- துக்கத்தின் அலையோசை – கோகுலக்கண்ணனின் ‘இரவின் ரகசியப் பொழுது ‘
- ஜெயமோகனின் கொற்றவை
- சேதிராயர்
- உயிர்ப்பு தொகுப்பின் பத்து சிறுகதைகள்
- சி.கனகசபாபதியின் ‘ புனைகதைகள் ‘
- மு புஸ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள் ‘
- நான் கண்ட சிஷெல்ஸ் – 7
- இரண்டாம் அர்த்த வரிசையின் கதை- சல்மாவின் நாவலை முன்வைத்து
- பிரபஞ்சத்தில் ஒரு நீலப்படம் ? (Between the Black-hole and the White-hole there is a Worm-hole)
- விண்வெளியில் செல்லும் வால்மீன் ஒளிமுகில் மாதிரித் தூளைப் பிடித்து வந்த விண்சிமிழ் (Stardust Space Ship Collects Comet ‘s Coma Sa
- சுப்ரபாரதிமணியன் படைப்பு மனத்தின் செயல்பாடுகள்
- பாட்டி
- கவிதைகள்
- அபத்தங்களின் சுகந்தம்
- ஈரமான தீ
- கீதாஞ்சலி (58) ஒளிந்திருக்கும் காதலன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- எச்சங்கள் இன்னும்
- ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு
- கடிதம்
- ஹெச்.ஜி. ரசூலின் ‘வாகாபிசமும் நவீன முதலாளியமும் ‘ கட்டுரைக்கு எதிர்வினை
- ஹெச்.ஜி.ரசூலுக்கு….
- சங்கனாச்சேரியும் ‘ஸ்டார்டஸ்டு ‘ம்
- ஸி. செளரிராஜன் கவிதைகள்
- ஹெச்.ஜி.ரசூல் கவிதைகள்
- சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு!
- பிறவழிப் பாதைகள் : அன்புள்ள குட்டி ரேவதி
- பிளவுண்ட சமூகம் என்பதால் என்றென்றும் பிளவுபட்டிருப்பதா ?
- முதலாம் தீர்மான கோட்பாடு
- மிட்டாதார்
- கல்லறைக்குச் செல்லும் வழி (மூலம் : தாமஸ் மன் (ஜெர்மனி) )
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 5
- வீடற்றவன்…
- யமேய்க்கனுடன் சில கணங்கள்!
- தனிநபர்-புரட்சி-முன்னெடுப்பு, சில அபிப்பிராயங்கள்!
- (இங்கிலாந்து இடம் பெறாத) எடின்பரோ குறிப்புகள் – 7
- வீடு
- செரிபடட்டும்
- விதிகளின் மீறுகை
- சாத்தானுடன் போகும் இரவு
- காத்திரு காத்திரு
- பெரியபுராணம் – 74 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கைநுனி மின்மினி
- மாயச் சரக்குப் பெட்டிகள் (Phantom Cargo)
- ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலா விவாதம் ?
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-6) (Based on Oscar Wilde ‘s Play Salome)
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

எங்கே நிற்கிறாய்,
எல்லோருக்கும் பின்னே ?
நிழலில்
ஒளிந்திருக்கும் காதலனே!
உன்னைத் தள்ளிக் கொண்டு
துச்சமாய் எண்ணி,
தூசி நிரம்பிய வீதியில்
காணாது போகிறார்,
அநேகர்!
ஆராதனைப் படையல் சமர்ப்பித்து,
நேரமாய்க்
காத்திருக்கிறேன்
களைத்துப் போயிங்கு!
பூக்கூடையும் காலியாய்ப் போனது,
போவோர், வருவோர்
பூக்களைத்
தூக்கிச் செல்வதால்!
காலைப் பொழுதும் விடை பெற்றது,
பகலிடம் விட்டு!
மாலை வேளையின் மந்தார
மயக்கத்தில்
தூங்கி விழும் எனது
விழி இமைகள்!
வழியில் போவோர்
என் வெட்க நிலை நோக்கி,
சிரித்துச் செல்கிறார்
ஏளனமாய்!
பிச்சை எடுக்கும் பேதைபோல் குந்தி
முந்தானையில்
மூடி உள்ளேன் முகத்தை!
என்ன வேண்டுமென
கேட்போர்க்கு
எதுவும் கூறாது கிடக்கிறேன்,
தலை சாய்ந்து!
வருவதாய் நீயோ
வாக்களித்தாய் எனினும்,
உனக்கு நான் காத்துக் கிடப்பதை
உறுதியாய் எப்படி
உரைப்பேன் அவரிடம் ?
வெட்கக் கேடிது வெளியே சொல்ல!
வறுமையை வைத்துளேன்,
உனக்கு
வரதட்சணை வழங்க!
இரகசியமா யிருக்கும் இந்த அவமதிப்பு,
இதயத்தில்!
தங்க ஒளி தகதகவென மின்னி
பொற்கொடி பறக்கும் உன்
வாகனத்தில் கண்முன்னே நீ
வருகின்ற
கனவுக் காட்சியைக் காண
மண்வெளிப் புல்லில் அமர்ந்து
நோக்கு கின்றேன்,
விண்வெளியை!
கந்தைத் துணி உடுத்தி,
அகந்தை யுடன்
பந்தல் கொடிபோல் தென்றலில்
நடுங்கு மிந்த
பிச்சைப் பெண்மணியை,
ஆசனத்தை விட்டுக் கீழிறங்கி
தூசி மண்ணி லிருந்து
தூக்கி,
பக்கத்தில் வைத்துக் கொள்வாய்!
நேரம் போகிறது!
ஆயுனும் உன்
தேரோடும் சக்கரங்களின்
ஆரவாரம் கேட்டிலேன்!
கும்மாளம் போடும் கூட்டமும்
கோலாகல மோடு
சும்மா போகிறது!
நிழலில் மெளனியாய்
எல்லாருக்கும் பின்னிற்பவன்
நீதானா ?
காத்துக் கிடந்து களைத்துப் போய்,
இதயம் துண்டாகி
வீணாக
வேதனையில் அழுதிடும்
பேதை
நான்தானா ?
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (January 15, 2006)]