ஒரு ஊர் குருவி சிறைப்பறவை ஆகிறது
த. ஆரோக்கிய சேவியர்

நானே ராஜா நானே மந்திரி
என்று தான் பறந்து
கொண்டு இருந்தேன்
என் சிறகுகள் முறிக்கப்படும் வரை
வானம் வசப்படும் முன்னே
கூண்டின் வசமானேனே
வார்த்தைகள் தேடி
அலைந்த மனம், இன்று
சிக்கித் தவிக்கிறது
தலைப்பெனும் சிறையில்
பரந்த தாயகத்தை துறந்து
விரும்பி அடைப் பட்டுக்கொண்டேன்
இந்த சின்னஞ்சிறு தீவில்
saxsun@gmail.com