பா.தேவேந்திர பூபதி குடத்திற்குள் போட்ட ஒவ்வொரு கற்களாய் மனிதன் சாதனைகளை அடுக்க அடுக்க அடியில் கிடந்த குரோத எண்ணங்கள் மேலெழுந்தது சாதனைகளையும் மூடி மறைத்தபடி! கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் பிறக்காத தன்னலம்…
அருண்பிரசாத் இளமென்காற்றில் இருவேறு திசைகளில் நீந்துகின்றன அதீத நீலம் உட்கொண்ட இரு கண்ணீர் துளிகள். குவியக்கூர்மையுடன் ஒட்டியே உறைந்து நிற்கும் அவற்றின் அறியப்படா ஈரங்கள் ஒவ்வொரு பிரிவிலும், கூடலிலும் மென்மேலும் கூடும் நீலத்துடன். அருண்பிரசாத்…
பவளமணி பிரகாசம் சொம்புக்குள் கடல் சுருங்குமா ? கணத்துக்குள் யுகங்கள் அடங்குமா ? பிறவியின் போக்கு பிடிபடக்கூடுமா ? அலையும் ஆவி அமைதியைத் தேடுமா ? வாழ்வின் மெய்ப்பொருள் கண்டவருண்டா ? அது மணக்கின்ற…
சேவியர் அலாவுதீன் விளக்கு 0 என்னிடமிருக்கிறது ஒரு விளக்கு. அலாவுதீன் தவறவிட்டதாய் இருக்கலாம் அல்லது வேண்டுமென்றே விட்டெறிந்ததாய் இருக்கலாம். அது தானாகவே வந்து என் மனசைத் தேய்க்கிறது. வாசலுக்கு வெளியே போட்டால் கூட சிரித்துக்…
சீனிவாசன் ராமச்சந்திரன் தேடல் இருண்டு கிடக்கும் பனிப் பிரதேசங்கள், சருகுகள் சரசரக்கும் நெடுமரங்கள் இடை பாதை, புவியீர்ப்பு விசை பொய்த்துப் போகும் உயரங்கள், குளிர் போர்வையால் தழுவும் ஆழ்கடல் பிரதேசங்கள், வெய்யிலின் வெம்மையில் வாய்…
நெப்போலியன், சிங்கப்பூர் ஆசைக்கடல் அடங்காப்பிடாரி நினைவுக்காடு நிஜத்தின் வீடு சுயநலத்தேனீ சூழ்ச்சிக் கூனி ரகசியச் சுனை ராட்சசப் பூனை விளங்கா சூத்திரம் வீணாகும் மந்திரம் புத்த குணம் புரிந்தால் மனம் ---- kavingarnepolian@yahoo.com.sg
கற்பகம் ---- காலை வணக்கத்துடன் வரும் புன்சிரிப்பு உறுத்தாத பார்வை ஊடுருவாத உரையாடல் என உணர்வைத்தொடும் பழக்கங்களுக்குப் பழக்கப்பட்டிருந்தால் இக்கனமே இறக்கிவிடு இன்மனமே. நொடிக்கொருதரம் நகருகின்ற கடிகார முள் போலல்ல நொடிக்கொருதரம் நூறுமுறை நிறம்…
---மதுரபாரதி இது தெரிந்த பாடல்தான் இன்று ஏன் வேறாய்ப் புரிபட்டது ? நெடுநாளாய்த் தெரிந்ததாய் முடிவுகட்டிவிட்டதுதானே. எங்கிருந்து நுழைந்தது சிலிர்க்கவைக்கும் நவமான செம்பொருள்! வார்த்தைகளில், அவை நிற்கும் வரிசையில், கோர்த்த கட்டமைப்பில் கொஞ்சமும் மாற்றமில்லை.…
புகாரி ஓ பெண்ணே நீ போகாதே பின்னே நீ பின்னுக்குப்போனால் வாழ்க்கை மண்ணாகிப் போகும் உன் கண்ணுக்கு முன்னே O போராடு யாரையும் சாகடிக்க அல்ல உன்னையே நீ வாழ வைக்க உன்னோடு இந்த…
கவிநயா அன்புதான் காரணம்... அரிதான செடி இதென்று அருகினில் சென்றேன் தொடும் முன்னே துவண்டது அந்த தொட்டாற் சுருங்கி அழகான மலர் இதென்று அதிசயித்தேன் ஸ்பரிசிக்கையில் குத்தியது ரோஜாவின் முள் பஞ்சு போல் மென்மையென்று…