- கவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37
- இற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்
- எழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்
- தானாய் நிரம்பும் கிணற்றடி! கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா!
- ஜப்பான் டோகைமுரா யுரேனியச்செறிவுத்தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து(1999 Fatal Accident at Tokaimura Uranium Enrichment Factory)
- இந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,
- இலக்கியத்திற்கு ஒரு ’முன்றில்’…!
- உனை ஈர்க்காவொரு மழையின் பாடல்
- நாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்
- இது மருமக்கள் சாம்ராஜ்யம்
- அகம்!
- அரசியல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)
- கை விடப்பட்ட திசைகள்..
- இவைகள் !
- நம்பிக்கை
- மூலக்கூறுக் கோளாறுகள்..:_
- யார்
- பிரதிபிம்ப பயணங்கள்..
- ஒரு பூ ஒரு வரம்
- சூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11
- அரசியல் குருபெயர்ச்சி
- நட்பு
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1
- யாழ்ப்பாணத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
- தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….
- ரீங்கார வரவேற்புகள்
- வார்த்தையின் சற்று முன் நிலை
- தூசி தட்டுதல்
- நகர் புகுதல்
- திரிநது போன தருணங்கள்
- உதிரமெழுதும் தீர்ப்பின் பிரதிகள்
- முள்ளால் தைத்த நினைவுகளுடன்…..
- சாலைக் குதிரைகள்
- முகபாவம்
- தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி
- இவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1
ரேவதி மணியன்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37 பிடிஎஃப் கோப்பு
இந்த வாரம் तृतीया विभक्तिः (tṛtīyā vibhaktiḥ) Instrumental Case மூன்றாவது வேற்றுமை உருபு (ஆல்) பற்றி அறிந்து கொள்வோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிகளை மனனம் செய்து கொள்ளவும்.
तृतीया विभक्तिः (tṛtīyā vibhaktiḥ) – விதிகள்
1. வினைச்சொல்லுடன் எதனால் / எதை உபயோகித்து என்ற கேள்வியின் பதில் மூன்றாவது வேற்றுமையில் அமையும். (The answer to the question ‘by / with what?’ put on the verb will be in the Instrumental Case.)
उदा – सः हस्तेन कार्यं करोति। ( saḥ hastena kāryaṁ karoti |)
அவன் கையினால் வேலை செய்கிறான்.
सः केन कार्यं करोति ? (saḥ kena kāryaṁ karoti ?)
அவன் எதனால் வேலை செய்கிறான் ?
2. सह , साकं , सार्धम् – these words mean ‘ along with’ or together with’ . (The answer to the question ‘ together with whom? or ‘ along with what?’ will be in the Instrumental case.)
இதுபற்றிப் பிறகு விரிவாகப் படிக்கலாம்.
3. ஒரு வாக்கியத்தில் கோபம் , வருத்தம், சந்தோஷம் போன்ற பண்புப் பெயர்கள் மூன்றாம் வேற்றுமையில் அமையும்.
(We have to use the abstract nouns in Instrumental case if they are adverbs.)
उदा – 1. सः सन्तोषेण कार्यं करोति। (saḥ santoṣeṇa kāryaṁ karoti |)
அவன் மகிழ்ச்சியுடன் வேலை செய்கிறான்.
2. पिता प्रीत्या वदति। (pitā prītyā vadati |)
தந்தை பாசத்துடன் (பாசத்தினால் ) பேசுகிறார்.
கீழே உள்ள உரையாடலை உரத்துப் படிப்போமா ?
छात्राः – नमस्ते श्रीमन्।
chātrāḥ – namaste śrīman |
மாணவர்கள் – வணக்கம் சார் !
अध्यापकः नमस्ते। वयं अद्य चित्रं लिखामः वा ?
adhyāpakaḥ namaste | vayaṁ adya citraṁ likhāmaḥ vā ?
ஆசிரியர் – வணக்கம் . நாம் இன்று சித்திரம் வரைவோமா ?
शिवशङ्करः – अहं सुधाखण्डेन लिखामि श्रीमन्।
śivaśaṅkaraḥ – ahaṁ sudhākhaṇḍena likhāmi śrīman |
சிவசங்கரன் – நான் சுண்ணக்கட்டியால் எழுதுகிறேன் சார்.
अध्यापकः – हरि ॐ। भवान् किं वदति ? सुधाखण्डेन कागदे कथं चित्रं लिखति ?
adhyāpakaḥ – hari om | bhavān kiṁ vadati? sudhākhaṇḍena kāgade kathaṁ citraṁ likhati ?
ஆசிரியர் – வணக்கம் . நீர் என்ன சொன்னீர் ? சுண்ணக்கட்டியால் பேப்பரில் எப்படி படம் வரைகிறாய் ?
रविकुमारः – श्रीमन्। अहं लेखन्या एव लिखामि।
ravikumāraḥ – śrīman | ahaṁ lekhanyā eva likhāmi |
ரவிகுமார் – சார் ! நான் பேனானால் தான் வரைகிறேன் (எழுதுகிறேன்).
अध्यापकः – मास्तु भोः। सर्वे अङ्कन्या एव लिखन्तु। श्रीनाथ। भवतः चित्रलिखने दोषाः सन्ति।
adhyāpakaḥ – māstu bhoḥ | sarve aṅkanyā eva likhantu | śrīnātha | bhavataḥ citralikhane doṣāḥ santi |
ஆசிரியர் – வேண்டாம் ! அனைவரும் பென்சிலால் மட்டுமே வரையுங்கள். ஸ்ரீநாத், உன்னுடைய படங்களில் தவறுகள் இருக்கின்றன.
स्वामिनाथः – श्रीमम्। सः अङ्गुल्या मार्जयति।
svāmināthaḥ – śrīmam | saḥ aṅgulyā mārjayati |
சுவாமிநாதன் – சார் ! அவன் விரலினால் அழிக்கிறான்.
अध्यापकः – मास्तु भोः मार्जकेण मार्जयतु। सर्वे पश्यन्तु। चित्रे बालकः द्विचक्रिकया गच्छति॥ वयं कथं विद्यालयम् आगच्छामः ?
adhyāpakaḥ – māstu bhoḥ mārjakeṇa mārjayatu | sarve paśyantu | citre bālakaḥ dvicakrikayā gacchati || vayaṁ kathaṁ vidyālayam āgacchāmaḥ ?
ஆசிரியர் – வேண்டாம்பா ! அழிப்பானால் அழி. அனைவரும் பாருங்கள். படத்தில் சிறுவன் இருசக்கர வாகனத்தில் (சைக்கிளில்) செல்கிறான். நாம் எப்படி பள்ளிக்கு வருகிறோம் ?
शिवशङ्करः – अहं त्रिचक्रिकया आगच्छामि श्रीमन्।
śivaśaṅkaraḥ – ahaṁ tricakrikayā āgacchāmi śrīman |
சிவசங்கர் – நான் மூன்றுசக்கரவாகனத்தில் வருகிறேன் சார்.
रविकुमारः – अहं लोकयानेन आगच्छामि।
ravikumāraḥ – ahaṁ lokayānena āgacchāmi |
ரவிகுமார் – நான் பேருந்தில் வருகிறேன்.
स्वामिनाथः – मम गृहं समीपे एव अस्ति। अतः अहं पादाभ्याम् एव आगच्छामि।
svāmināthaḥ – mama gṛhaṁ samīpe eva asti | ataḥ ahaṁ pādābhyām eva āgacchāmi |
சுவாமிநாதன் – என்னுடைய வீடு அருகில் தான் இருக்கிறது. அதனால் நான் நடந்து (இரு கால்களை உபயோகித்து) தான் வருகிறேன்.
उच्चैः पठन्तु।
uccaiḥ paṭhantu !
உரத்துப் படியுங்கள் ; –
1. शिक्षकः सुधाखण्डेन लिखति।
śikṣakaḥ sudhākhaṇḍena likhati |
ஆசிரியர் சுண்ணக்கட்டியினால் எழுதுகிறார்.
2. महिला मालया अलङ्करोति।
mahilā mālayā alaṅkaroti |
பெண் மாலையினால் அலங்கரிக்கிறாள்
3. गणेशः मूषकेण गच्छति।
gaṇeśaḥ mūṣakeṇa gacchati |
கணேஷக்கடவுள் எலிவாகனத்தை உபயோகித்து (எலி வாகனத்தினால்) செல்கிறார்.
4. जनाः दुग्धेन शिवं पूजयन्ति।
janāḥ dugdhena śivaṁ pūjayanti |
மக்கள் பாலினால் சிவனை பூஜை செய்கிறார்கள்.
5. सः छुरिकया शाकं कर्तयति।
saḥ churikayā śākaṁ kartayati |
அவன் கத்தியால் காயை வெட்டுகிறான்.
6. अहं कुञ्चिकया तालम् उद्घाटयामि।
ahaṁ kuñcikayā tālam udghāṭayāmi |
நான் சாவியால் பூட்டைத் திறக்கிறேன்.
7. सौचिकः कर्तर्या वस्त्रं कर्तयति।
saucikaḥ kartaryā vastraṁ kartayati |
தையல்காரர் கத்தரியால் துணியை கத்தரிக்கிறார்.
8. बालिका लेखन्या लिखति।
bālikā lekhanyā likhati |
சிறுமி பேனாவால் எழுதுகிறாள்.
கீழே உள்ள அட்டவணையை உரத்துப் படிக்கவும்.
तृतीया विभक्तिः
tṛtīyā vibhaktiḥ
| पुंल्लिङ्गे (pu |
||
| प्रथमा
(prathamā) |
तृतीया (tṛtīyā ) ए .व. | तृतीया (tṛtīyā ) ब .व. |
| बालकः (bālakaḥ) | बालकेन (bālakena) | बालकैः (bālakaiḥ) |
| हस्तः (hastaḥ) | हस्तेन (hastena) | हस्तैः (hastaiḥ
) |
| सः (saḥ) | तेन (tena) | तैः(taiḥ ) |
| एषः (eṣaḥ) | एतेन (etena) | एतैः(etaiḥ) |
| कः (kaḥ) | केन (kena) | कैः(kaiḥ ) |
| भवान् (bhavān) | भवता (bhavatā) | भवद्भिः(bhavadbhiḥ) |






सम्बोधनरूपाणि ( sambodhanarūpāṇi) விளி வேற்றுமை (எட்டாம் வேற்றுமை)பற்றி இந்த வாரம் அறிந்து கொள்வோம். ’விளித்தல்” என்றால் ‘அழைத்தல்’ என்று பொருள். இதற்கு தனியாக வேற்றுமை உருபு கிடையாது. இது முதல் வேற்றுமையின் (प्रथमा विभक्तिः)சிறிய மாறுபாடு மட்டுமே. இது सम्बोधनाविभक्तिः (sambodhanāvibhaktiḥ )என்றும் அழைக்கப்படுகிறது.



இந்த வாரம் வினாச் சொல்லின் ( Interrogative word) இறுதிச் சொல்லான किमर्थम् ? (kimartham ) “Why?” or “What for ?” ( “ஏன் ?” , “எதற்காக ?”)என்பதைப்பற்றி விரிவாகக் கற்றுக்கொள்வோம். எந்த ஒரு செயலும் எதற்காக அல்லது எந்த காரணத்திற்காக செய்யப்படுகிறது என்பதை விரிவாக சொல்லும்போது किमर्थम् ? என்ற வினாவின் விடை கிடைக்கிறது.
இந்த வாரம் कथम् ? (katham ?) எப்படி ? (How ?)என்ற வினாச்சொல்லை எப்படி உபயோகிக்கவேண்டும் என்பதைப்பற்றி விரிவாகக் காண்போம். 
ஏற்கெனவே வினைச்சொற்களை பார்த்திருக்கிறோம்.
இப்போது வாக்கியங்களில் இந்த பன்மை என்னும் பஹுவசனம் बहुवचनम्-பார்ப்போம்
இப்போது சில வார்த்தைகளை அறிந்துகொள்வோம்.
இப்போது சில வார்த்தைகளை அறிந்துகொள்வோம்.
சமஸ்கிருதத்தில் அதற்கேயான ஒரு ஒழுங்கு அமைந்திருப்பதை இதுவரை படித்ததில்
* கணினியின் ஒரு ஸ்கிரீனுக்குள் நிற்காமல், கர்சரை அங்கும் இங்கும் செலுத்திப் படிக்க கடினமாக உள்ளது.
இந்த பாடங்களில் இலக்கணத்தையோ அல்லது படிப்பதையோ நான் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்போவதில்லை. இந்த சமஸ்கிருத பாடங்களில் சமஸ்கிருதத்தில் பேசுவதையும் கேட்பதையுமே முக்கியத்துவம் கொடுக்கபோகிறேன்
உயிர்மெய் எழுத்துக்களை கவனமாக கற்றுகொண்டிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். 
ஆக எல்லா உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் பார்த்தாய்விட்டது.
கசடதப ஆகிய எழுத்துக்களின் நான்கு வகைகளை பற்றி பார்த்தோம்
சமஸ்கிருதத்தில் தமிழில் உள்ளதை விட அதிகமான மெய்யெழுத்துக்கள் உள்ளன. உதாரணமாக ஷ, ஸ, ஷ, ஹ, க்ஷ் ஆகியவற்றை பற்றி நமக்குத் தெரியும்.
சமஸ்கிருதத்தை தேவநாகரி எழுத்தில் எழுதுவதும், கிரந்தத்தில் எழுதுவதும் பழக்கம். கிரந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்து போலவே இருக்கும். பழைய தமிழ் ஓலைச்சுவடிகளில் கிரந்த எழுத்தில் சமஸ்கிருதம் எழுதப்பட்டிருப்பதை பார்க்கலாம்.