பாரதி மகேந்திரன்
சிற்றுண்டிகள் அடை – ஒரு வகை
தேவைப்படும் பொருள்கள்
பச்சரிசி – 250 கிராம்
புழுங்கல் அரிசி – 250 கிராம்
துவரம் பருப்பு – 250 கிராம்
கடலைப் பருப்பு – 250 கிராம்
பயத்தம் பருப்பு – 50 கிராம்
உடைத்த உளுத்தம் பருப்பு – 50 கிராம்
மிளகாய் வற்றல் – 12 (அல்லது தேவைப்படி)
பச்சை மிளகாய் – 5 (அல்லது தேவைப்படி – தவிர்க்கவும் செய்யலாம்)
பெருங்காயம் – 1 மே. க.
கறிவேப்பிலை – 3 / 4 ஆர்க்குகள்
கொத்துமல்லித் தழை – 4 / 5 கைப்பிடிகள் (ஆய்ந்து கழுவியது)
உப்பு – 2 மே.க. (அல்லது தேவைப்படி)
பச்சரிசி, புழுங்கல் அரிசி ஆகிய இரண்டையும் தனித் தனியாகத் தண்ணீரில் களைந்த பின் ஊற வைக்கவும். துவரம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகிய இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துக் களைந்த பின் ஊற வைக்கவும். உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு ஆகிய இரண்டையும் ஒன்றாய்க் களைந்து ஊற வைக்கவும். இவை யாவும் நசுங்குகிற பதத்துக்கு நன்றாக ஊறியதும் முதலில் மிளகாய்வற்றலுடன் புழுங்கல் அரிசியை மின் அம்மியில் போட்டு நான்கைந்து முறை சுற்றிய பின் பச்சரிசியைஅதன் மீது போட்டு அரைக்கவும். மாவு நன்றாய் மசியக் கூடாது. கர கரவென்று இட்டிலி ரவைப் பதத்துக்கு அரைபட வேண்டும். இவ்வாறு அரைத்த மாவை வழித்து வைத்தபின் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றையும் மின் அம்மியில் ஒன்றாய்ப் போட்டு முன்பு போலவே கரகரப்பாக அரைக்கவும். இவற்றை யெல்லாம் அரைக்கும் போது போதுமான தண்ணீர் விடவும். மாவுகள் கெட்டியாக இருக்க வேண்டும். தோசைக்கு அரைப்பது போல் அதிகமாய்த் தண்ணீர் விட்டு அரைக்கக் கூடாது.அரைத்து முடித்த மாவுகளைப் பெருங்காயம், உப்புப்பொடி, கறிவேப்பிலை,கொத்துமல்லி ஆகியவற்றுடன் நன்கு ஒன்றாய்க் கலக்கவும். இவ்வாறு தயாரித்த மாவை அரை அல்லது ஒரு மணி நேரம் போல் அப்படியே ஊற விடவும். பிறகு கெட்டியான தோசைக்கல்லில் நல்லெண்ணெய் ஊற்றி வார்த்து எடுக்கவும்.
அடிக்கடி அடை தட்டிய வீடு தொடை தட்டுமென்பார்கள். (அதாவது காசு அதிகமாய்ச் செலவாகிச் சாப்பாட்டுக்குத் தாளம் போடுவார்களாம்.) எண்ணெய் குடிக்கும் பதார்த்தம் இது. அதனால் இப் பழ மொழி ஏற்பட்டு இருக்கலாம். அடைக்குத் தொட்டுக்கொள்ளச் சிலர் அவியல் செய்வார்கள். சிலருக்குத் தேன் அல்லது வெல்லம் பிடிக்கும். சிலர் இட்டிலிப் பொடி அல்ல்து தேங்காய்ச் சட்டினியையைத் தொட்டுக்
கொள்ளூவார்கள். வேறு சிலர் எதையும் தொட்டுக்கொள்ளாமல் அதன் தனிச்சுவையை ரசித்து உண்பார்கள். எல்லாமே அவரவர் விருப்பம்தான்.
mahendranbhaarathi@yahoo.com பாரதி மகேந்திரன்
- மருத்துமலை எங்கே இருந்தது (பாகம் 2)
- ஹோமரின் ‘இலியட்’ காவியத்தின் முழு தமிழாக்கம்
- காரைக்காலில் ஒரு தனித்துவமான சுனாமி நிவாரணக் கட்டுமானப் பணி
- உயிர்ப்பு நாடக அரங்கப் பட்டறையின் இரண்டாவது நிகழ்வு
- இலை போட்டாச்சு ! -20 அடை – இரண்டாம் வகை
- தண்ணீரை தனியார் மயமாக்காதே – பசுமை தாயகம் பிரசாரம்
- நான்கு சங்கர மடங்களையும் அலங்கரித்த ஞானியர் பரம்பரை
- கடிதம்
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 10
- சுக்கிர நீதியை – அர்த்த சாஸ்திரத்தை தமிழாக்கம் செய்த பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
- தூர்மண(¡) குச்சு
- கடித இலக்கியம் – 48
- சிங்கப்பூர் வாசகர் வட்டம் – கதை விவாத நிகழ்வு
- பெண் எழுத்து
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:4
- இலை போட்டாச்சு ! – 19 – சிற்றுண்டிகள் அடை – ஒரு வகை
- வால்மீனில் தடம் வைக்கப் போகும் ரோஸெட்டா விண்ணுளவியின் நுட்பக் கருவிகள் -3
- காதல் நாற்பது (13) – காதலை அழைத்தது காதல் !
- தைத்திருநாள் விழா கவியரங்கம்—–3
- கவிதை வடிக்கலாம் – தமிழிசைப் பாடல்
- நீலக்கண்கள் சூடிய வினோத பட்சி
- என் பெயரை நான் மறந்து/பெயர் அழகு/போதி மரம்
- அறிவுசார் சொத்து எனும் அபத்தம்!
- தொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் இரண்டு: நள்ளிரவில்…
- மடியில் நெருப்பு – 29
- நீர்வலை – (15)
- மறை வாள் வீச்சு