திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கடிதம் பிப்ரவரி 3,2005

This entry is in the series 20050203_Issue

ஜெயமோகன்


அன்புள்ள ஆசிரியருக்கு

ரெ.கார்த்திகேசு அவர்களின் கடிதத்துக்கு நன்றி. மகிழ்ச்சி.

ஏதோ ஒரு காலத்தில் இலக்கியத்தில் இன்று முக்கிய பங்காற்றிவரும் தகவல் தொடர்பு, சமூக நோக்கம் இரண்டும் இல்லாமலாகிவிடுமா என்ற வினாவே அக்கதையின் அடிப்படை. அப்படி ஆகும்போது இரண்டு வி ?யங்களே எஞ்சும் . ஒன்று இலக்க்யத்தை வெற்றும் மொழியாட்டமாக ஆக்கும் மனநிலை. இரண்டும் இறந்தகால ஏக்கம் மற்றும் எதிர்காலக்கனவுகளை இணைக்கும் ஆழ்மன இயக்கம். அதையே அக்கதையில் சொல்லியிருக்கிறேன்.

இன்று உலக மொழிகளுக்கு இடையே, பண்பாடுகளுக்கு இடையே ஒரு கண்ணாடிச்சுவர் உள்ளது. அதுவே இன்று உலகமொழிகள் என்ற கவற்சி இல்லாமல் போக காரணம் என்பது இக்கதையில் உள்ள ஊகம். அச்சுவர் இல்லாமலாகும் போது வலிந்து தனித்துவ அடையாளம் தக்கவைத்துக் கொள்ளப்படலாம் என்று கதை சொல்ல முயல்கிறது

அறிவியல் புனைவு என்பதே சாத்தியங்களின் ஆட்டம் தானே

ஜெயமோகன்

jeyamoohannn@rediffmail.com

Series Navigation

About ஜெயமோகன்

ஜெயமோகன்

View all 194 articles →

கடிதம் பிப்ரவரி 3,2005

This entry is in the series 20050203_Issue

ஜோதிர்லதா கிரிஜா


அன்புமிக்க ஆசிரியர் அவர்களுக்கு.

வணக்கம்.

என் கடிதங்களையும் கட்டுரைகளையும் கவனத்துடன் படிப்பவர்கள் ‘பிராமண ஜாதியினருக்கு மட்டுமான ஒரு மடமாகத்தான் சங்கர மடம் நீடிக்க வேண்டும் என்று ஜோதிர்லதா கிரிஜா விரும்புகிறாரா ?’ எனும் கேள்வியைக் கனவிலும் கேட்கமாட்டார்கள்! ஜாதி, மதம் தொடர்புள்ள அனைத்துக் குழுமங்களையும் சங்கங்களையும் சட்டத்துக்கு விரோதமானவை என்று அறிவிக்கவேண்டும் என்பதே நமது கோட்பாடு. எனினும் இப்படி யெல்லாம் சட்டம் இயற்றுவதை விடவும் மனிதர்களின் மனங்களில் உறைந்து போயிருக்கும் ‘ஜாதி உணர்ச்சியை’ ஒழிக்க வேண்டியதே அதனினும் தலையாயது என்பது நமது கருத்து. ‘நான் இன்ன ஜாதி’ என்கிற உணர்வும் இந்த நாட்டில் ஒருவனைவிட்டுப் போகவில்லை; ‘இவன் / இவள் இன்ன ஜாதி’ என்று பிறரைப் பற்றி நினைக்கிற நினைப்பும் போகவில்லை! இதுதான் கசப்பான உண்மை!

மதங்கள் எல்லாமே பொதுவாக மனித நேயம், அன்பு, பிறர்க்கு உதவுதல் போன்ற நல்ல்வற்றைத்தான் போதிக்கின்றன. எனவே திருந்தவேண்டியவர் மனிதரே! மனிதர்கள் திருந்தினால் எந்த மதமும் குறை கூற முடியாத அளவுக்கு இருக்கும்.

‘ஓர் இந்துவாகப் பிறந்து தொலைத்துவிட்டமைக்கு’ நாம் சலித்துக்கொண்டதாகவும் நண்பர் குறிப்பிடுகிறார். இல்லை. ‘மேட்டுக்குடி’ எனப்படும் பார்ப்பன இனத்தில் பிறந்தமை குறித்துத்தான் அவ்வாறு எழுதினோம். எந்த மதமும் இழிவானதன்று. எல்லாமே நல்லவற்றைத்தானே போதிக்கின்றன ? சில திமிர் பிடித்த மனிதர்கள் எல்லா மத நூல்களி உண்மையான தத்துவங்களைப் புறக்கணித்து இடைச்செருகல்களும், தப்பான விளக்கங்களுகும் தங்களின் (ஆண்களின்) தன்னலத்தால் செய்திருப்பதற்கு மதம் என்ன செய்யும் ? எனவே கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியர்களோ, இந்துக்களோ, பெளத்தர்களோ தங்கள் மதம் பற்றி வெட்கமுற எந்த அவசியமும் கிடையாது!

‘வக்கிரமான பார்வை என்பது ஆணாதிக்கத்தின் ஓர் அடக்குமுறைதானே ?’ என்று கேட்கிறார் நன்பர். இதற்கு என்ன செய்ய முடியும், அல்லது செய்ய வேண்டும் என்கிறார் இவர் ? வக்கிரப் பார்வை சிந்தும் கண்களையெல்லாம் பிடுங்கிப் போட்டுக்கொண்டிருக்கவா முடியும் ? அவர்கள் திருந்துகிற (!) வரையில் பெண்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது முக்கியம் இல்லையா ? என்ன கேள்வி இது ?

ஜோதிர்லதா கிரிஜா

jothigirija@hotmail.com

Series Navigation

About ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

View all 139 articles →

கடிதம் பிப்ரவரி 3,2005

This entry is in the series 20050203_Issue

அருளடியான்


அன்புள்ள ஆசிரியருக்கு,

தமிழ் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் நிறுவிய ‘பசுமைத் தாயகம் ‘ அமைப்பின் இணையத் தளம் ஆங்கிலத்தில் இருக்கிறது. அதற்கு தமிழ் பதிப்பு இல்லை. அதன் செய்தித் தொடர்பாளர் தமிழ் இணையத் தளங்களுக்கு ஆங்கிலத்திலேயே சுற்றறிக்கை அனுப்புகிறார். டாக்டர் ராமதாஸ் ‘பசுமைத் தாயகம் ‘ இணையத் தளத்தை தமிழில் வெளியிட உத்திரவிடுவாரா ? தமிழில் சுற்றறிக்கை அனுப்ப அதன் செய்தித் தொடர்பாளருக்கு உத்திரவிடுவாரா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

அன்புடன்

அருளடியான்

aruladiyan@netscape.net

Series Navigation

About அருளடியான்

அருளடியான்

View all 26 articles →

கடிதம் பிப்ரவரி 3,2005

This entry is in the series 20050203_Issue

ராதா


திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு,

கடந்த வாரத்திண்ணையில் ரெ.கார்த்திகேசுவின் கடிதம் வெளியாகி இருக்கிறது. http://www.thinnai.com/le0127051.html அவர், திண்ணை வாசகர்கள் கவனத்திற்கு

வலைப்பதிவொன்றில் http://dystocia.blogspot.com/2005/01/blog-post_17.html

முன் வைக்கப்பட்டுள்ள கருத்துக்களை கொண்டுவர விரும்புகிறேன்.அறிவியல் புனைகதை

என்ற தலைப்பில் வெளியாகும் கதைகள்தாம் அறிவியல் புனைகதைகள் என்று கருதப்பட

வேண்டியதில்லை.அப்படி ஒரு முத்திரையின்றி ஒரு அறிவியல் புனைகதை திண்ணையில்

வெளியாகியுள்ளது, நித்யா என்ற தலைப்பில் http://www.thinnai.com/st1104041.html

ஜெயமோகன் கதைகள் குறித்து மேலே சுட்டப்பட்டுள்ள வலைப்பதிவில் http://dystocia.blogspot.com

சில பதிவுகள் உள்ளன. இந்த ஒன்பது கதைகளிலும் ஒரு தேர்ந்த பதிப்பாசிரியருக்கு பொறுமையை சோதிக்குமளவிற்கு பல வேலைகள் காத்திருக்கின்றன. உதாரணமாக,புத்தகமாக வெளியிடும் போது பக்க எண்ணிக்கையினைக் கூட்டிக்காட்ட உதவும் பகுதிகள் கதைகளில் உள்ளன, மற்றபடி இவற்றால் வேறு பயனேதுமில்லை. இலக்கிய பிரதி, தொழில் நுட்பம்,கணினி, இணையம் குறித்த விவாதங்களுடன் ஒப்பிடுகையில் கார்த்திகேசு வியக்கும் கதையில் ஒரு ஆரம்ப கட்ட புரிதல் கூட இல்லை. மாறாக தன்னை முன்னிலைப்படுத்துவது தூக்கலாகத் தெரிகிறது. மெடாபிக்ஷன் metafiction குறித்த அவரது புரிதலில் உள்ள பிரச்சினையைத் தான் இக்கதை காட்டுகிறது. இக்கதைகளை படித்து விட்டு அறிவியல் புனைகதைகளே இப்படித்தான், சிறப்பான அறிவியல் புனைகதைகளுக்கு இவை ஒரு உதாரணம் என்ற தவறான புரிதல் வாசகர்களுக்கு ஏற்படாது என்று நம்புகிறேன். என்னுடைய மதிப்பீட்டில் இக்கதைகளுக்கு நூற்றுக்கு முப்பது மதிப்பெண் தரலாம்.

ஜீன் திருடனின் விநோத வழக்கு கதை ஜேம்ஸ் மூர் வழக்கினை நினைவுபடுத்துகிறது.கதாசிரியர் அதை குறிப்பிடாவிட்டாலும் அதை இதனுடன் தொடர்புபடுத்தி பார்க்க முடியும். நான் இதை விளக்கப்பப்போவதில்லை, இருக்கவே இருக்கிறது கூகிள். ஜேம்ஸ் பாய்ல் இதைக் குறித்து Shamans, Software and Spleens : Law and the Construction of the Information Society என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்.

திண்ணையில் வெளியாகும் என் கடிதங்கள் பற்றி சிலர் எனக்கு மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளனர், அவர்களுக்கு என் நன்றிகள்.கருத்துக்களை எனக்கு மின்னஞ்சலில் தெரிவிப்பதை விட திண்ணைக்கு அனுப்புவதே பொருத்தமாயிருக்கும்.

வணக்கத்துடன்

ராதா

Series Navigation

About ராதா

ராதா

View all 4 articles →