மீன்பிடி கொக்குகள்..
Published May 29, 2011 • By
இளங்கோ
இளங்கோ

வார்த்தைகளின்
வேலிப் படலைத் திறந்து வைத்திருக்கிறேன்
என் மனவெளியை
சூறையாடிக் கொள்
நேற்றிரவு உரையாடலின்
குளம்
இன்னும்
தளும்பிக் கொண்டிருக்கிறது
அதில்
உன் மௌனக் கொக்கு
ஒற்றைக் காலில்
நி
ற்
கி
ற
து..
நீ
சுருள் பிரிக்கும்
உன் கைத் தூண்டில் முனையில்
ஒரு எழுத்து நெளிகிறதே
மீன் பிடிக்கவா..?
தூ..!
கொக்கை விரட்டு
கொக்கை விரட்டு..
*******
— இளங்கோ