திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030619_Issue

அரசியலும் சமூகமும்

வாரபலன் (ஜூன் 14, 2003 – சேட்டன் , புலிநகக்கொன்றை)

மத்தளராயன் பாலக்காட்டுக்கும் ஆலப்புழைக்கும் போக வேண்டியவன் ஹைதராபாதுக்குத் திசை மாறிப் பறந்தது தனிக்கதை. இடவ மாச மழை ஆரம்பம், குடும்பத்து மூத்தவர்கள் ஊர் நீங்கியது, பிந்தியவர்கள் குடும்ப வரலாற்றில் என்னை விடக் குறைந்த ஞானம்…

மந்திரவாதி

காஞ்சனா தாமோதரன் '..........சந்தை மதிப்புள்ள சரக்குகளுடன் ஒரு லாரி ஞாயிறு இரவன்று கடத்தப்பட்டது. மறுநாள் காலையில் காலி லாரி கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் துப்புத் துலக்கி வருகின்றனர். கள்ளச் சந்தையில் சரக்கின் மதிப்பு பன்மடங்காய் உயரும்…

நாம் நாமாக…

கோமதி நடராஜன் [சின்ன விஷயமாகத்தான் இருக்கும் ஆனால் அது நம்மைப் படுத்தும் பாடு இருக்கிறதே,அது எழுதி முடியாது.ஆனாலும் எழுதியிருக்கிறேன் படியுங்களேன்] அப்பா எத்தனையோ சொல்லியிருக்கிறார்.எத்தனையோ திறமைகளைத் தன்னுள் வளர்த்திருக்கிறார்.ஆனால் யாரையும் அருகில் அழைத்து உட்கார…

பாகிஸ்தானிய ராணுவத்துடன் சமாதானப் பேச்சு என்ற கேலிக்கூத்து

சின்னக்கருப்பன் உலகமகா மடையர்கள் தான் பாகிஸ்தானுடன் சமாதானம் பேசுவார்கள். அப்படிப்பட்ட மடையர்கள் இன்று இந்திய அரசாங்கத்தின் அதிகாரப் பதவிகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு பழமொழி சொல்வார்கள். கேப்பையில நெய் ஒழுகுதுன்னா, கேக்கறவனுக்கு மதி எங்க போச்சி…

இந்திய ராணுவத்தை ஈராக்குக்கு அனுப்புவது தவறு

சின்னக்கருப்பன் அமெரிக்கா வற்புறுத்துகிறது. இந்தியா தாக்காட்டுகிறது. முடியாது என்று நிர்த்தாட்சண்யமாகச் சொல்லவும் இல்லை. செய்கிறேன் என்று உறுதி கூறவும் இல்லை. அமெரிக்காவின் வற்புறுத்தலால் இந்தியா ஈராக்குக்கு ராணுவத்துருப்புக்களை அனுப்பலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறது என்று…

ஆன்மீக உலகின் கலங்கரை விளக்கு (விவேகானந்தர்)

பாரதிராமன் சுவாமி விவேகானந்தரைக் கண்டெடுத்த தமிழ் நாட்டுக்கு கன்னியாகுமரியில் நினைவு மண்டபம் அமைந்ததைப் போல சென்னையில் அவர் தங்கியிருந்த 'ஐஸ்ஹவுஸ் ' என்று சமீப காலம் வரை அழைக்கப்பட்டுவந்த அழகான கட்டிடம் இன்று 'விவேகானந்தர்…

மதுரைக்கோயில் அரிசன ஆலயப் பிரவேசம், 1939

தொ. பரமசிவன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 1939 ஜூலை 10ஆம் தேதி அரிசன ஆலயப் பிரவேசம் நடைபெற்றது. மதுரை நகரத்தில் வாழ்ந்த காங்கிரஸ் பிரமுகர் வைத்தியநாதையர் இதனை முன்னின்று நடத்தி னார். தேசிய இயக்கத்தவரால்…

அருமையான பாதாளம்

அ.முத்துலிங்கம் இம்முறை அமெரிக்காவுக்கு சென்றபோது நான் பொஸ்டனில் ஒரு நூலகத்தை கண்டுபிடித்தேன். பிரம்மாண்டமான இரண்டடுக்கு கட்டடம். இதிலே ஒரு அறை பிரத்தியேகமான கவனத்துடன் செய்யப்பட்டிருந்தது. அகலமான தூண்கள், உயர்ந்த கூரை, மெலிந்த நீண்ட ஜன்னல்கள்.…

குறிப்புகள் சில-19 ஜீன் 2003 (அக்னி சிறகுகள்-சேவைத்துறை குறித்த பொது வணிக ஒப்பந்தம்-திரைப்படப் பிரதியும்,அதற்கு அப்பாலும்-மனிதம்

K.ரவி ஸ்ரீநிவாஸ் ஒரு லட்சம் பிரதிகள் விற்று அக்னி சிறகுகள் ஒரு சாதனை படைத்துள்ளது.ஒரு சாதனையாளரின் சுய சரிதம் என்பதையும் தாண்டிய முக்கியத்துவம் அதற்கு உள்ளது.ஒரு தலைமுறைக்கு எழுச்சியூட்டும் நூலாக அது விளங்குகிறது.குடியரசுத் தலைவர்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

எக்ஸ்-ரே பரிசோதனைகள் இருட்பொருள் (Dark Matter) பெரும்பாலும் குளிர்ந்து இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.

பிரபஞ்சத்தின் பெரும்பாலான பொருள் (Matter) நம் கண்கலால் பார்க்க முடியாதவை, நம்மால் இன்னும் புரிந்து கொள்ள முடியாதவை என்று சொன்னால் கொஞ்சம் வினோதமாகத்தான் இருக்கும். அதற்குள், இன்னும் ஒரு படி சென்று, இந்த 'இருட்பொருள்…

பழங்காலத்திய உயிர் ஒன்று செல் பரிணாம அறிவை கேள்விக்குள்ளாக்குகிறது

உயிரியலாளர்கள் இரண்டு வகையான செல்கள் இயற்கையில் இருக்கின்றன என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள். இவை அவற்றின் அளவைப் பொறுத்தும், இந்த செல்களின் உள்ளே இருக்கும் இதர அமைப்புகள் பொறுத்தும் அடிப்படையிலேயே மாறுபடுவதை வைத்து இப்படிப்பட்ட வகைப்பாட்டைச் செய்திருக்கிறார்கள்.…

ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து (Accident at Japan ‘s Tokaimura Nuclear Fuel Factory)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னுரை: 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி, ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் [Uranium Enrichment Factory] ஏற்பட்ட விபத்தில் தீவிரக்…

இலக்கிய கட்டுரைகள்

பழைய முடிவும் புதிய முடிவும் (ஆர்.சூடாமணியின் ‘ரயில் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 65 )

பாவண்ணன் ஹோஸ்பெட் என்னும் ஊரில் நான் வேலை செய்துகொண்டிருந்த போது பத்தாண்டுகளாவது என்னைவிட வயதில் மூத்த நண்பரொருவர் இருந்தார். விடுதிகளில் கிடைக்கிற உணவைச் சாப்பிட்டுக் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த சமயங்களில் எப்போதாவது விசேஷ நாள்களில் அவர்…

தமிழ்ப் படைப்புலகம்

சுந்தர ராமசாமி இக்கூட்டத்தின் தலைவரும் என் நண்பருமான பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய திருமதி ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களுக்கும், பிற நண்பர்களுக்கும் என் அன்பையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கருத்தரங்கை உருவாக்கிய நண்பர் பச்சைமால்…

சுஜாதா என்றொரு கதை சொல்லி

நாகரத்தினம் கிருஷ்ணா தமிழ்ப் படைப்புலகத்தில் பொதுவாக ஒரு நூலையோ அல்லது படைப்பாளியையோ விமர்சிப்பவர்களை இரு பிரிவினராகக் கொள்ளலாம். ஒன்று: விமர்சனம் என்ற பெயரில் சம்பந்தப்பட்ட நூலை அல்லது அந்நூலாசிரியரை பரஸ்பரம் பாராட்டிக் கொள்பவர்கள்- இங்கே…

கதைகள்

அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினொன்று

இரா முருகன் 11 ஒரு கையில் வெள்ளிக் கும்பாவும் மற்றதில் சீரகம் சேர்த்துக் காய்ச்சி ஆற வைத்த வென்னீர்ச் செம்புமாக உச்சி வெய்யில் இறங்கிக் கொண்டிருக்கும்போது சுப்பம்மா மாடிப்படி ஏறினாள். கதவைத் தட்ட வேண்டாம்.…

அல்லி-மல்லி அலசல் (பாகம் 1)

பவளமணி பிரகாசம் மல்லி:அல்லி, என்ன செஞ்சிகிட்டிருக்க ? அல்லி:பள்ளியிலேர்ந்து பசியோட வர்ற பிள்ளைங்களுக்கு குடுக்குறதுக்கு என்ன பலகாரம் செய்யலாம்னு யோசிச்சிட்டிருக்கேன், மல்லி. மல்லி:கடையிலேதான் விதம்விதமா விக்குதே ? அல்லி:வாய்க்கு ருசியா என்னென்னவோ விக்குதுதான். ஆனா,…

விடியும்! (நாவல் – 1)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் 1 மாரிகாலத்து மங்கிய பகல் போலவே இருந்தது இரவு. கோப்பிக்கு தடிப்பாக பால் கலந்த மாதிரி வெளுத்துக் கிடந்தது நிலம். பெளர்ணமி இரவில் வானமும் நிலமும் வேலையெல்லாம் முடித்த நிம்மதியில்…

இன்பராஜின் இதயம்

ஜோதிர்லதா கிரிஜா அந்த நள்ளிரவு நேரத்தில் அந்தப் பெரிய மருத்துவ மனை அமைதியாக இருந்தது. லொக் லொக்கென்று இறுமிக்கொண்டிருந்த நோயாளிகள், விபத்துக்கு ஆளானதால் வலி தாங்காமல் முனகிக்கொண்டிருந்தவர்கள் ஆகியோரின் ஓசைகள் தவிர வேறு எந்த…

நுடம்

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர். நேஹாவின் போக்கு எனக்குப் புரியவே வெகு நாட்கள் ஆயின. என் சொந்த மகளே எனக்குப் பல சமயங்களில் புரியாத புதிராய் தான் இருந்தாள். சமீபகாலமாய் சிறுமியின் போக்கில் அதிகமான தீவிரம்.…

கவிதைகள்

சில்மிஷங்கள்

ருத்ரா அந்த சன்னல் சதுரத்தில் சின்னக்குருவிகள். வேப்பங்கிளையில் இலைகளின் ரம்பவிளிம்புகள் தென்றலை ராவிக்கொண்டிருந்த போதும் எனக்குக் கேட்டதோ எஃப்.எம்மின் இசைத்துண்டுகள் எனும் அல்வாத்துண்டுகள். தலையணையின் 'கணவாய் ' இடுக்குகளில் கனவு மிச்சங்கள். புரண்டு புரண்டு…

முடிவுகளல்ல ஆரம்பங்கள்

திலகபாமா சிவகாசி முன்னேற்பாடுகள் ஏதுமின்றி மணலில் போட்டு வைத்த கட்டங்கள் தூக்கி எறிந்த செல்லாக்குகள் தீர்மானித்திருந்த கட்டங்களில் விழுந்திருந்தும் எல்லையைத் தொட அடித்த நொண்டிகளில் எகிறிப் போய் விழ மூடிய இமைகளோடு தேடிய செல்லாக்குகள்…

பா.ஸ்ரீராம் – நான்கு கவிதைகள்

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை. என் வாழ்க்கை நிலவோடு ஒப்பிட்டேன் நீதானே உயர்ந்தவள்... மலரோடு ஒப்பிட்டேன் நீதானே சிறந்தவள்... கனவோடு கலக்கின்ற கண்ணான கண்மணி மனதோடு சேர்ந்திடு மறவாது மின்மினி சொலவது காதலன் சொல்வது என் கடன்...…

தமிழைப் பாடு நீ!

கரு.திருவரசு, செந்தமிழின் சந்தநலம் சிந்துகின்ற துறையிது! சிந்துநடை முந்துமனச் சீர்வரிசைப் பொருளிது! அந்தரத்தில் அந்தரங்க ஆன்மசுகம் தருவது! சொந்தமென வந்தவர்க்குச் சுந்தரத்தேன் சொரிவது! வல்லினத்தின் வலிமையோடு நல்லியலைச் சொல்லியும் மெல்லினத்தின் மென்மையோடு மேடைநடிப் பாடியும்…

விழி தூர கவனம்

தமிழ்மணவாளன் விரிந்து கிடக்கும் பிரமாண்டத்தின் முன் குவிந்து கிடக்கும் ஜனத்திரள் வியப்பை விழுங்கியபடி வாழ்வின் மொத்த சந்தோஷத்தையும் வாரியெடுத்துச் சேர்க்கின்றன பாதங்களில் தொடர்ந்த பேரலைகள் நுரைத்துப் பொங்கி . அலைகள் மோதவும் அநேகமாய் பின்னகர்ந்த…

பணமே பரமாத்மாவே !

புகாரி, கனடா பணமே பரமாத்மாவே உன்னைப் படைத்த எங்களையே நீ படைக்கிறாயடா பூங்கொடி என்று உன் கைகளில் இரும்புச் சங்கிலியைக் கொடுத்து விட்டோம் அவை எங்களுக்கே விலங்குகளாகிவிட்டன உன்னில் தஞ்சமடைந்த அடிமை நாய்கள் குரைக்காத…

புக்ககம் போன புத்தகம்

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி ஒரு புத்தகந்தான் எததனை விதமாய் உதவுகிறது வரவேற்பறையில் பார்வைக்கு வைக்க கெளரவமாய் கையோடு கொண்டு செல்ல தூறலில் குழந்தை நனையாமல் தடுக்க பவுடர் பல்பொடி மடிக்க அடுப்பு பற்ற வைக்க அப்பப்போ…

ரகசிய அறை

செல்வி என் வீட்டிற்குவரும் ஒவ்வொருவராலும் எனது ரகசிய அறை தேடப்படுகிறது ரகசிய அறை கண்டுபிடிக்கப்பட்டதும் எனது ரகசியங்கள் தேடப்படுகின்றன. ரகசியங்கள் கிடைக்காதபோது கிடைத்தவைகளே ரகசியமாக்கப்படுகின்றன. sellurs@yahoo.com

தீபமடியோ தீபம் !

கற்பகம் சித்திரமாய்ச் சிரிக்கும் சிங்காரமாய் அசையும் தீபமடியோ தீபம் வண்ணத் தீபம் ! சந்தனப்பொற் சிமிழெடுத்து சர்க்கரையால் திரி நிறுத்தி செங்கதிரை உருக்கியூற்றி செங்குத்தாய் ஏறுமிந்த தீபமடியோ தீபம் தங்கத் தீபம் ! பொன்னிலவுக்குப்…

உதவும் உள்ளத்தின் குமுறல்

சத்தி சக்திதாசன் மழைத்துளியாகி நான் பலமாகப் பெய்தேன் விழுந்ததென்னவோ தரிசான நிலத்தில் தான் அரத்த சந்தனமாக வீசினேன் நறுமணத்தை , மணம் எனும் உணர்ச்சியற்றோர் கூட்டத்தின் முன்னே மெழுகுதிரியாக பரப்பினேன் ஒளி ஜயகோ! குருடர்கள்…

நகைச்சுவை

அருமையான உறவின் ரகசியம்

1) மிகவும் நன்றாக சமைக்கும், நன்றாக வீட்டை சுத்தம் செய்யும், உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்ளும் ஒரு பெண்ணை கண்டுபிடிப்பது முக்கியம் 2) உன்னை சிரிக்க வைக்கக்கூடிய பெண்ணை கண்டுபிடிப்பது முக்கியம் 3) உன்னை நம்பும்,…

மது அருந்தக் காரணங்கள்

இதுவரை நான் குடித்த பீர் அனைத்தையும் யோசித்தால் எனக்கு அவமானமாக இருக்கிறது. பிறகு கண்ணாடி டம்ளரைப் பார்க்கிறேன். பீர் கம்பெனியில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் யோசிக்கிறேன். இந்த பீரை நான்…