This entry is in the series 20051021_Issue

தேவமைந்தன்


அந்தக் காலத்தில் அரசர்களின் சபைகளில் ‘கவிதைகளை வாசித்தல் ‘ என்ற

ஒரு பிரிவேளை(Session) இருந்திருக்கிறது. ஆதாரம், நாலடியாரில் இடம் பெறும்

‘ ‘பாடமே ஓதி… ‘ ‘ என்ற பாட்டு. அவரவர்களே இயற்றிய கவிதைகளை வாசிப்பதைத்

திருவிளையாடற் புராணம் முதலியவை சொல்லியுள்ளன. ஆனால் இது அடுத்தவர்

கவிதைகளை வாசித்தல், அவற்றின் பொருள் – நயம் – நுட்பம் மொழிதல் பற்றியது.

நாலடி வெறும் விவரம் மட்டுமே தரவில்லை. ஒரு விமர்சனத்தையும் முன்ை

வக்கிறது. வாசிப்பு, மறுவாசிப்பு, மீள்வாசிப்பு, பின்வாசிப்பு, முன்வாசிப்பு,பக்கவா

ட்டு வாசிப்பு என்று இன்னும் பல வாசிப்பு வகைகளை முன்வைத்துக்கொண்டே ே

பாகும் ‘மெத்தப் படிப்பாளி ‘களுக்குப் படையல் இது.

ஒரு கவிதையின் பொருண்மையை உள்ளபடி வெளிப்படுத்துதல்தான் வாசிப்பு;

தான் விரும்பியபடியெல்லாம் அல்ல. தான் விருது – பட்டம் – பட்டயம் ‘ ‘வாங்கிய ‘ ‘

தடங்களின்படியெல்லாம் அல்ல. அதாவது, அதில் இயல்பாக விழுந்து விை

ளந்துவிடும் இருண்மையை உடைத்துச் சிதறி, ஆழவே உள்நுழைந்து, கருவிடத்தி

ல்(nucleus) தியானம் பண்ணிக் கொண்டிருக்கும் பொருண்மையைத் தரிசித்து, ‘ ‘அது,

இதுதான்! ‘ ‘ என்று எல்லோருமறிய வெளியே வந்து எடுத்துரைப்பதுதான் ‘வாசிப்பு. ‘

இது தெரியாதவனைத்தான் நாலடி பகடி பண்ணுகிறது.

ஒரு கவிதையை மட்டுமே வாசித்துவிட்டு, அதாவது ஒரு கவிதையின் மூலப்

பிரதியை மட்டுமே வாசித்துவிட்டு, அக்கவிதையின் பொருண்மையைத் தாம் அறிய

ாமல் முன்னமர்ந்து செவிமடுப்பவர்களுக்கும் புரியும்படியாக எடுத்துரைக்க மாட்டா

தவர்கள், மூலப்பிரதிகளை வாசித்துப் பொருண்மை நுகரும் ஆற்றலுள்ளவர்கள்

அகங்கடுத்து உளையும் வண்ணம் – குற்றமாகப் பொருண்மையை வெளிவரவிடா

மல் உள்ளழுத்திப் பல வெற்றுச் சொற்களை உளறும்பொழுது, அந்த வாசிப்புத் தி

றன்மிக்கவர்கள் எப்படிச் சகித்துக் கொள்வார்கள் என்றால்….

இப்படி வாசிப்பு உணாராதவனை, இந்த அரசவையில் இதற்காக இவனை ந

ாம் அவமானப் படுத்தினால், இவனைப் பெற்ற தாய் அதைக் கேள்விப்பட்டு

வருந்துவாளே என்று சுரக்கும் இரக்கத்தினால், அவனுடைய பிழைபட்ட வாசிப்பே

ாடு அவனையும் சேர்த்து சகித்துக்கொள்வார்களாம்.

‘ ‘பாடமே ஓதி ‘ ‘ என்ற முதற்பகுதியில் வரும் பாடம் என்பதற்கு மூலப் பிரதி

என்று நோம் ச்சோம் ?கி நோக்கில் பொருண்மை கொள்ள உதவினார், மறைந்த

புலவர் குழந்தை.(நீதிக் களஞ்சியம் 1962)

****

pasu2tamil@yahoo.com

20051021_Issue

சுவாசலயம்