பாதைகளை விழுங்கும் குழி

This entry is part [part not set] of 43 in the series 20110529_Issue

கலாசுரன்


*
ஒரு கணம் மகிழ்வெனத் திகழ்ந்ததோர்
ஒளியென் கனவுகளைப் பிளக்கும்

தெளிவற்ற பாதையின் குழியொன்று
நகைப்புடன் எனதிந்த
பாதையை விழுங்கி விடக்கூடும்

பாதங்களின் தீண்டல்
பயணிக்கவேண்டிய பாதைகளை
நிர்ணயித்துக் கொண்டிருக்க

இந்த இருளென்னை
மிகவும் அழுத்துகிறது
*
***

Series Navigationகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம் >>

கலாசுரன்

கலாசுரன்