- தாகூரின் கீதங்கள் – 51 மீண்டும் உனக்கு அழைப்பு !
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -6
- பிம்பங்கள்.
- அண்ணலே நீக்குவாய் இன்னலே
- கடவுளானேன்.
- வனாந்திரத்தின் நடுவே..
- வேதவனம் -விருட்சம் 6
- “கிளர்ச்சி”
- அண்டவெளியில் நீந்திய முதல் ஆசிய விண்வெளித் தீரர் !
- நீர் வளையங்கள்
- இந்திய இலக்கியம்: வாழ்க்கைக் கூறுகளும் பண்பும்
- கிராமியப் பாடல்களில் கட்டபொம்மன்
- எம்.எஸ்.வெங்கடாசலம் அவர்கள் எழுதிய “நான் கண்ட அண்ணா “
- பெண் படைப்புலகம் – இன்று – விழுப்புரம் தென்பெண்ணை கலை இலக்கியக் கூடல் நடத்தும் கருத்தரங்கம்
- இசைபட…!
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 11 (இறுதிக் காட்சி)
- மனிதமென்னும் மந்திரம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் பத்து
- சுமை
- உதவி
- என் பெயர் ஒளரங்கசீப்!
- அப்பாச்சி
- அப்பாச்சி -2
- நினைவுகளின் தடத்தில் – (20)
- காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 2
- நவராத்திரி – பசுமையான நினைவுகள்
- காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 3
- காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 4
- ஒளியூட்டுவிழா
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

“உன்னத மனிதர் படைப்பு மேலானவர் (தம்பதிகள்) தேர்ந்தெடுப்பிலும், குழந்தைச் சீராக்க முன்னோக்குச் சிந்தனையிலும் (Eugenics Foresight), உயர்ந்த கல்வி புகட்டுவதிலும் உருவாக்கக் கூடியது !”
“தனிப்பட்ட உயர்ந்த மானிடர் காதலுக்காக மணம் புரிய விட்டு விடுவது எத்தனை அபத்த மானது ? மேலான தீரர்கள் வேலைக்காரியை மணப்பது, மேதைகள் (Genius) தையல்காரியை மணப்பது வியப்புக்குரியது ! ஜெர்மன் வேதாந்தி ஆர்தர் சோபெனர் (Schopenhauer) காதலை “யூஜினிக்ஸ்” (Eugenics) என்று கூறியது தவறு ! (Eugenics : தக்க பெற்றோரைத் தேர்ந்தெடுத்துப் பிறக்கும் குழந்தைப் பண்பாட்டைச் சீராக்குவது). ஒரு மனிதன் காதலில் மூழ்கிக் கிடந்தால், அவனது எதிர்கால வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்படும் தீர்மானங்களை அவன் எடுக்க அனுமதிக்கக் கூடாது ! காதலுக்கு முன்னிடம் அளித்து அறிவோடு வாழ மனிதனுக்கு ஏற்புடமை இல்லை ! காதலரின் சபதங்கள் பயனற்றதாக நாம் பறைசாற்ற வேண்டும். மேலும் உயர்ந்த இல்வாழ்வுக்குக் காதல் தடையானது என்று சட்டப்படி அது தவிர்க்கப்பட வேண்டும். மேலான ஆடவர் மேலான மாதரை மணக்க வேண்டும். விதிமுறை இல்லாத கும்பலுக்கு (Rabble) காதல் ஒதுக்கப்பட வேண்டும். திருமணம் செய்து கொள்வதின் குறிக்கோள் சந்ததி விருத்திக்கு மட்டுமில்லாது, சந்ததி உயர்வுக்கும் உரியது என்று மேற்கொள்ளப்பட வேண்டும் !”
(உதாரண உன்னத மனிதர் சிலர் : சாக்ரெடிஸ், கௌதம புத்தர், ஏசு நாதர், நபி நாயகம், ஜியார்ஜ் வாஷிங்டன், ஆப்ரஹாம் லிங்கன், லெனின், லியோ டால்ஸ்டாய், விவேகானந்தர், இரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி, மாசேத்துங், மார்டின் லூதர் கிங், நெல்ஸன் மாண்டேலா, ஆல்பர்ட் ஸ்வைஸர், அன்னை தெராஸா போன்றோர்)
·பிரடெரிக் நியட்ஸே, ஜெர்மன் சித்தாந்த ஞானி
(Friedrich Nietzsche) (1844-1900)
ஆண் பெண் உடல் உறவோடு வாழ்க்கை உந்துசக்தியின் நீட்சி நின்று போவதில்லை. இல்வாழ்க்கையின் மகத்துவம் வெறும் ஆண் பெண் உடலுறவு மட்டுமில்லை ! உடலுறவு ஒர் வினையூக்கி ! வாழ்க்கையின் பிறவிப்பயன் அறிவுள்ள ஒரு மகவைப் பெறுவது ! அதன் உடற்நலம் பேணி, உயர்ந்த கல்வி புகட்டி, உன்னதப் பிறவியாய் ஆக்குவதே தம்பதிகளின் முக்கியப் பணி ! அப்படி ஒரு குறிக்கோள் இல்லாவிட்டால் வாழ்க்கையின் உந்துசக்தி தோல்வி அடைகிறது ! (தக்கார் தகவிலர் என்பது அவரவர் “மக்களால்” காணப்படும்.)
தாஞ் சுவான் (உன்னத மனிதன் நாடகம்)
“மனிதன் தன் இயற்கைத் தன்மை மட்டத்துக்கு மேல் உயர்ந்திடப் போராடும் போதுதான் (மெய்யான) மனிதன் ஆகிறான். அந்த உன்னதப் பண்பாடு அவனது உள்ளத்திலும் வெளிப்புறத்திலும் எழ வேண்டும். ஓவ்வோர் இனத்தின் ஆற்றலுக்கு ஆணிவேர் அதன் ஆன்மீக உணர்வில் ஒளிந்திருக்கிறது. அந்த ஆன்மீக உணர்வு தேய்ந்து உலோகாயுதம் (Materialism) ஆட்கொள்ளும் போது அந்த இனத்துக்கு மரண நாள் தொடங்குகிறது !
மெய்ப்பாடு (Truth) என்பது எந்த ஒரு பூர்வீக அல்லது நவீனச் சமூகத்துக்கும் அடிபணிவதில்லை ! அந்தச் சமூகந்தான் மெய்ப்பாடுக்குத் தலை வணங்க வேண்டும் அல்லது வழிபடாது மடிய வேண்டும் !
புத்தரிடம் உலக நாடுகள் போற்றும் உன்னத இதயம் இருந்தது. மதத்தை ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் கொண்டுவந்து அதனை மனித நடைமுறைக்கு அமைத்த எல்லையற்ற பொறுமை அவரிடம் இருந்தது. . . . . ஞானச் சூரியன் புத்தர் இதயத்தோடு சேர்ந்து வரையறை யில்லா அன்பும் பரிவும் மேலோங்குவது இன்றைய உலகில் நமக்குத் தேவை. அத்தகைய சேர்க்கை நமக்கு உன்னத வேதாந்த சிந்தனை அளிக்க வல்லது. . . . . விஞ்ஞானமும், மதமும் சந்தித்துக் கைகுலுக்க வேண்டும்.
கர்மயோகி விவேகானந்தா (1863-1902)
+++++++++++++++++++
உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)
அங்கம் : 4 பாகம் : 10
(சுருக்கப் பட்டது)
நடிகர்கள்:
1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி
6. ஹெக்டர் மலோன் (Hector Malone) – ஓர் அமெரிக்கன்
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலெட் ராபின்ஸன் (Violet Robinson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)
**************
(அங்கம் : 4 பாகம் : 10)
(இறுதிக் காட்சி)
கதா பாத்திரங்கள்: அக்டேவியஸ், மிஸிஸ் வொயிட்·பீல்டு, ஜான் டான்னர்.
காலம்: பகல் வேளை
இடம்: ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் தற்போது தங்குமிடம் தெற்கு மலைப் பகுதி : கிரனாடா, ஸ்பெயின்.. தங்கு மாளிகையின் பின்புறப் பூங்கா.
(காட்சி அமைப்பு: பூங்காவில் ஜான் டான்னர் இறுதியில் ஆன்னியை மணக்க உடன்படுகிறான். அன்னை மிஸிஸ் வொயிட்·பீல்டு, ரோபக் ராம்ஸ்டன், அக்டேவியஸ், வயலட், ஹெக்டர் மலோன் அனைவரும் தம்பதிகளை வாழ்த்துகிறார்.)
ஜான் டான்னர்: ஆன்னி ! இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் வரவில்லை. எப்போது விடியும் என்று காத்திருந்தேன் !
ஆன்னி வொயிட்·பீல்டு: ஜான் ! ஏன் உனக்குத் தூக்கம் வரவில்லை ?
ஜான் டான்னர்: உன் தந்தை தன் உயிலில் உனக்குக் காப்பாளியாக என்னைத்தான் குறிப்பிட்டிருக்கிறார். உனக்குகந்த மணமகனைத் தேடும் வரை எனக்கு உறக்கம் வராது ! உணவும் சரியாக உண்ண முடிய வில்லை ! ஆன்னி, உன் திருமணப் பிரச்சனை உனக்கு மட்டுமில்லை ! எனக்கும்தான் ! அதில் பொறுப்பிருக்கிறது எனக்கு !
ஆன்னி: எனக்கு மணமகன் இல்லாமல் போனால் என்ன செய்வாய் ? உயிரை விட்டு விடுவாயா ? அல்லது ஓடிப் போய் விடுவாயா ?
ஜான் டான்னர்: உயிரை விட மாட்டேன் ! உன்னைத் தனியே விட்டு ஓடிப் போக மாட்டேன் ! உன் வீட்டு வாசலில் உட்கார்ந்து யோசனை செய்வேன் ! ஒருவரும் உன்னை மணக்கா விட்டால் நானே உன்னை ஏற்றுக் கொள்வேன் !
ஆன்னி: வீட்டு வாசலில் கிடப்பதற்குப் பதிலாக வீட்டுக்குள் வர உனக்கு மனவலு வில்லையா ? தைரியம் இல்லாத ஆண்மகனை நான் கண்ணாலும் காண மாட்டேன் ! மனதாலும் நினைக்க மாட்டேன் ! கரத்தாலும் தொட மாட்டேன் ! உயிலுக்காக என்னை மணப்பதாய்ச் சொல்ல உனக்கு நாணமில்லையா ? கடமைக்காக நீ என் கணவனாக நடிக்கப் போகிறாயா ?
ஜான் டான்னர்: ஆன்னி ! நான் பயந்தாங்கொள்ளி இல்லை ! திருமணத்துக்கு நான் அஞ்ச வில்லை ! சற்று தள்ளிப் போடுகிறேன் ! உன்னை நான் மணந்தால் என் பொறுப்பு பூர்த்தியாகிறது ! உன் தந்தையின் உயிலுக்கு நான் செய்யும் கடமை தீர்கிறது !
ஆன்னி: ஜான் ! என் தந்தை உயிலைக் காப்பாற்ற நீ என்னை மணக்க வேண்டாம் ! அது மூடத்தனமான காரணம் ! காவல் புரிய எனக்கு நீ கணவனாக வேண்டாம் !
ஜான் டான்னர்: உன் திருமண நிபந்தனையை நான் நிறைவேற்ற ஒப்புக் கொண்டால் அப்போது என்னை நீ மணந்து கொள்வாயா ?
ஆன்னி: அப்படி வா வழிக்கு ! இப்போதுதான் மூடிப் போன உன் மூளை திறக்கிறது ! எந்த நிபந்தனையைச் சொல்கிறாய் ?
ஜான் டான்னர்: நேற்று நீ சொன்னாய் அல்லவா ? வாழ்க்கையின் பிறவிப்பயன் அறிவுள்ள மகவைப் பெறுவது ! அதன் உடற்நலம் பேணி, உயர்ந்த கல்வி புகட்டி, உன்னதப் பிறவியாய் ஆக்குவது ! அந்த நிபந்தனை.
ஆன்னி: நிபந்தனைக்கு ஒப்புகிறேன் என்றால் என்ன அர்த்தம் ? என் நிபந்தனைக்கு எப்படி நீ உதவி செய்வாய் ?
ஜான் டான்னர்: உன்னத பிறவிகளை எப்படித் இல்வாழ்க்கைத் தம்பதிகள் படைப்பது ? முதலில் தம்பதிகளுக்கு உயர்ந்த சிந்தனையும், நோயற்ற உடம்பும் இருப்பது நல்லது. நம் இருவருக்கும் உள்ளது. அடுத்து ஆழ்ந்த கல்வி அறிவும் அனுபவமும் இருப்பது அவசியம். நம்மிருவருக்கும் இருக்கிறது. நல்ல கலை ஞானம், இசை ஞானம் இருப்பது மேலானது ! உனக்குக் கலை ஞானம் உள்ளது. எனக்கு இலக்கிய அறிவு சிறிது உண்டு. நினைத்துப் பார்த்தேன் ! ஏன் நானே உன்னைத் திருமணம் செய்யக் கூடாது ?
ஆன்னி: என் நிபந்தனைக்கு ஒப்புதல் தெரிவிக்கும் ஆணை நான் வேண்டாம் என்று விலக்குவேனா ? நீயே எனக்கு நிகரானவன் !
ஜான் டான்னர்: (திடீரென்று மண்டிக்காலிட்டுப் பரிவோடு) ஆன்னி ! என்னை நீ மணஞ் செய்து கொள்கிறாயா ? இப்போதே சொல் !
ஆன்னி: (புன்முறுவல் பூத்து) யார் என்முன் மண்டி யிடுவது ? வணங்காமுடி ஜான் டான்னரா ? நம்ப முடிய வில்லையே ! நானிதை எதிர்பார்க்க வில்லை !
ஜான் டான்னர்: ஆன்னி ! என்ன சொல்கிறாய் நீ ? திருமணம் செய்து கொள்ள மாட்டாயா ? உன்னுடன் வாழ்நாள் பூராவும் வாழ விழைறேன், என் ஆயுள் முழுதும் !
ஆன்னி: நீ சொல்வதெல்லாம் உண்மையா ? உன்னை நான் எப்படி நம்புவது ? என்னை விட இன்னும் அழகி, அறிவாளியைக் காண நேர்ந்தால் என்னை உதாசீனம் செய்ய மாட்டாய் நீயென்று எப்படி அறிவது ?
ஜான் டான்னர்: நான் அப்படித் திடீர்க் கவர்ச்சியில் சிக்கிக் கொள்ளும் அற்பன் இல்லை. அதற்கு நான் உறுதி அளிப்பேன் ! என்னை நீ நம்பு !
ஆன்னி: நான் நோய்வாய்ப்பட்டு நோய்ந்து போனால் என்னை ஒதுக்குவாயா ?
ஜான் டான்னர்: உன்னருகில் இருந்து நோயைக் குணப்படுத்துவேன் ! உன்னை விட்டு ஒருபோதும் நீங்க மாட்டேன் !
ஆன்னி: வருவாய் குறைந்து நமக்கு வறுமை பீடித்தால் என் மீதுள்ள பிரியம் சலித்து விடுமா ?
ஜான் டான்னர்: ஊதியம் குறைந்தாலும் என் உள்ளன்பு குன்றாது கண்மணி !
ஆன்னி: நீ அழுத்தமாக வாக்களிப்பதால் உன்னை மணக்க உடன்படுகிறேன், ஜான்.
ஜான் டான்னர்: (கையை முத்தமிட்டு) நன்றி ஆன்னி நன்றி. எங்கே என்னை மறுத்து விடுவாயோ என்று அஞ்சினேன் !
(அப்போது தாய் மிஸிஸ் வொயிட்·பீல்டு, ராம்ஸ்டன், அக்டேவியஸ், வயலட், ஹெக்டர் மலோன் யாவரும் மாளிகையிலிருந்து பூங்காவுக்கு வருகிறார்கள்)
ஆன்னி: (மகிழ்ச்சியுடன்) வாருங்கள், எல்லோருக்கும் ஒரு நல்ல செய்தி !
வயலட்: (ஆர்வமுடன்) என்ன செய்தி ? ஜான் உன்னைத் திருமணம் புரிய ஒப்புக் கொண்டு விட்டாரா ?
ஜான் டான்னர்: (எழுந்து நின்று) இல்லை வயலட் ! ஆன்னி என்னைச் சிறைப் படுத்தி விட்டாள் ! இப்போது நானொரு கூண்டுக் கிளி ! தப்பி நான் ஓட முடியாது. எனக்கு நிரந்தரக் கால்கட்டு போட்டு விட்டாள் !
ராம்ஸ்டன், ஹெக்டர் மலோன்: வாழ்த்துக்கள் இருவருக்கும் ஜான், ஆன்னி ! (எல்லாரும் தம்பதிகள் கைகளைக் குலுக்குகிறார்)
மிஸிஸ் வொயிட்·பீல்டு: எனக்கு முன்பே தெரியும் என்னருமை மகள் ஜானுக்குக் கால்விலங்கு போடுவாள் என்று ! நினைப்பதைச் சாதிப்பவள் என் மகள் !
ஆன்னி: (ஆர்வமுடன்) வயலட் ! உனக்கு எப்போது குழந்தை பிறக்கும் ?
வயலட்: எங்கள் திருமணத்துக்குப் பிறகு !
மிஸிஸ் வொயி·பீல்டு: (ஆர்வமுடன்) உங்கள் திருமணம் எப்போது நடக்கும் ?
வயலட்: (கவலையுடன்) எனக்குக் குழந்தை பிறந்த பிறகு !
ராம்ஸ்டன்: இதென்ன வேடிக்கையாய் இருக்கிறதே ! குழந்தை எப்போது பிறக்கும் ? திருமணத்துக்குப் பிறகு ! திருமணம் எப்போது நடக்கும் ? குழந்தை பிறந்த பிறகு ? இந்தச் சுற்றுப் பேச்சு எனக்குப் புரியவில்லையே !
ஜான் டான்னர்: ஹெக்டர் ! ஏன் விழிக்கிறாய் ? புதிரை விடுவித்துப் புரிய வை !
ஹெக்டர் மலோன்: என் தந்தை திருமண நாள் குறித்த பிறகுதான் தெரியும் ! முதலில் திருமணம் ! பிறகு பேறுகாலம் !
ராம்ஸ்டன்: (கோபத்துடன்) ஹெக்டர் ! நான் சொன்னதாகச் சொல் உன் தந்தையிடம் ! வயலட்டுக்குச் சிரமம் எழாமல் இருக்க சீக்கிரம் திருமணத்தை வைக்கச் சொல் ! மருமகள் மீது வளரும் சிசுவின் மீது ஏதாவது இரக்கம் இருக்கிறதா அந்த மதி கெட்ட மனிதருக்கு ? முதலில் திருமணம் வயலட்டுக்கு ! அடுத்த திருமணம்தான் ஆன்னிக்கு ! இது என் கட்டளை ! போய் ஏற்பாடு செய்யுங்கள் !
(எல்லாரும் சிரிக்கிறார்கள்)
(முற்றிற்று)
***************************
தகவல்
Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)
1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)
3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy – A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973
4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)
5. Joyful Wisdom By : Friedrich Nietzsche (1971)
6. The Wisdom of India By : Emmons E. White (1968)
7. Friedrich Nietzsche – The Story of Philosophy By: Will Durant (1959)
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 30, 2008)]
நியட்ஸே தன் படைப்பைப் படிப்போன் ஒவ்வொருவனும் ஓர் உன்னத மனிதனாகத் தன்னை நினைத்துக் கொள்வான் என்று எதிர்பார்த்தது தெரிகிறது. அதனைத் தவிர்க்கும் பொருட்டு உன்னத மனிதன் இன்னும் உதிக்க வில்லை என்று அவர் வெளிப்படுத்திக் கொள்கிறார் ! நாம் உன்னத மனிதனின் முந்தைய வழித்தோன்றல் ! இந்த மண்ணகம் அவனுக்கு உரியது ! உன் உடல் வலுவுக்கு உட்படாதது எதுவும் இல்லை. அத்துடன் உன் சக்திக்கு மீறிய பண்பாட்டில் இறங்காதே என்றும் எச்சரிக்கிறார். 
உன்னத மனிதன் நீடித்து வாழ்வான் என்று சொல்வோம் நாம். உன்னத மனிதனுக்குக் கல்வி புகட்டுவேன் நான். மனிதன் இருப்பதை விட மிஞ்சி மேலுயர, உன்னதம் பெற வேண்டும். மனிதன் மனிதனை மிஞ்சி உன்னதம் அடைய நீவீர் என்ன செய்துள்ளீர் ?
ஆக்க சக்தி, கூரிய யுக்தி, சுயமதிப்பு உறுதி ஆகிய மூன்றும் உன்னத மனிதனுக்கு வேண்டிய திறம்பாடுகள். அம்மூன்றும் செம்மையான சீரமைப்பில் இணைந்திருக்க வேண்டும், மனித உள்ளுணர்ச்சிக்கு வசப்பட்ட ஆசைப்பணிகள், நாட்டுக் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்தி உன்னத குறிக்கோளை நோக்கி மக்களை ஒன்றுபடுத்தி வெற்றி பெறும் போது அப்புரட்சியின் தளபதி உன்னத மனிதனாக உயர்கின்றான். (உதாரணம் : சாக்ரெடிஸ், கௌதம புத்தர், ஏசு நாதர், நபி நாயகம், ஆப்ரஹாம் லிங்கன், மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங், லெனின், மாசேத்துங், அன்னை தெராஸா, விவேகானந்தர் போன்றோர்)
காத்துக் கொண்டு உட்கார்ந் திருந்தேன்
ஆக்க சக்தி, கூர்மையான யுக்தி, சுய உறுதி ஆகிய மூன்றும் உன்னத மனிதனுக்கு வேண்டிய திறன்பாடுகள். அம்மூன்றும் செம்மையான சீரமைப்பில் இணைந்திருக்க வேண்டும், மனித உள்ளுணர்ச்சிக்கு வசப்பட்ட ஆசைப்பணிகள், நாட்டுக் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்தி உன்னத குறிக்கோளை நோக்கி மக்களை ஒன்றுபடுத்தி வெற்றி பெறும் போது அப்புரட்சியின் தளபதி உன்னத மனிதனாக உயர்கின்றான்.
உயர்தரக் கல்வியும் ஆத்ம வளர்ச்சியும் பெற்ற மனிதன் நல்வினைக்கும் தீவினைக்கும் அப்பாற் பட்டவன். தன் குறிக்கோள் பணிகளுக்குத் தானே ஆட்சியாளனாக முன் நிற்பவன். நன்னெறிக்கும் மேலாக இருப்பது அச்சமின்மை. நன்னெறி என்பது என்ன ? உள்ளச் செம்மையும், உறுதியும் அடைவது நன்னெறி. மனிதனிடம் ஆத்மச் சக்தியை மிகைப்படுத்துவது, ஆற்றலைக் கைக்கொள்ள உறுதி பெறுவது, ஆற்றல் நெறி மட்டுமே உன்னத நிலைக்கு அவனை உந்த வைப்பது. பலவீனத்திலிருந்து வருபவை அனைத்தும்
மங்கலம் என்ப மனைமாட்சி, மற்றதன்
“உன்னத மனிதர் படைப்பு மேலானவர் (தம்பதிகள்) தேர்ந்தெடுப்பிலும், குழந்தைச் சீராக்க முன்னோக்குச் சிந்தனையிலும் (Eugenics Foresight), உயர்ந்த கல்வி புகட்டுவதிலும் உருவாக்கக் கூடுமானது !”
உன்னத மனிதனை உருவாக்கு !
உன்னத ஆன்மீக உணர்வு
“உடல் வலுவற்று, உள்ளத் தளர்ச்சியுடன் ஆன்மீகச் சிந்தனையின்றி நெறி இல்லாமல் இருக்காதீர், மேலை நாடுகள் “செய் ! செயல் மூலம் உன் வலுவைக் காட்டு,” என்று சொல்கின்றன. ஆனால் இந்தியா, “இன்னல் படுவதின் மூலம் உன் வலுவைக் காட்டு,” என்று சொல்கிறது. ஒரு மனிதன் வாழ்க்கையில் எவ்வளவு மிகையாக வைத்துக் கொள்ளலாம் என்னும் பிரச்சனையை மேலை நாடுகள் தீர்த்திருக்கின்றன. ஒரு மனிதன் எவ்வளவு குறைவாக வைத்துக் கொள்ளலாம் என்பதை இந்தியா தீர்த்துள்ளது. மனித இனத்தைக் கவர்ந்த பூரண நாகரீகத்தில் (Ideal Civilization) தியாகம் செய்வது, மண்டியிட்டு வழிபடுவது, சுலோகங்களை முணுமுணுப்பது ஆகியவை மெய்யான மதமாகக் கருதப்படா ! வீர தீர கலைத்துவச் செயல் புரிய நம்மைத் தூண்டுவதற்கும், சிந்தனைகளை உன்னதப் படுத்த நம்மை உயர்த்துவதற்கும், தெய்வீகப் பூரணத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கும் உதவி செய்தால்தான் அவை நற்பழக்கமாகும். அவ்விதமின்றி கடவுளை நம் எல்லோருக்கும் பிதாவாகப் பிரார்த்தனையில் கருதி, நாம் ஒவ்வொருவரையும் நமது சகோதரராக அனுதினமும் நடத்தாவிடில் மதத்தால் என்ன நற்பயன் ஏற்படும் ?”
இந்துக்களுக்கு நான் காட்டும் எனது வழிமுறை இதுதான். அவர் எதையும் விட்டுக் கொடுக்க வேண்டி தில்லை. நமது வேத ஞானிகள் வகுத்த பாதையைப் பின்பற்றினால் போதுமானது. அடிமைத் தொழில் உண்டாக்கும் முடக்கத்தை (Inertia, the Result of Servitude) விட்டொழிப்பீர். நம் பாதையில் நமக்கு வகுத்த பாதையில் நாமெல்லாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கும் உலக நடப்பில் முக்கியமாக ஒரு புத்துணர்ச்சி ஓட்டம் (A Main Current) உருவாகியுள்ளது ! இந்தியாவில் அது மதமாக உருவாகி உள்ளது. அதை உறுதி ஆக்குவீர் ! இருபுறத்திலும் ஓடும் நீர் வெள்ளம் அதன் போக்குடன் ஒன்றிச் செல்ல வேண்டும். 
“பிறருக்கு உரிமை அளிக்கத் தயாராக இல்லாதவர் எவரும் சுதந்திரம் அடையத் தகுதி பெறாதவர். நமது சக்தியை வீணான வாய்ப்பேச்சிலும் குறை காணுவதிலும் விரையமாக்காது, நாமெல்லாம் அமைதியாக ஆண்மையுடன் பணிபுரியச் செல்வோம். பிரபஞ்சத்தில் எந்த ஆற்றலும் தானடையத் தகுதியுள்ள யார் ஒருவரையும் அதிலிருந்து தடுத்து நிறுத்த முடியாதென நான் உறுதியாக நம்புகிறேன். நமது கடந்த காலம் உன்னதமாக இருந்தாலும், நான் வரப்போகும் ஒளிமயமான எதிர்காலத்தைத்தான் உண்மையாக நம்புகிறேன் ! இறைவன் நம்மைத் தூயவராகவும், பொறுமை உள்ளவராகவும், விடாமுயற்சி கொண்டவராகவும் ஆக்குவாராக.
“எல்லோரும் போவீர் ! எங்கெல்லாம் பஞ்சம் பரவுகிறதோ, கடும் தொத்துநோய் தாக்குகிறதோ, எங்கெல்லாம் குடிமக்கள் துயர்ப்படுகிறாரோ அங்கு செல்வீர் அவரது துன்பத்தைக் குறைப்பதற்கு ! அந்தப் பணியில் ஒரு வேளை உமது உயிருக்கே ஆபத்து நேரலாம் ! அதனால் என்ன ? உங்களைப் போன்று எத்தனை பேர் மண் புழுவைப் போல் பிறப்பதையும், மடிவதையும் ஒவ்வொரு நாளும் ஏற்றுக் கொள்கிறீர் ? உலகளாவிய முறையில் என்ன வேறுபாட்டை அது உண்டாக்கும் ? உயிரைக் கொடுக்க உமக்கு உன்னத பணிகள் அநேகம் வாழ்க்கையில் உள்ளன. நமது தேசத்தின் எதிர்கால நன்னம்பிக்கை உங்கள் கைவசம் உள்ளது. நீவீர் பங்கேற்காது ஒதுங்கி இருப்பது கண்டு நான் பெரு வேதனைப் படுகிறேன். ஆகவே பணிசெய்யப் புறப்படுவீர் ! ஆமாம் பணி புரிவதற்கு ! கால தாமதம் செய்யாதீர் ! மரண வேளை நாளுக்கு நாள் நெருங்கி வருகிறது ! எல்லாம் பின்னால் செய்யலாம் என்று எண்ணிக் கொண்டு சோம்பிச் சும்மா உட்கார்ந்து இருக்காதீர் ! ஒன்றும் முயலாமல் எதுவும் சாதிக்க முடியாது, கவனம் வைப்பீர். ஆயுள் சிறியது ! உலகப் பகட்டுகள் நிலையற்றவை ! ஆனால் பிறர்க்கென வாழ்பவர் மட்டுமே நீடித்து வாழ்வார்; மற்றவர் உயிரோடு இருப்பினும் செத்தவருக்கு ஒப்பானவரே !
என் அறிவுரையைக் கேட்பீர். கல்லூரியிலிருந்து வெளிவந்த பிறகு உங்களைப் பிறரது பணிக்கென முழுமையாகத் தயார் செய்ய வேண்டும். என்னை நம்புவீர். பெரும் நிதிக் களஞ்சியத்தைப் பெற்றவரை விடவும், விலை மதிப்பில்லாப் பொருட்கள் உமது கைவசம் உள்ளதை விடவும் பேரின்பம் உமக்குக் கிடைக்கும். வறுமை எண்ணங்களைப் புறக்கணித்து விலக்குவீர். எந்த விதத்தில் நீவீர் ஏழையர் என்று கருதுகிறீர் ? அழைத்ததும் ஓடிவரும் வேலை ஆட்கள் இல்லை என்றா, வாகனம் இல்லை என்றா, எதற்காக வருந்துகிறீர் ? அவை இல்லாவிட்டால் என்ன ? உமது இதயக் குருதியில் இரவும் பகலும் பிறருக்காகப் பணி செய்தால், உம் வாழ்க்கையில் சாதிக்காமல் போவது ஏதாவது இருக்க முடியுமா ?
தேச நோக்கத்தில் சிந்தித்தால் நாமெல்லாம் நமது (ஆன்மீகத்) தனித்துவத்தை இழந்துவிட்டோம். அதுவே நமது தீவினைகளுக்குக் காரணம். நாமிழந்துவிட்ட ஆன்மீகத் தனித்துவத்தை மீண்டும் தூண்டிவிட்டுத் தேச மக்களுக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும். இந்துக்கள், இஸ்லாமியர், கிறிஸ்துவர் மூவரும் தமது மக்களைத் தம் பாதத்தின் கீழ் அமுக்கி வைத்திருக்கிறார். அவர்களைத் தட்டி எழுப்பும் சக்தி இந்துக்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளியே வரவேண்டும். எல்லா நாடுகளிலும் மதங்களுக்கு ஆதரவாக இல்லாமல் அவற்றுக்கு முரணாகவே தீவினைகள் எழுகின்றன. பழி சுமத்தப்பட வேண்டியவை மதங்கள் அல்ல, மனித சமுதாயமே ! அதை நிறைவேற்ற முதலில் தகுந்த மனிதர் நமக்குத் தேவை. அடுத்து நிதி உதவி தேவை.
இளைஞர்களே ! மதத்தின் இரகசியம் அதன் கோட்பாடுகளில் இல்லை. செயற்பாட்டில் உள்ளது. நன்னெறி உடையவராகவும் நல்வினை புரிபவராகவும் இருப்பதே மதப் பூரணம் அடைவது. “பிரபு பிரபு” என்று இறைவனை நோக்கிக் கூக்குரல் இடுவதில் இல்லை ! எழுதப்பட்ட மெய்நெறியைக் கடைப்பிடிப்பவர் உண்மையாக மதத்தைப் பின்பற்றுபவர். இளைஞராகிய நீவீர் அனைவரும் உன்னதம் உடையவர். அருகிவரும் எதிர்காலத்தில் உங்களில் சிலர் சமூகத்தின் ஆபரணங்களாக ஒளிவீசுவார். பிறந்த நாட்டின் பேராசிகளைப் பெறுவார். இடையிடையே உங்களுக்கு எதிர்ப்படும் உலகத்தின் புறக்கணிப்புக்கு மனம் தளராதீர் ! அவை எல்லாம் விரைவில் நீங்கி உமக்கு ஆதரவு உண்டாகும். 

ஆன்மீக, தனித்துவக் கல்விப் பயில்முறை ஒன்றை (Spiritual & Secular Education) நாம் உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும். அது என்ன வென்று தெரிகிறதா ? அதைப் பற்றிக் கனவு காண வேண்டும் நீ ! அதைப் பற்றி உரையாட வேண்டும் நீ ! அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் நீ ! அதைச் செயற்படுத்த முனைய வேண்டும் நீ ! அதுவரை (இந்திய) இனத்துக்கு முக்தி இல்லை. தற்போது நீ மேற்கொண்ட கல்வி அமைப்பில் ஒருசில நன்மைகள் இருந்தாலும் அதில் நன்னெறிகளை நசுக்கும் பெரிய பின்னேற்றம் உள்ளது ! அக்கல்வி முறை உன்னத மனிதரை ஆக்குவதற்கு உதவாமல் முரண்பாட்டுக் கல்வியைப் (Negative Education) புகட்டுகிறது ! அத்தகைய கல்விப் பயிற்சி முரண்பாடுகள் மீது கட்டப்படுவது ! மரணத்தை விடக் கொடுமையானது ! பள்ளிக்குச் செல்லும் மாணவர் முடிவாக அறிவதென்ன ? தந்தை ஒரு மூடர்; தாத்தாவுக்கு மூளை கோளாறு; சொல்லித் தரும் ஆசிரியர் யாவரும் வஞ்சகர் ! புனித நூல்கள் எல்லாம் பொய் ! பதினாறு வயதை அடையும் மாணவன் உயிரற்ற, எலும்பில்லாத முரண்பாட்டுப் பொதியாக உருவாகிறான் ! மூளைக்குள் திணிக்கப்படுவை செறிக்காமல், வாழ்நாள் முழுவதும் ஊசிக் கிடக்கின்றன ! பயிலும் கல்வியின் பொதியளவு எத்தனை பெரியது என்பது முக்கியமல்ல ! புத்துயிர் அளித்துப் பண்பாடு வளர்த்து, உயர் மனிதனாக்கும் ஒருமைப்பாட்டுக் கருத்துக்கள் மாணவருக்காக உருவாக்க வேண்டும் ! 
. . . . ஞானி தேவைக்கு மேல் மிகையாக வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டான்.
. . . . மனிதன் தனக்குக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவற விடாமல் பிடித்துக் கொள்ள வேண்டும். 
கலைத்துவப் படைப்பு அதை நுகர்வோரிடம் என்ன பாதிப்பை உண்டாக்குகிறதோ அதுதான் அதன் இயக்க விளைவு. அந்த பாதிப்பு இயக்கமே கலைப் படைப்பின் முக்கியப் பணி. மனிதரது வாழ்க்கையில் எண்ணற்ற கலைத்துவப் படைப்புக்கு ஏற்ற அனுபவங்கள் மறைந்து கிடக்கின்றன. தாலாட்டுப் பாடல், விகடப் பேச்சு, கட்டட அலங்காரம், ஆடை நளினம், ஆபரண அமைப்பு போன்றவை எல்லாம் ஒருவகைக் கலைத்துவப் படைப்புகளே. உணர்ச்சிகளை உண்டாக்கும் மனிதச் செய்கை அனைத்தும் கலைத்துவப் படைப்புகளாகக் கருதப்பட மாட்டா. சிறப்பாகக் குறிப்பிடப் பட்டும் சில மனித அனுபவப் படைப்புகள் மட்டும் கலைத்துவ ஆக்கங்களில் இடம்பெறத் தகுதி பெற்றவை. அந்த முறையில்டான் பண்டைக் கால ஞானிகள் சாக்ரடீஸ், பிளாடோ, அரிஸ்டாட்டில் கலைத்துவப் படைப்புகளைக் கண்டார். 



மனித இனத்தின் மீது விரிந்த மனப்பான்மையில் நமக்கு கடமை இருக்க வேண்டும் என்னும் உள்ளுணர்வு பெற வேண்டிய பெருமையை வரலாறு இன்னும் முழுமையாக அடையவில்லை ! அந்த உணர்ச்சி தற்காலம் வரை மத, இனத் தேச வேறுபாடுகளால் தரங்குன்றிப் போயுள்ளது ! உலக மாந்தருக்குள் ஏற்படுத்தப் பட்டுள்ள அந்நியத் தடுப்பரண்களை நாமின்னும் தாண்டிச் செல்லவில்லை ! 
“எந்த ஒரு மனிதப் பிறவியும் முழுதாகவோ அல்லது நிரந்தரமாகவோ வேறொரு மானிடனுக்கு அன்னியன் அல்லன் ! மனிதன் மனிதனுக்குச் சொந்தமானவன் ! மனிதனுக்கு மனிதன் உரிமை அளிப்பவன் ! பெரிய அல்லது சிறிய சந்தர்ப்பங்கள் மூலமாக மனிதனுக்கு அருகில் மனிதன் நெருங்கி வர அன்றாட வாழ்க்கையில் நம்மை நாமே தள்ளிக் கொண்டு செல்கிறோம் !
“தீரச்செயல்” அல்லது “படைப்பு” – அவ்விரண்டு சொற்களில் எது உயர்ந்ததாகத் தெரிந்தாலும் அவற்றில் எப்போதும் தோல்வி எதிர்பார்ப்பு (Risk) உள்ளது ! தீர்மான முடிவு எடுக்க வேண்டும். குறிக்கோள் ஒன்று இருக்க வேண்டும். அப்பணிகள் புரியும் போது உன்னை யாரென்று காட்டுகின்றன. பொதுவாக அவற்றில் பொதுநபர் ஈடுபாடுகள் இருக்கும். எண்ணியதை விட நீ மேம்பட்டிருப்பதை முடிவாக எடுத்துக் காட்டி உன்னை விரிவு படுத்தும் ! உன் வாழ்வுக்கு ஒரு புது மலர்ச்சியை அளிக்கும்.” 



“நாணத்தை நான் முற்றும் வெல்ல முடிய வில்லை. வெட்கச் சூழ்நிலையில்தான் நாம் யாவரும் வாழ்கிறோம். நம்மைப் பற்றிய ஒவ்வொரு உண்மையைக் கண்டு நாமே நாணுகிறோம். நம்மைப் பற்றி, நம் உறவினரைப் பற்றி, நமது வருவாயைப் பற்றி, நமது மொழி உச்சரிப்பைப் பற்றி, நமது சொந்தக் கருத்துக்களைப் பற்றி, நமது பிறப்பைப் பற்றி, நமது அனுபவத்தைப் பற்றி, நமது அமணத் தோலைப் பற்றி வெளியே சொல்ல நாம் வெட்கப் படுகிறோம். எத்தனை நடைமுறைப் போக்குகளுக்கு ஒருவன் நாணம் அடைகிறானோ, அத்தனை மட்டத்துக்கு அவனது மதிப்பு உயர்கிறது ! என் நூலை வாங்க நீங்கள் வெட்கப் படுகிறீர். அந்நூலைப் படிக்க நீங்கள் வெட்கப் படுகிறீர். நீவீர் வெட்கப் படாதது ஒன்றே ஒன்றுதான் ! என் நூலைப் படிக்காமலே அதற்கு விமர்சனம் அளிப்பது !”


“காதல் மன்னன் தாஞ் சுவான் நாடகம் (Don Juan Play) காமக் கவர்ச்சியைப் பற்றியது. சத்துள்ள உணவைப் பற்றியதில்லை. தீவிரப் பிரச்சனையான காம உணர்வை ஆடவர் விலக்கி அதை மாதருக்கு விட்டுவிட்ட சமூகத்தைப் பற்றியது அந்த நாடகம். அதே போல் சத்துள்ள உணவை மாதர் விலக்கி விட்டு அதை ஆடவருக்கு விட்டு விட்டார்.” 


“நடைமுறையில் உள்ள ஒரு சமூக ஏற்பாடை நீக்கி மற்றுமோர் முறையைப் புகுத்த முயல்பவன் புரட்சியாளி எனப்படுவான் !. . . . பிரெஞ்ச் புரட்சியில் அதுவரை ஆண்டு வந்த அரசாங்க அதிகாரிகள் அகற்றப்பட்டு, வேறொரு விருப்புடைய, கருத்துடைய ஆட்சி முறை புகுத்தப்பட்டது. . . மெய்யான மதாதிபதி ஒவ்வொருவனும் சூனியக்காரன் என்பதால் அவனும் ஓர் புரட்சியாளியே. நடைமுறைச் சமூக ஏற்பாடு அறிவுகள் பெற்று, முப்பது வயதுக்குக் குறைந்த எந்த மனிதனும் புரட்சியாளி இல்லை. அவன் ஒரு தாழ்ந்த மனிதனே.” 

