This entry is in the series 20080814_Issue

செம்மதி


இறக்கை முறிந்து
இரத்தம் கசிய
குற்றுயிராய்க் கிடக்கிறது
குயில்க்குஞ்சு
தன்குரலைக் காட்டியதால்
அடைகாத்து
தீன்கொடுத்த
ககாங்களால்
கொத்திக்குதறப்படுகின்றன
குயில்களும்
காகங்களும்
கருமையாகவே உள்ளன
குயில்கள் கருமையில்
மறைந்துகொள்ளப் பார்க்கின்றன
குயில்களின் குரல்கள்
இனிமையாகவே உள்ளன
அவற்ரின் செயல்
ரசிக்கும்படியாக இல்லை
காகங்களின் கூடுகளில்
சாதுரியமாக
முட்டையிடும்
குயில்களுக்கு
கூடுகட்டத் தெரியவில்லையா
அல்லது
முயலவில்லையா
என்னும் எவ்வளவு கலம்தான்
காகங்களின் கூடுகளில்
பலியிடப்படும்
இந்தக்குயில்க் குஞ்சுகள்


chemmathy@gmail.com

Series Navigation