கொடிய பின்னிரவு

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

கலாசுரன்


பகல்களில்
தேன் வழிய
மலர்ந்த கனவுகள்

எண்ணற்ற சிந்தனைகளில்
மடிந்து பிறக்கும்
தென்றலின் கோபுரங்கள்போல்

எண்ணித்துணிந்த
முடிவொன்றில்
சிதறும்
ஞாபகங்கள்

இசையின்றித்
தாளம்போடும்
உணர்வற்ற பாதங்களின்
விரல்கள்

தேய்ந்துபோனது
ஆயிரம்
நினைவோட்டங்களின்
மனதோர வடுக்கள்

பின்னிரவில்
இவையனைத்தும்
ரத்தம் சொட்டச்
சிவந்திருந்தன..
*
***
கலாசுரன் ..

Series Navigation

கலாசுரன்

கலாசுரன்