This entry is in the series 20110130_Issue

வருணன்



மாடியிலுள்ளது தனியறை
தனிமை கொல்லும்
விடுமுறை மாலைகளில்
தெரு பார்த்தல் பொழுதுபோக்கு.
சரஸ்வதி உருவம் தாங்கிய
பெரிய சாளரத்தின்
வளைந்த கம்பிகளுக்கிடையே
பார்க்கும் போதாகிலும்
ஆண்களை சுவாரசியமற்றுப் பார்ப்பதும்
நங்கையர் கண்டால் அவயம் தேடுவதுமான
பசித்த கண்கள் ஒரு ஒழுங்கமைவுக்குள்
வராதாவென நினைத்திடும் வேளையில்
வராதென்பது போல சட்டென
மிணுக்கி எரிகிறது மிக அருகிலிருக்கும்
சோடியம் தெரு விளக்கொன்று.

-வருணன்

Series Navigation