- ’ரிஷி’யின் கவிதைகள்:
- வட்டத்தில் புள்ளி
- அடங்கிய எழுத்துக்கள்
- காரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி
- பண்பாட்டு உரையாடல்
- இவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா.
- வேரற்ற மரம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)
- வழக்குரை மன்றம்
- மீன்பிடி கொக்குகள்..
- உறையூர் தேவதைகள்.
- பனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்
- பாதைகளை விழுங்கும் குழி
- காஷ்மீர் பையன்
- ஏதுமற்றுக் கரைதல்
- பிறப்பிடம்
- ஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1
- தக திமி தா
- இருள் போர்வைகளின் முடிச்சுக்கள்
- இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள்
- தொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்
- செக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்
- மிச்சம் !
- சொர்க்கவாசி;-
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2
- கலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12
- யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்
- குழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம்! (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)
- பலூன்
- வழங்கப்பட்டிருக்கின்றதா?
- “தேசிய ஆலோசனைக் குழுமம்” தயாரித்துள்ள “மத வன்முறை மசோதா” – ஒரு கருத்தாய்வு
- பம்பரம்
- தாமரை இலையும் சின்னக்குத்தூசியும்
- போராட்டத்திலிறங்கும் இடம்பெயர்ந்த மக்கள்
- மோனநிலை..:-
- சில மனிதர்கள்…
- ஒரு கொத்துப் புல்
- கோமாளி ராஜாக்கள்..
- செல்வி இனி திரும்பமாட்டாள்!
- ஈர வலி
- புது திண்ணை
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“நீதி மன்றத்துக்கோ அல்லது பல்கலைக் கழகங்களுக்கோ நான் போகும் போது அங்கேயும் திருவாளர் பிதற்றுவாய் தன் தந்தை, தாயோடு பட்டாடையும், அழகிய தலைப்பாகையும் அணிந்து வஞ்சக அங்கி போர்த்திக் கொண்டு காணப்படுவார் !”
கலில் கிப்ரான். (Mister Gabber)
+++++++++++
இசை தனித்துவ மொழி
+++++++++++
இசைக்கும் ஓர் ஆத்மா உள்ளது
அது உயிரூட்டும் உணர்வு !
இசைக்கும் பஞ்சு மனம் உள்ளது
அதுவே அதன் நெஞ்சு !
படைக்கும் போது
கடவுள்
இசை யெனும்
தனித்துவ மொழியை
மனிதனுக்கு அளித்துளான் !
அனைத் துக்கும் வேறு பட்ட
இனிய மொழி அது !
ஆதி மனிதன்
அதன் உன்னதம் பாடினான்
அடர்ந்த கான கத்தில் !
இசை மகள் அரசனின்
இதயம் கவர்ந்து
ஆசனத்தி லிருந்து
இறங்கி வரச் செய்தாள் !
+++++++++++
ஊழ் விதிப் புயலின்
அசுரத் தாக்கலில்
பாழ் பட்டுப் போன
மெல்லிய பூக்களே
நமது ஆத்மா வெல்லாம் !
அதிகாலைத் தென்றலில் கூட
ஆடி நடுங்கிடும்
ஆத்மாக்கள் !
வானி லிருந்து வீழும்
பனித் துளிகளால்
கூனிப் போகும் நமது ஆத்மா !
+++++++++++
பறவையின் இசை ஒலிகள்
மனிதரின்
உறக்கம் கலைத்திடும் மங்கிய
உதயப் பொழுதில் !
முடிவிலாக் கடவுளின்
உன்னத
மகத்துவம் பாடும் போது
மனிதரை
ஒன்று படுத்த
அழைப்பிதழ் அனுப்பிடும்
புள்ளினத் தின்
இசை ஓசை !
(தொடரும்)
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 23, 2011)
“கடைவீதிப் பக்கம் நான் செல்லும் போது திருவாளர் பிதற்றுவாய் ஒவ்வொரு கடை வாசலிலும் நின்று போவோர் வருவோரைப் பற்றி வக்கணை அடிப்பார். பிதற்றுவாயன் அவரைப் பின்பற்றிச் செல்வதையும் நான் அவரது மௌன முகத்திலே கண்டிருக்கிறேன். பொது மக்களுக்கு ஆட்டிப் படைக்கும் அவன் இருக்கை தெரிவதில்லை.”

ஆதலால் நான் அடுத்தோர் பல் மருத்துவரை நாடி, “இந்தச் சாபப் பல்லைப் பிடுங்கி எடுங்கள். எந்தக் கேள்வியும் என்னிடம் கேட்காதீர். அடியை வாங்கிக் கொள்ளும் ஒருவன் அதை எண்ணிக் கொள்ளும் மற்றவனைப் போலில்லை !” என்று கூறினேன். நானிட்ட கட்டளைப்படி மருத்தவர் பல்லை பிடுங்கி எடுத்துச் “சொத்தைப் பல்லைப் பிடுங்கியது நல்லது.” என்றவர் கூறினார்,” மனித சமூகத்தில் எலும்பு வரைச் சீர்கெட்டுப் போன பல்வேறு சொத்தைப் பற்கள் உள்ளன ! அவற்றை அகற்றச் சமூகம் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளாமல், தங்கத்தை இட்டு நிரப்புவதில் திருத்தி அடைந்து வருகிறது. 











நேற்று ஆலயத்தின் வாசலில் நின்று வருவோர், போவோர் சிலரைப் பார்த்துக் காதலின் மர்மத்தையும், அதன் மகத்துவத்தையும் பற்றிக் கேட்டேன். அவரெல்லாம் காதல் என்பது மனிதருக்கு நம்பிக்கையும், மன வேதனையும் தருவது என்று சொல்லி அதை ஒரு மர்மம்தான் என்று குறிப்பிட்டு முந்தைய கருத்தையே வலியுறுத்தி விட்டுச் சென்றார். 


முன்னிரவில் தாயை விளித்துச் சிறுமி கேட்கிறாள் : “வயிறு பசிக்கிறது அம்மா”. “சற்று பொறு மகளே” என்று தாய் பதில் சொல்வாள். நடு ராத்தியில் மறுபடியும் சிறுமி கேட்கிறாள்: தாயே பசிக்குது. தா எனக்கு ரொட்டி.” “ரொட்டி இல்லை கண்ணே” என்று பதில் கூறுவாள் தாய். விடிவதற்கு முன்பு மரணம் அண்டித் தாயையும் சிறுமியையும் ஒன்றாய்த் தின்கிறது. தெரு வீதியில் இருவரும் நித்திய உறக்கத்தில் விழுந்து கிடக்கிறார். பீடுநடை போடுகிறது மரணம் தூரத்து மாலை அத்தமத்தை நோக்கி ! 



“இரைச்சல் மிக்க நகரத்தின் குடிமக்களே ! நீவீர் இருட்டில் வசித்துப் பொய் புரட்டுகளை மூடத்தனமாய்ப் போதித்துக் கொண்டு அறியாமையில் மூழ்கி இடரை நோக்கி விரைந்து செல்கிறீர் ! நீவீர் வாழ்க்கைச் சகதியில் உழன்று அதன் பூந்தோட்டத்தை விட்டு விலகிப் போகிறீர் ! இயற்கை வனப்பின் நாகரீகப் பட்டு உடுப்பு உமக்காகப் படைக்கப் பட்டுள்ள போது, கிழிந்து போய் இறுக்கமாக இருக்கும் ஓர் அங்கியை ஏன் உடுத்திக் கொண்டிருக்கிறீர் ? 










“உலக நாடுகளின் ஊர் நகரங்களில் மனிதர் பல்வேறு குழுக்களாகவும் இனங்களாகவும் பிரிவு பட்டிருக்கிறார். ஆனால் நானோ எந்தக் குடியிருப்பையும் சேராமல் எல்லா இனத்தவருக்கும் புதியவனாய்த் தோன்றுவதாக எனக்குத் தெரிகிறது ! பிரபஞ்சமே என் பிறந்த தேசம் ! உலகக் குடி இனத்தோரே என் பூர்வீகக் குலத்தினர் !”




“எவனும் உனக்கு எடுத்துக் காட்ட இயலாது ஏற்கனவே (ஆழ்மனதில்) உன் அறிவுப் புலர்ந்திடப் பாதி உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு கருத்தைத் தவிர.” 


