சுற்றி வந்து தகவல் அனுப்பும் யுலிஸிஸ் விண்ணாய்வுச் சிமிழ் [Ulysses Spacecraft Exploring the Sun (1990-2007)]

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா 'பரிதிக்குப் பின்புறம் இருக்கும் மனித நடமாட்டமற்ற உலகுக்கு ஏகுவோம்! நாம் இன்னும் மூப்படைய வில்லை! புத்துலகைத் தேடி, புதிய அறிவைத் தேடி, பூரணச் செம்மை தேடிப்…

இலக்கிய கட்டுரைகள்

நியூயார்க்கில் இந்திய இலக்கியச் சந்திப்புகள்

காஞ்சனா தாமோதரன் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக அமெரிக்க பாரதீய வித்யா பவனும் இந்தியச் சாகித்ய அகாதெமியும் சேர்ந்து ஓர் இந்திய இலக்கியக் கருத்தரங்கை நியூயார்க்கில் ஏற்பாடு செய்திருந்தன. 'மரபும் நவீனத்துவமும் அப்பாலும்.…

பஸ்கால் கிஞ்ஞார் (Pascal Qignard)

நாகரத்தினம் கிருஷ்ணா 1948ல் பிறந்து இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை தந்திருக்கும் பஸ்கால் கிஞ்ஞார் (Pascal Qignard), பிரெஞ்சு இலக்கிய உலகில் அதிகமாகப் சீராட்டப்படும், இன்றைய எழுத்தாளர். சிக்கலையும் அதனை அவிழ்க்கும் உபாயத்தையும் ஒரு…

மனத்தில் படியும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 79)

பாவண்ணன் சில ஆண்டுகளுக்கு முன்னால், தற்செயலாக ஒருநாள் தொலைக்காட்சியில் திரைப்படப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பரமணியனுடைய நேர்காணலைக் காண நேர்ந்தது. 'முப்பது வருஷமா இந்தச் சினிமாத் துறையில இருக்கேன். எதிர்காலத்துல என்னப் பத்தி எங்கயாவது ஒரு பேச்சு…

அடையாளத் தழும்புகள் (சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன் – நாவல் அறிமுகம்)

பாவண்ணன் (சிலுவைராஜ் சரித்திரம்- ராஜ் கெளதமன், தமிழினி வெியீடு. 242, டி.டி.கே.சாலை, சென்னை-14, விலை. ரூ260) ஒரு மனிதனுடைய முதல் இருபத்தைந்து ஆண்டுக்கால வாழ்க்கை என்பது மிக முக்கியமான பகுதி. இந்த மண்மீது இருக்கிற…

தேவை இன்னும் கொஞ்சம் தாகம்

பா. சத்தியமோகன் குடிநீர் வறண்ட காலத்தில் இப்படி ஒரு தலைப்பா ? என யோசிக்க வேண்டாம். இது வேறு. இரண்டு நாள் முன்பு ஆரஞ்சு நிற அட்டை போட்ட மலையாளப் புத்தகம் (338 பக்கங்களில்)…

கதைகள்

கனடாவில் நாகம்மா

மணி வேலுப்பிள்ளை இடம்: கனடாவில் ஒரு நீதிமன்றம். காலம்: 1985 நவம்பர் 7, மு.ப. 10 மணி. (நீதிமன்றக் கூடத்தினுள் பதிவாளர், அரச வழக்குத் தொடுநர், அறிக்கையாளர், மொழிபெயர்ப்பாளர்கள், காவலர்கள், குற்றம் சாட்டப்பட்டவர், அவருடைய…

இன்னுமொரு உலகம்…….

சந்ர.ஆகாயி. லண்டனில் குளிர் கரைந்து வெயில் சற்று அதிகமாய் இருக்கிற ஒரு கோடை காலமது! அவசரமாய் வீடு மாற வேண்டிய சூழ்நிலை! உடனே மாறினால் வீடு சொந்தமாக வாங்குவதற்காக council தரவிருக்கும் ஒருசில ஆயிரம்…

ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 4 – சென்ற இதழ் தொடர்ச்சி

நாகரத்தினம் கிருஷ்ணா 1994ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ந்தேதி காலை மணி பத்து...... இன்றைய தேதியில் தமிழகக் கிராமங்களில் உள்ள உயிரினங்களை பிராணிகள், அப்பிரானிகளென இரண்டுவகையாகக் கொள்ளலாம். பிராணிகள்பாடு தேவலாம். கோடையில் பசியாறுவதற்குப் பதிலாக…

பயணம் – ஒரு மைக்ரோ கதை

கே ஆர் விஜய் (ஆங்கிலத்தில் - கெளரவ் சப்னிஸ்) வழக்கம்போல இந்தமுறையும் ஜன்னலருகே இடம்பிடித்ததில் ஆனந்தனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவனுக்கு சுற்றியுள்ள வயல்வெளிகள் வழக்கம் போல் பசுமையாக…

அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு

இரா முருகன் 26 அந்த வயசனைச் சாடிப் பறக்க விட்டு, நீங்களெல்லாரும் வீட்டில் சுகமாயிட்டு அவல் கேசரியும் இலையடையும் கழித்துக் கொண்டிருந்தீர்களா ? கருநாகப்பள்ளி சங்குண்ணி நாயர் குப்புசாமி அய்யனிடம் சிரித்தபடி கேட்டான். பகவதியைப்…

விடியும்! நாவல் – (16)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் கோட்டைச் சுவர் தெரியாமல் நீளத்துக்கு புதிதாக வளர்த்திருந்த சவுக்கு மரம் மணந்தது. கோட்டை வாசல் பிள்ளையாரடியில் ஏகே 47ன் மினுக்கம். சைக்கிள் ரோதைக்குள் கொழுவிய வேட்டித் தலைப்பை எடுத்து விட்டுக்…

வடிகால்

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர். இந்த எழுபத்திநான்கு வயதில் டான் டோக் செங் மருத்துவமனையில் வாசம் எனக்கு. நோய் என்ன,சொல்லிக் கொண்டா வரும்! ? எத்தனைக்கெத்தனை, ஒரு தலை வலி என்றும் மருந்து என்றும், அறியாமல்…

கவிதைகள்

வலை

பவளமணி பிரகாசம் வலை விரித்து மானை பிடிக்கலாம், வலை வீசி மீனை பிடிக்கலாம், வலை பின்னி சிலந்தி வசிக்கலாம், வலை துணியில் வடிகட்டலாம், வலை கட்டி ஊஞ்சலாடலாம், வலை தாண்டி பந்தடிக்கலாம், வலை திரையால்…

‘யார் ? ‘என்றா கேட்கின்றாய் ?

புதியமாதவி, மும்பை. உன் தோள்களின் மாலைகள் எனக்கிில்லை ஏனென்றால் நான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி இல்லை உன் பாடலின் ராகங்கள் நானில்லை ஏனேன்றால் நான் இருட்டில் கரைந்த மீரா இல்லை நான் உன் தாயில்லை தங்கையில்லை…

மாயமான்.

அருண்பிரசாத். துவங்கியது மாயமான் தேடல் அடர்ந்த காட்டில். பேரழகொளி பரப்பி சுவாலைக் கண்களுடன் இலக்குகள் தொடர்ந்து இடம்பெயர்கின்றன. தொடர் கிளைத் தாவல்களுடன் சிராய்ப்புகளின் சுகங்களுடன் வேட்டை தொடர்கிறது. குருதி தோய்ந்த கூர்மழுங்கிய அம்புகள் வழிநெடுகிலும்,…

இணையக் காவடிச் சிந்து

அனந்த் எங்களிணை யத்திற்கிலை ஈடு - அது எம்மனைய னோர்வதியும் வீடு - உளம் இன்புறஇ னித்திடும்தேன் கூடு வந்து கூடு(ம்) அன்பர் நாடும் - அனை வர்க்கும்பொது வென்றுளபண் பாடு (1) o0o…

மெளனம் பற்றி ஏறி

எஸ் ரமேஷ் அறைகிறது என்னை உன் வாதை இறுக்க அறைந்த முகங்களுக்கிடையே தவித்து அலையும் பட்டாம்பூச்சியை நானறிவேன்... நெருக்கிய கிராதிக் கம்பிகளூக்கிடையே சோகையாய் விரிந்த நாய்குடைப் புன்னகை கூடப்போதும் என் இருட்குகை முழுதும் சுடர்…

பட்டாபிஷேகம் நடக்கிறது…

கவியோகி வேதம் பட்டாபிஷேகம் நடக்கிறது!- இதோ!-கம்பன் ..பந்தியிலை போட்டாச்சு! பட்டாடைக் கவியுடுத்தும்-நண்பர்களே! ..பருகஒரு விருந்தாச்சு!-நீங்கள் ..பருக ஒரு விருந்தாச்சு! .. வால்மீகி சொத்துதந்தான்!-நம்கம்பன் ..வாரிசாக தனைவரித்தான்! கால்தொட்டு கும்பிட்டான்!-தனிவழி! ..கனஜோராய் விருந்துவைத்தான்!(பட்டாபி..) .. தசரதச்…

‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ – 4

இரா முருகன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மகன் தேடும் தந்தைக்குச் சான்றோர் அருளிச் செய்தது ----------------------------------------------------- சிற்றில் அழைப்புமணி ஒலித்துக் கேட்கிறாய் 'என் மகன் எங்கே ? ' தெரியலை எனினும் கேள். இறுகக் கட்டி…

வைரமுத்துக்களின் வானம்-4 (குமுதம் 29-9-03 இதழ்)

ருத்ரா காலத்தின் பிரம்மாண்டத்தைக்கண்டு மிரண்டு எழுதிய மின்னல் கவிதை இது. ஆனாலும் ஒரு பிரம்மாண்டத்தைக் கண்டு இன்னொரு பிரம்மாண்டம் மிரண்டு போவதா ? நீ காலத்தை சொல்கிறாய் நான் உன் கவிதையைச் சொல்கிறேன். உன்…

நகைச்சுவை