This entry is in the series 20090724_Issue

வி. பிச்சுமணி


வைகறையில்
தூக்கம்
தொலைக்க விரும்பாமல்
சில பெண்கள்
முன் நாள்
இரவிலேயே
வாசல் தொளித்து
கோலம் போட்டு விட்டு
தூங்க செல்வது போல்
முன்னிரவில்
வந்த மழை
தூறல் போட்டு
பூமி தொளித்து
தார்சாலை வெப்பத்தில்
மாறும் கோலங்களை
போட்டு விட்டு
கலைந்து சென்று விட்டன.

v.pitchumani@gmail.com

Series Navigation