This entry is in the series 20060428_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


பூரித்துப் போனதுவோ,
உனையும் மீறி
ஆனந்தக் கூத்தின்
தாள இசை?
அந்தப் பயங்கர எக்களிப்பில்,
உந்தன் தாண்டவம்
கலக்கி விடுகிறது,
உலகினை ஆட்டி வைத்தும்,
ஒளிந்து தெரியாமல்,
துண்டாக்கி விட்டும்!
அண்டங்கள் அனைத்தும்
ஒருகணமும் நிற்காது
முன்னோக்கிக்
கதி வேகத்தில் செல்லும்!
பின்னே திரும்பாது!
எந்தப் பேராற்றல் சக்தியும்
முந்தி
நிறுத்திட முடியாது!
அவை எல்லாம்
ஓடிக் கொண்டே உள்ளன
ஓயாமல்!

ஓய்வற் றியங்கும்
விரைவான
இசைக்கேற்ப எட்டெடுத்து
வைத்து மாறிவரும்
காலங்களின்
தாளத்துக்கு ஒத்தபடி,
நடன மாடிக் கொண்டு
பன்னிற வண்ணங்கள் மாற்றி,
பண்ணிசையில் ஆரவாரித்து,
எண்ணற்ற வகையில்,
நறுமணங்களை அலை அலையாய்ப்
பரப்பிக் கொண்டு
வரையறை யில்லாத
மகிழ்ச்சி பொங்கி
கடிது செல்லும்!
சிதறியும், சிதைந்து விடாமலும்
மடிகின்றது,
ஒவ்வொரு கணமும்!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (April 23, 2006)]

Series Navigation