கற்பகம்
சித்திரமாய்ச் சிரிக்கும்
சிங்காரமாய் அசையும்
தீபமடியோ தீபம்
வண்ணத் தீபம் !
சந்தனப்பொற் சிமிழெடுத்து
சர்க்கரையால் திரி நிறுத்தி
செங்கதிரை உருக்கியூற்றி
செங்குத்தாய் ஏறுமிந்த
தீபமடியோ தீபம்
தங்கத் தீபம் !
பொன்னிலவுக்குப்
போட்டி விடுக்கும்
கும்மிருட்டையும்
ஓட்டித் துரத்தும்
மின்னல் விதைகள்
காட்டி மிளிரும்
வாழ்வு துலங்க
வெற்றியளிக்கும்
தீபமடியோ தீபம்
முத்துத் தீபம் !
அன்பு முழுதாய்
அள்ளிக் கொடுத்தால்
காற்றிலிருந்தே
காத்து அணைத்தால்
வீட்டு முற்றத்தில்
ஏற்றி வளர்த்தால்
நல்ல வரமளிக்கும்
தேவியடியோ தீபம்
வஞ்சித் தீபம் !
கவனிக்காமல்
கண்கள் மூடினால்
வஞ்சகத்தால் நெய்
வற்றிட வைத்தால்
புகைபிடிக்க கற்புத்
தீபத்தைக் கேட்டால்
கொளுத்திவிடும்
தீப்பந்தமடியோ தீபம்
கன்னித் தீபம் !
***
m_karpagam@hotmail.com
- மது அருந்தக் காரணங்கள்
- விழி தூர கவனம்
- பணமே பரமாத்மாவே !
- எக்ஸ்-ரே பரிசோதனைகள் இருட்பொருள் (Dark Matter) பெரும்பாலும் குளிர்ந்து இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.
- பழங்காலத்திய உயிர் ஒன்று செல் பரிணாம அறிவை கேள்விக்குள்ளாக்குகிறது
- ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து (Accident at Japan ‘s Tokaimura Nuclear Fuel Factory)
- பழைய முடிவும் புதிய முடிவும் (ஆர்.சூடாமணியின் ‘ரயில் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 65 )
- தமிழ்ப் படைப்புலகம்
- சுஜாதா என்றொரு கதை சொல்லி
- அருமையான உறவின் ரகசியம்
- தமிழைப் பாடு நீ!
- மந்திரவாதி
- நாம் நாமாக…
- பாகிஸ்தானிய ராணுவத்துடன் சமாதானப் பேச்சு என்ற கேலிக்கூத்து
- இந்திய ராணுவத்தை ஈராக்குக்கு அனுப்புவது தவறு
- ரகசிய அறை
- தீபமடியோ தீபம் !
- உதவும் உள்ளத்தின் குமுறல்
- ஆட்டத்தின் எல்லைகள்
- கடிதங்கள்
- அல்லி-மல்லி அலசல் (பாகம் 1)
- விடியும்! (நாவல் – 1)
- இன்பராஜின் இதயம்
- நுடம்
- வாரபலன் (ஜூன் 14, 2003 – சேட்டன் , புலிநகக்கொன்றை)
- ஆன்மீக உலகின் கலங்கரை விளக்கு (விவேகானந்தர்)
- மதுரைக்கோயில் அரிசன ஆலயப் பிரவேசம், 1939
- அருமையான பாதாளம்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினொன்று
- குறிப்புகள் சில-19 ஜீன் 2003 (அக்னி சிறகுகள்-சேவைத்துறை குறித்த பொது வணிக ஒப்பந்தம்-திரைப்படப் பிரதியும்,அதற்கு அப்பாலும்-மனிதம்
- படைப்பின் வன்முறை – எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களின் கூட்டறிக்கை
- புக்ககம் போன புத்தகம்
- வெண்ணிலவே சொல்லிடுவாய்!
- அலைக்கழிப்பு
- சில்மிஷங்கள்
- முடிவுகளல்ல ஆரம்பங்கள்
- பா.ஸ்ரீராம் – நான்கு கவிதைகள்