This entry is in the series 20100926_Issue

ராமலக்ஷ்மி


பேரொளியொன்று
வானில் தோன்ற
பிரபஞ்சமெங்கும் சிந்தியததன் மிச்சமாய்
எண்ணற்ற நட்சத்திரங்கள்

ஓரொளியிலிருந்து
வந்த மூலம் அறியாமல்
யார் உயர்வென்று
எங்கெங்கினும் போர்க்களங்கள்

மோதியது போதுமென்று
வாதிட்டு அலுத்துப் போய்
செய்வதறியாது கோள்கள்

உலுக்கக் காத்திருக்கிறது உலகை
ஒற்றை பேனாவின் மை
வ்டிக்கப் போகும் தீர்ப்புகள்

வெட்கப்பட்டு உதித்து
வேதனையுடன் மறைகின்றார்
நித்தம் சூரியசந்திரர்கள்

அவருள் ஒரேசக்தியாய் ஒளிர்கின்றார்
அத்தனை கடவுளரும்..
இப்புரிதலின்றி புவியெங்கும் பாமரர்கள்!

ramalakshmi_rajan@yahoo.co.in

Series Navigation