This entry is in the series 20110430_Issue

இளங்கோ


*
துர்மரணத்தின் பின் கதவு
ரகசியமாகத் தட்டப்படுகிறது

அது மரத்தாலானது
அதன் கெட்டித்துப் போன கடைசலில்
செதில்கள் சொரசொரத்துவிட்டன

தன்
மென் தட்டலில்
ஓசையெதுவும் கடத்துமெண்ணம்
ஏதுமில்லை

காற்று உடைக்கும் சிறிய இடுக்கில்
கசியும் ஒலியை
விசும்பல் மூச்சென
அர்த்தப்படுத்துக் கொள்ளும்

கனவு

துயரத்தின் மொழிபெயர்ப்பை
விடியலில் அடுக்கி வைக்கிறது
எழுது மேஜையில்..

******
–இளங்கோ

Series Navigation