- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -6
- இது பின்நவீனத்துமல்ல-2 (மொழி அறிவும் ஆதிக்க மனோபவாமும்)
- சமஸ்க்ருதம்: யோசிக்கும் வேளையில்…..
- குறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009
- கவிஞர் சல்மா அவர்களின் இரண்டாம் ஜாமங்களின் கதை – ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீட்டுவிழா
- தேறுக தேறும் பொருள்
- தமிழ் இலக்கியத்தோட்டம் விண்ணப்பப்படிவம்
- ஜெயமோகன் நிகழ்ச்சி நிரல்
- யுகமாயினியின் ஆகஸ்ட் மாத இலக்கியக் கூடல்
- நிருத்தியதானம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 47 << காதலி கனல் அரங்கு >>
- நஞ்சூட்டியவள்
- பாரமா ? ஞானமா?
- நான்கு கவிதைகள்
- என் காதலி வருவது போல்
- வேத வனம் – விருட்சம் 45
- பாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா (1925-2004)
- படைத்தல் விதி
- சுவர்கள்
- மூனாவது
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஏழு
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினைந்தாவது அத்தியாயம்
- அந்த காலத்தில் நடந்த கொலை – 1
- மக்களாட்சியும் மணிமண்டபங்களும்
- பேருந்து பயணத்தில் ஏற்பட்ட சிறு அனுபவம்
- ‘ரிஷி’யின் கவிதைகள்
- சிங்கப்பூர் தேசிய தினம் 44
- பசி:
- நேற்று தொடங்கிய ஒரு மழைக்காலம்
- உடைந்த பொம்மைகள்
- சம்பவம்
- இடைவெளி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு காதலனின் அழைப்பு >> கவிதை -14 பாகம் -2 (முன் பாகத் தொடர்ச்சி)
- வழியனுப்பு
இலவசக் கொத்தனார்

தலையெழுத்து பற்றி எல்லாருக்கும் தெரியும். ஆனால் குறுக்கெழுத்து தெரியுமா? தெரிய வைப்பதற்கான ஒரு சிறிய முயற்சி இது. குறுக்கெழுத்து பொதுவாக இரு வகைப்படும். நேரடியாகக் கேள்வி ஒன்றை கேட்டு அதற்கான விடையை கட்டங்களில் நிரப்புவது என்பது முதல் வகை. ஆங்கிலத்தில் இவற்றை Quick Clues எனச் சொல்லுவார்கள். நேரடியாகச் சொல்லாமல் சுற்றி வளைத்து வெவ்வேறு கோணங்களில் யோசித்து விடை கண்டுபிடிப்பது இரண்டாம் வகை. இவை Cryptic Clues என்ற வகையைச் சாரும். இந்த வகைப் புதிர்களே ஆர்வலர்களுக்கு மிகுந்த சுவாரசியம் தருபவை. இந்த முறைப் புதிர்களை அவ்வப்பொழுது திண்ணையில் தரலாம் என்பது என் எண்ணம்.
பொதுவாக குறிப்புகள் இரண்டு பாகங்களாக இருக்கும். ஒரு பகுதி விடையின் பொருளை தருவதாகவும் மற்றொரு பகுதி அந்த விடையை அடைய ஒரு வித்தியாசமான கோணத்தை தருவதாகவும் இருக்கும். உதாரணமாக ”குதிரையைக் குளிப்பாட்டினால் தூய்மையாகுமே (6)” என்று ஒரு குறிப்பு இருந்தால் குதிரை என்றால் பரி, குளிப்பாட்டுவது என்பது சுத்தம் செய்வது. இரண்டும் சேர்ந்தால் பரிசுத்தம் அதாவது தூய்மை ஆகிறது. ஆக பரிசுத்தம் என்பது இந்தக் குறிப்பிற்கான விடை. இன்னும் சில உதாரணங்கள் பார்த்தோமானால்.
நடு இரவில் சூரியன்! (2)
விடை: ரவி. இதன் பொருள் சூரியன், இந்த விடையே `இரவில்’ என்ற வார்த்தையின்நடுவில் வந்துள்ளது.
லக்ஷ்மி தமிழ்ப்பெண்ணாக முடியாவிட்டாலும் குறிக்கோளை அடைவாள் (4)
விடை: இலக்கு. இந்த வார்த்தையின் அர்த்தம்`குறிக்கோள்’. லக்ஷ்மி எப்படித் தமிழ்ப் பெண்ணாவாள்? `இலக்குமி’ என்றாகும்போது! `இலக்குமி’ என்ற வார்த்தை முடியாவிட்டால் (அதாவது, முழுதாக வராவிட்டால்) விடை வரும்.
தொடர்ந்து போடப் போட இந்த முறைகள் எளிதாகக் கைவசப்படும். தமிழில் இது போன்ற புதிர்கள் மிகவும் குறைவு. டாக்டர் வாஞ்சிநாதன் மட்டுமே எனக்குத் தெரிந்து அம்பலம், தென்றல் என தொடர்ந்து புதிர்கள் அளித்து வருகிறார். மேற்கண்ட உதாரணங்கள் அவரின் கைவரிசைதான். என்னைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் அவருக்கு நன்றி. இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.