கண் திறக்கும் தருணம்..

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

இளங்கோ


*
மௌனக்கோட்டில்
புள்ளிகள் கொத்துகிறான்
ஒருவன்

சொற்களின் கூர் பட்டுத்
தெறிக்கின்றன பிசிறுகள்

கண் திறக்கும் தருணத்தில்
உடைந்து விழுகிறது
மௌனம்

*****
–இளங்கோ

Series Navigation

இளங்கோ

இளங்கோ