- வித்யாசாகரின் ரசிகை
- நாலு வயது
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-12)
- ரோஜாப் பூக்கள்
- கீதாஞ்சலி (44) எப்போதும் வருகிறானே! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- அலறியின் மூன்று கவிதைகள்
- அப்பா (உள்ளது உள்ளபடி)
- பாறையின் இதழ்கள்
- காட்சி மாற்றங்கள்
- பெரியபுராணம் – 60 (திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )
- உயிர் வாழ்தல் என்பது
- கவிதை
- நிர்மூலமாக்கிய ஹரிக்கேனால் நியூ ஆர்லியன்ஸ் நகர மாந்தர் வெளியேற்றம் [2] (Mass Exodus in New Orleans City After Hurricane Katrina
- கஜினி திரைப்படம்- எழுத்தாளர்களுக்குச் சொல்வது….
- தவளை-மனிதர்களின் இயக்க வரலாறு குறித்து ஒரு நூல்
- வள்ளுவரை வசைப்பாடிய சிரிப்பு நடிகர் எஸ்.எஸ். சந்திரன்!
- சிந்திக்க ஒரு நொடி – கற்பும் கற்பிதங்களும்
- விமர்சனக் குரல்களின் உலகம் (நான்காவது ஆணி – மலையாளச் சிறுகதைத்தொகுதி அறிமுகம்)
- தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம், சிறப்புப் பேரவை,சென்னை
- கவிஞர் புகாரியின் இருநூல்களின் இனிய வெளியீட்டு விழா
- கடிதம்
- கடிதம்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

அமைதியாக அவன் வைக்கும்
காலடிகள்
அரவத்தை உன்
காதுகள் கேட்க வில்லையா ?
வருகிறான், வருகிறான், எப்போதும்
வருகிறானே!
வருகிறான் ஒவ்வொரு யுகமும்!
வருகிறான் ஒவ்வொரு கணமும்!
வருகிறான் ஒவ்வொரு நாளும்!
வருகிறான் ஒவ்வோர் இரவும்!
வருகிறான், வருகிறான், எப்போதும்
வருகிறானே!
வெவ்வேறான என் மனோநிலைப்
பின்னலில்
எண்ணற்ற கீதங்களை
இசைத்துப்
பாடி இருக்கிறேன்!
என் கான இசையெல்லாம்
முழக்கிடும் எக்காலம்,
வருகிறான், வருகிறான், அவன்
எப்போதும் வருகிறான்,
என்பதை!
வேனற் காலச் சித்திரை மாதம்
கானகப் பாதையின் மீது
நறுமணம் பரவிடும்,
நாட்களில்
வருகிறான், வருகிறான், அவன்
எப்போதும் வருகிறானே!
ஆடி மாதக்
கோடை மழை
கொட்டி முழக்கும் போது
இருண்ட வானில்
இரவு வேளைகளில்
கருமுகில் இடி இரதத்தில்,
வருகிறான், வருகிறான், அவன்
எப்போதும் வருகிறானே!
இடர்மேல் இடராய் அமுக்கி,
அவனது கால் மிதிப்புகள்
தடமிட்டு எனது
நெஞ்சத்தில் பளுவாய் அழுத்தும்!
ஆயினும் அவனது
மென்மையான பாதங்களின்
பொன்மயமான
தொடுகை எந்தன்
பூரிப்பில்
பேரொளி ஊட்டும்!
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (October 9, 2005)]