சில சிந்தனைகள்
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

எல்லா௫ம்
எல்லாமும்
பெற வேண்டும்.
எனக்கு மட்டும்
சற்று கூடுதலாக.
◌
தெய்வத்தால்
ஆகாதெனினும்
முயற்சி
மெய் வ௫த்திக்
கூலி த௫ம்.
◌
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.
நல்ல மனைவியுமா?
◌
மாற்றான் தோட்டத்து
மல்லிகையும் மணக்கும்.
அயல் மகரந்த சேர்க்கையை
பூக்கள்
ஆதரிக்கும் வரை.
◌
தெய்வம்
நின்று கொல்லும்.
ஏன்?
◌
SJEGADHE@tebodinme.ae