இனிமையானவளே!
Published January 9, 2011 • By
சபீர்
சபீர்
நீ
வாங்கித் தந்த
விடிகாலையும்…
உனக்காக
விற்றுத் தீர்த்த
அந்தி மாலையும்
மட்டு மல்லாது…
நடுநிசியும் நன்பகலும்
முன்னிரவும் முதிர்காலையும்
என-
எக்காலமும்
உன் நினைவுகள்!
உன்
கனிந்த
கன்னங்கள்
கவிதை பாடின,
அதில்
குவிந்த
எண்ணங்கள்
எதையோ நாடின!
நீயோ…
கிடைத்தும் கிடைக்காமல்
உண்டும் செரிக்காமல்
இரத்ததோடு
கலக்காத குளுக்கோஸாய்
என் சர்வமும்
வியாபிக்கிறாய்!
நானோ…
இனிப்பின்மேலான
இச்சையோடு
நீரிழிவுக்காரனைப் போல…!