மீரான் மைதீனின் சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் – நூல் விமர்சனம்

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

எஸ்.அர்ஷியா



வாழ்வியல் போராட்டத்தைத் தாண்டி, அல்லாஹ், முகம்மத், கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் இவைகளில் ஈடுபடவே நேரம் இல்லாது போய் விட்ட இஸ்லாமிய சமூகத்துக்கு, மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த நேரம் கிடைக்குமா என்பது, ஒருநாளின் இருபத்து நான்கு மணிநேரத்தை இரட்டிப்பாக்கினால் கூட முடியாது என்பது தான் நிஜம்!

அடித்தளத்தைத் தாண்டி மேலெழும்ப முடியாமல் அல்லாடிக் கொண்டிருக்கும் அவர்களின் வாழ்வில், கஷ்டங்களின் போது அல்லாஹ் நினைவுக்கு வருவார். ஆசுவாசமான நேரங்களில், ‘யா ரசூலே…’ என்று முகம்மத் நினைக்கப்படுவார். மற்றவைகளுக்கு… பிறகு யோசிப்போம்.

ஆனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில், குறிப்பாக குமா¢ மாவட்டத்தில் இந்நிலை தலைகீழாக இருக்கும் போல. எப்போதோ சொல்லப்பட்டதாக…அறிவிக்கப்பட்டிருக்கும் விஷயங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் அவர்கள், மாற்றங்களுக்கோ…அது குறித்தான விவாதங்களுக்கோ எதிரானவர்களாகவே இருக்கிறார்கள்.

மாறிவரும் காலகட்டத்தில் எல்லாமே பா¢சீலனைக்கு உட்பட்டது என்பதைக் கருத்தில் கொள்ளாத … அல்லது மறுக்கும் அவர்கள், அது குறித்த பா¢ சீலனையில் ஈடுபடுபவர்களை தொட்டதற்கெல்லாம் குற்றம் சுமத்துவது. கூண்டுமுன் நிறுத்தி விசாரணை எனும்பெயா¢ல் தங்கள் கீழா(மேதாவுக்கு எதிர்மறை)விலாசத்தைக் காட்டுவது. ஊர்விலக்கம் செய்வது என்பது வரை செல்லப் பொழுது போக்காகவே வைத்திருக்கிறார்கள். அதில் அடிக்கடி மாட்டிக் கொள்வது, நேரடித்தாக்குதல் நடத்தும் ஹெச்.ஜி.ரசூல்!

அதே வேளையில், எதையுமே நாசூக்காகச் சொல்லி, மாற்றங்களை பதிய வைப்பது அதே பகுதியைச் சேர்ந்த மீரான் மைதீனுக்கு கைவந்திருக்கிறது. ஏற்கனவே கவர்னர் பெத்தா, ரோசம்மா பீவி ஆகிய சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கும் அவருக்கு, ‘சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் ‘ மூன்றாவது தொகுதி!

இஸ்லாத்தின் தொண்மங்களும் அது தொடர்பான விஷயங்களுமே மீரான் மைதீனின் கொல்லுப் பட்டறை. வனைபவனுக்கு ஏற்ப மண்பாண்டம் அழகு பெறுவது போல, மீரான் மைதீனின் பாடுபொருள் அழகழகாய் உருப்பெற்று வந்து விழுகிறது. தொகுதியில் பன்முகமாய் இடம் பெற்றிருக்கும் பதினோரு சிறுகதைகளும் இஸ்லாத்தின் உட்கூடுகளை உரசிச் செல்பவை. விலா எலும்புகளை விசாரணை செய்பவை!

‘குப்பையாண்டி பிள்ளையின் சுவர்’ எனும் சிறுகதையில், சுவரொட்டிகள் ஒட்டப்பெறும் ஒருசுவர், தன் கதையைச் சொல்வதாக வசியப்படுத்தி இருக்கிறார். தோவாளை அப்பாவும் சுவரும் பேசிக்கொள்ளும் அந்த சுப வைபவத்தைக் கேட்க ஒருகூட்டம் அவருடன் செல்கிறது. சுவர் தன்மீது, ஐம்பது ஆண்டுகளாய் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை காலக்கிரம வா¢சையில் உ¡¢த்து, அப்போது இருந்த அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டைக் கிண்டலு டன் அவர்களிடம் சொல்கிறது. பகடியுடன் படைக்கப்பட்டிருக்கும் இச்சிறுகதைக்கு இந்திரா காந்தியிலிருந்து தொடங்கி இன்றைய விஜயகாந்த் வரை யிலும் அரைபட்டிருக்கிறார்கள். காலமாற்றத்தாலும் அவர்களின் தேவைகளாலும் அரசியல் கூட்டணிகள் மாறியதை போஸ்டர்கள் உ¡¢படுவதுபோல அரசியல்வாதிகளின் தோல் உ¡¢படுவது சுவையான விஷயம்!

நுட்பமாக சொல்லப் பட்டிருக்கும்,’மாதுளம் மரத்தில் வாழும் தென்றலைக் கொல்லும் முயற்சிகள் தோற்கின்றன’ கதையில், இருப்பதை விட்டுவிட்டு இல்லாததைத் தேடியலையும் இஸ்லாமியனின் மனப்போக்கை அங்கதத்துடன் பதிவு செய்திருக்கிறார். தேடியலையும் ஐவா¢ல் எவருக்குமே என்ன தேடுகிறோம் என்பதே தொ¢யவில்லை என்பதை…’இது தொ¢யாமத் தான் ஒரு மாசமா பழபத்தி¡¢ சாப்பிட்டியாக்கும்…?’ என்று கேட்டு, யோசனையை வேறு முடுக்கிவிடுகிறார்.

‘¨டா¢க்குறிப்புகள்’ சிறுகதை, ஜித்தா நகா¢ல் வேலைசெய்ய கூடிவசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களின் இரவுநேரப் பா¢மாணத்தைப் பற்றியது. அவனவன் தன்னைப் பற்றிய பீத்தல் கதைகளைச் சொல்லும் போது, அறைவாசியான திருமணமான இப்றாகீமின் காளிதாஸ் ரகசியத்தை தான் அறிந்திருப்பதாகவும் அதனை வெளியே சொல்ல முடியாத அவதியை மறக்க சிரமப்படுவதாகவும் குறிப்பிட்டிருப்பதில் தேர்ந்த அரசியல் தென்படுகிறது.

இதுபோலவே ஒருபாடு கதைகள்…கலர் வேலைப்பாடுகளுடன் கூடிய டிசைன் வாய்கள்.. உள்ளிட்டக் கதைகள், அதனதன் அரசியலைப் பேசி, நம்மை சிறுகதைக் கட்டமைப்பின் அடுத்தத் தளத்திற்கு இட்டுச் செல்கின்றன. அவற்றிற்கு ஊடாக சமூகம் மறந்துவிட்ட வாழ்வின் நுணுக்கங்களை…வாழ்தலின் அர்த்தத்தை நிலைநிறுத்துவதில் முனைப்பாய் இருக்கிறார். முன்னைக் காலத்தில் சக்கைமரம்(பலா)வயதானவர்கள் தான் வைப்பார்கள்…கடுகு சிந்தினால் சண்டைவரும்…போன்ற விஷயங்களை கதையின் ஊடாக வார்த்தையாடலில் நினைவூட்டுகிறார்.

என்றாலும் ஊசிகாந்தம் உயர்ந்த மலைப்பிளவின் வழி, மத்தது உள்ளிட்ட சிறுகதைகள் பு¡¢தலுக்கு அப்பாற்பட்டவையாக கட்டமைக்கப்பட்டிருப்பது நெருடுகிறது. எளிய சொல்லாடல்களிலிருந்து விலகி, ஒரு இறுக்கமான இருட்டறைக்குள் சென்றுவிட்டதுபோல பிரமை வருகிறது. அதுபோல அச்சு முறையும். கண்களைப் பதம் பார்க்கின்றன. முழுமைப்பெற்றது எதுவுமில்லை எனும்போது, இவற்றை பொ¢துபடுத்த ஒன்றுமில்லை!

அதைத் தாண்டி, இஸ்லாமிய சமூகத்தை மறுமதிப்பீடு செய்திருப்பதாகவே ‘சித்திரம்காட்டி நகர்கிறது கடிகாரம்’ நமக்கு உணர்த்துகிறது.


arshiyaas@rediffmail.com.

Series Navigation

எஸ். அர்ஷியா

எஸ். அர்ஷியா