This entry is in the series 20071129_Issue

நிஷாந்தன்



இருப்புப் பாதை வண்டியின்
தாழ் படுக்கைகள்
எப்போதுமே வசீகரமானவை
சன்னலோரத்தின் காற்றுக்காகவும்
சில சமயங்களில் காட்சிக்காகவும்.


பெரும்பாலும் அவை
சினேகம் கொண்டிருப்பது
இயலாதவர்களுடன் தான்.


எப்போதாவது தாழ் படுக்கைகள்
இளைஞர்களுக்கு ஒதுக்கப்பட்டால்
அவை நிரப்பப்படும்
முதலில் இரக்கத்தாலும்
பிறகு
முதியவர்களாலும்.

– நிஷாந்தன்


poet.nishanthan@gmail.com

Series Navigation